ரோஸ் ஆப் ஜெரிகோ, என்று அழைக்கப்படும் இந்த தாவரம் வறண்ட சூழலுக்கும் தாக்குப்பிடித்து வளரும். அதனால் நீர் இன்றி கூட நீண்ட காலம் வாழ முடியும்.கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் இலைகள் காய்ந்து பந்து போன்ற வடிவத்தில் சுருண்டு விடும் . பார்ப்பதற்கு இறந்துவிட்டதாகவே தோன்றும். ஆனால் அதற்கு சிறிதளவு தண்ணீர் ஊற்றினாலோ அல்லது மழை மூலம் தண்ணீர் கிடைத்துவிட்டாலோ சில மணி நேரத்துக்குள்ளேயே மீண்டும் துளிர்விட தொடங்கிவிடும். அதனால் இதனை உயிர்த்தெழும் தாவரம் என்றும் அழைக்கிறார்கள். இது இயற்கை வழங்கிய அதிசய தாவரமாக பார்க்கப்படுகிறது.
செண்டு மல்லிசாகுபடி முறையில்விதைவிதைத்து இருபதுநாட்களில் நாற்றுவளர்ந்து விடும். வளர்ந்த நாற்றுக்களைஒரு ஏக்கருக்குபதினெட்டாயிரம் நாற்றுக்களாகபிரித்து நடவுசெய்ய வேண்டும்.நடவு செய்யப்பட்டஅறுபது நாட்களில்செண்டு மல்லிபூ பிடித்துவிடுகிறது. பின்னர்நூறு நாட்கள்வரை தொடர்ந்துபலன் கொடுக்கிறது.கோடைகாலங்களில் ஏக்கர்ஒன்றுக்கு பதினைந்துடன் முதல்இருபது டன்வரை மகசூல்கொடுக்கிறது. குளிர்காலங்களில் செடிசிறுத்து ஏக்கர்ஒன்றுக்கு எட்டுமுதல் பத்துடன் வரைமகசூல் கொடுக்கிறது. செண்டு மல்லிபூ சாகுபடிமுறையில் எல்லாவகையான மண்ணிலும்சாகுபடி செய்யலாம்.அதுவும் எல்லாகாலகட்டத்திலும் சாகுபடிசெய்யலாம். இதன்கடைசி உழவின்போது25 டன்அடி உரமானதொழு உரத்தைஇடலாம். பின்15 செ.மீஇடைவெளியில் பார்கள்அமைக்க வேண்டும்.ஒரு ஏக்கருக்கு15 கிலோ விதையளவு.நடவு பருவம்ஆண்டு முழுவதும்என்றாலும், ஜுன்மற்றும் ஜுலைமாதங்களில் நடவுசெய்ய ஏற்றவை.நிலத்தை 2-3 முறைநன்கு உழுதுகடைசி உழுதின்போதுமக்கிய தொழுஉரத்தை இட்டுநன்கு கலக்கிவிட வேண்டும்.விதைகளை20 கிராம்அசோஸ்பைரில்லம் கொண்டுநேர்த்தி செய்தபின்15 செ.மீ இடைவெளியில்விதைகளை வரிசையாகபாத்திகளில் விதைக்கவேண்டும். விதைத்தவிதையை மண்கொட்டி நன்றாகமூட வேண்டும்.விதைத்த 7 நாட்களில்விதை முளைத்துவிடும், 30 நாட்கள் ஆனவுடன்நாற்றுகளை பிடுங்கிநடவேண்டும்.வரிசைக்குவரிசை 45 செ.மீ, செடிக்குசெடி 30 செ.மீ இடைவெளியில்நடவேண்டும்.ஒரு ஏக்கருக்கு 45 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 75 கிலோ சாம்பல்சத்து ஆகியஉரங்களை அடியுரமாகஇட வேண்டும்.செடிகளை நட்ட 45 நாட்கள் கழிந்ததும் 45 கிலோ தழைச்சத்துஉரத்தினை இட்டு, செடிகளின் வேர்பகுதியில் மண்அணைக்க வேண்டும்.செண்டுமல்லி சாகுபடிபொறுத்தவரை வீரியஒட்டு ரகத்துக்கு 90:90:75- வுடன் தழை, மணி, சாம்பல்சத்து ஆகியவற்றைபயிர் காலம்முழுவதும் நீர்பாசனத்துடன்இட வேண்டும்.செண்டுமல்லிசாகுபடி பொறுத்தவரைநடவு செய்த 30, 60ஆம் நாள்களில்களை எடுக்கவேண்டும்.செண்டுமல்லி களையெடுக்கும்சமயத்தில் மண்அணைத்தல் அவசியம். இது நன்குவேர் பிடிக்கவும், செடியினை தாங்குத்திறனை அதிகப்படுத்தவும்உதவுகிறது.நடவு செய்த30 நாட்களில் செடிகளின்நுனிப்பகுதியை அல்லதுசெடியின் முதல்பூ மொட்டுக்களைகிள்ளி எடுக்கவேண்டும். இப்படிசெடிகளின் நுனியைகிள்ளி விடுவதால்செடிகள் நன்றாகதுளிர் விட்டுவளரும்.மேற்கண்ட முறைகளைமுறையாக கடைபிடித்தால்நடவு செய்த60ஆம் நாளில்இருந்து மகசூல்கிடைக்கும். காலைநேரத்தில் பூக்களைச்செடியில் இருந்துபறித்து கூடைஅல்லது சாக்குப்பையில் அடைத்துவிற்பனைக்கு எடுத்துச்செல்லலாம்.
இலை, தழைகளை உண்டு வாழும் விலங்குகள் அவற்றின் உடல் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து நுண்ணூட்ட சத்துக்களையும் இலை, தழைகளில் இருந்து பெறுகின்றன. மனிதர்கள் பெரும்பாலும் காய்கறிகளை சமைத்து உண்பதால் அவற்றில் இருக்கும் சத்துக்கள் பெரும்பாலும் வீணாகி விடுகின்றன.இதற்கு மாற்றாக, தற்போது உலகின் பல நாடுகளிலும் செடிகளின் இளந்தளிர்களை 'சாலட்' போன்ற வடிவில் உணவாக உட்கொள்ளும் கலாசாரம் பரவி வருகிறது. இதற்கென்று, குறிப் பிட்ட காய்கறிகள், தானியங்களை சிறிய தட்டுகளில் வளர்த்து அவை முளை விடும் பருவத்தில் அந்த இளம் தளிர்களை சேகரித்து உணவாக எடுத்துக்கொள்கின்றனர். இதனை 'மைக்ரோ கிரீன்' என்று அழைக்கின்றனர். கோவில் விழாக்களில் சுமந்துசெல்லப்படும் முளைப்பாரி வகை தாவர வளர்ப்பு முறை என்று சொல்லலாம். மைக்ரோ கிரீன் முறையில் வளர்க்கப்படும் தாவரங்கள் வீடுகளில் வளர்க்கப்படும்போது அவற்றுக்கு எந்த விதமான பூச்சி மருந்துகளும் பயன்படுத்துவது இல்லை.அறுவடை செய்யப்படும் இளம் தளிர்களில் செறிவூட்டப்பட்ட சுவைகள் நிரம்பி இருப்பதுடன், உண்ணவும் மென்மையாக இருக்கிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அஸ் கார்பிக் அமிலம் உள்பட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருப்ப தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.இவை மனித உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கும் அருமருந்தாக செயல்படுகிறது என்று இயற்கை உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இதயநோய், வகை-2 நீரிழிவு நோய், சில புற்றுநோய்கள் மற்றும் உடல் பருமன் போன்றவை வரும் அபாயத்தை மைக்ரோ கிரீன் வகை உணவுகள் குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
கண்ணாடிப் பொருட்கள் வீணாகும்போது அவற்றில் பெரிய துண்டுகள் மறுசுழற்சிக்கு அனுப்பப்படுகின்றன. சிறிய துண்டுகள் பெரும் பாலும் மண்ணில் தான் புதைக்கப்படுகின்றன.அமெரிக்காவைச் சேர்ந்த டெக்சாஸ் பல் கலை விஞ்ஞானிகள், இந்தக் கண்ணாடித் துகள் களை மண்ணில் கலப்பது பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.மண், கண்ணாடி இரண்டுமே சிலிக்கா வால் ஆனவை என்பதை மனதில் கொண்டேவிஞ்ஞானிகள் ஆய்வைத்தொடங்கினர். கண்ணாடிமறுசுழற்சி செய்யும் இடத்தில் இருந்து கண்ணாடித்துகள்களை வாங்கினர். அவற்றின் கூர்மையான முனைகளை மழுங்கடித்தனர்.செடிகள் வளர்ப்பதற்கு பயன்படும் மண்ணில் துகள்களை வெவ்வேறு விகிதங்களில் கலந்து தொட்டிகளில் நிரப்பினர். பின்பு அவற்றில் கொத்த மல்லி, குடைமிளகாய், மிளகாய் ஆகிய தாவரங் களை நட்டு வளர்த்தனர்.முழுக்கவே மண் மட்டும் நிரம்பிய தொட்டியை விட50 சதவீதம் மண்,50 சதவீதம் கண்ணாடித் துகள்கள் கலந்த தொட்டியில் செடிகள்வேகமாக வளர்ந்தன.வெறும் மண்ணில் உருவான சில பூஞ்சைகள் தாவரத்தின் வளர்ச்சியை தடுத்தன. ஆனால், கண்ணாடி கலந்த மண்ணில் பூஞ்சைகள் உருவாக வில்லை.இதனால் தான் அவற்றில் தாவரங்கள் வேகமாக, நன்றாக வளர்ந் துள்ளன. ஆகவே, இனி எதிர்காலத்தில் இவ்வாறு வீணாகும் கண்ணாடித்துகள்களைக் கொண்டு பயிர் வளர்ச்சியை ஊக்கு விக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இந்தப் புது முயற்சி யால் பயிர்களுக்கான உரம், ஆபத்தான பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட் டைக் குறைக்க முடியும்.
தமிழ்நாட்டில் சில கிராமங்களில்விவசாயிகள்அதிகஅளவில் 'கிளாடியோலஸ்' மலர்சாகுபடிசெய்துஉள்நாட்டிலும், வெளிநாடுகளுக் கும் ஏற்றுமதி செய்து அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். நல்ல வருமா னம் தரும் கிளாடியோலஸ் மலர் சாகுபடி பற்றி அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்வது அவசியம்.கிளாடியோலஸ் மலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிக அளவில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. மேலும், தென் இந்தியாவில் பெங்களூருவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத் தில் பசுமை குடில்கள் மற்றும் தோட்டங் களில் சாகுபடி செய்யப்படுகிறது. கிளாடி யோலஸ் மலர்கள் கரணைகள் மூலமாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலர் வெங்காயம் மற்றும் பூண்டு குடும்பத்தை சேர்ந்தது.கிளாடியோலஸ் மலர்களை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் நல்ல வடிகால் வசதி கொண்ட நிலத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். தண் ணீர் தேங்கி நிற்கும் களிமண் நிலங்களில் கிளாடியோலஸ் நன்றாக வளராது. இது மழை மற்றும் பனி காலங்களில் 15 முதல்20 செல்சியஸ் வரை வெப்பம் கொண்ட பகுதிகளில் இளம் பருவத்தில் நன்றாக வளரும் தன்மை கொண்டது. 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமானா லும் செடியின் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படாது. எனவே தமிழகத்தில் தற்போது அதிக அளவில் மலர் சாகுபடி செய்யப்படும் மதுரை, திண்டுக்கல், கடலூர், நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயி கள் அதிக அளவில் கிளாடியோலஸ் மலர் சாகுபடியில் ஈடுபட முடியும்.சாகுபடி முறைகிளாடியோலஸ் மலர் சாகுபடி செய்ய தேர்வு செய்யப்படும் நிலத்தின் கார அமிலத்தன்மை 6 முதல் 7 வரை இருத்தல் வேண்டும். இவ்வாறு இடத்தை தேர்வு செய்த பின் வெப்ப பகுதிகளில் கிளாடி யோலஸ் 2 முதல் 4 இலைகள் விடும் தருணத்தில் 12 முதல் 17 நாட்கள் வரை தொடர்ந்து நீர் பாசனம் செய்ய வேண்டி யது அவசியம்.பின்னர் சாகுபடியில் களைகளை கட் டுப்படுத்த களையெடுக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்து பூங்கொத்துகள் தோன்றும் தருணத்தில் விவசாயிகள் கிளாடியோலஸ் மலர் அறுவடை காலத்தை அடைந்து விட்டதை தெரிந்து கொள்ளலாம்.பதப்படுத்துதல்கிளாடியோலஸ் மலர்களை அறுவடை செய்த பின் கரணைகளை மீண்டும் தோண்டி எடுத்து பெவிஸ்டின் பூஞ்சை கொல்லி மருந்தில் நன்றாக நனைத்து பதப்படுத்துதல் வேண்டும். கிளாடியோலஸ் கரணைகளை குளிர் பதனிடும் முறையில் பதப்படுத்த ஈரமான சாக்குப் பைகள் அல்லது மரப் பெட்டிகளில் வைத்து பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மண் மற்றும் தாவரங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கு உரங்கள் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை.வாழைத்தோல் உரம், வெங்காய தலாம் உரம் தாவரமானது கிளைகளுடன் பூக்கும் கட்டத்தில் நுழையும் போது,வாழைத்தோல் உரம் பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியத்துடன் வளர்ச்சியை அதிகரிக்கிறது.அதிக மகசூலுக்கு பூக்கும் .வெங்காய தலாம் உரம்-பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் நைட்ரஜன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. வேர் வளர்ச்சி, பசுமையான பசுமை, துடிப்பான பூக்கள் ஆகியவற்றை அதிகரிக்கிறது.தாவரத்தில் ஏதேனும் பாதகமான விளைவுகளைத் தடுக்க உரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு எப்போதும் போதுமான தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்வது நல்ல நடைமுறையாகும், ஏனெனில் தாவரத்தின் ஊட்டச்சத்து தேவைகள் வளரும் நிலை மற்றும் பூக்கும் கட்டம் போன்ற வளர்ச்சியின் வெவ்வேறு நிலைகளில் மாறுபடும்.இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், யார் வேண்டுமானாலும் வீட்டில் செழிப்பான மல்லிகை (மோக்ரா) செடியை வளர்க்கலாம்.
எறும்பில் இலை வெட்டி என்ற இனம் ஒன்று உள்ளது. இது உலகின் முதல் விவசாயி எனஅழைக்கப்படுகிறது. வடதென் அமெரிக்க கண்டப் பகுதிகளில் பெருமளவில் காணப்படுகிறது. குழுவாக வாழும் இதில், ராணி, ஆண்மற்றும் வேலைக்கார எறும்புகள் இருக்கின்றன.முட்டையிட்டு சந்ததியை பெருக்குவது ராணி எறும்பின் முதன்மை வேலை. நாள் ஒன்றுக்கு, ஆயிரம் முட்டைகள் வரைஇடும். இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது ஆண் எறும்பின் பணி, வேலைக்கார எறும்பு பெரிய உருவம் மற்றும் வலிய தாடையுடன் இருக்கும். இது வீரர் என அழைக்கப்படுகிறது. இதன்பணி. இலைகளை வெட்டி எடுத்து வந்து, புற்றில் சேர்ப்பது. தன்னை விட, 50 மடங்கு எடைஉடைய இலையையும் சுமந்தபடி புற்றை நோக்கி வேகமாக திரும்பும். இலையை தாடையால் வெட்டி, நசுக்கி, உமிழ்நீரை பாய்ச்சும். இலைக்கூழாகி நொதிக்க ஆரம்பித்த சில நாட்களில் பூஞ்சை உருவாகும். அது எறும்புகளுக்கு உணவாக பயன்படுகிறது.வேலைக்கார எறும்புகள், ராணியை கவனிப்பது, புழுக்களுக்கு உணவளிப்பது, கூட்டை சுத்தம் செய்வது, உணவு சேமிப்பது, எதிரிகளிடம் இருந்து புற்றைப் பாதுகாப்பது, புற்று கட்டுவது என பணிகள் செய்கின்றன. சூழலை காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகூட்டு முயற்சி, வேலைப் பகிர்வு, சுறுசுறுப்பு, விடாமுயற்சியை கடைபிடித்து உதாரணத்துவமாக வாழ்கின்றன.
அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். தேவையான பொருட்கள் Grow Bags அல்லது Thottiஅடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண் புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.நாற்றுகள் அல்லது விதைகள்சொட்டு நீர் பாசனம் அமைக்க வசதி அல்லது பூவாளி தெளிப்பான்பிளாஸ்டிக், மண்பானை, உலோகம், செராமிக் என எதுவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் எனஇந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த மண்கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது.7,10 நாட்களில் மண் காய்ந்து, நுண்ணுயிரிகள் வேலை செய்ய தொடங்கிவிடும். இதன் பிறகு தான் விதைப்பு செய்ய வேண்டும்.நன்கு பழுத்த தக்காளியை எடுத்து பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நன்கு பிசைந்து விட வேண்டும். விதைகள் தனியே பிரிந்து விடும். பின் நீரை வடித்து எடுத்து சிறிது மண் அல்லது சாம்பலுடன் சேர்த்து கலந்து பேப்பரில் காய வைத்துவிட வேண்டும். இவ்வாறு காய்ந்த விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். விதைகள் முளைத்து 20 முதல் 25 நாட்கள் ஆனநாற்றுகளை வேறு பைகளுக்கு மாற்ற வேண்டும்.நாற்றுகளாக இருந்தால் அப்படியே நடவு செய்யலாம். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும்.பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பையிலிருந்து செய்யும் உரமும், பஞ்சகாவ்யா உரமும் போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காயவைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடிஉரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடிமண்ணைக் கொத்தி விடவேண்டும். மண்ணை கொத்தி விடாமல் தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவது பயன் அளிக்காது.தக்காளி நாற்றுகளை நட்டவுடன் அதன் அருகில் சிறிய கம்பு ஒன்றினை ஊன்றிவிட வேண்டும். செடி வளர்ந்ததும் கம்புடன் சேர்த்து கட்டிவிட வேண்டும். அப்பொழுது தான் காய்க்கும் பொழுது பாரம் தாங்காமல் செடி சாயாமல் இருக்கும்.நன்கு திரண்ட பழங்களை இரு நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்ய வேண்டும்.
மாடித் தோட்டத்தில் சாகுபடி செய்யக்கூடிய காய்கறிகளில் பச்சை மிளகாயும் ஒன்று. எந்தவொரு உணவிலும் காரம் தேவைப்படுகிறது. இதற்கு பச்சை மிளகாய் அல்லது மிளகாய் தூள் பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறையும் காய்கறி வாங்கும் போது 5 ரூபாய், 10 ரூபாய்க்கு பச்சை மிளகாய் கொடுங்கள் என கேட்கிறோம். மாடி தோட்டத்தில் அதை எளிதாக வளர்க்க முடியும் என்றால் 5 ரூபாயை கூட மிச்சப்படுத்தலாம். சரியாக பயிரிட்டு நோய் தாக்குதல் இன்றி வளர்த்து வந்தால்90 நாட்களில் பச்சை மிளகாய் அறுவடை செய்யலாம். பச்சைமிளகாய் செடியாக வளரும். இதற்கு மண் கலவை மிக முக்கியம்.15*12 அளவில் மண் தொட்டிபோதுமானது. பச்சை மிளகாய் வளர ஆரம்பிக்கும் முதல் வாரத்தில் சில களை செடி வளரும். இதை அவ்வப்போது அகற்றிட வேண்டும். பச்சை மிளகாய் வளர்ப்புக்கு20 விழுக்காடு செம்மண்,40 விழுக்காடு கோகோபீட்,40 விழுக்காடு உரம்கலவை தேவை.40 விழுக்காடு உரத்தில் மக்கிய மாட்டு உரம், மண் புழு உரம் அடங்கும். சூடோமோனாஸ் பயன்படுத்தி நோய், பூச்சி பாதிப்புகளை தவிர்க்கலாம்.பச்சைமிளகாய் வளர்ப்புக்கு பிரத்யேகமாக விதை வாங்க வேண்டிய தேவையில்லை. சமையலுக்கு பயன்படுத்தும் வர மிளகாய் இருந்தால் போதும். நீங்கள் குண்டு மிளகாயும் பயன்படுத்தலாம். ஒரு காய்ந்த மிளகாய் எடுத்து அதில் உள்ள விதைகளை எடுத்து மண் கலவையில் போட்டு மூடி கொஞ்சமாக தண்ணீர் ஊற்றுங்கள். பச்சை மிளகாயை வெயில் காலத்தில் வளர்ப்பது நல்லது. மழை காலத்தில் பச்சை மிளகாய் வளர்ப்பது சற்று கடினம்.ஒரு வாரத்தில் பச்சை மிளகாய் செடி ஓரளவு வளர்ந்திருக்கும்.4,5 செடிகள் வளர்ந்திருந்தால் அவற்றில் இரண்டை மட்டும் ஒரு தொட்டியில் வளருங்கள். மற்றதை வேறு தொட்டிக்கு மாற்றி விடவும். களை செடிகள் இருந்தால் நீக்கி விடுங்கள். பச்சை மிளகாய் செடி வளர மிதமான ஈரப்பதம் போதும். மண் காயும் நேரத்தில் மிளகாய் செடிக்கு தண்ணீர் ஊற்றினால் போதும். அதிக ஈரப்பதம் இலை சுருட்டல் பாதிப்பை ஏற்படுத்தும்.இலை சுருட்டல் பாதிப்பு வந்தால் சூடோமோனாஸ்10,15 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் தண்ணீரில்கலந்து செடியின் மீதும் வேரிலும் தெளிக்கவும். புளித்தமோர்இருந்தால்அதைஒருலிட்டர்தண்ணீருடன்கலந்துசெடியில்தெளித்தால்இளைசுருட்டலைதவிர்க்கலாம். புதியஇலைகள்நன்றாகவளரும்.90 நாட்களில் பச்சை மிளகாயை சாகுபடி செய்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
விதைப்பு, பாசனம், அறுவடை இவை மூன்றும்தான் கீரை சாகுபடிக்கு முக்கியம். கீரை வளர்ப்பில் தொட்டியில் வைத்து வளர்ப்பது, தரையில் வளர்ப்பது என இரண்டுவகை உள்ளது. இதில் அரைக்கீரை, சிறுகீரை, பாலக்கீரை, சிவப்பு தண்டுக் கீரை, பச்சை தண்டுக் கீரை, பருப்புக் கீரை, காசினி கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி இவற்றைத் தொட்டியில் வளர்க்கலாம். புளிச்சக்கீரை, அகத்திக்கீரைகளை தரையில் வளர்க்கலாம்.தோட்டம்போட வசதிஇல்லாதவர்கள் ஒருபிளாஸ்டிக் சாக்கைஎடுத்து, அதில்பாதி அளவுக்குத்தென்னை நார்க்கழிவு உரத்தைநிரப்பி,அதில்10 கிராம் கீரைவிதையைத் தூவினால்போதும்,20 நாள்களில்கீரை கிடைத்துவிடும்.கீரைவிதைகள் மிகவும்சிறியதாக இருக்கும்,எனவே அதைவிதைக்கும்போது, மேலோட்டமாகத்தூவக் கூடாது,மண்ணுடன் நன்றாகக்கலந்துவிட வேண்டும்.பூவாளியைப் பயன்படுத்திதண்ணீர் விடுவதுநல்லது.மணத்தக்காளிகீரை நன்றாகப்படர்ந்து வளரக்கூடியது, எனவேஒரு தொட்டியில்ஒரு செடிவைக்கலாம். கீரைவிதை விதைத்து15 முதல்20 நாள்களுக்குள்சாகுபடி செய்துவிடலாம்.வீட்டுத்தோட்டத்தில் விளைந்தகீரைகளை அறுவடைசெய்யும் போதுமுழுதாகப் பிடுங்கவேண்டாம். பாலக்கீரையைகிள்ளக் கிள்ளவளரும். அதேபோலஅரைக்கீரை, சிறுகீரையைஅறுக்க அறுக்கவளர்ந்து கொண்டேஇருக்கும். கீரைகளுக்குவேப்பம்புண்ணாக்கை தண்ணீரில்ஊறவைத்து அந்தக்கரைசலை பூச்சிதொல்லைக்குபயன்படுத்தலாம்.1லிட்டர் தண்ணீரில்100 கிராம் புண்ணாக்குஎன்ற விகிதத்தில்கலந்து, அதுகரைந்த பின்அந்தக் கரைசலைஎடுத்து,அதனுடன் 10 மடங்கு தண்ணீர்சேர்த்துக் கலந்துசெடிகளுக்குத் தெளிக்கலாம். இதனால் பூச்சித்தொல்லைகள் இருக்காது.