25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >> தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில் >> ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். >> இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம். >> இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர். >> உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. >> அழகான ஓவிய வகுப்பு >> கல்லூரி மாணவர்கள் மத்தியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம். >> ராஜபாளையத்தில் சீனாவின் அமுர் வல்லுாறு பறவை . பறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். >>


சமையல் குறிப்பு

Dec 30, 2025

உடனுக்குடன் காபி கலக்க....

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வரும், விருந்தாளிகளுக்காக, அடிக்கடி காபி கலக்க நேரிடும். அப்போது பாலை திரும்ப திரும்ப சுடவைத்து காபி கலக்கினால், பால் சீக்கிரம் சுண்டிவிடும். இரண்டு கேஸ் அடுப்புகளிலும் இரண்டு, பெரிய பாத்திரங்களில் வெந்நீர் கொதிக்க வைத்து அதில் ஒன்றில் பாலும், மற்றொன்றில் காபி டிக்காஷன் உள்ள சிறிய பாத்திரத்தை வைத்து, அடுப்பை, 'சிம்'மில் வைத்து விடவும். பாலும், டிகாஷனும் எப்போதும் சூடாக இருக்கும். உடனுக்குடன் காபி கலக்கலாம்.பொரித்த ஒரு அப்பளத்தை நொறுக்கி, இரண்டு டீஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, ஒரு பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்தால் சூப்பரான அப்பளத் துவையல் ரெடி.சாதம் வடிக்கும் போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண் ணெய்யை சேர்த்தால் மேலும் குழையாமல் இருக்கும்.துவரம் பருப்பை வேக வைக்கும் போது ஒரு துண்டு தேங்காய் போட்டு வேக வைத்தால் விரைவில் வெந்து விடும்.மோர்க்குழம்பு, கூட்டு ஆகியவற் றிக்கு தேங்காய் எண்ணெய்யில் தாளித்து கொட்டினால், மணமாக இருக்கும்.

Dec 23, 2025

கட்டிப் பெருங்காயம் சுலபமாக பயன்படுத்த ...

கட்டிப் பெருங்காயத்தை நறுக்குவதற்கு, கடைகளில் கிடைக்கும் பாக்கு வெட்டி வாங்கி வைத்து கொள்ளலாம். பெருங்காயம் இளகி இருக்கும் போதே சிறிய துண்டுகளாக்கி, சிறிது அரிசி மாவு அல்லது கோதுமை மாவு கலந்து நிழலில் உலர்த்தி, எடுத்து வைத்தால், பயன்படுத்த சுலபமாக இருக்கும்.முந்திரியில் உள்ள தாமிரச்சத்து, தலை முடியின் நிறத்தை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.அன்னாசி பழத்தில் மக்னீஷிய சத்து அதிகம் இருக்கிறது. எலும்புகள் வலுவடையவும், அதைச் சார்ந்துள்ள தசைகள் வலுவடையவும் அடிக்கடி சாப்பிடலாம்.பிளாஸுக்குகளின் பயன்பாடு முடிந்ததும் நன்றாக சுத்தம் செய்து உலர்த்திய பின் அதில் ஒரு நியூஸ் பேப்பரை சுருட்டி உள்ளே வைத்து மூடி வைக்க வேண்டும்.இதனால் கெட்ட வாடை வராமல் இருக்கும். எலுமிச்சை சாதம் செய்யும் போது, சாதம் சேர்ப்பதற்கு முன்பு இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின்பு சாதத்தில் போட்டுக் கிளறினால் ருசியாக இருக்கும்.

Dec 08, 2025

வசிக்கும் வீடு நறுமணத்துடன் திகழ...

உங்களுக்கு மிகவும் பிடித்த நறுமண எண்ணெயின் சில துளிகளை முதலில் தேர்ந்தெடுக்கவும்(எ.கா. லாவெண்டர், எலுமிச்சை அல்லது யூகலிப்டஸ்) அத்துடன் நீர் சேர்த்து ஸ்பிரே பாட்டிலில் நிரப்பித் தெளித்து அறையை புத்துணர்ச்சியூட்டும் வாசனையால் நிரப்பலாம்.உலர்ந்த பூக்கள், மணமுள்ள மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை ஒரு கிண்ணத்தில் போட்டு கைகளால் நன்கு நசுக்கி அதில் சில துளிகள் நறுமணம் தரும் எண்ணெய்களைச் சேர்க்கவும். இந்தக் கிண்ணத்தை ஒரு அறையின் மூலையில் வைத்து காற்றில் பரவும் நறுமணத்தை அனுபவிக்கலாம்.ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடா மற்றும் நறுமனா எண்ணெய்களை கலந்து அறையில் வைத்தால் அக்கலவை காற்றில் பரவும். அது வீட்டின் துர்நாற்றத்தை உறிஞ்சி விடுவதோடு, நல்ல மணத்தையும் பரப்பும். அதன் செயல்திறனை பராமரிக்க அந்தக் கலவையை தொடர்ந்து மாற்றுவது நல்லது அதேபோல, அடுப்புக் கரியையும் ஆங்காங்கே வைத்தால் காற்றில் உள்ள துர்நாற்றத்தை நீக்கலாம்.ஒரு அழகான கண்ணாடி அல்லது பித்தளைப் பாத்திரத்தில் நீர் ஊற்றி அதில் மனதுக்குப் பிடித்த மல்லிகை, ரோஜா, சாமந்தி போன்ற மலர்களின் இதழ்களை பரப்பி வைத்தால் கண்களுக்கு இனிமையாகவும் நாசிக்கு மணமாகவும் இருக்கும்.

Dec 05, 2025

தயிர் வடை செய்யும் போது.........

அடை செய்யும் போது, காரத்திற்கு மிளகாய் சேர்ப்பதற்கு பதிலாக, இஞ்சி மற்றும் மிளகு சேர்த்தால், சுவையாக இருக்கும்; ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.பயத்தம்பருப்பு சுண்டல் செய்யும் போது, பயத்தம் பருப்பை வாசனை வரும்படி நன்கு வறுத்து, செய்தால் சுண்டல் உதிரி உதிரியாக வரும்.கோதுமை ரவை உப்புமா செய்யும் போது, தண்ணீர் சேர்ப்பதற்கு பதிலாக, தேங்காய்ப் பால் கொஞ்சம் சேர்த்தால்,ருசியாக இருக்கும்.தயிர் வடை செய்யும் போது, உளுத்தம் பருப்புடன் ஐந்து அல்லது ஆறு முந்திரி பருப்பையும் ஊற வைத்து, அரைத்தால், வடை மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.சேமியா அல்லது ஜவ்வரிசிப் பாயசம் செய்யும் போது, பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கி, சூடு ஆறியதும் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்தால், பாயசம் நீர்த்துப் போகாமல் இருக்கும்.

Nov 25, 2025

பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்க...

பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும். கடலை மாவுக்கு பதிலாக ஒரு பங்கு பச்சரிசியும், ஒரு பங்கு பருப்பும் கலந்து மிக்சியில் அரைத்து உப்பு, மிளகாய்த்தூள் தேவையான அளவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவை கூடும். * கீரையை சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையை சேர்த்தால் சத்து அப்படியே இருக்கும். வெங்காயம் நறுக்கும் போது, கத்தியை லேசாக சூடு செய்துவிட்டு அதன் பின்பு வெங்காயம் நறுக்கி னால் கண்களில் கண்ணீர் வராது. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் ,பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.

Nov 12, 2025

வெங்காயத்தை சுலபமாக உரிக்க....

சிறிதளவு வெல்லம்,நெய் உள்ளே போட்டு வைத்து விட்டால் நெய் சீக்கிரம் கெடாமல் இருக்கும். வெங்காயத்தை பிளாஸ்டிக் பைக்குள் போட்டு முதல் நாள் இரவே பிரிட்ஜில் வைத்து விடுங்கள். மறுநாள் காலை நறுக்கினால் கண்ணீர் வராது, தோலும் சுலபமாக உரிக்க வரும். குக்கரில் சாதம் செய்யும் போது அடியில் கட்டி கட்டியாக ஆகிவிடும். அதற்கு குக்கரிலிருந்து எடுத்து ஹாட் பேக்கில் வைத்து விட்டால் சர்தம் பொல பொலவென்று உதிரியாக இருக்கும் கோதுமை மற்றும் அரிசியில் பூச்சி வராமல் இருக்க டப்பாவின் அடியில் வேப்ப இலை, கல் உப்பு சேர்த்து பொட்டலம் கட்டிப்போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது. பட்டாணியை முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து, பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

Nov 04, 2025

அவல் பொங்கல்,அரிசி பொங்கலை விட அதிக ருசியுடன் இருக்கும்.

பயத்தம்பருப்பை வேகவைத்து, தேவையான அளவு அவலை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுவி, அரை மணி நேரம் ஊற வைத்து, வாணலியில் நெய், எண்ணெய் விட்டு மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வதக்கி கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து அதனுடன் வேகவைத்த பயத்தம் பருப்பு, ஊற வைத்த அவல், உப்பு சேர்த்து கிளறி, கெட்டியாக இருந்தால் தண்ணீர் விட்டு குழைவாக கிளறி இறக்கினால், சுவையான அவல் பொங்கல், அரிசி பொங்கலை விட ருசியாக இருக்கும். இதற்கு சாம்பார், சட்னி வைத்து சாப்பிடலாம்.

Nov 03, 2025

இட்லி உப்புமா உதிரி உதிரியாக வர....

இட்லி உப்புமாவை தாளிக்கும்போது, இட்லிகளை, அரை மணி நேரம் முன்பே பிரிட்ஜில் வைத்து, பிறகு எடுத்து உப்புமா செய்தால் உதிரி உதிரியாக வரும்.பாகற்காயுடன் உப்பு, மஞ்சள், எலுமிச்சை சாறு, வெல்லம் சேர்த்து 30 நிமிடம் ஊற வைத்து சமைத்தால் பாகற்காயில் கசப்பு தெரியாது.கத்திரிக்காய் கூட்டோ அல்லது பொரியலோ செய்யும்போது சிறிதளவு கடலை மாவைத்தூவி ஐந்து நிமிடம் கழித்து இறக்கினால் சுவையும் மணமும் கூடும்.பருப்பு வடை செய்யும் போது சிறிதளவு இஞ்சித் துருவலை சேர்த் தால் சுவையாக இருக்கும். எளிதில் ஜீரணிக்கும்.வெண்டைக்காய் முற்றி விடாமல் இருக்க காயின் மேல்பகுதி, அடிப்பகு தியை சிறிதளவு நறுக்கி வைத்துக் கொள்ளலாம்.

Oct 31, 2025

சுவையுடன் சத்தும் நிறைந்த கேரட் சாதம்.

கேரட் சாதம் சுவையுடன் சத்து நிறைந்துள்ளதாகும். இதை நெய்யோடு சேர்த்து செய்வதால் சுவையும் ,சத்தும் கூடுதலாக கிடைக்கும். அரிசியை குக்கரில் வேகவைத்து ஆறவைத்து, கேரட்டை தோல் சீவி வைத்து, கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு ,உளுத்தம் பருப்பு, சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து, துருவிய கேரட்டையும், உப்பு சேர்த்து அது மென்மையாக ஆகும் வரை மூடி வேகவைத்து, பிறகு ஆறிய சாதத்தை கேரட் கலவையுடன் சேர்த்து, மெதுவாக கிளறவும். உப்பு சரி" பார்க்கவும், சுவைக்கு ஏற்ப எலுமிச்சை சாறு சேர்த்து,கொத்தமல்லி இலையை தூவி கிளறினால் சுவையான, அருமையான கேரட் சாதம் சாப்பிட நன்றாக இருக்கும்.

Oct 29, 2025

வத்தக் குழம்பு சுவையாக இருக்க.... 

பருப்பு குழம்பு இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.வெண்பொங்கலுக்கு நாலு பங்கு பச்சரிசிக்கு, ஒரு பங்கு பாசி பருப்பு என்ற அளவில் தண்ணீர் பங்கும் எடுத்துக் கொண்டால் பொங்கல் பதமாக இருக்கும். வெண்பொங்கலில் மிளகை ஒன்று இரண்டாக உடைத்துப் போட்டால் பொங்கலுடன் இணைந்து தனியாக எடுத்து வைக்க வேண்டி இருக்காது.சுவை அபாரமாக இருக்கும்.ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பை எண்ணெயில் வறுத்து ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய் சட்னியில் சேர்க்க சுவையும் மணமும் கூடும்..வத்தக் குழம்பு வைக்கும்போது இறுதியில் சிறிதளவு மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்...வத்தக் குழம்புசுவையாக இருக்கும். 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

AD's



More News