25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Mar 26, 2024

இயற்கை  விவசாயத்தில் அடையார் ஆனந்தபவன்.A2B

இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும்60க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டA2B  அடையாார் ஆனந்தபவன் நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உணவத்தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர், எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றMR.ஸ்ரீனிவாசராஜா, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில்10 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைத்து இயற்கை விவசாயம் செய்து வருகிறார்.இராஜபாளையத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் தாத்தா, அப்பா, எல்லாம் விவாசாயிகள், இராஜபாளையத்தில்90 ஏக்கர் பரப்பளவில் நாலு தலைமுறையாக மா, தென்னை, விவசாயம் செய்கின்றனர். சின்ன வயசிலேயே விவசாயம் பழக்கப்பட்ட ஒன்று. தொழில் காரணமாக சென்னைக்கு வந்தாலும் ஊரில் இருக்கிற இடத்தில் தொடர்ந்து விவசாயம் செய்கின்றனர். 10 ஏக்கர் நிலம் வாங்கி வீட்டு பெண்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். பராமரிப்பு பணிகளை அவர் கவனித்துக் கொண்டாலும், நிர்வாகச் செலவுகள் அனைத்தையும் வீட்டுப் பெண்கள் தான் நிர்வகிக்கிறாார்கள். இந்த தோட்டத்தில்100 தென்னை மரங்களும்,100க்கும் அதிகமான மரங்களும் இருக்கின்றன., அல்போன்சா, கிளிமூக்கு, பங்கணப்பள்ளி, பஞ்சவர்ணம், ஆகிய ரகங்கள் மா மரங்கள் செழிப்பாக காய்க்கிறது. ரசாயன இடு பொருள்கள் போடாமல், இயற்கை முறையில் உற்பத்தி செய்வதினால் இங்கு விளையக்கூடிய மாம்பழங்கள் கூடுதல் சுவையோடும், வாசனையோடும், இருக்கும். ஒவ்வொரு வருஷமும் மாம்பழசீசன் சமயத்துல, அறுவடை செய்யும்.பழங்கள்உறவினர்கள், நண்பர்களக்குப் பங்கிட்டு கொடுத்த பிறகு, அவர்கள் நடத்தக்கூடிய அங்காடிகள் மூலம் விற்பனை செய்கின்றனர். இந்த தோட்டத்திலேயே மாட்டுப் பண்ணை அமைத்து, கிர், இந்தி இனங்களைச் சேர்ந்த40 க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கின்றனர்.  இயற்கை விவசாயம் செய்ய, மாடுகள் ரொம்ப அவசியம், இதன் கழிவுகளால் தான் இந்தத் தோட்டத்தில் உள்ள பயிர்கள் எல்லாமே நல்லா செழிப்பாக வளரும், மாடுகளுக்கு கடலைப் புண்ணாக்க, தவிடு, பருத்திக்கொட்டை, உள்ளிட்ட அடர் தீவணமும், அதோடு பசுந்தீவனமும் கொடுக்கின்றனர். மாடுகளை இயற்கையான முறையில்  மேய விட்டு வளர்த்தால் தான், நோய், நொடிகள் இல்லாமல் ஆராக்கியமாக வளரும். அதனால் காலையில் பால் கறந்ததுமே, கொட்டைகையில் இருந்து வெளியேற்றி, மேய விட்டு, தோட்டம் முழுக்கக் காலாற நடந்து போய் சாயந்திரம் வரைக்கும் மேயும், இதனால் களைகள் கட்டுப்படுத்தப்படுது. மாடுகளோட சாணமும், சிறுநீரும், நிலத்துல விழுந்து மண்ணு நல்லா வளமாகி கிட்டே இருக்கிறது. சாயந்திரம் ஆகிவிட்டால் மாடுகளைப் பிடிச்சிட்டுவந்து பால் கறந்து, கன்றுகள் குடித்த பால் போக மீதிபாலை, கூட்டுறவு சங்கம் மூலம் விற்பனை செய்கின்றனர். தினமும் சுமார் 100 லிட்டர் பால் விற்பனை செய்கின்றனர். பாசனத்திற்கு திறந்த வெளிக் கிணறும்,250 அடி ஆழம் கொண்ட இரண்டு ஆழ்துளைக் கிணறுகளும் இருக்கின்றது. 

Mar 19, 2024

காளான் வளர்ப்பு முறை

காளானில் வைட்டமின் B அதிகமாக இருப்பதால் இதயம்சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.போலிக்ஆசிட் அதில் இருப்பதால் ரத்தசோகை நோய்க்கு நல்லது.சிறந்த கண்பார்வைக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் தேவையான தாமிர, இரும்புசத்துகளுடன் கூடிய கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றதாதுக்களும் காளானில் உள்ளன.காளான் வகைகள் மொத்தம் சுமார் 20,000  வகைகள் உள்ளன.இந்தியாவில் மட்டும் 2,000 வகைக்காளான்கள் இருப்பதாகவும் இதில்சிப்பிக் காளான், மொட்டுக்காளான் நாட்டுக் காளான்,அரிசிக் காளான் மற்றும்பால் காளான் போன்றவைபயன்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.இயற்கையில் கிடைக்கும் காளான்கள் வகையில்,நல்லவை என்று நன்குதெரிந்த பின்பே உண்ணவேண்டும்..காளான் வளர்ப்பு முறையில்(kalanvalarpu) சுத்தமான வைக்கோல் 12 இஞ்ச் நீளத்தில் வெட்டி 68 மணிநேரம் தண்ணீரில் நன்கு அழுத்தி ஊறவைக்க வேண்டும்.பின் வைக்கோலை எடுத்து மூடியுள்ள பாத்திரத்தில் ஆவியிலோ(அல்லது) சுடு தண்ணீரில் 2 மணிநேரம் அழுத்தி வைக்கவும்.தண்ணீர் முழுவதையும் வடிகட்டிவிட்டு, சுத்தமான தரையில் கைகளால் இறுக்கிப் பிழிந்தால் தண்ணீர் சொட்டாத அளவிற்கு உலர்த்த வேண்டும்.வீரியமான நன்கு வளர்ந்த காளான் வித்து பாக்கெட்டை 10 சம பாகங்களாக பிரித்தல் வேண்டும்.P.P(1 அடிக்கு2 அடி) கவரில்5 அடுக்கு வருமாறு இரண்டு படுக்கை2¾-3 வரை இருக்குமாறு தயார் செய்ய வேண்டும்.சுத்தமானS.S(STAINLESSSTEEL) கத்தியில் பக்கத்திற்கு நான்கு துளைகள் இட வேண்டும்.20 நாட்கள் இருட்டு அறையில் வைத்து விட வேண்டும். படுக்கை வெள்ளையாக மாறிய பின் தினமும்3 வேளை தண்ணீர் தெளிக்க வேண்டும்.மொட்டு வைத்த3 வது நாள் அறுவடை செய்து துளையிட்ட பாலித்தீன் கவரில் எடை போட்டுச் சீல் வைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.

Mar 12, 2024

வெந்தயக் கீரை வீட்டு தோட்டத்தில் வளர்க்கலாம்

மேத்தி’ என்றும்அழைக்கப்படும் வெந்தயம் பருப்புவகை குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த தாவரத்தின் விதைகள்மற்றும் இலைகள் இரண்டும்உண்ணக்கூடியவை. விதைகள் மசாலாப்பொருளாகவும், உலர்ந்த இலைகள்மூலிகையாகவும், புதிய இலைகள்கீரை வகை உணவாகவும் பயன்படுத்தப்படுகின்றது.இந்தவெந்தயக்கீரை சமையல், மசாலா ,  அழகுசாதன பொருட்கள், சோப்புகள் மற்றும் மருந்துகள் தயாரிக்க என பல்வேறுவகைகளில் பயன்படுத்தப்படுகிறது.வெந்தய விதைகள்மூட்டு வலியை நீக்குதல், இரத்த சர்க்கரை அளவைக்குறைத்தல் மற்றும் முடிவளர்ச்சியை அதிகரிக்க எனசிறந்த மருத்துவ குணங்கள்நிறைந்ததாக காணப்படுகிறது.வெந்தயம்கீரை தாவரம், மண்ணில் நைட்ரஜனின் அளவை சரிசெய்ய உதவுகிறது.வெந்தய செடியைவளர்க்க, பகுதியளவு சூரியஒளி படும் இடத்தைத்தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது 4 முதல் 5 மணி நேரசூரிய ஒளிப்படும் இடமாகதேர்தெடுக்க வேண்டும்.ஒருஇடத்தில் நடுவு செய்தல்அதனின் முதிர்ச்சியடையும் காலம்வரை ஒரே இடத்தில்இருப்பது சிறந்தது. அதனால்வெந்தய செடிகளை கொள்கலன்களில் நடவு செய்யலாம்.வெந்தய செடிகள் வெதுவெதுப்பான மண்ணில் செழித்து வளரக்கூடியது. எனவே தென்னிந்தியாவில் ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். ஆனால் வடஇந்தியாவில் மார்ச், ஏப்ரல் முதல் அக்டோபர் முதல் நவம்பர் வரை பயிர் செய்வது சிறந்தது.வெந்தய செடிகளை நடவு செய்வதற்கு முன்னால் அந்த வெந்தய விதைகளை, அறை வெப்பநிலையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு பாத்திரத்தில் விதைகளை ஒரே இரவு ஊற வைக்கவும் மறுநாள் நடவு செய்வதற்கு தண்ணீரை வடிகட்டிய பின்னர் அதனை நடலாம்.தேர்தெடுத்த இடத்தில் விதைகளை மண்ணில் சமமாக தூவி,1/4 அங்குல மண்ணில் விதைகளை மூடவும்.மண் சமமாக ஈரமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், செடிக்கு அதிகமாக தண்ணீர் விடாதீர்கள், தண்ணீர் தேங்கியுள்ள மண் செடியின் வளர்ச்சியை தடுக்கும்.நடவு செய்த3 முதல்4 வாரங்களில் செடி அறுவடைக்கு தயாராகிவிடும்.

Mar 05, 2024

பனங்கிழங்கு உற்பத்தி செயல்முறைகள்

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பனை சீஸன் காலம். இந்தச் சீஸனுக்குப் பிறகுதான் பனங்காய்கள், பழுத்து பனம்பழங்களாகக் கீழே விழும். ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கிடைக்கும் பழங்களைச் சேகரித்து நிழலான பகுதியில் குவித்து வைக்க வேண்டும். பனை தோட்டங்களில் இருந்து பனைவிதைகளைச் சேகரிக்கலாம். சில தோட்டங்களில் பனை விவசாயிகளே பனைவிதைகளை விற்பனை செய்கிறார்கள்.அக்டோபர், நவம்பர் மாதங்களில் விதை நட்டால் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அறுவடைக்கு வரும்.5 அடி நீளம்,3 அடி அகலம்,1அடிஉயரம்பார்கள்அமைக்கவேண்டும்.பனைவிதைகளின்எண்ணிக்கையைப் பொறுத்து, பார்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க வேண்டும்.குறைந்தபட்சம்1 அடி உயரத்தில் பார் அமைத்தால்தான் கிழங்கு ஆழமாக வேரூன்றி வளரும். அறுவடையின்போது பிடுங்கி எடுக்கவும் எளிதாக இருக்கும். பார் அமைத்த பிறகு,10 கிலோ எரு,2 கிலோ வேப்பந்தழை,3 கிலோ அடுப்புச்சாம்பலை(ஒரு பாத்திக்கான அளவு) கலவையாக்கிப் பரவலாகத் தூவி விட வேண்டும். அதன் பிறகு, பார்கள் மீது விதைகளை நெருக்கமாக அடுக்க வேண்டும். இடம் வசதி குறைவாக உள்ளவர்கள், ஓர் அடுக்கு விதைப்பு முடிந்தவுடன், அதன் மீது மண் போட்டு மூடி இரண்டு அடுக்குகளாக விதைகளை அடுக்கலாம். ஆனால், இரண்டாம் அடுக்கில் உள்ள கிழங்குகள் திடமாக இருக்காது.விதை ஊன்றும் அன்று பழங்களின் சதைப்பகுதியை கையால் பிதுக்கி விதைகளைத் தனித்தனியே எடுத்துவிட வேண்டும். பனம்பழங்களில் குறைந்தபட்சம் ஒன்றும் அதிகபட்சமாகமூன்று விதைகளும் இருக்கும். இதில் வண்டு துளைத்த கொட்டைகள், மிகச்சிறிய கொட்டைகள் எனச் சேதாரமான கொட்டைகளைக் கழித்து விடவேண்டும். பாத்தியின் மீது 'கண் பாகம்' கீழ் நோக்கி இருக்கும்படி நெருக்கமாக அடுக்க வேண்டும்.அடுக்கிய பிறகு, அதன் மீது லேசாக மண் தூவி, பாத்தி ஓரங்களில் மண் அணைத்துவிட்டு, பாத்தி முழுவதும் தண்ணீர் ஊற்றவேண்டும்தண்ணீர் ஊற்றும்போது, மேலுள்ள மணல், இரண்டு அடுக்குப் பனை விதைகளின் இடுக்கு களில் சென்று சேரும். மேல் பகுதியில், மண் குறைந்தால், மீண்டும் மண்ணைத் தூவி மீண்டும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருநாள் இடைவெளியில் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க வேண்டும். அதற்குப் பிறகு, ஈரப்பதத்தைப் பொறுத்துத் தண்ணீர் தெளிக்கலாம். இந்தப் பாத்திகளின் மீது பனை ஓலைகளை மூடாக்காக மூடினால், நீர் ஆவியாகாது. இதனால், கோழிகளும் பாத்திகளைக் கிளறாது.20 நாள்களுக்குப் பிறகு முளைக்கத் துவங்கும்.40வது நாளுக்கு மேல் வேர் பிடித்து வளரும். இதன் வேர்ப்பகுதி மாவுப்பொருளைச் சேகரித்துக் கிழங்காகிறது.60வது நாளுக்கு மேல் கிழங்கு பருமனாகத் துவங்கும்.90 முதல்110வது நாளுக்குள் அறுவடை செய்யலாம்.90வது நாளுக்கு மேல் பாத்திகளின் மேல் பகுதியில் ஆங்காங்கே வெடிப்புக் காணப்படும். அப்போது ஒரு கிழங்கைத் தோண்டிப் பார்த்தால், தோல் வெடித்த நிலையில் காணப்படும். அதிகபட்சமாக110வது நாளுக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். அதற்கு மேல் சென்றால், கிழங்கிலிருந்து பச்சை நிறத்தில்'பீலி' வெளிப்படும். இதனால், கிழங்கு சுவையாக இருக்காது.130வது நாளுக்கு மேல் சென்றுவிட்டால், கிழங்கு தன் பதத்தை இழந்து, சுருங்கி பீலி நீண்டு இளம் குருத்துப்பனையாக வளர ஆரம்பித்துவிடும்.கிழங்கு பிடிக்கத் துவங்கியதும்'கணக்கான்' என்ற வெள்ளைநிறப் புழுவின் தாக்குதல் தாக்கும். இதைக் கட்டுபடுத்திடத்தான் விதை ஊன்றும் போதே, அடுப்புச்சாம்பலும், வேப்ப இலைகளையும் தூவுகிறோம். கிழங்கு வேகமாகவும், பருமனாகவும் வளர, ரசாயன உரத்தை பாத்தியின் மீது தூவியும், தண்ணீரில் கரைத்தும் சில விவசாயிகள் தெளித்து வருகிறார்கள். அறுவடை செய்த கிழங்குகள் தோல் சுருங்காமல்5 நாட்கள் வரை இருக்கும் என்றால், ரசாயன உரம் தெளிக்கப்பட்ட கிழங்குகளின் தோல் மறுநாளே சுருங்க ஆரம்பித்து விடும்.கிழங்குகளைப் பிடுங்கிய பிறகு, தொங்கும் கொட்டையை வெட்டிவிட வேண்டும். இதற்குள், வெள்ளை நிறத்தில் பஞ்சு போன்று தவின் இருக்கும். இனிப்புச் சுவையுடன் இருக்கும் இந்தத் தவினை, சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்தத் தவினை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனையும் செய்கிறார்கள்.

Feb 27, 2024

புடலையில் அதிக மகசூலைப் பெற....

அனைவரும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும், பூசணி வகை குடும்பத்தைச் சேர்ந்தது புடலங்காய். இதுஎளிதாக பயிராகும் காய் வகைகளில், வேகமாக வளரக் கூடியதும், அதிக மகசூல் தரும் பயிராகும்.மண், தட்ப வெட்ப நிலை: புடலங்காய் ஒரு வெப்ப மண்டலப் பயிராகும். இதன் சாகுபடிக்கு25 முதல்30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும். இருமண் பாங்கான மண் வகைகள் சாகுபடிக்கு ஏற்றவை. மேலும் மித வெப்ப மண்டலப் பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.புடலங்காய் சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு20 முதல்25 டன் வரை மகசூல் பெறலாம்ஜூன்- ஜூலை மாதங்களும், டிசம்பர் -ஜனவரி மாதங்களும் சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.நிலத்தை நன்றாக3 அல்லது4 முறை உழவு செய்ய வேண்டும்.கடைசி உழவின்போது20 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு2 மீட்டர் இடைவெளியில்60 செ.மீட்டர் அகலத்தில் வாய்க்கால் எடுத்து நிலம் தயாரிக்க வேண்டும். அந்த வாய்க்காலில்1.5 மீட்டர் இடைவெளியில்45 செ.மீட்டர் நீளம், ஆழம், அகலம் கொண்ட குழிகளை எடுத்து மேல் மண் கலந்து நிரப்பி வைக்க வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு1.5 முதல்2 கிலோ விதையளவு தேவைப்படும். விதையை2 கிராம் பெவிஸ்டின் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு குழிக்கு5 விதைகள் வீதம் ஊன்ற வேண்டும். விதை நட்ட8 முதல்10 நாள்களில் முளைக்கத் தொடங்கிவிடும். ஒரு குழியில் நன்கு வளர்ந்த3 நாற்றுகளை மட்டும் விட்டு மற்ற நாற்றுகளை பிடுங்கி விட வேண்டும்.ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 20 முதல் 30 கிலோ தழைச்சத்து, 30 முதல் 50 கிலோ மணிச்சத்து, 30 முதல் 40 கிலோ சாம்பல் சத்தை இட வேண்டும். மேலுரமாக20 முதல்30 கிலோ தழைச்சத்தை பூ பூக்கும் பருவத்தில் இட வேண்டும்.விதை ஊன்றியவுடன் குடம் அல்லது பூவாளி வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். நன்கு வளர்ந்தவுடன் வாரம் ஒரு முறை வாய்க்கால் மூலமாக தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும்.புடலைக் கொடி வளர்ந்து படருவதற்கு இரும்புக் கம்பிகளை வைத்து பந்தல் போடுவது அவசியமாகும். விதை முளைத்து கொடி வரும்போது, கொடியை மூங்கில் குச்சியோ அல்லது மற்ற குச்சிகளை வைத்தோ ஊன்று கொடுத்து பந்தலில் படர விட வேண்டும்.இரண்டு இலைப் பருவத்தில் எத்ரல்250 பிபிஎம் என்ற வளர்ச்சி ஊக்கியை தெளித்தால் பெண் பூக்கள் அதிகளவில் உற்பத்தியாகும். இதே வளர்ச்சி ஊக்கியை ஒரு வாரத்துக்கு3 முறை தெளிக்க வேண்டும்.புடலையில் பூசணி வண்டின் தாக்குதல் அதிகளவில் காணப்படும். இதைக் கட்டுப்படுத்த2 கிராம் செவின் அல்லது கார்பரில் மருந்தை1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பழ ஈயின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான்1 சதவீதம் தெளிக்க வேண்டும்.விதை ஊன்றிய 80 நாள்கள் கழித்து முதல் அறுவடை தொடங்கும். பின்னர் ஒரு வார இடை வெளியில் 6 முதல் 8 அறுவடை கிடைக்கும். மேற்கண்ட வழிமுறைகளில் பயிரிட்டால் ஒரு ஹெக்டேருக்கு20 முதல்25 டன் வரை புடலங்காய் மகசூலைப் பெறமுடியும்..

Feb 20, 2024

வெண்டை . ஹெக்டேருக்கு 90 முதல் 100 நாளில் 15 டன் வரை 45வது நாளில்  இருந்து அறுவடை செய்யலாம் 

 வெண்டை வெப்பம் விரும்பும் பயிர். நீண்ட நேர வெப்ப நாள் தேவை. பனி மூட்டத்தாலும் ,குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் வெண்டை நல்ல முறையில் வளராது. வெண்டையை எல்லா வகை மண் வகையிலும் பயிரிடலாம். நல்ல உரச்சத்துள்ள மண்களில் மிகவும் நன்றாக வளரும். கார அமில நிலையை ஓரளவு தாங்கி வளரும்.பருவம்: ஜூன் - ஆகஸ்ட், பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடலாம்.ஹெக்டேருக்கு7.5 கிலோ விதை போதும்.3 அல்லது4 முறை நிலத்தை உழவேண்டும். கடைசி உழவுக்கு முன்பு 25 டன் தொழு உரம் இட்டு 45 செமீ இடைவெளி விட்டு வரிப்பாத்தி (பார்சால்) அமைக்கவேண்டும். விதைப்பதற்கு24 மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிலோவுக்கு2 கிராம் கேப்டான் அல்லது திராம் கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். பின்பு விதைகளை400 கிராம் அசோஸ்பைரில்லம் கலவையுடன் கலந்து விதைக்கவேண்டும். நிழலில் ஆறவைத்த அரிசிக் கஞ்சியுடன் அசோஸ்பைரில்லம் தூளை நன்கு கலக்கவேண்டும். பிறகு இதில், வெண்டை விதையை நன்கு கலந்து அரை மணி நேரம் உலர வைக்கவேண்டும். இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை வரியில் 30 செ.மீ இடைவெளியில் 2 விதைகள் என்ற விகிதத்தில் 2 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். 10 நாட்களுக்கு பிறகு 2 செடிகளை விட்டு மீதம் உள்ளவற்றை களைதல் வேண்டும்.நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும், பிறகு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.அடியுரமாக20 கிலோ தழைச்சத்து,50 கிலோ மணிச்சத்து,30 கிலோ சாம்பல் சத்து வரிகளில் ஒரு பக்கத்தில் இட்டு மண்ணுடன் நன்கு கலந்துவிடவேண்டும். நட்ட 30 நாள் கழித்து மேலுரமாக 20 கிலோ தழைச்சத்து இடவேண்டும். 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியம் நுண்ணுயிர்க் கலவையை20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து நேரடியாக மண்ணில் இட்டு, தழைச்சத்தின் தேவையைக் குறைத்துக் கொள்ளலாம். மேலுரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம்.12 கிலோ இடவேண்டும்.ஹெக்டேருக்கு400 கிலோ வேப்பம் பிண்ணாக்கு விதைக்கும்போது, உரத்துடன் கலந்து இடவேண்டும் அல்லது ஒரு ஹெக்டேருக்கு கார்போபியூரான்3ஜி குருணை மருந்து1 கிலோ அல்லது போரேட்10ஜி குருணை மருந்து கிலோ இடவேண்டும்.45 நாளிலேயே அறுவடை செய்யலாம். காய்கள் முற்றும் முன்பாக அறுவடை செய்ய வேண்டும்.2 நாளுக்கு ஒருமுறை அறுவடை செய்வது அவசியம். ஹெக்டேருக்கு90 முதல்100 நாளில்15 டன் வரை காய்கள் கிடைக்கும்.

Feb 13, 2024

சிலந்திகளை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் தாவரங்கள்

சிலந்திகளை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு  இந்த தாவரங்களை வீட்டிற்குள் வைக்கலாம் .அவை சிலந்திகளை விரட்ட உதவும். எலுமிச்சம்பழம் லெமன்கிராஸ், சிட்ரோனெல்லா என்றும் அழைக்கப்படுகிறது, இது சிட்ரஸ்சுவை மையமாகும்.சிலந்திகளைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.எலுமிச்சம்பழத்தின் அத்தியாவசிய எண்ணெய்கள் காரமானவை சிலந்திகளை விரட்ட உதவும்.புதினாவின் ஒரு சிறந்த இயற்கை பூச்சி விரட்டியாகும். நீங்கள் புதினாவை வெளியில் அல்லது உங்கள் சமையலறையில்,, வைக்கலாம். புதினா தண்ணீரை அறைகளில் தெளிக்கவும்.புதினா குடும்பத்தைச் சேர்ந்தது, எலுமிச்சை தைலம் சிட்ரஸ் விளிம்பையும் கொண்டுள்ளது.சிலந்திகள் சிட்ரஸ் வாசனையை வெறுப்பதால், சிறந்த சிலந்தி விரட்டியாகும். சிலந்திகளை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் மற்றொரு செடி ரோஸ்மேரி மனிதர்கள் மங்கலான வாசனையைக் கண்டாலும், சிலந்திகளுக்கான ரோஸ்மேரி மிகவும் தீவிரமானது.உங்கள் அறையில் ரோஸ்மேரி பானையை வைத்து, சிலந்திகளை  விரட்டவும். வீட்டிற்குள்லாவெண்டர்களைவைத்திருந்தால்,அதுசிலந்திகளைவிரட்டும்.லாவெண்டர் பூக்களை உங்கள் அறைகளில் வைக்கலாம். துளசி ஒரு வலுவான மூலிகை என்பதால், அதன் வாசனை சிலந்திகளை விரட்டும். நீங்கள் துளசி தண்ணீரை தெளிக்கவும் முயற்சி செய்யலாம்..

Feb 06, 2024

வீட்டிற்குள் எலிகளை நுழைய விடாத தாவரங்கள்

எலிகள் உங்கள் அழகான வீட்டை நாசமாக்கினால், அதை மீட்டெடுக்க உதவும்  தாவரங்கள் .வெங்காயம் மற்றும் பூண்டு இரண்டும் பொதுவான வீட்டுப் பொருட்கள். இந்த காய்கறிகள் எலிகள் மற்றும் எலிகளை விரட்டும் மிகவும் கடுமையான வாசனையைக் கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் வீட்டு முற்றத்தில் ஒரு பூண்டு செடியை வைக்கலாம் அல்லது சிலவற்றை வெவ்வேறு இடங்களில் வைக்கலாம்.அழகான ஊதாலாவெண்டர் செடி வாசனை எலிகளுக்கு வெறுக்கத்தக்கது. உங்கள் வீட்டிற்குள் ஒரு குவளையில் சில லாவெண்டர் பூக்களை வைக்கலாம், அதன் கடுமையான வாசனை எலிகள் உள்ளே நுழைவதைத் தடுக்கும்.இந்த பிரபலமான வசந்த பூக்கள் ஒரு இனிமையானவாசனை மலர், ஆனால் எலிகளுக்கு வெறுக்கத்தக்கவை. வெளிப்புற தோட்டத்தில் இயற்கை ஒளியின் கீழ் தாவரத்தை வீட்டிற்குள் வைக்கலாம்.கொறித்துண்ணிகள் வலுவான மணம் கொண்ட தாவரங்களை வெறுக்கின்றன. எனவே, புதினா குடும்பத்தைச் சேர்ந்த எந்தவொரு தாவரமும் எலிகளை விலக்கி வைப்பதில் நன்றாக வேலை செய்யும். உங்கள் தேவைக்கேற்ப புதினா செடிகளை வீட்டுக்குள்ளும் வெளியிலும் வைக்கலாம். வீட்டைச் சுற்றி புதினா ஸ்ப்ரேயையும் பயன்படுத்தலாம்.

Jan 30, 2024

செம்பருத்தி செடி கொத்துக் கொத்தாக பூக்க!

மூலிகையாகவும், பூவாகவும் இருக்கக்கூடிய செம்பருத்தியை கண்டிப்பாக பெரும்பாலான வீடுகளில் வளர்ப்பது வழக்கம்.அனைத்து விதமான பூக்காத பூச்செடிகளுக்கும் நல்ல ஒரு ஊட்டச்சத்துள்ள உணவாக இருக்கக்கூடிய ஒரு பொருள் சிட்ரஸ்! இந்த சிட்ரஸ் நிறைந்த பழ வகைகளை நாம் இந்த செம்பருத்தி செடிக்கு உரமாக கொடுப்பதன் மூலம் நம்முடைய பூச்செடி ரொம்பவே அழகாக நிறைய பூக்களை மலர செய்யும்.சிட்ரஸ் நிறைந்த பழ வகைகள் ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் சாத்துக்குடி போன்றவை ஆகும். அதிகம் சிட்ரஸ் நிறைந்துள்ள இப்பழங்களில் உங்களிடம் ஏதாவது ஒன்று இருந்தால், அதனுடைய தோல்பகுதிகளை வீணாக குப்பையில் போடாமல் ஒரு டப்பாவில் போட்டு சேகரித்து வாருங்கள்.20 தோல்கள் சேர்ந்ததும் அதில் முழுவதுமாக தண்ணீர் ஊற்றி நிரப்பிக் கொள்ளுங்கள். ரெண்டு நாட்கள் அப்படியே ஊற விட்டு விடுங்கள். எந்த ஒரு இயற்கையான பொருட்களையும் இரண்டு நாட்கள் ஊற விட்டு விட்டால் அதில் நுண்ணுயிரிகள் பெருக ஆரம்பிக்கும். இந்த நுண்ணுயிர், செடிகளுக்கு நல்ல ஒரு உரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிட்ரஸ் நிறைந்துள்ள இந்த பழத்தின் தோலை இப்படி நுண்ணுயிர் பெருக செய்த பின்னர் செடிகளுக்கு உரமாக கொடுக்க வேண்டும்.நுண்ணுயிரிகள் பெருகிய பின்பு அந்த தண்ணீருடன்10 மடங்கு அளவிற்கு தண்ணீரை சேர்த்து நன்கு வடிகட்டிக் கொள்ளுங்கள். பின்னர் இந்த நீரை உங்களுடைய செடிகளுக்கு வேரிலும் மற்ற எல்லா பகுதிகளிலும் உரமாக தெளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து வரும் ஒவ்வொரு வாரமும் செய்து வர கொஞ்சம் கொஞ்சமாக உங்களுடைய பூச்செடிகளுக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்து கிடைத்து வளர ஆரம்பிக்கும். இந்த ஒரு உரத்தை மட்டும் கொடுத்துவிட்டு அப்படியே விட்டுவிடக் கூடாது. நீங்கள் எப்பொழுதும் உங்களுடைய செடிகளுக்கு கொடுக்கும் உரத்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.நம் கொடுக்கும் எந்த ஒரு உரத்தையும் கிரகித்துக் கொள்வதற்கு இந்த உரம் உபயோகமாக இருக்கும். எனவே நீங்கள் வழக்கம் போல பழக்கழிவுகள், இயற்கை உரங்கள் அல்லது செயற்கை உரங்கள் எது போட்டாலும் சரி, இந்த ஒரு உரத்தை கொடுத்துவிட்டு பின்னர் போடுங்கள். இப்படி செய்யும் பொழுது எத்தகைய பூக்காத செம்பருத்தி செடியும் கொத்துக் கொத்தாக பூக்கும். அதுமட்டுமல்லாமல் பெரிது பெரிதாக நல்ல நிறத்துடனும் பூக்கும். செம்பருத்தி செடி மட்டும் அல்லாமல் ரோஜா போன்ற எல்லா பூச்செடிகளுக்கும் இந்த உரத்தை நீங்கள் கொடுக்கலாம். புதிதாக வாங்கும் செம்பருத்தி செடிக்கும், இது போல நீங்கள் ஒரு முறை செய்து வைத்து விட்டால், அதன் பிறகு நீங்கள் கொடுக்கும் என்ன உரத்தையும் அது எளிதாக கிரகித்துக் கொள்ளும். வேர் பகுதியில் இதை கொடுக்கும் பொழுது மண்ணில் வளமும், தரமும் அதிகரிக்கும்.

Jan 23, 2024

எந்த மாதத்தில் என்னென்ன பயிர் செய்யலாம் ?

குறிப்பிட்ட பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம்.தொடர்ந்து ஒரே பயிரை சாகுபடி செய்யாமல், மாற்றுப் பயிர்களை விளைவிக்கும்போது மாற்றுப் பயிர்களுக்கு முந்தைய பயிரின் கழிவுகள் எருவாகப் பயன்படுவதோடு முந்தைய பயிரில் தங்கி வாழ்ந்த நோய்க்கிருமிகள் அதிகம் புதுப்பயிரைத் தாக்குவது இல்லை.ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள் மற்றும் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலானவற்றை சாகுபடி செய்வார்கள்காற்கறிகள் மனிதர்களுக்கு சரிவிகித உணவு அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு உதவும் உயிர் சத்துக்கள், தாது உப்புக்கள், நார் சத்துக்களை வழங்குவதுடன் சக்திக்கு தேவைப்படும் மாவுச் சத்துக்களையும் அதிகமான அளவில் வழங்குகிறது. எனவே மாதவாரியான உள்நாடு மற்றும் வெளிநாடு சந்தைத் தேவையினை கருத்தில் கொண்டும், அதிக லாபம் பெறும் நோக்கத்தில் மாதாந்திர காய்கறிகளின் விலை விவரத்தினை அறிந்தும் பயிரிட வேண்டும்.ஜனவரி(மார்கழி, தை)கத்தரி, மிளகாய், பாகற்காய், தக்காளி, பூசணி, சுரைக்காய், முள்ளங்கி, கீரைகள், வெங்காயம், அவரை, கொத்தவரை, கரும்புபிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகற்காய், வெண்டை, சுரைக்காய், கொத்தவரை, பீர்க்கங்காய், கீரைகள், கோவைக்காய், அவரை, சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், கரும்பு, பருத்தி)மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகற்காய், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கங்காய், சூரியகாந்தி, உளுந்து, கம்பு, நாட்டுச்சோளம், பருத்தி, கத்தரிஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை, பீர்க்கங்காய், புடலை, பாகற்காய், அவரை, எள், கம்பு, நாட்டுச்சோளம்மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை, வெங்காயம், அவரை, எள், நாட்டுச்சோளம்ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை, கொத்தவரை, தென்னைஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகற்காய், சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி, புடலை, எள், சூரியகாந்தி, உளுந்து, தென்னை, தட்டப்பயறு, துவரை, மொச்சை, பாசிப்பயறுஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், மிளகாய், வெண்டை, சுரைக்காய், அவரை, கத்தரி, மிளகாய், சூரியகாந்தி, பருத்தி, பாசிப்பயறு, துவரை, மொச்சைசெப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கங்காய், பூசணி, புடலை, அவரை, மிளகாய், நெல், பருத்திஅக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், கொத்தவரை, சுண்டல், நெல், பருத்திநவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி, மிளகாய், கொத்தவரை, சூரியகாந்தி, சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, கரும்பு, வாழை, மரவள்ளிடிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரைக்காய், தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய், சுண்டல், நெல், நாட்டுச்சோளம், தென்னை, வாழை, மரவள்ளி ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ்65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ.15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் துறை மூலமாக உதவிகளைப் பெற்று சீரிய முறையில் காய்கறி உற்பத்தி செய்ய தங்கள் ஒன்றியத்திலுள்ள தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்களை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.எலுமிச்சை விதைகள் பழத்திலிருந்து எடுத்த1 வாரத்திற்குள் நடப்பட வேண்டும். இந்த எலுமிச்சை விதைகளுடன் சாம்பலைச் சேர்த்து பாதுகாத்தால் இன்னும் சிறிதுகாலம் விதைகள் தாக்குப்பிடிக்கும்.நாவல் பழ விதைகள் பழத்திலிருந்து எடுக்கப்பட்ட2 நாட்களுக்குள் நடப்பட வேண்டும். மாவிதைகள்15 நாட்களிலும், கொய்யா விதைகள் 16 நாள் வரையிலும் வைத்து நடவு செய்யலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News