25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >>


சமையல் குறிப்பு

May 27, 2024

பழுத்த தக்காளியை வெட்டும் போது.....

கிழங்குகள் சீக்கிரம் வேக வேண்டுமெனில் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்து வேக வைத்தால் எளிதில் வெந்துவிடும்.பழுத்த தக்காளியை ஐந்து நிமிடம் தண்ணீரில் போட்டு வைத்துவிட்டு வெட்டுங்கள். பழம் பிய்ந்து போகாது.காய்கறி மீது எலுமிச்சை பழச்சாறு கலந்த நீரை தெளித்தால் காய்கறி பச்சையாக இருக்கும்.இறைச்சி வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.தக்காளி, எலுமிச்சம்பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

May 23, 2024

கறிவேப்பிலை காயாமல் இருக்க...

கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும்.சேப்பங்கிழங்கை வேக வைத்து பிரிஜ்ஜில் அரை மணி நேரம் வைத்து தோலுரித்து வெட்டினால் வழுவழுப்பு இருக்காது. பூரிக்கு மாவு பிசையும் பொது மிதமான வெந்நீருடன் சிறிது பாலும் சேர்த்து பிசைந்தால் பூரி மிருதுவாகவும், நன்கு உப்பியும் வரும்.வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை மோர் கலந்த நீரில்போட்டுவைத்தால் நிறம் மாறாது. இவற்றை வேகவைக்கும் போதும், வெண்டைக்காய் வதக்கும் போதும் ஒரு ஸ்பூன் தயிர் அல்லது மோர் ஊற்றினால் நிறம் வெண்மையாக இருக்கும்.வெண்டைக்காய் பிசுபிசுக்காமல் இருக்கும்.பூண்டை அவ்வப்போது உரித்து கொண்டிருந்தால் நேரம் வீணாகும். ஆகையால் பூண்டை தண்ணீரில் ஊற வைத்து எடுத்தால் எளிதில் வந்து விடும்.பலகாரம் செய்த பிறகு மீதமாகும்  எண்ணெய்யில் வாழைக்காய், கருணைக்கிழங்கு வறுவல்  செய்தால் சுவை மிகுதியாக இருக்கும்.

May 21, 2024

சர்க்கரைப் பொங்கல் சுவையாகஇருக்க...

சப்பாத்தி செய்து எண்ணெய்வடிகட்டியில் போட்டு மூடிவைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும். சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாகஇருக்கும்.தேங்காய்த் துருவல்மீதியானால் அதை லேசாக வதக்கி, சிறிது உப்பு சேர்த்து வைத்தால், மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி, பால்கோவா, தேங்காய்பர்பி ,போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம்.ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

May 20, 2024

காய்கறிகள் எளிதில் வேக....

தோசை மாவு நீர்த்து இருந்தால் பாலில் இரண்டு ஸ்பூன் ரவை மற்றும் அரிசி மாவு சேர்த்து அதனுடன் கலந்து விட்டால் மேலும் நீர்த்துப் போகாது, புளிப்பும் தெரியாது.காய்கறிகளை வேகவைக்கும் போது அதனுடன் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்தால் காய்கறிகள் எளிதில் வெந்துவிடும்.மீதமான தேங்காய் சட்னியைகெட்டியான புளிப்பு மோரிலசேர்ந்து ஒரு கொதி விட்டால் சுவையான மோர் குழம்பு தயார். கொள்ளு, காராமணி வேக வைத்த நீரை கீழே கொட்டாமல் சூப் செய்ய பயன்படுத்தலாம்.சத்தாக இருக்கும்.தோசைக் கல்லில் தோசை சுடும் போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் மொறு மொறுப்பாக வரும்.வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்.

May 19, 2024

இஞ்சி பூண்டு பேஸ்ட் சுவையாக இருக்க..

இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை குப்புற இருப்பது போல போடவும். இரண்டுநாட்கள் கெடாமலும், காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் புளிக்காமலும் இருக்கும்இட்லி தோசை மாவு அரைத்தால் இனி அதில் இதை சேர்க்க மறக்காதீர்கள். மாவு அரைக்கும் போது அதில் வெண்டைக்காய் சேர்த்து அரைக்கலாம். அப்படி அரைக்கும் போது மாவு பஞ்சு போன்று மிருதுவான பதத்தில் இருக்சப்பாத்தி மாவு பிசைந்து அதனை1/2 மணி நேரத்திற்கு மேல் ஊறவிடவும். அதன் பின் சப்பாத்தி சுட்டு பாருங்கள் சப்பாத்தி நன்றாக இருக்கும் ,அதேபோல் மாவு பிசையும் போது அதில் வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்து பாரத்தால் மிருதுவாகஇருக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிப்பதற்கு இஞ்சியை விட பூண்டை சிறிது அதிகமாக சேர்த்து செய்தால் நல்ல சுவையாக இருக்கும்.கத்தியின் கூரிய பகுதியை உப்பில் அழுத்தி எடுத்தால் மீன், மாமிசம் இவற்றை சுலபமாக நறுக்கலாம்.

May 01, 2024

எலுமிச்சை ,தேங்காய் ,புளி ,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் .....

பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது பச்சையாக உணவில் சேரத்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட்  நீண்ட நாட்கள்  கெடாமல் இருக்கும். வாழைக்காய் மற்றும்வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென பால் ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொறு மொறுவென இருக்கும்.எலுமிச்சை,தேங்காய்,புளி,தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

Apr 29, 2024

முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க....

உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

Apr 28, 2024

சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது 

அரைத்து விட்ட சாம்பாருக்கு மசாலா அரைக்கும் பொழுது கொஞ்சம் அதனுடன் கசகசாவை சேர்த்து வறுத்து அரைத்து சேர்த்தால் சாம்பாரின் மணமும், குணமும் அலாதியானதாக மாறிவிடும். சாம்பார் கெட்டியாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.வீட்டில் டீ தயாரிக்க நீரை கொதிக்க விடும்போது ஒரே ஒரு புதினா இலையும் போட்டு கொதிக்க விட்டு பாருங்கள். டீயின் மனமும் ருசியும்அபாரமாக இருக்கும். ரசம் தயாரிக்கும் போது சுண்டக்காய் அளவு இஞ்சி சேருங்கள், சூப்பராக ரசம் இருக்கும்.இட்லிக்கு மாவாட்டும் போது ஒரே ஒரு ஆமணக்கு விதையை தோல் நீக்கி போட்டுப் பாருங்கள் இட்லி மெது மெது என்று இருக்கும். காட்டு நெல்லிக்காயை கழுவி கொதிக்க வைத்த நீரில் போட்டு சிறிது உப்பு போட்டு மூடி வையுங்கள், வைட்டமின்குறையாத ஊறுகாய் ரெடி. தேவை பட்டால் மிளகாய் பொடியும் போட்டுக் கொள்ளலாம். 

Apr 24, 2024

சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்ட பின்....

கிச்சனில் வெகு நேரம் நின்று சமைப்பது மிகவும் கடினம் என்றால், அதைவிடக் கடினம் கிச்சனில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிப்பது. அப்படி கிச்சனில் பொதுவாக நடக்கும் , குக்கரில் பருப்பு பொங்கி விடுவது, சிங்க்ல் அடிக்கடி கரை படிந்து விடுதல் மற்றும் பாத்திரங்களில் துருப்பிடித்து விடுவது போன்ற பிரச்சினைகளை எப்படி சமாளிக்கலாம் .குக்கரில் பருப்பு காய்கறிகள் போன்றவற்றை வேக வைக்கும்போது அது பொங்கி வழிந்து அடுப்பை அணைத்துவிடும். இதனால், குக்கரைக் கழுவுவதற்கும், கேஸ் ஸ்டவ்வை துடைப்பதற்கும் கஷ்டமாக இருப்பதால், இல்லத்தரசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இனி பருப்பு மற்றும் காய்கறிகளை குக்கரில் வேகவைக்கும் போது உள்ளே ஒரு சில்வர் ஸ்பூனைப் போட்டு வேக வையுங்கள். இப்படி செய்தால் குக்கரை விட்டு தண்ணீர் வெளியே பொங்கி வழியாமல் இருக்கும். அதேபோல நீங்கள் பயன்படுத்தாத பாத்திரங்களில் துருப்பிடித்து விட்டதா? எவ்வளவு தேய்த்துக் கழுவினாலும் போகவில்லையா? இதை எளிதாக சுத்தம் செய்ய, கொஞ்சமாக டூத் பேஸ்ட்டை துருப்பிடித்துள்ள இடத்தில் வைத்து உப்பு காகிதம் போட்டு தேய்த்தால், துருக்கரை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்இலைகள் உள்ள காய்கறியை வாங்கும் பொழுது அது நமக்கு கூட்டு மற்றும் சூப் தயாரிக்க உதவும். குறிப்பாக முள்ளங்கி, காலிபிளவர் போன்ற காய்கறிகளில் இலைகளோடு சேர்த்து வாங்கிக் கொள்வது நமக்கு மிகவும் நல்லது. அதன் இலைகளை நறுக்கி சூப் செய்து குடிக்கலாம்.சமையலில். தாளிக்கும்போது கடுகு போட்டபின் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், சேர்த்துக் கொள்ளுங்கள்! இதனால் கடுகு வெடித்தாலும் மேலே எழுந்து சிதறாது'

Apr 14, 2024

வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்க...

எலுமிச்சம் பழத்தை சிறிது நேரம் சுடுநீரில் போட்டு பின் சாறு பிழிந்தால் அதிகமாகசாறு கிடைக்கும். வேகவைத்த சர்க்கரை வள்ளிகிழங்கை உடனே ஜில் தண்ணீரில் போட்டால் தோலை ஈசியாக உரித்து விடலாம். வீட்டில் எலி நடமாடும் இடங்களில் மிளகுத்தூளை தூவினால் எலி அந்த இடத்தில் தலை வைத்து படுக்காது. வடக கஞ்சி வடாம் போடும் போது சிறிது ஆற வைத்த பால் அல்லது மோர் சேர்த்தால் வடாம்கள் வெள்ளை வெளெரென்று இருக்கும் .  'வெல்லத்தை துருவ வேண்டும் என்றால் ,காய்கறி துருவலில் வைத்து துருவினால் ,கடினம் இல்லாமல் சீக்கிரமாக வெல்லத்தை தூளாக்கி விடலாம்..

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News