25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Jan 16, 2024

மல்லிபூத்துக்குலுங்க வாழைப்பழத் தோல்

வீடுகளில் செடிவளர்க்க விரும்புபவர்கள் ஒன்று ரோஜா,மற்றொன்று மல்லி. செடிகளை வாங்கி வைத்துவிட்டு தண்ணீர் ஊற்றினால் போதும் என்று இருந்துவிடுவார்கள், மனிதர்களை போல்செடிகளுக்கும் தேவையான சத்துகளை அவ்வபோது கொடுத்து வந்தால் செடிகளும் நன்றாக வளரும்,செடிகளை வளர்க்க இணையத்தில் சில டிப்ஸ்கள் சுற்றி வருகின்றன, அவை சரியானதா என்பதை நன்கு அறிந்த பிறகு அவற்றை ஃபாலோ செய்தால் செடிக்கும் நமக்கும் நன்மை பயக்கும். இப்படி மல்லிகை பூக்கள் பூத்து குலுங்க இணையத்தில் ஒரு டிப்ஸ் சுற்றி வருகிறது. அதில், பச்சையான வாழைக்காயை தோலுடன் சிறிது, சிறிதாக நறுக்கி தேவையான நீர் ஊற்றி நன்கு கொதிக்கவைத்து அந்த தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீருடன் டீ தூள் சேர்த்து அதையும் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் மேலும் இரண்டு மடங்கு சாதாரண தண்ணீர் கலந்து செடிகளுக்கு ஸ்பிரே செய்து வந்தால் மல்லி பூ நன்கு பூத்து குலுங்கும் என சொல்லப்பட்டிருந்தது.இதன் உண்மை தன்மையை அறிந்துக்கொள்ள மண்புழு விஞ்ஞானி சுல்தான் இஸ்மாயில்,5,,6 வாழைப்பழ தோலை சேகரித்து அதை ஒரு பாட்டிலில் போட்டு இரண்டு, மூன்று நாள்கள் நன்கு ஊறவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் மேலும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து செடிகளுக்கு ஸ்பிரே செய்தாலே போதும்செடி நன்றாக வளரும், எந்த பூக்களும் நன்கு பூக்கும். இதில் பொட்டாஷியம் அதிகமாக உள்ளது அதனால் செடிகளுக்கு நல்லது, மேலும் ஊறவைத்த தோல் கூழ் போல ஆகியிருக்கும் அதையும் அதே மண்ணில் கொட்டி வைத்தால் செடி மேலும் செழுமையாக இருக்கும்.வாழைப்பழ தோலுடன் நாம் பயன்படுத்திய டீ தூளை சேர்த்து ஊறவைத்து செடிகளுக்கு பயன்படுத்தலாம். செடிகளுக்காக தனியாக கடையில் வாங்க வேண்டியதில்லை, நாம் பயன்படுத்திய பொருள்களை செடிகளுக்கு கொடுத்தாலே போதும்.இதுஇல்லாமல் முட்டைதோலை சிறிதாகஉடைத்து, அதைவாணலியில் போட்டுசற்று வறுக்கவேண்டும். முட்டையின்மேல் உள்ளதோல் சிலசயமயங்களில் அழுகிதுர்நாற்றம் வரும்அதனால் ஓட்டைவறுத்துவிட்டா அந்ததோல் மொறுமொறுவெனஆகிவிடும் துர்நாற்றம்வராது. ஆகவேமுட்டை தோலைசற்று நிறம்மாறும் வரைவறுத்து அதைஒரு பாட்டிலில்போட்டு அதனுடன்வீட்டில் பயன்படுத்தும்வினிகரை கலந்துவைக்க வேண்டும். முட்டையுடன் வினிகர்கலந்ததும் நீர்குமிழிகள் வரும்அப்படியே விட்டுசில மணிநேரங்களுக்கு பிறகுஅதனுடன் மேலும்கொஞ்சம் தண்ணீர்சேர்த்து செடிகளுக்குஸ்பிரே செய்தாலும்செடி அற்புதமாகவளரும். நன்குதரமான மண்ணில்இதை செய்தால்உடனடியாக ரிசல்ட்தெரியவரும், மண்ணின்தரம் சற்றுகுறைவாக இருந்தால்எதிர்பார்த்த அளவுபூக்கள் பூக்கசற்று நாள்கள்எடுக்கும். வாழைப்பழத்தோல் கரைசல்மற்றும் முட்டைஓடு கரைசல்இதை இரண்டையும்மாற்றி மாற்றிசெய்தாலே போதும்செடிகள் பூத்துகுலுங்கும்” என்றுபகிர்ந்துக்கொண்டார்.

Jan 09, 2024

கொத்தமல்லி தழையை வீட்டிலேயே எப்படி வளர்க்கலாம்?

உணவுக்கு சிறந்த சுவையைத் கொத்தமல்லி தரும். இதை வீட்டிலேயே ரசாயனங்கள் இல்லாமல் பயிரிடலாம்.15,20 நாட்களில் உங்கள் மொட்டை மாடியில் அல்லது உங்கள் தோட்டத்தில் கொத்தமல்லியை வளர்க்கலாம்.1 பங்கு வண்டல் மண்,1 பங்கு உரம்(வெர்மி கம்போஸ்ட், மாட்டு சாணம், இலை உரம்) மற்றும் ஒரு கைப்பிடி வெள்ளை மணல் ஆகியவற்றை கலக்கவும். பானை அல்லது தொட்டியை எடுத்து, அதிகப்படியான நீர் வெளியேறதொட்டியில்ஒரு துளைசெய்து,அதன்மீது சில சிறியகற்களை பரத்தினால். அதிலிருந்து மண் வெளியே வராது. பின்னர் மேலே மண்ணை தூவவும். வீட்டில் சமையலில் பயன்படுத்தப்படும் கொத்தமல்லி விதைகளையும் நடலாம். கொத்தமல்லி விதைகளை ஒரு துண்டில் போட்டு, அதை இரண்டாகப் பிரிக்க கடினமான ஒன்றை அழுத்தவும் மல்லி விதை இரண்டாகப் பிரியும் ரெம்பவும் நொறுக்கி விடக்கூடாது. பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொத்தமல்லி விதைகளை இரவு முழுவதும் ஊற வைக்கவும்.விதைகளை மறுநாள் காலையில் தயாரிக்கப்பட்ட மண்ணில் சமமாக பரப்பவும். கொஞ்சம் பரவலாக விதையைத் தூவ வேண்டும். நெருக்கி விதைக்கக் கூடாது பிறகு லேசாக மேலே மண்ணைதூவ வேண்டும். தண்ணீர் பாய்ச்சினால், விதைகள் மண்ணில் மிக ஆழமாகச் சென்று விடும் எனவே இந்த நேரத்தில் மண்ணுக்கு மிக லேசாக தண்ணீர் விடுவது அவசியம். மண் எப்பொழுதும் ஈரமாக இருப்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும்.-10 நாட்களில் சிறிய நாற்றுகள் வெளிவர ஆரம்பிக்கும். நாற்றுகள் ஒன்றன் மேல் ஒன்றாக வளர்ந்தால் சிலநாற்றுகளை கையால் எடுத்து விட்டால். தொட்டியில் உள்ள செடிகள் சரியாக வளர வாய்ப்பளிக்கும்.20,25 நாட்களுக்குள் தினசரி உபயோகத்திற்கு கொத்தமல்லி இலைகளை பறிக்கலாம். மார்ச் வரை மொட்டை மாடித் தோட்டத்தில் கொத்தமல்லி கிடைக்கும். அதன் பிறகு  கொத்தமல்லிதழையைநிழல் தரும் இடத்திற்கு மாற்றினால், ஆண்டு முழுவதும் கொத்தமல்லிதழை கொத்தமல்லி இலைகளை பறிக்கும் போது, அவற்றை ஒருபோதும் தண்டுகளுடன் சேர்த்து பறிக்க வேண்டாம். மாறாக, மேலே இருந்து தேவையான  இலைகளை பறிக்கவும். மீண்டும் மல்லிதழை துளிர்த்து  வளரும் .

Jan 02, 2024

கருணைக்கிழங்கு  சாகுபடி

கருணைக்கிழங்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளுள்600 க்கும் அதிகமான கருணைக்கிழங்கு வகைகள் அதிகம் உள்ளது.இது பல நிறங்களில் உள்ளது.அதிகமாய் வெள்ளைசிவப்பு,கருப்பு போன்ற நிறங்களிலும்,இனிப்பு முதல்,காரம், கசப்பு, கடுமையான புளிப்பு மற்றும் சுவை இல்லாத வகைகளும் உள்ளது. மேலும் உண்ணக்கூடிய மற்றும் விஷ தன்மை கொண்டவைகளும் உள்ளது.கருணைக்கிழகில் இரண்டு வகைகள் உள்ளதுகாரும் கருணைகாராக் கருணை என்று அழைக்கபடுகிறது . இந்த இரண்டு வகைகளும் உணவாக பயன் படுத்தப்  படுகிறதுஜூன்,ஜூலைமற்றும்பிப்ரவரி,மார்ச்மாதங்கள்  சாகுபடிசெய்ய உகந்த மாதங்கள் முதலில் நிலத்தை நன்றாக உழுது,பின்வயலில்அரைஅடிக்குதண்ணீர்தேக்கி,தழைச்சத்தாக பசுந்தாள் பயிர்கள் சாகுபடிசெய்து அந்த செடியை மிதித்து மட்க செய்ய வேண்டும் .பின்பு ஒரு ஏக்கருக்கு ,   மக்கிய இலைகள், ஆடு ,எருமை , பசுமாட்டு சாணம் போன்றவற்றுடன் தொழு உரம் ஒரு டன் இட்டு, ஆழ புழுதி உழவு செய்து பரம்படிக்கும் போது நிலதிருக்கு தேவையான அடியுரம் கிடைக்கிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிலம் நல்ல முறையில் சாகுபடி செய்ய பண்பட மண் வளமுடன் இருக்கும் . ஒரு ஏக்கருக்கு30 முதல் 35 ஆயிரம் விதை கிழங்கு தேவை படும். இதனை வாங்கி, பாதுகாப்பாக ஈரமில்லாத, காற்று புகாத அறையில்வைத்து இருக்கவேண்டும்பின்பு விதை கிழங்குகளில் முளை கட்டியவுடன், நிலத்தில் அரை அடிக்கு ஒரு விதை கிழங்கு என்று நடவு செய்ய வேண்டும்.குறைவான நீர்பாசனவசதிகொண்டநிலங்களில்சொட்டுநீர் பாசனமுறை மூலம் பயிர் செய்யலாம்இந்த வகை நிலங்களுக்கு கருணை ஒரு மிக சிறந்த ஒன்றாகும்இது ஒன்பது மாதம் வயது கொண்ட பயிர் ஆகும் .இது பயிரிட்ட நாளில்  இருந்து ஒரு மாதம் கழித்து முளைகுருத்து நிலத்தில் தெரியும். இப்படி முளைக்கும் பருவத்தில் குறைந்தது 5 முதல் 6 நாட்கள் ஒருமுறை மன்ணின தன்மை பொருத்து நீர் பாசனம் செய்வது நன்மை பயக்கும். இப்படி மண்ணிண் ஈரப்பதம் காரணமாக களைகள் வரும் அதனை களை எடுத்து பராமரிக்கவேண்டும் .ஒரு மாதத்திற்கு ஒரு முறை  ஐந்து மூட்டை, கடலை புண்ணாக்கு, மூன்று மூட்டை வேப்பம் புண்ணாக்கு இயற்கை உரம்  இடவேண்டும் இதன் காரணமா பயிருக்கு தேவையான  சத்துக்கள் நிலத்தில் அதிகரிக்கும். ,மண்புழு உரம்  கிடைத்தால் ஒவ்வொரு செடியின் வேர்  பகுதியில்  30 கிராம் வீதம் கொடுத்தல் நன்கு வளர்ச்சியில் மாற்றம்  தெரியும் . இதன் மூலம் கிழங்கின் அளவும் எடையும் அதிகரிக்கும் .இவ்வாறு கொடுக்கும் பொழுது  வேர்பகுதில் மண்ணை வெட்டிபின்பு மண் அணைக்க வேண்டும்9 மாதம் கடந்த பின்பு பக்குவம் பார்த்து அறுவடை செய்யலாம். இது குறிப்பாக ஒரு ஏக்கருக்கு 6 முதல் 7டன் வரை கிடைக்கும் .

Dec 26, 2023

மருத்துவ செடிகளை வளர்த்துலட்சக்கணக்கில்சம்பாதிக்கலாம்.

தாவரங்களை பயிரிடும்போது அதற்கு ஏற்ற லாபத்தை விவசாயிகள் பெறுகின்றனர். சில மருத்துவ குணங்கள் கொண்ட தாவரங்களை பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு மானியத்தை வழங்குகிறது. மேலும், இதில் நல்ல லாபத்தை பெறலாம்.விவசாயிகளுக்கு வருவாயை உருவாக்கித்தரும்இயற்கையானமருத்துவதாவரங்கள் பலவிதமான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுகிறது.. இந்த தாவரங்கள் மருந்து, ஒப்பனை பொருட்கள் மற்றும் மருந்துத் துறையில் பயன்படும் மூலப்பொருட்களை வழங்குகின்றன. பிற பாரம்பரிய மற்றும் வணிக பயிர்களுடன் ஒப்பிடும்போது, நறுமணம் மற்றும் மருத்துவ குணம் கொண்ட தாவரங்களை வளர்ப்பதன் வாயிலாக நல்ல வருவாயை விவசாயிகள் ஈட்ட முடியும்.இதன் விளைவாக, வளர்ந்து வரும் விவசாயிகள் இதுபோன்ற தாவர வகைகளை பயிரிடுவதற்கு ஈர்க்கப்படுகிறார்கள். கூடுதலாக, இந்திய தேசிய மருத்துவ ஆலை வாரியம் குபடி செய்யும் வெவ்வேறு தாவர இனங்களின் அடிப்படையில்30 சதவீதம் முதல்75 சதவீதம் வரை மானியங்களை வழங்குகிறது. இந்த வணிக யோசனை திட்டத்தில், விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அஸ்வகந்தா செடியின் வேர்கள் இந்தியாவில் இரண்டு முக்கிய பாரம்பரியமருத்துவமாகப் போற்றப்படும் ஆயுர்வேதம், யுனானி ஆகியவற்றில் பெரிதளவு பயன்படுத்தப்படுகின்றன. அஸ்வகந்தா தூள், மாத்திரைகள் ஆகியன அதன் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் ஆகும். இலைகள் கருகி உதிர்ந்து போகத் தொடங்கும் போது, அதில் இருக்கும் பழங்கள் மஞ்சள்சிவப்பு நிறமாக மாறும் போது அறுவடை முதிர்ச்சியடைகிறது. விதைத்த150,180 நாட்களுக்குப் பிறகு, இந்த பயிர் அதன் வேர்களுக்காக அறுவடை செய்யப்படுகிறது. அஸ்வகந்தா சாகுபடிக்கு ஒரு ஹெக்டேருக்கு சுமார் ரூ.12,000 முதல்14,000 ரூபாய் வரை செலவாகும். அறுவடைக்கு பின் சுமார் ரூ.60-70 லட்சம் வரை இவை விற்கப்படுகிறது.குல்கைரா சாகுபடி என்பது ஒரு புதுமையான முயற்சியாகும். இது இழப்புகளை மட்டுமல்லாமல், லாபகரமான வருமானத்தையும் உறுதி செய்கிறது. வழக்கமான க்கு இடையில் ஊடுபயிராக குல்கைராவை விதைப்பதன் மூலம், நீங்கள் ஒரு நல்ல யைப் பெற முடியும். குல்கைரா பூக்கள், இலைகள், தண்டுகள் மற்றும் விதைகளில் வ சந்தையில் நல்ல மதிப்பை பெற்றுள்ளன. இதன் வாயிலாக ஏக்கருக்கு ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வருவாய் ஈட்ட முடியும்.குறைந்த முதலீட்டு,அதிகவருவாய்தரும்வணிகமுயற்சியைஉருவாக்குவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், தைரியமான லெமன்கிராஸ் சாகுபடி செய்யலாம். இது நான்கு மாதங்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகிறது. அழகுசாதனப் பொரு ட்கள், சோப்புகள், எண்ணெய்கள், மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு தயாரிப்புகளுக்கு இது மூலப்பொருளாக உள்ளது. ரூ.20,000 என்ற குறைந்த முதலீட்டில் தொடங்கும் இந்த"விவசாயத்தின் வாயிலாக ஆண்டுக்கு ரூ.4 முதல் ரூ.5 லட்சம் வரை லாபத்தை ஈட்டலாம்.அஸ்பாரகஸ் வகையில் உள்ள மூலிகைத் தாவரமான சதாவரி, விவசாயிகளுக்கு நிலையான வருமானத்திற்கான கதவுகளை கொண்டுள்ளது. இது ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. தாவரத்தின் உலர்ந்த வேர்கள் மருந்துகளை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ஏக்கர் சதாவரி சாகுபடியின் வாயிலாக ரூ.6 லட்சம் வரை வருவாயை ஈட்டமுடியும்.ஜெரேனியத்தைநாம்குறைந்தசெலவில்வளர்க்கமுடியும்.ஜெரேனியம்செடியில் இருந்து கிடைக்கும் பூக்களைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இது அரோமாதெரபி, அழகுசாதனப் பொருள்கள், வாசனை திரவியங்கள் மற்றும் வாசனை சோப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. ஊடுபயிராகவும் இதை பயிரிடலாம் என்பதுதான் சிறப்பு. மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை இதை அறுவடை செய்யலாம். ஒரு லிட்டர் ஜெரேனியம் எண்ணெய் சந்தையில் ரூ.20,000 வரை மதிப்பைக் கொண்டுள்ளது.

Dec 19, 2023

கொத்தமல்லி, புதினா வளர்க்கும் முறை

பிரிட்ஜில் சேமித்து வைத்தாலும் சமைக்கும்போது பிரஷ்ஷாக  போடுவது போல இருக்காது. தினமும் கடையில் சென்று வாங்கி வரவும் முடியாது. அதனால் வீட்டிலேயே சிறியதாய் ஒரு பூந்தொட்டியிலேயே ஓரிரு நாட்களிலேயே வளர்த்து விட முடியும். தினமும் நமக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டும் பறித்து கமகமவென சமையலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நாம்செய்ய வேண்டியது மிக எளிமையாள வேலை தான். ஒரு தொட்டியில் மண்ணை சரியான ஈரப்பதத்தில் இருக்கும்படி எடுத்துக் கொண்டு, அதில் இரண்டு டீஸ்பூன் அளவுக்கு காய்ந்த மல்லி விதைகளைத் தூவி விட்டு, அதன் மேல் நீர் தெளித்து விட்டால் போதும். தண்ணீரை ஊற்றக் கூடாது. தெளித்து தான் விட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் போதும். ஒரே வாரத்தில் தளதளவென வளர்ந்து நிற்கும். இதேபோல தான் புதினாவும். புதினாவை நாம் கடைகளில் வாங்கி வந்து பயன்படுத்திவிட்டு, அந்த தண்டுப்பகுதியை கீழே தூக்கி எறியாமல் அதை சிறிய தொட்டியில் ஊன்றிவிட்டால் போதும். பிரஷ்ஷான புதினா ஓரிரு நாட்களிலேயே நமக்கு கிடைத்துவிடும்.

Dec 12, 2023

காரட் வளர்க்கும் முறை

நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்து விளைய வைக்கும் காய்கறிகள் வரை நச்சுக்களை தான் கலப்படம் செய்கின்றனர். பூச்சிகொல்லி, செயற்கை உரங்கள் போன்றவற்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.காய்கறிகளில் மிக முக்கியமானது இந்த கேரட். இந்த கேரட்டை நிறைய பேர்களுக்கு பச்சையாக சாப்பிட பிடிக்கும். ஆனால் செயற்கை உரங்கள் மூலம் விளைவித்த காய்கறிகளை பச்சையாக உட்கொண்டால் கண்டிப்பாக உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இந்த ருசியான கேரட்டை வீட்டிலேயே வளரச் செய்ய நம்மால் முடியும்.ஒரு தொட்டியில் மண்ணை நிரப்பியோ அல்லது நேரடியாக நிலத்திலோ இதை வளர்க்கலாம். இப்பொழுது கேரட் விதைகளை இந்த மண்ணினுள் வைத்து மூடி விடுங்கள். கேரட் விதைகள் எளிதாக மார்க்கெட்டில் கூட கிடைக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக்கு பிறகு நீங்கள் ரெம்ப பராமரிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. கேரட் சீக்கிரமாக வளர ஆரம்பித்து விடும். 2-3 நாட்களுக்கு ஒருமுறை என தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அடுத்த 30 நாட்களில் பாருங்கள் உங்கள் வீட்டு தோட்டத்தில் கண்ணை கவரும் கேரட் ரெடியாகி இருக்கும்..

Dec 05, 2023

வீட்டு தொட்டியில் தக்காளிச் செடி .

.சமையலறையில் தினந்தோறும் பயன்படுத்தும் பொருள் தக்காளி. சமையலுக்கு பயன்படுத்த கூடிய இந்த அத்தியாவசியமான பொருளை, நம் வீட்டில் வளர்த்து, நம் வீட்டுத் தொட்டியில் இருந்து, அறுவடை செய்து, சமைத்தால் எப்படி இருக்கும்? அதிகமாக சிரமப்பட வேண்டாம். சுலபமான முறையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஒரு சிறிய தொட்டியிலேயே, ஒரு தக்காளி செடியை வளர்க்க லாம்.பழுத்த நாட்டு தக்காளி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வடிவில் நறுக்கிக் கொண்டால்,4 லிருந்து5 பீஸ் கிடைக்கும். அதை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு தொட்டியை எடுத்துக்கொள்ளவேண்டும். பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் சரி. மண்தொட்டியாக இருந்தாலும் சரி. அந்தத் தொட்டியில், முதலில் அடிபாகத்தில், உங்கள் வீட்டில் தேங்காய் உரிக்கும் நார் இருந்தால், அதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். அதன்பின்பு60 சதவிகிதம் கருப்பு மண் இருந்தால் எடுத்துக் கொள்ளலாம் அல்லது செம்மண் எடுத்துக்கொள்ளுங்கள்.40% மண்புழு உரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இவை இரண்டையும் ஒன்றாக கலந்து தொட்டியில் சேர்க்கவேண்டும். தொட்டியில் சேர்க்கபோகும் மண் உதிரி உதிரியாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பாக நீங்கள் வெட்டி வைத்திருக்கும் வட்டவடிவ தக்காளி துண்டுகளை, கொஞ்சம் இடைவெளி வைத்து தொட்டியில் அடுக்கி விடுங்கள். தக்காளியில் இருக்கும் விதை தனியாக வந்திருந்தால் அந்த விதையையும் சேர்த்து இந்த தொட்டியிலேயே போட்டுவிடுங்கள். இந்த தக்காளி வெளியே தெரியாத அளவிற்கு, மேலே ஒரு லேயர் அளவு கருப்பு மண்ணை தூவி விடுங்கள். தடிமனாக தூவி விட்டு விடக்கூடாது. ஒரு இன்ச் அளவு தடிமனாக தூவினால் மட்டும் போதும். தூவிவிட்டு, அந்த மண்ணை, கைகளால் போட்டு அமைக்கக் கூடாது. அதன் பின்பாக மேலே இருக்கும் மண் நன்றாக நனையும் அளவிற்கு தண்ணீரை ஸ்பிரே செய்ய வேண்டும். அதாவது தெளிக்க வேண்டுமே தவிர, ஒரே இடத்தில் தண்ணீரை ஊற்றி விடக்கூடாது. - தினமும் காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் தெளிக்க வேண்டும். கொஞ்ச நேரம் இந்த தொட்டியை வெயிலில் வைப்பது நல்லது. பத்து நாட்களில் நன்றாக துளிர்விட ஆரம்பித்துவிடும். பதினைந்தாவது நாள் துளிர்விட்ட அந்த தக்காளிச் செடியை, வேரோடு சேதமடையாமல் எடுத்து மற்றொரு தொட்டிக்கு மாற்றி பதியம் போட்டு வைத்துக் கொள்ளலாம். ஒரே தொட்டியில் நிறைய செடிகள் வேரூன்றி வருவது கஷ்டமாக இருக்கும் என்பதால் தொட்டியை மாற்றி வைப்பது நல்லது. புதிய தொட்டியின் செடியின் வேர் உள்ளே செல்லும் அளவிற்கு, பள்ளம் தோண்டி, வேரோடு பிடுங்கிய ஒரு செடியைப் பதியம் போட்டு விட்டீர்கள் என்றால், அந்த செடி மீண்டும் வேரூன்றி வளர ஆரம்பித்துவிடும். குறைந்தது 50 லிருந்து 55 நாட்களுக்குள் செடி ஓரளவிற்கு நன்றாக வளர்ந்துவிடும். பூ வைக்க தொடங்கிவிடும். பத்து நாட்களுக்கு ஒருமுறை ஊட்டச்சத்து நிறைந்த தண்ணீரையும், மண்புழு உரத்தையும் இந்த செடிக்கு சேர்த்து வருவது அதிகப்படியான பூ விட்டு, அதிகப்படியான காய் காய்த்து, அதிகப்படியான தக்காளி பழங்களை அறுவடை செய்ய உதவியாக இருக்கும். செடி வைத்த90 நாட்களில் சரியான ஊட்டச்சத்து செடிக்கு கிடைத்திருந்தால், நீங்கள் தக்காளி பழங்களை அறுவடை செய்யலாம். ஒரு சில பேரது வீட்டில் செடி பக்கவாட்டில் வளர்ந்து, கீழே தாழ்வாக தொங்கும். அப்படிப்பட்ட கிளைகளை நாம் தூக்கி நிறுத்தி, ஒரு கயிறால் கட்டவேண்டும். அதாவது உங்கள் தொட்டியிலேயே கட்டையை சொருகி வைத்து, அந்த கட்டையில், முட்டுக்கொடுத்து கிளைகளை இலேசாக கட்டி விடுங்கள். அப்போது உங்களது கிளைகள் கீழே சாயாமல் இருக்கும். உங்கள் வீட்டில் இரண்டு தொட்டி, ஒரு தக்காளி இருந்தால், மட்டும் போதும். இதை எல்லாவற்றையும் விட செடி வளர்க்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு இருந்தால், நீங்கள் வைக்கும் செடியானது, நீங்கள் எதிர்பார்த்ததை விட நன்றாகவே வளரும் 

Nov 21, 2023

மணி பிளாண்டை பராமரிக்கும் குறிப்புகள்

வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றும் செல்வ செழிப்புடனும் எப்போதும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையில் மணி பிளாண்டை வீட்டில் வளர்கின்றனர்.ஒழுங்கான பராமரிப்பு இல்லையேல் நீண்ட காலம் வாழாது..  மணி பிளாண்ட் கன்றுகளை மண்ணுடன் சேர்த்து வளர்க்க வேண்டும்.வளர்ச்சி அதிகமானாலும் ஒரு சில மணிநேரத்தில் குறையும். இச்சந்தர்ப்பத்தில் எப்சம் உப்பை சேர்க்கவும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால் அதை வெட்டி விட வேண்டும். அவ்வாறு செய்தால் மாத்திரமே புதிய இலைகள் ஆரோக்கியதுடன் வளர்ச்சி பெறும்.வேகமாக வளர வேண்டுமென்றால், 4 மாதங்களுக்கு ஒரு முறை மண்ணைத் தோண்டி உரம் சேர்த்து வந்தால் வேகமாக வளரவைக்கவும்.நேரடியாக சூரிய ஒளிப்படும் வகையில் வைக்க கூடாது. இவ்வாறு வைத்திருந்தால் அதன் இலைகள் கருகி விடும்.ஈரமான மண் அதிகமாக தேவை. அது தினசரி தண்ணீர் இல்லாமல் உயிர் வாழ்கிறது. எனவே பருவத்திற்கு ஏற்ப தண்ணீர் கொடுக்க வேண்டும்.    

Nov 14, 2023

தென்னை மரத்தில் வெள்ளை ஈக்கள் தொல்லை போக்க..

 தென்னைசாகுபடி செய்யும் விவசாயி கள் முன்னெச்சரிக்கைக்காக ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள் தாக்குதலைக் கட்டுப்படுத்த,வயதில் முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள், மஞ்சள் நிற முட்டைகளை, சுழல் வடிவில் ஓலைகளின் அடிப்பாகத்தில் இடுகின்றன. இம்முட்டைகள் மெழுகுப் பூச்சுடன் காணப்படும். முட்டைகளில் இருந்து வெளிப்படும் இளம்குஞ்சுகள் இலைகளில் அடிப்பரப்பில் இருந்து கொண்டு இலைகளின் சாற்றை உறிஞ்சி வளர்கின்றன. சுமார்20,30 நாள்களில் முழு வளர்ச்சியடைந்த ஈக்களாக மாறி கூட்டம் கூட்டமாக தென்னை ஓலைகளின் அடிப்பகுதிகளில் காணப்படுகின்றன. இவை காற்றின் திசையில் எளிதில் பரவி அடுத்தடுத்த தோட்டங்களில் உள்ள தென்னை மரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு, தேன் போன்ற திரவக் கழிவுகளையும் வெளியேற்றுவதால், கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும் பூசணம் படர்ந்து காணப்படும்.வெள்ளை ஈக்களானது, தென்னை மரங்களைத் தவிர, வாழை, சப்போட்டா ஆகிய பயிர்களிலும் தாக்குதல் ஏற்படுத்துகிறது. எனவே, பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈமேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையானது பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மஞ்சள் நிறம், வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால், மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களால் ஆனஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டும் பொறிகளை(நீளம்5 அடி அகலம்11/2 அடி) ஏக்கருக்கு10 என்ற எண்ணிக்கையில்,5-6 அடி உயரத்தில் ஆங்காங்கே கட்டிவைத்து  வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.மஞ்சள் விளக்குப் பொறிகளை ஏக்கருக்கு 2 வீதம் தென்னந்தோப்புகளில் அமைத்து மாலை 6 முதல் இரவு 11 மணி வரை ஒளிரச் செய்வதன் மூலமும் வெள்ளை ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.தாக்கப்பட்ட தென்னை மரங்களின் இலைகளின் மேல் தெளிப்பான்களைக் கொண்டு வேகமாக நீரை அடிப்பதன் மூலமாகவும் வெள்ளை ஈக்கள் மற்றும் கரும்பூசணங்களை அழிக்கலாம்.வெள்ளை ஈக்கள் அதிகளவு பரவும்போது பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் போன்ற இயற்கை எதிரிகள் தோப்புகளிலேயே இயற்கையாகவே உருவாக ஆரம்பிக்கும். என்கார்ஸியா ஒட்டுண்ணிகள் அதிகளவு உருவாகி வெள்ளை ஈக்களின் சேதத்தைப் பெருமளவு குறைக்கிறது.என்கார்ஸியா ஒட்டுண்ணிகளானது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஆழியார் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து பெறப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.கிரைசோபெர்லா இரை விழுங்கிகள், தென்னை மரங்களைத் தாக்கும் வெள்ளை ஈக்களின் இளம் குஞ்சுகளை நன்றாக உட்கொள்வதால் தாக்கப்பட்ட தோட்டங்களில் ஏக்கருக்கு400 முட்டைகள் என்ற எண்ணிக்கையில் கிரைசோபெர்லா இரை விழுங்கிகளின் முட்டைகளை விடுதல் நல்ல பயனளிக்கும்.இந்த இரை விழுங்கிகளின் முட்டைகள் அடங்கிய அட்டையானது, திருச்சி மாவட்டத்தில் செயல்படும் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்டு, அந்தந்த பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களின் வாயிலாக, தென்னை விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.அதிகளவு பூச்சிக்கொல்லிகள் உபயோகிக்கும்போது நன்மை செய்யும் உயிரினங்கள் அழிந்து விடுவதால், ரசாயன பூச்சிக்கொல்லிகளைக் கண்டிப்பாக தவிர்த்து நன்மை செய்யும் உயிரினங்கள் வளர்வதற்கு உரிய சூழலை மேம்படுத்துவது சாலச் சிறந்ததாகும். 

Nov 07, 2023

செம்பருத்தி செடி

அனைத்து வீடுகளிலும் செம்பருத்தி செடி வளர்த்து வருவோம். செம்பருத்தி செடி அழகிற்காக மட்டுமில்லாமல் அதில் எண்ணற்ற பயன்களும் உள்ளது. அதாவது, செம்பருத்தி இலையம் பூவும் நம் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ள ஒன்று. எனவே இந்த செடியை நாம் அதிகமாக வீடுகளில் வளர்த்து வருவோம். தேவையான பொருட்கள்:வாழை பூ மடல் – 4வெல்லம் – 50 கிராம் டீ தூள் – 1 ஸ்பூன்  காஃபி தூள் – 1 ஸ்பூன் வாழைப்பழ தோல் – 6செம்பருத்தி செடியை நடவு செய்யும்போது அதற்கு அடியுரமாக தொழுஉரம் கலந்த மண்கலவையை இட வேண்டும்..செடி நன்றாக வளர்ந்தும் அதிக பூக்கள் பூக்க ஒரு பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் தண்ணீர்எடுத்துகொள்ளுங்கள். அதில் வாழைப்பூ மடல்,1 ஸ்பூன் டீ தூள்,1 ஸ்பூன் காஃபி தூள் மற்றும் வாழைப்பழத் தோல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை நன்றாக மூடி 4 நாட்கள் வரை அப்படியே வைத்து விடுங்கள். 4 நாட்கள் கழித்து இந்த தண்ணீரை வடிகட்டி செம்பருத்தி செடிக்கு15 நாட்களுக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் செம்பருத்தி செடி அதிகமாக பூக்க தொடங்கும்.இவ்வாறு செய்து வருவதன் மூலம் பூக்காத செம்பருத்தி செடியிலும் அதிக மொட்டுகள் வைத்து பூக்க தொடங்கும்..

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News