25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Oct 11, 2024

அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

கடலை எண்ணெய் உள்ள பாத்திரத்தில் சிறிது மிளகு போட்டு வைத்தால், நீண்ட நாட்களுக்கு எண்ணெய் கெடாமல் ஃபிரஷ்ஷாக இருக்கும்.சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.பலகாரம் செய்ய எண்ணெய் காய வைக்கும் போது, முதலில் கொய்யா இலையைப் போட்டு எடுத்துவிட்டு, பிறகு முறுக்கு, வடை, அதிரசம் போன்ற பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.வெல்லப்பாகு, சீனிப்பாகுடன் பதம் தீய்ந்த பாலில் சூடு ஆறுமுன்னர் மிளகைத் தட்டிப் போட்டால் பாலின் ருசி மாறாமல் இருக்கும்.

Oct 04, 2024

கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது

தேங்காயை உடைத்தவுடன் கழுவி பின் பிரிட்ஜில் வைக்கவும். ஏனெனில் மேலெ ஏற்படும் பிசுபிசுப்பு இருக்காது.சாப்பிட்ட தட்டில் மீதமுள்ளஉணவை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு தட்டை சிங்கில் போடுவோம். அப்படி போடும் முன் தட்டை லேசாக அலசி விட்டுப் போட்டால், பாத்திரம் தேய்ப்பவர் யாராக இருந்தாலும் முகம் சுளிக்காமல் சுத்தம் செய்வர்.சமைக்கும் போது ருசி பார்க்க உள்ளங்கையில் ஊற்றி டேஸ்ட் செய்த பிறகு கையை கழுவ வேண்டும்.அல்லது ஒரு ஸ்பூன், கரண்டி கொண்டு 'டேஸ்ட் பார்த்து எச்சில் செய்த பிறகு அதைஅப்படியே கழுவாமல்  மீண்டும் பயன்படுத்த கூடாது.கீழே பச்சை முட்டை கொட்டி விட்டால் அதன் மேல் தூள் உப்பை தூவி காய்ந்த துணி அல்லது நியூஸ் பேப்பரால் துடைத்தால் அந்த இடத்தில் முட்டை வாடை இருக்காது.கீழே எண்ணெய் கொட்டி விட்டால் அதன் மேல் கோல மாவு அல்லது அரிசி மாவை தூவி காய்ந்த துணியால் துடைத்து விட்டால் அந்த இடத்தில் எண்ணெய் சிந்திய அடையாளமே இருக்காது.

Oct 01, 2024

பருப்பு வடை செய்யும் போது...

பருப்பு வடை செய்யும் போது பெரிது பெரிதாக போடாமல் கொஞ்சம் சிறிய அளவில்  செய்தால் மொறு மொறு என்று இருக்கும்... குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்... கடலை பருப்பை மூன்று மடங்கு நைசாகவும் ஒரு மடங்கு ஒன்றும் பாதியாகவும் அரைக்க வேண்டும் அப்பொழுது தான் கருகாமல் நன்றாக வரும்...!ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது. தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது. பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும். தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.

Sep 20, 2024

புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலை ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்க…

பாலை லேசாக சூடுபடுத்தி அதில் அரை ஸ்பூன் சர்க்கரை போட்டு அதில் தயிருக்காக உறை ஊற்றி 8 மணி நேரம் கழித்து பார்த்தால் கெட்டித்தயிராக இருக்கும்.குக்கரில் பருப்பு வேகவைக்கும் போது, நேரடியாக குக்கரை பயன் படுத்த வேண்டாம். முதலில் பருப்பை திறந்த பாத்திரத்தில் வேகவைத்து அதில் உள்ள நுரையை நீக்கவும். இந்த நுரைகாரணமாக, யூரிக் அமிலம் அதி கரித்து மூட்டு வலி ஏற்படுகிறது.கேசரி செய்யும்போது நீரின் அளவைக்குறைத்து பால் கலந்து செய்தால், நல்ல மணத்துடன் இருக்கும். அதில் பேரீச்சை, அன்னாசி பழங்களையும் வெட்டிப்போட்டு பழக்கேசரி செய்தால் சுவையும், சத்தும் கூடும்.புதினா, மல்லி மற்றும் கறிவேப்பிலைகளை எப்பொழுதும் தண்டுடன் அப்படியே வைக்கக்கூடாது. கழுவி நன்கு ஃபேன் காற்றில் காய வைத்த பின் இலைகளை மட்டும் கிள்ளி ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்தால் போதும், ஒரு வாரம் வரை அப்படியே ஃப்ரெஷ்ஷாக இருக்கும்நீங்கள் கடலை எண்ணெயை பயன்படுத்துவது உண்டு என்றால் முட்டை வேக வைக்கும் பொழுது நாலைந்து சொட்டுகள் கடலை எண்ணெய் சேர்த்து கொஞ்சம் கல் உப்பு போட்டு வைத்தால் போதும் முட்டையை வேக வைத்த பின் பிரிக்கும் பொழுது கொஞ்சம் கூட ஒட்டாமல் பிரித்து விட முடியும்.

Sep 19, 2024

குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால்

குழம்பு, ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு காரப் பொடி மற்றும் வெல்லம் ஒரு துண்டு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்க சரியாகிவிடும்.பாசிப்பயறு கொண்டக்கடலை சுண்டல் செய்யும்போது தேங்காய் துருவலுடன் சிறிது இஞ்சி துருவல் சேர்த்து தாளித்தால் சவை கூடும்.குலோப் ஜாமூன் ஜீரா மீந்து விட்டால், பாயசம் செய்யும் போது சர்க்கரைக்கு பதிலாக ஜீராவை கலந்து கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.டபுள் பீன்ஸ், ராஜ்மா, மொச்சை போன்ற பருப்புகளை வேகவிடும்போது உப்பு சேர்க்காமல் வேகவிட்டால் சீக்கிரம் வெந்துவிடும்.எந்த சிப்ஸ் செய்வதாக இருந்தாலும் எண்ணெயில் வறுக்கும் பொழுதே தேவையான உப்பை சிறிது நீர் கலந்து தெளித்து, வறுத்து எடுக்க, உப்பு எல்லா இடத்திலும் சமமாக பரவி இருக்கும். வெளியில் எடுத்ததும் காரப்பொடி சிறிது சேர்த்து குலுக்கி விட ருசியான சிப்ஸ் தயார்.

Sep 18, 2024

சட்னி தாளிக்கும் போது சிறிது சின்ன வெங்காயத்தை நறுக்கி தாளித்தால் சுவையாகவும்,மணமாகவும்  இருக்கும் -

சட்னி தாளிக்கும் போது சிறிது சின்ன வெங்காயத்தை நறுக்கி தாளித்தால் சுவையாகவும்,மணமாகவும்  இருக்கும் - தேங்காய் சட்னி தாளிக்கும் போது சிறிது பெருங்காயத்தை சேர்த்து தாளித்தால்  நல்ல வாசனையாகவும் அஜீரண கோளாறு ஏற்படாமல்  இருக்கும். சட்னிக்கு வதக்கும் போது கருவேப்பிலை கொத்தமல்லி புதினா இலைகளை கடைசியாக வதக்கி எடுத்தால்தான் அதன் கலர் மாறாமல் நல்ல மணமாக இருக்கும்  எந்த விதமான சட்னி அரைத்தாலும் பூண்டை   வதக்காமலும் தோல் உரிக்காமலும் அரைக்கும் போது போட்டு அரைத்தால் நல்ல வாசனையாக அதன் சுவை மாறாமலும் இருக்கும். 

Sep 09, 2024

கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது.....

கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது மிகவும் கெட்டியாக பிசையாதீர்கள் பிசைந்தால் கொழுக்கட்டை கல்லை போல  கெட்டியாக தான் வரும்.மாவை மிகவும் லூசாக பிசையவும் கூடாது. இதனால் கொழுக்கட்டை பிசுபிசு  என்று ஒட்டிக் கொண்டு தான் வரும்.மாவு பிசைந்த பின் கையை வைத்து அமுக்கி பார்த்தால், நன்கு அமுங்குவது போலவும்,மிருதுவாக இருக்கும் படியும் பிசைந்து கொள்ளுங்கள்.வீட்டில் செய்த அரிசி மாவோ அல்லது கடையில் வாங்கிய அரிசி மாவோ,  அதோடு 2 ஸ்பூன் உளுத்து வறுத்து பொடியாக்கி சேர்த்து மாவு பிசைந்து, கொழுக்கட்டை சுட்டால் விரிசல் ஏற்படாது கொழுக்கட்டை மிருதுவாக இருக்கும்கொழுக்கட்டை செய்யும் போது  பூரணத்திற்கு வெல்லப்பாகு தாயாரித்த பின், அதை வடிகட்ட வேண்டும் .அதிலிருக்கும் மண்  நமது கொழுக்கட்டை சுவையையே பழாக்கிவிடும்.

Sep 04, 2024

அப்பளம்

அப்பளம் வாங்கி வந்தவுடன் அதன் மேல் உள்ள மாவை இரண்டு பக்கமும் காட்டன் துணி வைத்து துடைத்து விட்டு ,அதை நான்கு துண்டுகளாக்கி ,பிளாஸ்டிக் கவரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் ,அப்பளம் பொரிக்கும் போது எண்ணெய் மிகவும் குறைவாக வைத்து பொரித்து எடுத்து விடலாம். இதனால் மீதி மிகக் குறைந்த அளவே எண்ணெய் இருக்கும். இதை வறுவல் செய்யும் போது பயன்படுத்தி விடலாம் ( அல்லது )  தாளிக்க பயன்படுத்தலாம். அப்பளம் பொரித்த பிறகு எண்ணெய் "சில அப்பளத்தின் மேல் நிறைய இருக்கும். இதற்கு எண்ணெய் நன்கு காய்ந்த பிறகு (அப்பளத்தின்  நுனியில் சிறிது பிய்த்து எண்ணெய்யில் போட்டால் உடனே மேலே வந்து விடும்.) அப்பளம் பொரித்து  எடுத்தால் எண்ணெய் இருக்காது.டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசி நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது. 

Sep 02, 2024

தோசை சுடுவதற்கு முன்…

சாதா தோசை கல்லில் தோசை சுடும் போது தோசை சுடுவதற்கு முன் சிறிதளவு எண்ணெயும் உப்பும் கலந்து தேய்த்து கழுவிபிறகு தோசை சுட்டால் தோசை நன்றாக வரும் என்னையும் அதிகமாகதேவைப்படாது.தேங்காய் துருவலுடன் ஊற  வைத்து அரைத்த வேர்க்கடலை சேர்த்து தேங்காய் பர்பி செய்தால் பர்பி சுவையாக இருக்கும்.முள்ளங்கி சாம்பார் செய்யும் பொழுது முள்ளங்கியை எண்ணெய்யில் வதக்கி விட்டு பின்பு சாம்பாரில் சேர்த்தால் முள்ளங்கியின் சுவை அருமையாக இருக்கும். மோர் குழம்பு செய்து இறக்கும் பொழுது சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற் ஊற்றி இறக்கினால் குழம்பு ருசியாக இருக்கும்.பருப்பு வேகவைக்கும் பொழுது சிறிதளவு நெய் ஊற்றி வேக வைத்தால் பருப்பு விரைவில் வேகும், குழம்பில் தனி ருசி கூடும்.  

Aug 30, 2024

சமையலறையை பாதுகாக்க.

மஞ்சள், உப்பைக் கலந்து சமையல் அறையில் தூவினால் இடுக்களில் ஒளிந்திருக்கும் கிருமிகள் முற்றிலும் அகலும்.நொச்சி இலையை சமையல் அறையில், பரப்பி வைத்தால் கொசுக்கள் அண்டாது.2 கப் வினிகரை ஒரு ஸ்பூன் யூகலிப்டஸ் எண்ணெய்யுடன் சேர்த்து, அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கலந்து சமையல் அறையில் ஸ்ப்ரே செய்தால் கரப்பான் பூச்சிகள் வராது.எண்ணெய் பாட்டில் வைக்கும் தட்டில் (tray ) ஒரு காட்டன் துணி அடியில் போட்டால் ஒரு வாரம் கழித்து ஜன்னல், இரும்பு பொருள் துடைக்க பயன்படுத்தலாம்.பிழிந்த லெமன் மூடி இருந்தால் அதில் உப்பு தொட்டு அடுப்பு, விளக்கை தேய்த்தால் பளபளப்பாக இருக்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News