காலிஃப்ளவர் என்பது சத்துக்கள் நிறைந்த ஒரு வகை காய்கறியாகும். பார்ப்பதற்கு வெண்மையாக இருந்தாலும், இது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.காலிஃப்ளவரில் வைட்டமின் சி சத்து அதிக அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்து, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் காக்கிறது.காலிஃப்ளவரில் உள்ள குளுக்கோசினோலேட்ஸ் போன்ற தாவர சேர்மங்கள், புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கவும், அவற்றின் வளர்ச்சியை மெதுவாக்கவும் உதவுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன. இதனால் இதய நோய்கள் வரும் அபாயம் குறைகிறது. காலிஃப்ளவரை வேகவைத்து, வறுத்து அல்லது குழம்புகளில் சேர்த்து எளிதாக நம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் உறவினரை பார்க்கச் செல்லும் போது, நாம் வாங்கிச் செல்லும் பழங்களில் சாத்துக்குடிக்கு தான் முதலிடம். அந்த அளவுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டது.சாத்துக்குடி.செரிமான மண்டலத்தை தூண்டக் கூடிய, ,'பிளாவனாய்டு' என்றவேதிப்பொருள் இந்த பழத்தில் அதிக அளவில் உள்ளது.இதனால், வயிறு மற்றும்செரிமானக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, சாத்துக்குடி சிறந்தது.வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஆற்றலும், சாத்துக்குடிக்கு உண்டு. சாத்துக்குடியில், வைட்டமின்,'சி' நிறைவாக உள்ளதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது உடலின் ஒட்டுமொத்த செயல் திறனையும் மேம்படுத்தும். ரத்த ஓட்டம் சீராகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.சாத்துக்குடியில் உள்ள லெமனாய்டஸ்' என்ற வேதிப்பொருள், பல்வேறு வகையான புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்பட்டு, புற்றுநோய் வராமல் நம் உடலை காப்பாற்றுகிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.வெதுவெதுப்பான நீரில், சாத்துக்குடி சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டு வர, உடல் எடை நிச்சயமாக குறைந்து விடும்.கொழுப்பை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் சாத்துக்குடி சிறந்தது.சாத்துக்குடியில் உள்ள, வைட்டமின்,'சி' சத்தானது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, நம் சருமத்துக்கு இயற்கை பொலிவைத் தருகிறது. தோல் சுருக்கம் போன்ற சரும பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.சிறுநீரக பாதிப்பு உள்ளோர், சாத்துக்குடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
தமிழகத்தின் முக்கிய மரங்களில் வேம்புவும் ஒன்று. இதன் இலை முதல் பட்டை வரை கசப்புத்தன்மை கொண்டவை என்றாலும், வேப்பம் பழங்கள் சற்று இனிப்பு தன்மை உடையவை. மருத்துவ குணங்களையும் கொண்டவை. ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான மாதங்களில் பழுத்து உதிரும். இவை, இயற்கையான ரத்தசுத்திகரிப்புமருந்தாகும். தோல் புண்கள் மற்றும் பருக்களை குணப்படுத்துகிறது. உடலில் பல நோய்களை இயற்கையாகவும் வேகமாகவும் குணப்படுத்துகிறது. வேப்பம் பழ விதைகளில் இருந்து எண்ணெய் பெறப்படுகிறது. வேப்ப எண்ணெயில் இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. குறிப்பாக, முடிகளில் வறட்சியை நீக்கி, சருமம், முகத்தை பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். வேப்பம் பழங்கள் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதால், உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, 'பிளாவனாய்டுகள்' என்ற பொருள் நிறைந்து இருப்பதால், உடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழங்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டும் என்று சித்த மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் சில உணவு முறைகளை பின்பற்றினால், கற்கள் கரைய உதவும்.பார்லித் தண்ணீர், இது சிறுநீரக நச்சுகளை நீக்கி, கற்களின் அடர்த்தியைக் குறைத்து அவை சிறுநீர் மூலம் வெளியேற உதவுகிறது. எலுமிச்சை சாறுஇதில் உள்ள சிட்ரேட்டுகள் கற்கள் உருவாவதைத் தடுப்பதுடன், ஏற்கனவே உள்ள கற்களை உடைக்கும் திறனையும் கொண்டுள்ளது. இளநீர் உடலை நீரேற்றத்துடன் வைத்து, சிறுநீரகப் பாதையில் தேவையற்ற தாதுக்கள் படிவதைக் குறைத்து, கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கிறது. மாதுளையில் உள்ள ஆண்டிஆக்ஸிடண்டுகள் மற்றும் இயற்கை அமிலங்கள், கற்கள் உருவாகக் காரணமான தாதுக்கள் படிவதைத் தடுக்கின்றன.கொத்தமல்லி இயற்கையாகவே சிறுநீரக செயல்பாட்டை ஊக்குவிக்கும் கூறுகளைக் கொண்டுள்ளது. மேலும் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை நீக்கவும் செயல்படுகின்றன.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள் கொத்தமல்லி சாறு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கற்களை விரைவில் அகற்றலாம்.தக்காளியில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் பிரச்சனையை போக்க உதவும்.சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், தக்காளி சாற்றில் உப்பு மற்றும் மிளகு தூள் கலந்து குடிக்கலாம்.தினமும் அதிக தண்ணீர் குடிப்பதும், உணவில் உப்பின் அளவை குறைப்பதும் சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்க அத்தியாவசியமாகும். இந்த உணவு முறைகளை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
எண்ணெய் அளவு குறைச்சு சமைக்கணுமா?வதக்கும்போது எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரில் வதக்கு- சுவைகுறையாது. கொழுப்பு கூடாது. உப்பை கட்டுப்படுத்தணுமா?மிதமாக உப்புப் பயன்படுத்துங்க. அதற்குப் பதிலா மிளகு, இஞ்சி, பூண்டு போடுங்க- ருசியும். ரத்த அழுத்தமும் சமநிலை!சர்க்கரை நோயாளிகளுக்கா சமைக்கிறீங்க?வெள்ளை அரிசிக்கு பதிலாக பூரண சாமை அல்லது பசுமை புழுங்கல் அரிசி பயன்படுத்துங்கள் - இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவும்.தூள் மசாலா குறைக்கணுமா?அதிக சாம்பார் தூள், கிராம்பு, மிளகு எல்லாம் சிறிதாகவே போடுங்க மூலநோய், அமிலம் வராம பார்த்துக்கொள்ளும்சரியான கிரீன் சாப்பாடுவேண்டுமா?வாரத்துக்கு 3முறை முருங்கைக் கீரை மேத்தி கீரை போல் சத்தும் நாரும் நிறைந்த கீரைகளைச் சேர்க்கவும்.வெந்தயம் - மூட்டுவலி இல்லாம வைக்கும்!அடிக்கடி உணவுகளில் சிறிது வெந்தயம் சேர்த்துசமைக்கவும் -அது எலும்புகளுக்கு நல்லது.
கருப்பு திராட்சையில் வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சூரிய கதிர்கள் உமிழும் வெப்பம் மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகளில் இருந்து சருமத்தை காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நிறைவாக சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கவும் செய்யும்.திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை தமனிகளில் அடைப்பு உருவாவதை தடுப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.கருப்பு திராட்டையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. ப்ரீ ரேடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றன.கருப்பு திராட்சையில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.மற்ற பழங்களை விட கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்.கருப்பு திராட்சையில் பாலிபினால்கள், அந்தோசயின்கள் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும். முதுமைக் காலத்தில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கவும் வழிவகை செய்யும்.ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது.கண் புரை வந்தாலும் நீக்குகிறது.சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.
வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த, புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு காய்கறி ஆகும். வெள்ளரிக்காயில்95% வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக கோடை காலங்களில், உடல் நீரேற்றத்துடன் இருக்க இது உதவுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதிக நீர்ச்சத்து காரணமாக, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. இதனால் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இதில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வை தந்து, தேவையில்லாத உணவு பழக்கத்தை குறைத்து, எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் அதிக நீர்ச்சத்து காரணமாக, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. கண்களுக்கு கீழே வைப்பதன் மூலம் வீக்கம் மற்றும் கருவளையங்கள் குறையும்.
உடல் எடை குறையவும்.மலச்சிக்கலை நீக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, மேலும், சரும் பிரச்சனைகளான பொடுகு மற்றும் அரிப்பையும் போக்க வல்லது.புடலங்காய் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய். எனவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க புடலங்காய் உதவுகிறது.சருமத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு புடலங்காய் ஒரு நல்ல தீர்வாகும்.செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கொத்தவரங்காய் என்பது தென்னிந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. இது சுவையில் சற்று கசப்புத்தன்மை கொண்டிருந்தாலும், அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாகப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல முக்கிய சத்துக்களைக் கொண்டிருக்கும் கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.கொத்தவரங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள'குவாரான்' என்ற கலவை, குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் கொத்தவரங்காயில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. கொத்தவரங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தி, அவற்றை பலப்படுத்துகின்றன. கொத்தவரங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவுகிறது. இதனால், பசி உணர்வு குறைந்து, அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். இது, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
வாழைப்பழம்நன்குபழுத்துதோலில்கருப்புஅல்லதுபழுப்புநிறமாற்றம்அடைந்தபழங்களில்தான்சத்துக்கள்கொட்டிகிடைக்கின்றன.வாழைப்பழத்தில் ரிப்டோபின் அதிகளவில் இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இயற்கையான முறையில் தேவையான அளவு செரடோனினை சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளியுள்ள வாழைப்பழம் உண்பதன் மூலம் ரிப்டோபின், செரடோனினாக மாற்றப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.வாழைப்பழத்தில் பிராக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் என மூன்றின் கலவை அதிகமாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கின்றது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக்கவும் உதவுகிறது.தினமும் 2 புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால் மூளையின் நலன் காக்கப்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் செல்லுலார் செயல்பாட்டை சீராக்குகிறது.ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும். தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தில் உள்ள கரும்புள்ளிகள், புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஒரு பொருளான ட்யூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர்(TNF) அதிக அளவில் இருப்பதை குறிக்கிறது. பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம்.