பூசணிப்பழம் சுவையான சமையலுக்கு மட்டுமல்ல, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் ஏஆக மாறி, கண் பார்வை திறனை பாதுகாக்கவும், சரும ஆரோக்கியத்தை பேணவும் உதவுகிறது. பூசணியில் உள்ள சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து, நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கின்றன.குறிப்பாக, இதில் உள்ள வைட்டமின் சி சத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பூசணி விதைகளில் மெக்னீசியம் மற்றும் ஜிங்க் சத்துக்கள் இருப்பதால், அது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, எலும்புகளின் வலிமைக்கும் உதவுகிறது.இது கண் பார்வை, நோய் எதிர்ப்பு சக்தி, இதய ஆரோக்கியம், செரிமானம், சருமம், மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, மேலும் எடை குறைப்புக்கும் நல்லது. இது உடல் சூட்டைக் குறைத்து, நீர்ச்சத்தை அதிகரிக்கும் (குறிப்பாக வெள்ளைப் பூசணி).
வாழை மரத்தின் நடுப்பகுதியில் இருக்கும் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பது, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் ஒரு சிறப்பான வழியாகும்.வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.மேலும், குடலில் உள்ள கற்களை கரைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் சாற்றை இரண்டு அல்லது மூன்று வேளை வீதம் தினமும் அருத்தினால். வறட்டு இருமல் நீங்கும்.நல்ல பாம்பு கடிக்கு வாழைத் தண்டு சாறு ஒரு டம்ளர் குடித்தால் விஷம் தானாக இறங்கி விடும்.வாழைப்பூச் சாறுடன் பனங்கற்கண்டு சேர்த்து பருகினால், கை கால் எரிச்சல், வெள்ளைப்படுதல் மற்றும்மாத விலக்கின் போது ஏற்படும் வலி ஆகியவை விலகும்.வாழைத் தண்டில் கால்ஷியம் பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருட்களும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துகளும் உள்ளன.நரம்புகளில் தேங்கிநிற்கும் உப்பு படிவங்கள் நீங்கி பார்வையை தெளிவடையச் செய்யும்.வாழத்தண்டு சாறு நரம்பு மண்டலத்தை தூண்டி சுறுசுறுப்பு அடைய செய்யும்.பித்தத்தை குறைக்கவும் உதவும். மாதம் ஒருமுறை வாழைத்தண்டு, சூப் செய்து அருந்துவது நல்லது வயது முதிர்ந்த ஆண் பெண் இருபாலருக்கும் மூட்டு வீக்கம் மூட்டு வலி வந்து கைகால்கள் வீங்கி இருந்தால் வாழைத்தண்டு சாறை குடித்தால் மிகுந்த பயனளிக்கும்.வாழைத்தண்டை சமைத்து உண்ண, சிறுநீர் பாதைகளில் ஏற்படும் அடைப்பு நீங்கும். உடல் சூடு தணியும். சீதபேதி தணியும்.வாழைத் தண்டை சுட்டு, அதன் சாம்பலைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து, தீப்புண் மேல் பூசி வர தீப்புண் ஆறும். சீழ் வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். இதன் பூவை பொரியல் செய்து உண்பதால் அஜீரணம், நீரிழிவு நோய் நீங்கும் குளிர்ச்சியை உண்டாக்கும். வயிற்று புழுக்களை ஒழிக்கும் திறன் கொண்டது. பித்த நோய்களையும் இருமலையும் நீக்கும்.வாழைத்தண்டு காது சம்பந்தமான பிரச்னை, கருப்பை நோய்கள் மற்றும் ரத்தக் கோளறுகள் ஆகியவற்றை குணமாக்கும் வாழைத்தண்டை பொடியாக நறுக்கி உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்து சாப்பிட்டுவர காமாலை நோய் குணமாகும் .தேள்,பூரான் கடித்த இடத்தில் வெட்டிய வாழைத்தண்டிலிருந்து வரும் நீரை பூச வலி குறையும்.வாழைத்தண்டில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, மற்றும் பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.வாழைத்தண்டு சாறு குடிப்பதால், சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை கற்கள் கரைய வாய்ப்புகள் உண்டு. இது இயற்கையான சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு, உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் சத்து, உடலில் இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கப் பெரிதும் உதவுகிறது.வாழைத்தண்டை ஜூஸ், பொரியல், கூட்டு, அல்லது அடை போன்ற பல்வேறு வடிவங்களில் வாரத்திற்கு ஒரு முறையாவது சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. சுமார்28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் பி6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன.பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டிஅக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். மேலும் இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட்1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது.பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது.குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்.கூர்மையான மூளை, புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு.உடலில் வீக்கத்தைக் குறைக்கும்.இரத்த சோகையைக் குணப்படுத்தும்.வயிற்று எரிச்சலுக்கு உதவுகிறது.இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கும்.முதுமை வரை கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.வயதானதால் அதிகரித்து வரும் விளைவுகளைத் தடுக்கிறது.
வல்லாரைக்கீரை ஆற்றங்கைரையிலும் வயல் வரப்பிலும் குளக்கரையிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர்ப்பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.இந்தக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிகமாக உள்ளன. இதை உணவாகப் பயன்படுவதைவிட, மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம். அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியவை குணமாகும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, ஆனால், இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி, மயக்கம் முதலியவை வருமாம். அளவோடு சேர்க்கவும்.வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும் மருத்துவக் குணமும்கெட்டுவிடும். வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்துச் சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்துப் பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டு வைக்கலாம்.வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால்குடல்புண், குடல்நோய்,வாய்ப்புண், வாய் துர்நாற்றம் ஆகியவை அகலும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் இது, கண்நோய்களுக்குச் சிறந்த மருந்து,வல்லாரைக்கீரைபொதுவாகமூளைவளர்ச்சிக்குஉதவுகிறது.ஞாபகசக்தியைவளர்க்கிறது.நரம்புத்தளர்ச்சியைக்கட்டுப்படுத்துகிறது.இதயபலத்துக்கும்.தாதுவிருத்திக்கும்உதவுகிறது.காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர்க்கோளாறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.
பால் மற்றும் பால் சார்ந்த தயிர். வெண்ணெய், நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக்கூடாது. ஆனால், மோர் சாப்பிடலாம். உடலுக்கு நல்லது. நம் உணவில் காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.மதிய உணவின் போது, துாதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம்.இரவு துாங்குவதற்கு முன், பாலில் மஞ்சள் துாள், மிளகு துாள், பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய், பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை இந்த சீசனில் உணவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.கண்டிப்பாக மழைக்காலத்தில் நம் உணவு பதார்த்தங்களில் மிளகுப் பொடியைச் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.இரவு உணவில் பச்சைப் பயறு, கேழ்வரகு, கீரை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.மழை நேர காய்ச்சலுக்கு, நிலவேம்பு கஷாயம் கொடுப்பது சிறந்தது. நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இந்த நிலவேம்பு பொடியுடன், தண்ணீர் சேர்த்து காய்ச்சி பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து வடிகட்டி வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
ஒரு செவ்வாழைப் பழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு கட்டுக்குள் இருக்கும்.வாழைப்பூவைப் பொடிப் பொடியாக நறுக்கி அத்துடன் முருங்கைக்கீரையையும் சேர்த்து வதக்கி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குடற்புண் குணமாகும்.வெந்தயத்தை வறுத்து வெல்லம் கலந்து சாப்பிட்டு வர இருமல், பித்தக் கோளாறு நீங்கும்.மாதுளம் பழச்சாற்றுடன் தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்பு சம்பந்தமான உபாதைகள் நீங்கிவிடும்.கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.ஒரு தேக்கரண்டி நெல்லிச்சாறு, அரைத்தேக்கரண்டி தேன் கலந்து தினமும் காலையில் பருகி வந்தால் கண் நோய் வராது.இஞ்சியைச் சாறெடுத்து கொஞ்சம் உப்புப் போட்டு குடித்தால்.வலிற்றுவலி, வயிற்றுப் போக்கு குணமாகிவிடும்.தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகிவிடும்.இஞ்சியை சிறிய துண்டுகளாக்கி மென்று சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் நீங்கிவிடும்.
உலக அளவில் புற்றுநோய் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் திராட்சை விதையை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை தயாரிக்கின்றன. திராட்சை விதைகளில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றன. இதில் அதிக அளவில் ஆக்சிஜனேற்ற பண்புகள் காணப்படுவதால், அவை உடலில் ஏற்படும் அழுத்தத்தை எதிர்த்து போராடி வீக்கத்தைக் குறைக்கின்றன. உடலின் செல்களை பாதுகாக்கும் சில கூறுகள் திராட்சை விதையில் இருப்பதால், இது இதயம் மற்றும் மூளை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.திராட்சை விதைகள் காயங்களை ஆற்றும் கொலாஜன்கள் என்ற வலைப்பின்னல் உடலில் உருவாக உதவுகிறது. இதன் மூலம் உட லில் ஏற்படும் காயங்கள் விரைவில் குணமாகும் மற்றும் தோலின் அழகு அதிகரிக்கும். சில இயற்கை சேர்மங்களை கொண்டிருப்ப தால் முடி உதிர்தல் தடுக்கப்பட்டு, அடர்த்தியாக முடி வளர உதவு கிறது. திராட்சை விதையில் இருந்து பெறப்படும் சாறு மூளை செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான காலத்தில் ஏற்படும் மூளை நரம்பு சிதைவு மற்றும் நினைவுத்திறன் இழப்பை கட்டுப்படுத்த திராட்சை விதையை மென்று உண்பது பலன் தரும் என்று கூறப்படுகிறது.மனித உடல் எப்போதும் உடலில் நுழையும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராடி உடலைப் பாதுகாக்கும் நுட்பமான வேலையை தொடர்ந்து செய்கிறது. திராட்சை விதை சாறு உடலில் நுழையும் பல்வேறு பாக்டீரியாக்கள், பூஞ்சைகளின் வளர்ச்சியை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது என்றும், தொடர்ந்து திராட்சை விதை களை உணவாக உட்கொள்ளும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்றும்ஆய்வுகள் தெரிவிக்கின்றன.விதையில்லாத பழங்களை விட விதையுள்ள பழங்கள் அரிய பல ஆற்றல் கூறுகளை கொண்டவை என்பதற்கு திராட்சை விதை ஒரு உதாரணம்.
தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாக குணம் அடைய முடியும். சளி மட்டுமில்லை காய்ச்சலுக்கும் தூதுவளை சிறந்த மருந்து தான். மேலும் உடல் வலிமை அடையும். தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் மூளையில் உள்ள செல்கள் வலிமை அடையும். இதனால் மூப்பு அடைந்த காலத்திலும் நினைவாற்றல் குன்றாமல் இருக்கும். குழந்தைகளுக்குத் தொடர்ந்து தூதுவளையை உணவில் சேர்த்து வர, அவர்களின் நினைவுத்திறன் அதிகமாகிப் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். இரத்தத்திலுள்ள சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சரியான அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைப் பேறு பெற்ற பெண்களுக்கு இரத்த அணுக்களின் அளவு மிகவும் அவசியமானது. இந்த எண்ணிக்கை குறைந்தால் அவர்களுக்கு இரத்த சோகை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த இரத்த சோகை பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள தூதுவளை உதவுகிறது. தூதுவளை இலைகளைப் பறித்து, சுத்தம் செய்து, காயவைத்து, பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும் இதனைத் தொடர்ந்து மோரில் கலந்து சாப்பிட்டு வர இரத்த சிவப்பு அணுக்கள் விருத்தி அடைந்து, இரத்த சோகை நோய் தீர்ந்துவிடும்.தூதுவளையில் கால்சியம் சத்து அதிகளவு காணப்படுகின்றது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும். பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி, இடுப்பு வலி போன்ற தொல்லைகள் நீங்கும்.இந்த தூதுவளை சர்க்கரை நோய்க்குச் சிறந்த மருந்து பொருளாக உள்ளது. இந்த தலை சற்று கசப்பு தன்மை கொண்டதாக இருக்கும்.இதனைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரத் தொடங்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்துசாப்பிட்டுவரும் பொழுதுநல்லபலனைஅடையமுடியும்.தினமும் இரண்டு தூதுவளை பூக்களை மென்று தின்ன உடல் பளபளப்பாக மாறும்.தூதுவளை பூக்களை நெய் விட்டு வதக்கி தயிர் சேர்த்து பச்சடி போல் செய்து சாப்பிட உடல் வலுவடையும்.ஒரு ஸ்பூன் பூவை காய்ச்சிய பசும்பாலில் போட்டு சிறிது சர்க்கரை சேர்த்து' இரவில் ஒருவேளை மட்டும் அருந்தினால் நரம்புகள் இறுகும்.உடல் உறுதி பெறும். என்றும் இளமையோடு இருக்கலாம்.
கணையம் என்பது மனித உடலில், வயிற்றுக்கு பின்னால் உள்ள ஒரு முக்கிய உறுப்பாகும். இது உணவு செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமான சுரப்பி மற்றும் உட்சுரப்பி என்று 2 விதமாக செயல்படும். செரிமான சுரப்பியாக செயல்படும் நிலையில், என் சைம்கள் என்ற நொதிகளை உற்பத்தி செய்து உணவை செரிக்க உதவுகிறது. உடலில் அமிலம், புரதம், கொழுப்பு ஆகியவற்றை உடைக்கவும், சிறுகுடலில் செரிமானத்தை மேம்படுத்தவும் செய் கிறது. உட்சுரப்பி நிலையில் செயல்படும்போது, ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த இன்சுலின் மற்றும் குளூகோகான் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள், கணையத்தின் லாங்கர்ஹான்ஸ் என்ற பகுதியில் இருக்கும் சிறப்பு நாளமில்லா செல்கள், ஹார்மோன்களை சுரந்து உடலில் சர்க்கரையின் சமநிலையை பேண உதவும் வகையில் இன்சுலினை வெளியிடுகின்றன. அதிகமாக மது குடிப்பது, பித்தக்கற்கள், கணைய சாற்றுநீர் வெளியேறும் பாதை தடைபடுவது, அழற்சி ஏற்படுவது போன்றவற்றால் கணையம் வலுவிழக்கிறது. புற்று நாய், இன்சுலின் உற்பத்தி குறைந்து ரத்த சர்க்கரை சமநிலை பிழந்தாலும் கணையம் பாதிக்கப்படுகிறது.அதிககொழுப்பு, கணையச் செல்களுக்கு நேரடி காயம், தொற்று போன்றவையும் கணைய செயல் இழப்புக்குகாரணமாக வாய்ப்பு உள்ளது.
மருத்துவ அறிவியல்கோழி முட்டையில் ஒரு மனிதனுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கிறது என்று கூறுகிறது. 100 கிராம் முட்டையில் கால்சியம் 56 மில்லி கிராம் உள்ளது. கால்சியம் என்பது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. தசை ஒத்துழைப்பு மற்றும் நரம்பு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது. முட்டையில் இரும்புச்சத்து 1.75 மி.கி உள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் தட்டுக்களை உருவாக்கி ஆக் சிஜனை எடுத்துச் செல்ல உதவுகிறது. உடல் சோர்வு மற்றும் நரம்பு பலவீனத்தை தடுக்கிறது. பாஸ்பரஸ் சத்தும் மிகுதியாக உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை உருவாக்கும் பொருளாகும். முட்டையில் பொட்டாசியம் சத்தும் இருப்பதால், இதய துடிப்பை ஒழுங்குபடுத்தி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையில் உள்ளசோடியமானது, திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதுதவிர செலினியம், துத்தநாகம், மக்னீ சியம், மாங்கனீசு சத்துக்களும் அடங்கி உள்ளன. மேலும் முட்டையில் காணப்படும் வைட்டமின்கள், கொழுப்பு சத்துக்கள் மனித உடலை பல நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக உள்ளன.