25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
செண்பகத்தோப்பு முக்கு ரோட்டில் ,போலீஸ் செக்போஸ்ட் கூண்டு பணிகள் துவக்கம். >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் இந்திய தொழில் நுட்ப கல்வி சங்கம் தமிழ்நாடு பிரிவு சார்பில், மாணவ மாணவிகளுக்கான  ஸ்ரீனிவாச ராமானுஜம் கணிதப் போட்டி  >> ராஜபாளையம் அய்யனார் கோவில் ஆற்றில் தொடர்மழையால் நீர்வரத்து அதிகரிப்பு . >> ராஜபாளையம் நகர்மன்ற கூட்டத்தில்  பாதாள சாக்கடை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை தீர்மானம் . >> ராஜபாளையத்தில் 9.2 செ.மீ., மழையளவு பதிவாகி உள்ளது. >> ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக மலையடிவாரத்தில் உள்ள ஆற்றில் வெள்ளப் பெருக்கு >> பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் வியாபாரிகள் மகிழ்ச்சி. >> ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ர ப்ரதிஷ்டா டிரஸ்ட் இராஜபாளையம். ஸ்ரீமத் பகவத்கீதை ஜெயந்தி மகோற்சவம் >> வெங்கடேச பெருமாள் கோயில் லட்சார்ச்சனை விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம். >> ராஜபாளையம், அகத்தியர் தமிழ் சங்கம்,கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் நடந்த திருப்பாவை போட்டிகள் >>


லாபகரமான மாடித்தோட்டம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

லாபகரமான மாடித்தோட்டம்

மாடித்தோட்டத்தில் காய்கறிச் செடிகளை வளர்க்க, வெயில் கிடைக்கும் இடமாகப் பார்த்துத் தோட்டம் அமைக்க வேண்டும். காய்கறிச் செடிகள் வளர்க்கக் கற்றுக் கொண்டால்வீட்டின் காய்கறிச் செலவைகணிசமாகக்குறைக்கும்.இயற்கை விவசாயத்தில் விளைந்த, ரசாயனமற்ற காய்கறிகள், கீரைகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்' என்கிற விருப்பம் மக்களிடையே பெருகிவருகிறது. ஆனால், இயற்கை விவசாயத்தில் விளைந்த காய்கறிகள், பழங்களை வாங்குவதும் பெறுவதும் பெரும் சவாலாகவே இருந்துவருகிறது. இதற்காகத்தான் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டத்தைச் செயல்படுத்திவருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கான இட வசதி பெரிதாக இருப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் வளர்க்க வேண்டிய சூழலும் உள்ளது.

குறுகிய இடத்தில். மாடித் தோட்டத்தை லாபகரமானதாகச்செய்ய வீட்டுக்குத் தேவையான காய்கறிகளும் கிடைக்கும். காய்கறிகளின் விளைச்சல், நம் வீட்டின் செலவைகணிசமாகக் குறைப்ப தோடு, இயற்கையானகாய்கறிகளைச் சாப்பிடக்கூடிய வாய்ப்பும் கிடைக்கும். காய்கறிச் செடிகள் வளர்க்கும்போதுதான் மாடித்தோட்டத்தின்நோக்கம் பூர்த்தியாகும்..வீட்டுத் தோட்டத்தில் வெண்டை, கத்தரி, சீனி அவரை, பச்சை மிளகாய், தக்காளி, வகைக்கு 10 செடி வைத்தாலே வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் தாராளமாகக் கிடைக்கும். மருந்து அடிக்காத ரசாயன உரம் இல்லாத காய்கறிகள், செலவும் மிச்சம். கீரைவகைகளும் மல்லி, பாலக்கீரை, பொன்னாங்கன்னி, புதினா, பசலைக்கீரை,வல்லக்கீரை எளிதாக வளர்க்கலாம். முருங்கை, எலுமிச்சை பயிர் செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News