தேவையான பொருட்கள் : முழு உளுந்து - அரை கப், தக்காளி - 2, பச்சை மிளகாய் - 3, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சம்பழச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கு. கறிவேப்பிலை, மல்லித்தழை சிறிது. தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், நெய் -அரை டேபிள்ஸ்பூன், எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.செய்முறை: உளுந்தை மஞ்சள்தூள் சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவையுங்கள். குக்கர் என்றால் 2 விசில் போதும். குழைந்துவிடக்கூடாது. தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். நெய், எண்ணெயை ஒன்றாகக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, பச்சை மிளகாய் சேருங்கள். பின்னர் தக்காளி சேர்த்து, 5 நிமிடம் வதக்கி, வெந்த உளுந்து, உப்பு, கறிவேப்பிலை. மல்லித்தழை சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு சேருங்கள். அசத்தலான சைட் டிஷ் இது.
தேவையான பொருட்கள் : (கோஃப்தாவுக்கு)உருளைக்கிழங்கு 2.கேரட் - 1, பட்டாணி - ஒரு கைப்பிடி, பீன்ஸ் 2 ,மைதா 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் அரை டீஸ்பூன், கரம்மசாலா அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, உப்பு ருசிக்கு. எண்ணெய் - தேவைக்கு. பிரெட் ஸ்லைஸ் - 2. அரைக்க: தேங்காய் ஒரு மூடி, முந்திரி 5 (இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). புதினா அரை கட்டு, மல்லித்தழை - ஒரு கைப்பிடி, இஞ்சி -ஒரு துண்டு, பூண்டு - 5 பல், பச்சை மிளகாய் - 6 (இவை அனைத்தையும் ஒன்றாக அரைக்க வேண்டும்). தாளிக்க: பட்டை ஒரு துண்டு, லவங்கம் -2, பெரிய வெங்காயம்- 2, எலுமிச்சம்பழச்சாறுஒருடேபிள்ஸ்பூன், எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்.செய்முறை:கிழங்கைவேகவைத்துதோலுரித்துமசித்துக்கொள்ளுங்கள்.காய்கறிகளைபொடியாகநறுக்கிவேகவைத்து, தண்ணீரில்லாமல் வடித்து மசியுங்கள். அத்துடன் எண்ணெய் நீங்கலாக மற்ற பொருட்களை ஒன்றாக சேர்த்துப் பிசையுங்கள். சிறுசிறு உருண்டைகளாக உருட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து உருண்டைகளைப் பொரித்தெடுங்கள். கோஃப்தா ரெடி.அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு அரைத்தெடுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, பட்டை, லவங்கம் தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்குங்கள். அத்துடன் புதினா மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள். அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடுங்கள். பின்னர் தேங்காய், முந்திரி, விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். பரிமாறும் பொழுது உருளைக்கிழங்கு கோஃப்தாக்களை அதில் போட்டு 5 நிமிடம் ஊறவிட்டு பரிமாறுங்கள்.விருந்துக்களுக்கு ஏற்ற வித்தியாசமான சைட் டிஷ்.
தேவையானவை: சிறு கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன். மசாலாவிற்கு: வரமிளகாய் - 2, சீரகம் - அரை டீஸ்பூன், தேங்காய்துருவல் - கால் மூடி, சின்ன வெங்காயம் - ஐந்தாறு, பூண்டு - 2 பல்,செய்முறை: சிறு கிழங்கை முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் தோல் நீக்கிகீற்றாக அதாவது சின்னச் சின்னத் துண்டுகளாக அரிந்து வேக விடவும். காய் வெந்ததும் உப்பு,மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கித் தண்ணீரை வடித்து விடவும். வாணலியில்கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய காயை வதக்கவும். மசாலாவிற்கானபொருட்களை அரைக்கவும். காய் வதங்கியதும் அரைத்த மசாலா சேர்த்துப் பிரட்டிக் கொஞ்ச நேரம்சிறு தீயில் வைத்திருந்து இறக்கவும். சிறு கிழங்கு பொரியல்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ, மிளகாய்தூள் - முக்கால் டீஸ்பூன், உப்பு -தேவையான அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், கடலைமாவு - ஒன்றரை டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: கோவைக்காயைக் கழுவிப் பொடியாக நறுக்கவும். எண்ணெயைச் சூடு செய்துசீரகத்தைப் போட்டு, அது சிவந்ததும் கறிவேப்பிலை போட்டு, கோவைக்காயை சேர்த்து வதக்கவும்.அடுப்பை நிழலாக எரியவிட்டு, வாணலியை மூடி வைக்கவும். நடுநடுவில் அடிப்பிடிக்காமல் கிளறிவிடவும். காய் வெந்து பொன் நிறமாக வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து வதக்கி இறக்கும்முன் கடலைமாவு தூவிக் கிளறி இறக்கி, மல்லி இலை தூவவும்.
தேவையானவை: சேப்பங்கிழங்கு - கால் கிலோ, உப்பு - தேவையான அளவு. மசாலாவிற்கு:வரமிளகாய் - 4, சின்ன வெங்காயம் - ஏழெட்டு, சீரகம் - அரை டீஸ்பூன், புளி - 1 சுளை.தாளிக்க: எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்.செய்முறை: சேப்பங்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.தோல் உரிக்க வருகிற அளவு வெந்தால் போதும். மசாலாவிற்கு உள்ள சாமான்களை அரைத்துக்கொள்ளவும். கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து நறுக்கிய கிழங்கை வதக்கவும். அரைத்த மசாலாசேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.எப்பொழுதுமே கிழங்கு வகைகளை தோல் உரிக்க வருகிற அளவிற்குத் தான் வேகவைக்கவேண்டும். நன்றாக வெந்தால் பொரியல் கொழகொழவென்று மசியல் போல் ஆகிவிடும்.
தேவையானவை: உரித்த பச்சை பட்டாணி - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, வரமிளகாய் - 2,சீரகம் - அரை டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை,மல்லி இலை - தலா சிறிதளவு, எண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பட்டாணியை வேக விட்டு உப்புப் போட்டு இறக்கி, தண்ணீரை வடிக்கவும்.வரமிளகாயுடன் சீரகத்தையும், ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும்.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும்இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும். பட்டாணியையும், உப்பையும், அரைத்தமசாலாவையும் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும். பட்டர்பீன்ஸிலும் இதே முறையில்பொரியல் செய்யலாம். நன்றாக இருக்கும்
தேவையான பொருட்கள்: பலாக்காய் – 1,பூண்டு பல் - 3 உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள் துாள், சீரகம் - சிறிதளவு தேங்காய் எண்ணெய், தேங்காய் துருவல், உப்பு, தண்ணீர் - தேவையான அளவு செய்முறை - பலாக்காயை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள்,தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். அதனுடன், துருவிய தேங்காய், பூண்டு பல், சீரகத்தை அரைத்து கலக்கவும். தேங்காய் எண்ணெயில், உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு தாளித்து அதில் கொட்டவும். சுவைமிக்க, 'பலாக்காய் பொரியல்!' தயார். சாதத்துடன் பக்க உணவாக பயன்படுத்தலாம்..
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெரிய வெங்காயம் - 1, பழுத்த தக்காளி - 2,பச்சைப் பட்டாணி - 50 கிராம், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்பொடி - கால் டீஸ்பூன், கறிமசாலாத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லி இலை -சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்துத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.பச்சைப் பட்டாணியையும் உரித்து வேகவைக்கவும். வெங்காயத்தை நீளநீளமாகவும், ஒருதக்காளியை எட்டு துண்டுகளாகவும் நறுக்கவும். வாணலியில் தாளித்து போட்டு வெங்காயம்,தக்காளிப்பழத்தை வதக்கி உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்தூள் சேர்க்கவும். உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணியைச் சேர்த்து பிரட்டவும். வதங்கியதும் கறி மசாலாத்தூள் சேர்த்து பிரட்டவும். பிறகு கரம்மசாலாத்தூள் சேர்த்து இறக்கி மல்லி இலை சேர்க்கவும். இதுவும் ஒரு ‘மல்ட்டி பர்பஸ்’ சைட்-டிஷ்தான். பிரியப்பட்டால் கறி மசாலாத்தூளுடன் ஒரு கை கடலைமாவும் சேர்த்துத் தூவலாம்.
தேவையான பொருட்கள் :- பாசிப்பருப்பு 50 கிராம், பச்சரிசி மாவு 1 டேபிள் ஸ்பூன்,இட்லி மாவு ஒரு பெரிய கப், மிளகாய் பொடி ஒரு எஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, வெங்காயம் 50 கிராம், மிளகாய் 5 பொடியாக நறுக்கியது. தேங்காய் கால் மூடி,செய்முறை பாசிப்பருப்பை சிறிது ஊற வைக்கவும், பின்னர் இட்லி மாவுடன் மேல கூறிய அனைத்தையும் கலந்து எண்ணையில் பொரித்தெடுக்க சுவையான கரகர, மொறுமொறு பாசிப்பருப்பு வடை ரெடி.
தேவையான பொருட்கள் : பாசிப்பயறு 100 கிராம், தட்டாம் பயறு 100 கிராம்,வத்தல் 2, சீரகம் கால் ஸ்பூன், பெரிய வெங்காயம் 1, கறிவேப்பிலை சிறிதளவு.செய்முறை பாசிப்பயறு, தட்டாம் பயறு இரண்டையும் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் கரகரப்பாக அரைத்து எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.