முக்கியமாக பருக்களை கைகளால் தொடக்கூடாது.கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி10 நிமிடம் பின் கழுவ வேண்டும். இது தொடர்ந்து செய்து வர நல்லது.வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டு வரலாம்.துளசியை சுடு நீரில் போட்டு பின் அதனை அரைத்து முகத்தில் தடவி வர நீங்கும்.பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய இரவு உறங்குவதற்கு முன் புதினா சாறு 2 தேய்க்கரண்டி, 1/2 மூடி எலுமிச்சை சாறு மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு ஐஸ் கட்டியால் ஓத்தடம் கொடுத்தால், பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையும்.
ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்..வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம் குறையும்.உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.
இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி.?தேவையான பொருட்கள்:ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்,கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்இரண்டையும் நன்றாக கலக்கவும்:முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து ,உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் முறை:இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும்.இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விடவும்.முக்கிய குறிப்புகள்:எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்த கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.
இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய தோலின் நிறத்தை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு மட்டுமல்லாமல் ,கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமையாக தக்கவைத்துக் கொள்ள பல இயற்கையான பொருட்கள் கிடைக்கின்றன.கருமை நிறத்தை வெண்மையாக்கும் கிரீம் முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு அதை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகுஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பாலை ஊற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு, குறைந்த தீயில் வைத்து உருளைக்கிழங்கு நன்றாக வேக விட வேண்டும். நாம் உபயோகப்படுத்தும் சோப்பை எடுத்து அதையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் அளவிற்கு துருவிய சோப்பு கிடைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு துருவிய சோப்பை அதில் சேர்த்து சோப்பு கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். சோப்பு அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை மறுபடியும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறை இரண்டு ஸ்பூன் ஊற்ற வேண்டும்.இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து ,ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்த பிறகு மறுபடியும் இதை அடுப்பில் வைத்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து,கை விடாமல் கிளறி விட வேண்டும். இது கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிஆற வைத்து சுத்தமான காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். நிறத்தை வெண்மையாக்க கூடிய க்ரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீமை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே நல்ல பலனை தரக்கூடியது.
வயது முதிர்ச்சியின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.ஒருசிலருக்குஇளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். எந்த வயது சுருக்கமாக இருந்தாலும் அந்த முகச்சுருக்கத்தை நீக்கி இளமையாக பார்த்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீம்.முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து,வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த ஆரஞ்சு பழத் தோலை மட்டும் துருவி,ஒரு கேரட்டைதுருவி எடுத்துக் கொள்ளுங்கள்.. இவை இரண்டையும் எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு, ஆறு பிரியாணி இலையை பொடி பொடியாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையும், நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கண்ணாடி பவுலை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பவுலை வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.குறைந்த தீயில்40 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெயை ஃப்ரீசரில்வைத்து விட வேண்டும். அது கிரீம் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த கிரீமை எடுத்து முகத்தில் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவுவதன் மூலம் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு பழத்தோல் வயது முதிர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் முக வறட்சியை நீக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.ஒருமுறைஇந்தக்ரீமைஉபயோகப்படுத்தினாலேயே உடனடியாக முகம் மிகவும் மிருதுவாக தோன்றுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்முகச்சுருக்கமே வயது முதிர்ச்சியை காட்டக்கூடிய ஒரு காரணியாக திகழ்வதால் இந்த கிரீமை பயன்படுத்தி முக சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக தென்படுவோம்.
முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கஅன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெங்காயமும் பூண்டும் இருந்தாலே போதும். வெங்காயத்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது அதே அளவு தான் பூண்டிலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பூண்டையும் நாம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது சரி செய்யப்படுகிறது.முடி வளர்ச்சியும் அது ஊக்குவித்து பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு பொருளாக தான் பூண்டும் திகழ்கிறது. அந்த காலத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பொழுது அதில் இரண்டு பூண்டை தட்டி போடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது. ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கக் கூடாது. வேரையும் நுனியையும் மட்டும் நறுக்கிவிட்டு அதன் தோளுடன் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒன்பது பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சூடானதும் அதனுள் ஒரு பாத்திரத்தை வைத்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு இவை இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து250மிலி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.குறைந்த தீயில்30 நிமிடம் அடுப்பில்வைத்து எண்ணெயை கிளறி விட வேண்டும். வெங்காயமும் பூண்டும் எண்ணெயில் நன்றாக வேக அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு அதை அப்படியே எடுத்து ஆற வைக்க வேண்டும். பிறகு அதை காற்று புகாத அளவிற்கு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து ஒரு வாரம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கக்கூடிய சாறுகள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடும். இந்த எண்ணையை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். நம் தலை முடிக்கு பாதுகாப்பை தரக்கூடிய அற்புதமான தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது. இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து லேசாக சூடு செய்து தலை வேர்க்கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.பூண்டு சேர்த்திருப்பதால் பூண்டு வாடை வரும் என்று நினைப்பவர்கள் தலைக்கு குளித்து கடைசியாக தலையை அலசும் பொழுது மட்டும் அரை எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் பிழிந்து தண்ணீரை தலைக்கு ஊற்றி அலசினால் பூண்டு வாடை எதுவும் ஏற்படாது.
...கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்ற. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனம் இருந்தால் அழகான உதடுகளை பெற்று விடலாம். இளவயதினர் வெகு அரிதாகவே இந்த பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும் போது பெண்களும் இருண்ட கருமையான உதடுகளை பெறுகிறார்கள்.ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனினும் இதை நீர்த்து அல்லது எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்த கலவையை மேல் அடுக்கில் தடவவும்.நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.
தேங்காய் எண்ணெய், மஞ்சள் மற்றும் கற்றாழை கலவையில் ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைக்கிறதுதேவையான பொருட்கள்! தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 4 ஸ்பூன் | பெட்ரோலியம் ஜெல்லி -1 ஸ்பூன்செய்முறை ,முதலில் எடுத்துக்கொண்ட கற்றாழை ஜெல்லை ஒரு கோப்பையில் பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.தொடர்ந்து இதனுடன் மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள கருவளையம் போக்கும் பேக் ரெடிதயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்தில் அப்ளை செய்து- மசாஜ் செய்து15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையில் உண்டாகும் இந்த பேக் ஆனது, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும பொலிவை உறுதி செய்கிறது.அந்த வகையில் இது கருவளையத்தை மறைக்கிறதுஅழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஞ்சள், கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம், தடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.சரும தளர்வுகளை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, கண்களுக்கு அருகில் உள்ள சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.சருமத்தின் இயற்கை எண்ணெய் தக்க வைத்து, பொலிவான சருமம் பெற உதவும் இந்த பேக் ஆனது, சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவியாக உள்ளது.
நரை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை டைதேவையான பொருட்கள்!-பாதாம் - 4 | இஞ்சி - 2" அளவு | வெந்தயம் - 3 ஸ்பூன் | வெங்காய தோல் - 4 | தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்செய்முறை,முதலில் எடுத்துகொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.தொடர்ந்து வெந்தயம், பாதாம் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்தபொடிசேர்த்து நன்கு கருக(மிதமான சூட்டில்) வறுத்துக்கொள்ளவும். பின் இந்த பொடியை நன்கு ஆற விட்டு தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.இத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைக்கநரை முடி போக்கும் மாஸ்க் ரெடி.7 நாட்கள் வரை வைத்து இந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். இந்த மாஸ்கினை(2 நாட்களுக்கு ஒரு முறை) கூந்தலுக்கு அப்ளை செய்து3 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.நரை முடி மறையும்! வெள்ளை முடியின் நிறைத்தை மாற்றுவதோடு, பித்தத்தை கட்டுப்படுத்தி வெள்ளை முடி மீண்டும் வருவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.கிருமி நாசினிப் பண்பு கொண்ட இஞ்சி, வெங்காயதோல்கலவையில்தயார்செய்யப்படும்இந்தமாஸ்க்ஆனது,பொடுகு மற்றும் கிருமி தொற்று பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.தேங்காய் எண்ணெய், வெந்தயம் கலவையில் உண்டாகும் இந்த மாஸ்க், இயற்கை எண்ணெயை தக்க வைப்பதோடு, கூந்தல் வறட்சி பிரச்சனையையும் எதிர்த்து போராட உதவியாக உள்ளது.
கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது. கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது ,தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றன.மேலும் உச்சந்தலை பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.கருஞ்சீரக எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் - தேங்காய் எண்ணெய்- 100ml,கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்,வெந்தயம்- 1 ஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வரலாம்.