25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வேளாண்மை

Oct 31, 2023

கத்தரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க .....

கத்தரிக்காய் செடி வைத்த45 நாட்களில் பூக்கள் வைக்க தொடங்கும் இந்த பூக்களைஉதிராமல்காய்களாகமாற்றஇந்நேரத்தில்அமிலத்தன்மை நிறைந்த கரைசலை கொடுக்க வேண்டும்.புளித்த மோருடன் தேங்காய் பால் கலந்து கத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும். கரைசலாககத்தரிக்காய் செடியின் மீது தெளிக்க வேண்டும்தேமோர் கரைசல், மீன் அமினோ அமிலம், மோர் பெருங்காயத்தூள் கரைசல் என உங்களிடம் எந்த கரைசல் உள்ளதோ அதனை தெளிக்கலாம்.இவ்வாறு நீங்கள் கத்தரிக்காய் செடி பூக்கள் பூக்கும் நேரத்தில் தெளிப்பதன் மூலம் பூத்த பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றலாம்., காய்கறி கழுவிய தண்ணீர், அரிசி கழுவிய தண்ணீரை அதன் வேர்பகுதிகளில் ஊற்றி வேண்டும்.மண்புழு உரத்தினை அதன் வேர்பகுதிக்கு மேல் போட்டு கிளறி விடுவதன் மூலம் கத்தரிக்காய் செடி செழித்து வளரும்.கத்தரிக்காய் பெரியதாகவும் பூச்சி இல்லாமலும் வளர கடலை புண்ணாக்கு மற்றும் வேப்ப புண்ணாக்கு கலந்த கரைசலை கொடுக்க வேண்டும்முதலில் 5% கடலை புண்ணாக்கு மற்றும்25% வேப்பம் புண்ணாக்கை எடுத்து கொள்ளுங்கள் இதனை ஒரு வாளியில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து கொள்ளுங்கள்.இது நன்கு ஊறிய பிறகு இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைத்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம் செடியில் புழுக்கள், எறும்புகள் போன்றவை வராமல் இருக்கும்

Oct 24, 2023

பூசணி சாகுபடி

தமிழர்களின்பாரம்பரியஉணவுமுறைகளில்பயன்படுத்தப்படும்காய்கனிகளில் பூசணி  வகைகளுக்கு தனியிடம் உண்டு. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளிலும் ஹோட்டல்கள் போன்ற அதிகளவில் உணவுதயாரிக்கும் இடங்களில் பூசணிவகைகளைப் புறந்தள்ள முடியாது.சாம்பல்பூசணியில் கோ 1, கோ 2 ஆகிய ரகங்கள்உள்ளன.நல்லஆழமான இருமண்பாட்டு நிலத்தில்சாம்பல் பூசணி நன்குவளரும்.மானாவாரியில்பயிரிட களிமண் கலந்தநிலம் சிறந்தது.சாம்பல்பூசணியின் வளர்ச்சிக்குஅதிக குளிரில்லாத, ஓரளவுவெப்பமான பருவநிலைமிகவும் உகந்தது.சிறந்தமகசூலுக்கு காரஅமிலத் தன்மை 6.5 – 7.5 இருத்தல் வேண்டும்.ஜனவரி,  ஜூலை மாதங்களில் விதைக்கலாம்.விதையளவு:ஹெக்டேருக்கு 2.5 கிலோ விதைகள் தேவை.விதைக்கும்முன்னர் கிலோ விதைக்கு 2 லிட்டர் தண்ணீர் என்றவிகிதத்தில் அரைமணிநேரம் ஊறவைத்து, 6 நாள்கள்வைத்திருந்து பிறகுவிதைக்க வேண்டும்.நிலத்தை 3 முதல் 4 முறை நன்குஉழுத பின்னர் 2 மீட்டர்இடைவெளியில் 60 செ.மீ. அகலமுள்ள நீண்டவாய்க்கால்கள் அமைக்கவேண்டும்.இந்தவாய்க்கால்களை ஒட்டி 1.5 மீட்டர் இடைவெளியில் 30 செ.மீ. நீள, அகல,  ஆழக் குழி பறிக்கவேண்டும்.2 x 1.5 மீட்டர் (வரிசைக்கு வரிசை 2 மீட்டர் செடிக்குச் செடி 1.5 மீட்டர்) இடைவெளி விட்டுவிதைக்க வேண்டும்.குழிக்கு 3 – 6 விதைகள் நட்டு, முளைத்தவுடன் 3 செடிகளை மட்டும் வைத்துவிட்டுமற்றவற்றை நீக்கவேண்டும்.குழிஒன்றுக்கு 10 கிலோதொழு எரு மற்றும்கலப்பு உரம் (6:12:12) தழை: மணி: சாம்பல்சத்து), 100 கிராம் இட்டுநீர் பாய்ச்ச வேண்டும். 30 நாள்களுக்கு பின்புகுழிக்கு 10 கிராம்யூரியா என்ற அளவில்மேலுரம் இடவேண்டும்.இப்கோகாம்ப்ளக்ஸ், யூரியாபோன்ற உரங்களை வேளாண்துறையினரின் ஆலோசனைப்படிபயன்படுத்தலாம்.நீர் நிர்வாகம்:பூசணிவிதைகளை விதைக்கும் முன்குழிகளுக்கு நீர்பாய்ச்ச வேண்டும்.விதைத்தஅடுத்த நாள் கண்டிப்பாகநீருற்ற வேண்டும்.பிறகு 3-ம் நாள் உயிர்த்தண்ணீர் ஊற்ற வேண்டும்.முளைப்புத்திறன் வந்தவுடன் வாய்க்கால்களின் மூலம் வாரம்ஒருமுறை நீர் பாய்ச்சவேண்டும்.பின்செய்நேர்த்தி:செடிகளைச்சுற்றி 15 நாள்களுக்கு ஒருமுறைகளைக்கொத்தியால் களையெடுக்கவேண்டும்.கொடிகளைவாய்க்காலில் படரவிடாமல்அவ்வப்போது எடுத்துஇரண்டு வாய்க்கால்களுக்கு இடைப்பட்டநிலப்பரப்பில் படரச்செய்ய வேண்டும்.விளைச்சல்அதிகரிக்க விதைத்த 15 ஆம் நாளில் 10 லிட்டர்நீருக்கு 2.5 மில்லிஎன்ற அளவில் எதிரில்என்னும் வளர்ச்சி ஊக்கியைநான்குமுறை ஒருவார இடைவெளியில் தெளிக்கவேண்டும்.இதனால்கொடிகளில் பெண்பூக்கள் அதிகம் தோன்றி,  அதிகக் காய்கள் பிடித்துவிளைச்சல் அதிகரிக்கும்.பயிர்ப் பாதுகாப்பு:பூசணியில்வண்டுகளின் தாக்குதலைக்கட்டுப்படுத்த மாலத்தியான் 1 மில்லி அல்லது டைமெத்தோயேட்ட 1 மில்லி அல்லது மீதைல்டெமட்டான் 1 மில்லிமருந்து இவற்றுள் ஏதேனும்ஒன்றுடன் 1 லிட்டர்தண்ணீர் கலந்து தெளிக்கவேண்டும்.பழஈக்களைக் கட்டுப்படுத்தமாலத்தியான் 1 மில்லிமருந்தை 1 லிட்டர் நீரில்கலந்து தெளிக்க வேண்டும்.பழஈ தாக்கப்பட்ட பழங்களைச்சேகரித்து அழிக்கவேண்டும்.  பழ ஈக்களின் தாக்குதல்கோடைக்காலத்தில் குறைவாகவும்,  மழைக்காலங்களில் அதிகமாகவும்காணப்படும். எனவேஇதை அனுசரித்து பயிரிடவேண்டும்.எக்காரணத்தைக்கொண்டும், டிடிசி,  பிஎச்சி, கந்தகம், தாமிரத்தைக்கொண்ட பூச்சி, பூசணக்கொல்லிமருந்துகளைத் தெளிக்கக்கூடாது.இது,  கொடிக்கு ஆபத்தைவிளைவிக்கும். சாம்பல்நோயைக்கட்டுப்படுத்த கார்பன்டாசிம் 0.1 சதம் மருந்தைத் தெளிக்கவேண்டும்.அறுவடை:காய்கள்முற்றிய நிலையை அவற்றின்மேல் பரப்பில் உருவாகும்சாம்பல்போன்ற பொருள்உதிரத் தொடங்குவதிலிருந்து கண்டுபிடிக்கலாம்.விதைத்த 90ஆம் நாளிலிருந்து காய்களைஅறுவடை செய்யலாம்.சாதாரண வெப்ப நிலையில்காய்களை நல்ல காற்றோட்டமானஅறைகளில் ஒன்றின்மேல்ஒன்றாக அடுக்காமல் இடைவெளியிட்டுசேமிப்பதன் மூலம் 4முதல் 5 மாதங்கள்வரை பாதுகாக்கலாம்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 17, 2023

சூரியகாந்தி சாகுபடி

கார்த்திகை பட்டத்தில் மானாவாரி பயிராக கோ.4,மார்டன் ஆகியசூரியகாந்தி இரகங்களும் வீரியஒட்டு இரகங்களில் கே.பி.எஸ். எச்.1, கே.பி.எஸ்.எச்.44, டி.சி.எஸ்.எச்.1 ஆகியவை சூரியகாந்தி இரகங்களும் ஏற்றவை.மார்கழி பட்டத்தில் இறவைப் பயிராக பயிரிட கோ.4, மார்டன் ஆகிய இரகங்களும் வீரிய ஒட்டு இரகங்களில் கே.பி.எஸ்.எச்.1, கே.பி.எஸ்.எச்.44, எம்.எஸ்.எப். எச்.17 ஆகியவை ஏற்றவை.விதையளவு : கிலோ / ஹெக்டேர்.இரகங்கள் – மானாவாரி 7, இறவை 6வீரியஒட்டு இரகங்கள் – மானாவாரி 5, இறவை 4விதை நேர்த்திஒருகிலோ விதைக்கு2 கிராம்கார்பன்டைசிம் அல்லது4 கிராம் டிரைகோடெர்மா விரிடிகொண்டு பூஞ்சாண விதைநேர்த்தி செய்யவும்.விதைப்பதற்குமுன் ஒரு ஹெக்டேருக்கானவிதைகளை 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 3 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கொண்டுவிதை நேர்த்தி செய்து 15 நிமிடங்கள் நிழலில்உலர வைத்து விதைக்கவும்.விதைப்புஒருகுழிக்கு இரண்டுவிதை என்ற அளவில்3 செ.மீ. ஆழத்தில்பாரின் பக்கவாட்டில் விதைக்கவும்.பின்பு10ஆம் நாள் செழிப்பாகஉள்ள ஒரு செடியைநிறுத்தி, மற்றதை களைத்துவிடவும்.பயிர்இடைவெளி: வீரிய ஒட்டுஇரகங்கள் – 60 செ.மீ. x 30 செ.மீ.,  இரகங்கள் – 45 செ.மீ. x 30 செ.மீ.களை நிர்வாகம்ப்ளுக்குளோரலின் விதைத்த5 ஆம்நாள் அல்லது பென்டிமெத்தலின் விதைத்த3 ஆம்நாள்2 லிட்டர்/ ஹெக்டேருக்குதெளித்தபின் நீர்பாய்ச்சுதல்வேண்டும்.களைக்கொல்லிஇட்டபின் 30-35 ஆம்நாளில் ஒரு கைகளை எடுக்க வேண்டும்.  களைக்கொல்லி பயன்படுத்தாதநிலையில் விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாள்கை களை எடுக்கவேண்டும்.உர நிர்வாகம்ஹெக்டேருக்கு 12.5 டன் தொழு உரம்அடியுழவில் இடவும்.இரசாயனஉரங்களில் வீரியஒட்டு இரகங்களுக்கு இறவையில்ஹெக்டேருக்கு 60:90:60 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.இரகங்களுக்குஇறவையில் ஹெக்டேருக்கு60:30:30 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும், மானாவாரியில் ஹெக்டேருக்கு40:50:40 கிலோ என்ற அளவில்தழை, மணி, சாம்பல்சத்தும் இடவும்.உயிர் உரம் இடுதல்ஹெக்டேருக்கு 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம்மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியாவை 25 கிலோதொழு உரம் மற்றும் 25 கிலோ மணலுடன் கலந்துவிதைக்கு முன்இடவும்.நுண்ணூட்ட உரம் இடுதல்எக்டேருக்கு 12.5 கிலோ சூரியகாந்தி நுண்ணூட்ட உரக் கலவையை 40 கிலோமணலுடன் கலந்து விதைப்பதற்குமுன் சாலில் இடவும்.மணிகள் பிடிக்க பின்பற்ற வேண்டிய உத்திகள்இடைக்காலபூக்கும் பருவத்தில்மகரந்த சேர்க்கைக்காக காலை9.00 மணி முதல்11.00 மணிக்குள்கையில் மெல்லிய துணிகொண்டு பூவின் மேல்பாகத்தைஇரண்டு நாட்களுக்கு ஒருமுறைமெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையும்தேய்க்க வேண்டும்.எட்டிலிருந்துபத்து நாட்களுக்கு ஐந்துமுறை இவ்வாறு செய்யவேண்டும். அல்லதுஅருகருகே உள்ளபூக்கொண்டைகளை ஒன்றோடுஒன்று முகம் சேர்த்துஇலேசாக தேய்க்க வேண்டும்.ஹெக்டேருக்கு,5 தேனிப்பெட்டி வைப்பதால் மகரந்த சேர்க்கை ஏற்பட்டுவிதை பிடிப்பு அதிகரிக்கும்.  கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

Oct 10, 2023

ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க.....

நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் ரோஜா பூச்செடியில் அதிக அளவு பூக்கள்   பூத்து குலுங்க ஒரே ஒரு கிளாஸ் இதை ஊற்றுங்க போதும்..தேவையான பொருட்கள்:1. எப்சம் சால்ட் - 2 டேபிள் ஸ்பூன்2. சோயா பீன்ஸ் - 43.மஞ்சள்தூள் - 1 டேபிள் ஸ்பூன்4 தண்ணீர்-1கிளாஸ்10 நாளில் பூக்காத ரோஜா செடியினையும் பூக்க வைப்பதற்கு இந்த டிப்ஸ்ட்ரை பண்ணுங்கசெய்முறை:-ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் 4 சோயா பீன்ஸையும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நாம் எடுத்து வைத்துள்ள 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு அதனுடன் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் எப்சம் சால்ட் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதனை வாரத்திற்கு ஒரு நாள் என தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் ரோஜா செடியில் அதிக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.ரோஜாச்செடியில் அதிக பூக்கள் பூத்து குலுங்க: தேவையான பொருட்கள்:தண்ணீர் - 1/2 லிட்டர் வாழைப்பழம் தோல் - 3 காபி தூள் - 1 ஸ்பூன் டீ தூள் - 3 ஸ்பூன் தயிர் - 1/2 கப்செய்முறை-:1/2 லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும்.தண்ணீர் நன்றாக கொதித்ததும், அதில் வாழைப்பழ தோல்களை சிறிதாக நறுக்கி போடவும்.வாழப்பழ தோல் நன்றாக வேகும் வரை கொதிக்கவிடவும் அதனுடன் எடுத்துவைத்துள்ள காபி தூள் மற்றும் டீ தூள்களை சேர்த்துக்கொள்ளவும்.நன்றாக கொதித்த பின்னர் அடுப்பை அனைத்து விட்டு கலவையை ஆற விடவும்பின்பு கலவை மிதமான சூட்டில் இருக்கும் போது, அதனுடன் தயிரை கலக்கவும்..தயிரை கலந்த பின்னர் அந்த பாத்திரத்தில் இருந்து ஆவி வெளியே செல்லாதவாறு நன்றாக 24 மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.24 மணி நேரத்திற்கு பிறகு இதனை வடிகட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். பின்னர் இந்த கலவையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரத்திற்கு ஒரு முறை உங்களது ரோஸ் செடிக்கு தெளிப்பதால் உங்கள் செடிகளில் அதிகம் பூக்கள் பூக்கும்.

Sep 26, 2023

வெள்ளரி செடிகள்  வீட்டில் வளர்ப்பது எப்படி?

வெள்ளரியின்பிறப்பிடம்இந்தியாஎன்றேகூறப்படுகிறது.வெள்ளரியைநம்வீட்டிலேயேஇயற்கையாகவளரவைக்கலாம்.மாடித்தோட்டகாய்கறிகளுள்வெள்ளையும்அடங்கும்.கோடைகாலத்தில்நாம்வெள்ளரியைவளர்ப்பதுஅவசியமாகக்கருதப்படுகிறது.வீட்டிலேயே எளிமையாக வெள்ளரிகள் வளர்க்கலாம். தொட்டி, சமையலறை, மொட்டை மாடி வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என வெள்ளரி செடிகளை வளர்த்த முடியும்.இவை இரண்டுவடிவங்களில்உள்ளன. ஒன்றுபுதர்மற்றொன்றுசெடிகள். வெள்ளரிசெடிகள்உட்புறத்திலும், கொள்கலன்களிலும் வளர்வதற்குபுதரில்வளரக்கூடியவைசிறந்தவழியாகஉள்ளது.வெள்ளரி செடியை நடவு செய்வதற்கு முன்னரே, அதற்கான இடத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்..வெள்ளரிகளை நேரடியாக நடவு செய்வது, அதனை வளர்ப்பதற்கு சிறந்த வழியாக உள்ளது.இந்த செடிக்கு அதிக வெப்பம் மற்றும் வெளிச்சம் தேவை. எனவே, சூரிய ஒளி நிறைந்த இடத்தில் பானை/ கொள்கலனை வைத்துக் கொள்ளலாம்.மண்ணில் குறைந்தது1 அங்குல ஆழம் மற்றும்4 அங்குல இடைவெளியில், விதைகளை விதைக்க வேண்டும். இந்த விதைகள் முளைப்பதற்குத் தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும்.விதைகளை ஈரமான காகித துண்டில் ஊற வைக்கலாம் அல்லது24 மணி நேரம் விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து, பின், அவற்றை மண்ணில் விதைக்கலாம். வெள்ளரி செடிகளை வளர்ப்பதற்கு கரிம பாட்டிங் கலவை அல்லது விதை ஸ்டார்டர் கலவையைப் பயன்படுத்தலாம். வயது முதிர்ந்த உரத்தை, பானை மண்ணின் சம பாகங்களாகக் கலந்து கொள்ளவும்.காற்றுப் பைகளை அகற்றுவதற்கு, கொள்கலனில் உள்ள மண்ணை சிறிது அழுத்த வேண்டும். இதில் மண் முழுவதுமாக ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதாவது குறைந்தபட்சம்20 டிகிரி முதல் அதிகபட்சம்35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம். அதே போல, மண்ணின்pH அளவானது5.5 முதல்6.8 வரை இருக்க வேண்டும்.விதைகளை விதைப்பதற்கு முன்பாக, வயதான உரம் சேர்த்து நட வேண்டும். இருப்பினும், அதிக அளவு பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவு நைட்ரஜன் கொண்ட உரம், வெள்ளரி பழங்களை சிறப்பாக வளர்க்க உதவுகிறது.பூச்சிகள் இளம் வயதிலேயே, அதன் நாற்றுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக அமையும். மேலும், வெள்ளரி செடிகள் அசுவினி, வெள்ளரி வண்டு, பூசணி பூச்சி போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. இதனை சோதனை அட்டவணையை பராமரிப்பதன் மூலமும், கரிம வேம்பு தெளிப்பதன் மூலமாகவும் இந்த பூச்சி தாக்குதலைத் தவிர்க்க முடியும்.வெள்ளரிக்காய்கள், அதன் உள்ளடக்கத்தில்95% நீரைக் கொண்டுள்ளதால், இது நன்கு வளர ஈரமான திடப் பொருள் தேவைப்படுகின்றன.இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால்,55 முதல்60 நாள்களிலேயே முளைத்த வெள்ளரிக்காய்களை அறுவடை செய்ய முடியும். காய், மஞ்சள் நிறமாக மாற விடாமல், முன்னரே அறுவடை செய்ய வேண்டும். நன்கு ஆரோக்கியமான வெள்ளரிக்காய் ஆனது பச்சை நிறம் மற்றும் உறுதியான வடிவத்தில் காணப்படும். இதனை ஒரு வாரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் புதிது போல் இருக்கும்.

Sep 19, 2023

மல்லிகைப்பூ செடி

மதுரை மல்லிகையின் மனமும், நிறமும், தமிழகத்தில் வேறு எங்கும் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களில் கண்டறிய முடியாது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைக்கு நிரந்தரமாக வரவேற்பு உண்டு.பொதுவாக மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். இந்த சீசனில் மல்லிகைப்பூக்கள் அதிகளவு சந்தைகளுக்கு விற்பனைக்கு வரும்.இந்நிலையில் தற்போது குளிர் காலம் தொடங்கும் ஆஃப் சீசனில் மல்லிகை சாகுபடியில் பெரியளவில் பூக்கள் உற்பத்தியாகாது. ஆனால், உற்பத்தி குறைவால் இந்த ஆஃப் சீசனில் பூக்களுக்கு நல்ல மவுசும், விலையும் கிடைக்கும்.குளிர்காலத்தில் மல்லிகைப்பூ செடிகளை கவாத்து செய்து ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை செய்தால் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் குளிர்காலங்களில் கூட மல்லிகைப்பூ உற்பத்தியை அதிகரிக்கலாம்.குளிர்காலங்களில் மல்லிகை பூ விலையானது மும்மடங்கு அதிகரிப்பதால் விவசாயிகள் அதிகம் லாபம் ஈட்டலாம். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தரையிலிருந்து45 செ.மீ., உயரத்தில் கவாத்து செய்ய வேண்டும்.கவாத்து செய்த வெட்டுப்பகுதிகளில் பைட்டலான் பூஞ்சாணக் கொல்லியை தடவி பூஞ்சாணத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். கவாத்து செய்யும்போது குறுக்குக்கிளைகள், நோய் மற்றும் பூச்சி தாக்கிய கிளைகள், மெலிந்த சிறிய கிளைகள் ஆகிவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.செடிகளை நன்கு சூரிய ஒளி படுமாறு செய்ய வேண்டும். கவாத்து செய்தவுடன் தொழுஉரம் 10 கிலோவுடன்30;60;60 கிராம் தழை, மணி, சாம்பல்சத்து அதாவது, 65 கிராம், யூரியா 375 கிராம், பொட்டாஷ் 100 கிராம் என்ற அளவில் ஒவ்வொரு செடிகளுக்கும் அதன் மையப்பகுதிகளில் இருந்து 1 1/2 அடி அளவிற்கு தள்ளி 1/2 அடி ஆழம் குழி பறித்து மண்ணில் இட்டு உடனே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.ஒவ்வொரு செடிக்கு500 கிராம் வேப்பம் பிண்ணாக்கு இடுவதின் மூலம் நூற்புழுக்கள் தாக்கா வண்ணம் செய்யலாம். கவாத்து செய்து ஒரு மாதம் கழித்து10 மில்லி சைகோசெல் மற்றும்4 மி.லி ஹூமிக் அமிலத்தை10 லிட்டர் தண்ணிரில் கலந்து 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இதை செய்தால் நவம்பர், டிசம்பரில் பூக்கள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.

Sep 05, 2023

இயற்கையான மாவு பூச்சி கொல்லி மருந்து

விவசாயி பயிரிட்டு அதை அறுவடை செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். முக்கியமாக அதில் ஒவ்வொரு பிரச்சனையை சந்திக்கும் போது தான் ஏன்டா பயிரிட்டோம் என்றுயோசிக்க வைத்து விடும். இதனை சரி செய்வதற்கு இயற்கையான மருந்துகளை  தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் .இந்த மாவு பூச்சியானது பயிர்களை நாசம் செய்கிறது. இதனால் 30% முதல் 40% ரை பயிர்கள் நாசம் அடைகின்றன. வறட்சியும், வெப்பமும் அதிகமாக உள்ள ளங்களில் மாவு பூச்சியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.பயிரில் மாவுப்பூச்சி தாக்கி இருந்தால் இலைகள் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகள் வளைந்தும், நெளிந்தும், குறுத்தில் இலைகள் சிறுத்து திருகிக் கொண்டிருக்கும். இலையின் அடிப்பகுதி, குருத்து, கிளைகள் தண்டுப்பகுதிகளில் வெள்ளையாக அடை போல மாவுப்பூச்சிகள் படர்ந்திருக்கும். சிவப்பு, கருப்பு எறும்புகள் காணப்படும். பளபளப்பான ஒட்டும் தன்மை கொண்ட தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சியும் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் அதிகளவில் இருக்கும் போது இலைகள் வாடி கருகிவிடும்.மாவு பூச்சியை கொள்ள இயற்கையான வழிமுறை:1. வேப்பிலை2கிலோ2ஆடாதோடா2கிலோ3.நொட்சி 2கிலோ4 எருக்கு2கிலோ5 நெய்வேலி காட்டாமனக்கு 2கிலோ6.10 லிட்டர் மாட்டுசிறுநீர்செய்முறை:-மேல் கூறப்பட்டுள்ள இலைகளை சிறிய சிறியதாக நறுக்கி மாட்டு கோமியத்துடன் 7 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு இதனை வடிக்கட்டி 10 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் செய்து வைத்துள்ள கலவையை கலந்து கொள்ளவும் இதனை பயிரில் தெளித்து விட வேண்டும்..10கிலோ இலைகளுக்கு 10 லிட்டர் மாட்டு கோமியம் சிறந்ததாக இருக்கும் மாட்டுகோமியம் பழையதாக இருக்க வேண்டும்.

Aug 29, 2023

வாழை மரத்தில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்.

 வாழைமரத்தில் காய்க்கும் பழம், வாழைப்பூ. வாழைக்காய், வாழை இலை, வாழை தண்டு, வாழை நார் போன்ற எல்லாமே பயனுள்ளதாக இருக்கிறது. இதனாலேயே எல்லாரும் வீட்டிலும் வளர்க்கிறார்கள். ஆனால் சிலரது வீட்டில் வாழைப்பழம் பெரிதாக இருக்கும். சிலரது வீட்டில் பழம் சிறியதாக இருக்கும். அவர்களும் பார்த்து பார்த்து தான் வளர்க்கிறார்கள் ஏன் இப்படி பழம் குச்சியாக உள்ளது என்று நினைப்பார்கள்.  வாழை மரத்தில் அதிக காய்கள் காய்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும். முதலில் வாழை கன்றை வைப்பதற்கு முன் 2 நாட்களுக்கு முன்பே குழியை நோண்டி அதில் ஆட்டு சாணம், மண்புழு உரம் போன்றவற்றை சேர்த்து கலந்து விட வேண்டும்..இரண்டு நாட்களுக்கு பிறகு வாழைக்கன்றை வைத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். முக்கியமாக எப்பொழுதும் வாழைக்கன்றில் ஈரப்பதம் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும். தினமும் காலை மற்றும் மாலை இரண்டு வேலையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அடுத்து நீங்கள் வாழை கன்றை வைத்த கொஞ்சம் வளர்ந்தவுடன் 7 முறை சீவ வேண்டும். நீங்கள் அப்படியே விட்டு விட்டால் மரம் உயரமாக வளர்ந்து விடும். காய்களும் நன்றாக காய்க்காது.வாழைக்கு தழைச்சத்து, சாம்பல் சத்து, மணி சத்து போன்றவை தேவைப்படும். இந்த சத்துக்கள் தான் அதிக காய்கள் காய்ப்பதற்கு உதவுகிறது.:தழைச்சத்து அதிகரிப்பதற்கு உளுந்தை குழியில் போட வேண்டும். ஏனென்றால் உளுந்தில் ரஷோமீம் என்ற பாக்ட்ரியா உள்ளது. இவை மரத்தில் உள்ள கிருமிகளை அகற்றி செழிப்பாக வளர செய்கிறது.தழைச்சத்தை அதிகப்படுத்துவதற்கு கடலை பிண்ணாக்கு கரைசல், ஆட்டு சாணம் போன்றவற்றை உரமாக கொடுக்கலாம்.:மரத்தில் மணிச்சத்து குறைந்தால் சீப்புகளின் எண்ணிக்கை குறையும் இதனை இயற்கையாகவே அதிகரிப்பதற்கு எள்ளு பிண்ணாக்கு கரைசலை கொடுக்கலாம்..சாம்பல் சத்தை அதிகப்படுத்த ஆமணக்கு கரைசலை கொடுக்க வேண்டும். மூன்று சத்துக்களையும் மாதத்திற்கு ஒரு முறை கொடுக்க வேண்டும்.

Aug 15, 2023

கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்க்க

பலரும்தங்களின் வீட்டில் அழகுக்காகவோ தேவைக்காகவோ பல வகையான செடிகளை வளர்க்கிறார்கள். அப்படி விருப்பப்பட்டு வளர்க்கும் செடிகளில் ஒன்று கத்திரிக்காய் செடி. அப்படி நாம் விருப்பப்பட்டு வளர்க்கும் கத்திரிக்காய் செடியில் அதிக அளவு காய்கள் காய்ப்பதற்கு தேவையான பொருட்கள்: அரிசி தண்ணீர் 4 லிட்டர், காய்கறி கழிவு -2 கைப்பிடி அளவு, கடலை புண்ணாக்கு - 2 கைப்பிடி அளவு, வேப்பம் புண்ணாக்கு 2 கைப்பிடி அளவு, பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 4 லிட்டர் அரிசி தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.பின்னர் அதனுடன் எடுத்து வைத்துள்ள 2 கைப்பிடி அளவு காய்கறி கழிவினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.அடுத்து அதனுடனே 2 கைப்பிடி அளவு கடலை புண்ணாக்கினையும் சேர்த்துக் நன்கு கலந்து கொள்ளுங்கள்.இறுதியாக நாம் எடுத்து வைத்துள்ள கைப்பிடி அளவு . 2 வேப்பம் புண்ணாக்கினையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இதனை ஒருவாரத்திற்கு அப்படியே விடுங்கள்.அதற்கு பிறகு இதனை உங்களின் கத்திரிக்காய் செடிகளுக்கு ஊற்றுங்கள். இதனை தொடர்ந்து செய்து ஊற்றி வருவதன் மூலம் கத்திரிக்காய் செடியில் அதிக காய்கள் காய்ப்பதை காணலாம்.

Aug 08, 2023

செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்க ....

 நாம் விரும்பி வளர்க்கும் பல வகையான பூச்செடிகளில் செம்பருத்தி பூச்செடியும் ஒன்று  செம்பருத்தி பூவினால் நமக்கு பலவகையான நன்மைகள் கிடைக்கிறது. அப்படி நாம் மிகவும் விரும்பி வளர்க்கும் செம்பருத்தி பூச்செடியில் அதிக அளவு பூக்கள் பூக்கவில்லை என்றால் நமது மனம் மிகவும் கவலைப்படும். உங்க வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூச்செடியில் கொத்து கொத்தாக பூக்கள் பூக்க உதவும் ஒரு  TIPS.1. சாதம் வடித்த தண்ணீர் - 1 கப்2 வெந்தயம் - 50 கிராம்3 வேர்க்கடலை - 50 கிராம்4 தண்ணீர் - 10 லிட்டர்மூடிபோட்ட பாத்திரத்தை எடுத்து கொள்ளவும்:முதலில் நாம் எடுத்து வைத்துள்ள1 கப் சாதம் வடித்த தண்ணீரை1 மூடிபோட்ட பாத்திரத்தில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள50 கிராம் வெந்தயம் மற்றும்50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து இரண்டு முதல் மூன்று நாட்கள் அப்படியே ஊறவிடுங்கள்.மிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:இரண்டு முதல் மூன்று நாட்கள் கழித்து நாம் ஊறவைத்திருந்த1 கப் சாதம் வடித்த தண்ணீரை,50 கிராம் வெந்தயம் மற்றும்50 கிராம் வேர்க்கடலை ஆகியவற்றை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.பெரிய பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள்.பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் தயாரித்து வைத்துள்ள பசையை சேர்த்து அதனுடன்10 லிட்டர் தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ளுங்கள்.பிறகு இதில் இருந்து1 கப் மட்டும் எடுத்து உங்கள் வீட்டில் உள்ள செம்பருத்தி பூச்செடியின் வேர்களில் ஊற்றி கொள்ளுங்கள். இதனை வாரத்திற்கு இரு முறை என்று தொடர்ந்து ஊற்றி வருவதன் மூலம் உங்கள் செம்பருத்தி பூச்செடி கொத்து கொத்தாக பூக்கள் பூக்க ஆரம்பிப்பதை நீங்களே காணலாம்.அதேபோல் இதனை அனைத்து பூச்செடிகளும் மற்றும் செடிகளுக்கும் ஊற்றலாம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News