பொதுவாக மாடித்தோட்டம் அமைக்கும் போது குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி படும் இடத்தை தேர்ந்தெடுப்பது விளைச்சலை அதிகரிக்க உதவும்.தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில்,தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத்தேடி அலைய வேண்டாம்.அதாவது மொட்டை மாடியில் காய்கறியையும், மாடிப்படிகளில் கீரைகளையும், சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவிதசெடிகளையும் நடலாம்.தேங்காய் துருவியதும் கொட்டாங்குச்சிகளை தூக்கி எரியாமல் அவற்றில் கீரைகளை வளர்க்கலாம். வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கும் பழைய டப்பாக்கள், வாட்டர் கேன்கள், பக்கெட்டுகள் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.லாரிப் பட்டறை, கார் ஒர்க் ஷாப் போன்ற மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களில் பழைய ஆயில் பெயின்ட் பக்கெட்டுகள், கிரீஸ் டப்பாக்கள் கிடைக்கும்.காயலான் கடைகளில் கிடைக்கும் பழைய சின்டெக்ஸ், தகரங்கள், பெரிய பி.வி.சி பைப்புகள் மற்றும் பழங்களை அடுக்கப் பயன்படுத்தும் மரப்பெட்டிகள் ஆகியவற்றை வாங்கி வந்தும் செடி வளர்ப்புத்தொட்டிகளாகப் பயன்படுத்தலாம்.இவற்றுக்கு அதிக செலவு பிடிக்காது. கிரீஸ் டப்பாக்களில் எண்ணெய் வாசம் போகும்படி நன்றாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும்.முக்கியமாக பயன் படுத்தும் பொருட்களின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
.ஆதியகை மரபு விதை சேகரிப்பு மையம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறது. சேகரிக்கப்படும் விதைகளை விவசாயிகளுக்கும். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறது. உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் இவர்களை தொடர்பு கொண்டு கொடுக்கலாம்.இவர்களிடம் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் இவர்களிடம் வாங்கி பயிர் செய்து விதைகளை பாதுகாக்கலாம்.தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் செய்யவும் 916380645836விதைகள் தேவைப்படுவோருக்கு கொரியர் செய்கின்றனர்.
வெள்ளரிச் செடியை சூரியகாந்திச் செடியின் அருகில் வளர்த்தால் , வெள்ளரிக்காய் வழக்கத்தை விட இனிமையாய் இருக்கும்.இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான மண் போதுமானது. அதே நேரம் சூரியகாந்திக் கிளைகள் வெள்ளரிக் கொடி ஏற வசதியாக இருக்கும் காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைக்குப் பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதை செடிகளுக்குப் பயன்படுத்தலாம்.ஏனெனில் இவற்றில் பல சத்துக்கள் உள்ளன இந்த நீரை சூடு ஆறிய பிறகு சேமித்து வைத்து பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம் .பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம், ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும் .எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.டயாபர் உறையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும்.இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.
ரோஸ் செடியில் பூக்கள் அதிகம் பூக்க இயற்கை டானிக் செய்யவாழைப்பழம் தோல்-3 (பொடியாக நறுக்கியது) தயிர் - 1 / 2கப்1தண்ணீர்-12 லிட்டர்காபி தூள் 1ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன்பொடித்த முட்டை தோல்-5ஒரு பாத்திரத்தில்5 லிட்டர் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கொதித்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துதண்ணீர் நன்றாக கொதித்ததும், அவற்றில் பொடிதாக நறுக்கி வைத்துள்ள வாழைப்பழத் தோலை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து பின் பொடித்த முட்டை தோல், 1 ஸ்பூன் காபி தூள், 3 ஸ்பூன் டீ தூள் சேர்த்துநன்றாக கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, 1/2 கப் தயிரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.கலவையை நன்றாக கலந்த பிறகு ஒரு தட்டை கொண்டு, 1 நாள் காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடிவிடவும். மறுநாள் டானிக்கை வடிகட்டி 1 cup இயற்கை டானிக்கில் 1 லிட்டர் தண்ணீர் கலந்து உங்கள் ரோஸ் செடிக்கு வாரத்திற்கு ஒரு முறை ஊற்றி வர, உங்கள் ரோஸ் செடியில் அதிக பூக்கள் பூக்கும்.மீதி டானிக்கை குளிர்சாதன பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
நம் நாட்டில், விவசாயத்திற்கு, மின் செலவில், 18 சதவீதம் ஆண்டுக்கு 20,000 கோடி யூனிட் மின்சாரம் செலவாகிறது; 20,000 கோடி யூனிட் மின்சாரம் செலவாகிறது.முறையாக மின்சாரம் கிடைக்காததால் நீர்ப்பாசனத்தில் பல தடங்கல்கள் இருக்கின்றன.விவசாயத்திற்கு அத்தியாவசியத் தேவை, சரியான நேரத்தில் போதுமான தண்ணீர்; மின்சாரம். இருபது சதவீத விவசாயிகள் பாசனத்திற்காக மின் பம்ப்செட்களை நம்பியுள்ளனர். நாள் முழுவதும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே. எப்போது மின்சாரம் வரும் என்று விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டியிருக்கிறதுமின் விநியோகம் மீண்டும் தொடங்கும் போது கருவிகளை இயக்குவதற்கு ஒரு தொழிலாளியை நியமிப்பது கட்டாயமாகிறது.மோட்டார் இயக்குவதற்கான சுவிட்ச்களை தேவையான நேரத்தில் அணைக்காதது தான். மின் செலவு அதிகரிப்பு, நீர் விரயம் ஏற்படுகின்றன.பம்ப்செட்கள் விரயமாக ஓடுவதற்கு வீட்டிற்கும், வயல்வெளிகளுக்கும் இடையே உள்ள துாரமும் முக்கிய காரணம்.மின் மற்றும் நீர் விரயம் தவிர்க்க, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. இந்த 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், காப்புரிமை பெற்ற, 'இன்டர்நெட் ஆப் திங்க்ஸ்' தொழில்நுட்பத்தில், விவசாயி வீட்டில் இருந்து இயக்கும் வகையிலான பம்ப் கன்ட்ரோலரை உருவாக்கியுள்ளது. மனித தலையீடு இல்லாமல், இதன் துல்லிய செயல்பாடு விவசாயிக்கு நிம்மதியைத் தருகிறது; பயிர் மகசூல் மற்றும் தரத்தை அதிகரிக்கிறது; நிலத்தடி நீர் பயன்பாட்டை மேம்படுத்துகிறது; மண்ணைப் பாதுகாக்கும் போது கார்பன் தடத்தை குறைக்கிறது.இந்திய வேளாண்மையில்2.9 கோடி பம்ப்செட்கள் நடைமுறையில் இருக்கின்றன. இந்தியாவின் பம்ப்செட் தொழில்துறை ஆண்டுக்கு ஏழு முதல் எட்டு சதவீதம் வரை உயர்ந்து செல்கிறது.
மூடாக்கி போடுதல் என்பது மூடிபோடுதல் எனலாம். மூடாக்கு இடுவதன் முக்கிய நோக்கம் விளைச்சலை அதிக படுத்துவது ஆகும். இதற்காக பயிர்களுக்கு இடையே இலைதழை, வைக்கோல் (Straw), கரும்பு சோகை ஆகியவற்றைக் கொண்டு மூடி விடுவார்கள். இதனால் வேர் (Root) பகுதிகளின் ஈரப்பதம் பாதுகாக்க பட்டு மண்புழுக்கள் வளர எதுவாக இருக்கும். களை செடிகளின் வளர்ச்சி கட்டுப்பாடு மண்ணின் தன்மை காக்கப்படுகிறது.இயற்கை உரங்கள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்துதல்இயற்கை உரங்கள் (Natural Compost) ஆன மண்புழு உரம், சாண எரு உரம், தொழுஉரம், பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழைஉரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.பயிர்கள் நன்கு செழித்து வளரஅதிக இயற்கை பயிர் வளர்ச்சிஊக்கிகளான குணப்பசலம், தேங்காய்பால்மோர், அமிர்தக்கரைசல், பஞ்சகவ்யாஆகியவை பயன் படுத்த வேண்டும்.பயிர்களுக்கிடையேயானஇடைவெளிநம் முன்னோர்கள் ஒவ்வொரு பயிருக்கும் இடைவெளி நெல்லுக்கு நண்டோட, கரும்புக்கு ஏரோட, வாழைக்கு வண்டியோட, தென்னைக்குத் தேரோட என்னும் பழமொழிக்கு ஏற்ப வகுத்தனர்.
கடலைபுண்ணாக்கு 500 gm, வேப்பம் புண்ணாக்கு 200gm ,சேர்த்து அது மூழ்கும் அளவு , ஒரு பக்கெட்டில் தண்ணீர் விட்டு, 2 OR 3 நாட்கள் வரை ஊற வைக்கவும். பக்கெட்டை துணியால் கட்டி மூடி வைக்கவும் . ஊற வைக்கும் போது இரண்டு புண்ணாக்குகளையும் கையால் , தினமும் ஒரு முறை நன்றாகக் கலக்கி விடவும் . அதை 1 க்கு 6 மடங்கு விட்டு நன்றாகக் கலந்து கொண்டு செடிகளுக்கு 1 CUP வீதம் ஊற்றி வந்தால், நிறைய மொட்டுக்கள் வரும் . நிறைய பூக்கள் பூக்கும்.
விவசாயிகள் தங்களது விளை நிலங்களில்ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான பயிரைவகைகளை சாகுபடி (Cultivation) செய்வதைத் தவிர்த்து, சுழற்சி முறையில் (Rotational) பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் கூடுதல்மகசூல் (Yield) கிடைக்கும். அதுமட்டுமல்லாது ஒரே மாதிரியான பயிரினைதொடர்ந்து பயிர் செய்வதால் நிலமானது தனது வளத்தினை இழக்கிறது. எனவே பயிர்களை சுழற்சிமுறையில் பயிர் செய்வதன் மூலம்நிலம் இழந்த வளத்தினை மீட்டெடுக்கலாம். பயிர் செய்யும் நிலத்தின் தன்மை, நீரின் அளவுஆகியவற்றுக்கு ஏற்ப பயிர் சுழற்சிமுறையை மேற்கொள்ளலாம்.இயற்கை வேளாண்மையில் கலப்பு மற்றும் ஊடுபயிர்சாகுபடி (Intercropping Cultivation) செய்வதன் மூலம் பயிர் மகசூல் (Yield) அதிகரிக்கிறது. இவ்வாறு செய்வதினால் களைச்செடிகளின் எண்ணிக்கை பெருமளவில் கட்டுபடுத்த பட்டு, பூச்சிகளின் தாக்குதலைவெகுவாக குறைக்கலாம்.செயற்கை உரங்களைப் பயன்படுத்தும் போது நன்மை செய்யும்பூச்சிகள் மற்றும் தீமை செய்யும்பூச்சிகள் எவை என்று பாராமல்அனைத்தையும் அழித்து விடும். இயற்கைப்பூச்சிவிரட்டிகள் தீமை செய்யும் பூச்சிகளைவிரட்டும் பண்புடையது. மேலும் விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிலும் இரசாயன கலப்பின்றி சுவையானஆரோக்கியமானவற்றை உண்ணலாம்.
இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயம், இயற்கை உணவு என இயற்கையினை நோக்கி திரும்பி உள்ளனர். மாறி வரும் இயற்கையும், காலநிலையும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது எனலாம். இயற்கை வேளாண்மையின் (Organic Farming) அவசியத்தை உரக்க சொல்லி வருகிறார்கள் இயற்கை வேளாண்மை ஆய்வாளர்கள்.இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் தெரிந்து கொள்வது மிக அவசியமாகும். ரசாயனம் கலந்த மண்ணை மாற்ற அவசியமானதாகவும் உள்ளது. இயற்கை வேளாண்மையில் நமக்கு எல்லா உயிரிங்களும் ஏதாவது ஒரு வகையில் நன்மையையே செய்கின்றன.பஞ்ச பூதங்களையும் பாதிக்காமல் இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் பொழுது நாம் நமது அடுத்த தலைமுறைக்கு நஞ்சற்ற வேளாண் முறையை தருவதோடு ஆரோக்கியமான உணவுக்கும் (Healthy Food) வழிவகை செய்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.அனைத்து விதமான பயிர் வளர்வதற்கு ஏற்றவாறு நிலத்தினை தயார் செய்வது வேளாண்மையின் முதல் படியாகும். எனவே நிலத்தினை நன்கு உழுது மண்ணினை உழுவதற்கு எளிதாகவும், பஞ்சு போல மிருவானதாகவும் மாற்ற வேண்டும். இயற்கை வேளாண்மையினை எப்போது வேண்டுமானாலும் துவங்கலாம். 50 வருடங்கள் செயற்கை உரம் பயன்படுத்திய நிலத்தின் வளத்தினை கூட 6 மாதங்களில் இயற்கை வேளாண்மையின் மூலம் மீட்டெடுக்கலாம். ( தொடர்ச்சியாக வரும்)
மணி பிளான்ட்டின் இலைகளை வாடவிடக்கூடாது. வாடிய இலைகளை கத்தரிக்கவும் அதன் இலைகள் எப்போதும் பசுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் குடும்பத்திற்கு நல்லது ஏற்படும். ஆகவே மணி பிளான்ட்டிற்கு தினமும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒருவேளை இலைகள் வாடிவிட்டால் அவற்றை உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும். ஏனெனில் உலர்ந்த அல்லது வாடிய இலைகள் எதிர்மறையான சக்திகளைக் கொண்டிருக்கும்.மணி பிளான்ட் கொடிகளை தரையில் படரவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வாறு படர விட்டால் வீட்டிற்குள் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கும் . குடும்பத்திற்குள் ஒரு மந்தமான சூழலை உருவாகும்.