25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Sep 09, 2024

மூட்டு வலி குணமடைய.....

பூண்டு இலைகளை வேப்ப எண்ணெய்யில் வதக்கி மூட்டுப் பகுதியில் கட்டலாம். மூக்கிரட்டை வேரை நன்கு கசக்கி, தண்ணீரில் காய்ச்சி காலை, மாலை பருகலாம். கொய்யா இலைகளை அரைத்து, மூட்டுப் பகுதியில் பூசலாம்  சூடான பாலில் 3 ஏலக்காய், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து இரவில் அருந்தலாம். அத்திப்பாலை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் குணமடையலாம்.

Sep 07, 2024

உடலுக்கு குளிர்ச்சி தரும் ஆரைக்கீரை

ஆரைக்கீரைகுளிர்ச்சியை உண்டு பண்ணக்கூடியது.மழை மற்றும் குளிர் காலத்தில் தான் இந்த கீரை எங்கும் கிடைக்கும், கோடை காலத்தில் கிடைப்பது அரிது.நீர் நிலைத்து நிற்கும்  இடத்தில் செழித்து வளரும், கீரையின் ஒரே நரம்பின் உச்சியில், நான்கு இலைகளுடன் காணப்படும்.பச்சை நிறத்துடன் மெல்லியதாகவும், வட்டமாக இருக்கும், சமைத்தால் புளிப்பு ருசியுள்ளதாக இருக்கும், இதற்கு புளியாரை என்று கூறுவார்கள்.ஆரைக்கீரை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டு பாதியாக காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.ஆரைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தினமும் பாலில் அரைத் தேக்கரண்டி அளவு எடுத்து மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி  அதிகரிக்கும்.மன அழுத்தப் பிரச்சினைகள் இருப்போர் தொடர்ந்து இந்த கீரையை சாப்பிட்டு வர பிரச்சினை சரியாகும். மன அழுத்தம்,வலிப்பு நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவத்தில் ஆராக்கீரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.இந்த கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிடலாம், சாம்பார் அல்லது சின்ன வெங்காயம் சேர்த்து பொறியலாகவும் செய்யலாம்'.சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் இறங்கும், இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கட்டுப்பட்டு, சரியான அளவில் வெளியேறும்.சிலருக்கு ரத்தத்தில் பித்தம் அதிகமாகி அமிலத்தன்மை ஏற்பட்டு பித்த கோளாறுகளை உண்டுபண்ணும், தொடர்ந்து இந்த கீரையை சமைத்து சாப்பிட்டு வந்தால் ரத்த பிரமேகம் நோய் முற்றிலும் குணமாகும்.பித்த கிறுகிறுப்பு, பித்த வாந்தி, தலைவலி போன்ற பித்த சம்பந்தமான வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றல் இக்கீரைக்கு உண்டு.இக்கீரையை உணவில் உட்கொண்டு வர, ரத்த போக்கும், வெள்ளைபாடு நிவர்த்தியாகும். 

Sep 06, 2024

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க....

இதயத்தைப் போலவே சிறுநீரகமும் நம் உடலின் முக்கியமான உறுப்பு.உடலில் உள்ளஅழுக்குகளை அகற்றும் வேலையை சிறுநீரகங்கள் செய்கின்றன.ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்சிவப்பு திராட்சையில் உள்ள ஃபிளாவனாய்டு சிறுநீரக வீக்கத்தைத் தடுக்கிறது.ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரிகளை சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்தை சுத்தப்படுத்தும்.ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு சிறுநீரகத்தை சுத்தம் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.தர்பூசணி தண்ணீர் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவும்.

Sep 05, 2024

ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் கேரட்

இயற்கையாகவே இனிப்புச் சுவை உடைய. கேரட்டைச் சமைத்து உண்பதை விடப் பச்சையாகச் சாப்பிடும்போது அதில் உள்ள பெரும்பாலான சத்துகள் விரயமாகாமல் உடலுக்குள் போகும்.பீட்டா கரோட்டின், நார்ச்சத்து, பாஸ்பரஸ் ஆகியசத்துகள் இதில் நிறைய இருக்கின்றன. பொட்டாசியம், ஃபோலிக் அமலம், கோலின், கால்ஷியம், கார்போஹைட்ரேட், வைட்டமின் சி ஆகியவை ஓரளவும், மிகக் குறைந்த அளவு இரும்புச்சத்தும் கேரட்டில் இருக்கிறது. கண் பார்வை கூர்மையடையவும், தோல் மற்றும் எலும்பு உறுதி ஆகவும், ரத்த விருத்திக்கும் இது மிகவும் நல்லது.வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் ஆரோக்கியமான கண்ணுக்கும், சருமத்துக்கும், உடல் வளரச்சிக்கும் மிகவும் உதவுகிறது.இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு அகலும், மேலும் குடல் புண் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்கும்.ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைப்பதால் இதய நோய்களை அண்டவே விடாது. கேரட்டில் உள்ள நார்ச்சத்து செரிமானத்துக்கு உதவுவதால் வாரத்தில் இரண்டு நாட்களாவது சமையலில் கேரட்டைப் பயன்படுத்துவது உடலுக்கு நல்லது. பக்கவாதத்தை அண்டவிடாது.

Sep 04, 2024

உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்கள்

சுரைக்காயில்சுமார்90 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வைட்டமின் ஏ, பி, சி, ஈ, கே, இரும்பு, போலேட், மெக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற'சத்துக்கள் அதிகம் உள்ளதால் இதயத்தை பராமரிக்கிறது.சுரைக்காயையும், சிறிது புதினா இலைகளையும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனுடன் சிறிது இஞ்சி,ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம் ஆகியவற்றையும் சேர் க்கவும்.அதனுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி, அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது கல்உப்பு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.இவ்வாறு தயாரித்த சுரைக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தையும் பராமரிக்கிறது.சருமம் பளபளப்பாக இருக்க உதவும்..இஞ்சியை தோல் சீவி, கழுவி சுத்தம் செய்து, துருவி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கண்ணாடி பாட்டிலில், இந்த துருவிய இஞ்சி, சீரகப்பொடி, எலுமிச்சை சாறு மற்றும் கல் உப்பு சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.இந்த கலவையில் இருந்து ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்தால் இஞ்சி ஜூஸ் ரெடி. இதனை மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதற்கு, அரை மணி நேரத்திற்குமுன்னதாக எடுத்துக்கொண்டால் நல்ல ப லன் கிடைக்கும்.இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால், அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம், வாய்வு தொல்லைஆகியவைநீங்கி'ஜீரணசக்திஅதிகரிக்கும்.அதேபோல் இது உடலில் கெட்ட கொழுப்புகளை தங்கவிடாமல் உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகிறது.

Sep 03, 2024

மூக்கிரட்டை கீரை சிறுநீரகம் மற்றும் மூலம் பிரச்சனைகளை சரி செய்யும்

 மூக்கிரட்டை கீரை வீட்டை சுற்றியும், சாலையோரங்களிலும், வயல் வெளிகளிலும் தரையில் படர்ந்திருக்கும்.சிறுநீரகம் மற்றும் மூலம் ஆகிய 2 பிரச்சனைகளுக்கும் தீர்வு காண இந்த மூக்கிரட்டை கீரையை தொடர்ந்து சாப்பிடலாம்.மூக்கிரட்டை கீரையை சுத்தம் செய்து அம்மியில் மை போல அரைத்து, நெல்லிக்காய் அளவு எடுத்து வாயில் போட்டு விழுங்கி வெதுவெதுப்பான நீரைக் குடிக்க வேண்டும்.இப்படி காலை மாலை என தினமும்2 வேளை சாப்பிட்டு வந்தால் மூலம் குணமாகும். அதேபோல, மூலக்கட்டி இருந்தாலும் சுருங்கி குணமாகும்.இந்த கீரையுடன் அதன் தண்டுகளையும் சேர்த்து, நறுக்கி ஒரு பாத்திரத்தில்4 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஒரு டம்ளர் வரும்வரை காய்ச்சி குடித்தால் சிறுநீரகத்துக்கு நல்லது.சிறுநீரகத்தில் கற்கள் இருந்தாலும், தொற்றுநோய்கள் இருந்தாலும் இந்த கீரை அதை குணப்படுத்திவிடும்.மஞ்சள் காமலை இருப்பவர்கள் கீழாநெல்லியுடன் இந்த கீரையை சேர்த்து சாப்பிடலாம்.இந்த இலைகளை பேஸ்ட் போல அரைத்து கண்களில் தடவ கண் இமை வீக்கம் குணமாகும். இந்த வேரை உலர்த்தி பொடி செய்து வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் கண் நோய்கள் குணமாகும்.இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், உடல் எடையில் மாற்றம் காணலாம்.மூக்கிரட்டை பொடியானது சிறந்த மலமிளக்கியாகவும்செயல்படுகிறது. மேலும் சில வகையான புற்றுநோய்கள் தீவிரமாவதையும் குறைக்க உதவுகிறது.

Sep 02, 2024

முட்டைகோஸ் ஜூஸ் குடிப்பதால் அல்சர் குணமாகும்

முட்டைகோஸில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.முட்டைக்கோஸை பொடிபொடியாக நறுக்கி அதனுடன் சிறிது இஞ்சி, சீரகம், கல் உப்பு, எலுமிச்சம் சாறு, மிளகுதூள், புதினா இலைகளுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஜூஸை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது.அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமாகும். மேலும் இது வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி இளமையுடன் இருக்க உதவும். மருகரும்புள்ளிகள், பருக்கள் போன்ற சரும பிரச்னைகளுக்கு, நல்ல பலன் தரும்.சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது.

Aug 30, 2024

வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும் வில்வம்

வில்வத்தில் ஏஜிலைன், மார்மின், மார்மிலோசில் போன்ற மருத்துவ வேதிப் பொருட்கள் இருக்கின்றன. இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என, அனைத்தும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.வில்வ இலையில் துவர்ப்பு சத்து அதிகம். வில்வ இலையை வதக்கி, வீக்கங்களுக்கு கட்டினால், வலி மற்றும் வீக்கம் குறையும் வயிற்றில் உண்டாகும் புண்கள் மற்றும் புற்றுநோயை வில்வ இலைச் சாறு குணப்படுத்துகிறது. வயிற்று சவ்வுகளில் உள்ள புண்களை ஆற்றும் அற்புத சக்தி வில்வத்திற்கு உண்டு.வாதம் மற்றும் கப நோய்களை தீர்க்கிறது. மேலும், உடலில் உள்ள பித்தத்தை சமன்படுத்துவதோடு, ஜீரண சக்தியையும் மேம்படுத்துகிறது.ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. இதனால், நீரிழிவு பாதிப்புக்கான மருந்துகளில் வில்வம் அதிகம் சேர்க்கப்படுகிறது.மேலும், இதை கண்களுக்கு மேல் ஒத்தடம் கொடுத்தால், கண் சிவப்பு, வலி, வீக்கம் குறையும். வில்வ இலையை அரைத்து, 10 மி.லி, அளவு எடுத்து, 50 மி.லி, தயிரில் கலந்து குடித்தால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும்.வில்வ காயை வெயிலில் காய வைத்து, அதை எரித்து கரியாக்கி, பொடி செய்து தினமும் பல் துலக்கி வந்தால், பற்களில் உண்டாகும் நோய்களை போக்கும்.வில்வ மரத்தின் பட்டையை நீரில் கொதிக்க வைத்து, வடி கட்டி, காய்ச்சலால் பாதிக்கப்படுவோருக்கு கொடுக்கலாம். இது, எல்லாவித காய்ச்சல்களையும் கட்டுக்குள் கொண்டு வரும்.

Aug 29, 2024

கோதுமைப்புல் பொடியின் மருத்துவ குணங்கள்

 கோதுமைப்புல்பொடியானது உணவு செரிப்பதை எளிதாக்குகிறது. சிவப்பணு மற்றும் வெள்ளையணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.எடை குறைப்பில் உதவுகிறது.இரத்தத்தில்pH அளவை சமப்படுத்துகிறது. அற்புதமான நச்சு நீக்கும் தன்மை உள்ளது.இரத்த சோகையை குணப்படுத்துகிறது. கோதுமைப்புல் பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். கோதுமைப்புல் பொடியைக் கொண்டு, ஈறுகளை மசாஜ் செய்து வந்தால், ஈறுகள் வலிமையடைந்து, ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். வீட் கிராஸ் பவுடரைத் தவறாமல் சாப்பிட்டு வந்தால், கண்கள் பார்வை பொலிவு பெறும். இரத்தநாளங்கள்தடிப்புறுவதைத்தடுக்கிறது. இரத்தத்தைசுத்திகரிக்கிறது. கருவுறும்வாய்ப்பைஅதிகரிக்கிறது..இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், வீட்கிராஸ் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. சர்க்கரைநோயை, அது எந்த நிலையில் இருந்தாலும், கட்டுப்படுத்துவதில் இது சிறப்பிடம் வகிக்கிறது. மிகவும் பயன் தரக்கூடிய சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், வீட் கிராஸ் பவுடரானது மூல நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கையான நிவாரணியாகக் கருதப்படுகிறது. கோதுமைப்புல்பொடிக்கு கிருமி நாசினித் தன்மை உள்ளதால், இதை புண்கள், காயங்கள், வெடிப்புகள், பூச்சிக்கடிகள், வெட்டுக்காயங்கள், சிராய்ப்புகள் ஆகியவற்றைக் குணப்படுத்த பயன்படுத்தலாம். மேலும் தேமலை நீக்கவும் இது பயன்படுகிறது. வெயிலால் கருமையடைந்த சருமம், கொப்புளங்கள் மற்றும் பித்தவெடிப்புகளைக் குணப்படுத்தவும் இது உதவுகிறது.

Aug 28, 2024

ஆஸ்துமா நோயாளிகள் செய்ய….

ஆஸ்துமா நோயாளிகள் முறையாக மருத்துவரைக் கலந்தாலோசிப்பது  அவசியம். வாகனம் ஓட்டும் போதும். சமையல் செய்யும் போதும், ஒட்டடை அடிக்கும் போதும் துணியால் முகத்தை மூடிக்கொள்வது அவசியம் ஆஸ்துமா நோயாளிகள் மருத்துவரிடம் தாங்கள் பிற நோய்களுக்கு உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளைக் காட்டுவது மிக முக்கியம்.யோகா பயிற்சி அவசியம். சரியாக உட்காரும். உறங்கும் முறைகள் தெரிய வேண்டும். தொப்பை, உடல் பருமனைக் குறைக்கவும். மன தைரியம், உற்சாகம், ஊக்கம் ஆகியவற்றை ஆலோசனை மூலம் அதிகரித்தல் வேண்டும். ஆஸ்துமா சிகிச்சையை மருத்துவரின் அனுமதியோடு மட்டுமே தொடங்க வேண்டும். தேவைப்படும் போது நீராவி பிடித்தல்.சைனஸ்,வயிறு எரிச்சல் போன்றவை தீர்க்கப்பட வேண்டும். இன்ப்ளுயன்சா, நிமோனியா தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். மருந்துப் பம்புகள் உபயோகிக்கும் முறையைச் சரியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். தேவையெனில் சக்கர நாற்காலியை உபயோகிக்கத் தயங்கக்கூடாது. காற்றோட்டமான அறை, வீடு அவசியம். வீட்டில் அவசர உதவிக்கு அழைப்பு மணி (Alaram) தேவை.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News