25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Jun 07, 2024

புற்று நோய் வராமல் தடுக்கும் இனிப்பான கரும்புசாறு

கரும்பு சாறில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந் துள்ளது. கரும்பில் அடங்கியுள்ள சத்துக்கள்கரும்பில் அதிக அளவு நார்ச் சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், ஜின்க், தையாமின், ரிபோபிளவின், புரோட்டீன், இரும் புச்சத்து போன்ற பலவித சத்துக் கள் நிறைந்துள்ளது. கரும்பு சாறு பருகினால் உடனடி ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவில் இயற்கை சர்க்கரை நிறைந்துள்ளது.  கரும்பு ஜூஸில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை பருகும்போது அவை நேரடியாக கிடைக்கப்பெற்று வலிமையான எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக செய்யும். கரும்பு சாறில் அதிக அளவில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ள தால் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும். கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் மற்றும் பிளவோனாய்டுகள் நிறைந்துள்ளது. இவை புற்று நோய் ஏற்படாமல் தடுக்கும். புற்று நோய் செல்களை, ஆரம்பத்திலேயே அழிக்கும்.கரும்பு சாறில் அதிக அளவில் பொட்டாசியம் மற்றும் குறைந்த அளவில் சோடி யம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உங்களின்  சிறுநீரக ஆரோக்கியத்தினை மேம்படுத்’ தும். மேலும் சிறுநீரக கற்கள் மற்றும் சிறு நீரக கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். கரும்பு சாற்றில் அதிக அளவில் எலெக்ட்ரோ லைட்டுகள் நிறைந்துள்ளது. இவை உங்களின் கல்லீரலின் ஆரோக்கியத் தினை மேம்படுத்த உதவும். எனவே கல்லீரலின் ஆரோக்கியத்தினை மேம் படுத்த விரும்புவோர் தினமும் ஒரு டம்ளர் கரும்பு சாற்றினை பருகுங்கள்.  கரும்பில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளது. இவை சரும - ஆரோக்கியத்தினை மேம்படுத்தி தோல் சுருக்கம், வயதான தோற்றம் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்கும்.  கரும்பில் அதிக அளவில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவற்றை தினமும் உண்டு வந்தால் உங்களின் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து தேவையற்ற கொழுப்பினை கரைக்க உதவும், எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் கரும்பினை உண்டு வாருங்கள். மேலும் இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும். கரும்பில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை நீங்கள் தினமும் உண்டு வரும்பொழுது உங்களின் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். எனவே ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க விரும்புபவர்கள் அடிக்கடி கரும்பினை கடித்து ருசிக்கலாம்.

Jun 05, 2024

மூல நோய்க்கு அசோக மரத்தின் பட்டைகள் சிறந்த மருந்தாகும்

  தென்னை, வாழை, வேப்பமரம், முருங்கை மரங்களை போலவே, அசோக மரம் இயற்கையின் வரப்பிரசாதம்இந்த மரத்தின் இலைகள், பட்டைகள், பூக்கள் என அத்தனையுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. இதன் இலைகள், வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை நீக்கி குடலை சுத்தம் செய்கின்றன.வயிறு உபாதைகளையும் இந்த இலைகள் சரிசெய்யக்கூடியவை. இதன் இலைகளை இடித்து சாறு எடுத்து கொள்ள வேண்டும். சிறிது தண்ணீரில் இந்த சாறு கலந்து, சீரகத்தூள் சேர்த்து குடித்தால், வயிறு பொருமல், வயிறு வலி, வயிறு உப்புசம், வயிறு எரிச்சல், வயிற்றுப்புண்கள் எல்லாமே நீங்கிவிடும்.அசோக மரத்தின் இலைகளை சரும ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவார்கள். இந்த இலைகளை பறித்து நன்றாக கழுவி, தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். இதில் கடுகு எண்ணெய்யை கலந்து, உடலிலுள்ள காயங்கள், புண்கள், கொப்புளங்களுக்கு தடவினால் விரைவில் குணமாகும். எரிச்சலும் தணியும். இம்மரத்தின் பட்டைகளையும் சரும ஆரோக்கியத்துக்கு பயன்படுத்துவார்கள். இந்த பட்டையை, சிறிது நீரில் இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் ஜொலி ஜொலிக்கும். தோலில் உள்ள அலர்ஜிகள் நீங்கி, பொலிவுபெறும். கர்ப்பிணி பெண்கள் இதனை தவிர்க்க வேண்டும். பெரும்பாலான காஸ்மெடிக்ஸ் எனப்படும் அழகு சாதன பொருட்களில், முக்கியமான மூலப்பொருட்களாக இந்த மரத்தின் பட்டைகளை சேர்க்கிறார்கள். அசோக மரத்தின் விதைகளை பொறுத்தவரை, சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையை கொண்டது. சிறுநீரகத்தில் கற்கள் சேராமலும் முன்கூட்டியே தடுக்கிறது. இந்த விதையை காயவைத்து தூள் செய்தும் மருந்தாக பயன்படுத்துவார்கள்.நீரிழிவு நோயாளிகளுக்கும் அசோக மரத்து பூக்கள் நன்மைகளை தருகின்றன. இந்த பூக்களை காயவைத்து தூள் செய்து, நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள். மூலநோய்க்கு பெரிதும் உதவுகிறது. இந்த பட்டைகள். வெறுமனே மர பட்டைகளை டீ போல போட்டு குடிப்பதால் மூலநோய் தீவிரம் குறையும்.மூட்டுவலிகளுக்கும் இந்த மரப்பட்டையை பேஸ்ட் போல அரைத்து பூசினால் நிவாரணம் கிடைக்கும். இதன் பூக்களை இடித்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தாலும் ரத்த மூலத்துக்கு சிறந்த தீர்வை தரும். இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற பொருள் உள்ளதால், ஒழுங்கற்ற மாதவிடாய்களை சரிசெய்கிறது.அதிகப்படியான ரத்தப்போக்கு, வயிற்றுப்போக்கை தடுக்க இதன் பூக்கள் பயன்படுகின்றன. இதனால் வயிற்று வலியையும் தீர்க்கிறது. பெண்களை பாதிக்கக்கூடிய கருப்பை கட்டிகளை இந்த மரத்தின் பட்டைகள் சரிசெய்கின்றன. அதாவது, இந்த மரப்பட்டை பொடி 5 கிராம் எடுத்து, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து, பாதியாக சுண்டவைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் 2 வேளை, 2 மாதம் சாப்பிட்டு வந்தாலே, நீர்க்கட்டிகள் மறைந்துவிடும்.

Jun 04, 2024

புற்றுநோய்,உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள்

புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதில் ஆரஞ்சு பழத்துக்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் 1 ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தாலே, பெண்களுக்கு 50 சதவீதம் புற்றுநோய் வரும் ஆபத்து குறைந்துவிடுகிறதாம்.இதயத்திற்கு நன்மை தரக்கூடிய பழங்களில் ஆரஞ்சு  உதவுகிறது.. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம் சத்துக்கள், ரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைத்து ,கொழுப்பை குறைக்க உதவுகிறது. உடலிலுள்ள தேவையற்ற கலோரிகளை எரிக்கவும், டயட்டில் இருப்பவர்களும், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் ஆரஞ்சு பழத்தை விட்டுவிடக்கூடாது. பெண்களுக்கு பரவலாக ஏற்படும் ரத்த சோகையை விரட்டுகிறது. கர்ப்பிணிகள் தவறாமல் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ,கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் தோல் , கண் பார்வை ஆரோக்கியம் பெறுகின்றனர்.குளிர்ச்சி தரக்கூடிய இந்த பழம், உடலிலுள்ள உஷ்ணத்தை விரட்டியடிக்கக் கூடியது. உடல் சூடு, சிறுநீர்கடுப்பு, மூல வியாதி போன்ற உஷ்ண கோளாறுகளை தவிர்க்க ஆரஞ்சு பழங்கள் உதவுகின்றன.சிறுநீர் கோளாறுகள் இருப்பவர்கள், இரவு தூங்கும்முன்பு, அரை டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் குடித்தாலே நிவாரணம் கிடைத்துவிடும். நார்ச்சத்து நிறைந்த இந்த ஆரஞ்சு பழம், செரிமானத்துக்கு தூண்டுகிறது. மூட்டு வலி, உடம்பில் அதிக உப்பு சத்து போன்ற உபாதைகளுக்கு இந்த ஆரஞ்சு பழமே கைகொடுக்கிறது.ஆரஞ்சு தோலிலும் பல நன்மைகள் உள்ளன. இந்த தோலை காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டால் போதும். பல பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படும். குறிப்பாக, உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பவர்கள், இந்த பவுடரை சுடுநீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம். இதனால் வாந்தி, நெஞ்செரிச்சல், பித்தம் போன்ற தொந்தரவும் நீங்குகிறது. சீரான செரிமானமும் நடைபெறும். நன்றாக பசியும் எடுக்கும். சளி, இருமல், போன்ற சுவாச கோளாறுகள் இருந்தால், அப்போதும் இந்த பவுடர் கை கொடுத்து உதவும். நெஞ்செரிச்சல் இதற்கெல்லாம் காரணம், இந்த ஆரஞ்சு தோலில் பாலிபினால்கள் நிறைய உள்ளன. தோல் புற்றுநோயை எதிர்த்து போராட உதவுவதே இந்த பாலிபினால்கள்தான். ஆரஞ்சு பழங்கள், சிட்ரஸ் வகையை சேர்ந்தவை என்பதால், உணவுக்கு பிறகுதான் ஆரஞ்சு சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றில் அமிலம் உண்டாக்கிவிடும். எனவே, இந்த ஆரஞ்சுபழத்தை அசிடிட்டி, அஜீரண பிரச்சனை இருப்பவர்கள், வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம்.மார்பு மற்றும் வயிற்றில் எரியும் உணர்வை அதிகரிக்கும். இருமல் உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்.

Jun 03, 2024

சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டிய ஜூஸ்கள்

 பாகற்காய் ஜூஸ்நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த ஜூஸ் என்றால் அது பாகற்காய் ஜூஸ் தான். இது தினமும் எடுத்துக் கொள்ள முடியாமல் போனாலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குடித்து வந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய ஆரம்பிக்கும்தக்காளி ஜூஸ்இதை நீரிழிவு நோயாளிகள் தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக டைப் 2 நீரிழிவு உள்ளவர்கள் காலை நேரத்தில் தக்காளி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். இதய நோய் ஆபத்துகள் அதிகம் இருக்கும் என்பதால் ரத்தம் உறைதலைத் தடுத்து ஆபத்தைக் குறைக்க தக்காளி ஜூஸ் உதவி செய்யும்.சாத்துக்குடி ஜூஸ்அதிக புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளுடன் சேர்த்து இந்த சாத்துக்குடி ஜூஸை எடுத்துக் கொள்ளலாம். வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிகம் உள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.கேரட் ஜூஸ்கேரட்டில் வைட்டமின்கள். மினரல்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன. இதில் காம்பளக்ஸ் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால் இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுத்து அதிக கலோரிகள் எடுத்துக் கொள்ளாமல் தவிர்க்க உதவி செய்கிறது.கிரீன் ஸ்மூத்திகீரைகள், இலைவடிவ காய்கறிகள் ஆகியவற்றை அப்படியே சாப்பிடுவதற்கு சிரமமாக இருந்தால் அதை ஜூஸாக்கி குடிக்கலாம்.இதில் ஸ்டார்ச்சும் கிடையாது. கிளைசெமிக் குறியீடும் மிகக் குறைவு என்பதால் டைப் 2 நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் இந்த ஜூஸை குடிக்கலாம்.மாதுளை ஜூஸ்- மாதுளை ஜூஸை நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்ளலாம். இந்த மாதுளையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே ஆகியவற்றோடு நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றன. இதில் கிளைசெமிக் குறியீடு மிகக் குறைவு என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த மாதுளை ஜூஸ் மிகவும் நல்லது.

Jun 01, 2024

உள்ளுறுப்புகளை சுத்தம் செய்யும் தாளிசபத்திரி இலைகள்.

மூக்கடைப்பு, சளி, இருமல் போன்ற சுவாச தொந்தரவுகள் இருந்தால், கற்பூரவல்லி எனப்படும் ஓமவள்ளி இலைகளை மருந்தாக பயன்படுத்துவோம் அல்லது கருந்துளசி, நொச்சி இலைகளை பயன்படுத்துவோம். அதுபோலவே, தாளிசபத்திரியும் பயன்படுகிறது.தாளிசாதி என்றும் இதனை சொல்வார்கள்.சளி, மூக்கடைப்பு, சைனஸ், தலைவலி, நீர்க்கோவை, தலைபாரம் மட்டுமல்ல, எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை, இந்த மரத்தின் இலைகளுக்கு உண்டு. இந்த தாளிசபத்திரி மரமானது, பச்சை நிறத்தில் நீளமாக வளரக்கூடியது.. மோனோடெர்பீன்கள், பிளேவனாய்டுகள், பைஃப்ளேவனாய்டு, கிளைகோசைடுகள், பைட்ரோ ஸ்டீரால்கள், அமினோ அமிலங்கள், சபோனின்கள், டானின்கள், ஆல்கலாயிடுகள், ட்ரைடர்பெனாய்டுகள் போன்ற சத்துக்கள் இந்த மரத்தின் இலைகளில் நிறைந்துள்ளது.முக்கியமாக, பேக்லடாக்சால் என்ற வேதிப்பொருள் இலைகளில் இருப்பதால், மருந்தாக உதவுகிறது.நுரையீரலிலுள்ள மொத்த கபமும் வெளியேறிவிடும். இந்த இலையில் கஷாயம் போல வைத்து குடிக்கலாம்.சளிக்கு மட்டுமல்ல, பயங்கர நோயான புற்றுநோயையும் இந்த இலைகள், வேதிப்பொருளாக பயன்படுகிறதாம். புற்றுக்கட்டிகளை கரைக்கும் சக்தி இதற்கு உண்டுதாளிசபத்திரி இலைகளை காயவைத்து தூள் போல தயார் செய்து வைத்து கொண்டால், வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற தொந்தரவுகளுக்கு பயன்படுத்தலாம்.வெறுமனே இந்த இலைகளை பறித்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.. அல்லது குளிக்கும் வெந்நீரிலும் பயன்படுத்தலாம்.. இதனால், தலைவலி, தலைபாரம் நீங்கிவிடும். மிளகு: தாளிசபத்திரி, மிளகு, சுக்கு, அரிசி, திப்பிலி, கற்கண்டு போன்றவற்றுடன் சேர்த்து, சூரணம் போல தயார் செய்து, கடைகளில் விற்கிறார்கள்.தாளிசாதி வடகம், தாளிசாதி சூரணம் என்ற பெயரில் இது விற்பனை செய்யப்படுகிறது.கட்டுக்கடங்காத சளி, இருமலுக்கு இந்த பவுடரை பயன்படுத்துவார்கள்.. எப்பேர்ப்பட்ட ஜூரத்தையும் இது போக்கிவிடும். சுவாச உறுப்புகள் பலப்படுத்தவும், இந்த சூரணம் பேருதவி புரிகிறது.. சிலர் இந்த பொடியில் பற்களை தேய்க்க பயன்படுத்துவார்கள். இதனால் பல்வலியும் சரியாகி, ஈறுகள் பலம் பெறும்.மூச்சு திணறல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த தாளிசாதி சூரணம் எடுத்துகொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும். அதேபோல, உடல் சோர்வு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த சூரணத்தை சாப்பிட்டால், பலமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். காது பகுதியில் ஏற்படும் இரைச்சல் வந்தாலோ அல்லது மூக்கிலிருந்து நீர் வடிந்தாலோ, அதற்கும் இந்த சூரணம் உதவுகிறது.. வயிறு எரிச்சல், பசி இல்லாத உணர்வு, அஜீரணம், வயிற்றுப்புண்களை இந்த சூரணம் சரிசெய்கிறது.மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்களுக்கும், இந்த தாளசபத்திரி சூரணம் கை கொடுக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை இந்த மூலிகை சூரணம் தடுத்து நிறுத்தும். ஆனாலும், சித்த மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று இதனை மருந்தாக எடுத்து கொள்ளலாம். 

May 30, 2024

70 வயதிலும் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நெல்லிக்காய்வெள்ளரி ஜூஸ்

உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்.சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையானமுடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல்பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.இதற்கு பயன்படுத்தப்படும்பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்றவைட்டமின்களும், மினரல்களும் உள்ளது. . தேவையானபொருட்கள் நெல்லிக்காய்-2, வெள்ளரி அரை, இஞ்சி அரை இன்ச்(அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்), மல்லித்தழை – சிறிதளவு, கறிவேப்பிலை – சிறிதளவு, புதினா- சிறிதளவு, எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.செய்முறைஎலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ளவேண்டும்.காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்குநல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. 

May 29, 2024

நுரையீரல் தொற்றிலிருந்து பாதுகாக்க…

நுரையீரலுக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடியவைகளில் மிக முக்கியமானது, சளி, நிமோனியா, காச நோய், ஆஸ்துமா, புற்றுநோய், குறட்டையினால் வரும் மூச்சுத்திணறல், நுரையீரல் தொற்று நோய்கள் போன்றவைகளாகும்.சர்க்கரை நோய், இதயநோய், உடல்பருமன், சிறுநீரகம், கல்லீரல் செயல்பாடு குறைதல் இவைகளாலும், நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும்.அடிக்கடி இருமல் வந்தால் அலட்சியப்படுத்தக்கூடாது. நாள்பட்ட சளித்தொல்லையாக இருந்தாலும், அதையும் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது.மூச்சு திணறலுடன் நெஞ்சுவலி ஏற்பட்டு, இருமலுடன் ரத்தம் வந்துவிடும். எனவே, 15 நாட்களுக்குமேல், இருமல் இருந்தாலே கவனமாக இருக்க வேண்டும். எலும்புகளிலும், தோல் பட்டைகளிலும் அதிக வலி ஏற்படுவது, திடீரென குரலில் மாற்றம் தென்படுவது இந்த அறிகுறியிருந்தால், காசநோய், ஆஸ்துமாவின் தாக்கம் அதிகமாகிவிட்டது என்றே அர்த்தம். இதுபோன்ற பிரச்சனை இருந்தால், கைவைத்தியம், பாட்டி வைத்தியம் என்றிருக்காமல், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்படாதவாறு, கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இதற்கு நடைபயிற்சி, உடற்பயிற்சிகள் அவசியம்., நுரையீரலுக்கு பலம்தரக்கூடிய உணவுகளை சாப்பிடலாம். சமையலில், நிறைய இஞ்சி - பூண்டு உள்ளவாறு பார்த்து கொள்ள வேண்டும். இதனால், தொற்றுகள், நச்சுக்கள் அழிக்கப்படுவதுடன, நுரையீரல் புற்றுநோயும் எளிதில் அண்டாது. சுவாசப்பாதையும் சீராகும்.ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் நிறப்பழங்களையும், காய்கறிகளையும் உணவில் சேர்க்க வேண்டும். கொய்யா, கிவி, எலுமிச்சை, சாத்துக்குடி, மாதுளை, பைன் ஆப்பிள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு, ஆப்ரிகாட் போன்றவற்றை நிறைய சேர்த்து கொள்ளலாம். அதேபோல, கீரை, முட்டைக்கோஸ், டர்னிப் கீரைகள், ப்ரோக்கோலி, இயற்கையான வைட்டமின் K ஆதாரங்களாகும்.பீட்டாகரோட்டின், வைட்டமின் A நிறைந்த கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம். ஒமேகா 3 சத்துள்ள உணவுகளை நிறைய சாப்பிட வேண்டும்.மீன்கள், பாதாம், வெள்ளரி விதைகளிலும், ஒமேகா 3 சத்து உள்ளதால், தினமும் இவைகளில் தினம் ஒன்றையாவது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.நுரையீரல் வலியிருந்தால், இஞ்சியில் டீ தயாரித்து குடிக்கலாம்.இஞ்சியில் அதிகளவு புரோஸ்டாலான்டின் உள்ளதால், வீக்கத்தால் ஏற்படும் வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும். மார்பு சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் இது தடுக்கும். இஞ்சியை தண்ணீரில் அரைமணிநேரம் ஊறவைத்து, அதற்குபிறகு, டீ தயாரித்து குடிக்க வேண்டும்.துளசியும் நுரையீரல் வலிக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. இதிலிருக்கும் காக்ஸ்- 2 வீக்கத்தை குறைக்கும் பண்பை பெற்றுள்ளதால், துளசியை பச்சையாகவோ அல்லது காயவைத்தோ, டீ தயாரித்தோ தினமும் குடிக்கலாம்.  

May 28, 2024

உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள்  தரும் கிராம்பு

மசாலா பொருட்களில் கிராம்புக்கு தனி இடம் உண்டு. இது உணவுகளில் தனித்துவமான சுவையை சேர்கிறது. உணவுக்கு வாசனை மற்றும் சுவையை கூட்டுவதை தாண்டி கிராம்பு பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்ததாகவும் அமைகிறது.கிராம்பு மரத்தின் உலர்ந்த பூக்களில் இருந்து பெறப்படும் கிராம்புகள் ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்த ஒரு மசாலா பொருளாகும். சரிவிகித உணவின் ஒரு பகுதியாக மிதமான அளவு கிராம்பை சாப்பிட்டு வர நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. எனினும் தினமும் கிராம்பை அதிக அளவில் சாப்பிடுவதால் ஒரு சில பக்க விளைவுகள் ஏற்படலாம். கிராம்பு முக்கியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அற்புதமான மூலமாக அமைகிறது. கிராம்பில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிற்கு எதிராக நமது உடலை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகளில் அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகிறது. வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது.கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டிஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது. மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது. கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் ஒரு சில நபர்களில் கிராம்புகள் அலர்ஜி வினைகளை கூட உண்டாக்கலாம். கிராம்பு சாப்பிட்டதால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. ஏதேனும் மருத்துவ நிலையினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிராம்பு எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

May 27, 2024

ரத்தசோகையை விரட்டியடிக்கும்பீட்ரூட் ஜூஸ்

தேவையான பொருட்கள்-   பீட்ரூட் 1 (தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவேண்டும். பீட்ரூட்டில் செலினியம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், சோடியம், வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. பீட்ரூடை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது சருமத்துக்கு பொலிவைத்தரும். வெயிலால் ஏற்படும் கருமையைப் போக்கும். குடலில் உள்ள நச்சுக்களை கரைத்து வெளியேற்றும்) இஞ்சி – சிறிய துண்டு (பச்சை வாசத்தை போக்கி, சுவையைத்தரும்) எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்(இனிப்புக்கு வெல்லம் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம். பீட்ரூட்டே இனிப்பு சுவையானதுதான். எனவே இது தேவையில்லை. ஆனால் அதன் பச்சை சுவை விரும்பாதவர்கள் இதை சேர்த்துக்கொள்ளலாம்.செய்முறை - அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். இதை அப்படியே பருகவேண்டும். தேவைப்பட்டால் ஜஸ் க்யூப்கள் சேர்த்து பருகலாம். எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.சாறு வடித்தபின் மிஞ்சும் சக்கையை உங்கள் முகம் உடலில் சருமத்தில் அப்ளை செய்து மசாஜ் செய்துகொள்வதால் சருமம் பொலிவு பெறுகிறது. அதை ஜஸ் ட்ரேயில் சேர்த்து ஐஸ் கட்டிகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். அதையும் வைத்து மசாஜ் செய்யலாம்.வயோதிகத்தால் ஏற்படும் பார்வை குறைபாடு மற்றும் ஞாபக மறதி ஆகியவற்றைப்போக்கும். சருமம் பொலிவு பெறும். செரிமானக் கோளாறுகள், அல்சர் மற்றும் வயிறு தொடர்பான அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வாகும். உடலில் உள்ள நச்சுக்களை அடித்து வெளியேற்றும்.

May 24, 2024

கல்லீரல் பாதிப்பு

நமதுஉடலின் இரண்டாவது பெரிய உறுப்பு கல்லீரல். இதுகழிவுகளை வெளியேற்றவும், உணவை ஜீரணிக்கவும், ரத்தம் உறைவதற்கு உதவும் புரதங்களின் உற்பத்தியையும் செய்வதுடன் ஹார்மோன்களை சீர் செய்வது போன்ற பல வகையான வேலைகளை செய்கிறது. எனவேஇதயம், நுரையீரல், சிறுநீரகம்போன்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை கல்லீரலுக்கும் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் ஏற்படும்90 சதவீதநோய்களுக்கு கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகள் தான் காரணமாகின்றன.உடலில் டீடாக்ஸ் பேக்டரியாக செயல்படும் கல்லீரல்,உடலின் கழிவுகளை வெளியேற்றுவதுடன், நமது செரிமான அமைப்பு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம். இல்லையெனில் கல்லீரல் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.கல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள்கல்லீரலில் பிரச்சனை ஏற்படுமாயின் நச்சுக்கள் சரியாக வெளியேறாமல் வயிறு பெருத்து காணப்படுவதுடன் வயிற்றுப் பகுதியில் வீக்கமும் ஏற்படும். பாதங்கள் வீங்குதல், பாதங்களில் கூச்ச உணர்வு ஏற்படுவது போன்றவை தோன்றும்.செரிமானத்தில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், அது செயல்படாமல் இருக்கும்போது வயிற்றுப்போக்கு உண்டாகும்.தோல் அரிப்பு, கை கால்கள் வீங்குவது போன்றவை உண்டாகும்.கவனமின்மை, நினைவாற்றல் இழப்புபசியின்மை எடை இழப்பு, வயிற்று வலி, குமட்டல் போன்றவை ஏற்படும்.கல்லீரல் நன்றாக இயங்க சாப்பிட வேண்டியவை:நெல்லிக்காய், இஞ்சி, பீட்ரூட், மஞ்சள், திராட்சை , வால்நட் போன்றவை கல்லீரலை பாதுகாக்க உதவும்.தினமும் உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வதால் ஹெப்பாடிட்டிஸ்‌ பி மற்றும் சிஆகியவற்றிற்கு காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது.கல்லீரல் நோய்க்கு பப்பாளி பழம் சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்துடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து ஜூஸாக பருக நல்ல பலன் கிடைக்கும்.கீரை சூப், கேரட் ஜூஸ் பருகலாம்.அதிமதுரப் பொடியை டீத்தூளுடன் கலந்து, டீ தயாரித்து பருக சிறந்தது. சில கல்லீரல் நோய்களுக்கு அதிமதுரம் சிறந்த ஆயுர்வேத மருந்தாகும்.கல்லீரல் சுத்தமாக, ஆப்பிள் சீடர் வினிகரை தினம் இருமுறை ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் அளவில் கலந்து பருகுவது நல்லது.முட்டைகோஸ், வெங்காயம், பூண்டு, ப்ராக்கோலி, காலிஃபிளவர் போன்றவற்றில் உள்ள சல்ஃபர் என்சைம் உற்பத்தியை அதிகரித்து உடலின் நச்சுக்களை நீக்க உதவுகிறது.ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் கல்லீரல் நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் குணப்படுத்த முடியும். எனவேகல்லீரல் பாதிப்புக்கான அறிகுறிகள் தெரிந்தால் தகுந்த மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News