ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு திரு.நாரா சந்திரபாபு நாயுடு அவர்கள், முதியோர்களுக்காக இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்.இலவச தரிசன நேரங்கள் : காலை 10:00 மணி - பிற்பகல் 3:00 மணி நுழைவு முறை: நீங்கள் உங்கள் புகைப்பட அடையாள அட்டை மற்றும்வயதுச் சான்றை கவுண்டர் S-1-இல் காட்டினால் மட்டும் போதும்.கோயிலுக்குச்செல்லும்வழிகள்:கோயிலின்வலதுசுவரையொட்டி, பாலத்தின்கீழுள்ளமண்டபத்தின்வழியாகச்செல்லவும். படிக்கட்டுகளில் ஏறத் தேவையில்லை.விசாலமான இடம் உள்ளது.வசதிகள்:1.இலவச உணவு:தரிசனத்திற்குப் பிறகு, உங்களுக்கு இலவசமாக சூடான சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் சூடான பால் வழங்கப்படும்.2.பேட்டரி கார்கள்:வசதிக்காக, பேட்டரிர் கார்களும் கிடைக்கின்றன. அவை உங்களை வாகனநிறுத்துமிடத்திலிருந்து கவுண்டருக்கும் அங்கிருந்து வெளியேறும் வாயிலுக்கும் அழைத்துச் செல்லும்.முக்கிய குறிப்பு:எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லை- தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.நீங்கள் தரிசன வரிசையில் சேர்ந்தவுடன் உங்கள் தரிசனத்தை முடித்து, வெறும் 30 நிமிடங்களில் வெளியே வரலாம்.உதவிக்கு தொடர்பு கொள்ள:திருமலை திருப்பதி தேவஸ்தானம் உதவி மைய எண்: 87722 77777சிறப்பு வேண்டுகோள்: தயவுசெய்து இந்தத் தகவலை உங்கள் மற்ற குழுக்களில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள்.சட்டவிரோதமாக பணம் பெறுதல், திருக்கோயில்களின் திருப்பணிகள் மற்றும் திருக்கோயில்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு லஞ்சம் பெறுதல் போன்ற குற்றங்களை பற்றி கீழே வழங்கப்பட்டுள்ள எனது தனிப்பட்ட இ-மெயில் முகவரிக்கு தகுந்த விளக்கம் மற்றும் ஆதாரங்களுடன் புகார்களை அளியுங்கள்.நானும் எனது அலுவலகமும் நேரடியாக இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிவகைகளை செய்வோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.E- Mail : minister_hrce@tn.gov.inஅன்புடன்.S.ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.
தியாகச் செம்மல்பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின்128 ஆவது பிறந்தநாள் விழா ஸ்ரீமதி.பி.எஸ்.கே. ருக்மணி அம்மாள் அரங்கத்தில் 8-7-2026 புதன்கிழமை சிறப்பாக நடைபெற உள்ளது. 8-7-2026 புதன்கிழமைகாலை 9.00 மணிக்குஅமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா அவர்கள் நினைவாலயத்தில்ஸ்ரீ பி.ஏ.சி .ராமசாமி ராஜா இசைப்பள்ளி குழுவினரின் கீர்த்தனாஞ்சலியுடன் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. நிகழ்ச்சி நிரல் 8-7-2026 மாலைபுதன்கிழமை 6.00 மணிகாந்தி கலை மன்றம்,ஸ்ரீமதி.பி.எஸ்.கே.ருக்மணி அம்மாள் அரங்கம்விழாத்தலைவர்ராம்கோ குரூப் சேர்மன்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்(மேனேஜிங் டிரஸ்டி, காந்தி கலை மன்றம் )வரவேற்புரை :திரு. P.J. ராம்குமார் ராஜா அவர்கள் (டிரஸ்டி, காந்தி கலை மன்றம்)"தேச- தெய்வ சிந்தனை” கீர்த்தனைகளுடன் கர்நாடக இசை நிகழ்ச்சி நிகழ்த்துபவர்'செல்வி' M.S. ஷண்முகப்ரியா Ph.D அவர்கள்(ஸ்ரீமதி பாலாமணி ஈஸ்வர் AIR & Dr. K. ருக்மணி அவர்களின் சிஷ்யை, ஸ்ரீமதி ரெங்கநாயகி அவர்களின் மகள்) விருந்தினர்களை கௌரவித்தல்திரு. N.K. ஸ்ரீகண்டன் ராஜா அவர்கள்திரு. P.R. குமாரசாமி ராஜா அவர்கள்
ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் மற்றும் இதர குறைகளுக்கு தீர்வுகாணும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பாலசுப்ரமணியம் முன்னிலையில் குறைகள் கேட்டறியப்படும்.ஜூலை 7, காலை 11:00 மணி.ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகம்.எனவே, மின் நுகர்வோர்கள் தங்கள் மின்வாரியம் சம்பந்தப்பட்ட குறைகளை இந்த முகாமில் நேரில் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஸ்ரீ பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா,ஸ்ரீதர்மரக்ஷகர் -ராம்கோ குரூப் அவர்களின் 91-வது பிறந்தநாள் விழா அன்று 04.07.2026 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு கர்நாடக இசை நிகழ்ச்சிஇராஜபாளையம், திருமலை திருப்பதி தேவஸ்தானம் கல்யாண மண்டபம் A/C ஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமி ராஜா அரங்கத்தில் "கலைமாமணி"ஸ்ரீ உண்ணி கிருஷ்ணன் & செல்வி உத்ரா உண்ணி கிருஷ்ணன்அவர்களின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.அனைவரும் கேட்டு மகிழ வருக !
04-07-2026 சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு அன்னாரின் நினைவாலயத்தில்ஸ்ரீமான் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு இசைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவியர்களின் கீர்த்தனாஞ்சலியும் தொடர்ந்து புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது.அன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீஸ்ரீ அபிநவவித்யாதீர்த்த பாரதீ வேதபாடசாலையில் ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் திரு உருவ படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டு ராம்கோ டெக்ஸ்டைல்ஸ் பிரிவின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொடர் ஜோதி ஏந்தி புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவிலில் பூஜைகள் செய்யப்பெற்று நகரின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து காலை 11 மணியளவில் ராஜபாளையம் மில்ஸ் வந்தடைய உள்ளது.முன்னதாக காலை 8.30 மணியளவில் ராமமந்திரத்திற்கு ஜோதி வருகின்ற சமயம் ,அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பெற்று அனைவருக்கும் காலை 9 மணியளவில் காந்தி கலைமன்ற வளாகத்தில் பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
.மக்களுக்கு மிகவும் பயனுள்ள முக்கிய அறிவிப்பு!மொபைல் செயலி மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே OP சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.இனி அரசு மருத்துவமனைகளில் ஆதார் மூலம் முன்பதிவு (Online Registration) செய்யும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்காமல், எளிதாக OP சீட்டு (Out Patient Slip)பெற முடியும்.
அருள்மிகு அஞ்சல்நாயகி உடனுறை மாயூரநாத சுவாமி திருக்கோயில் பெத்தவநல்லூர், இராசபாளையம் .ஆனி தேரோட்ட பெருவிழா, நிகழும் மங்களகரமான கொல்லம் 1201-ஆம் ஆண்டு பராபவ வருடம் ஆனி ஆனி மாதம் மாதம் 14 ஆம் நாள் (28-06-2026)ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு ,தேர்வடம் பிடித்து தேரோட்டம் நடைபெற உள்ளது. ஆகையால் அனைத்து பக்தர்களும் வருகை தந்து சிவனருள் பெற அன்புடன் அழைக்கின்றோம்.அருள்மிகு பைரவர்அன்னதானம் நடைபெற உள்ளது.ஆகையால் அனைத்து பக்த கோடி மெய்யன்பர்களும் கலந்து கொண்டு இறைவனின் திருவருளை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 26-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தேசிய வங்கிகளுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பதால், பொதுமக்கள் தங்களது பயணங்கள் மற்றும் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக மருந்து வழங்கப்படும்.6, 10, 14 வாரங்களில் போலியோ தடுப்பூசி போட்டிருந்தாலும், இந்த 2 சொட்டு மருந்தை தவறாமல் குழந்தைகளுக்கு வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.