தேவையான பொருட்கள்-10பேபி கார்ன்,ஒரு டீஸ்பூன்மைதா மாவு ,ஒன்றரை டீஸ்பூன்சோளமாவு,அரை டீஸ்பூன்மிளகாய்தூள்,தேவையான அளவுஉப்பு,கால் டீஸ்பூன்கரம் மசாலா,செய்முறை- பேபி கார்ன் நீளவாக்கில் வெட்டி ஒரு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம்கொதிக்கவிடவும்.பாத்திரத்தில் மைதா உப்பை சோளமாவு மிளகாய்தூள் கரம் மசாலாஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்.வேகவைத்த கார்ன் மாவில் நனைத்து மிதமான தீயில் பொரித்தெடுக்கவும்.
தேவையான பொருட்கள்-1கப் ஸ்வீட் கார்ன்,1கப் உருளைக்கிழங்கு வேகவைத்தது,1டேபிள்ஸ்பூன் கடலை மாவு,1கப் நறுக்கிய வெங்காயம்,3பச்சை மிளகாய்,1கப் சோளமாவு,1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,சிறிதுகொத்தமல்லி இலை,சிறிதுகறிவேப்பிலை,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,1டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்,1/2டீஸ்பூன் கரம்மசாலா தூள்,1டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு.1 கப் பிரெட் தூள்.தேவையான அளவுஉப்பு, எண்ணெய்.செய்முறை - ஸ்வீட் கார்ன் முத்துகளை உப்பு சேர்த்து வேகவைத்து எடுக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் கடலை மாவை,வாணலியில் லேசாக வறுத்து கொள்ளவும்.வேகவைத்த சோளத்தில், ஒரு ஸ்பூன் அளவு மட்டும் தனியே வைக்கவும். மீதிஇருக்கும் சோளத்தை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைக்கவும்.ஒரு பவுளில் அரைச்சு ஸ்வீட் கார்ன் பேஸ்ட் எடுத்து, அதில் வேக வைத்து மசித்தஉருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,கொத்தமல்லி, கறிவேப்பிலை, வறுத்த கடலை மாவு, சோளமாவு சேர்த்துபிசைந்து கொள்ளவும்.மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, எலுமிச்சை சாறு (1ஸ்பூன்), உப்பு,ஏற்கனவே தனியாக வைத்துள்ள கார்ன், என எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகமசித்து கொள்ளவும். பின் தேவையான வடிவில் உருட்டி கொள்ளவும்.உருண்டைகளை பிரெட் தூளில், இரண்டு பக்கமும் பிரட்டி, எண்ணெயில்,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.மிகவும் சுவையான கட்லட்..குழந்தைகள் விரும்பி சாப்பிட கூடிய , ஹெல்தியான ஸ்னாக்ஸ்.
தேவையான பொருட்கள்:தினை மாவு - 1 கப்வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 2கொத்தமல்லி - சிறிதளவுஉப்பு - தேவைக்குசெய்முறை:அனைத்து பொருட்களையும் கலந்து மாவு பிசையவும். வட்டமாக தட்டி,தோசைக்கல்லில் சுடவும்.
தேவையான பொருட்கள்:சாமை மாவு - 1 கப் கேரட் துருவல் - 1/2 கப்சீரகம் - 1 டீஸ்பூன்உப்பு - தேவைக்குசெய்முறை:மாவை பிசைந்து ரொட்டி வடிவில் தட்டவும். மெதுவாக இருபுறமும் சுடவும்.
தேவையான பொருட்கள்:ராகி மாவு -1 கப்பேரிச்சம்பழம்-1 கப் (விதை நீக்கில்)முந்திரி -¼ கப்பாதாம் - 4 கப்எலக்காய் தூள் -¼ டீஸ்பூன்நெய்-1 டீஸ்பூன்செய்முறை:கடாயில் ராகி மாவை மிதமான சூட்டில் 3-4 நிமிடம் வறுக்கவும்.பேரிச்சம்பழத்தை மிக்ஸியில் போட்டு ஒட்டும் தன்மை வரும் வரைஅரைக்கவும்.வறுத்த ராகி மாவில் அரைத்த பேரிச்சம்பழம், நறுக்கிய முந்திரி,பாதாம், ஏலக்காய் தூள், நெய் சேர்த்து நன்கு கலக்கவும்.*சிறிய உருண்டைகளாக உருட்டி எடுக்கவும்.பயன்கள்:உடலுக்கு உடனடி ஆற்றல் தரும். எலும்புகளை வலுப்படுத்தும் *இரத்தசோகை குறைக்க உதவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.ஆரோக்கியமான,இயற்கையான சர்க்கரை இல்லாத உணவு.
தேவையான பொருட்கள்:கருப்பு அல்லது வெள்ளை எள்ளு-1 கப்துருவிய தேங்காய் -½கப்காய்ந்த சிவப்பு மிளகாய் - 4-5பூண்டு - 3 பல்புளி - சிறிய நெல்லிக்காய் அளவுஉப்பு -தேவையான அளவுதண்ணீர்-தேவையான அளவுதாளிக்க:எண்ணெய் - 1 டீஸ்பூன்கடுகு - ½டீஸ்பூன் உளுத்தம்பருப்பு -½ டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு செய்முறை:முதலில் எள்ளை எண்ணெய் இல்லாமல் மணம் வரும் வரை லேசாக வறுத்து ஆறவிடுங்கள்.அதே கடாயில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டை லேசாக வதக்குங்கள்.மிக்ஸியில் வறுத்த எள்ளு, தேங்காய், மிளகாய், பூண்டு, புளி, உப்பு மற்றும் தேவையான அளவுதண்ணீர் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளுங்கள்.கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்தசட்னியில் சேர்க்கவும்.சுவையான, ஆரோக்கியமான எள்ளு சட்னி தயார்!குறிப்பு : இந்த சட்னி இட்லி, தோசை, அடை, பணியாரம் ஆகியவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். மேலும் எள்ளு உடலுக்கு நல்ல கால்சியம் மற்றும் ஆரோக்கியமானகொழுப்புச் சத்துக்களை வழங்கும்.
தேவையான பொருட்கள்சிவப்பு சோயா பீன்ஸ் (உரித்தது) -1கப்சுரைக்காய் (தோல் நீக்கி நீளவாக்கில் நறுக்கியது)1/4கப்தேங்காய்த் துருவல்- ½கப்பெரிய வெங்காயம் -1பூண்டு -10 பல்பச்சை மிளகாய் -3 (நீளவாக்கில் கீறியது)சோம்பு -4 டீஸ்பூன்தாளிக்ககறிவப்பிலை சிறிதளவுதக்காளி -1மஞ்சள்தூள் - 1 சிட்டிகைகரம் மசாலாத்தூள் - 1 சிட்டிகைமிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்உப்பு -தேவையான அளவுஎண்ணெய் 2 டீஸ்பூன்செய்முறை:வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். குக்கரில் சோயா பீன்ஸ், சுரைக்காய், வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி,மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு ஆகியவற்றைசேர்க்கவும்.அதில் 3 கப் தண்ணீர் ஊற்றி, மிதமான தீயில் 5 விசில் வரும் வரை வேகவிடவும்.பிரஷர் முழுவதும் இறங்கியதும் குக்கரைத் திறந்து, தேங்காய்த் துருவலைச் சேர்த்துஒரு கொதி வரவிடவும்.வாணலியில் எண்ணெய் சூடானதும் சோம்பு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி,அதை குழம்பில் சேர்க்கவும். ஒரு நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்துபரிமாறவும்.இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சுவையாக இருக்கும்.ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த இந்த குழம்பைவீட்டிலேயே செய்து ருசித்து மகிழுங்கள்!
ஆரோக்கியமான காலை உணவுதேவையான பொருட்கள்ராகி மாவு -1 கப்துருவிய தேங்காய் -2 கப்தண்ணீர் - தேவையான அளவுவெல்லம் (துருவியது) ¼முதல் ½ கப் (விருப்பத்திற்கு)உப்பு -1/4 டீஸ்பூன்ஏலக்காய் தூள் -1/4 டீஸ்பூன் (விருப்பத்திற்கு)செய்முறைராகி மாவில் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து, மாவ் இதிரியாக இருக்கும் பதத்திற்குபிசையவும். (கையில் பிடித்தால் உருண்டையாக வர வேண்டும்;தொட்டால் மீண்டும் உதிர வேண்டும்.)இந்த மாவை 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.புட்டு மேக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் முதலில் சிறிது தேங்காய்,அதன் மேல் ராகி மாவு என அடுக்கி நிரப்பவும்.8-10 நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும். வெந்ததும் எடுத்து, வெல்லம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.குறிப்புகள்குழந்தைகளுக்கு நெய் சேர்த்து கொடுத்தால் சுவையாக இருக்கும்.வாழைப்பழம் சேர்த்து கலந்து சாப்பிட்டாலும் அருமையாக இருக்கும்.கார சுவை விரும்பினால் தேங்காய் சட்னி அல்லது காய்கறிகுருமாவுடன் பரிமாறலாம்.
தேவையான பொருட்கள்:பிரெட் - 6 துண்டுகள்முட்டை -3பால் - ½கிளாஸ்நெய் - தேவையான அளவுமிளகுத்தூள் -½ டீஸ்பூன்உப்பு - தேவையான அளவு.செய்முறை:ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைந்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.அதில் ½ கிளாஸ் பால், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கலக்கவும்.பிரெட் துண்டுகளை விருப்பமானால் டிரையாங்கிள் (Triangle) வடிவில் 'வெட்டிக் கொள்ளவும்.ஒவ்வொரு பிரெட் துண்டையும் முட்டை-பால் கலவையில் நன்றாக தோய்த்து எடுக்கவும்.தோசைக்கல்லை சூடாக்கி சிறிதளவு நெய் தடவவும்.தோய்த்த பிரெட் துண்டுகளை தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும்.சூடாக சட்னி, தக்காளி சாஸ் அல்லது தேனுடன் பரிமாறலாம்.டிப்ஸ்: சிறிதளவு மிளகுத்தூள் அல்லது சில்லி ஃப்ளேக்ஸ் தூவினால் சுவை இன்னும் அருமையாக இருக்கும். சுவையான & சத்தான காலை உணவு.
தேவையான பொருட்கள் : ரோஜா இதழ்கள் - 2 கப்,சர்க்கரை - 2 கப்,தண்ணீர் - 2 கப்,எலுமிச்சை சாறு -1 டீஸ்பூன்,ரோஸ் எசன்ஸ் - 1/2 டீஸ்பூன்பிங்க்/ரெட் ஃபுட் கலர் சில துளிகள் (விருப்பம்),செய்முறை:ரோஜா இதழ்களைநன்றாக கழுவவும்.தண்ணீர் சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க விடவும்.நிறம் இளஞ்சியப்பு ஆக மாறியதும் அடுப்பை அணைக்கவும்.வடிகட்டி இதழ்களை நீக்கவும்,வடிகட்டிய தண்ணீரில் சர்க்கரை சேர்த்து கிளறவும்.சிறிது கெட்டியான பதம் வரும் வரை கொதிக்க விடவும்.எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.ஆறிய பிறகு ரோஸ் எசென்ஸ் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கலக்கவும்.குறிப்புகள் : பூச்சிக்கொல்லி தெளிக்காத நறுமண ரோஜா இதழ்களை பயன்படுத்தவும்.இந்த சிரப் ஃபிரிட்ஜில் 1 முதல் 2 மாதங்கள் வரை நன்றாக இருக்கும்.1கப் பால் + 2-3 டேபிள்ஸ்பூன் ரோஸ் சிரப் = சுவையான ரோஸ் மில்க்.