25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

May 24, 2024

லவங்கப்பட்டை தேன் கலந்த நீர்

1 கப் வெதுவெதுப்பான நீர்,1தேக்கரண்டி தேன் மற்றும்1/2 தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள்ஒரு கப் தண்ணீரை சூடாக இருக்கும் வரை சூடாக்கவும், ஆனால் கொதிக்க வேண்டாம். ஒரு தேக்கரண்டி தேன் முழுவதுமாக கரையும் வரை கலக்கவும்தேன் தண்ணீரில் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும்.இலவங்கப்பட்டை சமமாக கரையும் வரை நன்கு கலக்கவும். பின்னர் அதைப் பருகவும்.இந்த இரண்டுமே தனித்தனியாக ஆரோக்கிய நன்மைகள் கொண்டது..இலவங்கப்பட்டையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன் இணைந்த தேனின் தொண்டை புண் மற்றும் இருமலைப் போக்க தேன் இலவங்கப்பட்டை தண்ணீரை ஒரு சிறந்த தீர்வாகஆக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டையின் கலவையானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், தொடர்ந்து உட்கொள்ளும் போது இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது, இது நீரிழிவு அல்லது இன்சுலின் எதிர்ப்பு உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும்.சீரான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இதை உட்கொள்வது வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும் பசியைக் குறைப்பதன் மூலமும் எடை இழப்புக்கு உதவும்.தேன் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது செரிமானநொதிகளின் சுரப்பைஊக்குவிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறதுமற்றும் இரைப்பை குடல் அசௌகரியத்தை நீக்குகிறது.தேன் மற்றும் இலவங்கப்பட்டை இரண்டும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன, அவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.

May 23, 2024

பலாப்பழ கொட்டைகள்

பலாப்பழங்களை போலவே பலாக்கொட்டைகளிலும் நிறையமருத்துவ நன்மைகள்ஒளிந்து கொண்டிருக்கின்றன. பலாக்கொட்டை. பழங்களை நாம்விரும்பி சாப்பிடும்அளவுக்கு, அந்தபழங்களின் விதைகளைநாம் சாப்பிடுவதில்லை.துத்தநாகம், வைட்டமின்கள், நார்ச்சத்துஎன ஏகப்பட்டவிஷயங்கள் இந்தபலாக்கொட்டையில் உள்ளன.. இதனால் உங்கள்திசுக்களுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்புசக்தியையும் வழங்குகிறது.முக்கியமாக நிறையபுரோட்டீன் உள்ளது..தசைகளை வலுவாக்கஇந்த கொட்டைகளிலுள்ளபுரதங்கள் உதவுகின்றன.100 கிராம் பலாக் கொட்டைகளில், ஒரு கிராமுக்கு குறைவாகவே கொழுப்புச்சத்துக்களும், 38 கிராம் கார்போவும் இடம்பெற்றுள்ளன... இந்த பலாக் கொட்டைகளை நன்றாக காயவைத்து, பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும். செரிமான கோளாறு ஏற்படும்போதெல்லாம் இந்த பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும்.ஆக்ஸிஜனேற்ற பண்புகள் பலாக்கொட்டைகளிலுள்ளதால், வயதான தோற்றம், சரும சுருக்கங்களுக்கு எதிராக போரிட செய்கிறது.இரும்பு சத்து நிறைந்துள்ளதால், பெண்களை அனீமியா அண்டுவதில்லை.. நார்ச்சத்து நிறைந்துள்ள பலாப்பழ கொட்டைகள், மலச்சிக்கலை தீர்க்கின்றன.. வைட்டமின் A இந்த பலாப்பழ கொட்டைகளில் நிறைந்திருப்பதால், கண் பார்வையை அதிகரிக்க செய்கிறது.கண்புரை, மாகுலர் சிதைவு போன்ற கண்தொந்தரவுகளிலிருந்தும்தடுக்கிறது.மாலைக்கண்நோய்களும்தடுக்கப்படுகின்றன.பலாக்கொட்டையில் குழம்பு, கூட்டு, பொரியல்என எதுவேண்டுமானாலும் செய்யலாம்.ஆவியில் அவித்தும்சாப்பிடலாம்.நெருப்பில்சுட்டும் சாப்பிடலாம்.கேரளாவில் இந்தகொட்டைகளை நன்றாகஅரைத்து மாவாக்கி,அல்வா, லட்டு,புட்டு இப்படியெல்லாம்செய்வார்களாம். ஆனால்,பலாக்கொட்டைகளை சமைக்கும்போது, தேங்காய், சர்க்கரை, நெய்போன்றவற்றை அளவுடன்பயன்படுத்த வேண்டும்.

May 22, 2024

உடல் எடையை குறைக்க உதவும் மக்கானா கீர்

பாலில் செய்யப்படும் இனிப்பு வகைகளை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்மில் பலரும் இது போன்ற இனிப்பு வகைகளை சாப்பிட்டால் உடல் எடை அதிகரித்து விடுமோ என்று பயப்படுவார்கள்.  வீட்டில் சமைத்து சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஆரோக்கியம் அதிகம் நிறைந்துள்ளது. இந்த வரிசையில் உடல் எடையை குறைக்க உதவும் தாமரை விதைகள் என்று கூறப்படும் மக்கானாவை வைத்து சுவையான ஆரோக்கியம் நிறைந்த மக்கானா கீர் செய்வது எப்படி ?தேவையான பொருட்கள்:2 கப் மக்கானா, 1 லிட்டர் காய்ச்சிய பால்,1/4 கப் சர்க்கரை,  1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பாதாம், டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி,1 டேபிள் ஸ்பூன் திராட்சை, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்,  2 டேபிள் ஸ்பூன் நெய். செய்வது எப்படி?முதலில் அடுப்பில் ஒரு சிறிய கடாய் வைத்து ,ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு சூடாக்கி கொள்ள வேண்டும். நெய் சூடானதும் அதில் 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய முந்திரி மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுக்கவும். முந்திரி மற்றும் பாதாம் சிறிது பொன்னிறமானதும் இதில் 1 டேபிள் ஸ்பூன் திராட்சையை சேர்த்து கிளறி விட வேண்டும். இதற்க்கு பிறகு கடாயை அடுப்பில் வைத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில்2 கப் மக்கானாவை குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் நன்கு வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது நாம் வறுத்து வைத்துள்ள மக்கானா ஒன்றரை கப் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.இப்போது ஒரு கடாய் வைத்து மீதமுள்ள மக்கானாவை பால் ஊற்றி குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மக்கானாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இதற்கு பிறகு சீரான பதத்திற்கு வந்தவுடன் நாம் நெய்யில் வறுத்து வைத்த முந்திரி திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து இன்னும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும். இதற்கு பிறகு தேவையான அளவு சர்க்கரை மற்றும் பச்சை ஏலக்காய் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் சமைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மக்கானா கீர் தயார்.

May 21, 2024

சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது..?

இந்திய சமையல் அறைகளில் எண்ணெய் இன்றியமையாத ஒன்று. பெரும்பாலான இந்திய உணவு பொருட்களுக்கு எண்ணெய் தான் மூலப்பொருள். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய்களில் எந்த எண்ணெய் சிறந்தது என பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், எண்ணெய்களில் சிறந்தது ஆலிவ் எண்ணெய் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள்நிறைந்துள்ளன.இது கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், வகை2 நீரிழிவு நோயைக் குறைக்க உதவுகிறது. இதுமட்டுமன்றி இது மூளைக்கும் நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. ஆலிவ் எண்ணெயில் லுடீன் நிறைந்துள்ளது. இது கண் ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது.ஆலிவ் எண்ணெயில் ஆல்பாலினோலெனிக் அமிலம் உள்ளது. அது இதயத்திற்கு மிகவும் நல்லது என கூறப்படுகிறது. வீக்கம், வாதம் ஆகிவற்றை சரிசெய்யவும் இது உதவுமாம்.இது தவிர எள் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும் நல்லது என கூறப்படுகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, எள் எண்ணெயில் ஆக்ஸிஜினேற்ற மற்றும் அழர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன என கூறப்படுகிறது.

May 20, 2024

மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவை

மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது  மணத்தக்காளிக் கீரை.சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியதுமணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல  இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆகமிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மருபூக்கள் பூக்கும். . இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.உடல் வலி தீரும். களைப்பை அகற்றும். உடலிலுள்ளநச்சுநீரை வெளியேற்றும். வாந்தியைப் போக்கும். இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .காது வலியைப் போக்கும். வயிற்றுப் பொருமலை தணிக்கும். காய்ச்சலைப்போக்கும்.கருப்பப்பைக்கு வலிமை தரும்.பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

May 18, 2024

சர்க்கரை நோயை கட்டுக்குள்வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள்

கசப்பு நிறைந்தஇலைகள், சிலவகைநோய்களுக்கு அருமருந்தாகின்றன..குறிப்பாக, ரத்தத்தில்இன்சுலின் அளவைகட்டுப்படுத்தவும் இதுபோன்றகசப்பு இலைகள்உதவுகின்றன..உதாரணத்துக்குமுருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையைசொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்துகொள்ளலாம். வெறும்வயிற்றில் நான்கைந்துஇலைகளை மென்றுவிழுங்குவது, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைசீராக வைத்திருக்கஉதவுகிறதாம்..அமிர்தவல்லிஇலையை . டீ போலதயாரித்து குடிக்கலாம்,அல்லது ஜூஸ்தயாரித்தும் குடிக்கலாம்அல்லது கறிவேப்பிலையைபோல, இந்தஇலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம்.ரத்தத்தில் உள்ளஇன்சுலின் அளவைகட்டுப்படுத்த இந்தஇலையும் உதவுகிறது. இந்த அமிர்தவல்லிஇலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ்தண்ணீரில், ஒருஸ்பூன் கலந்துஇரவு தூங்கும்முன்பு ஊறவைத்துவிடவேண்டும். மறுநாள்காலை எழுந்ததுமேகுடித்து வந்தால்நீரிழிவு நோய்கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்றுஉள்ளுக்குள் மருந்தாகஎடுத்து கொள்ளும்போதுடாக்டர்களின் ஆலோசனையைபெறுவது கட்டாயமாகும்.நாவல் கொட்டைகளும்நீரிழிவு நோயாளிகளுக்குமிகச்சிறந்த மருந்தாகின்றன..நாவல் கொட்டையைதூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களைபரிசோதனை செய்ததில்அவர்களது சர்க்கரைஅளவும், சிறுநீரில்வெளியேறிய சர்க்கரைஅளவும் குறைந்திருந்ததாம். நாவல் பழத்தின்கொட்டைகளை,7 நாட்கள்நிழலில் காயவைத்து, அதை இரண்டாகஉடைத்து வெயிலில்காய விடவேண்டும்.. இந்தகொட்டைக்குள் காணப்படும்பச்சை நிறம்முழுமையாக காயவேண்டும். இந்தகொட்டைகளை மிக்ஸியில்அரைத்து, சலித்துகொள்ள வேண்டும். இதில், தினமும்2 வேளை, ஒருடீஸ்பூன் அளவுவெந்நீரில் கலந்துகுடித்து வந்தால், ஒரு மாதத்தில்சர்க்கரையின் அளவுகட்டுக்குள் வந்துவிடும். நாவல் கொட்டைபவுடரை, மருத்துவரின்முறையான ஆலோசனையைபெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.சர்க்கரையை கட்டுக்குள்வைத்திருக்க, கருஞ்சீரகவிதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கியகாரணம், இந்தவிதையிலுள்ள தைமோகுயினன்என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரித்துவிட்டால், எதிர்ப்புசக்தி நிறைந்தஇந்த கருஞ்சீரகத்தைபயன்படுத்தலாம்.. இந்தகருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர்தண்ணீரில், கால்டீஸ்பூன் அளவுகலந்து சாப்பிட்டுவந்தாலும், ரத்தசர்க்கரை அளவுகட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரைஅளவு கட்டுக்குள்இருப்பவர்கள், கருஞ்சீரகத்தைதொடர்ந்து எடுத்துகொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில்சர்க்கரை அளவுகுறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைபெற்றே இதனைபயன்படுத்த வேண்டும்.

May 17, 2024

மூளைக்குள் கட்டி (Brain Tumor) நோய் வருவதைத் தடுக்க.....

உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி(BrainTumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் . ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில் மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை . மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).மூளைக்குள் கட்டி(BrainTumor) நோய் வருவதைத் தடுக்க உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.

May 16, 2024

கொட்டை பாக்கு பலன்கள்,. கெடுதல்கள்

உணவு சாப்பிட்டதுமே, வெற்றிலை போடும் பழக்கம் இன்றளவும் நம்முடைய தமிழகத்தில் உள்ளது.. காரணம்,செரிமானத்தை சீராக்கக்கூடிய தன்மை இந்த பாக்குகளுக்கு உண்டு.துவர்ப்புச்சுவை கொண்ட பாக்குகள், மிகச்சிறந்த மலமிளக்கியாக உள்ளன. கழிவுகளையும், நச்சுக்களையும், நீக்கி குடலை சுத்தப்படுத்தக்கூடியது.. இயற்கையான கால்சியம் சத்துக்கள் நம்முடைய உடலில் சேரவும் உதவுகிறது.கிருமிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை இந்த பாக்குகள்..குறிப்பாக, இரைப்பையில் உள்ள தொற்றுகளை அகற்றக்கூடியவை..பற்கள் உறுதியாக இருக்க வேண்டுமானால், கொட்டை பாக்கை சுட்டு பவுடராக்கி,அதில் பற்களை தேய்த்து வந்தால் போதும். கொட்டை பாக்கை தூளாக்கி பல் துலக்கினால் பற்கள் பளிச்சென்றும் உறுதியாகவும் திகழும். பித்தம் அகிமாக உள்ளவர்கள், வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து உண்ணும்போது பித்தம், வாதம் இரண்டுமே கட்டுக்குள் வந்துவிடும். காரணம், பாக்கில் உள்ள துவர்ப்பு சத்துதான், பித்தத்தை கட்டுக்குள் வைக்க முக்கிய காரணமாகும்.துவர்ப்பு நிறைந்த இந்த கொட்டை பாக்கில் டீ தயாரித்து குடிப்பார்கள்.. இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது..இப்படி சில நன்மைகளை பாக்குகள் தந்தாலும்,கெடுதலைதான் அதிகம் தருகிறதாம்.இந்தியன் ஜர்னல் ஆஃப் மெடிக்கல் அண்ட் பீடியாட்ரிக்ஸ் ஆன்காலஜி டிரஸ்டட்,அமெரிக்கன் சொசைட்டி ஃபார் க்ளினிக்கல் நியூட்ரிஷியன் போன்ற ஆய்வுகளில் இந்த பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளன நன்மைகள்: ஆனால்,இந்த கொட்டை பாக்குகள் நன்மைகளை தருவது போலவே, சில தீங்குகளையும் உடலுக்கு தரலாம் என்கின்றன ஆய்வுகள்.அதாவது, நாம் வெற்றிலை போடுவதற்கும், வாய், உணவுக்குழாய் புற்றுநோய்க்கும் நிறைய தொடர்புகள் உள்ளனவாம். முக்கியமாக ஃபைப்ரோஸிஸ்க்கு வாய்ப் புற்றுநோய்க்கு அதிக ஆபத்து இருப்பதாக, ஆய்வுகள் கூறுகின்றன.இதய நோய், உடல் பருமன் போன்றவற்றுக்கும் தொடர்பு கொண்டுள்ளதாம்.சிலருக்கு கொட்டை பாக்கு பயன்படுத்தும்போது, வாந்தி, வயிற்றுப்போக்கு, ஈறுகள் தொடர்பான பிரச்சனைகள், சிறுநீரக நோய், இதய நோய், குறைந்த ரத்த அழுத்தம், மூச்சுத்திணறல், போன்றவை ஏற்படலாம் என்கிறார்கள்.. இது மாரடைப்பு, கோமா வரை கொண்டுபோய் விட்டுவிடுவாம். சிக்கல்கள்: நீண்ட காலமாகவே பாக்கு பயன்படுத்துபவர்களுக்கு இப்படியான சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. எந்நேரமும் கொட்டைப்பாக்கை மென்றால், பல் ஈறுகள் பாதிக்கப்படும்.. பற்கள் கறை படிவதுடன், ஈறுகளும் வலுவிழந்துவிடும். அதேபோல, கொட்டை பாக்குகளை தொடர்ந்து சாப்பிட்டால், மத்திய நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம் என்கிறார்கள்.. கர்ப்பிணிகள் கொட்டை பாக்குகளை தொடவே கூடாது. ஆஸ்துமா நோயாளிகள் இதை தவிர்க்கலாம்.. வலிப்பு நோயாளிகள் இதய கோளாறுகள் உள்ளவர்களும், ரத்த அழுத்த பிரச்சனை பிரச்சனை உள்ளவர்களும், கொட்டை பாக்குகளை தவிர்க்கலாம்.. எனவே, வெற்றிலையுடன் மிக குறைந்த அளவில் பாக்குகளை எடுத்து கொண்டால், அது சிறந்த மருந்தாகும்.

May 15, 2024

தயிருடன் சேர்த்து சாப்பிட கூடாத உணவுகள்

கோடைகாலத்தில் தயிர் சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர். வயிற்றுக்கு நல்ல குளிர்ச்சியாக இருப்பதனால் அடிக்கடி சாப்பிடுகின்றனர். தயிரில் சோடியம்,பொட்டாசியம், நார்ச்சத்து, புரதம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்டி போன்ற பல சத்துக்கள் உள்ளன. இருப்பினும் தயிருடன் சில உணவுகளைசேர்த்து சாப்பிடக் கூடாது. அப்படி சாப்பிட்டால் அது உடலுக்கு சில தீங்குகளைவிளைவிக்கலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.பாலுக்கு பிறகு தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பாலுடன் எந்த நொதித்த(fermented) உணவுகளையும் பின் சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்வது வயிற்று வலி மற்றும் பல செரிமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்படலாம்.வெங்காயம் மற்றும் வெங்காயத்திலிருந்து தயாரிக்கப்படும் எந்த உணவுகளையும்ஒருபோதும் நீங்கள் தயிருடன் பயன்படுத்தக் கூடாது. நறுக்கிய வெங்காயத்தைதயிருடன் சேர்த்து ரைத்தாவாக சாப்பிடுவது வழக்கம்தான். ஆயுர்வேதத்தின்படிதயிர் சூடானதாகவும் வெங்காயம் குளிர்ச்சியானதாகவும் இருப்பதால்இவைஇரண்டையும் சேர்த்து சாப்பிடுவது முகப்பரு, தோல்எரிச்சல்மற்றும்சிலஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தும்.. தயிருடன் நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. நெய்யில் கொழுப்பு உள்ளதால் இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்குகிறது. மேலும் இவை சோர்வாக இருப்பது போன்ற உணர்வை தரும்.தயிர் சாத்திற்கு மாம்பழத்தை வைத்து சாப்பிடுவார்கள். சிலர் மாம்பழ லஸ்ஸி, மாம்பழ ஷேக் உள்ளிட்டவை தயார் செய்து குடிப்பார்கள். ஆனால் உண்மையில் இவ்வாறாக சாப்பிடுவது அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் உடலில் ஏற்படும்.தயிருடன் சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக தக்காளி, எலுமிச்சை, சாத்துக்குடி போன்ற பழங்களுடன் சாப்பிடவே கூடாது. ஆயுர்வேதத்தின் படி இவை ஒன்றுக்கொன்று எதிரான உணவுகளாக கருதப்படுகிறது.

May 13, 2024

.பலாக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள்

 பலாப்பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இதில் இருக்கும் ஏராளமான சத்துக்கள் நோய்க்கிருமிகளை அழித்து ,நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகிறது. முக்கியமாக, இதில் உள்ள வைட்டமின் சி மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக செயலாற்றி உடல் நலனைக் காக்கிறது. பலாப்பழம் பழுக்காமல் காயாக இருக்கும்போதும் அதில் நிறைந்த சத்துக்கள் உள்ளன என்பதை நிறைய பேர் அறிந்திருக்க மாட்டார்கள்.பலாக்கொட்டையில் உள்ள மாவுச்சத்து பலாக்கொட்டைக்கு மிகுந்த சுவையை தருவதோடு, அதை கூட்டு, பொரியல் என செய்து உணவாகவும் உபயோகிக்க உதவுகிறது. பலாக்கொட்டையை சிறிது உப்பு போட்டு வேகவைத்து தோலுரித்து  அப்படியே சுவைத்தாலும் ருசியாக இருக்கும். லேசான துவர்ப்புடன் இருக்கும் பலா பிஞ்சும் ஏராளமான மருத்துவப் பயன்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கேன்சர் போன்ற நோய்களை எதிர்த்துப் போராடும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதில் வைட்டமின் ஏ, பி, சி, இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம், உயர்தரமான மாவுச்சத்து, நார்ச்சத்து போன்ற சத்துக்கள் உள்ளன.  நமது உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியைத் தருகிறது.பலாக்காய் உண்ணும் இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கிறது.  உடல் உஷ்ணத்தை தணித்து பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி போன்றவற்றை குணமாக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது. பலாக்காய் உடலுக்கு ஊட்டச்சத்து தருவதாக அமைகிறது.பலாக்காயில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது. மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிட்டு அதன் காய்களையும் உணவில் சேர்த்து மலச்சிக்கலை தவிர்க்கலாம். ஆனால், பலருக்கும் பலாக்காய் செரிமானம் ஆகாமல் இருக்கும் பிரச்னை உண்டு. எளிதில் செரிமானம் ஆக அதனுடன் இஞ்சி, மிளகு, சீரகம் போன்றவற்றை சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டும்.பலாக்காயின் தித்திப்பான சுவை சர்க்கரை நோயை அதிகரிக்கும் என்ற தவறான தகவல் உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான மாவு சத்து மற்றும் நார்ச்சத்தினால் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்பதுதான் உண்மை. மேற்கத்திய நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் பலாக்காய் உணவுகளை சாப்பிட்ட அரை மணி நேரத்தில் நமது உடலில் உள்ள சர்க்கரை அளவு வேகமாக குறைகிறது என மருத்துவ ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.இதில் உள்ள காப்பர் சத்து தைராய்டு ஹார்மோன் பிரச்னைகளை தடுப்பதிலும் வைட்டமின் b6 இரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டின் அளவை குறைத்து இதய பாதிப்புகளை குணப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் சி சத்துக்கள் புது இரத்த செல்களை உருவாக்குவதோடு, இரத்த சோகை பிரச்னைகளையும் சரிசெய்கிறது என்கின்றனர்.இந்த பலாக்காய் அரிசிக்கு நிகரான மாவுச்சத்தை கொண்டுள்ளதால் இலங்கையில் இந்தப் பலாக்காய் உணவுகளை ஊட்டச்சத்து வேண்டி அதிகமாக பயன்படுத்துகின்றனர். கேரளத்தில் இதில் உள்ள சத்துகளை அறிந்து இந்த பலாக்காய் உணவுகளை கிட்டத்தட்ட பல ஆயிரம் வருடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.பலாக்காயை அதிக அளவில் உண்பதால் செரிமான பிரச்னை, வயிற்று வலி போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு அதனால் ஒவ்வாமையும் ஏற்படும் என்பதால் அவரவர் உடல் நலனை கருத்தில் கொண்டு இதை எடுத்துக் கொள்வது நல்லது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News