வாயில் உள்ள சில பாக்டீரியாக்கள் மாவுச்சத்து மற்றும் சர்க்கரையிலிருந்து அமிலத்தை உருவாக்குகிறது. இவை பற்களின் மேல் அடுக்கை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனால் பற்களில் துளைகள் உருவாகும். இது குழி அல்லது புழு தொற்று எனப்படுகிறது.இனிப்பு பொருள்கள் அதிக இனிப்புகள், இனிப்பு குளிர்பானங்கள் மற்றும் ஒட்டும் உணவுகள் போன்றவை பாக்டீரியாவை ஊக்குவிக்கிறது. இவை துவாரங்களை வேகமாக வளரச் செய்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.ஃப்ளூரைடு பற்பசையை ஒரு நாளைக்கு காலை மற்றும் இரவு என இரு முறையும் குறைந்தது 2நிமிடங்களுக்கு துலக்க வேண்டும்பற்களுக்கு இடையில் மறைந்துள்ள உணவுத்துகள்கள் அல்லது பாக்டீரியாக்களை அகற்ற (FLOSS ) ஃப்ளோசிங் செய்யலாம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம் வாயை சுத்தம் செய்யலாம். இதனுடன், இனிப்பு உணவு சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லதுபச்சைக் காய்கறிகள் சாப்பிடுவது பச்சை காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதன் மூலம் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்களைப் பெறலாம் ஒவ்வொரு6 மாதங்களுக்கும் பல் மருத்துவரிடம் பரிசோதனை செய்யவும். இதன் மூலம் துளைகளின் ஆரம்ப நிலையிலையை அடையாளம் கண்டு நிரப்பி, பெரிய சேதத்தைத் தடுக்கலாம்
ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து20 நிமிடங்கள் கழித்து துடைத்தெடுக்கவும்.எலுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து முகத்தில் தேய்த்து10 நிமிடங்கள்கழித்து துடைக்கவும்.டீ ட்ரீ ஆயிலை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து துடைத்து எடுக்கவும்.பருக்கள் வந்துவிட்டால் க்ரீம், ஜெல் என எதுவும் தேடத் தேவையில்லை. ஐஸ் கட்டிகளை எடுத்து பருக்கள் உள்ள இடத்தில் வைத்து நன்கு மென்மையாக மசாஜ் செய்து வந்தாலே போதும் பருக்கள் வேகமாக மறைய ஆரம்பிக்கும்.முகப் பருக்களால் ஏற்படுகின்ற வீக்கம், சிவந்து போதல், கட்டிகள் உண்டாதல் போன்றவற்றையும் சரிசெய்வதில் ஐஸ் கட்டிக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
கண் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே .கண்களை சுற்றிகருவளையம் இருக்காதுகருவளையம் ஆனது மனக்கவலை, தூக்கமின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு இதுபோன்ற காரணங்களினால் தான் வருகிறது. இத்தகைய காரணங்கள் அனைத்தும் ஒவ்வொருவரின் உடல்நிலையினை பொறுத்ததுகண்களில் நீர்சத்து அதிகம் இல்லை என்றால் கருவளையம் வரும் வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு நிகழாமல் கருவளையம் வருவதை தடுக்க ஊட்டச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதாவது தர்ப்பூசணி, வெள்ளரிக்காய், தக்காளி, பப்பாளி முட்டைகோஸ் மற்றும் ஆரஞ்சு இதுபோன்ற உணவுகளை சாப்பிட்டாலே போதும் கருவளையம் என்பதே எட்டி பார்க்காது.ஒருநாளைக்கு நாம் அனைவரும் தூங்க வேண்டிய சராசரியான தூக்கத்தினை தூங்கவில்லை என்றால் கண்களில் கருவளையம் வரும். ஆகையால் ஒரு நாளைக்கு கண்டிப்பாக 8 மணிநேரம் தூங்க வேண்டும்நீங்கள் கண்களுக்கு கிரீம் பயன்படுத்தும் போதும் அல்லது கண்களில் இருக்கும் கிரீமினை அகற்றும் போதும் கண்களுக்கு கீழே இருக்கும் பகுதியினை பொறுமையாக கையாள வேண்டும் கண்களுக்கும் கண்களை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் மசாஜ் செய்வது என்பது நாம் செய்யும் வழக்கமான ஒன்று. கண்களுக்கு கீழே மசாஜ் செய்வது என்பது நம்முடைய கண்களில் கருவளையம் வருவதை தடுக்க செய்கிறது. எப்படி என்றால் கண்களில் நீர்சத்து அதிகமாக ஆகிவிட்டது என்றால் கண்களில் வீக்கம் மற்றும் கருவளையம் போன்றவை ஏற்படும். ஆனால் நாம் மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படியான நீர்சத்து ஏற்படுவதை தடுக்கலாம்.முகத்தில் இருக்கும் கண்களுக்கு கீழே வறட்சி ஏற்பட்டால் அதனை சரிசெய்ய Moisturizer பயன்படுத்துவோம். ஆனால் இதற்கு பதிலாக,அவர் அவருடைய கண்களுக்கு கீழே உள்ள தோலிற்கு ஏற்றவாறு, கிரீம்களை பயன்படுத்துவதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, கருவளையம் வருவதையும் தடுக்கிறது
வெயிலில் அலைந்து வேலை பார்ப்பவர்களுக்கு முகத்தை விட கைகள் கருமையாக இருக்கும். இந்த கருமையை போக்க1 கிண்ணத்தில்2 தேக்கரண்டி காபித்தூள்,2 தேக்கரண்டி சர்க்கரை,3 தேக்கரண்டி தயிர் எடுத்து நன்றாக கலந்து, கைகளில் தடவி15 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் கைகளை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இதை தொடர்ந்து செய்து வர கைகளில் உள்ள கருமை நீங்கி, கைகள் பளிச்சென்று இருக்கும்.
அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஒரே ஆசை தலைமுடி நல்ல அடர்த்தியாகவும், மிகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்பது தான். இருந்தாலும் தலைமுடி வளர வேண்டும் என்றால், முடியை நன்றாக பராமரிக்க வேண்டும்.ஷாம்பை அதிகமாக பயன்படுத்தக்கூடாது. ஏன் என்றால் அவற்றில் இருக்கும் ரசாயனப்பொருட்கள் உங்களுக்கு இருக்கும் முடியையும் அதிகமாக உதிர வழிவகுக்கும்.இயற்கை முறையை தினமும் பயன்படுத்தினால் தலைமுடிக்கு மட்டுமின்றி உடல்நலத்திற்கும் மிகவும் நல்லது.இயற்கை முறையில் தலைமுடியை அடர்த்தியாகவும், மிகவும் கருமையாகவும் தலைமுடி வளர, அழுகிய தேங்காயில் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி அரைத்து அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் வரை காத்திருந்து பின்பு தலை தேய்த்து குளிக்கவும்.இந்த முறையை வாரத்தில் இரு முறை செய்து வர தலைமுடி வேர்களுக்கு நல்ல வலிமை கிடைக்கும்.
புதினா பேஸ்ட் பயன்படுத்தினால் முகப்பரு மாயமாகி விடும். பாக்டீரியாவை அழித்திடும்.வேப்பிலை மஞ்சள் பேஸ்ட் போட்டால் வீக்கம் குறைந்துவிடும்ஆரஞ்சு தோலை அரைத்து பருவில் போட்டால் பரு வேகமாக ஆறிவிடும்மஞ்சள், தேன் பேஸ்ட் விளக்கெண்ணெய் மஞ்சள் பேஸ்ட்இதை பயன்படுத்தினால் முகப்பருவை குணப்படுத்துவதுடன், தோலை பாதுகாக்கவும்' செய்யும்.
1. விளக்கெண்ணெய், 2. தேங்காய் எண்ணெய், 3. ஆலிவ் எண்ணெய் 4. சின்ன வெங்காய சாறு 5. கற்றாழை சாறுஇந்த5 பொருட்களையும் கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒன்றாக கலந்து இரவில் பருவங்களில் தடவி மறுநாள் கழுவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.'
பச்சை பொன்னாங்கண்ணி கீரையை நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,20 முதல்30 நிமிடங்கள் உறை வைத்து குளிக்க, கண் எரிச்சல், உடல் சூடு நீங்கும், தலைமுடியும் கொட்டுவது நின்று, கறுத்து வளரும். பொன்னாங்கண்ணி சாறு,கரிசலாங்கண்ணி கீரை சாறு, நெல்லிக்காய் சாறு, பசும்பால் எண்ணெய், அதனுடன் சிறிது அதிமதுரம் இவற்றை சமமான அளவில் எடுத்து, பால் விட்டு அரைக்கவும், இக்கலவையை கலந்து காய்ச்சி, வடிகட்டி எடுத்த எண்ணெயை வாரம் இருமுறை தலையில் தேய்த்து தலை மூழ்கி வர கண் வியாதிகளும், பித்த நோய்களம் குணமாகும் என கூறியுள்ளனர். சித்தர்கள், பொன்னாங்கண்ணி கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து குழம்பு செய்து சாப்பிட்டு வர, எலும்புகள் நல்ல வலுப்பெறும், நோயால் குறைந்த உடல் எடை, மீண்டும் இயல்பு நிலைக்கும் வரும்.வாரம் இரண்டு முறையாவது இக்கீரையை சாப்பிட்டு வர மூளைக்கும், இதயத்திற்கும் புத்துணர்ச்சியும், நன்றாக செயல்படவும் உதவி செய்யும். சிறுநீர் எரிச்சல் நீங்கவும், சிறுநீரகம் நன்கு செயல்படவும் பொன்னாங்கண்ணியை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். கால்சியம் இரும்பு மற்றம் தங்கச் சத்துக்கள் பொன்னாங்கண்ணியில் இருப்பதால் இது ஏழைகளின் தங்க பஸ்பம் என அழைக்கப்படுகிறது.
தயிரை நாம் முகத்தில் தடவுவதால் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தையும், மிக சிறந்த பொலிவையும் தயிர் நமக்கு தருகிறது.தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்துக்கொள்கிறது.தயிர் முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி என்றும் பளப்பளப்பான மற்றும் மென்மையான சருமத்தைஅளிக்கிறது.சந்தனம்(sandalwooduses) ஒரு டேபிள் ஸ்பூன், தயிர் ஒரு டீஸ்பூன், தேன் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.இந்த ஃபேஸ் பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதிகளுக்கு அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை முகத்தில் வைத்து.பின்பு சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும. இந்த முறையை வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை பயன்படுத்தலாம்.சந்தனப்(sandalwooduses) பொடியை மஞ்சள் தூள், ஒரு துளி எலுமிச்சை சாறு மற்றும் பால் ஊற்றி கலந்து, சருமத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும்.இதனால் முகமானது பொலிவோடு காணப்படும்.சந்தனப் பொடியை (sandalwood uses) முல்தானி மெட்டி பவுடருடனும் சேர்த்து ஃபேஸ் பேக் போடலாம்.அதற்கு 1/2 டீஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தனப் பொடியை சேர்த்து, தயிர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.பொதுவாக சந்தன ஃபேஸ் பேக்கில், சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து, சருமத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும்.சந்தன எண்ணெயை முல்தானி மெட்டி பவுடரில் சேர்த்து கலந்து, முகத்திற்கு பயன்படுத்தினால், சருமம் மென்மையாகவும் அழகாகவும் இருக்கும்.சந்தனப் பொடியில்(sandalwooduses) தக்காளியை அரைத்து கலந்து, வேண்டுமெனில் சிறிது முல்தானி மெட்டியையும் சேர்த்து கலந்து, முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
பாதாம் எண்ணெய், தேங்காய்எண்ணெய் அல்லது ஆலிவ்எண்ணெயை பயன்படுத்தி, தலைச்சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.இரவு முழுவதும் நன்குஊற விட்டு, காலையில்எழுந்ததும், தலையை ஷாம்புகொண்டு அலச வேண்டும்.குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன்கற்றாழை ஜெல்லை, தலைச்சருமத்தில்தேய்த்துக்கொள்ளுங்கள்.20 நிமிடங்கள்கழித்துஒருஷாம்புவைகொண்டு தலையைஅலசிக் கொள்ளவும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு தொல்லைநீங்கும்.சில வேப்பஇலைகளை எடுத்து, அதைநன்கு பேஸ்ட் செய்து,அதனை அப்படியே தலையில்தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில்தலையை அலச வேண்டும்.இவ்வாறு செய்தால்பொடுகு தொல்லை நீங்கிதலை முடி போஷாக்குடன் இருக்கும்.சமமான அளவைக்கொண்ட, ஆப்பிள் மற்றும்ஆரஞ்சு பழங்களை கொண்டுஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை தலைமுடி ஸ்கால்ப்பில் நன்றாகதடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையைஅலச வேண்டும். இவ்வாறுசெய்வதினால் பொடுகு பிரச்சனைமிக விரைவில் சரியாகும்.