முந்திரி, பாதாம் சிக்கிகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை பாயசம், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மேலே தூவிப் பரிமாறினால், சுவை சூப்பராக இருக்கும்.முருங்கைக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து காயவிடாதீர்கள்.முருங்கையை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு ஃபிரீசரில் வையுங்கள். சமைக்கும் போது எடுத்து கழுவி சேர்த்து கொள்ளலாம். குருமாவில் சிறிது பாதம் அரைத்து ஊற்றலாம். இது கொழுப்பை கட்டுபடுத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.தேங்காய் சேர்த்து குருமா வைக்கும் போது ,ஒரு சிலருக்கு சேராது.மற்ற பொருட்களை மட்டும் வதக்கி அரைத்த பிறகு கடைசியாக தேங்காய் பால் சேர்த்து குருமா வைக்கலாம்.கொஞ்சம் தண்ணியாக இருந்தாலும் ருசியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.கோதுமை இரண்டு கப் எடுத்து துணியில் கட்டி வேகவைத்து எடுத்து, பின் தட்டில் ஆறவிட்டு, வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி மாவை கொழுக்கட்டையாக உருட்டி, வேக வைத்து எடுத்தால், கோதுமை கொழுக்கட்டை சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து ,நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.
* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.*வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
பாயாசம் கேசரி போன்றவை செய்யும் போது அரிசி ரவை வெந்த பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.தயிர் பச்சடி நீர்த்து விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக்கி கலந்து விட்டால் தயிர் பச்சடி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.டீ, காபி குடிக்கும் கப்பில் படிந்துள்ள கரையை நீக்க ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி கறை உள்ள இடத்தில் தேய்த்து கழுவ கறை போகி விடும்.ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதனுடன் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தால் ஆப்பம் நல்ல மெத்து மெத்தென மென்மையாக இருக்கும்.முட்டையை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்வது நல்லது.
காராச்சேவு செய்யும் போது, மாவை சற்றுகெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம். ரிப்பன் பக்கோடாவிற்கு, இரண்டு கப் கடலைமாவுக்கு, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து செய்வது சரியான விகிதம்.ரிப்பன் பக்கோடாவை நன்றாக சிவக்க வேகவைத்து எடுப்பது நல்லது. மகிழம்பூ, தேன்குழல் போன்ற பலகாரங்களுக்கு உபயோகிக்கும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நைசாக அரைத்து, பின்னர் சலித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம். எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.
உளுந்துமாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, முழு உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின்னர், மிக்ஸியில் நைசாகப் பொடித்து பயன்படுத்தவும்.கார ஓமப் பொடிக்கு, சிகப்பு மிளகாய் வற்றலை நைசாக மிக்ஸியில் அரைத்து உபயோகிக்க வேண்டும். மிளகாய்ப் பொடி நன்றாக அரைபடாவிட்டால் பிழியும்போது அச்சு துளைகளில் அடைத்து, பிழிய வராது.அரிசி மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, சாதாரண அரிசி மாவை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட அரிசிமாவை பயன்படுத்துங்கள்.புதிதாக வாங்கிய எண்ணெயில் பலகாரங்களைச் செய்தால், பலகாரங்களின் கரகரப்பு, நன்றாக இருப்பதுடன், அவை நாள்பட பழைய வாசனை வராமல் இருக்கும்.மைதா மாவு, கடலை மாவு போன்றவற்றை உபயோகித்து செய்யும் கார வகைகளுக்கு புதிதான மாவையே பயன்படுத்த வேண்டும்.
சுவையான ஜவ்வரிசி காராபூந்தி செய்ய ஜவ்வரிசியை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். அதனுடன் சிறிது மிளகாய் துாள், பெருங்காயத்துாள், தேவையான அளவு உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த சுவை அருமையாக இருக்கும்.பக்கோடா தயாரிக்கும் முன், பேசினில் நெய், சமையல் சோடா சேர்த்து விரல்களால் நன்றாக நுரைக்க தேய்க்கவும். அதன்பின், கடலைமாவு, பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து கலந்து எண்ணெயில் உதிர்த்துப் போட்டால், பக்கோடா கரகரப்பாக இருக்கும்.பச்சரிசி - நான்கு ஆழாக்கு, பாசிப்பருப்பு -இரண்டு ஆழாக்கு எடுத்து வெறும் வாணலியில் வறுத்து, இரண்டும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ள, காராசேவ், ரிப்பன், தேன்குழல், பக்கோடா, பஜ்ஜி என, எதுவேண்டுமானாலும் செய்யலாம். மாவை கரைத்து, சீரகம்,மிளகு, பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தோசையும் வார்க்கலாம். குலாப் ஜாமூன்பொரித்த எண்ணெயில் சிறு சிறு துண்டுகளாக பிரட்டைப் பொரித்து எடுத்து, பரிமாறும் கிண்ணங்களில் பிரட் துண்டுகளை போட்டு, அதன் மேல், ஜாமூன்களை வைத்து கொடுக்க, அதிகபடியான ஜீராவை பிரட் உறிஞ்சிக் கொள்ளும். அந்த பிரட் துண்டுகளை தனியாகவே சாப்பிடலாம்.பலகாரங்கள் செய்வதற்கு அரிசி மாவு மற்றும் இதர மாவு வகைகளை மெஷின் அல்லது மிக்ஸியில் அரைத்ததுமே பயன்படுத்தாமல், நன்றாக சூடு ஆறியதும் உபயோகிக்கவும்.
சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.மக்காச்சோள மாவு சேத்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.எந்த ஸ்வீட் செய்தாலும், சிறிதளவு உப்பு சேர்த்துக் கொண்டால், இனிப்பு துாக்கலாக இருக்கும்.போளி தட்டும் போது, வாழை இலையின் பின்பக்கமாகத் தட்டினால், இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.பலகாரம் செய்ய எந்த மாவை உபயோகிப்பதாக இருந்தாலும், அதை சலித்துப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம்.
பாயாசம் தண்ணியாக இருந்தால் 2 டீஸ்பூன் சோள மாவு கரைத்து விட்டு கொதிக்கவிடவும்... குலாப் ஜாமூன் ஜீரா மீதமானால் தயிருடன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து லஸ்ஸியாக குடிக்கலாம்...வீட்டில் ஜாம் தயாரிக்க விரும்பி னால் சரியாகப் பழுக்காத பழங்களையே பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஜாம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.வெங்காயத்தை இரண்டாகநறுக்கி தண்ணீரில் போட்டு வைத்தால் பொடியாக நறுக்கும் போது கண்கள் எரியாது.கேசரி செய்யும் போது, மூன்று மேஜைக் கரண்டி தேங்காய்ப்பால் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும்.
ஒரு கிலோ பச்சரிசியுடன், 100 கிராம் உளுந்து சேர்த்து வறுத்து, அதனுடன், 100 கிராம் பொட்டுக்கடலை சேர்த்து மிஷினில் அரைத்து வைத்து விட்டால், தேவைப்படும் போது, சீரகம் போட்டு தேன் குழல் செய்யலாம். சுவையும்கூடும். நேரமும் மிச்சம்.ரவா. மைதா, சர்க்கரை இம்மூன்றையும் சமமானஅளவில்எடுத்து, சிறிதுதண்ணீர்சேர்த்துகெட்டியாககரைக்கவும். குழிக்கரண்டியில் மாவை எடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு எடுத்தால், வித்தியாசமான ரவை பணியாரம் தயார். காராபூந்தியில் காரம் அதிகமானால், மாவுடன் உப்பு, சிறிது எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி கடலை மாவு, ஒரு தேக்கரண்டி அரிசி மாவு சேர்க்கலாம்.லட்டு பிடிக்கும் போது, ஜீராவில், 100 கிராம் நெய் சேர்த்தால், நெய்யில் செய்தது போல் ருசிக்கும்.ஜாமூன், பாதுஷா போன்றவை செய்யும்போது, மீதமாகும் ஜீராவை பாயசத்துடன் சேர்க்க, கமகம் மணத்துடன் இருக்கும். ஏலக்காய் சேர்க்கவே வேண்டாம்.