25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் >> ராஜபாளையம் ராம்கோ நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி ராமசாமி ராஜா பிறந்தநாள் விழா APRIL 24 கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சிறப்பு திட்ட முகாம் நிறைவு >> ராஜபாளையம் கோயில்வழிபாடு, திருக்கல்யாண நிகழ்ச்சி. >> ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா >> ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில்  இலக்கிய மன்றம் நிறைவு விழா >> ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் யுகாதி விழா . >> கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா. >> பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டுஇரத்ததான நிகழ்ச்சி >> ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றமாவட்ட டேக்வாண்டோ போட்டி >>


ஆரோக்கியம்

Apr 29, 2025

மரிக்கொழுந்து

வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படும்  மரிக்கொழுந்து ஒரு பூஞ்செடியாகும். மரிக்கொழுந்து ஒரு பயனுள்ள மூலிகைப்பூவாகும். சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். வாசனைக்காக பூக்களில் சேர்த்து கட்டப்படும் பூ . இது மருத்துவ பயன்பாடுகளில் மகத்தானது. மரிக்கொழுந்து இலைகளை அரைத்து அதனை நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். உடலில் உள்ள காயங்கள், புண்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, அரைத்த மரிக்கொழுந்து விழுதுகளை தேய்த்து வருவது நல்லது. வீடுகளில் இதனை வளர்ப்பது ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.

Apr 25, 2025

இதயத்தை பலம் பெறச் செய்யும் விளாம்பழம்

விளாம்பழம் சாப்பிட்டால் பற்கள் வலுவடையும், உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும், தலைவலி குறையும், கண் பார்வை மங்கல் குணமடையும், பசியை தூண்டும், இதயத்தை பலம் பெறச் செய்யும், உடல் வலி மூட்டுவலியை குறைக்கும், இதய துடைப்பை சீராக வைத்திருக்கும், வாய் தொல்லையை நீக்கும் . அதிக பயனுள்ள பழங்களில் ஒன்றுதான் விளாம்பழம்.எனவே எளிதில் கிடைக்கக்கூடிய மிகவும் விலை குறைவான விளாம்பழத்தை சாப்பிட்டு உடலுக்கு பல பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

Apr 22, 2025

அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க உத வும் குளுக்கோஸ் திரவத்திற்கு இணையாக இளநீர் கருதப்படுகிறது.

இளநீர் குடிப்பதால் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் அகற்றப்படுகின்றன. உடலில் இன்சுலினை அதிகரிக்க இளநீர் உதவுகிறது. இதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்ப டுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்கிறது. உடலின் வறட்சியை நீக்கி சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கிறது.இயற்கையில் உருவான தென்னையின் இளநீர் போல் மனிதனுக்கு சக்தியை தரும் ஒரு ஊட்டச்சத்து நீர் வேறு எதுவும் இல்லை. அவசர காலங்களில் சிகிச்சை அளிக்க உத வும் குளுக்கோஸ் திரவத்திற்கு இணையாக இளநீர் கருதப்படுகிறது.இளநீரில் கார்போஹைட்ரேட் 3.8 கிராம், சர்க்கரை 2.5 கிராம், நார்ச்சத்து 1 கிராம். புரதம் 0.7 கிராம், கொழுப்பு 0.2 கிராம், பொட் டாசியம் 250 மி.கி., சோடியம் 105 மி.கி., வைட்டமின் பி6, சி மற்றும் டி போன்ற பல்வேறு வைட்டமின்கள் நிறைந்துள்ளன. கால்சியம், மெக்னீசியம், கோபாலமின் போன்ற தாதுக் களும் நிறைந்துள்ளன.கோடையில் ஏற்படும் தோல் சுருக்கங்கள் மற்றும் தோல் உரிந்து விழும் சருமத்தை தவிர்க்கிறது. மலச்சிக்கல், அஜீரணம், வாயு அல்லது அமிலத்தன்மை போன்ற வயிறு தொடர்பான பிரச்சினைகளை இளநீர் நீக்கும். இது செரிமானத்தை மேம்படுத்த உதவும் இயற்கை நொதிகளை கொண்டுள்ளது உயர்ரத்த அழுத்தம் கொண்டவர்கள் இளநீர் பருகினால் ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். எனினும் உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து உட்கொள்பவர்கள் இளநீரை தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அது ரத்த அழுத்தத்தை அதிகமாக குறைத்து, நோய் பாதிப்புகளை அதிகப்படுத்தி விடக்கூடும் என கூறப்படுகிறது. பொதுவாக, இளநீரை சூரிய உதயத்திற்கு பிறகு காலை 11 மணிக்கு மேல் குடிப்பது நல்லது என்கின்றனர் இயற்கை மருத்துவர்கள்.

Apr 21, 2025

கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

கோடைக்காலத்தில் வியர்வை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம் ,அதிகளவு நீர் இழப்பு ஏற்படுகிறது. உண்ணும் உணவின் மூலம் நீரைபெற்றாலும், உடலின் தேவைகளை பூர்த்தி செய்ய அதுபோதுமானது இல்லை. நமது உடல்60 சதவீதம் தண்ணீரால் நிறைந்துள்ளது.மனித மூளையில்,நடுமூளை மற்றும் பின்மூளையில் தாகம் குறித்த உணர்வைத் தூண்டும் மையம் அமைந்துள்ளது. 'ஹைபோதாலமஸ்' தாக உணர்வை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. குழந்தைகளுக்கு மூளையில் தாக மையத்தின் தூண்டல் குறைவாகவே இருக்கும். அதனால் அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு அதிகம் இருக்காது. கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகமாகி விட்டதால் பெற்றோர் தங்களின், குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.தண்ணீர் பற்றாக் குறைஉடலின் சமநிலையை சீர்குலைத்து பலவீனம்,சோர்வு, மலச்சிக்கல், தலைச்சுற்றல் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். எனவே1 முதல் 3 வயதுள்ள குழந்தைகள் தினமும் 1லிட்டர் நீரும்,4 முதல் 8வயதுள்ளவர் கள் ஒருநாளைக்கு 1.1 முதல் 1.3 லிட்டர் நீரும்,9 முதல் 13வயதுள்ளவர்கள் தினமும் 1.3முதல் 1.5 லிட்டர் தண்ணீரும் அருந்த வேண்டும் என தரவுகள் தெரிவிக்கின்றன. 

Apr 19, 2025

பான் பட்டாவின் (வெற்றிலை) நன்மைகள்

பண்டைய இந்திய மூலிகையான பான் இலை வெற்றிலை என்றும் அழைக்கப்படுகிறது. இது கிமு400 இல் பண்டைய சமுதாயத்திற்கு அவசியமானது. பான் இலையின் முக்கியத்துவத்தை ஆயுர்வேதம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்திய மன்னர்களும் பிரபுக்களும் அடிக்கடி பான் அல்லது வெற்றிலையை மென்று சாப்பிட்டதாக ஐரோப்பிய ஆய்வாளர் மார்கோ போலோ வெளிப்படுத்தியதற்கு சில ஆரோக்கியமான காரணம் உள்ளது. நல்ல வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க பான் இலைகளின் சாறு, பகுதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கூறுகள் மிக முக்கியமானவை என்பதை அவர்கள் கண்டறிந்தனர். தலைவலியைப் போக்கும்,வெற்றிலை வலி நிவாரணி மற்றும் குளிர்ச்சியூட்டும் விளைவுகளைக் கொண்டிருக்கலாம். இது வலி மிகுந்த தலைவலியின் வேதனையைக் குறைக்கப் பயன்படுகிறது. உங்களுக்கு தொடர்ச்சியான தலைவலி அல்லது வலிமிகுந்த வலி இருந்தால் உங்கள் மருத்துவரைப் பார்க்கவும்.வெற்றிலை அதன் லேசான தூண்டுதல் பண்புகளைக் கொண்டிருப்பதால் பதட்டம் மற்றும் மனச்சோர்வுக்கு இயற்கையான சிகிச்சையாகும், இது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனநிலையை உயர்த்தவும், மனத் தெளிவை ஊக்குவிக்கவும் உதவுகிறது.வெற்றிலைகள் சக்திவாய்ந்த உஷ்ண வீர்யம் அல்லது வீரியம், மற்றும் உடலை சூடேற்றும் தனித்துவமான திக்தா மற்றும் கட்டு ரச சுவை அல்லது கசப்பான மற்றும் காரமான சுவையைக் கொண்டுள்ளன. கூடுதலாக, இந்த பச்சை உணவு வகைகள் க்ஷர குணம் அல்லது காரப் பண்புகளைக் கொண்டுள்ளன, இது வயிறு மற்றும் குடலில் உள்ளpH ஏற்றத்தாழ்வுகளை வெற்றிகரமாக சமநிலைப்படுத்துவதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. உடலில் ஜீரணிக்க எளிதானதாக இருக்கும் லகு குணங்கள் காரணமாக, அவற்றை உணவில் சேர்க்கலாம் அல்லது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த பேஸ்ட்கள், பொடிகள் அல்லது பானங்களாக உட்கொள்ளலாம். அவை வாத மற்றும் கப கூறுகளை சமநிலைப்படுத்தி பித்த தோஷங்களை உயர்த்துவதன் மூலம் அமைப்பின் திரிதோஷ இணக்கத்தை ஆதரிக்கின்றன.

Apr 16, 2025

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மஞ்சள்

 மஞ்சள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவும் .நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. தோல் சுருக்கத்தை சரி செய்து வயது முதிர்வை தாமதம் ஆக்கும்.வலுவான எலும்புகளுக்கு உதவுகிறது.கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கிறது.கண் ஆரோக்கியத்திற்கான ஆண்டிஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது அதிகஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொண்டது.

Apr 15, 2025

சிறுகீரை சாப்பிடுவதால் .....

சிறுகீரை  சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இவை நம் உடலுக்கு முக்கியமான சத்துக்களை வழங்குகின்றன. இரும்புச் சத்து அதிகம்: சிறுகீரை இரும்பு சத்துகள் நிறைந்தது. இது இரத்த சோய்மையை தடுப்பதற்கும், இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து நிறைந்தது: சிறுகீரை நார்ச்சத்து அதிகம் கொண்டது. இது செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலை தடுக்கும்.கால்சியம் மற்றும் மாக்னீசியம்: சிறுகீரையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மாக்னீசியம் உள்ளதால் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. ஆன்டி-ஆக்ஸிடெண்ட்கள்: சிறுகீரையில் ஆன்டி-ஆக்ஸிடெண்ட்  சத்துகள் உள்ளன, இது செல் சேதத்தை தடுப்பதற்கும், குளிர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்: எலும்புகள் மற்றும் பற்களுக்குத் தேவையான சத்துக்களை அளித்து, எலும்புகள் பலமாக இருக்கும். குறைந்த கலோரி: சிறுகீரை குறைந்த கலோரி கொண்டது, அதனால் உடல் எடையை கட்டுப்படுத்த விரும்பும் நபர்கள் இதனை உணவில் சேர்க்கலாம். வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளைத் தடுக்கிறது: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கொழுப்புகளை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சிறுகீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது.

Apr 12, 2025

மூலிகைகளின் சிகரம் வில்வம்

பழங்களில் புனிதமானது மற்றும் மூலிகைகளின் சிகரம் என்ற பெயர் பெற்றது வில்வம். பொதுவாக, வில்வ மரத்தை கோவில் நந்தவனம், பழத்தோட்டங்களில் காணலாம். சிலர் இதன் மருத்துவ குணங்களை அறிந்து வீடுகளில் வளர்க்கின்றனர். வில்வம் விதை களை ஜூன், ஜூலை மாதங்களில் விதைக்கலாம். தொடர்ந்து வேப்பம் புண்ணாக்கு, சாம்பல் போன்ற இயற்கை உரங்களை இ இட்டு போதிய அளவு நீர் பாய்ச்சி வந்தால், 5 ஆண்டுகளில் வில்வ மரம் காய்க்க தொடங்கிவிடும். வில்வ மரம் ஆண்டிற்கு 400 பழங்கள் தரும். பெரிய பழமாக இருந்தால் சுமார் 250 பழங்கள் வரை கிடைக் கும். மாம்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிக சத்துக்கள் வில்வம் பழத்தில் நிரம்பியுள்ளன. வில்வம் காய் உருண்டையாக, ஓடு கடினமானதாக, பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இனிப்பு கலந்த துவர்ப்பு சுவை கொண்டது. வில்வம் பழம் குடல் சார்ந்த பிரச்சினைகளை குண மாக்கும். நன்றாக நன்றாக பழுத்த பழம் சாப்பிடபழம் சாப்பிட சுவையாகவும், உடல் வெப்பத்தை தணித்து, மலச்சிக்கலை நீக்கி உடலுக்கு சுறுசுறுப்பை தரும். உடலுக்கு பலம் தருவதுடன், மூலம் நோயை தணிக்கிறது. வில்வம் இலையை அரைத்து பொடியாக்கி தினமும் காலை சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவாகும். சளி, இருமல், பல் சம்பந்தப்பட்ட பிரச் சினைகளுக்கு வில்வம் பொடியை பயன்படுத்தி வந்தால் பாதிப்புகள் நீங்கும். வில்வம் பழத்தில் வைட்டமின் பி1, பி2, தயாமின், புரதம், நார்ச்சத்துக்கள் அதிக அளவில் காணப்படுகிறன.வில்வம்பழத்தை உண்டால் நோய்கள் நீங்கி உடல் வலிமை பெறும்.

Apr 12, 2025

வெங்காயம் வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும்

வெங்காயம், மனிதர்களின்உணவுப்பழக்கத்தில்பழமையானஒன்றாகும்.இதுரத்தத்தைசுத்தப்படுத்தும்சக்திகொண்டதால், பண்டைய கிரேக்க வீரர்கள் அதை அதிகமாக உண்டு வந்தனர். ரோமானிய மல்யுத்த வீரர்கள், உடல் ஒளிவூட்டுவதற்காக வெங்காயத்தை அரைத்து பூசி வந்ததாக கூறப்படுகிறது.வெயில்காலத்தில் அதிக காய்ச்சலுக்கும் நீர்க்கடுப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, வெங்காயத்தை உணவில் சேர்ப்பது நல்லது. ஒரு சிறிய வெங்காயத்தை நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் போட்டு குடித்தால் உடல் சூடு குறையும். குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க, அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலக்கி அல்லது நெய்யில் வறுத்து கொடுக்கலாம். வெங்காயத்தில் உள்ள சல்பர், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, மாரடைப்பை தடுக்கிறது. இதன் அண்டிமைக்ரோபியல் தன்மை செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது. பைட்டோகெமிக்கல்கள் அல்சரை தடுக்க, கரையும் நார் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. வெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயனுள்ளதாகும்.

Apr 07, 2025

நாட்டுக்கோழி இறைச்சி நோய் தீர்க்கும் உணவு .

அளவில் சிறியது  நாட்டுக் கோழிகள் .பிராய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழிகள் அதிக திறன் கொண்டவை. மண்ணில் காணப்படும் தானியங்கள், தாவரங்கள், மூலிகைகள், பூச்சிகள், புழுக்கள் போன்றவற்றை மேய்ந்து வளர்கின்றன. இதனால், இவற்றின் இறைச்சி பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது.நாட்டுக்கோழி இறைச்சியில் காணப்படும் புரதம் மனித உடலில் திசுக்களை உரு வாக்குவதற்கும், அவற்றில் கோளாறு இருந்தால் சரிசெய்வதற்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், நொதிகள் மற்றும் ஹார்மோன்களை உற்பத்தி செய்யவும் உத வுவதாக கூறுகிறார்கள்.நாட்டுக்கோழி இறைச்சியில் வைட்டமின் ஏ.பி. பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன. செலினியம் தாது ,கீழ்வாத நோயை தடுப்பதில் சிறப்பானது. பார்வை மங்கல் பாதிப்புகளை வைட்டமின் ஏ சத்து குறைக்கிறது. நாட்டுக்கோழி இறைச்சியில் உள்ள வைட்டமின் டி சத்து ,இதய நோய்களை தடுக்க உதவுகிறது. தோல் நோய்களைத் தடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் பி உதவுகிறது.உலகம் முழுவதும் அந்தந்த இடங்களில் உள்ள நாட்டுக் கோழிகள் ஆர்கானிக் கோழிகள் என்றே அழைக்கப்படுகின்றன. நோய் தீர்க்கும் உணவு களில் ஒன்றாக கருதப்படுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 17 18

AD's



More News