வயதானவர்கள் அதிகம் பேசினால் கிண்டல் செய்யப்படுவார்கள், ஆனால் மருத்துவர்கள் அதை ஒரு வரமாகப் பார்க்கிறார்கள் : ஓய்வு பெற்றவர்கள் (மூத்த குடிமக்கள்) அதிகம் பேச வேண்டும்என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஏனெனில் தற்போது நினைவாற்றல் இழப்பைத் தடுக்கவழி இல்லை. அதிகம் பேசுவதுதான் ஒரே வழி. மூத்த குடிமக்கள் அதிகம் பேசுவதால்குறைந்தது மூன்று நன்மைகள் உள்ளன.பேசுவது மூளையை செயல்படுத்துகிறது, ஏனெனில் மொழியும்எண்ணங்களும்ஒன்றுக்கொன்றுதொடர்புகொள்கின்றன, குறிப்பாகவிரைவாகபேசும்போது, இதுஇயல்பாகவே சிந்தனையை விரைவுபடுத்துகிறது மற்றும் நினைவகத்தை மேம்படுத்துகிறது. பேசாத மூத்த குடிமக்களுக்கு ஞாபக மறதி ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அதிகமாகப் பேசுவது மன அழுத்தத்தைக் குறைக்கிறது, மனநோயைத் தடுக்கிறது.மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது. பெரும்பாலும் எதையும் பேசாமல் இதயத்தில்எல்லாவற்றையும் வைத்துக்கொள்வது, மூச்சுத் திணறல் மற்றும் அசௌகரியமாக உணர்கிறது,எனவே, பெரியவர்கள் அதிகம் பேசுவதற்கு வாய்ப்பு கொடுப்பது நல்லது.பேச்சு முகத்தின் சுறுசுறுப்பான தசைகளுக்குப் பயிற்சி அளிக்கிறது, தொண்டைக்கு பயிற்சி அளிக்கிறது, நுரையீரலின் திறனை அதிகரிக்கிறது, கண்கள் மற்றும் காதுகளை சேதப்படுத்தும் தலைச்சுற்றல் மற்றும் காது கேளாமை போன்ற மறைந்திருக்கும் ஆபத்துகளைக் குறைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஓய்வு பெற்றவர், அதாவது மூத்த குடிமகன், அல்சைமர்நோயைத் தடுப்பதற்கான ஒரே வழி, உங்களால் முடிந்தவரை பலருடன் பேசுவதும்சுறுசுறுப்பாகப் பழகுவதும்தான். இதற்கு வேறு பரிகாரம் இல்லை.
தடுக்கப்பட்ட கரோனரி தமனிகளைச் சுற்றிப் புதிய பாதையை உருவாக்குவதன் மூலம், ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இதயத் தசைக்குச் செல்வதை இந்த அறுவை சிகிச்சை உறுதி செய்கிறது.இது இதயத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, அது சீராக இயங்க உதவுகிறது.இதயத்துக்குப் போதுமான ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் மார்பு வலி, மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை இந்த அறுவை சிகிச்சைத் திறம்பட நீக்குகிறது அல்லது கணிசமாகக் குறைக்கிறது.இது நோயாளியின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, அதிக சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.தமனியில் உள்ள அடைப்புகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்க CABG உதவுகிறது.குறிப்பாக, பல தமனிகள் அடைக்கப்பட்டிருக்கும் கடுமையான கரோனரி தமனி நோய் உள்ளவர்களுக்கு இது உயிர் பிழைப்பதற்கான சாத்தியத்தை மேம்படுத்தலாம்.சிகிச்சை அளிக்காவிட்டால் ஏற்படும் கடுமையான சிக்கல்களைத் தவிர்ப்பதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட மூத்த குடிமக்களின் ஆயுட்காலத்தை நீட்டிக்க வாய்ப்புள்ளது.அறுவை சிகிச்சைக்குப் பிறகு சரியான பராமரிப்பு மற்றும் வாழ்க்கைமுறை மாற்றங்களைப் பின்பற்றுவதன் மூலம், நோயாளிகள் பல ஆண்டுகளுக்கு அறிகுறிஇல்லாமல் ஒரு சாதாரண, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்.சில சந்தர்ப்பங்களில், ஆஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) போன்றஎதிர்கால நடைமுறைகளைத் தவிர்க்க இதய அறுவை சிகிச்சை உதவக்கூடும்.முக்கியக் குறிப்பு75 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தொடர்பான சிக்கல்கள் மற்றும் மீட்புக் காலம் சற்றே அதிகமாக இருக்கும் என்றாலும், பொதுவாக அறுவை சிகிச்சை செய்யலாமா வேண்டாமா என்ற முடிவானது நோயாளியின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம், அடைப்புகளின் தீவிரம் மற்றும் இதயநோய் நிபுணரின் முழுமையான மதிப்பீட்டின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் முந்தைய தீவிரக் கவனிப்பு ஆகியவை மூத்த குடிமக்களுக்குக்கூட அறுவை சிகிச்சையின் பலனை அதிகரிக்கிறது.எப்போதும் உங்கள் இதய அறுவை சிகிச்சை நிபுணர்அல்லதுமருத்துவரிடம்கலந்தாலோசித்து, அபாயங்கள் மற்றும் நன்மைகளை முழுமையாகப் புரிந்துகொண்டு முடிவெடுப்பது மிக முக்கியம்.
மனிதரின் வயது அதிகரிக்கும்போது, ரத்த நாளங்கள், குறிப்பாக இதயத்துக்குச் செல்லும் கரோனரி ஆர்ட்டரிகள் மெல்ல மெல்லக் கொழுப்பு மற்றும் கால்சியம் அடைப்புகள் மூலம் குறுகத் தொடங்குகின்றன. இதனால் இதயத்தின் தசைகளுக்குத் தேவையான ஆக்சிஜன் குறைந்து, மார்பு வலி (Angina) அல்லது இதயக்குழல் அடைப்பு (Myocardial infarction) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.75 வயதுக்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு,பல ரத்தக்குழல் அடைப்புகள் காணப்படும்.சில சமயங்களில் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது ஸ்டென்ட் போட முடியாதவாறு கடினமான அல்லது நீண்ட அடைப்புகள் இருக்கும்.இதயத்தின் வெளிகொணரும் (Pumping) திறன் குறைந்திருக்கும்.இத்தகைய சூழலில், மருந்துகள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை போதாது. இதயத்துக்குப் புதிய வழி (Bypass) அமைத்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்ய, இதய அறுவை சிகிச்சை மிகச் சிறந்த தீர்வாகிறது.வயது தடையல்லஇன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பம், சிறந்த இதய அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் அவசரச் சிகிச்சைப் பிரிவு (ICU) பராமரிப்பு முன்னேற்றங்கள் காரணமாக, 75 வயதுக்கும் மேல் உள்ளவர்கள்கூட இதய அறுவை சிகிச்சையால் சிறப்பாகக் குணமடைகிறார்கள்.நோயாளியின் உடல்நிலை, இதயத்தின் செயல்திறன் மற்றும் சுற்றியுள்ள உடல்நலக் குறைபாடுகள் ( சிறுநீரகம், நுரையீரல் முதலியவை )போன்றவற்றை மதிப்பீடு செய்த பின்சரியான தீர்மானம் எடுப்பதில் இதில் முக்கியமே. சுருக்கமாக சொன்னால் வயதுஓர் எண் மட்டுமே! இதயத்துக்குப் புதிய உயிர்கொடுக்கும் இதய அறுவை சிகிச்சை, 75 வயதுக்குப் பிறகும் பலருக்கு நம்பிக்கையையும் புதிய வாழ்க்கையையும்தருகிறது.
ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடினால் அடிக்கடி சிறுநீர் போவது, அதிக தாகம் எடுப்பது. அதிகமாகப் பசிப்பது போன்ற அறிகுறிகள் மூலம் நாம் தெரிந்துகொள்ள முடியும். அதுபோல், ரத்த அழுத்தம் அதிகரித்தாலும் சிலருக்குக் கிறுகிறுப்பு, தலைவலிபோன்ற அறிகுறிகள் தோன்றும். ஆனால், ரத்தத்தில் கொலஸ்ட்ரால் கூடினால் நமக்குஎந்த அறிகுறியும் வெளியில் தெரியாது. நெஞ்சுவலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் போன்றவற்றுக்காக ரத்தப் பரிசோதனை செய்யும் போதுதான்கொலஸ்ட்ரால் கூடி இருப்பது தெரிய வரும். ஆகவே, 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையும், ஏற்கனவே கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வருடத்துக்கு இரண்டு முறையும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற இணை நோய்கள் இருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும்கொலஸ்ட்ரால் பரிசோதனைகளை மேற்கொண்டு, கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
முதுமை என்பது ஒரு பருவமே. முதுமையே ஒரு நோயல்ல. ஆனால், முதுமையில் பல நோய்கள் வரவாய்ப்புகள்அதிகமாகின்றன.நாம் ஏன் முதுமை அடைகிறோம்? என்றுமே இளமையுடன் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்? ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் அதற்கு முடிவு என்று ஒன்று உண்டு. ஆகையால் இளமைக்கு முதுமை ஒரு முடிவு. உடல் முதுமை அடைவதற்கு என்ன கருணங்கள் என்ஆ பல ஆராய்ச்சிகள் நடைபெற்று ஆனால், இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. முதுமை அடைய பல காரணங்களைக் கூறுகிறார்கள். அவற்றில் ஒரு சில முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் அவர்கள் சந்ததியினரும் அவ்வாறே இருப்பார்கள்.வயது ஆக ஆக உடலில் உள்ள முக்கிய உயிரணுக்கள் குறைகின்றன.திறனற்ற உயிரணுக்கள் உற்பத்தி ஆகுதல்.உயிரணுக்கள் பெருகிவரும் தன்மை குறைவது.கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல் தங்கி விடுதல்.ஃப்ரீ ரேடிகல்ஸ் (Free radicals) என்ற திரவம் உடலில் அதிகம் சேர்ந்து மற்ற திசுக்களை அழித்தல்.உடல் வளர்ச்சிக்குத் தேவையான (Growth hormone ) குறைதல்.நமது மூளைப்பகுதியிலுள்ள பிட்யூட்ரி என்னும் நாளமில்லாச் சுரப்பி Killer hormone எனும் திரவத்தைச் சுரக்கிறது. இந்தத் திரவம், ஒரு பெண்பூப்பெய்தும் பருவத்தில் சுரக்க ஆரம்பிக்கிறது. இத்திரவம் உடலை அழித்துமரணத்தை ஏற்படுத்துகிறது. ஆகையால் ஒரு பெண் பூப்படையும் வயது தள்ளிப்போனால்அவள் வாழும் வயதும் அதிகரிக்கும் என்ற ஒரு கருத்து உண்டு.தலையிலுள்ள மூளைப்பகுதியில் பீனியல் எனும் சுரப்பி Melatonin எனும் திரவத்தைச்சுரக்கிறது. இளமையைப் பாதுகாக்க இத்திரவம் மிகவும் அவசியம். ஆனால், ஒருவர் 25 வயதை அடையும்போது இத்திரவம் குறைகிறது. ஆகையால் முதுமை அப்போதே தொடங்கஆரம்பித்துவிடுகிறது.இத்தகை தகைய உடல் மாற்றங்கள் காலத்தால் ஏற்படுவது என்றாலும், முதுமை அடைந்தவர்களுக்கெல்லாம் இவை ஏற்படுவதில்லை. சிலருக்குச் சில மாற்றங்களே நிகழும்; மேற்கண்ட மாற்றங்கள் முதுமையில் ஏற்படினும், வாழ்க்கையைப் பக்குவமாக (Balanced life) அமைத்துக்கொண்டால் முதுமையிலும் இன்பம் காணலாம்.இளமை இனிமேல் போகாது.. முதுமை எனக்கு வாராது என்று உற்சாகமாகப் பாடுங்கள்!
தினமும் இந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டு. அவதிகளைச் சுலபமாக வெல்ல முடியும்.எனக்கு வயதாகிக் கொண்டு வருவதை உணர்கிறேன். சீக்கிரமே முதுமையை எட்டி விடுவேன். எப்போதும் பேசிக்கொண்டே இருக்கும் குணம் எனக்கு வந்துவிடக் கூடாது. குறிப்பாக, எல்லா விஷயங்களைப் பற்றியும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஏதாவது கருத்து சொல்லியே ஆக வேண்டும்,என்ற உணர்வு எனக்கு எழக்கூடாது.எல்லோரது தவறுகளையும் திருத்துவதுதான் என் வேலை' என்ற நினைப்பு எனக்கு வரக்கூடாது. எனது அனுபவமும் அறிவும் பொக்கிஷம். அறிவுரை என்ற பெயரில் எல்லோரிடமும் அதை வாரி இறைத்துவிட மாட்டேன்.நீள நீளமான வாக்கியங்கள் தவிர்த்து. ஒற்றை வார்த்தையில் எதையும் சொல்லும் பக்குவம் வர வேண்டும்.என் கஷ்டங்களையும் வலிகளையும் பற்றி எல்லோரிடமும் புலம்பாமல், அடுத்தவர் கஷ்டங்களையும் காதுகொடுத்துக் கேட்கும் பொறுமை பெற வேண்டும்.எல்லாமே ஞாபகத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. மகிழ்ச்சியான நினைவுகள் மட்டும் வேண்டும். துயரமான தருணங்களை என் ஞாபக மறதி நோய் எடுத்துக் கொள்ளட்டும்.நானும் தவறுகள் செய்யக்கூடிய எளிய மனிதப்பிறவிதான் என்றநினைப்பு எனக்கு எப்போதும் இருக்கட்டும். குடும்பத்தில் வாக்குவாதங்களை அது தவிர்த்துவிடும்.எல்லோருக்கும் கருணை காட்டும் மனம் வேண்டும். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் எண்ணம் வேண்டும். அடுத்தவரின் சிறந்த குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் தாராள உள்ளம் வேண்டும். யாரையும் அதிகாரம் செய்யும் முரட்டு குணம் மட்டும் வேண்டாம்.
முதுகுத் தண்டுவடம் இல்லாமல் நமது உடலினைக் கற்பனை செய்ய முடியுமா உங்களால். ஆக்டோபஸ் போல, ஜெல்லி மீன் போல, இல்லை ரப்பர் பந்து போலத் தரையில் ஊர்ந்திருப்போம்... நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை எல்லாம் வெறும் கற்பனையாக இருந்திருக்கும். 'நான் யாருக்குமே வளைந்து போகமாட்டேன்' என்கிற டயலாக் எல்லாம் பேச முடியாது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் முதுகுத் தண்டுவடத்தை மூளையின் நீட்சியாகச் சொல்லலாம். உடலுக்குத் தேவையான மிக முக்கியமான நரம்புகள் முதுகுத் தண்டுவடத்தின் எலும்புகள் (vertebrae) வழியாகவே அத்தனை உறுப்புகளுக்கும் செல்கின்றன. அப்படிச் செல்லும் நரம்புகள் தண்டுவட எலும்புகளில் அழுத்தப்படாமல் இருப்பதற்கு எலும்புகளுக்கு நடுவில் தக்கை அல்லது குஷன் போல டிஸ்க்எனச் சொல்லப்படும் அமைப்புகள் இருக்கின்றன. எலும்புகள் விலகினாலோ அல்லது டிஸ்கில் ன் தேய்மானம் ஏற்பட்டாலோ, இல்லை டிஸ்க் எனப்படுவது விலகி எலும்புகளுக்கு வெளியில் - வந்தாலோ முதுகில் வலி ஏற்படும். இவ்வாறாக க ஏற்படும் வலி முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படலாம் / இல்லை அந்த நரம்புகள் செல்லும் பாதைகளில் ஏற்படலாம் அல்லது அந்த நரம்புகள் சென்று அடையும் உறுப்புகளில் ஈ வலி ஏற்படலாம். உதாரணமாக இடுப்புப்பகுதி எலும்புகளில் நரம்புகள் - அழுத்தப்பட்டால் கால்களில் அல்லது பாதங்களில்வலிகள் ஏற்படும். இதில் கால் வலிக்கு வைத்தியம் பார்ப்பது எந்தப் பயனும் தராது. முதுகுத் தண்டுவடத்தைச் சரிசெய்வதே இதற்குச் சரியான தீர்வாகும். முதுகுத்தண்டு வலிக்குப் பொதுவான காரணங்கள்...1.விபத்து2.உடல் பருமன்3. முறையற்ற உணவுப் பழக்கவழக்கம்4. மன அழுத்தம்5. தூக்கமின்மை6.உடற்பயிற்சி இல்லாதது.வலி நிவாரணி மாத்திரைகள் மட்டும் எடுத்து கொள்வதும், ஊசி போட்டுக் கொள்வதும் முதுகுத் தண்டுவட பிரச்னைகளுக்கு தீர்வாக அமையாது.
மூன்று ரத்தக் குழாய்களின் வழியாக இதயத்துக்கு ரத்தம் செல்கிறது. வயது ஆக ஆக ரத்த குழாய்கள் சுருங்குகின்றன. அக்குழாய்களுள் கொழுப்புச் சத்தும் சேர்வதால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படுகிறது. முதியோரைக் கவனிக்கும்போது முதலில் நாடித் துடிப்பு, சுவாச மிகுதி ஆகியவற்றைக் கவனிக்க வேண்டும். ஏதாவது அசாதாரண மாற்றம் இருந்தால் மருத்துவரின் கவனத்துக்கு உடனே கொண்டு வரவேண்டும். .முதியோருக்கு மூச்சுவிடுவதற்கு வசதியாக முதுகிற்கு இரண்டு தலையணைகளைக் கொடுத்துச் சாய்ந்து உட்கார வைக்க வேண்டும். உடனடியாகப் பிராண வாயு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், முதலுதவியாக நாக்கிற்கடியில் ஐசார்டில் என்ற மாத்திரை வைத்தால் நெஞ்சுவலி உடனே குறைய வாய்ப்புண்டு. .மருத்துவரின்ஆலோசனைப்படி நோய்க்குத் தகுந்த மாத்திரைகளையும், ஊசி மருந்துகளையும்குறிப்பிட்ட நேரப்படி கிடைப்பதற்கு உதவுவது அவசியம். உறவினர்களுக்கும், நோயுற்ற முதியோருக்கும் செவிலியர் அருகில் இருந்து ஆறுதல் கூறவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி திரவ ஆகாரம் காரம் கொடுப்பதுதான் சிறந்தது. உப்பை உணவில் குறைக்கச் சொல்ல வேண்டும். முதியோரை மலச்சிக்கல் பாதிப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மலம் கழிக்கும் பொழுது மிகவும் சிரமப்பட்டு அழுத்தம் கொடுக்கக்கூடாது. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட முதியோரைப் படுக்கையிலேயே வைத்துச் சிகிச்சை அளிக்க வேண்டும். பொது சுகாதாரம் கவனித்தலும், உணவு சாப்பிடுவதும் படுக்கையிலேயே செய்யப்படவேண்டும். புகைப் பிடிப்பதை நிறுத்த அறிவுரை கூறவேண்டும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் இருந்தால் அதற்குத் தகுந்த சிகிச்சைகளை முறைப்படி எடுத்துக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுரை கூறவேண்டும். கொழுப்புச் சத்துள்ள உணவுப் பொருட்கள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
பல முதியோர்கள் பகலில் நீண்டநேரம் தூங்கி விடுகிறார்கள். அதனால் இரவில் தூக்கம் வருவதில்லைமனம் சார்ந்த கவலைகளினாலும் தூக்கம் குறையும். (உ.ம்) உறவினர்களின் இழப்பு, கடன் தொல்லை, நிதி வசதிக் குறைவு, கட்டாய ஓய்வு, தனிமைமன நோய்கள் (உ.ம்) மன அழுத்தம் (Depression), அறிவுத்திறன் வீழ்ச்சி (Dementia) மற்றும் மனப்பதற்றம் (Anxiety)முதியோர்கள் உண்ணும் பல மருந்துகளினாலும் தூக்கம் தடைபடலாம். (உ.ம்) மனநோய்க்குத் தரும் மருந்து, நீர் மாத்திரைஅடிக்கடி காபி குடிப்பது அல்லது இரவில் மது அருந்துவது தூக்கத்தைக் கெடுக்கும்.பலநோய்களினாலும் தூக்கக் கோளாறுகள் ஏற்படலாம். (உ.ம்) உடல் வலி, மூட்டு வலி, மூச்சுத்திணறல், வயிற்றில் புண், இதய பலவீனம், புராஸ்டேட் சுரப்பி வீக்கம்நல்ல தூக்கம் வர ஆலோசனைகள்தினமும் குறிப்பிட்ட நேரத்தில் இரவில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்அதேபோல், காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழும் பழக்கமும் மிகவும் அவசியம்படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்தில் இருக்க வேண்டும்.தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரை மற்றும் பானங்களை இரவில் தவிர்க்க வேண்டும். (உம்) நீர் மாத்திரை, காபி, டீ, மது, புகைப்பிடித்தல்மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல உறக்கத்தை ஏற்படுத்தும்பகலில் தூக்கம் 30 - 40 நிமிடங்கள் போதுமானதேபடுக்கும் இடத்தைத் தூக்கத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இரவில் படுத்துக்கொண்டே படிப்பது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லதுபடுத்தவுடன் 30 -45 நிமிடங்களில் தூக்கம் வரவில்லையென்றால், படுக்கையைவிட்டு எழுந்து சற்று நடந்துவிட்டு வரலாம் அல்லது அடுத்த அறைக்குச் சென்று படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடுவது நல்லது. தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்படுப்பதற்கு முன்பு சிறிதளவு வெதுவெதுப்பான பால் அருந்துவது தூக்கத்துக்கு நல்லதுமன உளைச்சல்களும், கவலைகளும் தூக்கத்தின் முக்கிய எதிரிகள். அதைத் தவிர்ப்பது மிக அவசியம். இதற்குத் தியானம் மிகச் சிறந்த மருந்தாகும்.தூக்க மாத்திரை எச்சரிக்கைநல்ல தூக்கத்துக்குத் தூக்க மாத்திரை ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல. தூக்க மாத்திரையைத் தினமும் சாப்பிடுவது உடலுக்குக் கெடுதல் விளைவிக்கும்.மாத்திரையின் வீரியம் குறையக் குறைய, அதன் அளவை அதிகரிக்க வேண்டியிருக்கும். மாத்திரையைத் திடீரென்று நிறுத்தினால் தூக்கம் பாதிக்கப்படும். தூக்க மாத்திரையினால் ஞாபகசக்தி குறையும், உடல் தடுமாறும்,கீழே விழ வாய்ப்புகள் அதிகமாகும். பகலில் மயக்க நிலையை ஏற்படுத்தும். ஆகையால், முடிந்த அளவுக்குத் தூக்க மாத்திரையைத் தவிர்ப்பது நல்லது. ஆகையால் மருத்துவரின் ஆலோசனை பெற்றுத் தூக்க மாத்திரையை உட்கொள்வதே பாதுகாப்பானது.
உணவு வகைகள் கீழ்க்காணும் உணவு பல ஆராய்ச்சிகளுக்குப் பின்பு நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை உடையவை என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.இவைஎல்லாம் நமக்குத்தெரிந்தஉணவுவகைகள்தானேஎன்றுஅலட்சியப்படுத்தவேண்டாம். நினைவாற்றலை அதிகரிக்கும் சத்துகள் இவற்றில் அடங்கியுள்ளன.இந்த உணவுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவற்றைத் தினசரிநாம்உண்ணும்உணவில் இருக்குமாறுபார்த்துக்கொண்டால், எதிர்பார்த்த பலன் நிச்சயம் கிடைக்கும்.பசலைக்கீரையில் ஃபோலிக் அமிலம் நிறைய உள்ளது.ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளூ பெர்ரி பழ வகைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் ஆப்பிளில் குவார்செட்டின் (Quercetin) என்னும் சத்து நினைவாற்றலை மேம்படுத்தும் முக்கியமான ஊட்டச்சத்து.ஆப்பிளைப் போலவே வெங்காயத்திலும் க்வார்சிடின் உள்ளது. கூடுதலாக அந்தோசயானின் (Anthocyanin) என்கிற பொக்கிஷத்தையும் வெங்காயம் வைத்திருக்கிறது.மீன் வகைகள் ஞாபக சக்தியை மேம்படுத்தக் கூடியவை. குறிப்பாக, டுனா என்கிற மீன் வகைகளில் ஒமேகா என்னும் சத்து அபரிமிதமாக இருக்கிறது.எண்ணெயும் இதில் முக்கிய இடம்பிடிக்கிற மீன் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்று லவங்கப்பட்டை எண்ணெய் போன்றவற்றை அளவறிந்து பயன்படுத்துங்கள்.முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகம் என்று பலர் சொன்னாலும், நம் மூளைக்கு அந்த மஞ்சள் கரு மிகவும் உகந்தது.சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இருக்கும் வைட்டமின் பி6, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவற்றுக்கு மறதியை விரட்டும் வல்லமை உண்டு.ராஜ்மாவில் உள்ள தையமின் என்கிற வைட்டமினும் நமக்குத் தேவை.உலர்ந்த திராட்சையானது இரும்புச்சத்து பி. காம்ப்ளக்ஸ், ஃபோலிக் ஆசிட், கால்சியம் மற்றும் மக்னீஷியம் போன்றவற்றைக் கொண்டது.வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்திருப்பதைப் பலரும் அறிவீர்கள்.கீரின் டீயானது வயதான பின் வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சார்ந்த நோய்களைத் தடுக்கிறது..முளைக்கட்டிய கோதுமையில் ஞாபகசக்தி அதிகரிக்கும் வைட்டமின் ஈ மற்றும் செலினியம் சத்துகள் உண்டு.காபி, பட்டை, லவங்கம், ஏலக்காய், பூண்டு, வல்லாரைக் கீரை, வால்நட் போன்றவையும் நினைவாற்றலை மேம்படுத்த உதவுகின்றன.