25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள் >>


சமையல் குறிப்பு

Jan 16, 2025

அசைவம் சமைத்த பாத்திரங்களில் வாசனை போக....

துணிகளில் பட்ட எண்ணெய் மற்றும் கிரீஸ் கரைகள் எளிதில் போகாது இந்த கறைகளை போக்க துணியில் சிறிது நீலகிரி தைலத்தை தேய்த்து கசக்கினால் கரை மறையும்.அசைவம் சமைத்த பாத்திரங்களில் ஒரு வித வாசனை வரும். அந்த வாசனை போக வேண்டுமானால் சிறிதளவு புளியை தேய்த்து பின்னர் சோப்பில் கழுவ வேண்டும்.மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடு சில சமயங்களில் டைட்டாக ஆகிவிடும். இதை கழட்டுவதற்கு வெதுவெதுப்பான தண்ணீரை பிளேடு மூழ்கும்  வரை ஊற வைத்து சிறிது நேரம் கழித்து, கழட்டினால் ஈசியாக கழட்டி விடலாம். கலங்கலாக இருக்கும் சுட்ட எண்ணெயில், உருளைக்கிழங்கை நான்கைந்து வில்லைகளாக நறுக்கிப் போட்டு பொரித்துஎடுத்தால், எண்ணெய் துாய்மையாகி, மீண்டும் உபயோகிக்க முடியும்.'நான் - ஸ்டிக்' தவாவில் சிறிது எண்ணெய் விட்டு, சுகியனை போட்டு மூடி சிம்மில் வைக்கவும். வெந்ததும் திருப்பிப் போடுங்கள். சுவையில் சிறிதும் குறையாத, எண்ணெயில்லாத சுகியம் ரெடி.

Jan 12, 2025

சிலிண்டர் உபயோகிக்கும் முறை .

 சமையல் சிலிண்டருக்கு முதல் முறையாக இணைப்புப் பெறும் போது, சமையல் கேஸ் பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை பற்றி தெரியாவிட்டால்  சிலிண்டர் வினியோகிக்கும்' நபரிடம் செயல்முறை விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். வெப்பமான பிற பொருட்களில் இருந்து சிலிண்டரை சில அடிகள் தள்ளி வைத்திருக்க வேண்டும். சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு வித எரிவாயு சம்மந்தமான அடுப்புகளை வைத்து பயன்படுத்தக் கூடாது. சிலிண்டர் வால்வின் உள்புறத்தில் ரப்பர் டியூப் இருப்பதை  உறுதி செய்ய வேண்டும்.2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரப்பர் டியூப்பை மாற்ற வேண்டும். சமையல் எரிவாயு சாதனங்களை அவ்வப்போது பரிசோதித்து சரி செய்து கொள்ள வேண்டும்.கேஸ் கசிவு ஏற்பட்டால் பதட்டம் அடையாமல் ரெகுலெட்டர் மற்றும் பர்னர் நாப்களை மூட வேண்டும். அந்த அறையில் உள்ள மின் சுவிட்சுகள். மின் சாதனங்களை இயக்கக்கூடாது வெளிப்புறம் இருக்கும் மின் இணைப்பில் மின் சப்ளையை துண்டிக்க வேண்டும்.சிறிதளவு கோதுமை மாவு கேஸ் சிலிண்டர் விபத்தைத் தடுக்கும். நினைவில் வைத்து மற்றவர்களுக்கும் சொல்லுங்கள். மும்பை தீயணைப்பு வீரர்

Jan 06, 2025

பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்  கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும் கலரும் வித்தியாசமாக இருக்கும்

எலுமிச்சை சாதம் செய்யும்போது, இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டுக் கிளறினால் சுவையாகவும், மாறுதலாகவும் இருக்கும்.தேங்காய் சாதம், புளி சாதம், மாங்காய் சாதம், எலுமிச்சை சாதங்களுக்கு முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தால் வாசனை தூக்கும். பார்ப்பதற்கும் அழகஇருக்கும்.சிறிது தனியாவையும், காயவைத்த 2 மிளகாயையும் எண்ணெயில் விட்டு வறுத்துப் பொடி செய்துகொண்டு, கலந்து வைத்திருக்கும் எலுமிச்சம்பழச் சாதத்தில் தூவிக் கிளறினால், தனியா பொடிஊறிஎலுமிச்சைசாதம்ருசிஅபாரமாகஇருப்பதுடன், வித்தியாசமாகவும் கலராகவும் இருக்கும்.பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கும்போது. குழைந்து விடாமல் பருப்பு இதழ் இதழாக இருக்க! மூடியுள்ள ஒருபாத்திரத் தில் பருப்பை போட்டு, இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி அரை ஸ்பூன் உப்பு சேர்த்து மூடி, குக்கரில் வேக வைத்தால்... பருப்பு நன்றாக வெந்திருக்கும்.பஜ்ஜி மாவில் தக்காளி சாஸ்  கலந்து பஜ்ஜி சுட்டால் சுவையும், கலரும் வித்தியாசமாக இருக்கும்.

Dec 19, 2024

சமையலில் செய்யக்கூடாதவை.

 ரசம் அதிகமாக கொதிக்ககூடாது காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாதுதக்காளியையும் வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.பிரிட்ஜில் வாழைப்பழமும்,உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது தேங்காய்ப்பால் சேர்த்தவுடன் குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய் எண்ணெயோ நன்றாக காயக்கூடாது குழம்போ பொரியலோ  அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

Dec 18, 2024

பூரி மிருதுவாக இருக்க....

பூரி மாவு பிசையும் முன் கோதுமை மாவையும், ரவையும் சேரத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள்.மாவில் அரிசி தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பூரி வெகுநேரம் மிருதுவாக இருக்கும்.பூரி மாவை பிசைந்த பின், அதில் ஒரு விரலை வைத்து அழுத்தி பார்த்தால் விரல் தடம் தெரிய வேண்டும்.விரல் மாவுக்குளே போய்விடக்கூடாது. விரலை வைத்து அழுத்தும் போது கடினமாக இருக்க கூடாது.

Dec 16, 2024

வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும் .

வெங்காயம், பூண்டு இவற்றை இலகுவாக உரிக்க தண்ணீரில் போட்டு உரிக்கவும். கண்ணு கரிக்காது. வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழங்களில் மில்க் ஷேக் செய்யும்போது கொஞ்சம் வெண்ணெய் போட்டு செய்தால் மில்க் ஷேக் நன்றாக நுரைத்துக் கொண்டு வரும்.கூட்டு, பொரியல், வறுவல் போன்றவற்றில் உப்பு அல்லது காரம் அதிகமாக சேர்த்து விட்டால் சிறிதளவு ரஸ்க் தூளை பொடித்து சேர்த்து பாருங்கள் உப்பு, காரத்தை அது ஈர்த்துக் கொண்டு விடும்.கத்திரிக்காய் எண்ணெய் கறி சமைக்கும் போது ஒரு ஸ்பூன் கட்டித்தயிரை கலந்தால் கத்தரிக்காய் கறுப்பாகாமல் இருக்கும்.பூரிக்கு மாவு பிசையும் போது கொஞ்சம் சர்க்கரை  கலந்தால், பொரித்த பூரி அதிக நேரம் நமத்து போகாமல்  இருக்கும்.

Dec 02, 2024

உளுந்து வடை சுவையாகவும் மொறு மொறுப்பாகவும்  இருக்க….

உளுந்து வடை செய்யும் போது உளுத்தம் மாவு தளர்ந்து இருந்தால் சிறிதளவு பச்சரிசி மாவை அதில் தூவினால் உளுத்தமாவில் தேவைக்கு அதிகமாக உள்ள தண்ணீரை உறிஞ்சிவிடும். அல்லதுசோள மாவு (corn flour) சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.வடை செய்வதற்கு வெள்ளை உளுந்தை போடாமல் கருப்பு உளுந்து உடைச்ச உளுந்து போட்டால் அதோட சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்உடைத்த கருப்பு உளுந்தை ஊறவைத்து அதன் தோலை கழுவி எடுக்காமல் அப்படியே அரைத்து பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு கருவேப்பிலை சேர்த்து வடை செய்தால் வடை சுவையாகவும் மணமாகவும் கருப்பு உளுந்தின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கும்.உளுந்து வடைக்கு அரைத்த மாவுடன் ஊறவைத்த பயத்தம் (பாசிப்) பருப்பைக் கலந்து வடை செய்தால் சுவையாகவும் மொறு மொறுப்பாகவும்  இருக்கும்.உளுந்தம் பருப்பை வடைக்கு அரைக்கும் போது பச்சரிசியையும் கொஞ்சம் சேர்த்து அரைத்தால் வடை மொறுமொறுவென்று இருக்கும். அதே போல் வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமானால்  சிறிது அரிசிமாவினை   சேர்த்தால் கெட்டியாகிவிடும்.

Nov 26, 2024

ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்க.....

பால் லேசாகத்திரிந்து விட்டால், அதில் சிறிது சமையல்சோடா சேர்த்து கலந்து உறை ஊற்றவும். கெட்டித்தயிராகி விடும்.குளிர்காலத்தில் தயிர் எளிதில் உறையாது. பாலை ஒரு ஹாட்பாக்ஸில் ஊற்றி, உறை ஊற்றி மூடி வைத்து விட்டால் மூன்று மணி நேரத்தில் உறைந்து விடும்.பொரித்தெடுத்த ஜாமூனை சூடான சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவைக்காமல், நன்கு ஆறிய சர்க்கரைப்பாகில் சேர்த்தால் ஜாமூன் விரியாமல், கரையாமல், உடையாமல் சுவையாக இருக்கும்.தேன்குழல், சீடை ஆகியவற்றைச்செய்யும் போது மாவை வெந்நீர் ஊற்றிப்பிசைந்தால் எத்தனை நாளானாலும் நமத்துப் போகாது.வெள்ளரிக்காய் சூப் தயாரிக்கும்போது வெள்ளரிக்காயை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்துச்சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Nov 21, 2024

டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.

டீ தயாரிக்கும் பொழுது டீ தூளுடன் ஐந்து புதினாஇலைகளைப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் பித்தம் நீங்கும்.ஒரு கப் நல்லெண்ணெய்யை சூடாக்கி, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் ஓமம், இரண்டு வெற்றிலை, சிறிய வில்லை அளவு கற்பூரத்தை பொடித்து சேர்த்து,மறுபடியும் சூடு செய்து வைக்கவும். மறுநாள் இந்த எண்ணெய்யை தலைக்கு தேய்த்து 20 நிமிடங்கள் ஊறவிட்டு குளித்தால் ஜலதோஷம் பிடிக்காது, புத்துணர்வும் கிடைக்கும். வெண்ணெய் பாக்கெட்டை இரவு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் போட்டுவைத்தால், வெண்ணெய் கையிலோ, பேப்பரிலோ ஒட்டாமல் வரும். மேலும் வெண்ணெய் காய்ச்சி இறக்கியதும் ,அதில் சிறிது வெந்தயத்தைப் போட்டு வைத்தால், நெய் வாசனையாக இருக்கும்.இட்லிக்கு அரிசி ஊற வைக்கும்போது அரிசி யோடு ஐந்தோ, ஆறோ சோயா பீன்ஸை ஊற வைத்து அரைத்தால் இட்லி மல்லிப்பூப் போல் மிருதுவாக இருக்கும்.காய்கறி, பருப்பு, ரசம் இவற்றிற்கு அளவாக நீரைச்சேர்த்து கொதிக்கவிடவும். வெந்த பிறகு நீரை வடித்தால் அதில் உள்ள சத்துக்கள் வீணாகி விடும். அப்படி நீரை  வடித்தால் அந்த வடிநீரை குழம்பு, கூட்டு இவற்றில் சேர்த்து விடவும்.

Nov 11, 2024

. வெண்பொங்கல் காரமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும்.

கூட்டு, குருமா, கிரேவி வகைகளில் தண்ணீர் அதிகமானால் பாலில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு சேர்த்து கலந்து கொதிக்க வைத்தால் கெட்டியாகி விடும். . வெண்பொங்கல் காரமாக இருந்தால் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்தால் காரம் குறைந்து விடும். சூப் செய்தாலும் சிறிதளவு பொட்டுக்கடலை மாவை தண்ணீரில் கரைத்து சூப்புடன் சேர்த்து செய்து பாருங்கள், சூப் கெட்டியாக, டேஸ்ட்டியாக இருக்கும். சமையலுக்கு உபயோகிக்கும் பெருங்காயத்தை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் அந்த பெருங்காய நீரை உபயோகித் தால் மணம் சீராக அமையும். பெருங்காயமும் குறைவாக செலவாகும். அடைக்கு அரைக்கும்போது பருப்பு, அரிசியு டன் கொஞ்சம் புளியும் சேர்த்து அரைத்தால் அதன் ருசியே தனி.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News