25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Jul 02, 2024

இயற்கையின் தங்கபஸ்பம் செம்பருத்தி பூ, இலைகள்

 ரத்த கொலஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு செம்பருத்தி பூக்கள் ,22% வரை கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.. நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்.கெட்ட கொழுப்பை இந்த செம்பருத்தி இலைகள் குறைக்கின்றன., தமனிகளின் உள்ளே, அடைப்புகளை நீக்குவதன் மூலம், கொழுப்பின் அளவை இவைகள் குறைக்கின்றன. அதேபோல, செம்பருத்தி இலையில் வைட்டமின்C நிரம்பி உள்ளதால்,இருமல்,ஜலதோஷம்போன்றபிரச்சனைகளுக்கும்நிவாரணம்கிடைக்கிறது.வெறுமனே இந்த பூக்களின் இதழ்களை மென்று சாப்பிடலாம். அல்லது இதழ்களை கழுவி, ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் இதய நோய்கள் நெருங்காது..இதயத்தில் தொந்தரவு இருந்தாலும் குணமாகும்.. டீ போலவும் தயாரித்து குடிக்கலாம்.. அல்லது செம்பருத்தி பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் சாப்பிடலாம்.உதிரப்போக்கு அதிகமாக இருக்கும்போது,செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்..அல்லது செம்பருத்தி பூக்களை விழுதாக அரைத்து,வெறும் வயிற்றில்,7 நாளைக்கு சாப்பிட்டாலும் மாதவிடாய் பிரச்சனை சீராகும்.. அல்லது இந்த பூக்களை நிழலில் உலர்த்தி, பவுடர் செய்து, காலையிலும், மாலையிலும் 7 நாட்கள் சாப்பிட்டாலும் உதிரப்போக்கு பிரச்சனை சீராகும்.,புற்றுநோயால் ஏற்பட்ட புண்களை ஆற்ற, இந்த இலைகளை அரைத்து பற்றுபோல பூசுவார்கள்..வயிறு, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி குடல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. அதனால்தான், இன்றுவரை ஆயுர்வேத மருத்துவத்தில் செம்பருத்தி இலைகள் மிக முக்கியத்தை பெற்று வருகின்றன.செம்பருத்தி இலைகளை அல்லது பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால், உஷ்ணம் விலகும்.கண் எரிச்சல், கண் நோய்கள், கண் வீக்கம், கண்களில் நீர் வடிதல்,கண்களில் கட்டி போன்ற சூட்டை கிளப்பக்கூடிய பிரச்சனைகளுக்கு இந்த தண்ணீர் அருமருந்தாகும்.. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும், நீங்கிவிடும்.உடலிலுள்ள கழிவுகளும் வெளியேறிவிடும்..ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த செம்பருத்தி பூக்கள் மிகவும் நல்லது. அதனால்,இதில் டீ தயாரித்து குடிக்கலாம். அல்லது வெறும் பூவின் இதழ்களை நீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்..அல்லது செம்பருத்தி பூக்களை பொடி செய்து வைத்து கொண்டு,சூப் போலவும் குடித்து வரலாம். இதனால் பித்தமும் நீங்கும்.தலைமுடி வறட்சியை போக்கும் செம்பருத்தி இலைகள்.

Jul 01, 2024

பூண்டுசுவாசத்தை சீராக்க உதவுகிறது

 பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு பொருள். இது பல உடல் நலப் பிரச்சினைகளைக் குணப்படுத்துவதற்கும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் மட்டுமல்லாமல், ஒப்பனை நோக்கங்களுக்காகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் தினசரி உணவில் பூண்டை சேர்த்துக்கொள்வது பல  நன்மைகளைக் கொண்டுள்ளது.பூண்டு பழங்காலத்தில் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இன்னும் சிலர் அதே நடைமுறையை பின்பற்றுகிறார்கள். பூண்டு தலையணையின் கீழ் வைக்கப்படுகிறது..பூண்டின் சக்திவாய்ந்த நறுமணம் நாசிப் பாதைகளை சுத்தமாக்கி சுவாசத்தை சீராக்க உதவுகிறது. உங்களுக்கு ஜலதோஷம் இருந்தால் இரவில் சரியாக தூங்குவதிலும் சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்படலாம். அப்படி நீங்க அவதிப்படும் போது ஒரு பல் பூண்டை எடுத்து தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இதனால், பூண்டில் உள்ள அல்லிசின், உடலைத் தாக்கும் நுண்ணுயிரிகளைத் தடுக்க உதவுகிறது. படுக்கைக்கு முன் சிறிது பூண்டு சாப்பிட முயற்சிக்க வேண்டும்.பூண்டில் மெக்னீசியம்மற்றும் பொட்டாசியம் ஆகிய இரண்டு கனிமங்கள் உள்ளன.மனிதர்களின் தரமான தூக்கத்தில் அவை முக்கிய பங்கு வகிக்கின்றன. மெக்னீசியம் ஆரோக்கியமான நிலைகளை பராமரிப்பதன் மூலம் உடல் நல்ல, ஆழ்ந்த, அமைதியான தூக்கத்தை அடைய உதவுகிறது. உடலைத் தளர்த்துகிறது, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பொட்டாசியம் தூக்க திறனை அதிகரிக்கிறது. இந்த இரண்டு சத்துக்களும் தினமும் போதுமான அளவு கிடைத்தால், படுக்கைக்கு அடியில் பூண்டுபற்களை வைக்க வேண்டிய அவசியமில்லை.பூண்டு சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. அடிக்கடி கிருமிகள் வராமல் தடுக்கிறது. உங்கள் உணவில் பூண்டு பற்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் விரைவில் நிவாரணம் பெறலாம். ஏனெனில் பூண்டில் உள்ள அல்லிசின் உடலில் உள்ள நுண்ணுயிரிகளை தடுக்கிறது. தினமும் இரவில் தலையணைக்கு அடியில் பூண்டை வைத்து தூங்கினால் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். சளி பிடித்தால், உணவில் பூண்டை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.இரவில் உறங்கும் போது சிறிய பூச்சிகள் மற்றும் கொசுக்களால் நீங்கள் தொந்தரவு செய்தால் உங்கள் தலையணையின் கீழ் ஒரு பல் பூண்டு வைக்க வேண்டும். பூண்டு பூச்சிகளுக்கு விஷம். பூச்சிகள் வராமல் இருக்கும். சிலர் பூண்டுப் பற்களை அரைத்து தண்ணீரில் போட்டு, அந்தத் தண்ணீரை பூச்சிகள் அதிகம் நடமாடும் இடங்களில் தெளிப்பார்கள். ஏனெனில் பூச்சிகளுக்கு பூண்டின் வாசனை பிடிக்காது.தூக்கமின்மைக்கான மற்றொரு எளிய பூண்டு மருந்து பூண்டு பால் செய்து குடிப்பது. இந்த பாலை தயார் செய்ய,1 கப் பாலை நன்கு கொதிக்க வைத்து, அதில் சில பல் பூண்டு சேர்த்து,3 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சிறிது தேன் சேர்த்து குடிக்கவும்.மன அமைதிக்கு பூண்டு மிகவும் உதவும்.

Jun 28, 2024

சுகர்குறைய வெந்தயம்எந்த அளவுக்குதேவை?

வெந்தயம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று கூறப்படுகிறது. ஆனால் எந்த அளவு எடுத்துகொள்ள வேண்டும் இதில் கேலக்டோமான் என்ற கார்போஹைட்ரேட் வகை உள்ளது. செபோனின்ஸ் என்று சொல்லக்கூடிய சில முக்கியமான வேதியல் விஷயம் இருக்கிறது.4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் இந்த மூன்றும்தான் இதன் பயன்களுக்கு காரணம்.4 ஹைட்ராக்ஸி ஐசோலியூசின் என்பது இன்சிலினை உடல் எடுத்துகொள்ளாமல் இருக்கும் தன்மையை இது குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மெட்போர்மின் மாத்திரைகளுக்கு  நிகரானபயன்கள் வெந்தயத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இதற்கு நிகராக பயன்கள் பெற20 முதல்25 கிராம் வெந்தயத்தை நாம் எடுத்துகொள்ள வேண்டும். இந்நிலையில் இந்த அளவிற்கு எடுத்துகொண்டால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு பலன் கிடைக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது.இதில் உள்ள கோலக்டோமான் பசியை கட்டுப்படுத்தும் திறமை கொண்டது. சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துகொண்டால் அதிகமாக சாப்பிடாமல் இருப்பார்கள். இதனால் உடல் எடை குறையும். மெட்போர்மின் மருந்து என்பது ஆரம்பநிலை சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அதிகமான சர்கக்ரை இருந்தால் அவர்களுக்கு இந்த மெட்போர்மின் மாத்திரைகள் வேலை செய்யாது.எச்பிஏ1சி  அளவு8 அல்லது9க்கு அதிகமாக உள்ளவர்களுக்கு வெந்தயம் பயன்தராது. ரொம்ப அதிக அளவு சர்க்கரை இருப்பவர்களுக்கு வெந்தயம் பயன்தராது.அதிகம் உடல் பயிற்சி அல்லது விளையாட்டில் ஈடுபடும் நபர்களுக்கு தசைகளில் இருக்கும் கிளைக்கோஜன் தீர்ந்துவிடும். இந்நிலையில் இவர்கள் வெந்தயம் எடுத்துகொண்டால், இந்த கிளைக்கோஜன் தசைகளில் மீண்டும் உருவாகும் வேகத்தை இது அதிகரிக்கும். இதுபோல விளையாட்டு வீரர்கள்10 முதல்15 கிராம் வரை எடுத்துகொண்டால் நன்றாக அதிக நேரம் விளையாட முடியும்.கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புக்கு வெந்தயம் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் எலிகளுக்கு நடத்திய சோதனையில்தான் இது நிரூபனமாகியிருக்கிறது. மனிதர்களிடத்தில் இன்னும் ஆய்வு நடத்தப்படவில்லை. மாதவிடாய் நின்று போன பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படும். இதற்கு வெந்தயம் சாப்பிடால் தீர்வாக இருக்கும். ஆண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைக்கும் இது தீர்வாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

Jun 21, 2024

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி

உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைஅனைவராலும் மிகவும் விரும்பப்பட கூடிய காய்கறி இதை அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வழிகளில் சமைத்து சாப்பிடலாம். இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் அத்தியாவசிய கொழுப்புகள் முழுவதுமாக நிரம்பி இருக்கின்றன.உருளைக்கிழங்கு உங்கள் சரும பராமரிப்புக்கு பெரிதும் உதவுகின்றன. சரும நிறத்தை வெண்மையாக மாற்றுவதிலிருந்து உடல் ஆரோக்கியம் வரை உருளைக்கிழங்கில் பல சிறந்த நன்மைகள் இருக்கின்றன. உருளைக்கிழங்கு அதிக மாவுச்சத்து நிறைந்த வேர் காய்கறி. இதில் நம் உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துக்களின்மூலமாகதிகழ்கிறதுகார்போஹைட்ரேட்டு என்றவுடன் உடல் எடையை அதிகரிக்கும் என தவிர்க்கும் மக்களும் அதிகரித்திருக்கிறார்கள். உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட்டுகளின் வளமான ஆதாரம் என்பது உண்மை தான், ஆனால் அவை உடலுக்கு தேவையான ஆற்றலின் முக்கிய ஆதாரமாக விளங்குகின்றன. அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு முக்கியம் என்பதால் இதை தவிர்ப்பது தவறு. அளவோடு உணவில் சேர்த்து கொள்வது நன்மை பயக்கும். நார்ச்சத்து உருளைக்கிழங்கும் நார்ச்சத்துகளின் நல்ல மூலமாக இருப்பதால், இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது.நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு மற்றும் குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை குறைப்பதில் தொடர்புடையது.. உருளைக்கிழங்கில் வைட்டமின் சி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி9 (ஃபோலேட்) உள்ளிட்ட பல வைட்டமின்களின் நல்ல ஆதாரமாக விளங்குவதோடு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல தாதுக்களின் சிறந்த மூலமாக திகழ்கிறது. நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுதல், காயங்களை குணப்படுத்துதல், எலும்புகளை வலிமையாக்குதல் மற்றும் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல், போன்ற உடல் செயல்பாடுகளுக்கு அவசியமாகின்றன. செல்கள் மற்றும் உறுப்புகள் அவற்றின் வேலையைச் செய்ய உதவுகின்றன. உருளைக்கிழங்கில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உட்பட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றன. அவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் செல்களில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்து, ஆக்ஸிஜனேற்றத்தால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பது அல்லது குறைப்பது போன்ற செயல்பாடுகளை செய்கின்றனர்.

Jun 18, 2024

தொற்றுக்களைதுரத்தும் மணத்தக்காளி பழங்கள்

மணத்தக்காளிகீரை செடியில் உள்ள சிறிய பழங்கள்மணத்தக்காளி பழங்கள். இவை பார்க்க சிறியதாகஇருந்தாலும் இனிப்பு சுவையில்இருக்கும்..நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது எங்கோ வெளியிடங்களில் படர்ந்திருக்கும் மணத்தக்காளி கீரை செடியில் உள்ள கருப்பும், பிரவுனுமான மணத்தக்காளி பழங்கள்.ஆங்கிலத்தில்பிளாக்நைட்ஷேட்என்றுஅழைக்கிறார்கள்.மணத்தக்காளி பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் எதிர்ப்பாற்றலை பன்மடங்கு பலப்படுத்துகிறது. தொற்று கிருமிகளுக்கு எதிராக போராடுகிறது. வாழ்க்கையை மாற்றும் தொற்றுக்களையும் பறந்தோடச் செய்கிறது.இதில் உள்ள அழற்சிக்கு எதிரான குணங்கள், அழற்சி மற்றும் வீக்கத்தை உடலில் இருந்து அகற்றுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் ஆர்த்ரடிஸ், சிறுநீரக நோய்கள், குடல் வீக்கம் மற்றும் அழற்சி போன்ற பிரச்னைகள் தீர்கிறது.மணத்தக்காளி பழம் கல்லீரல் பிரச்னைகள் கொண்டவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே கூறலாம். இதில் உள்ளஹெப்டோபுரொடக்டிவ் குணங்கள் உடல் கழிவுநீக்கம் செய்வதற்கு உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.இந்தியாவில் புற்றுநோய் குறித்த அச்சம் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த மணத்தக்காளி பழத்தில் உள்ள புற்றுநோய்க்கு எதிரான குணங்கள், புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுக்கிறது. அது டியூமர் உருவாவதையும் தடுக்கிறது.இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் மற்றும் ஃபினோலிக் கூறுகள், உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. செல்களில் ஃப்ரீ ரேடிக்கல்கள் ஏற்படுத்தும் சேதத்தையும் இது தடுக்கிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்துக்கள்மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள், உங்கள் கண்பார்வை திறனை அதிகரிக்கிறது. கண் ஆரோக்கியம் மற்றும் வயோதிகத்தால் ஏற்படும் பார்வை இழப்பு ஆகியவற்றை சரிசெய்கிறது.ரத்த அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டும் இந்தியர்களை அச்சுறுத்தும் உடல் கோளாறுகள். மணத்தக்காளி பழத்தில், உள்ள ஹைப்போகிளைசெமிக் கூறுகள், நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது.அதிக கொழுப்புதான் பல்வேறு உடல் உபாதைகளுக்கு வாசலாக அமைகிறது. இந்த ஆயுர்வேத உணவு, ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தி, ரத்தத்தில் கொழுப்பை குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.ஆரோக்கியமற்றகுடல்மற்றும்போதியசெரிமானமின்மையால்தான்உடலில் பல்வேறு வியாதிகள் ஏற்படுகிறது. மணத்தக்காளி பழங்களில் உள்ள செரிமான என்சைம்கள், மலச்சிக்கலை போக்க உதவுகிறது. செரிமானமின்மை மற்றும் மற்ற வாயுத்தொல்லைகளில் இருந்தும் குணப்படுத்துகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கியமருந்தாகபயன்படுத்தப்படுகிறது. இதன்எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்காகஇந்தப்பழம் கொண்டாடப்படுகிறது. இதன்அளவோ சிறியது, ஆனால்பலனோ பன்மடங்கு பெரியது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கிய மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

Jun 17, 2024

வயிற்றை சுத்தமாக வைத்து, கழிவுகள் நல்லமுறையில் வெளியேற....

நாம்உண்ணும் உணவுகள்செரிமானமாகி சத்துக்கள்உறிஞ்சப்பட்ட பின்,கழிவுகள் நல்லமுறையில் வெளியேறும்வரை உண்டானசெயல்களில் சம்பந்தப்பட்டிருக்கும் இரைப்பை,சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல்போன்ற பல்வேறுஉறுப்புகளின் தொகுப்பையேநாம் ஜீரணமண்டலம் என்றுகூறுகிறோம். ஜீரணமண்டலத்தின் செயல்பாடுகள்சிறப்பாக அமையநாம் அதன்உறுப்புகளை சுத்தமாகவும்ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதுஅவசியம். அதற்கானஐந்து வழிமுறைகளை இந்தப்பதிவில் பார்ப்போம்.ஒரு நாளைக்கு மூன்று முறை உணவு உண்பது மற்றும் வாரத்தில் ஒன்றிரண்டு முறைஉண்ணா நோன்பை கடைப்பிடிப்பது உள்ளிட்ட சுழற்சி முறையைப் பின்பற்றுவது நலம் தரும். உணவைத் தவிர்த்து நோன்பிருக்கும் நேரங்களில் ஜீரண மண்டலம் ஓய்வெடுக்கவும், உள்ளிருக்கும் சிறு சிறு சிதைவு போன்ற கோளாறுகளை நிவர்த்தி செய்யவும் வாய்ப்பு ஏற்படுகிறது.பல வகை உணவு வகைகளை சேர்த்து உட்கொள்ளும்போது செரிமானக் கோளாறு ஏதுமின்றி ஜீரணம் சிறப்பாக நடைபெறும்; ஊட்டச் சத்துக்களும் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படும்.உணவுகளை வாயில் இட்டதுமே அப்படியே விழுங்கி விடாமல், பற்களின் உதவியால் உணவை நன்கு மெல்ல வேண்டும். அப்போது உமிழ் நீர் அதிகளவு சுரக்க ஆரம்பிக்கும். அதிலுள்ள என்சைம்களுடன் உடைக்கப்பட்ட உணவுகள் கலந்து செரிமான செயல்பாடு வாயிலிருந்தே ஆரம்பமாகி விடுகிறது.பித்த நீர் மற்றும் வயிற்றில் சுரக்கும் ஒரு வகை அமிலம் ஆகியவை உணவுகளை உடைக்கவும், ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும் உதவுபவை. இதுபோன்ற திரவங்களின் உற்பத்தியை கசப்பு சுவை கொண்ட உணவுகள் அதிகரிக்கச் செய்கின்றன. ஆகையால், பாகற்காய், காலே போன்ற காய்களையும் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வது ஜீரண மண்டலம் நன்கு செயல்பட உதவியாக இருக்கும்.வயிற்றை சுற்றி நன்கு கைளால் மசாஜ் செய்வது நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கக்கூடியது. இப்படி மசாஜ் செய்வதால் வயிற்றிலுள்ள வாயு வெளியேறும்; வீக்கம் குறையும்; செரிமானப் பாதையில் உள்ள தடங்கல்கள் நீங்கி, குடல் இயக்கம் ஒழுங்காக நடைபெறும்.

Jun 15, 2024

கற்றாழை சாற்றின் முக்கிய நன்மைகள்

கற்றாழை சாற்றின் முக்கிய நன்மைகளில் ஒன்று, செரிமானத்தை மேம்படுத்தும் அதன் சக்திவாய்ந்த திறன் ஆகும். அதன் அடக்கும் தாக்கம் அமிலத்தன்மை மற்றும் வீக்கத்தை எளிதாக்குகிறது, உங்கள் குடலின் ஒட்டுமொத்த நல்வாழ்வை வளர்க்கிறது. ஜூஸ் என்சைம்களால் நிரம்பியுள்ளது, இது சர்க்கரைகள் மற்றும் கொழுப்புகளைப் பிரிக்க உதவுகிறது, உங்கள் செரிமான பயணத்தை சீராக்குகிறது.கற்றாழை சாறு உங்கள் உடலை போதுமான அளவு நீரேற்றமாக வைத்திருப்பதற்கான ஆதாரமாக உள்ளது, மேலும் காலையில் அதை முதலில் குடிக்கும்போது. நீரிழப்பைத் தடுப்பது ஆரோக்கியமான சருமம், உகந்த உடல் வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் இயல்பான உடல் செயல்பாடுகளை உறுதி செய்கிறது. ஒரு கிளாஸ் கற்றாழை சாறு உங்கள் நாளுக்கு நீரேற்றம், ஊக்கமளிக்கும் தொடக்கத்தை அளிக்கும்.ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த, கற்றாழை சாறு உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஒரு சக்திவாய்ந்த டானிக்கை நிரூபிக்கிறது. இந்த சாற்றின் வழக்கமான பயன்பாடு நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக உங்கள் உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை அதிகரிக்கிறது. இது ஒட்டுமொத்த நோயெதிர்ப்பு செயல்திறனை மேம்படுத்துகிறது, உங்களை கண்டிஷனாகவும் வலுவாகவும் வைத்திருக்கும்.அலோ வேரா அதன் சருமத்தை செறிவூட்டும் நன்மைகளுக்கு புகழ்பெற்ற நற்பெயரைக் கொண்டுள்ளது. இதை ஒரு ஜூஸாக உட்கொள்வது சரும ஆரோக்கியத்தை உள்ளிருந்து கூட வளர்க்கும். அதன் ஈரப்பதமூட்டும் குணங்கள் தோல் நெகிழ்வுத்தன்மையைத் தக்கவைத்து, வீக்கத்தைக் குறைத்து, உங்கள் நிறத்தை அழிக்கிறது. இது உங்கள் சருமத்தை வளர்ப்பதற்கும், பளபளப்பான பளபளப்பைப் பெறுவதற்கும் இயற்கையால் வழங்கப்பட்ட வழிமுறையாகும்.உங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க நீங்கள் இலக்கு வைத்திருந்தால், கற்றாழை சாறு உங்கள் உணவில் ஒரு விவேகமான கூடுதலாக இருக்கும். சாறு வளர்சிதை மாற்றத்தில் உதவுகிறது, கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கிறது. கற்றாழை சாற்றை உங்கள் காலைப் பழக்கத்தில் அறிமுகப்படுத்துவது உங்கள் எடைக் கட்டுப்பாட்டு லட்சியங்களைத் தூண்டும்.இது நச்சுகள் மற்றும் அசுத்தங்களை முழுமையாக சுத்தப்படுத்த உதவுகிறது. இது கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் கழிவுகளை அகற்ற உதவுகிறது, அனைத்து நச்சுத்தன்மையையும் ஊக்குவிக்கிறது. கற்றாழை சாறு தேவையான பொருட்கள்-அலோ வேராசெடி(காற்றாலை செடி,தண்ணீர்,தேன்,எலுமிச்சை சாறுசெய்முறை-செடியிலிருந்து கற்றாழை இலையை வெட்டுங்கள்.வாழைப்பழத்தை உரிப்பது போல் கற்றாழையின்மேல் அடுக்கை அகற்றவும்.ஒரு ஸ்பூன்எடுத்து புதிய அலோவேரா ஜெல்லை வெளியேஎடுக்கவும்.கற்றாழை ஜெல்லைஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீரில் ஒரு முறை அலசவும்.இவ்வாறு செய்வதன்மூலம் கற்றாழை கசப்புதன்மையை இழக்கும்.ஒரு கிரைண்டரில்கற்றாழை ஜெல் மற்றும்சிறிது தண்ணீர் சேர்க்கவும்.ஒரு பாத்திரத்தில்எடுத்து, சுவைக்கு ஏற்ப தேன் சேர்க்கவும்.எலுமிச்சம் பழச்சாறு பிழிந்தால் கற்றாழை சாற்றின் சுவை அதிகரிக்கும்.சக்தி வாய்ந்தகற்றாழை ஜூஸ் தயார்.இதை அப்படியேசாப்பிடலாம்.கற்றாழை அதன் மூலிகைத் தன்மைக்கு பெயர் பெற்றிருந்தாலும், தவறான அளவு மற்றும் தவறான வழியில் உட்கொள்ளும்போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும். புதிதாக தயாரிக்கப்பட்ட கற்றாழை சாற்றை உங்கள் தினசரி காலை வழக்கத்தில் சேர்ப்பது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

Jun 14, 2024

எல்லா வகை சத்துக்களும் ஒன்றாகச் சேர்ந்திருக்கின்ற கொய்யாப்பழம் .

பழங்கள்தினமும்சாப்பிடவேண்டும்.பழங்களில்ஊட்டச்சத்துக்கள்அதிகமாகஇருக்கும்.குறிப்பாகவைட்டமின்கள், மினரல்கள், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்து இருக்கின்றன.இயற்கையான சர்க்கரையும் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்ட்டுகளும் பழங்களில் இருக்கின்றன. அதனால் தினசரி உணவில் காய்கறிகளுக்கு இணையாக பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகமாக கொய்யாப்பழம் விளைவிக்கப்படுகிறது. கொய்யா பார்க்க சிறியதாகவும் நன்மைகள் பெரியதாகவும் இருக்கும் ஒரு பழம். மிக எளிமையாகவும் மலிவாகவும் கிடைப்பதாலேயே கொய்யா பழத்தை நாம் பெரிதாக மதிப்பதே இல்லை..கொய்யா பழத்தில், ஆரஞ்சு பழத்தை விட நான்கு மடங்கு அதிகமாக வைட்டமின் சி கொய்யாவில் இருக்கிறது.பப்பாளியை விட மூன்று மடங்கு நார்ச்சத்தும் மாதுளையில் உள்ள புரதத்தை விட இரண்டு மடங்கு புரதமும் இதில் இருக்கிறது. அதேபோல வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியமும் இருக்கிறது.அதோடு லைகோபின் என்னும் ஆற்றல் வாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் தக்காளியை விடவும் 2 மடங்கு அதிகமாக இருக்கிறதுஉடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஆப்பிளை அதிகமாக சாப்பிடுவார்கள். ஆனால் அதைவிட அதிகமாக கொய்யாப் பழம் உதவும். கலோரிகளும் குறைவு.100 கிராம் கொய்யாப்பழத்தில் 68 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன. நீர்ச்சத்து 81 கிராம் இருக்கிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க மிகப்பெரிய அளவில் உதவி செய்யும்.கொய்யாப் பழத்தில் நார்ச்சத்து மிக மிக அதிகம். 100 கிராம் கொய்யா பழத்தில் இருந்து மட்டும் கிட்டதட்ட 5.6 கிராம் நார்ச்சத்து கிடைக்கும்.இந்த நார்ச்சத்து மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படுகிற மலச்சிக்கல் பிரச்சினையைக் குறைக்க முடியும்.வைட்டமின் சி கொய்யாப் பழத்தில் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரஞ்சு பழத்தைக் காட்டிலும் அதிகம்.100 கிராம் கொய்யாவில் இருந்து 228.3 மில்லி கிராம் அளவு வைட்டமின் சி கிடைக்கும். இது நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரித்து, நோய்த் தொற்றுக்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ- வும் அதிகமாக இருக்கிறது. அதனால் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.பெரியவர்களுக்கு வயதாகும் போது வரும் கண்புரை வராமல் தடுக்கும். கண்புரை அறுவை சிகிச்சையே தேவைப்படாது.100 கிராம் கொய்யா பழத்தில் 417 மில்லி கிராம் பொட்டாசியம் இருக்கிறது. இது வாழைப்பழத்தில் இருப்பதை விடவும் இரண்டு மடங்கு அதிகம்.அதனால் இந்த பொட்டாசியம் நிறைந்த கொய்யாப் பழத்தை தினசரி சாப்பிடுகிறவர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சினையே வராது. ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் கட்டுக்குள் வரும்.

Jun 11, 2024

வலிகளைகுணமாக்கும் சிறந்தமூலிகை நொச்சி இலை

நீர்வளம் உள்ள இடங்களில் தானே வளரும் இயல்புடையது நொச்சி. இதன் இலை, பூ, வேர், பட்டை ஆகியவை கருப்பு நிறமாய் அமைந்த கருநொச்சி எல்லா இடங்களிலும் அரிதாக காணப்படுகின்றது. இலை வேதனை தணித்தல், சிறுநீர்ப் பெருக்குதல், நோய் நீக்கி உடல் நலம் மிகுத்தல், மாதவிலக்கைத் தூண்டுதல், நுண்புழுக்கொள்ளுதல் ஆகிய பண்புகளை உடையது. பட்டை சுரந் தணிந்து உடலை வலுவாக்கும்.நொச்சி இலை சாற்றுடன் மிளகுத்தூளும் சிறிது நெய்யும் கலந்து காலை, மாலைபத்தியத்துடன் சாப்பிட்டு வர மூட்டு வலி, இடுப்பு வலி, வாத வீக்கம் ஆகியவை தீரும். நொச்சிவேர் பட்டையை உலர்த்தி பொடித்து அதை தேனில் குழைத்து கொடுத்து வர வாத பிடிப்பு, நரம்புவலி, வயிற்று வலி, நீர்க் கோவை ஆகியவை தீரும். நொச்சிஇலையுடன் பாதியளவு மிளகு சேர்த்தரைத்து சுண்டைக்காய் அளவு காலை மாலை கொடுத்து வர குளிர் சுரம், செரியாமைஉடம்பு வலி, கை கால் பிடிப்பு ஆகியவை தீரும். நொச்சி, வேம்பு, தழுதாழை, ஆடாதொடை, தும்பை, நாயுருவி, குப்பைமேனி, வேலிப்பருத்தி இவைகளை ஒரு கைப்பிடி எடுத்து முக்கால் அளவு நீர் உள்ள வாய் அகன்ற மண்கலத்தில் இட்டு கொதிக்க வைத்துஆவி  பிடிக்க, வாத நோய்கள் தணியும். வாரம்இரு முறை பயன்படுத்தலாம். நொச்சி இலையை நீரிலிட்டு காய்ச்சி வாத வீக்கம் உள்ள இடங்களில் வேது பிடிக்க குணமாகும். இலையைவதக்கி துணியில் கட்டிக்கொண்டு ஒத்தடம் கொடுக்க கீழ்வாதம், வாதவீக்கம் ஆகியவை குணமாகும். நொச்சியிலையை இடித்து பிழிந்து வடிகட்டிய சாற்றுடன் சமன் அளவு கோமியம் கலந்து பருகி வர கல்லீரல், மண்ணீரல்வீக்கம் குணமாகும். இலையை தலையணையாக பயன்படுத்தி வர மண்டை இடி, கழுத்து வீக்கம்,பிடரிவீக்கம், சன்னி, இழுப்பு, மீக்கடைப்பு ஆகியவை தீரும். நொச்சிப்பூவை உலர்த்தி பொடித்து கற்கண்டு கலந்து காலை,மாலைதேனில் கொடுத்து வர ,ரத்த வாந்தி, இரத்தபேதிஆகியவை தீரும். நொச்சிஇலை, மிளகு, கிராம்பு, பூண்டு பல் ஆகியவற்றை வாயிலிட்டு மென்று சுவைத்து சாரத்தை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால் ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத்திணறல் தீரும். இம்முறையைநீடித்துப் பயன்படுத்த நோய் முற்றிலும் அகலும். நொச்சிஇலையை மென்மையாய் அரைத்து பற்று போட கட்டிகள் வீக்கங்கள் தீரும்.நொச்சி வேரை இடித்து நீரிலிட்டு பாதியாக சுண்ட காய்ச்சிக் குடித்து வர, சிறுநீர்ப்பை அலர்ஜி தீர்ந்து, சொட்டுமூத்திரம், நீர்க் கடுப்பு, வயிற்று மழப் புழுக்கள் ஆகியவை தீரும்.இந்த மருத்துவ குறிப்புகளை பயன்படுத்தும் பொழுது இதற்கான வைத்தியருடன் ஆலோசனை கேட்டால், அளவு முறையிலிருந்து அனைத்தையும் பக்குவமாக எடுத்துரைப்பார்கள் .அதன்படி பயன்படுத்தினால் நிவாரணம் கிடைக்கும் .

Jun 10, 2024

சர்க்கரை வள்ளிக்கிழங்கின் நன்மைகள் ,பிரச்சனைகள்

அளவுக்கு அதிகமான சத்துக்களை கொண்டது சர்க்கரை வள்ளிக்கிழங்கு.. ஒருசிலருக்கு இந்த கிழங்கு அலர்ஜியை தந்துவிடும். வைட்டமின்A,D,C,B6 பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து என நிறைய சத்துக்களை கொண்டது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு. நிறைய வைட்டமின்கள் இருப்பதால்தான், செரிமான கோளாறுகளை இந்த கிழங்கு சீர்செய்கிறதுஇதயநோய், மாரடைப்பு போன்ற ஆபத்திலிருந்தும் நம்மை காக்கிறது..இதிலுள்ள வைட்டமின்D, நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்க துணை புரிகிறது. எலும்புகளை உறுதிப்படுத்த உதவுகிறது. இதனால், பற்கள், நரம்புகளின் ஆரோக்கியத்துக்கு பேருதவி புரிகிறது. அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் எதிராக போராட தூண்டக்கூடியது இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்குகள். உள்ளுறுப்புகளில் ஏற்படும் சில புற்றுநோய் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.. நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடலிலுள்ள நச்சுகள், கழிவுகளை வெளியேற்றுகிறது.. வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதில், சர்க்கரைவள்ளி கிழங்கின் முக்கியத்துவம் அதிகமானது..குளிர்காலங்களில் இந்த கிழங்கை சாப்பிடுவதால், நம்முடைய சருமம் பாதுகாக்கப்படும்.. தோலில் அலர்ஜிஅரிப்புகள் ஏற்பட்டால், சர்க்கரை வள்ளிக்கிழங்கை மருந்தாக பயன்படுத்தலாம்.இந்த கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து, அதனுடன்3 மடங்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பேஸ்ட் போல கலந்து, அரிப்பு உள்ள இடத்தில் தடவினாலே நிவாரணம் கிடைக்கும்.உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இநத் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சிறந்த உணவு நார்ச்சத்து, ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இருப்பதால், அவை உடலில் உறிஞ்சப்படுவதில்லை. கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக இதுபோன்ற ஸ்டார்ச் எதிர்ப்பு கொண்ட உணவுகளை சாப்பிடுவது கொழுப்பை எரிக்கும் செயல்முறையை அதிகமாக துரிதப்படுத்தும்.பசியையும் கட்டுப்படுத்திவிடும்.சர்க்கரை நோய் இருப்பவர்களும் இந்த கிழங்கை டாக்டர்களின் அனுமதியை பெற்று அளவாக சாப்பிடலாம். ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் இதிலிருந்தாலும்,கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவையும் அதிகரிக்காது.பிறந்த குழந்தைகள்7 மாதங்களில் இருந்து உணவு கொடுக்க துவங்கும்போது, இந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் மசித்து தரலாம்.குழந்தைகள் வளர்ந்த பிறகும் குடல் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.குழந்தையிலிருந்தே இந்த கிழங்கை சாப்பிட தந்தால், குடலுக்கும் அது பழகிவிடும்.சர்க்கரைவள்ளி கிழங்கில், பொட்டாசியம் சத்து நிறைய உள்ளதால், இதை அதிகமாக சாப்பிடும்போது,பொட்டாசியத்தின் அளவு அதிகரித்து மாரடைப்பு போன்ற இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரும்.  சர்க்கரைவள்ளி கிழங்கில் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளதால், இதை அதிகமாக சாப்பிட்டால்,சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். கல்லீரல் சிறுநீரகத்தில் பிரச்சனை ஏற்கனவே இருப்பவர்களும் இதை தவிர்த்துவிடலாம். நிறைய நார்ச்சத்து இருப்பதும், செரிமான கோளாறினை உண்டுபண்ணிவிடும். இந்த கிழங்கை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது,முடி, புருவங்களில் உள்ள முடி உதிர்தல்,வெடிப்புற்ற உதடு, வறண்ட சருமத்தை தந்துவிடும்.சிலசமயம் கல்லீரல் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News