25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆரோக்கியம்

Aug 02, 2024

கிராம்பு சாப்பிடுவதால் உடலில் நடக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கிராம்பு பழங்காலத்தில் இருந்தே மசாலா பொருளாகவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான மூலிகை, உலகம் முழுவதும் தற்போது காணப்படுகிறது. கிராம்புகளில் யூஜினோல், காரியோஃபிலின் மற்றும் அசிட்டைல் யூஜினோல் போன்ற பல சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி தொற்றுகளுக்கு எதிராக போராட உதவுகின்றன .கிராம்புகளில் உள்ள ஆன்ட்டி மைக்ரோபியல் மற்றும் அழள்சி எதிர்ப்பு பண்புகள், செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. இது வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வயிறு வீக்கம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. கிராம்புகளின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி, தசைவ வலி மற்றும் பல் வலி போன்ற வலிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும். வாய் மற்றும் பற்களில் பாதிப்பு இருப்பவர்கள் தினசரி மூன்று கிராம்பு சாப்பிடுவதால் அவை விரைவில் குணமடையும். இது பல் துளைகள், ஈறுநோய் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.  கிராம்புகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், இதய நோய் அபாயம் குறைகிறது. சில ஆய்வுகளில், கிராம்பு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என கண்டறியப்பட்டுள்ளன. இது நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.தினசரி 3 கிராம்பு சாப்பிடுவதால் உடலில் , பல ஆரோக்கிய நன்மைகளை நமக்கு வழங்குகின்றன. 

Jul 31, 2024

இரத்தத்தை சுத்தம் செய்யும் உணவுகள்

ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம்.. ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கு நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது.இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம். மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிக்கும்.  இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச்சத்து ,இரத்த சோகையைத் தடுக்க, இரும்புச்சத்து நிறைந்த கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் ஆகியவை இரும்புச்சத்து சிறந்த உணவுகளாகும். கீரைகளில் வைட்டமின் கே உள்ளதால் வலுவான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகிய பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இந்த பெர்ரிகளில் இயர்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் உங்கள் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன இந்த பெர்ரிகளில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன. சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவை இதய ஆரோக்கியம் நிறைந்த மீன்களாகும். ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த மீன்களானது, வீக்கம், ட்ரைகிளிசரைடுகள் (தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள்) மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றை குறைக்கின்றன. நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் ஆகியவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஹெல்தி ஃபாட்ஸ், ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன, இவை அனைத்தும் ஃபாட்ஸ் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆன்டிஆக்ஸிடென்ட்களின் கலவையானது, ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு, இரும்பு மற்றும்.. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்., இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது.

Jul 24, 2024

பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

புரதம், கார்போஹைட்ரேட், காரத் தனிமங்கள், கால்சியம், பாஸ்பரஸ் இரும்பு, சர்க்கரை, வைட்டமின் ஏ போன்றவை பப்பாளியில் காணப்படுகின்றன.  பப்பாளியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கிறது. பச்சை பப்பாளியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலுக்கு இயற்கையான நச்சு நீக்கியாக அமைகிறது பப்பாளியில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது  தினமும் சிறிதளவு பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும்  பப்பாளியில் வைட்டமின் ஏ உள்ளதால், கண்பார்வையை மேம்படுத்துகிறது.   பப்பாளியை உட்கொள்வதன் மூலம் ,பல செரிமான நொதிகள் உள்ளதால், செரிமான அமைப்பு சுறுசுறுப்பாக இருக்கும். 

Jul 22, 2024

சூப்பர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அமைதிப்படுத்த இரண்டு கிராம் கசகசா  பால்

இந்திய உணவுகளில் கசகசாவிற்கு தனி இடம் உண்டு. அசைவ உணவுகளில் அதனது சுவையை அதிகரிக்க இது சேர்க்கப்படுகிறது. கசகசா உணவு பொருள் மட்டுமில்லை, இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. 100 கிராம் கசகசாவில் 46 கலோரிகளும் 1.6 கிராம் புரதச்சத்தும், கொழுப்பு 3.6 கிராமும், 2.5 கிராம் மாவுச்சத்துவும், நார்ச்சத்து 1.5 கிராமும், 2.5 கிராம் சோடியமும் இருக்கிறது. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்ட பல நுண் சத்துக்களும் இதில் அடங்கி இருக்கின்றன. இதில் நார்ச்சத்து இருப்பதால் இது நம்முடைய குடலுக்கும் ஜீரணத்திற்கும் நன்மை செய்யும்.சூப்பர் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளை அமைதிப்படுத்த இரண்டு கிராம் கசகசாவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து கொடுக்க நல்ல பலன் கிடைக்கும். நரம்பு தளர்ச்சி மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு, தாமிரம், கால்சியம் சத்துகள் கசகசாவில் உள்ளது. இது நரம்பியல் கடத்திகளின் செயல்பாட்டை சீராக்கவும் ஒழுங்குபடுத்தவும் உதவியாக இருக்கின்றது.பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலரும் மன அழுத்தம் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுகின்றனர். கசகசா இவர்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் சிறிதளவு கசகசாவை பேஸ்ட் போல அரைத்து சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்த பிரச்னையும் நீங்கும். கசகசாவை ஊறவைத்து அரைத்து அதில் தேங்காய் பால் அல்லது பால் சேர்த்து சாப்பிட,'மெனோபாஸ்' காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படும் உடல் வறட்சி சரியாகும். பெண்கள் பூப்பெய்திய தொடக்க காலத்தில் மற்றும் மாதவிடாய் காலத்தில் வயிற்றுவலி தோன்றும். இதனைத் தவிர்க்கவும் மேற்கண்ட மருந்தை மாதவிடாய்க்கு10 நாட்களுக்கு முன்பு சாப்பிட வேண்டும். பெண்களின் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு கசகசா உதவுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.கசகசா கொண்டு உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், ஊற வைத்த கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, அது வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் குடிக்கவும். இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதோடு, அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்கலாம். உடல் எடையை குறைக்க, காலை உணவில் இதை சாப்பிடுவது நன்மை பயக்கும்.100 கிராம் கசகசாவில் ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து51 சதவீதம் வரை உள்ளது. எனவே, செரிமான பிரச்னைகள் வராமல் தடுக்கும்.கசகசா இரும்பு, கால்சியம் மற்றும் நல்ல கொழுப்புகளின் சிறந்த மூலமாக காணப்படுகின்றது. இதனை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொண்டால், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க மிகவும் துணை புரியும். ஆண்மை குறைவாக இருக்கும் ஆண்கள் கசகசா மற்றும் பாதாம் பால் ஆகிய இரண்டையும் நன்றாகக் கலந்து குடிக்க வேண்டும். இதனால் ஆண்மை பலம் பெறும். விந்தணு குறைபாடு உள்ளவர்கள் கசகசா பாலை இரவில் சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும். கசகசாவை பெண்களுக்கும் கொடுக்கலாம். சிலர் குழந்தை இல்லாமல் கோயில் கோயிலாக அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்கள் காலையில் கசகசா கலந்த பாலை குடித்து வந்தால் பெண்களின் கருப்பை பெலோப்பியன் குழாய்கள் சுத்தமாகும். உடலில் கார்டிசோல் அளவு அதிகரிக்கும்பொழுது தூக்கமின்மை பிரச்னை ஏற்படுகின்றது. இதனை கசகசா சரிசெய்கின்றது. பாலில் கசகசா கலந்து குடிக்கும் பொழுது உறக்கமின்மை பிரச்னை சரியாகும். கசகசாவையும் பாலையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தசைகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. இரண்டு ஸ்பூன் கசகசாவை ஒரு டம்ளர் பாலில் கொதிக்க வைத்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்தவுடன் குடிக்க ஆண்மை சக்தியை அதிகரிக்கும், நரம்பு இயக்கங்களை சீர்படுத்தி இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும். கசகசாவில் காப்பர், கால்சியம் சத்துக்கள் உள்ளன. இவை எலும்பை பலப்படுத்த உதவுகிறது. அத்துடன் பாஸ்பரஸ், மாங்கனீசு சத்துகள் எலும்புகளில் சேதம் உண்டாகாமல் பாதுகாக்கிறது.கசகசாவை உணவோடு சேர்த்து எடுத்துகொள்ளும்போது பாதுகாப்பானது. ஆனால், தனியாகஇதை தேநீர் வடிவிலோ, நீரில்ஊறவைத்தோ குடிக்கும்போது சமயங்களில் ஒவ்வாமையை உண்டாக்கும். கசகசாவில் ஆல்கலாய்டுகள் அதிகம்உள்ளன. எனவே வறுத்து அல்லதுதண்ணீரில் நன்கு ஊறவைத்தே பயன்படுத்த வேண்டும். கசகசாவை அளவாகபயன்படுத்த வேண்டும். அதே நேரம்மருத்துவரின் ஆலோசனையுடன் பரிந்துரைக்கப்பட்ட அளவுஎடுத்துகொள்ளும் வரை எந்த பிரச்னையும் இராது.

Jul 20, 2024

அறுசுவை உணவின் பலன்கள்

இனிப்பு-  உடலின் தசையை அதிகமாக்க உதவும்.கசப்பு- வேண்டாத கிருமிகளை அழிக்கும். புளிப்பு  -இரத்தக்குழாயில் உள்ள அழுக்கை நீக்கும்.உறைப்பு-   உடல் உஷ்ணம் உணர்ச்சிகளை கூட்டும்.உவர்ப்பு -ஞாபக சக்தியை' அதிகரிக்கும்.  துவர்ப்பு -உடலில் காயம் ஏற்படும்போது இரத்தத்தை உறையச் செய்யும். 

Jul 17, 2024

வெள்ளை, சிவப்பு அவலில் உள்ள சத்துக்களும், அதன்  நன்மைகளும்!

அரிசி நெல்லை ஊறவைத்து தடையாக அடித்து தயாரிக்கப்படுவது அவல் ஆகும், இதற்கு போஹா (Poha,  Flatted rice and red rice ) அரிசி மற்றும் சிவப்பு அரிசி என்றும் அழைக்கப்படுகின்றன.சிவப்பு அரிசியிலிருந்து கிடைக்கக்கூடிய சிவப்பு அவல் ஏராளமான வைட்டமின் சத்துகள் உள்ளது.வைட்டமின் ஏ, பி. சி. நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம், மெக்னீ சியம், ஆகிய தாது சத்துக்கள் அதிக அளவில் உள்ளது.காலை உணவுக்கு சிறந்த ஊட்டச்சத்துள்ள உணவாகவும், இதில் உள்ள நல்ல பாக்டீரியா (pro-biótic) குடலை சுத்தம் செய்து எளிதில் உண்ட உணவை செரிமானம் செய்ய உதவுகிறது உதவுகிறது.ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து அதிகரிக்க  செய்து , ரத்த சிவப்பு அணுக்களை (RBC) அதிகரிக்க உதவுகிறது.சிவப்பு அவலுடன் சிறிது எலும்மிச்சை சாறு சேர்த்து சாப்பிட்டுவர, ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.எளிதில் செரிமானமடைவதால் குடல் சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. உடம்பில் இருக்கும் Pre- Radical-களை அழிப்பதற்கு உதவும் ஆக்ஸிஜனேற்றிகளை கொண்டுள்ளது.குடலில் புற்று நோய் செல்கள் வளருவதை தடுக்கிறது. இதனால் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.இதில் இரும்பு சத்து அதிக அளவில் இருப்பதால் உடம்பில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்தத்தின் அளவை உடம்பில் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் உண்டாகும் ரத்த சோகையை குணப்படுத்த உதவுகிறதுஅவலை ஊறவைத்து அதனுடன் வெள்ளம், துருவிய தேங்காய், ஏலக்காய்  சேர்த்து  குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதன் மூலம் ரத்தத்தின் அளவை அதிகரிக்கவும் மற்றும் ரத்த சோகை உள்ளவர்களுக்கு ரத்த சோகையை குணப்படுத்தவும் உதவுகிறது.  குழந்தைகளுக்கு உணவாக கொடுப்பதன் மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்கவும், சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது.அவல் வயிற்று புண், வாய் புண், மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடல் சூட்டை தணிக்கவும் உதவுகிறது.உடல் பருமனாக காரணமான கொழுப்பு அதிகரிப்பதால் ஏற்படும் இதய நோய், ரத்த அழுத்தம் போன்றவற்றை குணப்படுத்தவும், உடல் எடையை குறைக்கவும், மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவையும் குறைக்க உதவுகிறது.

Jul 13, 2024

மண்பானையில்தண்ணீர் குடிப்பதால்ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. 

மண்பானையில் தண்ணீர் சேமித்துகுடிப்பது, உலகெங்கிலும் பல கலாச்சாரங்களில் நடைமுறையில் இருந்ததாகும். குறிப்பாகமண்பானையில் தண்ணீர் குடிப்பதுபல ஆரோக்கிய நன்மைகளைவழங்குகிறது. மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரின் சுவை மற்றும் நறுமணம் மேம்படுகிறது. தண்ணீர், பானையின் மண்ணுடன் வினைபுரிந்து சுவை மற்றும் தாதுக்கள் பரிமாற்றத்தை அனுமதிக்கிறது. இந்த செயல்முறை தண்ணீரின் இயற்கையான குணங்களை மேம்படுத்தி புத்துணர்ச்சியூட்டும் ஒன்றாக மாற்றுகிறது. மண்பானையில் சேமிக்கப்படும் நீர் இயற்கையான வடிகட்டுதல் செயல்முறைக்கு உட்படுகிறது. குறிப்பாக களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் தண்ணீரில் இருக்கும் அசுத்தங்கள் மற்றும் வண்டல்களை சிக்க வைக்கும் நுண்ணிய மைக்ரோ துளைகளைக் கொண்டுள்ளன. இந்த வடிகட்டுதல் செயல்முறையில் தண்ணீரில் இருக்கும் சில அசுத்தங்கள் வடிகட்டப்பட்டு தூய்மையான குடிநீராக மாறுகிறது. மண்பானையில் இருக்கும் தண்ணீரின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்படுகிறது. குறிப்பாக களிமண் பானைகள் சிறந்த இன்சுலேஷன் பண்புகளைக் கொண்டுள்ளன. ஒரு மண்பானையில் தண்ணீர் சேமிக்கப்படும்போது அது படிப்படியாக வெப்பத்தை உறிஞ்சி, அதிக வெப்பமான கால நிலையிலும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்கிறது. இதே போல குளிர்ந்த காலநிலையில் தண்ணீர் அதிக குளிர்ச்சியடைவதைத் தடுக்கிறது.சில கார களிமண்ணால் செய்யப்பட்ட பானைகள் நீரில் பிஎச் சமநிலையைப் பராமரிக்க உதவுகிறது. ஆல்கலைன் நீரில் அதிகPH அளவு இருக்கும். இது உடலில் அமிலத்தன்மையை நடுநிலையாக்கி சிறந்த செரிமானம் மற்றும் நீரற்றத்தை மேம்படுத்துகிறது. பனைகளில் தண்ணீரை சேமிப்பது தண்ணீரின் அத்தியாவசியத் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை பாதுகாக்க உதவுகிறது. பிளாஸ்டிக் அல்லது உலோகப் பாத்திரங்கள் தண்ணீருடன் வினைபுரிந்து அதன் தன்மைகளை மாற்றுகிறது. ஆனால் பானை, இயற்கை பொருட்களால் செய்யப்பட்டது என்பதால் தண்ணீரின் தன்மையுடன் இது எந்த வகையிலும் தலையிடாது. இதன் விளைவாக தண்ணீர் அதன் கனிமங்களை உள்ளேயே தக்க வைத்து அதன் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது

Jul 10, 2024

சிறுநீர் பாதை தொற்றுகளை தடுக்கதேற்றான் கொட்டை ,கொத்தமல்லி, நீர்முள்ளி

 சிறுநீர் தொற்றுகளை தடுக்க நமக்கு மூலிகைகளே கை கொடுத்து உதவுகிறது.. இயற்கையாக கிடைக்கும் கீரைகளை கொண்டே, இதுபோன்ற தொந்தரவுகளை நாம் நீக்கிவிடலாம்.பெண்களுக்கு ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளில் ஒன்றுதான் சிறுநீர் பாதை தொற்று.. கிட்டத்தட்ட 50 முதல் 60 சதவீத பெண்கள், அடிக்கடி சிறுநீர் பாதை தொற்றுக்கு ஆளாக நேரிடுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றனபிரச்சனை இல்லை என்றாலும்,நிறைய அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கியமாக, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம்,சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வயிற்று வலி போன்ற தொந்தரவுகள் வரலாம்.இதற்கு நிறைய தண்ணீர் குடிக்கவேண்டும். உடலை உஷ்ணமாக்கி கொள்ளாமல், குளிர்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும். இதுபோக சில கீரைகளை உணவில் சேர்த்து கொள்ளலாம். சூடான தண்ணீரில் அரைமூடி எலுமிச்சம் சாறு கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் சிறுநீர் தொற்று நீங்கும்..அதேபோல, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து,அதில்1 ஸ்பூன் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி வெறும் வயிற்றில் 40 நாட்கள் குடித்து வர வேண்டும். இரவு தூங்குவதற்கு முன்பு, சூடான பாலில் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலந்து 40 நாட்கள குடித்து வந்தாலும், சிறுநீர் தொற்றுகள் விலகும்.தேற்றான்கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.அசுத்தமான, கலங்கலான தண்ணீரை தெளிவுபடுத்துவதற்கு இந்த கொட்டைகளை முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போதும் இப்படியே பயன்படுகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கும் இதை தேனுடன் கலந்து மருந்தாக தருவார்கள்சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று போன்ற உபாதைகளுக்கும் இந்த தேற்றான் கொட்டை சிறந்த மருந்தாகும்.கண்களில் ஏற்படும் அதிக உஷ்ணம்,எரிச்சல், வீக்கம் போன்ற உபாதைகளுக்கு இதன் பொடியை நீரில் குழைத்து பூசிவர கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.அதேபோல, கொத்தமல்லி விதைகளை நீரில் கலந்து குடிக்கலாம். கொத்தமல்லி கலந்த தண்ணீரை 10 நாட்களுக்கு தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவை சரியாகும் என சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.நீர்முள்ளி இலைகளையும், அதன் விதைகளையும் ஆவியில் வேகவைத்து,பூண்டு, மஞ்சள், கடுகு சேர்த்து குழம்பு போல செய்து சாப்பிட்டால் சிறுநீர்ப்பாதைத் தொற்று, நீரடைப்பு போன்றவை விலகும்..சிறுநீர் எளிதாக பிரியும்..அதேபோல, மூக்கிரட்டை இலைகள் கை கொடுத்து உதவுகின்றன.. இந்த மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.. அதில்,பூண்டு பற்கள், சீரக தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள்,உப்புத்தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.இறுதியில் வடிகட்டி குடித்தாலே, சிறுநீர் கடுப்பு முதல் சிறுநீரக தொற்று வரை பறந்துவிடு மருத்துவ குணம் இருந்தாலும், இவைகளை எல்லாம் டாக்டர்களின் அறிவுரையோடு இந்த கீரையை எடுப்பது நமக்கு பாதுகாப்பானது..

Jul 06, 2024

சிறுநீரக நலனுக்கு முள்ளங்கிகீரை ஜூஸ்

சிறுநீரகங்களில் ஏற்படும் அத்தனை தொந்தரவுகளுக்கும் ஒரே தீர்வாகவும்,மருந்தாகவும் நமக்கு கிடைத்திருப்பது முள்ளங்கி கீரை எனலாம். இந்த ஒரு கீரையே போதும். ஏகப்பட்ட பிரச்சனைகளை தீர்த்துவிடும்.முள்ளங்கி கிழங்கை பொறுத்தவரை முள்ளங்கியில் இருப்பதைவிட‌6 மடங்கு, வைட்டமின்C, முள்ளங்கி கீரையில் ஒளிந்திருக்கின்றன.உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன்,நோய்களை நெருங்க விடாமல் இந்த இலைகள் தடுக்கின்றன. இதனால், கல்லீரல்,சிறுநீரகம், நுரையீரல் இதயம்,கண்கள் என அனைத்து உறுப்புகளுமே திறன்பட செயலாற்ற தூண்டுகோலாகிறது.குளிர்ச்சி நிறைந்த இந்த முள்ளங்கி இலைகள் மூலநோய்களுக்கு அருமருந்தாகின்றன. முள்ளங்கி இலைகள் வீக்கத்தைக் குறைக்கின்றன.முள்ளங்கி கீரையின் சாற்றில்,வெந்தயத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை மாலை2 வேளையும் சாப்பிட்டு வந்தால்,சர்க்கரை நோய் குணமாகும்.கீரையின் சாற்றினை6 ஸ்பூன் குடித்து வந்தாலே,சிறுநீரகத்திலுள்ள கற்கள் வெளியேறிவிடும்..உடம்பிலுள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைப்பதால், எடை குறைபவர்களுக்கு இந்த கீரையை சாப்பிட வேண்டும்.சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள்,மற்ற கீரைகளை சாப்பிட முடியாவிட்டாலும், இந்த முள்ளங்கிக் கீரையையாவது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பற்றாக்குறைகளும் நீங்கும். சிறுநீர் சரியாக பிரியாமல் இருப்பவர்கள் ஒரு ஸ்பூன் பார்லியை முள்ளங்கிக் கீரையுடன் சேர்த்து வேகவைத்து சாப்பிட்டாலே நீர்க்கட்டு நீங்கி சிறுநீர் தாராளமாகப் பிரியும்.சிறுநீர் கல்லடைப்புகளுக்கும் இந்த கீரை நல்லது... ஒரு கைப்பிடி அளவு முள்ளங்கிக் கீரையில் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து வேகவைத்து, தொடர்ந்து3 நாட்கள் காலை, மாலை சாப்பிட்டு வந்தாலே நீர் அடைப்பு தொல்லை நீங்கிவிடும்.

Jul 05, 2024

எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் சப்பாத்தி சாப்பிட்டா எடை குறையுமா?

எடை குறைக்க முயற்சி செய்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், உடல் பருமன், அரிசி சாப்பிடுவதைக் குறைப்பது உள்ளிட்ட பல காரணங்களின் அடிப்படையில், அரிசி சாதத்துக்கு பதிலாக சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும் என்ற கருத்து நிலவி வருகிறது அரிசியை ஒப்பிடும் போது, கலோரி அளவில் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும், சப்பாத்தியில் ஏன் எடை குறையும் என்பதற்கு முக்கிய காரணம் உள்ளது. சப்பாத்தியுடன் ஒப்பிடும் போது, அரிசி சாதம் சாப்பிடும் அளவு அதிகமாக இருக்கும். எனவே, அரிசிக்கு பதிலாக சப்பாத்தி எடை குறையும் என்ற கூற்று நிலவுகிறது. சர்க்கரை நோய் இருப்பவர்கள்,அரிசியை குறைத்துக் கொள்ளவேண்டும், அதற்கு பதிலாகசப்பாத்தி சாப்பிடலாம் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.இதற்குக் காரணம், சப்பாத்தி சாப்பிட்டால் எடை குறையும், சர்க்கரை அளவும் குறையும் என்ற கருத்து நிலவுகிறது. இது உண்மையா? அரிசியுடன் ஒப்பிடும் போது, சப்பாத்தியில் நார்ச்சத்து அதிகம் என்பது மட்டுமே பெரிய வித்தியாசம். இதனால் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் என்பது இதில் உள்ள பெரிய நன்மை சப்பாத்தி சிலருக்கு வயிறு உப்பசம், வாயுத் தொல்லை, செரிமானக் கோளாறு போன்றவற்றை ஏற்படுத்தலாம். எனவே, தினமும் சப்பாத்தி சாப்பிடுவது எடை குறைக்க உதவுமா இல்லையா என்பதைத் தவிர்த்து, வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் தினமும்5+ சப்பாத்தி, சிக்கன் அல்லது உருளை மசாலா, கிரேவி, போன்றவற்றை சிட் டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் கண்டிப்பாக எடை குறையாது. அரிசி உணவைத் தவிர்த்து ஒரு வேளை சப்பாத்தி சாப்பிடுபவர்கள், புரதம் நிறைந்த உணவுகளை உடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.2,3 சப்பாத்தி, வேக வைத்த முட்டை அல்லது பயிறு வகை(கொண்டை கடலை, பச்சை பயிறு, மொச்சை, வேர்கடலை போன்றவை), போன்றவற்றை ஒரு வேளை உணவாக சாப்பிட்டால் உடல் எடை குறையத் துவங்கும்.எடை குறைக்க கோதுமைக்கு மாற்று கோதுமை சப்பாத்திக்கு பதிலாக, கேழ்வரகு, கம்பு, போன்றசிறுதானியங்களில்ரொட்டிசெய்துசாப்பிடுவது, உடலுக்கு கூடுதலாக சத்துக்களையும் கொடுக்கும், எடை குறைக்கவும் உதவும். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News