25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Aug 27, 2024

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.

Aug 26, 2024

கோதுமைப்புல் பொடியின் நன்மைகள்

கோதுமைப்புல் உடல் சிறப்பாக இயங்குவதற்குத் தேவையான19 அமினோ அமிலங்களும்,92 தாதுக்களும், ஆரோக்கிய மற்றும் மருத்துவத் தன்மைகளைக் கொண்டுள்ளது. செயற்கையாக ஒளியூட்டப்பட்ட உள்கூடங்களிலும், கண்ணாடிக் கூரை பொருத்தப்பட்ட கூடங்களிலும் இது பயிரிடப்படுகிறது. கோதுமைப்புல் பொடிவீட் கிராஸ் பவுடர் என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது. இதில் குளோரோஃபில்(chlorophyll) என்னும் பச்சையமும் மிகவும் அதிகமாக நிரம்பியுள்ளது. கோதுமையில் இருப்பது போன்று, இதில் க்ளூட்டன்(gluten) என்பது இல்லாதது ஒரு சிறப்பம்சமாகும். கோதுமைப்புல் பொடியை தண்ணீரில் கலந்து, சத்து பானமாகவும் அல்லது வேறு ஏதாவது ஜூஸ்களில் கலந்தும் அருந்தலாம். கோதுமைப்புல் செடியில் உள்ள அனைத்து சத்துக்களும், கோதுமைப்புல் சாற்றிலும் உள்ளன.

Aug 20, 2024

தசாங்கம்

தசாங்கத்தில் உள்ள பொருட்கள்: 1. வெட்டி வேர் 2. லவங்கம் 3. வெள்ளை குங்குலியம் 4 ஜாதிக்காய் 5. மட்டிப்பால் 6. சந்தான தூள் 7 நாட்டு சர்க்கரை 8. திருவட்ட பச்சை 9. சாம்பிராணி 10 கீச்சிலி கிழங்கு இந்த தசாங்கத்தின் புகையானது உடலின் பல்வேறு உள்உறுப்புகளின் வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது. இதன் நறுமணமே தெய்வீக உணர்வை உண்டாக்குபவையாக இருக்கும். துஷ்ட சக்திகளை இதன் புகை விரட்டி விடும். திருஷ்டி கழிக்க உபயோகிக்கலாம்.இதன் புகையை நுகர்வதால் நம் உடலும்,மனமும் சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு அடைந்து விடும். வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருந்தால் அனைத்தும் மாயமாய் மறைந்தே போகும். இதற்கு அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்த சக்தி இருக்கிறது.கோவில்களில் இருக்கும்  நறுமணம், நமது வீட்டிலும் நறுமணம்  நிறைந்து  இருக்கும் உங்கள் தெருவே மணக்கும் .

Aug 17, 2024

நரம்பு தளர்ச்சி பிரச்னைகளில் இருந்து முற்றிலும் குணம் பெற…..

நியூரான்கள், நரம்பு திசுக்களைபாதிக்க துவங்கும்போது, நரம்புதளர்ச்சி நோய் ஏற்படுகிறது. நரம்பு தளர்ச்சிநோய் உள்ளது என்பதைஎளிதாக கண்டுபிடிக்க வேண்டும். இதுநபருக்கு நபர் மாறுபடும். சிலருக்குகை, கால், தாடைகளில்நடுக்கம் ஏற்படும்.அன்றாட வாழ்க்கையில் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேகமாக எதையும் செய்ய முடியாது. வேகமாக நடக்க முடியாது. நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படும். சிலருக்கு ஒரு விரல் ஆடும். அதிகளவில் நடுக்கம். தூங்கி எழும்போதோ அல்லது சேரில் இருந்து எழும்போதோ அவர்களால் சட்டென்று நேராக நிற்க முடியாது. கால் தரையில் படாமல் இருக்கும்.தொடர்ந்து நடக்கும்போதுதான் பாதம் தரையில் படுவதையே அவர்களால் உணர முடியும். முகத்தில் உணர்வு இருக்காது. கை-கால் வலி, வீக்கம் இருக்கும். அவர்களால் ஒரு செயலை சரியாக செய்ய முடியாது. இவை நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள்தேவையான பொருட்கள்மிளகு – ஒரு ஸ்பூன்திப்பிலி – ஒரு ஸ்பூன்சுக்குப்பொடி -ஒரு ஸ்பூன்செய்முறை - மிளகு, திப்பிலி இரண்டையும் நுணுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அப்படியே பருகலாம்.தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்தும் பருகலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், அவற்றை தவிர்ப்பது நல்லது.காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் பருகிய பின்னர் இதை பருகலாம். இதைவழக்கமாக சாப்பிட வேண்டும். 10 நாளில்மாற்றம் தெரியும்.நரம்பு தளர்ச்சியின் அறிகுறிகள் படிபடிப்படியாக குறைவதை காணலாம். இதை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.இதில் உள்ள3 பொருட்களும் நரம்பு மண்டலத்தை நன்றாக வலுப்பெறச்செய்யும். நரம்பு பிரச்னைகளை சரிசெய்து, நரம்பு தளர்ச்சி நோயை முற்றிலும் சரிசெய்யும். அனைவரும் பருகலாம். நரம்பு தளர்ச்சியால் அவதிப்பெறுபவர்களுக்கு சிறந்த பலனைத்தரும்.இந்த மூன்று பொருட்களும் இயற்கையானதுதான் என்பதால், இது எவ்வித பக்கவிளைவையும் தராது. இயற்கை நிவாரணங்களை தேடிச்செல்லவேண்டும். அது பலனளிக்கவில்லையென்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவது சிறந்தது.

Aug 15, 2024

முந்திரியை பாலில் ஊற வைத்து சாப்பிட எடை அதிகரிக்கும்

நிறைவுறா கொழுப்புகள் மற்றும் இரும்பு, துத்தநாகம், வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் பி, தாமிரம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் முந்திரியில்  உள்ளது. முந்திரி சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் கட்டுப்படும். கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பால் மற்றும் முந்திரி எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதை 1 வாரம் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் பாலில் ஊறவைத்த முந்திரி பருப்பை உட்கொள்ள வேண்டும். இதனால், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பால் மற்றும் முந்திரி இரண்டிலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்கள் வராமல் தடுக்கிறது. இதை 1 வாரம் உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியில் அதன் விளைவைக் காண்பிக்கும். முந்திரி பருப்பை பாலில் ஊறவைத்து 1 வாரம் சாப்பிடுவதும் உடல் எடையை அதிகரிக்க உதவும். இது உடலில் இருந்து பலவீனம் மற்றும் சோர்வை நீக்குகிறது. ரத்தசோகையால் அவதிப்பட்டால், தினமும் பாலில் ஊறவைத்த முந்திரியை சாப்பிட வேண்டும். இதன் மூலம் இரத்த சோகை பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். முந்திரி பருப்பு மற்றும் பாலில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. இதை 1 வாரம் உட்கொள்வதன் மூலம், சருமத்தில் மாற்றங்கள் தெரியும். முந்திரியை பாலில் ஊறவைத்து 1 வாரம் சாப்பிட்டு வந்தால், உடல் பலவினம் நீங்கி, வலிமையைப் பாதுகாக்கும். இதனால் உடலுக்கு ஆற்றல் கிடைக்கிறது.

Aug 12, 2024

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மூலிகைகள்

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் அஸ்வகந்தா, கிலோய், அதிமதுரம், துளசிமற்றும் நெல்லிக்காய் ஆகிய ஐந்து ஆயுர்வேத மூலிகைகள் இவை உடலில் நோய் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. இதன் மூலம் இருமல், தொண்டைப்புண், தொண்டை வலி, உடல் சோர்வு ஆகியவை குணமாகும்அஸ்வகந்தா: ஆயுர்வேதத்தின் முக்கியமான மூலிகைகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நீண்ட ஆயுளைப் பெறவும் சிறந்த மூலிகை. அரை ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை இரண்டு கப் நீரில் கொதிக்க வைத்து சிறிது இஞ்சியை சேர்த்து பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டு ஆறியதும் சிறிது தேன் கலந்து பருகவும். இது சிரப் மற்றும் கேப்சூல் வடிவிலும் கூட கிடைக்கிறது.கிலோய்: இது ஆன்ட்டி ஆக்சிடென்ட், அழற்சி எதிர்ப்பு, நோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்தது. இரண்டு ஸ்பூன் கிலோய் சாறுடன் சிறிது நீர் கலந்து எடுத்துக்கொள்ள நல்ல பலன் கிடைக்கும். இதுவும் சிரப் வடிவிலும்  காப்ஸ்யூல் வடிவிலும் கிடைக்கின்றது.அதிமதுரம்: நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடக்கூடிய சக்தி நிறைந்தது. உடலிலுள்ளதேவையற்ற பாக்டீரியா மற்றும் கிருமிகளை கண்டறிந்து அழிக்கும் ஆற்றல் கொண்டது. நோயிலிருந்துகாக்கக்கூடிய சக்தி பெற்ற அதிமதுர பொடியை 10 கிராம்அளவு எடுத்து 200 கிராம் டீத்தூளுடன் கலந்து விடவும். இதனைதினசரி நாம் டீ தயாரித்து பருக, நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.துளசி: நோய் தொற்றுகளை தடுப்பதில் முக்கியப் பங்கு வைக்கும் துளசியை டீ போல் தயாரித்து பருகலாம். ஒருகப் நீரில் பத்து துளசி இலைகளை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை விதம் பருக, நம்உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். துளசிசெடிகளை வீட்டில் வளர்க்கலாம். துளசி இலை பொடிகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது.ஆம்லா(நெல்லிக்காய்): வைட்டமின் சி, வைட்டமின் பி மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த நெல்லிக்காயில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். சிறந்த காயகல்பமாக விளங்கும் நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். இதனை தினமும் காலையில் பச்சையாகவோ அல்லது ஜூஸாக செய்தோ சாப்பிடலாம். நெல்லிக்காயை தினம் ஒன்று என சாப்பிட, பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லது. இது முரப்பா வடிவிலும் கிடைக்கின்றது. நெல்லிக்காய் சாறு அல்லது ஆவியில் வேகவைத்த நெல்லிக்காயை தினம் ஒன்றாக சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்றது.

Aug 08, 2024

ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்  அவித்த சுண்டல்

சுண்டல் ஆரோக்கியமானசுவையான உணவு வகை, இது பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் சிறந்த மூலமாகும். சுண்டலில் காணப்படும் சில முக்கிய வைட்டமின்கள்: பி1, பி2, பி3, பி6 மற்றும் ஃபோலேட் போன்ற வைட்டமின் பி குழுக்களின் சிறந்த மூலமாகும். இந்த வைட்டமின்கள் ஆற்றல் வளர்சிதை மாற்றம், நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் செல் உற்பத்திக்கு அவசியம். சுண்டல்வைட்டமின் சியின்நல்ல மூலமாகும், இதுநோய் எதிர்ப்புசக்தி, கொலாஜன் உற்பத்திமற்றும் இரும்புஉறிஞ்சுதலுக்கு அவசியமானஒரு ஆக்ஸிஜனேற்றி.சுண்டல் வைட்டமின்கே-யின் நல்லமூலமாகும், இது இரத்தஉறைதல் மற்றும்எலும்பு ஆரோக்கியத்திற்குஅவசியமானது.சுண்டல் இரும்பின்சிறந்த மூலமாகும், இதுஆக்ஸிஜனை உடலின்செல்களுக்கு கொண்டுசெல்லும் ஹீமோகுளோபினில்காணப்படும் ஒருதாதுவாகும்.சுண்டல்மெக்னீசியத்தின் நல்லமூலமாகும், இது தசை மற்றும்நரம்பு செயல்பாடு, இரத்தசர்க்கரை கட்டுப்பாடுமற்றும் இரத்தஅழுத்தம் ஆகியவற்றில்முக்கிய பங்குவகிக்கிறது. சுண்டல்பாஸ்பரஸின் நல்லமூலமாகும், இது எலும்புகள்மற்றும் பற்கள்ஆகியவற்றின் ஆரோக்கியத்திற்குஅவசியமான தாதுவாகும். ஒட்டுமொத்தமாக, சுண்டல்உங்கள் உணவில்சேர்க்க வேண்டியஒரு சத்தானமற்றும் ஆரோக்கியமானஉணவாகும், 

Aug 07, 2024

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் சாத்துக்குடி பழம்

 பழ வகைகளில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியவற்றில் ஒன்று சாத்துக்குடி. இது மற்ற பழங்களை விட விலை சற்று குறைவாகக் கிடைக்கும். இந்தப் பழத்தை ஆங்கிலத்தில் ‘மொசம்பி ப்ரூட்’ என்கிறார்கள். சுவிட் லெமன் என்றும் அழைப்பதுண்டு. இதில் பல ரகங்கள் இருக்கின்றன. ஆனாலும், அவை அனைத்தும் மருத்துவ குணங்களில் மாறுவதில்லை. ஜூலை முதல் ஆகஸ்ட் வரை, பின்னர் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை இதன் சீசன் உள்ளது.சாத்துக்குடி பழங்கள் இந்தியா போன்ற வெப்பம் மிக்க பகுதிகளில் அதிகமாக விளைகின்றன.25 அடி உயரம் வரை வளரும் சாத்துக்குடி மரத்தில் ஆரம்பத்தில் பச்சை நிறமாக இருக்கும் சாத்துக்குடி பின்னர் பழுத்து மஞ்சள் நிறமாக மாறிவிடும். இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் இது அதிக அளவில் விளைகிறது.சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்த சாத்துக்குடியில் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சிக்கு இது பயன்படுகிறது. அதோடு, கணிசமான அளவில் வைட்டமின் பி1, பி2, சி, இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவையும் இதில் உள்ளன. எனவே, தேகத்திற்கு நல்ல வளர்ச்சியையும், சுறுசுறுப்பை தருவதுடன் மலச்சிக்கலை நீக்கி நல்ல ஜீரண சக்தியையும் இது தருகிறது. என்னதான் சிட்ரஸ் குடும்பமாக இருந்தாலும் மற்ற சிட்ரஸ் பழங்களை காட்டிலும் அமிலத்தன்மையானது இதில் குறைவாகவே உள்ளது.வயிற்றுப் புண்களை குணமாக்குவது முதல் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக சாத்துக்குடி ஜூஸ் உள்ளது.பல அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை இது கொண்டுள்ளது. இந்தப் பழம் நம்மை புத்துணர்ச்சியாக வைப்பதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களையும் நீக்குகிறது. தினமும் இரண்டு டம்ளர் சாத்துக்குடி பழ சாறு 6 மாதம் தொடர்ந்து குடித்தால் இரத்த அழுத்தம் 7 சதவீதம் குறைவதாக அமெரிக்கா கிளீவ்லன்ட் பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிப்பதில் இந்தப் பழ ஜூஸ் பயனுள்ளதாக இருக்கும். இதிலிலுள்ள வைட்டமின் சியானது கார்னைடைன் (carnitine) உற்பத்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்ட்டுள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு அவசியமானது.சாத்துக்குடி பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. நமது உடலின் இரத்த ஓட்டத்தை சீராக்குவது, தசை வளர்ச்சிக்கு உதவுவது, சிறுநீரகப் பணியை சீராக்குவது என அனைத்தையும் பார்த்துக்கொள்வது பொட்டாசியம் சத்துதான். இதன் குறைபாடுதான் நாளடைவில் சர்க்கரை நோய் உருவாகக் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் ஆய்வுகளில். எனவே, சர்க்கரை நோய் வராமல் தடுக்க தாராளமாக சாத்துக்குடிப் பழத்தை எடுத்துக் கொள்ளலாம். அடிக்கடி தசைப்பிடிப்பு ஏற்பட்டால் அது பொட்டாசியம் சத்து குறைபாட்டால் ஏற்படலாம். அதனைத் தவிர்க்க சாத்துக்குடிப் பழத்தை சாப்பிடுவது நல்லது.இந்தப் பழத்தை ஜூஸாக பருகலாம். அல்லது தோலை நீக்கிவிட்டு அப்படியே சாப்பிடலாம். இந்தப் பழத்தில் ஜூஸ், ஜாம், ஊறுகாய், சாலட், சர்பத் செய்தும் சாப்பிடலாம். சாத்துக்குடி உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.

Aug 05, 2024

மன அழுத்தத்தைக் குறைக்கும் பனங்கற்கண்டு

 பனங்கற்கண்டில் கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளின் வளர்ச்சி மற்றும் வலிமைக்கு அவசியம். பால் புரதம் மற்றும் வைட்டமின்D ஆகியவற்றின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகின்றன. பால் வைட்டமின்A மற்றும்C ஆகியவற்றின் நல்ல மூலமாகும், இவை தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவும் ஆக்ஸிஜனேற்றிகளாகும்.பனங்கற்கண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, அவை சரும சேதத்தை ஏற்படுத்தும் தீவிர மூலக்கூறுகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன. பால் வைட்டமின்E இன் நல்ல மூலமாகும், இது சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்கவும், வயதான தோற்றத்தைக் குறைக்கவும் உதவும் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும்.பனங்கற்கண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்தை ஒழுங்குபடுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. பால் ப்ரோபயாட்டிக்ஸின் நல்ல மூலமாகும், பனங்கற்கண்டில் மக்னீசியம் உள்ளது, இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், தளர்வு உணர்வை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு தாதுவாகும். பால் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தின் நல்ல மூலமாகும், இது செரோடோனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது மகிழ்ச்சியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியக்கடத்தி ஆகும்.நீரிழிவு நோய் அல்லது பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் பனங்கற்கண்டு பால் குடிப்பதற்கு முன் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய வேண்டும். அதிகப்படியான பனங்கற்கண்டு சாப்பிடுவது பல் சிதைவு மற்றும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.வெள்ளை சர்க்கரை உடல்நலத்திற்கு தீங்கு என்று கூறப்படும் நிலையில் அதற்கு மாற்றாக பனங்கற்கண்டு எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.     

Aug 03, 2024

ஆஸ்துமா அவதியைத் தடுக்க  விரைவில் சிகிச்சை பெற வேண்டும்

எந்த அளவிற்கு விரைவில் சிகிச்சை பெறுகிறார்களோ, அந்த அளவுக்கு ஆஸ்துமா விரைவில் குணமடையும்.தூக்க மாத்திரை, அவில் போன்ற அலர்ஜி மாத்திரை, நாடித்துடிப்பை மிகுதிப்படுத்தும் மருந்து, (உ.ம். அட்டிரினிலின்), உயர் ரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கும் மாத்திரை (உ.ம். புரோபரனலால்) • மூச்சுத் திணறல் வரும்போது தவிர்க்க வேண்டிய மருந்துகள்சளி இறுகாமலிருக்க நிறைய திரவ உணவினை வாய் மூலமோ, ஊசி மூலமோ உட்கொள்ள வேண்டும்.சுயமாக மருந்து, மாத்திரை உட்கொள்வது கூடாது.புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் விடவும்அலர்ஜி, ஆஸ்துமாவைத் தூண்டும் உணவுப் பொருட்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தவிர்க்கவும்மூச்சுத் திணறல், இருமல் (பக்கவாட்டு விலா எலும்பு வலி), காய்ச்சல் ஆகியவை தள்ளிப்போடாமல் மருத்துவரை அணுகவும். வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பதைத் தவிர்க்கவும். உதாரணம்: பூனை, நாய், புறா, கிளிதூசு, குப்பை, அழுகிய உணவுப்பொருட்களை உடனடியா க அப்புறப்படுத்தவும்.படுக்கை, மெத்தை, தலையணை ஆகியவற்றில் ஆஸ்துமாவை உண்டாக்கும் பூச்சிகள் குடியேற வாய்ப்பு இருப்பதால் அவற்றை அடிக்கடி மாற்ற வேண்டும்நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்படும் போது பயப் படக்கூடாதுவீட்டு உபயோக ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கத் தயங்கக்கூடாது. ஆக்சிஜன் சிலிண்டர் உபயோகப்படுத்தும் போது புகைப்பிடிக்ககூடாது, வெடித்துவிடும்.தனிமை தவிர்க்கப்பட வேண்டும்மன அழுத்தம் வராமல் இருக்க மருத்துவமும் பயிற்சியும் தேவைமார்பு ,பிசியோதெரபி தேவைப்படும்போது அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் (உள்ளிருக்கும் சளியை  வெளிக்கொணர) சாப்பிட்டவுடன் படுக்கக்கூடாது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News