இனிப்பு வகையை செய்ய சர்க்கரையை விட கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.
காரக்குழம்பு செய்யும் போது காரம் அதிகமாகி விட்டால் சிறிது தேங்காய்பால் விட்டு கொதிக்க வைத்து இறக்கினால் காரம் குறைவதுடன் சுவையும் கூடும்.
ரசத்தில் எலுமிச்சை சாறு சேர்க்கலாம். உடலுக்கும் நல்லது. புளி அதிகம் சேர்ப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தோசை மாவிற்கு அரிசியுடன் ஜவ்வரிசி சேர்த்து ஊறவைத்தால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
எண்ணை பிசுக்கு நீங்க கேஸ் ஸ்டவ்வை கடைசியாக டிஷூவால் துடையுங்கள்.
எந்த இரு இனிப்பு வகையை செய்தாலும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொண்டு கற்கண்டை பொடியாக்கி போட்டால் அதன் சுவை கூடும்.
குருமாவுக்கு காலிஃப்ளவரை வாங்கும் போது பூக்களுக்கு இடையே இடைவெளி இல்லாம வாங்க வேண்டும் இதில் தான் காம்புகள் தடிமனாக இருக்காது.
0
Leave a Reply