25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Apr 12, 2024

வறுத்த  பூண்டு

வறுத்த ஆறு பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் இரைப்பையில் செரிமானமாகி உடலுக்கு சிறந்த உணவாக மாறும் இரண்டு அல்லது நான்கு மணி நேரத்தில் ப்ரீ ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக்கப்படும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும் பூண்டை பச்சையாக வெறும் வாயில் தின்றால் நல்லது அதிலும் காலை வேளையில் என்று சொல்வார்கள். ஆனால் தினுமும் அப்படி சாப்பிடகூடாது. அப்படி சாப்பிட்டாலும் அதன் தோலை நீக்கி சாப்பிடலாம். குறிப்பாக நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடும் போது கவனமாக இருக்கவேண்டும். தினமும் பச்சையாக சாப்பிடாமல் மாற்றி மாற்றி எடுத்துகொள்ளலாம். வேகவைத்து வறுத்து சுட்டு சாப்பி டலாம்.ஆனால் வறுத்து சாப்பிடும் போது இன்னும் பலன்களும் கிடைக்கிறது.இரவு நேரத்தில் ஒரு தம்ளர் பாலில் பூண்டின் தோலை உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் கலந்து வேக வைத்து குடிக்கலாம். தற்போது சிறு குழந்தைகள் முதல் பெரியவர் கள் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவாக பூண்டு மாற அதை வறுத்து தயாரிக்க லாம்பூண்டின் தோலை உரித்து சுத்தம் செய்து வாணலியில் மிதமான தீயில் வைத்து வறுத்து எடுங்கள். தொடர்ந்து20 நிமிடங்கள் வரை வறுங்கள். முதலில் பூண்டிலிருந்து நாற்றமடிக்கும் மணம் வெளியேறும். அதை தொடர்ந்து பூண்டில் அலிசின் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.இதை அப்படியே சாப்பிடலாம். நாற்றமில்லாதது என்பதால் எளிதாக சாப்பிட முடியும். எனினும் சுவை விரும்பிகள் பூண்டை வறுக்கும் போது கால் டீஸ்பூன் வெண்ணெய், தேவையான அளவுக்கு மிளகுத்தூள் உப்பு சேர்த்து வறுக்கலாம். ருசி பிரமாதமாக இருக்கும். குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள். இதனால் அவர்கள் வளரும் பருவத்தில் உடலில் அனைத்து சத்துகளையும் நிறைவாக கொண்டுவளர்வார்கள்.தினமும்,5 பல் வறுத்த பூண்டை சாப்பிடுவதால் அதிசயத்தக்க வகையில் உடலின் ஆரோக்கியமும் வேகமாக அதிகரிக்கிறதுவைட்டமின் சி சத்து தான் உடலில் இரத்த நாளங்கள். தசைகள், எலும்புகளின் வலுவை உறுதி செய்கிறது. பூண்டில் இருக்கும் செலினியம் உடலில் நன்மை செய்யும் நொதிகளை தூண்டுகிறது.உடலில் இரும்புசத்து, ஜிங்க் போன்றவை சிறப்பாக இயங்க பூண்டு உதவுகிறது என்பதை உணவு குறித்த வேதியியல் இதழ் ஒன்று வெளியிடப்பட்டது .வளரும் பிள்ளைகளுக்கு பூண்டில் சற்று கூடுதலாக வெண்ணெய் சேர்த்து கொடுங்கள். ஆரோக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக இருக்கும்.

Apr 10, 2024

வெங்காயத்தோல்களின்நன்மைகள்.

..அனைவரது வீட்டு சமையலிலும் தவறாமல் தினசரி பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் பொருளாக வெங்காயம் இருக்கிறது. வெங்காயத்தை உரிக்கும் போது பலரின் கண்களில் நீர் வடிகிறது. என்றாலும் வெங்காயத்தை போலவே பலரும் தூக்கி எறியும் அதன் தோல்களிலும் நன்மைகள் இருப்பது தெரிந்தால் ஒருவேளை அவர்கள் வெங்காயம் உரிப்பதை வெறுக்காமல் இருக்கலாம்.வெங்காயத் தோல்கள் நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் நன்மைகளை அளிக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும் .நம்மில் பலரால் அதிகம் கண்டுகொள்ளப்படாத வெங்காய தோல்கள் உண்மையில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. எனவே வெங்காயத் தோல்கள் நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. வெங்காய தோலானது ஃபிளாவனாய்ட்கள் குறிப்பாக சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஃபிளாவனாய்ட்டானQuercetinஐ கொண்டிருக்கின்றன. இது அழற்சியை குறைக்க உதவுகிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கான நன்மைகளை வழங்குகிறது. தவிர வெங்காயத் தோல்களில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட வைட்டமின்ஸ்& மினரல்ஸ் நிறைந்துள்ளன. இவை நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவதோடு, பார்வை ஆரோக்கியத்திற்கும், எலும்புகளை வலிமையாக வைப்பதற்கும் மற்றும் எலக்ட்ரோலைட் பேலன்ஸிற்கும் பங்களிக்கின்றன. . வெங்காயத் தோல்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை நடுநிலையாக்க உதவி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸ்-ஐ குறைக்கின்றன. இதய நோய் மற்றும் கேனர் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கின்றன. வெங்காய தோல்களில் காணப்படும் Quercetin உள்ளிட்ட கலவைகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. அந்த வகையில் வெங்காயத்தோல் சாறு அல்லது இன்ஃப்யூஷன்ஸ் எடுத்து கொள்வது ஆர்த்ரைட்டிஸ் மற்றும் இன்ஃப்ளமேட்ரி பவுல் (inflammatory bowel) டிசீஸ் போன்ற நிலைகளில் அழற்சியை குறைக்க உதவும். வெங்காய தோல்களில் டயட்ரி ஃபைபர் உள்ளது, இது குடல் இயக்கங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பதோடு மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது.வெங்காய தோல்களில் காணப்படும் ஃபிளாவனாய்ட்ஸ்களானதி ப்ரீபயாடிக் விளைவுகளை ஏற்படுத்த கூடும், இதன் விளைவாக நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கப்படும். வெங்காய தோலை டீ-யாக காய்ச்சி , டயட்டில் சேர்த்து கொள்ளலாம் 

Apr 09, 2024

அதீதமாக சிந்திப்பது பிரச்னைகளை உண்டுபண்ணும்.

ஓவர் திங்கிங் உடம்புக்கு ஆகாது.. இந்த ஓவர் திங்கிங் என்பதை மருத்துவத்தில்,‘ரூமினேஷன்’ என்று குறிப்பிடுகிறார்கள். ஒருவர் தனக்கு நடந்ததை பற்றியே திருப்பித் திருப்பி நினைத்துப் பார்த்து அசைபோட்டுக் கொண்டிருப்பது அவர்களை மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும். இவர்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றிய உணர்வு இல்லாமல் இருப்பதுடன் மன அழுத்தம் எனப்படும் டிப்ரெஷன் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இப்படி முடிந்து போன விஷயங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதால் ஒரு பயனும் இல்லை.நமக்குப் பிடித்த விஷயங்களை சிந்திக்கும்போது மனம் லேசாகும். தேவையில்லாத விஷயங்களை சிந்திப்பதும், கடந்த கால வாழ்க்கையில் நடந்த கசப்பான நிகழ்வுகளைப் பற்றி சிந்திப்பதும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்னைகளை உண்டுபண்ணும்.சிந்திப்பது என்பது ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு தீர யோசிப்பது. அதாவது எதனையும் சிந்தித்து செயல்படுவது. அதீதமாக யோசிப்பது என்பது தேவையில்லாத வேலை. எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு பலமுறை சிந்தித்து முடிவெடுத்து செய்வதால் அந்த செயல் நாம் நினைத்தபடியே வெற்றிகரமாக முடியும்.  அதுவே ஒரு செயலை செய்வதற்கு முன் நாம் அதிகம் யோசித்தால் மன அழுத்தம், தேவையில்லாத பதற்றம் போன்றவை உண்டாகும். இதனால் இரவில் தூக்கம் கெடும். உடல்நிலை கூட பாதிக்கப்படும்.மனிதர்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு மூளையில்12 ஆயிரம் எண்ணங்கள் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. எண்ணங்கள் வாழ்க்கைக்கு அவசியம். அவை நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் திறன் கொண்டவை. ஆனால், அந்த எண்ணங்கள் (சிந்தனைகள்) நம் நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ள விஷயங்களாக இருக்க வேண்டும்.எண்ணங்களே வார்த்தைகளாகி, செயல்களாக மாறி நம்மை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்கிறது. எனவே. நாம் சிந்திக்கும் விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ளலாமல் இருக்க பழக வேண்டும்.இதற்கு நடைப்பயிற்சி நல்ல பலன் தரும். காலை அல்லது மாலையில் மரங்கள் சூழ்ந்த இயற்கையான சூழலில் நடப்பது நம் மனதை லேசாக்கும்.உடலை அதிகம் வருத்திக்கொள்ளாமல் எளிதான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படி செய்வது உடல் நலத்துடன் மனநலத்தையும் பாதுகாக்கும்.அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்து மூச்சைஇழுத்துவெளியேவிட்டுநம் சுவாசத்தை கவனித்து பழகுதல் சிறந்தது. அத்துடன் நம் மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் தேவையில்லாத எண்ணங்கள், யோசனைகள் மனதில் தோன்றாது. தேவையில்லாத எண்ணங்கள் தோன்றாததால் மனதில் குழப்பமும் உண்டாகாது. மனம் தெளிவாக இருந்தால் எந்த முடிவையும் குழப்பம் இல்லாமல் எடுக்க முடியும்..மனதில் தேவையில்லாத எண்ணங்கள் தோன்றும்போது அதில் இருந்து விடுபட, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது, நண்பர்களுடன் உரையாடுவது, புது நண்பர்களை ஏற்படுத்திக் கொள்வது, புது சூழலில் நம்மை இருத்திக் கொள்வது, மனதுக்கு மகிழ்ச்சி தரும் பாடல்களை கேட்பது என நம் மனதை ஒருமுகப்படுத்தி அதீத யோசனை எனப்படும் ஓவர் திங்கிங்கிலிருந்து வெளிவரலாம்..

Apr 08, 2024

ஆரோக்கியமான வாழ்வுக்கு துளசி

பாரம்பரிய வைத்திய முறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் மூலிகைகளில் ஒன்றான துளசிஎனும் மூலிகை .2 கப் தண்ணீருடன்10 துளசி இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பின் இந்த நீரில் சுவைக்கு தேன் சேர்த்து கசாயம் போல் பருகி வர சளி, காய்ச்சல், தொண்டை வலி பிரச்சனைகளை விரட்டலாம். ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த துளசி இலைகளை அழற்சி எதிர்ப்பு கொண்ட தேனுடன் சேர்த்து தினமும் காலை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும். தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிப்பில் இந்த துளசி இலைகளை அப்படியே மென்று சாறு விழுங்க, செரிமான செயல்பாடு மேம்படும்.துளசி இலைகளை சேர்த்து தேநீர் வடிவில் எடுத்துக்கொள்ள, ஆற்றல் இழப்பை தடுப்பதோடு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்ஒரு கிளாஸ் தண்ணீரில்5to6 துளசி இலைகளை சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்கவும். பின் இந்த நீரினை வெறும் வயிற்றில் பருக செரிமான சிக்கல் நீங்குவதோடு ஆரோக்கிய உடல் எடையை பராமரிக்கலாம். துளசி இலைகளுடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து சாறு பிரித்து பின் சிறிதளவு எலுமிச்சை சாறு, கசப்பு நீங்கும் அளவு தண்ணீர் மற்றும் தேன் சேர்த்து ஜூஸ் வடிவில் பருக குடல் இயக்கம் மேம்படும். 2-3 துளசி இலைகளை கிராம்பு ஒன்றுடன் சேர்த்து வாயில் மோட்டு மென்று சாற்றை மட்டும் விழுங்கிவிட, சளி - தொண்டை எரிச்சல் பிரச்சனையில் இருந்து சற்று நிவாரணம் காணலாம்செடியில் இருந்துfreshஆக பறித்த துளசி இலைகளையே பயன்படுத்த வேண்டும். பதப்படுத்தப்பட்ட/ குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட துளசி இலைகளை பயன்படுத்துவது கூடாது! .

Apr 05, 2024

வயிற்றுப்புண்களை ஆற்றும் பண்பு கொண்ட அவல்..

அவல்பண்டிகைகளின் போது' பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள். எண்ணற்ற சத்துக்கள் நிறைந்த இந்த அவலை' தினமும் சாப்பிடலாம். அவல், நெல்லை ஊறவைத்து இடித்து ,அதிலிருந்து உமியை நீக்கி பயன்படுத்துகிறோம். இவ்வாறு கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் நார்ச்சத்து, வைட்டமின் பி, கால்சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, மாங்கனீஸ், மக்னீசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. சிவப்பு அவலில் சற்று அதிக சத்துக்கள் உள்ளன.  பல்வேறு சத்துக்கள் நிறைந்த இந்த அவலை காலை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நாள் முழுவதும் தேவையான சத்துக்கள் கிடைக்கும். காலையில் சாப்பிட்டால் நீண்ட நேரம் பசி எடுக்காது. தொடர்ந்து அவல் சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலை தீர்த்து, குடல் ரோக்கியத்தை பாதுகாக்கிறது. மேலும், இதிலுள்ள நார்ச்சத்து இரத்தத்தில் உடனடியாக குளுக்கோஸ் கலக்காமல் இருக்கவும் உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அவல் சிறந்த தேர்வாகும். இது வயிற்றுப்புண் மற்றும் அல்சர் இரண்டையும் நீக்குகிறது.  இரத்த சோகை/ அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் இந்த சிவப்பு அவலை அடிக்கடி சாப்பிடலாம். கர்ப்பிணிகள் தாராளமாக உணவில் அவல் எடுத்துக்கொள்ளலாம். பாலில் அவல் மற்றும் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். அவல் உப்புமா செய்தும் சாப்பிடலாம். அவலை வேக வைத்து தாளித்தும் சாப்பிடலாம். சிவப்பு அவலை பாலில் லேசாக ஊறவைத்து, தேங்காய்த்துருவல், ஏலத்தூள், நாட்டுச்சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம். 

Apr 03, 2024

பாம்பு விஷத்தை இறக்கும் சின்ன வெங்காயம்

100 கிராம் சின்ன வெங்காயத்தில் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைடிரேட். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்தும், வைட்டமின் "B", வைட்டமின் "C" கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து இப்படி அனைத்தும் அடங்கியிருக்கின்றன..: வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய்தான்.. வெங்காயம் உரிக்கும்போது, நமக்கு கண்ணீர் வருவதற்கு காரணமும் இந்த எண்ணெய்தான். உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றக்கூடியது இந்த சின்ன வெங்காயம். ருசிக்காக மட்டுமல்லாமல், உடல் உபாதைகளுக்கும் இந்த சின்ன வெங்காயத்தை மருந்தாக பயன்படுத்தலாம்.. காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளைக்கு அரை ஸ்பூன் சின்ன வெங்காய சாறு சாப்பிட்டு வந்தால், நம்முடைய நுரையீரல் பலப்படுமாம்.. நுரையீரலில் தங்கியிருக்கும் அழுக்குகள், கழிவுகள், நச்சுக்கள் வெளியேறிவிடும்.. சுவாச கோளாறுகள்: ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கிறது.. இதயத்துக்கு மிகவும் நன்மை தரக்கூடியது சின்ன வெங்காயம்.. நெஞ்சுவலி பிரச்சினை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.. ரத்தம் உறையும் பிரச்சினையும் சீராகும்..உடல் எடை குறைய வேண்டுமானாலும், சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டாலே நிறைய ஊட்டச்சத்து கிடைக்குமாம்.. காரணம், சின்ன வெங்காய சாறு கொழுப்பை கரைக்கும் தன்மையுடையது.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தக்கூடியது.. முக்கியமாக, புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் நிறையவே உள்ளன.. ரத்த சோகை: வெங்காயத்தில் வைட்டமின் E நிறைந்துள்ளதால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளை தடுக்கிறது. இரும்பு சத்து அதிகமுள்ள வெங்காயம், ரத்த சோகையை குணமாக்குகிறது.. மலச்சிக்கல் இருப்பவர்களும், வெங்காயத்தை நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.உடலில் பித்தம் அதிகமாக சேர்ந்துவிட்டால், 4 சின்ன வெங்காயத்தை தோலுரித்து, சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கும்..வாய் சுகாதாரம்: பல் வலி இருந்தாலும், வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல்வலி உள்ள இடத்தில் வைத்தால் உடனே வலி குறையும்.. சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்தாலும், அந்த பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும்... பாக்டீரியாக்கள், தொற்றுக்களும் அழிந்துவிடும்... சின்ன வெங்காயத்துடன், 2 புதினா இலைகளையும் சேர்த்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் இன்னும் நன்மை கிடைக்கும். வெங்காய நாற்றமும் வராது.. வாய்ப்புண் குணமாகும். மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு சின்ன வெங்காய சாறு பெரிதும் கை கொடுக்கிறதாம். அதாவது, 50 கிராம் வெங்காய சாற்றில் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நாட்களுக்கு குடித்து வந்தால் ரத்த மூலம் கட்டுக்குள் வருமாம். அல்லது வெங்காயத்தை துண்டுகளாக்கி, சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறுகளும் நீங்குகிறதாம். வெங்காயம்: வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி சீராகும்.. வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை தாராளமாகவே பயன்படுத்தலாம். ஆண்களுக்கு வரப்பிரசாதம்தான் இந்த சின்ன வெங்காயம்.. குறிப்பாக, விறைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால், வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதாம்.. காரணம், டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.. அந்த காலத்தில் பாம்பு கடித்துவிட்டாலும் வெங்காயத்தையே மென்று தின்ன தருவார்களாம். இதனால் உடனே விஷம் இறங்குமாம்.. தேள்கொட்டிய இடத்தில், வெங்காயத்தை நசுக்கி தேய்த்தாலும், விஷம் இறங்கும் என்பார்கள். 

Mar 30, 2024

சோர்வைக் குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சியையும், வீரியத்தையும் தரும் எலுமிச்சை

எலுமிச்சம் பழச்சாற்றில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் எடை குறையும் குறைந்த கலோரிகள் இருப்பதால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது. இது சோர்வைக் குறைத்து உடலுக்கு புத்துணர்ச்சியையும், வீரியத்தையும் தருகிறது.எலுமிச்சை வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கான அற்புதமான மூலமாகும், மேலும் பல்வேறு தாவர அடிப்படையிலான இரசாயனங்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்களையும் கொண்டுள்ளது., கால்சியம், பாந்தோத்தேனிக் அமிலம், போலேட், மக்னீசியம் மற்றும் தாமிரம் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.எலுமிச்சை ஆற்றல் மற்றும் செரிமானத்தை அதிகரிக்க உதவுகிறது.தினமும் ஒரு எலுமிச்சை சாப்பிட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கும். செரிமான மண்டலத்தை புதுப்பித்து, அஜீரண பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி ,வைட்டமின் ஈ சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சருமத்தை பொலிவாக்கி, சுருக்கங்களை குறைத்து, சருமத்தை அழகாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவும்.

Mar 29, 2024

பேரீச்சம்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்

உலகெங்கிலும் உள்ள பல வெப்பமண்டல பகுதிகளில் வளரும் பேரீச்சம்பழத்தின் உலர்ந்த பழங்கள் பேரீச்சம்பழங்கள் ஆகும். பேரிச்சம்பழங்கள் அவற்றின் ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து ,அதனுடன் தொடர்புடைய ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இப்போது பிரபலமடைந்துள்ளன.ஆரோக்கியமான குடல் இயக்கங்களை ஆதரிக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. கர்ப்ப காலத்தில் முழுமையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. நுண்ணுயிர் வளர்ச்சியைத் தடுக்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.வீக்கத்தைக் குறைக்கும் மலச்சிக்கலை நீக்குகிறது.

Mar 28, 2024

கோடைக்கால ஆரோக்கிய பானம்  மோர்

கோடைக் காலத்தில் அனைவர் வீட்டிலும் மோர் கட்டாயம் இருக்க வேண்டும்.கோடைக்காலத்தில்உங்கள்ஆரோக்கியத்தைகவனித்துஉடலுக்குகுளிர்ச்சியைவழங்கும்உணவைஎடுத்துக்கொள்ளவேண்டியதுஅவசியம்.இந்தவிஷயத்தில்மோர்மிகவும்நன்மைபயக்கும்.தயிருடன்தண்ணீர்சேர்த்துநன்றாகக்கலக்கிதயாரிக்கப்படுவதுமோர்.இதுதயிரைக்காட்டிலும்அதிகபலன்தருகிறது.கோடைக் காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க கண்டிப்பாக மோர் அருந்த வேண்டும்.. உப்பு, சர்க்கரை, புதினா ஆகியவை சேர்த்து மோர் குடித்தால் நீர்சத்து குறைபாடு, வயிற்றுப்போக்கு, உடல் உஷ்ணம் ஆகியவை நீங்கிவிடும். அதிக வெப்பத்தால் பல நேரங்களில் கண்களில் எரிச்சல் ஏற்படும். மோர் குடிப்பதால் உடலுக்கு உள்ளிருந்து குளிர்ச்சி கிடைக்கும். இதனால் கண்கள் எரியும் உணர்வும் நீங்கும். அதேபோல், சிலருக்கு சருமத்தில் எரியும் உணர்வு இருக்கும். அப்படி இருந்தால் மோரை சருமத்தில் தடவ, உடனடி நிவாரணம் கிடைக்கும். கோடையில் அசிடிட்டி பிரச்னை தலைதூக்கும். மோர் அசிடிட்டிக்கு ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. மோரில் கொஞ்சம் கல் உப்பு, கரு மிளகு சேர்த்து குடித்து பாருங்கள் அமிலத்தன்மை உடனே குறைந்து விடும்.\மோரில் உள்ள எலெக்ட்ரோலைட்ஸ் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் மோருடன் உப்பு சேர்த்து தினம் குடித்து வர உடல் மற்றும் சரும வறட்சி பிரச்னைகள் நீங்கும். உண்ணும் உணவில் உள்ள கழிவுகளைப் போக்கி உணவின் சத்துக்களை முழுமையாக உடலுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை மோரில் உள்ள சேர்மங்கள் செய்கின்றன. இதனால் கல்லீரலின் ஆரோக்கியம் மேம்படும்.மலச்சிக்கல், செரிமான பிரச்னை உள்ளவர்கள் மோர் குடிப்பது நல்லது. மோரில் காணப்படும் ப்ரோபயோடிக்ஸ் என்ற பாக்டீரியாக்கள் உடலில் செரிமான செயல்பாட்டை மேம்படுத்து உதவுகிறது.. மசாலா பொருட்கள் நிறைந்த கடின உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் போன்ற உணர்வினை கட்டுப்படுத்த ஒரு கிளாஸ் மோருடன் இஞ்சி சேர்த்து குடிப்பது நல்லது. மாதவிடாய் காலங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் அதிகப்படியான இரத்தப்போக்கு பிரச்னைக்கும், வயிற்று வலிக்கும் மோர் ஒரு சிறந்த மருந்தாக உள்ளது. ஒரு கோப்பை மோரில் வெந்தயம் சேர்த்து குடித்து வர, இந்தப் பிரச்னைகள் நீங்கும்.மோரில் பயோ ஆக்டிவ் புரதங்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நம் உடல் செல்களில் உள்ள சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்த உதவுவதோடு, இரத்த அழுத்தத்தையும் சமநிலைப்படுத்துகிறது.மோர் கொண்டு முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் நீக்கி சருமம் பொலிவு பெறும்.

Mar 27, 2024

தூக்கத்திற்கு உதவும் பூண்டு 

உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தைமேம்படுத்துவதற்கும் பூண்டை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதுபூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு உணவு பொருள்.பூண்டின் கடுமையான நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தைசீராக்கஉதவுகிறது.உங்களுக்குஜலதோஷம்இருந்தால்இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம்ஏற்படலாம்.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் பூண்டைப் பயன்படுத்துவதால் நல்ல பலன் கிடைக்கும். பூண்டின் வாசனை மனதைத் தளர்த்தும். மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.பூண்டில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன. மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. பூண்டு தோலை துணியில் சுற்றி தலைக்கு அருகில் வைத்துக்கொள்ளலாம்.தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலில்2 பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கிருமிகள் வராமல் தடுக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது.இரவில் உறங்கும் போது சிறியபூச்சிகள் மற்றும் கொசுக்கள்இருந்தால் உங்கள் படுக்கைக்குஅருகில் பூண்டு அல்லது பூண்டுதோல் வைத்தால் அந்தவாசத்திற்கு பூச்சிகள் வராதாம்.சிலர் பூண்டுப் பற்களை அரைத்துதண்ணீரில் போட்டு, அந்தத்தண்ணீரை பூச்சிகள் அதிகம்நடமாடும் இடங்களில்தெளிப்பார்கள். அதுவும் சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News