25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

May 11, 2024

கொடியில் படரும் வெற்றிலை பூப்பது, காய்ப்பது, கனிவது என்று எதுவும் இல்லாத வெறும் இலைதான்

வெறும் இலையிலேயே அவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன..வெற்றிலையை ஆற்றுப்படுகையில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சிறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றிலை ஆகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெற்றிலை சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தை தூண்டும், நாடி நரம்பை வளமாக்கும், வாய்நாற்றம் போக்கும், வெற்றிலைச் சாறு சிறுநீரை பெருக்குவதற்குப் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.கம்மாறு வெற்றிலை சாறு15 மில்லிஅளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிறுஉப்புசம், மந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.வெற்றிலையில் சிறிதுஆமணக்கு எண்ணெய் தடவி லேசாகவாட்டி இரவில் தூங்கும்போது கட்டிகளின் மேல்வைத்து கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ்வெளிப்படும்.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன்கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.வெற்றிலைச் சாறுநான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். வெற்றிலைகள் இரண்டைகிள்ளி தேங்காய் எண்ணெயில் போட்டுகாய்ச்சி இறக்கி ஆறிய பின்இரண்டு சொட்டு எண்ணெய் காதில்விட காதில் சீழ் வடிதல்குணமாகும்.வெற்றிலை சாற்றைமூக்கில் விட, விடாமல் மூக்கில் வழியும் சளி குணமாகும்.வெற்றிலையின் வேரைசிறிதளவு எடுத்து வாயிலிட்டு மென்றுவர குரல் வளம் உண்டாகும். எனவே, இசைக்கலைஞர்கள் இதனைஅதிகம் பயன்படுத்துகிறார்கள்.நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாறும்இஞ்சிச் சாறும் சம அளவுகலந்து அருந்தி வர நன்மைஏற்படும்.அஜீரணத்தைப்  போக்கிபசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகுசேர்த்து கஷாயம் செய்து குடித்து வரலாம்.வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து சுடுதண்ணீரில்போட்டுகொதிக்கவைக்கவும்.பின்னர் மூன்றையும் எடுத்து நன்றாக சாறு பிழிந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க நெஞ்சு சளி அப்படியே கரைந்து விடும். பெரியவர்களும் சற்று அளவு அதிகமாக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.ஒரு வெள்ளைப் பூண்டு பல்,5 வெற்றிலை காம்புகள் அதே அளவு2 சிட்டிகை திப்பிலி மூன்றையும் அரைத்து உள்ளுக்கு காலை, மாலை கொடுக்க குழந்தைக்கு சளி குறையும்.இரண்டு வெற்றிலையை நசித்து சாறெடுத்து சிறிதளவு கஸ்தூரி கலந்து காலை ஒரு வேளை மட்டும் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தையின் வாந்தி நின்று விடும்.வெற்றிலையை அரைத்து கீழ்வாத வலிகளுக்கும் வீக்கம் முதலியவற்றுக்கும் வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து பத்து மாத குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.காரமுள்ள கருப்பு வெற்றிலை பத்து எடுத்து நைசாக அரைத்து காலை, மாலை சருமத்தில் இரண்டு நாள் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு நீங்கும்.கஸ்தூரி சிறிதளவு ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வர இதய வலி குணமாகும்.இரண்டு வெற்றிலையை வாங்கி வாயில் அதக்கி வைத்துக்கொண்டு சாரத்தை விழுங்கிக்கொண்டே இருக்க எப்பொழுது பிரயாணம் செய்தாலும் வாந்தி வராது.

May 10, 2024

லிவருக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் 

 கல்லீரல்.உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் உறுப்பு .உப்பில் சோடியம் உள்ளது. அளவிற்கு அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்கி, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.மைதா தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் என எதுவுல் இல்லாதது இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது.இதனால், உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.சர்க்கரை கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.தினமும் ஆல்கஹால் அருந்தினால், அது கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்

May 09, 2024

ரோஜா குல்கந்து நன்மைகள்

ரோஜாமலரிலிருந்துதயாரிக்கப்படும்மருத்துவகுணமிக்கஉணவுப்பொருள்தான்குல்கந்து.மணம்தரும்பொருளாகஉணவுப்பதார்த்தங்களில்சேர்த்துசமைப்பதால்சுவையோடுஆரோக்கியமும்மேம்படுகிறது. இதில்அரோமேட்டிக்வோலடைல்ஆயில், டானிக்ஆசிட், காலிக்ஆசிட்போன்றவைஅடங்கியுள்ளன.ரோஜா குல்கந்து துவர்ப்பு சுவையுள்ளதால் இரத்தக் குழாய்க்கும், இதயத்திற்கும் கல்லீரலுக்கும் வலிமையூட்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.வயிற்றின் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. செரிமானம் சீரான முறையில் நடைபெற உதவுகிறது. பசியைத் தூண்டி குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. வயதானவர்களின் வாய்வுத் தொல்லையை போக்குகிறது. குல்கந்தை வெந்நீருடன் அருந்த மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகி இருப்பதை போக்குகிறது.வெந்நீருடன் கர்ப்பிணிகள் இதை சாப்பிட, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் பலவீனம், சோர்வையும் இது போக்குகிறது. இது சிறுநீரகக் கடுப்பை குணமாக்கும். நன்னாரி சர்பத்துடன் குல்கந்து சேர்த்து கலந்து அருந்த உடல் வலிமையாகும். உடல் அரிப்பு மற்றும் வெப்ப நோய்களை இது விரட்டுகிறது.கொப்புளங்கள், நாப்கின் பயன்பாட்டால் வரும் புண்கள், சரும அரிப்பு போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரோஜா குல்கந்து பருகும் பானங்கள் மற்றும் உணவுகளில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் இதில் நிறைந்துள்ளன.அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு அவிபத்திகர சூரணம் என்ற ஆயுர்வேத மருந்துடன் குல்கந்து சேர்த்து சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும். குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி சரும பளபளப்பைத் தருகிறது.வியர்வையால் உண்டாகும் வாடையைப் போக்குகிறது. உடல் உஷ்ணம் உள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும். அவர்கள் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பெருகி ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்.பலவிதங்களில் பயன்படும் குல்கந்தை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் கிடைக்கப்பெற்ற ரோஜா இதழ்கள்200 கிராம், பெரிய கற்கண்டு100 கிராம் மற்றும் தேன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இதனை பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவு, சிறியவர்கள் 1 டீஸ்பூன் அளவும் சாப்பிடலாம்

May 06, 2024

வெங்காயத் தண்ணீரை நாம் குடிக்கும்போதுகிடைக்கும்ஆரோக்கியநன்மைகள்!

அன்றாட உணவில் உபயோகித்து வரும் வெங்காயத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்C, வைட்டமின்B6, பொட்டாசியம், ஃபொலேட் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை நாம் குடிக்கும்போது, மேலே கூறிய அனைத்து ஊட்டச் சத்துக்களாலும் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கிய பானம் . இந்த பானத்தை அருந்துவதால்  பல நன்மைகள்உடலுக்குக் கிடைக்கும் .ஆனியனில் குர்செடின்(Quercetin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடம்பிலுள்ள ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின்C சத்தானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடிகிறது. உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணமடையச் செய்ய முடிகிறது..ஆனியன் வாட்டர் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் செய்யும். இதை உணவுக்கு மணமூட்டவும், சூப், சாலட், ஸ்டூ மற்றும் மரினேட் செய்வதற்கும் உபயோகிக்கலாம்.ஆனியனை சமைக்காமல் உட்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.ஆனியனில் பிரிபயோட்டிக் ஃபைபர் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.ஆனியன் வாட்டர் அருந்துவது தினசரி குடிக்க வேண்டிய நீரின் அளவு சமநிலைப்படவும், உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவும். ஆனியன் குறைந்த அளவு கலோரி கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் கலோரி அளவு அதிகரிக்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியும். சர்க்கரை சேர்த்த பானங்களுக்குப் பதிலாக ஆனியன் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.ஆனியன் வாட்டர் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றம் தருவதைத் தடுக்கவும்,  அப்பழுக்கற்ற சுத்தமான மேனி வண்ணம் பெறவும் உதவி செய்கின்றன.

May 04, 2024

தாமரை விதை “மக்கானா “

மக்கானா, தமிழில் தாமரை விதை என்று அழைக்கப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து காரணமாக பலரும் இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எப்படி சாப்பிடுவது, இன்னும் சுவையான உணவாக இதை எப்படி உட்கொள்வது .மக்கானாவை வறுத்து பவுடர் போல் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் பாலில் கொதிக்க வையுங்கள். க்ரீமியாக கிடைக்கும். பின் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை கட் செய்து அதன் மேல் பாதாம் நட்ஸுகளை தூவுங்கள். பின் அதன் மேல் அப்படியே தேனை ஊற்றுங்கள். இப்போது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த வாய்க்கு ருசியான உணவாகிவிட்டது.வறுத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அதோடு கோஸ் இலைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் டிரெஸ்ஸிங் க்ரீம்கள்( தயிர் அல்லது பனீர் அரைத்து சேர்க்கலாம்) சேர்த்து கலந்துவிட சுவையான மக்கானா சாலட் தயார். பனீர், சிக்கன், சோயா, வேக வைத்த பயிர் வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.வறுத்த மக்கானாவில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் ஸ்பைசி சாட் பொடிகள் சேர்த்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாப்பிடலாம். கூடுதல் க்ரஞ்சி சுவைக்கு மாதுளை பழம் சேர்த்து மக்கானா சாட்  சாப்பிடலாம்.வறுத்த மக்கானாவில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் மீது உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம்.மிக்ஸ் வித் மக்கானா : வறுத்த மக்கானாவுட்ன் நட்ஸ் , விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.பால் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் வறுத்த மக்கானா சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாயாசம் போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அதில் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். அசத்தல் சுவையாக மக்கானா கீர்  இருக்கும்.

May 03, 2024

Rosemary ரோஸ்மேரி இலைகள்..

ரோஸ்மேரி இலைகள், அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும்.ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம். ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது. நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்சிஜனேற்ற பண்பு, சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும்.  இதை நாம் உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே இதை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

May 02, 2024

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மோர்

கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இதுஉங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர்இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள்,மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது..உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.தயிரை ஒருபிளெண்டரில் போட்டுமூன்று முதல்ஐந்து நிமிடங்கள்வரை கலக்கவும்.அதில் குளிர்ந்தநீரை சேர்த்துமீண்டும் குறைந்தவேகத்தில் மூன்றுமுதல் ஐந்துநிமிடங்கள் வரைகலக்கவும். இப்போதுஅதனுடன் கருப்புஉப்பு, புதினாதூள், சீரகத்தூள்சேர்த்து கலந்துகுடிக்கவும்.

May 01, 2024

கோடைக்கு இளநீர்  OR எலுமிச்சை ஜூஸ் எது பெஸ்ட்?

கோடைக்காலம் ஆரம்பித்து விட்டாலே உடல்நலனில் அதிக அக்கறை கொள்ள வேண்டும். இல்லையெனில் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படுத்தலாம்.உடலின் வெப்பநிலையை குறைத்து எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க வேண்டும். இது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.இளநீர், எலுமிச்சை ஜுஸ் உங்களுக்கு சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன.ஆனால் இவை இரண்டில் எது சிறந்தது என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுந்திருக்கும்.இளநீரில் எலக்ட்டோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவதுடன், இதில் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், எலக்ட்ரோலைட்டுகள் போன்றவையும் அதிகமாக இருக்கின்றது.கோடையில் இதனை குடித்து வந்தால், உடலில் திரவங்களை சமநிலையில் பராமரிப்பதோடு, தசைகள் மற்றும் நரம்பு சமிக்ஞைகளை பராமரிக்கவும் செய்கின்றது.இளநீரில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குளுக்கோஸ், புருக்டோஸ் போன்ற சர்க்கரைகளும் இருப்பதால், இவை உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கின்றன. வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் உள்ள நிலையில், இதில் ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுத்து, உடல் செல்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.கோடை காலத்தில் எலுமிச்சை ஜுஸ் குடித்து வந்தால், உடல் நீரேற்றத்துடன் இருப்பதுடன் பல நன்மைகளும் அளிக்கின்றது.இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், ப்ளேவோனாய்டுகள் உள்ள நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை சீராக்கவும் செய்கின்றது.எலுமிச்சையில் அமிலத்தன்மை இருந்தாலும், காரப் பண்புகளையும் கொண்டுள்ளதால், இந்த ஜூஸை குடிக்கும் போது, உடலின்pH அளவை சமநிலையில் பராமரிக்கப்படுகிறது.இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜனை உற்பத்தி செய்ய அதிகமாக உதவி செய்வதுடன், கோடையில் சருமத்தை ஆரோக்கியமாகவும் வைக்கின்றது.கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரியும். இதில் இளநீர் வியர்வை மூலம் இழந்தஎலக்ட்ரோலைட்டுகளை நிரப்புவதில் சிறந்து விளங்குகிறது. எனவே கடுமையான உடற்பயிற்சிக்கு பின் அல்லது வெயிலில் சுற்றிவிட்டு வந்ததும், குடிக்க ஏற்ற சிறந்த பானமாக இளநீர் விளங்கும்..எலுமிச்சை ஜூஸில் இளநீரைப் போல் எலக்ட்ரோலைட்டுகள் இல்லாவிட்டாலும், உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள தேவையான சத்துக்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, ப்ரீ ராடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் எலுமிச்சை ஜூஸானது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவுவதோடு, அதிக திரவ உட்கொள்ளலை ஊக்குவித்து, உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள உதவும்.எனவே கோடையில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள இளநீர், எலுமிச்சை ஜூஸ் ஆகிய இரண்டுமே உதவி புரிவதால், எவற்றை தேர்வு செய்வதென்பது ஒருவரது விருப்பத்தைப் பொறுத்தது. உடற்பயிற்சிகளில் ஈடுபட்ட பின் அல்லது வெளியே சுற்றிய பின் குடிக்க இளநீர் சிறந்ததாக இருக்கும். அதே வேளையில் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ள நினைத்தால், எலுமிச்சை ஜூஸை குடிப்பது சிறந்ததாக இருக்கும்.

Apr 30, 2024

ஆழ்ந்த தூக்கம் தரும் மருதாணியின் மலர்கள்

நரம்புகளின் செயல்பாட்டை தூண்டக்கூடியது மருதாணி இலைகள். நம்முடைய உடலிலுள்ள அனைத்து நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைக்கப்படுகிறது. இதனால், உடம்பின் அனைத்து பகுதிகளிலும் ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் வலுவாகின்றன..சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும் என்பதால், காலில் சரியான ரத்த ஓட்டமும் இருக்காது. அத்துடன், பாதங்களில் ஒருவித எரிச்சலும், குடைச்சலும் ஏற்படும்.. இதற்கும் தீர்வு தருகிறது மருதாணி. கை மற்றும் கால் விரல்களிலும், பாதங்களிலும், உள்ளங்கைகளிலும் இந்த இலையை அரைத்து தடவும்போது, ரத்த ஓட்டம் சீராகின்றன.. உடலுள்ள பித்தத்தை மொத்தமாக நீக்கிவிடும் இந்த இலைகள். பித்தம் அதிகமானால் மனநிலை சிதறல், மனநோய் போன்றவை ஏற்படாமல் இந்த இலைகள் தடுத்துவிடும்.. ரத்தமும் சுத்திகரிப்பாகும். மருதாணி இலைகளை, வெறும் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும்.. மருதாணி இலையுடன் மஞ்சளை சேர்த்து கால் வெடிப்புகளில் தேய்த்து வரலாம். நரை முடியை மறைப்பதற்கு மருதாணிபேக் போட்டு குளிக்கலாம்.கண்ணுக்கு தெரியாத எத்தனையோ கிருமிகள், நச்சுக்கள் நம்முடைய உடலில் இருக்கலாம். அத்தனையையும் இந்த மருதாணி இலைகள் விரட்டிவிடும். அதனால்தான், நகசுத்தி வந்தால், இந்த மருதாணியை அரைத்து விரலுக்கு வைப்பார்கள்.. சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதுபோன்ற பிரச்சனைகளுக்கும், மருதாணியுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து கட்டி வைப்பார்கள். மருதாணி இலைகளை போலவே, மருதாணியின் மலர்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை..உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. நிம்மதியானதூக்கம்   வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம்.மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு ஏற்படுத்தக்கூடியது இந்த இலைகள்.. மருதாணியின் வேர் பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் குடித்து வந்தால், மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு ஏற்படுவது குணமாகும். மருதாணி விதையில் உள்ள எண்ணெய்யை உடம்பின் மீது தடவி வந்தால், உடலில் எரிச்சல் தணிந்து விடும்.. மருதாணி இலை குளிர்ச்சி தரக்கூடியது என்பதால், இதனுடன் நான்கைந்து நொச்சி இலைகளை சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.

Apr 29, 2024

கோடை காலத்தில் இந்த வெயிலில் இருந்து தப்பிக்க வேப்பம்பூ சர்பத் 

 வேப்பம் பூக்கள்.சித்திரை மாதத்தில் எங்கெங்கு பார்த்தாலும் பூத்துக்குலுங்குகிறது. இதில் பல வகை உணவுகள் செய்ய முடியும். சட்னி, ரசம், கிரேவி என வெயிலுக்கு இதமான பல்வேறு உணவுகளும் செய்யலாம். உங்களுக்கு இந்த வெயிலை சமாளிப்பதற்கு வேப்பம்பூ ரசம் மிகவும் உதவியாக இருக்கும்.குடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்காக வேப்பம்பூ சர்பத் அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வேப்பம்பூக்கள், இயற்கையாகவே ஆன்டிசெப்டிக் தன்மை கொண்டவை. அது உங்கள் உடலை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்யும். இந்தப்பூக்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் பூத்துக்குலுங்கும். இதை உட்கொள்வதும் பாதுகாப்பானது.இது கிடைக்காத காலங்களில் இதை பொடியாக மற்றும் உலர்த்தி பயன்படுத்தப்படுகிறது. இதை பறித்தவுடன் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வேப்பம் பூக்கள் ஏப்ரல், மே, ஜீன் மாதங்களில் கிடைக்கும் ஒன்று. உங்கள் உணவில் இதை கட்டாயம் சேர்க்க வேண்டும். இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.வேப்பம்பூ சர்பத் செய்ய தேவையான பொருட்கள்வேப்பம் பூக்கள் – 2 ஸ்பூன், வெல்லம் – 2 ஸ்பூன் (பொடித்தது) தண்ணீர் – 2 கப்மிளகுத்தூள் – 2 சிட்டிகை, இஞ்சி – ஒரு ஸ்பூன் இடித்தது, உப்பு – தேவையான அளவு, மாங்காய் – கொஞ்சம் துருவியதுசெய்முறைதண்ணீரில் வெல்லத்தை கரைத்து, அதில் வேப்பம்பூக்களை சேர்க்க வேண்டும். உப்பு, மிளகுத்தூள், துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து பருகினால் அது உங்களுக்கு சிறந்த கோடை பானமாக இருக்கும். வேம்பின் நற்குணங்கள் அனைத்தும் நமக்கு நன்றாக தெரிந்தவைதான். வேப்பம்பூக்களும் அதே அளவு நன்மைகளை உடலுக்கு கொடுக்கின்றன. இது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை கொடுக்கிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வயிறு உப்புசம், வாயுத்தொல்லை, மலச்சிக்கல், செரிமான கோளாறு, வயிற்று வலி போன வயிறு உபாதைகளை போக்குகிறது. இது பித்தம் உருவாவதை குறைக்கிறது. சளியை கட்டுப்படுத்துகிறது மற்றும் குடலில் உருவாகும் புழுக்களை அழிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க வேப்பம்பூக்கள் உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடலின் நோய் எதிர்ப்பு அதிகரிக்கவும் செய்கிறது.வேப்பம்பூக்களின் நன்மைகள் உடலுக்கு உறுதியளிப்பதுடன் நிற்கவில்லை. முகப்பருக்களை நீக்குகிறது. கூந்தல் ஆரோக்கியத்தை அதிகரிக்கச் செய்கிறது. சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கிறது. 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 14 15

AD's



More News