25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Feb 01, 2024

காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும்

தங்களது உடல்நல பிரச்சனைகளுக்கு மருந்து மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக,,பலரும் பின்பற்றி வருவது காலையில் எழுந்ததும் ஏதேனும் ஒரு ஜூஸைக் குடிப்பது.இங்கு காலையில் எந்த ஜூஸ் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் பாகற்காய் ஜூஸ்உங்களுக்கு சரியாக பசி எடுப்பதே இல்லை,உங்கள் உடலில் உள்ள பூச்சிகளை அழிக்க காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பாகற்காய் ஜூஸ் குடியுங்கள். இது உங்களின் செரிமான திரவத்தின் அளவை அதிகரித்து, பசியின்மையைப் போக்கும் மற்றும் வயிற்றில் உள்ள பூச்சிகளையும் அழிக்கும். மேலும் பாகற்காய் ஜூஸ் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்பாட்டுன் வைக்கும்.வேப்பிலை ஜூஸ்வேப்பிலை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், இரத்த சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்கலாம். முக்கியமாக இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற அற்புதமான ஓர் ஜூஸ். உண்மையிலேயே மிகவும் கடினமான ஒன்றுகேரட் ஜூஸ்நீங்கள் காலையில் கேரட் ஜூஸைக் குடித்து வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்துவதோடு, கேரட் ஜூஸில் உள்ள அதிகப்படியான பீட்டா-கரோட்டீன் முதுமையைத் தடுக்கும்.சுரைக்காய் ஜூஸ்உங்களுக்கு சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருக்கிறதா? அப்படியெனில் சுரைக்காய் கொண்டு ஜூஸ் தயாரித்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான அமிலம் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரைக்காயில் சக்தி வாய்ந்த சிறுநீர்ப் பெருக்கியாக செயல்படும்பீட்ரூட் ஜூஸ்பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்ஸ் இரத்த நாளங்களை விரியச் செய்து உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வரும் அபாயம் குறையும்.அருகம்புல் ஜூஸ்அருகம்புல்லில் நோய்த் தீர்க்கும் பண்புகள் ஏராளமாக உள்ளது. குறிப்பாக அமினோ அமிலங்கள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், வயிறு மற்றும் செரிமான பாதைகள் சுத்தமாகி, செரிமான பிரச்சனைகள் தடுக்கப்படும்.கற்றாழை ஜூஸ்கற்றாழை சரும அழகை அதிகரிக்க ,உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கற்றாழை ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படுவதோடு, உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் எடை வேகமாக குறையவும் உதவும்.

Jan 30, 2024

செரிமான பிரச்சினைகளை சீராக்கும் சப்போட்டா பழம்

சப்போட்டாவில் அதிக நார்ச்சத்து இருப்பதால் இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. மேலும், பிற செரிமான பிரச்சினைகளை சீராக்க உதவுகிறது. தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் சப்போட்டாவில் இருப்பதால் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.புரோட்டின், இரும்புச்சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி தரக்கூடியது.கண்பார்வையை அதிகரிக்கச்செய்வதோடு தோல் பாதிப்படையாமல்பாதுகாக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணமுடையவை.கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன்பயக்கும். இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில்  ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள்,  இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நன்கு தூக்கம் வரும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த  மயக்கத்திற்கும் இது நல்ல மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும்  பொடித்திட்டு நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப்  பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

Jan 25, 2024

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் கேரட்

கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின்A, பையோடின், வைட்டமின்B6, வைட்டமின்K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை இரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் குடல் புண்கள் வராமல்  தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், மூல உபத்திரம், வயிற்றுவலி இருப்பவர்கள், கேரட்டை திப்பியில்லாமல் அரைத்து ஜுஸாகக் குடிக்கலாம், விரைவில் குணமடையும்.கேரட்டில் வைட்டமின் பி7, பயோட்டின் உள்ளது. இது தலைமுடிக்குடானிக் போல என்று சொல்லலாம். பயோட்டின் இருந்தால் தலை முடி மீண்டும் வளர உதவும். மேலும் முடியின் வேர்களையும் இது வலுவாக்கும். கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டினும் முடி ஆரோக்கியத்துக்கு பெரிதும் உதவுகிறது.இன்சுலின் அதிகம் சுரக்க உதவுகிறது. கேரட், சர்க்கரை நோயாளிகள் கேரட்டை அளவோடு எடுத்துக் கொள்ளலாம். கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி கொடுக்கும் போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்க 48 நாட்கள் கேரட் ஜுஸ் குடிப்பது  நல்லது.சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சல், அந்த இடத்தில் உருவாகும் புண் போன்றவற்றைக் குணமாக்க, கேரட்டை  பச்சடியாக செய்து சாப்பிடலாம், உடனடி பலன் கிடைக்கும்.மாலை கண் நோயை வராமல் தடுக்க உதவும். இரத்ததில் உள்ள கொழுப்பை குறைத்து புற்று நோய் வராமல் காக்கிறது. கேரட்டை பச்சையாக சாப்பிடுவதன் மூலம் இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும்.கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை  வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை காரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம். விட்டமின் ஏ இதற்கு காரணமாகிறது. கேரட் சாப்பிடுவதால் முகம் பொலிவு பெற முடியும்.பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும். வாயுத் தொல்லையால் அவதிப்படுவர்களுக்கு கேரட் ஜுஸ் மிகவும் நல்லது. பசியைத் தூண்டி, சிறுநீர் பெருக்கியாகவும்  செயல்படும். சருமம் வறண்டு போய், அரிப்பு ஏற்பட்டால், கேரட்டைத் துருவி சாலட் ஆகச் செய்து சாப்பிடலாம்.

Jan 24, 2024

பெருஞ்சீரகம் விதைகள்

பெருஞ்சீரக விதைகள் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எளிதாகக் காணப்படுகின்றன ஒரு பொருள் ஆகும். பெருஞ்சீரகம் விதைகளை கடுமையான உணவுகளை சாப்பிட்ட பிறகு நல்ல செரிமானத்திற்கும், புத்துணர்ச்சிக்கும் பயன்படுத்துகிறோம், ஆனால் இந்த விதைகள் ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டிருக்கின்றன. தினசரி சோம்பு டீ குடிப்பது உடலுக்கு நல்லது. எனவே அவற்றை தினமும் உங்கள் உணவில் சேர்ப்பது நல்லது.கால்சியம், வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த, சோம்பு(பெருஞ்சீரகம்) விதைகள், எடையை குறைப்பது மட்டுமல்லாமல், புற்றுநோயைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது, ஏனெனில் அவற்றில் அனெத்தோல் என்ற கலவை உள்ளது. மார்பக புற்றுநோய் செல்களை அழித்து பரவுவதை நிறுத்துகிறது. மேலும் இதிலுள்ள அனெத்தோல் பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியைத் தூண்டுவதாகவும் கூறப்படுகிறது.செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.இதயத்திற்கு நல்லது, மாதவிடாயின் போது வலியைப் போக்க பயனுள்ளதாக இருக்கும். இது, புழு தொல்லை, மலச்சிக்கல், வாத கோளாறுகள், எரியும் உணர்வு, பசியின்மை, உணவில் ஆர்வமின்மை, வாந்தி மற்றும் இருமல் மற்றும் சளி ஆகியவற்றிற்கும் உதவுகிறது.உடல் தளர்ச்சி, நாள்பட்ட சுவாசக் கோளாறுகளில் மருந்தாக இருக்கும்.வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.பித்த தோற்றத்தின் இரத்தப்போக்கு கோளாறுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Jan 23, 2024

நார்ச் சத்து அதிகம் இருக்கும். பூசணிக்காயின் நன்மைகள்

பூசணிக்காயில் நார்ச் சத்து அதிகம் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.இரத்த அழுத்தம் மற்றும் இரத்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும் அடிக்கடி பூசணிக்காயை உணவில் சேர்ப்பதால், இதய நோய் மற்றும் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. பூசணிக்காய் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும்.பூசணிக்காயின் விதைகளில் ஸ்டெரைல் கிளைகோஸைட் மற்றும் கொழுப்பு அமிலம் இருப்பதால், இவை நமது உடம்பில் புற்று நோய் கட்டிகளை (Cancer Cells) ஏற்படுத்தும் செல்களை அழித்து புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது.பூசணி சாற்றுடன் ஒரு தேக்கரண்டி நெல்லி சாறு அல்லது எலுமிச்சை சாறு கலந்து தினமும் குடிப்பதால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை தாக்குவதை தடுக்கிறது.பூசணிக்காய்யை தினமும் நம் உணவில் சேர்த்து வந்தால், வயிற்றிலுள்ள நாடாப்புழுக்களை அழித்து, மூலப் பிரச்சனைகளுக்கு பூசணிக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.ஆயுர் வேதம் மருத்துவம் மற்றும் சித்த மருத்துவத்தில் வெண் பூசணிக்காயின் பூவை மஞ்சள் காமாலை, சீதபேதி மற்றும் இருமலைப் (Cough) போக்கும் சிறந்த மருந்தாக பயன்படுத்துகின்றனர்.பூசணிக்காய் சாப்பிடுவதால், நம் உடம்பில் உள்ள எலும்புகள் பலவீனமாவதை தடுக்கிறது. மேலும் இதில் இருக்கும் நார்ச் சத்துக்கள் சீரண உறுப்புகளுக்கு பலத்தை அதிகப்படுத்தி, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.வெண்பூசணிக் காயின் முற்றிய காய்கள் தலைவலி, நெஞ்சு சளி, மூச்சிரைப்பு ஆகியவற்றுக்கு சிறந்த மருந்தாக இருப்பதோடு, சிறுநீரக தொடர்பான நோய்களையும் தடுக்கிறது.வெண்பூசணிக் கொடியின் தண்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின்(Vitamin) சத்துக்கள் நமது உடம்பில், புதிய செல்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.பூசணியில் பொட்டாசியம் சத்து மிகுதியாக இருப்பதால், நமது உடம்பின் அதிக ரத்த அழுத்தத்தை தடுத்து, இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமல் பாதுகாக்கிறது.

Jan 20, 2024

எலும்புகள் வலுவாக இருக்க…

ஆரோக்கியமான உடலுக்கு, எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருப்பது முக்கியம். வயது ஏற ஏற, உடலில் உள்ள எலும்புகளும் பலவீனமடைய ஆரம்பிக்கும். குறிப்பாக35 வயதுக்குப் பிறகு, உடலில் கால்சியம் குறைபாடு அதிகரிக்க தொடங்குகிறது. இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் எலும்புகள் வளர வளர, எலும்பு ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் மற்றும் வைட்டமின் டி உடன், வேறு சில ஊட்டசத்துக்களும் எலும்புகளுக்கு அவசியம். தவறான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக எலும்புகளும் பலவீனமடையத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எலும்புகளை வஜ்ரம் போல் வலுவாக பராமரிக்க  உண்ண  வேண்டிய உணவுகள். எலும்புகளை வலுப்படுத்த, வெல்லம் சாப்பிட வேண்டும். வெல்லத்தில் இருந்து உடலுக்கு நல்ல அளவு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து கிடைக்கிறது..எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி, வைட்டமின் டி மற்றும் கால்சியம் காணப்படுகின்றன. இதற்கு ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, ஸ்ட்ராபெரி மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை தினமும் சேர்த்துக்கொள்ளலாம்.குழந்தைகளின் உணவில் முட்டையை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இது அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. முட்டை மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கும். எலும்புகளை வலுப்படுத்த, முந்திரி, பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும்திராட்சை போன்றஉலர் பழங்களைச்சேர்க்கவும்.உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பீன்ஸ் அதிகம் சேர்க்க வேண்டும். இவை வைட்டமின் ஏ, சி மற்றும் கே மற்றும் ஃபோலிக் அமிலத்தை வழங்குகின்றன.உடலில் கால்சியம் குறைபாட்டை போக்க தினமும் 1 கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட எலும்புகள் வலுவடையும்.எலும்புஆரோக்கியத்திற்கு காளான்களை,சாப்பிடுபவர்களுக்கு கால்சியம், வைட்டமின்டி, வைட்டமின்பி12 கிடைக்கும்.எலும்புகளை வலுப்படுத்த, உங்கள் உணவில் பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.எலும்புகள் மற்றும் பற்களுக்கு நன்மை பயக்கும், கொய்யாவை உணவில் கண்டிப்பாக சேர்த்துக்கொள்ளுங்கள்.வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளுக்கு மிகவும் முக்கியமானது. உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தால், கால்சியம் குறைந்து எலும்புகள் பலவீனமடையும். 

Jan 18, 2024

ரெய்ஷி காளான்!

காளான். பலருக்கும் பிடித்த அற்புதமான உணவு வகை. சாப்பிட உகந்த காளான் இனங்கள் பல உள்ளன. மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது. அதில் ஒருவகை தான், ரெய்ஷி காளான். இது, லிங்ஜி எனவும் அழைக்கப்படுகிறது. கிழக்கு ஆசியா பகுதியை சேர்ந்தது.ஆசிய நாடான சீன பாரம்பரிய மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது கசப்பு சுவை உடையது. இதில், வெவ்வேறு உயிர் வேதியியல் சேர்மங்களான,டிரைடர் பெனாய்டு, பாலி சாக்கரைடு, பெப்டிடோகிளைகான் மூலக்கூறுகள் உள்ளன.இந்த காளான், நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி ஆரோக்கியம் தருகிறது. தொற்று நோயை தடுக்க உதவுகிறது. மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது.இதில், ஆன்டி ஆக்சிடன்ட் அதிக அளவில் உள்ளது. உடல் வீக்கங்களை குறைக்கிறது. தசை வலியை நீக்குகிறது. கல்லீரலை ஆரோக்கியமாக்க உதவுகிறது. உடனடியாக ஆற்றலை உடலுக்கு கொடுக்கிறது..

Jan 15, 2024

கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்  உலர்ந்த பழங்கள்

உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால் நம் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். வால்நட் தினமும் வால்நட் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படுகிறது. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகளவு இருப்பதால், உங்கள் இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை வழங்குகிறதுபெக்கன் கொட்டைகள் : இதில் நம் உடலுக்கு ஆரோகியத்தை தரும் கொழுப்புச் சத்துகளும் ஆண்டி ஆக்சிடெண்டும் அதிகளவு உள்ளது. இவை இதய நோய்களிலிருந்து நம்மை காக்கிறது. உடல் எடை குறைக்க விரும்புவர்கள் இதை அடிக்கடி தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.பாதாம் நார்ச்சத்து, மாக்னீசியம், விட்டமின் ஈ போன்ற பல சத்துகள் பாதாம் பருப்பில் உள்ளது. நமது கொலஸ்ட்ரால் அலவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது பாதாம். மேலும், நமது ரத்த ஓட்ட்த்தில் விட்டமின் ஈ-யை அதிகப்படுத்தில், ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. ஆகவே தினமும் குறைந்தது 5 பாதாம் பருப்பு சாப்பிட்டால் உங்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.பிஸ்தா நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், நார்ச்சத்து, ஆண்டி ஆக்சிடெண்ட் ஆகியவை பிஸ்தாவில் அதிகளவு உள்ளது. இதிலிருக்கும் பொட்டாசியம், நம் உடலில் உள்ள சோடியம் அளவை குறைக்க உதவுகிறது. முக்கியமாக, தினமும் பிஸ்தாவை சாப்பிடும் போது நம் உடலில் ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவு குறைகிறது.பேரிட்சை பழம்  நம் உடலுக்கு உடனடி ஆற்றலை கொடுப்பது பேரிட்சை பழம். இதில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. மேலும், இதை தினமும் சாப்பிடுவதால் ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவை குறைக்க உதவுகிறது.வேர்க்கடலை  இதற்கு முன்பு சொல்லப்பட்ட உலர்ந்த பழங்களை எல்லாம் தினமும் சாப்பிட வேண்டுமென்றால் கொஞ்சம் கூடுதல் செலவாகும். ஆனால் வேர்க்கடலை அப்படியல்ல. விலை மலிவானது மட்டுமல்ல; நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக்கொள்ளவும் இவை பெரிதும் உதவுகிறது.ஹேசல் நட்ஸ்  இதில் ஆண்டி ஆக்சிடெண்டும் நம் உடலுக்கு அரோக்கியத்தை தரக்கூடிய கொழுப்புகளும் அதிகளவில் உள்ளது. இதை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ராலின் அளவு குறைவதோடு நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. ஹேசல் நட் சாப்பிடுவது நம் இதயத்திற்கும் நல்லது.பிரேசில் நட்ஸ்  நம் இதய நலனில் முக்கிய பங்கு வகிக்கும் மினரலான செலினியம் பிரேசில் நட்ஸில் அதிகளவு உள்ளது. மேலும், இவை நம் உடலில் உள்ள ‘கெட்ட’ கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவுகிறது.மக்காடமியா நட்ஸ் நம் உடலில் நிறைவுறா கொழுப்பை அதிகப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது மக்காடமியா நட்ஸ். இதை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம், ‘கெட்ட’ கொலஸ்ட்ராலை குறைத்து ஆரோக்கியமாக வாழலாம்.

Jan 13, 2024

நுண்கிருமிகளை வெளியேற்றும் செண்பக பூக்கள்

செண்பக மரத்தின் விதை, வேர், பட்டை எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன.. முக்கியமாக, அல்கலாய்டுகள்,ஒலியிக் சினாயிக், பால்மிடிக் போன்ற பொருட்கள்தான்,  இந்த மரத்தின் ஸ்பெஷலாட்டியாக இருக்கின்றன.கண்ணில் நீர்வடிதல், கண்வலி, எரிச்சல், இமைகள் ஒட்டிக்கொள்ளுதல், கிருமித்தொற்று, போன்ற கண்களை பாதிக்கும் அத்தனை பிரச்சனைக்கும் இந்த் பூக்கள் பயன்படுகின்றன. நுண்கிருமிகளை வெளியேற்றும் திறன், இந்த செண்பக பூக்களுக்கு உண்டு. செண்பக மரத்தின் பூக்களை பொருத்தவரை, கண்நோய் மருந்து தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.. இந்த பூக்களில், பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின் போன்றவையே கிருமிநாசினியாக பயன்பட தூண்டுகோலாகின்றன. எப்படி பயன்படுத்தலாம்: செண்பகப்பூக்களை, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து நீர்விட்டு அரைத்து, அந்த விழுதை கண் இமைகளின் மேலும், கீழும் பற்று போல போட வேண்டும். ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், கண் ஆரோக்கியம் காக்கப்படும்.. அல்லது, இந்த பூக்களை ஒரு கைப்பிடியளவு எடுத்து தண்ணீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்த தண்ணீரில் கண்களை கழுவி வரலாம்..இந்த பூக்களை தண்ணீரில் ஊறவைத்து எடுத்த பிறகு, சிறிது இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்து கலக்கியும் கண்களை கழுவி வரலாம். வைரஸ், பாக்டீரியாக்களால் உண்டாகும் காய்ச்சலை விரட்ட இந்த பூக்கள் உதவுகின்றன. சிறுநீர்க்கடுப்பு, சிறுநீர் எரிச்சல் போன்ற உஷ்ண கோளாறுக்கும் இந்த பூக்கள்தான் உதவுகின்றன. உடலுள்ள பித்தத்தை நீக்கவும், இந்த பூக்கள்தான் பயன்படுகின்றன. நரம்பு தளர்ச்சி, வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல், போன்ற குறைபாடுகளுக்கும் இந்த பூக்களே பயன்படுகின்றன.பூக்களை கொண்டு கஷாயம் செய்யலாம் அல்லது நிழலில் உலர்த்தி, பவுடர் தயாரித்து, தேனுடன் கலந்தும் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தாலோ அல்லது மன உளைச்சலால் நன்றாக தூக்கம் வரவில்லையானாலோ இந்த செண்பக பூக்களே கைகொடுக்கின்றன.2 பூக்களை எடுத்து, சிறிது கசகசா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சேர்த்து இரவு தூங்கப்போகும் முன்பு குடித்தால், மேற்கண்ட கோளாறுகள் எல்லாமே தீரும்.. பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும், இந்த செண்பகப் பூ கஷாயம் உதவுகிறது. செண்பக பூக்களை அரைத்து விழுதாக்கி, அதனை நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்து கொண்டால், உடலில் எங்கு வலி ஏற்பட்டாலும் தேய்க்கலாம்.. வீக்கம், கைகால் எரிச்சல், மூட்டு வலி, முழங்கால்வலி, தலைவலி என அனைத்து வலிகளுக்குமே பூசினால், நிவாரணம் கிடைக்கும்.

Jan 12, 2024

நார்த்தை இலையில் உள்ள சத்துக்கள்

நார்த்தங்காயைவிட, நார்த்தங்காய் இலைகளில் மிகுந்த சத்துக்கள் உள்ளனஎலுமிச்சை குடும்பத்தை சேர்ந்த நார்த்தங்காய், அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டது. நார்த்தங்காயை சர்க்கரை நோயாளிகள், இதய நோய் இருப்பவர்கள், ரத்த அழுத்த பிரச்சினைகள் இருப்பவர்கள் கண்டிப்பாக தவிர்க்கவேண்டும்..உடல் சூட்டை தணிக்கக்கூடியது நார்த்தங்காய் பழங்கள்.. கர்ப்பிணிகளுக்கு இந்த நார்த்தம் பழச்சாறு மிகவும் நல்லது.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள், நார்த்தம்பழத்தை தினமும் சாப்பிடலாம்.. ஆனால், நார்த்தம்பழத்தை காலையில் சாப்பிட்டு வரவேண்டுமாம். நார்த்தங்காய் பழத்தை ஜூஸ் போல பிழிந்து, அதனை வெந்நீருடன் கலந்து குடித்தால், வயிற்றில் ஏற்படும் வாயு சம்பந்தமான பிரச்சினைகள் நீங்கும்.. இந்த சாறு, இதய நோய், பக்கவாதம் ஆகியவை உருவாகும் அபாயத்தை குறைக்க கூடியது.. நார்த்தங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் சத்துக்கள் நிறைந்துள்ளதால், புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. நார்த்தங்காய் தோலை நீக்கி, உள்ளே இருக்கக்கூடிய சுளையை மென்று தின்றால், வாய் துர்நாற்றம் நீங்கும். கர்ப்பிணிகள்: கர்ப்பிணி பெண்கள் தினமும் நார்த்தங்காய் இலையை பொடி செய்து சாப்பிடலாம். கால்சியம், மக்னீசியம், அயோடின், இரும்புச்சத்து, சோடியம், என அத்தனை சத்துக்களும் இந்த நார்த்தை இலையில் உள்ளன.. இந்த இலையில் பொடி செய்து சாப்பிட்டால், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.. வாந்தி உணர்வும் கட்டுப்படும்.இலைகளில் நார்ச்சத்துகள் அதிகம் என்பதால், ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கும் பலனுள்ள இலைகளாக அமைகின்றன. குடல் பாதுகாப்பையும் மேம்படுததுகிறது. அஜீரணம்: செரிமான பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த நார்த்தங்காய் இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.. அஜீரணக் கோளாறுகளை போக்க வேண்டுமானால், இந்த இலைகளை பொடி செய்து சாப்பிடலாம்.. இதனால், நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். உடல் சூடு அதிகரித்தாலும், பித்தம் ஏற்பட்டுவிடும்.. வாந்தி எடுப்பது போன்ற உணர்வு அதிகரிக்கும்.. இந்த கோளாறுகளையெல்லாம் நார்த்தங்காய் இலைகள் நீக்கிவிடும்.. இதற்கு இலைகளை துவையல் போல செய்து சாப்பிடலாம்.. அதாவது, நார்த்தங்காய் இலைகளின் நடுவில் இருக்கும் காம்பை நீக்கிவிட்டு, வெறும் இலைகளை பொடி பொடியாக நறுக்கி துவையல் செய்து சாப்பிட்டால், பித்த வாந்தி, வாய் கசப்பு, தலைசுற்றல் போன்றவை நீங்கும்.இதில் சிட்ரிக் அமிலம் அதிகமுள்ளதால், வைட்டமின் C சத்துக்களும் நிறைந்தள்ளது.. இதனால், நோயெதிர்ப்பு சக்தி பெருகுகிறது. அதுபோலவே, இந்த இலைகளும் ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை இந்த நார்த்தங்காய் ஆற்றுகிறது..

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News