25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள். >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள் >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள் >>


சமையல் குறிப்பு

Mar 04, 2026

ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும்

முன் காலத்தில் அம்மா சுடும் ஆப்பத்தின் நறுமணம் தெருவிற்கு வாசம் வரும் இன்று ஆப்பத்தின் நறுமணம் குழந்தைகள் அறியாத அளவிற்கு மாறிவிட்டது.. காரணம் அப்போது தென்னை மரம் அல்லது பனை மரத்தின் கள் சேர்த்து செய்வார்கள்.இப்போது கிடைப்பதில்லை. அரிசியும் ருசியுடன் இருக்கும். அதனால் அப்போது உள்ள ஆப்பத்தின் சுவை இப்போது இல்லை. அதற்கு பதிலாக இப்போது ஆப்பத்தின் சுவையை ரொட்டி, கேக் செய்ய பயன்படுத்தும் ஈஸ்ட் கொடுக்கிறது. பச்சரிசி, புழுங்கல் அரிசி, வடித்த சாதம், தேங்காய் துருவலை வெண்ணெய் போல அரைத்து, உப்பு சேர்த்து கலந்து, அதனுடன் அரை ஸ்பூன் ஈஸ்ட் தண்ணீரில் சேர்த்து கரைத்து உப்பு சேர்த்து ஆப்ப மாவை தயார் செய்து, மறுநாள் காலை புளித்த பின் மாவின் வாசனை பிரமாதமாக இருக்கும். தேங்காய் பால், சென்னா மசாலா செய்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Feb 24, 2026

பீட்ரூட்  அல்வா சுவையாக இருக்க.....

பீட்ரூட்டை பாலில் வேக வைத்து விட்டு, பிறகு மசித்து செய்தால் பீட்ரூட்   அல்வா சுவையாக இருக்கும்.எவ்வளவு விலை உயர்ந்த பருத்தி துணி என்றாலும், சிறிதளவு நீரில் நனைக்கும் போது சுருங்கவே செய்யும். எனவே, பருத்தி துணிகளை வாங்கியதும் அதை தைக்கும் முன் தண்ணீரில் நனைத்தெடுத்து காய வைத்து, அதன்பின் தைத்தால், கடைசி வரையில் துணிகள் தைத்த அளவுடன் இருக்கும்.குழந்தைகள் பிறந்தவுடன் வாங்கும் சிறிய மெத்தைகள், நாளடைவில் பயனில்லாமல் போய் விடும். அவற்றை அப்படியே மடித்து தைத்து, ஒரு கவரும் போட்டு விட்டால், ரயில் பிராயணத்தின் போது எடுத்துச் செல்ல இலகுவான தலையணை தயார்.பொதுவாக கடைகளில் வெண்ணெய் வாங்கி வந்து காய்ச்சும் போது, நல்ல தண்ணீரில் வெண்ணெயை அரை மணி நேரம் போட்டு வைத்து, பின் காய்ச்சினால் சுத்தமாக இருப்பதுடன், நெய் மணமாக இருக்கும்.புழுங்கல் அரிசியை வறுத்து பொடியாக்கி, கூட்டு, பொரியலில் துாவினால் சுவையாக இருக்கும்.

Feb 04, 2026

தேங்காய் சரிபாதியாக உடைய....

சமையலுக்கு பயன்படுத்தும் பருப்பு வகைகள் அனைத்தையும் சிறிது நேரம் நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் விரைவில் வெந்துவிடும். ஊறுகாய் பாட்டில்களில் பிளாஸ்டிக் மற்றும் மர ஸ்பூன்களை போட்டு வைத்தால் ஊறுகாய் நீண்ட நாட்களில் கெடாமல் இருக்கும்.முட்டைக்கோசை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்து தயிரில் போட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்துக் கொட்டுங்கள் கோஸ் தயிர் பச்சடி சுவையுடன் நன்றாக இருக்கும்.தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்| போன்ற கலந்த சாதங்கள் செய்யும் போது பொட்டுக்கடலையை நன்கு வறுத்து| போட்டு கிளறினால் மிகவும் சுவையாக இருக்கும்.தேங்காயை உடைப்பதற்கு முன் அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பிறகு உடைத்தால் தேங்காய் சரிபாதியாக உடையும்.

Feb 03, 2026

பயத்தம் பருப்பு லட்டு சுவை கூட.....

 பயத்தம் பருப்பு லட்டு செய்யும் போது, 100 கிராம் குலோப் ஜாமூன் மிக்ஸ் சேர்த்து செய்தால் ருசியும், சுவையும் கூடும்.உளுந்து வடைக்கு ஊற வைக்கும்போது ஒரு கிலோ உளுந்துக்கு 100 கிராம் பச்சரிசி என்ற விகிதத்தில் அரிசியையும்  சேர்த்து ஊற வைத்தால் அதிகமாக எண்ணெய் குடிக்காது. வாழை இலையை பின்புறமாக தணலில் காட்டிய பிறகு சாப்பாட்டு பொட்டலம் கட்டினால் இலை எவ்வளவு மடக்கினாலும் கிழியாது.சப்பாத்திக்கு மாவு பிசையும் போது நான்கு பிரட் ஸ்லைஸ்களை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப் பிசைந்து செய்தால், சப்பாத்தி மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.எலுமிச்சம் பழங்களை ஊறுகாய்க்கு நறுக்கும் போது, அத்துடன் ஒரு பெரிய இஞ்சியையும் துண்டுகளாக்கி சேர்த்தால், ஊறுகாய் மணமாக இருக்கும்.  

Jan 28, 2026

சாம்பார் தண்ணீராக இருந்தால், ....

குக்கரில் கரை உள்ள இடத்தில் புளித்த தோசை மாவு தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு கழுவினால் கரை போய்விடும்.அரிசியை வேகவைக்கும் போது சிறிது நெய்யோ எண்ணெய்யோ ஊற்றினால் தண்ணீர் வெளியே வராது.எண்ணை  பலகார டப்பாவில் உப்பைத் துணியில் முடிந்து வையுங்கள் காரல் வாடை வராது.சூடத்தை தண்ணீர் போட்டு ஒரு கப்பில் வைத்தால் கொசுக்கள் வராது.சாம்பார் தண்ணீராக இருந்தால், பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் சேர்க்கலாம். சாம்பார் கெட்டிப்படுவதுடன் ருசியாகவும் இருக்கும்.

Jan 22, 2026

பால் பாயசம் சுவையாக இருக்க....

தக்காளி, எலுமிச்சை பழம் கெட்டு போகாமல் இருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.சப்பாத்திக்கு மாவு பிசையும் போது அதில் சிறிதளவு கொண்டைக்கடலை மாவு அல்லது மக்காச்சோள மாவு சேர்த்தால் சப்பாத்தி மிருது வாக வரும்.பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை ஊற வைத்து அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.பால் பாயசம் செய்வதற்கு பச்சரிசியை களைந்து அரை மணி நேரம் ஊறவைத்து, பாலில் வேகவைக்கவும். பிறகு, சிறிது சிறிதாக பாலை சேர்த்து சர்க்கரை போட்டால் ருசி அதிகமாகும்.எப்போது அடை செய்தாலும், பருப்புகளுடன் ஒரு பிடி கொள்ளு சேர்த்து அரைத்தால், வாயு தொல்லையும் வராது.

Dec 30, 2025

உடனுக்குடன் காபி கலக்க....

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலக்கலாம்.பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி.சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண் ணெய்யை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் போட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற் றிக்கு தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்.

Dec 23, 2025

கட்டிப் பெருங்காயம் சுலபமாக பயன்படுத்த ...

கட்டிப் பெருங்காயத்தை நறுக்குவதற்கு, கடைகளில் கிடைக்கும் பாக்கு வெட்டி வாங்கி வைத்து கொள்ளலாம். பெருங்காயம் இளகி இருக்கும் போதே சிறிய துண்டுகளாக்கி, சிறிது அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து நிழலில் உலர்த்தி, எடுத்து வைத்தால், பயன்படுத்த சுலபமாக இருக்கும்.முந்திரியில் உள்ள தாமிரச்சத்து, தலை முடியின் நிறத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.அன்னாசி பழத்தில் மக்னீஷிய சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகள் வலுவடையவும், அதைச் சார்ந்துள்ள தசைகள் வலுவடையவும் அடிக்கடி சாப்பிடலாம்.பிளாஸுக்குகளின் பயன்பாடு முடிந்ததும் நன்றாக சுத்தம் செய்து உலர்த்திய பின் அதில் ஒரு நியூஸ் பேப்பரை சுருட்டி உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும்.இதனால் கெட்ட வாடை வராமல் இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும் போது, சாதம் சேர்ப்பதற்கு முன்பு இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின்பு சாதத்தில் போட்டுக் கிளறினால் ருசியாக இருக்கும்.

Dec 08, 2025

வசிக்கும் வீடு நறுமணத்துடன் திகழ...

உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்(எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமனா எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.

Dec 05, 2025

தயிர் வடை செய்யும் போது.........

அடை செய்யும் போது, காரத்திற்கு மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்தால், சுவையாக இருக்கும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்து, செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்தால்,ருசியாக இருக்கும்.தயிர் வடை செய்யும் போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து, அரைத்தால், வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயசம் செய்யும் போது, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்தால், பாயசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

AD's



More News