25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அழகுக் குறிப்பு

Feb 01, 2024

நகங்களை பராமரிக்க....

நகங்களை வெட்டுவதற்கு முன் நகத்தில் கொஞ்சம் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால், நீங்கள்விரும்பும் வடிவத்திற்கு நகங்களை வெட்டலாம்.தினமும் பாலுடன் கொஞ்சம் பேரிச்சை கலந்து குடித்து வர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, நகம் உடைத்தல் குறையும். மேலும் நகத்திற்கு பாதாம் எண்ணெயை தடவி வர நகம் பளப்பளப்பாக இருக்கும்.

Jan 28, 2024

பொடுகு தொல்லைதீர உப்பு

 பொடுகுதொல்லை வருவதற்கான முக்கிய காரணங்கள் ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும்,தலைமுடியை எண்ணெயைபசையுடன் அழுக்காக வைத்துக்கொள்வது, சரியாகதலை அலசாமல் இருப்பதினாலும், தினமும்தலைக்கு ஷாம்பு போடுவதினாலும்,தலைகுளித்துவிட்டு தலைமுடியை நன்றாக துவட்டாமல் இருப்பது., பொடுகு உள்ளவரின் சீப்பை பயன்படுத்துவது எனபல காரணங்கள் இருக்கின்றது..இந்தபொடுகு தொல்லை , உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவேஉப்பு இரண்டு ஸ்பூன்எடுத்து கொண்டு, சிறிதளவுதண்ணீரில் கலந்து கொள்ளவும்.பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10,15 நிமிடம் மசாஜ்செய்ய வேண்டும்.பின்புமைல்டு ஷாம்பு போட்டுதலை அலச வேண்டும்.இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்துவந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில்குணமாகும்.

Jan 25, 2024

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க...

சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க தினமும் எலுமிச்சை சாறை தேய்த்து வர முடி வளரும் தன்மையை இழந்து முகம் அழகு பெரும்.முகத்தில் உள்ள முடி நீங்க முட்டையின் வெள்ளை கருவை தனியாக எடுத்து அவற்றில் சோளமாவு, சர்க்கரைஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்டு போல் கலந்து முகத்தில் தடவி, பின்புகாய்ந்தவுடன் அவற்றை கைகளால் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதாக வந்துவிடும்.கை, கால்களில் கருப்பு நிறம் முடிகள் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சை சாறை தடவி சோப்பு போட்டு குளித்து வர கை, கால்களில் இருக்கும் கருப்பு நிறம் முடிகள் போய் விடும்.

Jan 24, 2024

முகப்பரு தழும்புகள் மறைய...

முக்கியமாக பருக்களை கைகளால் தொடக்கூடாது.கொழுந்து வேப்பிலையை அரைத்து முகத்தில் உள்ள முகப்பரு மீது தடவி10 நிமிடம் பின் கழுவ வேண்டும். இது தொடர்ந்து செய்து வர நல்லது.வல்லாரை சாற்றுடன், முல்தானி மெட்டி பவுடருடன் கலந்து பேஸ் பேக் போட்டு வரலாம்.துளசியை சுடு நீரில் போட்டு பின் அதனை அரைத்து முகத்தில் தடவி வர நீங்கும்.பருவினால் ஏற்படும் தழும்புகள் மறைய இரவு உறங்குவதற்கு முன் புதினா சாறு 2 தேய்க்கரண்டி, 1/2 மூடி எலுமிச்சை சாறு மற்றும் பயத்தமாவு ஆகியவற்றை கலந்து முகத்தில் 10 நிமிடம் ஊறவைத்து பின்பு ஐஸ் கட்டியால் ஓத்தடம் கொடுத்தால், பருவினால் ஏற்படும் தழும்புகள் மறையும்.

Jan 23, 2024

புருவம் அடர்த்தியாக வளர...

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும். முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.பப்பாளிப் பழத்தை மசித்து பூசி வர முகப்பொலிவு அதிகரிக்கும்.துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்..வாழைப்பழத்தோலை லேசாக சூடுபடுத்தி கண்களின் மேல் வைக்க கருவளையம்  குறையும்.உதட்டில் வெண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

Jan 19, 2024

உலர்ந்த தலை முடி சாப்டாக்க ஹேர் கண்டிஷனர்

இயற்கையாக கிடைக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி வீட்டிலேயே ஹேர் கண்டிஷர் தயாரிப்பது எப்படி.?தேவையான பொருட்கள்:ஆலிவ் எண்ணெய்- 2 ஸ்பூன்,கற்றாழை ஜெல்- 3 ஸ்பூன்இரண்டையும் நன்றாக கலக்கவும்:முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து ,உங்கள் முடியின் அளவிற்கு ஏற்ற அளவில் கற்றாழை ஜெல் மற்றும் ஆலிவ் எண்ணெயை எடுத்து கொள்ளுங்கள். பயன்படுத்தும் முறை:இப்போது இவற்றை நன்றாக கலந்து கொண்டு, முடியின் வேர்க்கால்களில் இருந்து முடியின் நுனிபகுதி வரை நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.அதன் பிறகு, ஒரு துண்டினை மிதமான வெந்நீரில் நனைத்து தலைமுடியில் 30 நிமிடங்கள் வரை போர்த்தி விடவும்.இறுதியாக, தலைமுடியை எப்போதும் போல் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து விடவும்.முக்கிய குறிப்புகள்:எண்ணெய் பசையுள்ள தலைமுடியில் இந்த ஹேர் கண்டிஷரை பயன்படுத்த கூடாது.உலர்ந்த தலைமுடியில் பயன்படுத்த கூடாது. ஈரமாக உள்ள தலைமுடியில் மட்டுமே அப்ளை செய்ய வேண்டும்.கண்டிஷரை தயாரித்தவுடனே பயன்படுத்த வேண்டும். நீண்ட நேரம் வைத்து விட்டு பிறகு பயன்படுத்த கூடாது.

Jan 18, 2024

முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்க...

இயற்கையிலேயே நமக்கு கிடைக்கக்கூடிய பல பொருட்கள் நம்முடைய தோலின் நிறத்தை மாற்றும் வல்லமை படைத்ததாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக வெயிலால் ஏற்படக்கூடிய கருமையை நீக்குவதற்கு மட்டுமல்லாமல் ,கரும்புள்ளிகள், சுருக்கங்கள் போன்றவற்றை நீக்கி இளமையாக தக்கவைத்துக் கொள்ள பல இயற்கையான பொருட்கள் கிடைக்கின்றன.கருமை நிறத்தை வெண்மையாக்கும் கிரீம் முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை சீவி விட்டு அதை நன்றாக துருவி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகுஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் சுத்தமான பசும்பாலை ஊற்றி அதில் நாம் துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு, குறைந்த தீயில் வைத்து உருளைக்கிழங்கு நன்றாக வேக விட வேண்டும். நாம் உபயோகப்படுத்தும் சோப்பை எடுத்து அதையும் துருவி வைத்துக்கொள்ள வேண்டும். மூன்று ஸ்பூன் அளவிற்கு துருவிய சோப்பு கிடைத்தால் போதும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்ததும் அதை அடுப்பில் இருந்து இறக்கிவிட்டு துருவிய சோப்பை அதில் சேர்த்து சோப்பு கரையும் வரை நன்றாக கிளறி விட வேண்டும். சோப்பு அனைத்தும் நன்றாக கரைந்த பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். அரைத்த இந்த விழுதை மறுபடியும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் எலுமிச்சை பழச்சாறு அல்லது ஆரஞ்சு பழச்சாறு இவற்றில் ஏதாவது ஒரு பழத்தின் சாறை இரண்டு ஸ்பூன் ஊற்ற வேண்டும்.இதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு சோளமாவை சேர்த்து ,ஒன்றுடன் ஒன்று நன்றாக கலந்த பிறகு மறுபடியும் இதை அடுப்பில்  வைத்து கிரீம் பதத்திற்கு வரும் அளவிற்கு குறைந்த தீயில் வைத்து,கை விடாமல் கிளறி விட வேண்டும். இது கிரீம் பதத்திற்கு வந்தவுடன் அதை அடுப்பில் இருந்து இறக்கிஆற வைத்து சுத்தமான காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்து விட வேண்டும். நிறத்தை வெண்மையாக்க கூடிய க்ரீம் தயாராகிவிட்டது. இந்த கிரீமை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். இந்த கிரீமை நாம் முகத்தில் தடவுவதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கரும்புள்ளிகள், வடுக்கள் போன்றவை நீங்குவதோடு மட்டுமல்லாமல் முகச்சுருக்கத்தையும் நீக்குவதற்கு இது பெரிதும் துணை புரிகிறது. ஒரு முறை உபயோகப்படுத்தினாலேயே நல்ல பலனை தரக்கூடியது. 

Jan 17, 2024

வயது முதிர்ச்சியின் காரணமாக முகச்சுருக்கத்தை தடுக்கும் ஃபேஸ் க்ரீம்

வயது முதிர்ச்சியின் காரணமாக முகத்தில் சுருக்கங்கள் விழ ஆரம்பிக்கும்.ஒருசிலருக்குஇளம்வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். எந்த வயது சுருக்கமாக இருந்தாலும் அந்த முகச்சுருக்கத்தை நீக்கி இளமையாக பார்த்துக் கொள்ள  உதவக்கூடிய ஒரு ஃபேஸ் க்ரீம்.முதலில் ஒரு ஆரஞ்சு பழத்தை எடுத்து,வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை போட்டு நன்றாக தேய்த்து கழுவிக்கொள்ளுங்கள். பிறகு இந்த ஆரஞ்சு பழத் தோலை மட்டும் துருவி,ஒரு கேரட்டைதுருவி எடுத்துக் கொள்ளுங்கள்.. இவை இரண்டையும் எடுத்து ஒரு கண்ணாடி பௌலில் போட்டு, ஆறு பிரியாணி இலையை பொடி பொடியாக உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு தேங்காய் எண்ணையும், நான்கு டேபிள் ஸ்பூன் அளவிற்கு ஆலிவ் எண்ணையும் சேர்க்க வேண்டும். இப்பொழுது இந்த கண்ணாடி பவுலை டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் இந்த பவுலை வைத்து அடுப்பில் வைத்து விட வேண்டும்.குறைந்த தீயில்40 நிமிடம் இருக்க வேண்டும். பிறகு இதை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய இந்த எண்ணெயை ஃப்ரீசரில்வைத்து விட வேண்டும். அது கிரீம் பதத்திற்கு மாறிவிடும். இப்பொழுது இந்த கிரீமை எடுத்து முகத்தில் இரவு படுக்க செல்வதற்கு முன் தடவுவதன் மூலம் மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆரஞ்சு பழத்தோல் வயது முதிர்ச்சியை தடுப்பதற்கு உதவுகிறது. மேலும் முக வறட்சியை நீக்கி சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்.ஒருமுறைஇந்தக்ரீமைஉபயோகப்படுத்தினாலேயே உடனடியாக முகம் மிகவும் மிருதுவாக தோன்றுவதை நம்மால் கண்கூடாக காண முடியும்முகச்சுருக்கமே வயது முதிர்ச்சியை காட்டக்கூடிய ஒரு காரணியாக திகழ்வதால் இந்த கிரீமை பயன்படுத்தி முக சுருக்கத்தை நீக்கி என்றும் இளமையாக தென்படுவோம்.

Jan 01, 2024

முடி உதிர்வை தடுக்கும் வெங்காயம், பூண்டு, தேங்காய் எண்ணெய்.

 முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கஅன்றாடம் நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் வெங்காயமும் பூண்டும் இருந்தாலே போதும். வெங்காயத்தில் எந்த அளவிற்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது அதே அளவு தான் பூண்டிலும் சத்துக்கள் நிறைந்திருக்கிறது. பூண்டையும் நாம் தலைக்கு பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்தல் பிரச்சனை என்பது சரி செய்யப்படுகிறது.முடி வளர்ச்சியும் அது ஊக்குவித்து பொடுகு பிரச்சனைகள் இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்யக்கூடிய ஒரு பொருளாக தான் பூண்டும் திகழ்கிறது. அந்த காலத்தில் தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிக்கும் பொழுது அதில் இரண்டு பூண்டை தட்டி போடும் வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து வந்தது. ஒரு வெங்காயத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் தோலை நீக்கக் கூடாது. வேரையும் நுனியையும் மட்டும் நறுக்கிவிட்டு அதன் தோளுடன் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒன்பது பல் பூண்டை எடுத்து அதன் தோலை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இப்பொழுது டபுள் பாய்லிங் மெத்தடில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்றி தண்ணீர் சூடானதும் அதனுள் ஒரு பாத்திரத்தை வைத்து நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பூண்டு இவை இரண்டையும் அந்த பாத்திரத்தில் சேர்த்து250மிலி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும்.குறைந்த தீயில்30 நிமிடம் அடுப்பில்வைத்து எண்ணெயை கிளறி விட வேண்டும். வெங்காயமும் பூண்டும் எண்ணெயில் நன்றாக வேக அடுப்பிலேயே வைத்திருக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு அதை அப்படியே எடுத்து ஆற வைக்க வேண்டும். பிறகு அதை காற்று புகாத அளவிற்கு ஒரு தட்டை போட்டு மூடி வைத்து ஒரு வாரம் அப்படியே விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அந்த வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கக்கூடிய சாறுகள் அனைத்தும் எண்ணெயில் இறங்கிவிடும். இந்த எண்ணையை எடுத்து ஒரு வடிகட்டியை பயன்படுத்தி வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம். நம் தலை முடிக்கு பாதுகாப்பை தரக்கூடிய அற்புதமான தேங்காய் எண்ணெய் தயாராகிவிட்டது. இந்த எண்ணெயை வாரத்திற்கு இரண்டு முறையாவது தலைக்கு தேய்த்து லேசாக சூடு செய்து தலை வேர்க்கால்களில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.பூண்டு சேர்த்திருப்பதால் பூண்டு வாடை வரும் என்று நினைப்பவர்கள் தலைக்கு குளித்து கடைசியாக தலையை அலசும் பொழுது மட்டும் அரை எலுமிச்சம் பழத்தை தண்ணீரில் பிழிந்து தண்ணீரை தலைக்கு ஊற்றி அலசினால் பூண்டு வாடை எதுவும் ஏற்படாது. 

Dec 31, 2023

உதட்டை சிவப்பாக மாற்ற....

...கருமை நிற உதடுகளை இளஞ்சிவப்பு நிற உதடாக மாற்ற. கொஞ்சம் பராமரிப்பு கூடுதல் கவனம் இருந்தால் அழகான உதடுகளை பெற்று விடலாம். இளவயதினர் வெகு அரிதாகவே இந்த பாதிப்புக்கு ஆளானாலும் வயது அதிகமாகும் போது பெண்களும் இருண்ட கருமையான உதடுகளை பெறுகிறார்கள்.ஸ்ட்ராபெர்ரி நிறமே கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அழகானது. ஸ்ட்ராபெர்ரி சாறுடன் பெட்ரோலியம் ஜெல்லி கலந்து நன்றாக கலக்க வேண்டும். இதை தினமும் இரவு தூங்கும் போது இதை உதட்டில் தடவி வந்தால் உதட்டின் நிறம் மாறும்.சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை சாறு சருமத்துக்கு சமயங்களில் எரிச்சலை உண்டாக்கும். எனினும் இதை நீர்த்து அல்லது எண்ணெயுடன் கலந்து பயன்படுத்தினால் பலன் கிடைக்கும். எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் உடன் ஆலிவ் என்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் கலந்து நன்றாக கலக்கவும். இதை உதட்டின் மீது தடவி நன்றாக உலரும் வரை வைத்திருந்து பிறகு மீண்டும் இந்த கலவையை மேல் அடுக்கில் தடவவும்.நன்றாக உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் உதட்டை கழுவ வேண்டும். எலுமிச்சை இயற்கை சுத்தப்படுத்தியாக இருப்பதால் இது கறைபடிந்த உதடுகளை வெண்மையாக்க செய்கிறது. ஆலிவ் எண்ணெய் உதட்டை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது.

1 2 ... 13 14 15 16 17 18 19 ... 22 23

AD's



More News