25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Apr 27, 2024

இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும்

நமது உடலின்இரண்டாவது பெரியஉறுப்பு கல்லீரல்.இது கழிவுகளைவெளியேற்றவும், உணவைஜீரணிக்கவும், ரத்தம்உறைவதற்கு உதவும்புரதங்களின் உற்பத்தியையும்செய்வதுடன் ஹார்மோன்களைசீர் செய்வதுபோன்ற பலவகையான வேலைகளைசெய்கிறது. எனவேஇதயம், நுரையீரல்,சிறுநீரகம் போன்றஉறுப்புகளுக்கு கொடுக்கும்அதே முக்கியத்துவத்தைகல்லீரலுக்கும் கொடுக்கவேண்டும் என்றுமருத்துவர்கள் கூறுகின்றனர்.ஏனெனில் உடலில்ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில்ஏற்படும் பிரச்சனைகள்தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல், உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்பை சில அறிகுறிகள்.கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும்.பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சி ஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இரு முறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக் கட்டத்தில்இருக்கும் கல்லீரல்நோய்களுக்கு மருத்துவரின்ஆலோசனைப்படி மருந்துமற்றும் வாழ்க்கைமுறையை மாற்றுவதன்மூலம் குணப்படுத்தமுடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கானஅறிகுறிகள் தெரிந்தால்தகுந்த மருத்துவரைகலந்தாலோசிப்பது நல்லது

Apr 26, 2024

கரும்பு ஜூஸிலிருக்கும் நன்மைகள்!

கோடையின் வெப்ப அலையை சமாளிக்கவும் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் வித விதமான பழச் சாறுகளை அருந்தியும் வருகிறோம். அவற்றுள் நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன் பல வகையான ஆரோக்கிய நன்மைகளையும் தரக்கூடியது கரும்பு ஜூஸ். கரும்பு ஜூஸில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின்A,C,B1,B2,B3,B5,B6 ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. கரும்பு ஜூஸ் குடிப்பதால் உடலின் மொத்த ஆரோக்கியமும் மேம்படும்.கோடைக் காலங்களில் மேற்கொள்ளும் உடற்பயிற்சிக்குப் பின் கரும்பு ஜூஸ் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். வியர்வை மூலம் வெளியேறும் எலக்ட்ரோலைட்களையும் நீர்ச் சத்தையும் மீண்டும் இட்டு நிரப்பக் கூடியது கரும்பு ஜூஸ்கரும்பு ஜூஸிலிருக்கும் இயற்கையான இனிப்புச் சத்தானது உடனடி சக்தியைத் தரும். காஃபின் மற்றும் செயற்கை இனிப்பூட்டி இல்லாமலே உடல் சோர்வை நீக்க உதவும். கரும்பு ஜூஸில் உள்ள இயற்கையான என்சைம்கள் சிறப்பான செரிமானத்துக்கு உதவி புரிகின்றன.கரும்பு ஜூஸில் ஹெபடோப்ரொடெக்டிவ்(Hepatoprotective) குணம் உள்ளது. இது கல்லீரலில் சிதைவு ஏற்படுவதை தடுக்க உதவும்; கல்லீரலின் இயக்கம் சிறப்பாக நடைபெறவும் உதவும்.கரும்பு ஜூஸில் உள்ள மல்டிபிள் வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி வலுவடைய உதவுகின்றன. இதனால் உடலைத் தாக்கும் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி ஜெயிக்க உடலுக்கு போதுமான அளவு சக்தி கிடைக்கிறது.கோடைக் காலத்தில் அனைத்துத் தரப்பினரும் சுலபமாக வாங்கி அருந்தும் விதத்தில் இதன் விலையும் குறைவு. எனவே, அனைவரும் கரும்பு ஜூஸ் அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.

Apr 25, 2024

கோடைக்கால சரும அரிப்பு

முகம் எங்கும் அரிப்பும், எரிச்சலும் வெயிலின் தாக்கத்தால் சிலருக்கு தோன்றக்கூடும். இதை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்யலாம்.ஒரு கைப்பிடி நிறைய துளசி இலைகளை பறித்து நீரில் அலசி விட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மைய அரைத்துக் கொள்ளவும். முகத்தை கழுவி விட்டு இந்த பேஸ்ட்டை முகம், கழுத்து, கைகளில் தேய்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள குளிர்ச்சி சரும அரிப்பை நீக்கிவிடும்.தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்யக் கூடியது. மேலும். நமைச்சல் அரிப்பு போன்றவற்றுக்கும் நல்ல ஒரு மாற்றாக இருக்கும். தினமும் குளிக்கும் முன்பு முகம், கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால் சரும அரிப்பு குணமாகும்.ஓட்ஸில் உள்ள சரும அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அரிப்புக்கு மருந்தாக அமைகிறது. சரும எரிச்சலையும் தடுக்கிறது. இரண்டு ஸ்பூன் ஓட்ஸை குளிக்கும் நீரில் கலந்து விடவும்.15 நிமிடங்கள் கழித்து அந்தத் தண்ணீரில் குளித்தால் சருமத்திற்கு இதமாக இருக்கும். ஆப்பிள் சீடர்வினிகரில்உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் மற்றும் சரும அலர்ஜி எதிர்ப்பு திறன் தொற்று நோய்களை தடுக்க உதவும். அரிப்புகளையும் குறைக்கும். ஒரு பெரிய பக்கெட் குளிக்கும் நீரில் ஐந்து ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஊற்றி கலக்கவும். அரை மணி நேரம் கழித்து அந்த தண்ணீரில் குளித்து வந்தால் சரும அரிப்பு சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரைக் கலந்து அதில் காட்டனை நினைத்து சருமத்தின் மீது தடவலாம். இதனாலும் சரும அரிப்பு சரியாகும்.முகத்தை வெறும் தண்ணீரில் கழுவி விட்டு சுத்தமான தயிரை முகம், கழுத்து, கை, கால்களில் தடவி விடவும்.15 நிமிடம் கழித்து முகம் மற்றும் கை, கால்களை சோப்பு போட்டு அலசவும். சரும அரிப்பு மற்றும் எரிச்சலும் விரைவில் குணமாகும்.

Apr 24, 2024

சுகரை விரட்டும் சுண்டைக்காய் சூரணம்

.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் நிறைந்தவை சுண்டைக்காய்கள்.. இந்த காய் பச்சையாக இருந்தாலும் பலன்தரும். காய்ந்து போனாலும் பலன் தரும். பழுத்து போனாலும் பலன் தரும். இதன் இலைகளும் பலன் தரும்.வயிற்றுப்புண்களை ஆற்றுவதற்கு சுண்டைக்காய் இலைகள் உபயோகமாகின்றன.. சுண்டை பழங்களை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால்தலைவலிஉடனேநிற்கும்.துவர்ப்பும், லேசான கசப்புத்தன்மை நிறைந்த இந்த காய்கள், சர்க்கரை நோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு அருமருந்தாகும். எனவே, பச்சை சுண்டைக்காயை கூடுமானவரை பயன்படுத்தலாம்.. சுண்டைக்காய் கிடைக்காத சமயங்களில் வேண்டுமானால், சுண்டை வற்றலை பயன்படுத்திக்கொள்ளலாம்.. சுண்டைக்காய் வற்றலை வீட்டிலேயே நாம் தயார் செய்யலாம். முற்றின சுண்டைக்காயை நசுக்கி உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து, பிறகு அதனை வெயிலில் காயவைத்து எடுத்து வைத்து கொள்ளலாம்.அல்லது சுண்டைக்காயை நன்றாக நசுக்கி அதனை சுடுநீரில்5 நிமிடம் போட்டு எடுத்துவிட வேண்டும். பிறகு, புளித்த மோரில் சுண்டைக்காயை இரவு முழுவதும் போட்டு ஊறவைத்து, மறுநாள் காலை, வெறும் சுண்டைக்காயை மட்டும் எடுத்து வெயிலில் காயவைக்க வேண்டும். மீண்டும் இரவு நேரம் மோரில் சுண்டைக்காயை ஊற விட்டு, மறுநாள் காயை மட்டும் வெயிலில் காய விட வேண்டும். இப்படியே4 நாட்களும் செய்தால், சுண்டை வற்றல் ரெடி. சுண்டைக்காய் வற்றல்: வயிற்றிலுள்ள புழுக்களை நீக்கவும், செரிமானத்தை அதிகப்படுத்தவும், வயிற்றுவலி, வயிறு உப்புசம், ஏப்பம் போன்ற பிரச்சனைகளை இந்த வற்றல் சரி செய்கிறது.நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து, பொட்டாசியம், மாங்கனீஸ் போன்ற தனிமங்களும் சுண்டையில் அதிகம் என்பதால், வாரம்2 முறையாவது குழம்பு வைத்து சாப்பிடலாம்.. பசியை தூண்டக்கூடிய சக்தி சுண்டை வற்றலுக்கு உண்டு..இந்த சுண்டைக்காய் வற்றலை, பொடி செய்து, தினமும் 5 கிராம் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும் என்கிறார்கள். இதைத்தவிர, வாயுத்தொந்தரவு நீங்கி, அல்சர் புண்களையும் ஆற்றிவிடும்.சுண்டைக்காய் வற்றலுடன், மிளககு, சீரகம், கறிவேப்பிலை, வெந்தயம் போன்றவைகளை சம அளவு எடுத்து வறுத்து சாப்பிட்டாலும் அஜீரணம் நீங்கி, பசி நன்றாக எடுக்கும்"சுண்டை வற்றல் சூரணம்" என்றே இப்போதெல்லாம் கடைகளில் கிடைக்கிறது இந்த சூரணத்தை, மோரில் கலந்து குடித்து வந்தால், குடல் வயிறு பகுதிகள் சுத்தமாகும்.. நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.. ரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தக்கூடியது. இந்த சுண்டைகாய். பச்சை சுண்டைக்காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், எலும்புகள் பலப்படும்.. பெண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடியது இந்த சுண்டை காய்.

Apr 23, 2024

பாதாம் பிசினில் உள்ள எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்

பாதாம் பிசினில்எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள்உள்ளன.தென்மேற்கு ஆசியா மற்றும் ஈரான், இந்தியா, பாகிஸ்தானில் கிடைக்கிறது. மரத்தில் இருந்து வெளியேறும் பிசின் கத்தியில் வெட்டி எடுக்கப்படுகிறது. இதற்கு சுவையும், மணமும் கிடையாது. இயற்கையானது, தண்ணீரில் கரையக்கூடியது. இது காயவைத்து சந்தைக்கு அனுப்பப்படுகிறது.ஜெல்லி போல் இருக்கும் பாதாம் பிசினை காயவைத்தால் அது கட்டியாகிவிடும். இதை காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து ஒருமாதம் வரை இவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.கற்கண்டு போல் இருக்கும். மரத்தில் கொஞ்சம் இலைகளும், பூக்களும் இருக்கும் இலையுதிர் காலத்தில் இது பெறப்படுகிறது. காய்ந்த பாதாம் பிசின் ஊறவைத்து பயன்படுத்தப்படுகிறது.பாதாம் பிசின் அல்சர், அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இதில் உள்ள குளிர்விக்கும் திறன், உடலின் சூட்டை குறைக்கிறது. மூலநோய் கொண்டவர்களும், பாதாம் பிசினில் இருந்து நன்மைகளை பெற முடியும். பாதாம்  பிசின் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. .பாதாம் பிசின் உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. இதில்90 சதவீதம் கார்போஹைட்ரேட்கள் உள்ளது. இதனால் அது உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது. இதை பாலில் சேர்த்து பருக ஒல்லியானவர்கள், உடல் எடையை அதிகரிக்கலாம்.நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வயோதிகத்தை தள்ளிப்போடுகிறது. தசைகளை வலுப்படுத்துகிறது  உடலை இயற்கையான முறையில் குளிர்விக்கிறது.இருமல், சளி மற்றும் சளி அடைத்துக்கொள்வதை குணப்படுத்துகிறது. இது மேலும் பல குளிர்கால பிரச்னைகளையும் சரிசெய்கிறது. கோடை காலத்தில் உடலின் வெப்ப நிலையை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள குளிர்விக்கும் உட்பொருட்கள் கோடை கால சரும வறட்சியை போக்க கருவுறுதலுக்கு முன் உடலை வலுப்படுத்த பாதாம் பிசின் உதவுகிறது.கர்ப்ப காலத்தில் எலும்பை உறுதிப்படுத்தி, உடலுக்கு வலு கொடுக்கிறது. கரு வளர்ச்சிக்கு உதவுகிறது. இது பிரசவித்த பின்னர் மாதவிடாய் சுழற்சி முறையாவதற்கு உதவுகிறது.பாதாம் பிசின் உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்ல உடல் எடை குறைப்பிலும் உதவுகிறது. உடலின் வளர்சிதை மாற்றத்தை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்தஉணர்வைகொடுப்பதால்பசியைக்கட்டுப்படுத்துகிறது.பாதாம் பிசினை கோடைக்காலத்தில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மற்ற காலங்களிலும் பயன்படுத்தலாம். இதை அதிகளவில் எடுத்துக்கொள்வது, வயிற்றில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. எனவே இதை மிதமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். பாதாம் பிசின் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு தருகிறது.

Apr 22, 2024

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவதால் பயனுள்ள ஆரோக்கிய நன்மைகள் 

காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதுடன் நாளைத் தொடங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை அருந்துவது உடல் எடை இழப்புக்கு உதவுகிறது.வெதுவெதுப்பான நீர் அருந்துவது செரிமானத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. இதன் காரணமாக வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நாளைத் தொடங்குவது மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்கிறது .காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கிறது காலை நேரத்தில் நீரிழப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட வெறும் வயிற்றில் வெந்நீரைக் குடிக்கலாம் .

Apr 20, 2024

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீர் 

வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும். வெண்டைக்காய் தண்ணீரில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து, வயிற்றை சுத்தம் செய்து செரிமான பிரச்சனைகளைச் சமாளிக்க உதவுவதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வாக அமைகிறது. வெண்டைக்காயில் அதிகமாகக் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மாறிவரும் பருவ காலத்தில், சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் வாரத்திற்கு1 முதல்2 முறை வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பது நல்லது.வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. இது கண்பார்வையை மேம்படுத்துகிறது. எனவே கண்பார்வையை அதிகரிக்க வெண்டைக்காய் தண்ணீரை தொடர்ந்து குடிக்கலாம்.இரத்த சோகையை தடுக்கும் வெண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகமாகக் காணப்படுகிறது. இரும்புச் சத்து நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, இரத்த சோகையை தடுக்கிறது. வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் இரத்த ஓட்டத்தைச் சீராக்கவும் உதவுகிறது.வெண்டைக்காய் தண்ணீரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் எடையைக் குறைக்கவும், உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. 

Apr 19, 2024

வேலிப்பருத்தி என்ற உத்தாமணி 

வேலிப்பருத்தி. இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து, தினமும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால்... ஆஸ்துமா, சுவாசக் கோளாறை சரி செய்வதற்கு. எளிமையான தீர்வு. இச்சாறை லேசாக சூடாக்கி, ஆற வைத்து தினமும் ஒரு தேக்கரண்டி. வீதம் ஒரு மண்டலம் (48 நாட்கள்) குடித்து வந்தால் சுவாச காச நோய்கள் காணாமல் போய்விடும்.இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை நேரத்தில் ஒரு தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து உண்டு வந்தால், வாயுவால் உண்டாகும் நோய்கள், கைகால் குடைச்சல், இளைப்பு, இருமல் கோழைக்கட்டு நீங்கும்.இரைப்பு, சளி, இருமல் போன்ற தொந்தரவுகளுக்கு உடனடி தீர்வைக் கொடுக்க அதிகம் தேடப்படும் தாவரமாக உத்தாமணியே குழந்தைகள் நலனுக்கான மூலிகையும் கூட.வயிற்றுப் புழுக்களின் ஆதிக்கத்தால், பிள்ளைகளைப் பசியின்மை வாட்டும்போது, உத்தாமணி இலைகளைக் குடிநீரிட்டு அரைக் கரண்டியளவு கொடுக்க, புழுக்கள் வெளியேறிப் பசி அதிகரிக்கும் .

Apr 19, 2024

போதைப் பழக்கத்தில் உள்ளோர் மீண்டு வர, கொய்யாப்பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

உலகிலுள்ள பழங்களில் மிகச்சிறந்ததாக, ஹைதராபாத்தில் நடந்த ஆய்வில் முதலிடத்தை தட்டிச்சென்றது, கொய்யாப்பழம்கொய்யாப்பழத்தில், புரோட்டீன்கள், நல்ல கொழுப்புகள், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தும் அதிகளவு உள்ளன. இதோடு கரோட்னாய்டுகள், பாலிபினால்கள், ஆன்டி ஆக்சிடென்ட்களும் நிறைந்துள்ளன.உலகிலுள்ள பழங்களில் மிகச்சிறந்ததாக, ஹைதராபாத்தில் நடந்த ஆய்வில் முதலிடத்தை தட்டிச்சென்றது, கொய்யாப்பழம்தினமும் ஒரு கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், பல்வேறு இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றன. கூடுதலாக, உடலில் சோடியம் மற்றும் பொட்டாஷியத்தை சம நிலையில் பராமரிக்க உதவுகிறது. உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்தால், அது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைய வழிவகை செய்யும். எனவே, இதயம் ஆரோக்கியமாக இருக்க  வேண்டுமானால் கொய்யாப்பழத்தை சாப்பிடுங்கள்.ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது இதய நோய் பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் என்கின்றனர், அமெரிக்காவின் வேளாண் துறை ஆராய்ச்சியாளர்கள். உயர் ரத்த அழுத்த உள்ளவர்கள் தினமும் மதிய உணவுக்கு முன் கொய்யாப்பழமோ, சாறாகவோ பரிந்துரைக்கின்றனர்.வைட்டமின் ஏ அதிகம் நிறைந்துள்ளதால் கண் தொடர்பான பிரச்சினைகளை சரி செய்கிறது.ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விட நான்கு மடங்கு கொய்யாவில் வைட்டமின் சி உள்ளது. இது மாரடைப்பு அபாயத்தை குறைக்கும் ஆற்றல் உள்ளது. மேலும், ரத்த நாள சுவர்களின் உட்புற ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்  அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்தவும்  உதவுகிறது. கொய்யாப்பழத்தில் கரோட்டின், லைகோபைன் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை அதிகமாக உள்ளன. இச்சத்துக்கள் அனைத்துமேசருமத்தின்ஆரோக்கியத்திற்குஇன்றியமையாதவைகளாகும். முகப்பரு வருவது குறைவதோடு சருமத்தின் அழகும், ஆரோக்கியமும் மேம்படும். அதில் உள்ள மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் நரம்புகள் மற்றும் தசைகளை,'ரிலாக்ஸ்' செய்து மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கிறது. உடல் பலவீனம், தோல் பிரச்னை, மலச்சிக்கல் போன்றவற்றை போக்கும் ஆற்றல் உடையது, சிகப்பு கொய்யாப்பழம் மற்றும் கொய்யாக்காய்.தினமும்சிகப்புகொய்யாப்பழத்தை சாறு எடுத்து, அதனுடன் பால் சேர்த்து, ஒரு டம்ளர் காலையில் சாப்பிட்டு வர, போதைப் பழக்கத்தில் உள்ளோர் மீண்டு வருவர்.இதன் தோலில் அதிகப்படியான புருக்டோஸ் இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் கொய்யாப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது நல்லது. கொய்யாப்பழத்தை காலை, 11:00 மணி மற்றும்  மதியம் 3:00 மணிக்கு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Apr 15, 2024

இரும்புச்சத்து அதிகம் உள்ள பொட்டுக்கடலை

பொட்டுக்கடலை சாப்பிட்டால் இதில் உள்ள நார்ச்சத்து செரிமான பிரச்சனைகளை குறைக்கிறது.. கலோரிகள் மிகக் குறைவு மற்றும் இரும்புச்சத்து அதிகம்.  நமது பெருங்குடலை ஹைட்ரேட் செய்வதன் மூலம் மலச்சிக்கலை தடுக்கிறது.இதய சமத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த பொட்டுக்கடலை முக்கிய பங்குவகிக்கிறது.உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றிஉடலை சுத்தமாக வைப்பதற்கும் உதவியாக இருக்கிறது.குழந்தைகள் சிறப்பான வளர்ச்சியை அடைவதற்கும், தசைகள் வலிமையாகுவதற்கும் இந்த பொட்டுக்கடலையில்  பல ஆரோக்கியம் நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு பொட்டுக்கடலையில் வெல்லம் சேர்த்து சாப்பிட கொடுப்பதால் குழந்தைகளுக்கு தேவையான வைட்டமின் கிடைக்கிறது.உடைத்த கடலையை அதிகம் சாப்பிட்டு வந்தால் முகத்திற்கு அழகு சேர்க்கவும், சரும பிரச்சனைகளான படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்கிறது.பெண்கள் கர்ப்பம் அடைந்திருக்கும் பொழுது சத்துள்ள பொருட்களை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்தவகையில் தினமும் பொட்டுக்கடலையை சாப்பிட்டு வருவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்..பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.பொட்டுக்கடலையை தினமும்ஒரு கைப்பிடி அளவுஎடுத்து சாப்பிடுவதால் முடிஉதிர்வு பிரச்சனைகளில் இருந்துசரிசெய்து அடர்த்தியான முடிவளர்ச்சியை தருகிறது. அதுமட்டுமின்றி சிறியவயதில் வரும் இளநரைபிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.நோய் எதிர்ப்பு சக்திகுறைந்து காணப்படுவதால் சளி, ஜுரம் போன்ற உடல்குறைபாடுகள் ஏற்படும் பொழுதுபொட்டுக்கடலை சாப்பிடுவது நல்லது.சர்க்கரை நோயாளிகள் தினமும் பொட்டுக்கடலை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்..............  

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News