25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

May 16, 2023

மாடி தோட்டத்திற்கு மண்புழு உரம், தொழு உரம் தயாரிக்க

மண்புழு உரம் தயாரிக்க, முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும். கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும். அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.தொழுஉரம் தயாரிக்க ,"காய்ஞ்ச நிலத்துல ஆறு அடி நீளம். ரெண்டரை அடி அகலம் கொண்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து அதுல தென்னமட்டைகளைப் பரப்பி வைக்கணும்.அதுக்கு மேல காய்ஞ்ச இலை தழைகள பரப்பணும். அதுக்கு மேல மாட்டு சாணம். கோமியம் கலந்த கெட்டியான கரைசல பரவலா ஊத்தணும்.அடுத்ததா, தண்ணியில 24 மணிநேரம் ஊற வெச்ச மரக்கரியைப் பரவலா போடணும். இது கார்பன் சத்துக்கு. அடுத்ததா, வேப்பிலை, ஆடு, மாடுகள் சாப்பிடாத பச்சை இலை, தழைகளைப் போடணும். இது நைட்ரஜன் சத்துக்காக.அடுத்ததா, சாம்பல், சுண்ணாம்புத் தூள் ரெண்டையும் கலந்து போடணும். இது தாது சத்துக்களுக்காக அதுக்கு மேல பச்சை தென்ன ஓலைகளை அடுக்கணும். இதுல தினமும் தண்ணி தெளிச்சுட்டு வரணும்.25 நாள் கழிச்சு கம்பால கொத்தி கலக்கி விடணும் மூணு மாசத்துல மண்புழுக்கள் உருவாகி, நல்ல உரமா மாறிடும். இத நேரடியா நிலத்துல கொட்டலாம். விளைச்சல் சிறப்பா இருக்கும்".

May 09, 2023

மாடித்தோட்டம் விதை விதைக்கும் முறை:

மாடித்தோட்டம் அமைக்கும் முறைகள் :- ஒவ்வொரு விதையும் விதைப்பதற்கு முன்பு சில வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.வெண்டை விதையை வெள்ளை துணியில் கட்டி அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அப்படியே மூன்று நாட்கள் வைத்துவிட்டால் முளை வந்துவிடும். அதைத்தான் தொட்டியில் நட வேண்டும். காலை நேரத்தில் விதைப்பது நல்லது.உரமிடுதல்- மாடித்தோட்டத்தில் தாவரங்களை வளர்ப்பதற்கு தேவையான அளவு தொழுஉரமும், மண்புழு உரமும் போன்றவற்றை கட்டாயம் இடவேண்டும். மண்புழு உரம் தயாரிப்பு முறை: - மண்புழு உரம் தயாரிக்க முதலில் தோட்டக் கழிவுகள், சமையலறைக் கழிவுகள், வீட்டில் உள்ள மற்ற மக்கக்கூடிய கழிவை மக்குவதற்கு விடவும்.இவை நன்றாக மக்குவதற்கு 45, 60 நாட்கள் ஆகும். அதுவரை ஒரு கலனில் தொட்டியில் குழியில் போட்டு வைக்கவும்.கழிவு நன்றாக மக்கிய பிறகு, அதாவது 45-60 நாட்களுக்குப் பிறகு அவற்றில் மண்புழுக்களை விடவும்.அதிலிருந்து 60 நாட்களில் கறுப்பு நிறம் கொண்ட மண்வாசனை நிறைந்த மண்புழு எரு தயாராகி விடும். உரம் தயாராகிவிட்டது என்பதற்கு அதன் வாசனை மாற்றம் முக்கியமானது.

May 03, 2023

ஆர்கானிக் - இயற்கை விவசாயம்

எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும். எந்த ஒரு ரசாயனமும் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் செய்யப்படுவதுதான் ஆர்கானிக் விவசாயம். இதில் இயற்கையான உரங்கள், இயற்கையான பூச்சிக்கொல்லிகள் போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படும்.ரசாயனங்கள் பயன்படுத்துவதால், உடல் ஆரோக்கியத்திற்காக உண்ணும் உணவே நம் உடல் நலனிற்கு கேடாக மாறிவிடுகிறது. இதைத் தவிர்த்து இயற்கையான உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி இயற்கையான முறையில் செய்வதே ஆர்கானிக் விவசாயம்.இன்று ஆர்கானிக் விவசாயத்தை ஊக்குவிப்பது முக்கியமாகிவிட்டது. ஏனெனில், இன்று வணிக நோக்குடன் உற்பத்தியை அதிகரிக்க, ரசாயனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இப்படி விளைவிக்கப்படும் காய்கறிகள் அல்லது பழங்களை சாப்பிடும்போது உடல்நலன் பாதிக்கப்படுகிறது.இயற்கை விவசாய முறையில் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்ற இயற்கையான உரங்கள் பயன்படுத்தப்படும். இதனால் மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன் உற்பத்தியும் அதிகரிக்கும். இப்படி இயற்கையான முறையில் உரமிட்டு உற்பத்தியாகும் விளைபொருட்களை சாப்பிடும்போது,உடலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது. அத்துடன் மண்ணிற்கும் நைட்ரஜன், பாஸ்ஃபரஸ், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.உரமிடுவதற்கு எப்படி ரசாயனங்களைத் தவிர்த்து இயற்கை உரங்களைப் பயன்படுத்துகிறோமோ அதேபோல் வேப்பெண்ணெய், கோமியம், மஞ்சள், சாம்பல், பூண்டு, துளசி போன்ற இயற்கையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தவேண்டும். ரசாயன பயன்பாட்டுடன்கூடிய விவசாயத்துடன் ஒப்பிடுகையில் ஆர்கானிக் விளைச்சல் விலையுயர்ந்தவையாகவே இருக்கும். இதற்குக் காரணம் ரசாயன உரங்களைக் காட்டிலும் இயற்கை உரங்கள் விலையுயர்ந்தவை. ஆர்கானிக் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மாட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கிறது. இதன் காரணமாகவே ஆர்கானிக் விளைச்சல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Apr 25, 2023

வீட்டு மாடித் தோட்டத்தில் வெங்காயம் பயிரிடும் முறை

நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம்.GrowBags அல்லதுThottiஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா,.விதை வெங்காயம் அல்லது விதைகள்,நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்.வெங்காயம் வளர்வதற்கு சற்று அகலமான தொட்டி அல்லது பை தேவைப்படும்.இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும்.10 நாட்களுக்கு பிறகு விதைக்க வேண்டும்.பைகளில் நிரப்பும் போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது. வீட்டு  மாடித் தோட்டத்தில்  வெங்காயம் பயிரிடும் முறைவிதை வெங்காயத்தை நேரடியாக ஊன்றலாம் . விதைகளை முதலில் குழிதட்டில் விதைத்து, பின் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும்.இதன் இடைவெளியானது தேர்வு செய்யும் பைகளை பொறுத்து மாறுபடும். விதையை சிறிது ஆழத்தில் ஊன்ற வேண்டும். வெங்காய நாற்றுகளின் வேரில் மண் உதிர்ந்து போனாலும், வேர் கொஞ்சம் சேதாரம் ஆனாலும் எடுத்து நட்ட பிறகு எளிதாக வேர் பிடித்து வளர்ந்து விடும்.விதை வெங்காயத்தை ஊன்றிய உடன் பூவாளி கொண்டு நீர் பாய்ச்ச வேண்டும். நாற்றுகளாக இருந்தால் ஊன்றியவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தினம் ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் ஊற்ற வேண்டும்.பஞ்சகாவ்யா உரத்தை மேல் தெளிப்பாக தெளிக்கலாம். இரண்டு லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கரைத்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.இதில் நோய் மற்றும் பூச்சி தாக்குதல் அதிகம் இருக்காது. வேப்பம்புண்ணாக்கை ஊறவைத்து வடிகட்டிய நீருடன் வேப்ப எண்ணெய்3 மிலி(ஒரு லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் பூச்சிகள் காணப்பட்டால் கட்டுப்படுத்தப்படும்.நாற்று மூலம் நட்டால், நான்கு மாதத்தில் விளைச்சல் எடுக்கலாம். வெங்காயத்தை நேரடியாக விதைக்கு போது இரண்டு-இரண்டரை மாதத்திலேயே விளைச்சல் எடுக்கலாம். செடியின் பச்சை நிறம் போய், லேசாய் பழுப்பாக ஆரம்பிக்கும் போது அறுவடை செய்யலாம். வெங்காயம் செடியின் மேல்பரப்பிலேயே தெரியும். அதையும் கொஞ்சம் கவனித்து, நல்ல திரட்சியாக தெரியும் போது அறுவடை செய்ய வேண்டும். ஒரே தடவையில் மொத்தமாய் அறுவடை செய்ய வேண்டியதில்லை. நல்ல திரட்சியான வெங்காயத்தை மட்டும் அறுவடை செய்துவிட்டு மற்ற செடிகளுக்கு நீர் ஊற்றி வந்து இரண்டு வாரம் கழித்து மிச்ச செடிகளை அறுவடை செய்யலாம். 

Apr 18, 2023

உற்சாகம் தரும் வீட்டுத்தோட்டம் 

அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்கள் ஜன்னலோரங்கள், பால்கனி போன்ற இடங்களில் செடிகளை வளர்க்கலாம். தனிவீடு உள்ளவர்கள், மொட்டை மாடிகளில் மண் தொட்டிகள், பிளாஸ்டிக் பைகள் மூலம் வளர்க்கலாம். வாடகை வீடுகளில் உள்ளவர்கள், காம்பவுண்ட் சுவர்களில் கீரைகளை வளர்க்கலாம். வேலி போன்று படல் அமைத்து, அதில் கொடி வகை பயிர்களை சாகுபடி செய்யலாம். வீட்டைச் சுற்றி காலி இடம் இருப்பவர்கள், நேரடியாக மண்ணில் விவசாயம் செய்யலாம்’ இப்படி இடத்திற்கு ஏற்ப வளர்க்கலாம்.வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலமாக, மாதந்தோறும் காய்கறிகளுக்குச் செலவிடும் தொகையை கணிசமான அளவுக்குக் குறைக்கலாம். வீட்டுத் தோட்ட செடி, கொடிகளைப் பராமரிப்பதால் உடல் உழைப்பு மட்டுமல்லாமல், மனதுக்கும் இதம் சேரும். இல்லங்கள்தோறும் தோட்டம் அமைத்து, உள்ளத்துக்கும் உடலுக்கும் உற்சாகம் தரும்.

Apr 11, 2023

மாடி தோட்டம் போடுபவர்கள்  செடிகளை பராமரிக்க சில குறிப்புகள்

மாடி தோட்டம் போடுபவர்கள் என்றில்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய இடங்களிலும், தொட்டியில் காய்கறி செடிகளை வைத்து பராமரிப்பார்கள். சிலர் மொட்டை மாடியில் சிறிய அளவில் கார்டன் போல் பழங்கள், காய்கறிகள் என்று தொட்டியில் பயிரிட்டு வளர்ப்பார்கள். வயலாக இருந்தாலும் தொட்டியில் இருந்தாலும், செடிகளில் பூச்சி அரிப்பது நடக்க கூடியதுதான்.இதை தவிர்க்க செடி வைக்கும் போதேசரியான மண் பயன்படுத்த வேண்டும். வெறும் மண்ணை மட்டும் எடுக்க கூடாது. இது அதிக எடை கொண்டிருப்பதால் தொட்டியின் கனம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மாடிதோட்டம் போடுபவர்கள் வெறும் மண்ணை மட்டும் பயன்படுத்தவே கூடாது.செடி வைக்கும் போது நான்கில் ஒரு பங்கு மண், ஒரு பங்கு கோகோ பீட் என்று சொல்லகூடிய தேங்காய் நார் துகள்கள், ஒரு பங்கு மக்கிய உரம், ஒரு பங்கு ஆற்று மணல் என்று நான்கையும் சம அளவு கலந்து பயன்படுத்த வேண்டும். தேங்காய் நார் துகள்களை இரண்டு முறை நீரில் கழுவி பயன்படுத்த வேண்டும்.செடிகளுக்கு செம்மண் எப்போதும் சிறந்தது என்றாலும் அந்த மண் கிடைக்காத நிலையில் மண்ணை வளப்படுத்த சில முறைகள் கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பகுதியில் கிடைக்கும் மண்ணை எடுத்து, அதில் இருக்கும் பெரிய கற்களை அகற்றி, மண்ணை சுத்தம் செய்யவும். பிறகு அதை பயன்படுத்த வேண்டும்.செடி வைக்கும் போதே, மண்ணில் வேப்ப எண்ணெய் அல்லது வேப்பம் புண்ணாக்கு பொடியை கலந்து விட்டால் விதைகளோ, வேரோ நன்றாக பற்றிக்கொள்ளும். மண்ணுக்கு சமமாக மணல் சேர்ப்பது நல்லது. இல்லையெனில் ,இது வேர்பகுதியை இருக்கி கட்டியாக்கிவிடும்.கீரைகளோ, காய்கறிகளோ, பழச்செடிகளோ அதற்கேற்ப மண்ணை நிரப்ப வேண்டும்.  சிறிதாக செடிகளை வளர்க்க செய்யலாம். அப்போதுதான் எல்லாவற்றையும் கவனமாக பராமரிக்க முடியும். செடிகள் பட்டு போகாமல் பார்க்கமுடியும். இந்த குறிப்புகளை கவனமாக கடைப்பிடித்தாலே செடிகள் அருமையாக வளர்ந்திருக்கும். இப்போது செடிகள் வளர, வளர காய்களும், பூக்களும், பழங்களும் நிறைவாக கொடுக்க வேண்டும். அதோடு பூச்சிகளும் செடிகளை பற்றாமல் இருக்க வேண்டும். அதற்கான உரம் தயாரிப்பு குறித்து பார்க்கலாம்.

Apr 04, 2023

பாம்பு செடி

ஒரு மீள்மற்றும் பிரபலமான வீட்டுதாவரமாகும். அதன்பசுமையான வாள்வடிவ இலைகள்நேராக வளர்ந்து கிட்டத்தட்டபோலியானவை என்பதால் இதைக்கண்டறிவது எளிது. பாம்பு தாவரங்கள் வீட்டுதாவரங்களாக பிரபலமாக உள்ளன,  பாம்புதாவர பராமரிப்பு எளிதானது,குறைந்த தண்ணீர்தேவைப்படுகிறது .பாம்பு செடிகள் உட்புற வெளிச்சத்தில் மெதுவாக வளரும், ஆனால் சூரிய ஒளியில் சில மணி நேரம் அவற்றை வெளிப்படுத்துவது அவற்றின் வளர்ச்சியை துரிதப்படுத்தும். நடவு மற்றும் இடமாற்றம் செய்ய உகந்த நேரம் வசந்த காலம். இது ஒரு நல்ல அதிர்ஷ்ட தாவரமாகும், ஏனெனில் இது காற்றில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி, ஃபார்மால்டிஹைட் மற்றும் பென்சீன் போன்ற விஷங்களை நீக்குகிறது.மிகவும் பொதுவான வகை பாம்பு செடியின் பசுமையானது சாம்பல் அல்லது வெள்ளி கிடைமட்ட கோடுகளுடன் மெல்லிய, பச்சை இலைகளைக் கொண்டுள்ளது. இந்த ஆலை பல அடிகளை எட்டும் மற்றும் குறைந்த வெளிச்சத்தில் வளரும். நீங்கள் அவற்றை பல வடிவங்களில் காணலாம்,பாம்பு செடியானது6 அங்குலத்திலிருந்து பல அடி உயரம் வரை வளரக்கூடிய கடினமான சதைப்பற்றுள்ள தாவரமாகும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகள்  வழங்குகிறது.பாம்பு தாவரங்கள், மற்ற உட்புற சதைப்பற்றுள்ளவைகளைப் போலவே, காற்றை வடிகட்ட உதவுகின்றன இது ஆரோக்கியமான காற்றோட்டத்தை ஒழுங்குபடுத்த உதவுகிறது.இரவும் பகலும் காற்றை வடிகட்டுகிறது.நச்சு இரசாயனங்களை உறிஞ்சி அகற்றும் திறன் காரணமாக அவை காற்றில் பரவும் ஒவ்வாமைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகின்றன.பாம்பு செடி பாம்பு செடி சுற்று சூழலில் ஆக்ஸிஜன் மற்றும் ஈரப்பதத்தை நிரப்புகிறது, இதன் மூலம் வீட்டிற்குள் காற்றின் தரத்தை மேம்படுத்துகிறது. இது வீட்டில் அமைதியையும், மகிழ்ச்சியையும் ஊக்குவிக்கிறது, சுற்றுச்சூழலை ப்ரெஷாகவும், அழகாகவும் மாற்றுகிறது எந்த திசையில் வைக்க வேண்டும்: போதுமான வெளிச்சம் மற்றும் நேரடி சூரிய ஒளி படாத வகையில் வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கவும்.

Mar 28, 2023

மல்லிகை பூ

.இந்த செடி ஒரு தனித்துவமான இனிமையான வாசனையுடன் மனதைக் கவரும் அழகான சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது. இதன் இனிமையான மற்றும் புதிய நறுமணம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் வீட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை வழங்குகிறது. எந்த திசையில் வைக்க வேண்டும்: காலை மற்றும் மாலை சூரிய ஒளி மட்டும் படும் வகையில் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.  மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகை மல்லி பூ மற்றும் குண்டுமல்லி பூ. இவை ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். அதுவும் ஜூன் முதல் நவம்பர் மாதங்கள் மட்டுமே நடவு செய்யலாம். 30 செ மீக்கு, 30 செமீ என்ற அளவில் குழி வெட்ட வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.மல்லிகை பூ அதிகம் பூக்க செடிக்கு உரமாக 10 கிலோ சாணமும் தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தில் காவந்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் உரமாக இட வேண்டும் நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் செடிகளை நடவு செய்ய வேண்டும்.

Mar 14, 2023

துளசி

வாஸ்து சாஸ்திரத்தின் படி சில செடிகள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும், உங்கள் வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலையும் கொண்டுவரும்.  துளசி இந்தியாவில் மிகவும் பிரபலமான மற்றும் எளிதில் கிடையக்கூடிய ஒரு பயனுள்ள தாவரமாகும். இது புராணக்காலம் முதலே முனிவர்களாலும், மக்களாலும் வழிபடப்பட்டு வருகிறது. இது ஒரு இதமான நறுமணத்தைக் கொண்டுள்ளது, இது மனதை அமைதிப்படுத்துகிறது , மகிழ்ச்சியையும் பரப்புகிறது. .மேலும் இதில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் இருப்பதால் பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதை நமது வீட்டின் சுற்றுப்புறத்தின் வைத்தால் போதுமானது. எந்த திசையில் வைக்க வேண்டும்: வீட்டின் "பிரம்ம ஸ்தானம்" என்றும் அழைக்கப்படும் வீட்டின் மையத்தில் இதனை வைக்க வேண்டும். ஒருவேளை அங்கு வைக்க முடியவில்லை என்றால், வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் காலை சூரிய ஒளி படும் வகையில் வைக்கலாம். துளசியை தெற்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அசுபமாக கருதப்படுகிறது மற்றும் இது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை ஊக்குவிக்கும்.

Mar 07, 2023

மணி பிளான்ட்

மணி பிளான்ட் இந்த செடி பல்வேறு வகைகளில் கிடைக்கிறது, ஆனால் ஷேட்ஸ் இலைகள் கொண்டவை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றன. இவை காற்று சுத்திகரிப்பாளராக செயல்படுகிறது மற்றும் போதுமான அளவு ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி இது அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் ஈர்க்கிறது. மணி பிளாண்ட்டை பராமரிக்கும் பொழுது அடிக்கடி பழைய தளிர்களை கத்தரித்துக் கொண்டு வர வேண்டும். நன்றாக படர விட்டு காடு போல் வளர்க்கக் கூடாது. சிக்குன்னுசிறப்பாக இருக்கும்படி நீல நிறத்தில் இருக்கும் மணிபிளான்ட் வளர்த்தால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவிருக்காது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. பச்சை வண்ணம் பசுமையான எண்ணங்களை கொடுப்பதால் பச்சை நிற பாட்டிலில் மணி பிளான்ட் வளர்த்து வந்தால் நேர்மறை அதிர்வலைகள் பெருகும். மணி பிளாண்ட் செடியை ஒரு பொழுதும் வாட விடக்கூடாது. வாடிய மணிபிளான்ட் செடியை அகற்றி விடுவது நல்லது. இலைகள் மஞ்சள் நிறத்தில் மாறினால் கட்டாயம் அதனை கத்தரித்து, சூரிய ஒளியிலிருந்து பராமரித்து வளர்க்க வேண்டும்.வட கிழக்கு திசையில் வாசல் வைத்திருப்பவர்கள் வடகிழக்கு திசையிலேயே மணி பிளான்ட் செடியை வளர்த்து வரலாம். அவர்களுக்கு நல்ல ஒரு அதிர்ஷ்டத்தை, அதிர்வலைகளை அந்த வீட்டிற்கு மணி பிளாண்ட் செடி கொடுக்கும். மற்ற திசைகளில் வாசல் வைத்திருப்பவர்கள் தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட் செடியை வளர்ப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். தென்கிழக்கு திசையில் விநாயகப் பெருமானுடைய அருளும், சுக்கிர பகவான் உடைய அருளும் ஒருசேர கிடைப்பதால் வீட்டில் செல்வ வளத்திற்கும், வருமானத்திற்கும் பஞ்சமே இருக்காது என்று கூறப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News