பிரியாணியில் காரம் அதிகாமானால் எலுமிச்சை பழச்சாறு, நாட்டுச் சர்க்கரை, வெல்லப்பாகு. நெய்யில் பொரித்த உலர் திராட்சை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்து கிளறினால்' காரம் குறையும். கேசரி செய்யும் போது கடைசியாக சிறிதளவு கடலை மாவை வறுத்து சேர்த்து கிளறி இறக்கினால் அசோகா டேஸ்டில் இருக்கும். தினமும் அருந்தும் தேநீரில் இஞ்சி எலக்காய் மற்றும் புதினா இலைகளை சேர்த்து தயாரித்தால் ,சுவையாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும். முட்டைக்கோசை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி இட்லி தட்டில் வேகவைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதனை தயிரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு. உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் முட்டைகோஸ் தயிர் பச்சடி புது சுவையுடன் இருக்கும்.
தேங்காயைத் துருவி அதை கொதி நீரில் போட்டு வைத்துவிட்டு பிறகு கைப்பொறுக்கும் சூட்டில் எடுத்து பிழிந்தால் நல்ல கெட்டியான பால் கிடைக்கும்.வெங்காய பக்கோடாவுக்கு அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை கொஞ்சம் போட்டால் வாசனையாக இருக்கும்.மாவு அரைக்கும் போது வேகவைத்த சாதத்தை சிறது சேர்த்து அரைத்தால் வார்க்கும் தோசை மிருதுவாக இருக்கும் சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கட்டிப்படுவதுடன் சுவையும் கூடுதலாக இருக்கும்.தேங்காயை அதன் கண் பகுதி மேல் நோக்கியவாறு வைத்தால், நீண்ட நாள்வரை அழுகிப் போகாமலிருக்கும்.
குப்பைமேனி இலையோடு மஞ்சள், கல் உப்பு சேர்த்து அரைத்து தோலில் அரிப்பு, அலர்ஜி, சிரங்கு உள்ள இடங்களில் தடவி வந்தால்,விரைவில் குணமாகும்.கற்பூரம். பச்சை கற்பூரம், நாப்தலின் உருண்டை,மிளகு, உப்பு இவற்றை பொடித்து சிறு துணியில் கட்டி அலமாரி, பீரோவில் வைத்துவிட்டால், பூச்சி வராது; நறுமணமாக இருக்கும்.பொங்கல் செய்யும்போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் சிறிதளவு ரவையை வறுத்து சேர்த்து கிளறினால் கெட்டியாகிவிடும்....வடை, அடை, தோசை செய்யும்போது சிறிது வறுத்து அரைத்த ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால் மொறுமொறுவென இருக்கும்... பிளாஸ்கினுள் எலுமிச்சை தோல்கள் சிலவற்றை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவினால் துர்நாற்றம் நீங்கும்.
சுவையான கீரை போண்டா சுலபமாக சட்டுன்னு செய்யலாம்... இதற்கு முருங்கைக் கீரையை உருவி, கழுவி தட்டில் பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கொரகொரப்பாக அரைத்து தட்டில் வைத்து, அதில் பொடித்த வெங்காயத்தை கையில் மைய அழுத்தி பொடியாக உதிர்த்து சேர்த்து, இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பொடித்த கீரையை சேர்த்து நன்கு பிசைந்து, அதனுடன் கடலை மாவு, கோதுமை மாவு, ரவை, அரை கப் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து, கெட்டியாக தண்ணீர் சேர்க்காமல் பிசையவும். கீரையில் உள்ள தண்ணீர் போதுமானது. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு உருட்டி போட்டு எடுத்தால் டீக்கடை கீரை போண்டா தயார். மாலை டிபன் ஆக சாப்பிட அருமையாக இருக்கும்.
முந்திரி, பாதாம் சிக்கிகளை மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து வைத்துக்கொண்டு, அந்தத் தூளை பாயசம், ஃப்ரூட் சாலட், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் மேலே தூவிப் பரிமாறினால், சுவை சூப்பராக இருக்கும்.முருங்கைக்காய் அதிகமாக இருந்தால் அதை அப்படியே பிரிட்ஜில் வைத்து காயவிடாதீர்கள்.முருங்கையை தோலெடுத்து ஒரு விரல் நீளத்துக்கு அரிந்து ஒரு கவரில் போட்டு ஃபிரீசரில் வையுங்கள். சமைக்கும் போது எடுத்து கழுவி சேர்த்து கொள்ளலாம். குருமாவில் சிறிது பாதம் அரைத்து ஊற்றலாம். இது கொழுப்பை கட்டுபடுத்தும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.தேங்காய் சேர்த்து குருமா வைக்கும் போது ,ஒரு சிலருக்கு சேராது.மற்ற பொருட்களை மட்டும் வதக்கி அரைத்த பிறகு கடைசியாக தேங்காய் பால் சேர்த்து குருமா வைக்கலாம்.கொஞ்சம் தண்ணியாக இருந்தாலும் ருசியில் எந்த விதமான மாற்றமும் இருக்காது.கோதுமை இரண்டு கப் எடுத்து துணியில் கட்டி வேகவைத்து எடுத்து, பின் தட்டில் ஆறவிட்டு, வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி மாவை கொழுக்கட்டையாக உருட்டி, வேக வைத்து எடுத்தால், கோதுமை கொழுக்கட்டை சாப்பிட சுவையாக இருக்கும்.
தேங்காய்த் துருவல் மீதியானால் அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம். கேசரி பால்கோவா தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல் எளிதாக கிளறலாம். ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து ,நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.தோசை மாவு பொங்கல் போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால் சுவையுடன் மணமாக இருக்கும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால் கசப்பு காணாமல் போய்விடும்.
* பலகாரங்களை எடுத்து வைக்க காற்றுப் புகாத சம்படங்கள் போன்றவற்றையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு பலகாரங்கள் சுட ஆரம்பிக்கவும்.* மகிழம்பூ, தேன்குழல் செய்ய, இரண்டு கப் அரிசி மாவு, முக்கால் கப் பயத்தம் பருப்பு, முக்கால் கப் நெய், கால் கப் கடலைப்பருப்பு என்ற அளவு சரியாக இருக்கும். இதை பெருங்காயத்துாள் மற்றும் எள் சேர்த்து செய்யலாம்.* தட்டை செய்யும்போது, மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொரு உருண்டையும் மஸ்லின் துணியின் மீது வைத்து தட்டைகளாகத் தட்டினால், மாவிலுள்ள ஈரத்தை துணி இழுத்துக் கொள்ளும். பின்னர், எண்ணெயில் போட்டு வேகவைத்து எடுத்தால், தட்டை மொறுமொறுப்பாக இருக்கும்.*வாய் அகலமான இரும்பு வாணலி அல்லது அடிகனமான வாணலியை பலகாரங்களைப் பொரிக்க உபயோகிக்கவும்.தேங்காயை சிறு துண்டுகளாக்கி தயிரில் போட்டு வைக்க தயிர் புளிக்காமல் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும்.
பாயாசம் கேசரி போன்றவை செய்யும் போது அரிசி ரவை வெந்த பிறகு தான் சர்க்கரையை சேர்க்க வேண்டும்.தயிர் பச்சடி நீர்த்து விட்டால் சிறிது நிலக்கடலையை வறுத்து பொடியாக்கி கலந்து விட்டால் தயிர் பச்சடி கெட்டியாகவும், சுவையாகவும் இருக்கும்.டீ, காபி குடிக்கும் கப்பில் படிந்துள்ள கரையை நீக்க ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி கறை உள்ள இடத்தில் தேய்த்து கழுவ கறை போகி விடும்.ஆப்பத்திற்கு மாவு அரைக்கும் போது அதனுடன் குளிர்ந்த பால் சேர்த்து அரைத்தால் ஆப்பம் நல்ல மெத்து மெத்தென மென்மையாக இருக்கும்.முட்டையை பயன்படுத்தி எந்த உணவு செய்தாலும் அதில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கொள்வது நல்லது.
காராச்சேவு செய்யும் போது, மாவை சற்றுகெட்டியாகப் பிசைந்து கொள்வது அவசியம். ரிப்பன் பக்கோடாவிற்கு, இரண்டு கப் கடலைமாவுக்கு, ஒரு கப் அரிசி மாவு சேர்த்து செய்வது சரியான விகிதம்.ரிப்பன் பக்கோடாவை நன்றாக சிவக்க வேகவைத்து எடுப்பது நல்லது. மகிழம்பூ, தேன்குழல் போன்ற பலகாரங்களுக்கு உபயோகிக்கும் பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பை வெறும் வாணலியில் போட்டு லேசாக வறுத்து, நைசாக அரைத்து, பின்னர் சலித்து வைத்துக் கொள்ளவும். எண்ணெயில் பொரித்து எடுத்தவுடன் பலகாரங்களில் உள்ள எண்ணெயை வடிக்க, வடிகட்டி அல்லது டிஷ்யூ பேப்பர்கள் பயன்படுத்தலாம். எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்த்து பலகாரங்களை பொரித்தெடுத்தால் வாசனையும், சுவையும் கூடும்.
உளுந்துமாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, முழு உளுந்தம் பருப்பை வாணலியில் போட்டு அடுப்பை மெல்லிய தீயில் வைத்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்கவும். பின்னர், மிக்ஸியில் நைசாகப் பொடித்து பயன்படுத்தவும்.கார ஓமப் பொடிக்கு, சிகப்பு மிளகாய் வற்றலை நைசாக மிக்ஸியில் அரைத்து உபயோகிக்க வேண்டும். மிளகாய்ப் பொடி நன்றாக அரைபடாவிட்டால் பிழியும்போது அச்சு துளைகளில் அடைத்து, பிழிய வராது.அரிசி மாவில் செய்யப்படும் கார வகைகளுக்கு, சாதாரண அரிசி மாவை தவிர்த்து, பதப்படுத்தப்பட்ட அரிசிமாவை பயன்படுத்துங்கள்.புதிதாக வாங்கிய எண்ணெயில் பலகாரங்களைச் செய்தால், பலகாரங்களின் கரகரப்பு, நன்றாக இருப்பதுடன், அவை நாள்பட பழைய வாசனை வராமல் இருக்கும்.மைதா மாவு, கடலை மாவு போன்றவற்றை உபயோகித்து செய்யும் கார வகைகளுக்கு புதிதான மாவையே பயன்படுத்த வேண்டும்.