25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Jul 06, 2023

சருமத்தில் ஈரத்தன்மையை தக்க வைக்க.....

வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பானங்களுடன் உங்களின் நாளைத் துவங்குவதே சருமத்துக்கு ஊட்டமளிப்பதற்கான சிறந்த வழியாகும்.சருமத்தில் ஈரத்தன்மையை தக்கவைத்து, பொலிவாக தோற்றமளிப்பதில், ஊட்டச்சத்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.சீமை சாமந்தி, ரோஜா மற்றும் செம்பருத்தி ஆகிய பூக்களை சேர்த்து மூலிகைதேநீராகவோ, தண்ணீருடன் கொதிக்க வைத்தோ குடிப்பதால், உடலை நீரேற்றமாக வைக்கலாம்.இளநீர் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் பராமரிக்க உதவுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் எரிச்சலைத் தணிக்கவும், சிவப்பைக் குறைக்கவும் உதவும்.வெள்ளரிக்காய் உடலின் நீரேற்றம் மற்றும் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கும்; தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தும் சிலிக்கா என்ற கனிமத்தைக் கொண்டுள்ளது.கேரட்டிலுள்ள வைட்டமின் ஏ தோல் செல்களை மேம்படுத்தி, சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைக்கிறது.

Jul 05, 2023

உடல் எடையை குறைக்கும் காலை நேர பயிற்சிகள் -பழக்கங்கள்

காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் பருகுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதோடு, செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.அதிகப்படியான கலோரிகளை திறம்பட எரிக்க உதவும் ஒரு வகை உடற்பயிற்சியினை HIIT பயிற்சி என அழைக்கிறோம். இந்த பயிற்சிகளை தினமும் காலை தவறாது செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு உதவும் யோகா பயிற்சிகளை தினமும் காலை செய்ய பழகுவது, அதிகப்படியான கலோரிகளை குறைப்பதோடு ஆரோக்கிய உடல் எடை இழப்புக்கும் உதவுகிறது. காலை உணவை தவிர்ப்பது கொலஸ்ட்டிரால் தேக்கத்திற்கு வழிவகுப்பதோடு உடல் எடை அதிகரிப்புக்கும் வழிவகுக்கும். எனவே, ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை,நேரத்திற்கு காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்.எடுத்துக்கொள்ளும் காலை உணவில் முட்டைகள், முளைகட்டிய பயறு போன்ற புரத சத்து நிறைந்திருப்பதை உறுதி செய்வது நல்ல பலன் காண உதவும்.இரவு தூங்க சென்றுபோதுமான அளவு தூங்கி- விடியற்காலை எழுவது இந்த உடல் எடை குறைப்புக்கு உதவும்.வைட்டமின் டியின் சிறந்த மூலமாக இருக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரத்தை செயலவிடுவது,சருமத்திற்கு அடியில் உள்ள கொழுப்புக்களை கரைத்து ஆரோக்கிய உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.காலை நேரத்தில் காப்பின் நிறைந்த காபி அல்லது வழக்கமான டீ பருகுவதற்கு பதில் கிரீன் டீ மற்றும் கருப்பட்டி டீ பருகுவது கொலஸ்டிரால் தேக்கத்தை குறைத்து, ஆரோக்கிய உடல் எடை குறைப்புக்கு உதவும்.

Jul 03, 2023

பெண்களின் முகத்தில் உள்ள முடிகள் உதிர

மஞ்சள் செடியின் இலைகளில் 10 எடுத்து வெயிலில் நன்கு காய வைத்து இடித்துத் தூளாக்கி அத்துடன் 30 மில்லி தேங்காயெண்ணையை கலந்து வைத்துக்கொண்டு தினமும் இரவு இந்த எண்ணெயை முடி வளர்ச்சியுள்ள இடத்தில் நன்கு தேய்த்து காலையில் குளித்துவிட இரண்டு மூன்று நாட்களிலேயே முடிகள் உதிர்ந்துவிடும் பிறகு முளைக்காது .

Jun 29, 2023

சொத்தை பல் விரைவில் குணமாக

வேப்பிலை சாறைப் பல் சொத்தை உள்ள இடத்தில் தடவ வேண்டும்.சுமார் 15 நிமிடங்களுக்கு பிறகு, சற்று மிதமான சூடு நீரில் வாய் கொப்பளித்தல் வேண்டும். வேம்பு இயற்கையாகவே  கிருமிகளை அழிக்கும் குணம் கொண்டது. இவ்வாறு செய்வதன் மூலம் பல் சொத்தை குணமாகும் பல்வலி தீரும்.ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி 10 நிமிடங்கள் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும். அதேபோல் சொத்தை பற்கள் ஏற்படுவதை தடுக்கலாம்.தினமும் காலை எழுந்தவுடன் வெதுவவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து பற்கள் துவக்கும் முன் 1 நிமிடம் வாயி கொப்பிளிக்க வேண்டும்.இவ்வாறு தினமும் மூன்று வேலை உணவு உட்க்கொள்ளும் முன் செய்து வந்தால் பற்களில் சொத்தையில் இருந்து விடுப்படலாம். தினமும் இரவில் தூங்கும் போது 2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டன் துணியில் அந்த எண்ணெயை தொட்டு இரவில் தூங்கும் போது சொத்தை பற்கள் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சொத்தை பற்கள் விரைவில் குணமாகும்

Jun 28, 2023

சிகப்பழகு பெற.......

 முகத்தை கழுவி சுத்தம் செய்து காயவைக்க வேண்டும். இரவில் படுக்கும் முன், தேன், எலுமிச்சை சாறு, பாலாடை, கடலை மாவு தலா ஒரு டீஸ்பூன் எடுத்து கலந்து வைக்கவும்... முகத்தில் மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் காய வைக்க வேண்டும்...பின் காலையில் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் சிகப்பழகு பெறும்..மற்றவர்கள் பொறாமை படும் அளவிற்கு  சிகப்பழகு தரும் நைட் கிரிம்.

Jun 27, 2023

சரும சுருக்கங்கள், சரும கோடுகள் நீக்க பப்பாளி

வயதாகும் போது ஏற்படும் சரும சுருக்கங்கள், சரும கோடுகள் இவற்றை நீக்க உதவுகிறது.பப்பாளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் லைகோபீன் சருமத்தைப் பாதுகாக்கிறது. வயதான அறிகுறிகளை குறைக்கிறது. ஒரு ஆய்வில், 10-12 வாரங் களுக்கு லைகோபீனைச் சேர்ப்பது சூரிய ஒளியால் சருமம் சிவப்பது தடுக்கப் படுவது ,தெரிய வந்துள்ளது.அதனால் தினமும் ஒரு கப் பப்பாளி சாப்பிடலாம். வயதாவதை தடுக்கும் ,ஆன்டி  ஆச்ஸ்டன்கள் ஆக்ஸ்னேற்ற அழுத்தத்தால் செல்கள் அழிவதை தடுக்கிறது.  

Jun 26, 2023

சோறு வடித்த கஞ்சியை சூடாக குடிக்க உடல் எடையை குறைக்கும்

.அரிசி வேக வைத்த நீரை சோறு வடித்ததும் சூடாக எடுத்து அதில் கொஞ்சம் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து கலந்து குடிக்கலாம். அவ்வாறு இதைக் குடிப்பதால்உணவு சாப்பிட்டது போல் வயிறு நிறைவாக இருக்கும். சோறு சாப்பிடுவதால் 650-1000 கலோரிகள் அதிகரிக்கும். இதே கஞ்சித் தண்ணீர் குடிப்பதால் 150 கலோரிகள் மட்டுமே அதிகரிக்கும். கலோரி குறைவாக இருப்பது மட்டுமன்றி உடல் எடையைக் குறைக்கவும் உதவும், உடல் நீர் வற்றுவதிலிருந்து பாதுகாக்கும். வயிற்றுப் போக்கு அதோடு மலசிக்கல், வைரஸ் தொற்று போன்றவற்றையும் குணமாக்க உதவுகிறது . 

Jun 20, 2023

விரைவான எடை இழப்புக்கு முருங்கை இலை டீ

தொப்பை கொழுப்பை கரைத்து மெல்லிடையை கொடுக்கும் முருங்கை இலை தேநீர் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது, இது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. இன்றைய வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப்பழக்கத்தால், உடல் பருமன் மற்றும் தொப்பை கொழுப்பு என்பது பொதுவான பிரச்சனையாக ஆகி விட்டது. அதுவும் இடுப்பை சுற்றி படிந்திருக்கும் கொழுப்பைக் குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தட்டையான வயிற்றை கொடுக்கும் முருங்கை டீ தயாரிப்பதற்கான செய்முறையை இன்று அறிந்து கொள்ளலாம். முருங்கைக்கீரையை 1 கை அளவு எடுத்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு, 6 பூண்டு, 2 inch இஞ்சி, போட்டு  குக்கரில் வைத்து 2 விசிலுக்கு வைக்கவும். பின் இத்துடன் தேவையான கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து நன்றாகக் கரைத்து வடிகட்டி குடிக்கவும். இனிப்பு வேண்டாம் என்றால் இத்துடன் மிளகு, சீரகம் தட்டிப் போட்டு உப்பு சேர்த்தும் குடிக்கலாம். தோலில் வயதான தோற்றத்தை குறைத்து இளமை தோற்றம் உண்டாகும்.

Jun 19, 2023

முகச்சுருக்கத்தைப் போக்க

முகச்சுருக்கத்தைப் போக்க  தினந்தோறும் குறைந்தது 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடியுங்கள். இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய், வெள்ளரி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய், கனிகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.தினமும் வைட்டமின் ஏ நிறைந்த கேரட் மூன்று நிற வகைப் பழங்கள் சாப்பிடுங்கள். சருமத்துக்குப் பொலிவைத் தந்து இளமைத் தோற்றத்தை தக்கவைக்கும். மறக்காமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

Jun 16, 2023

மன உளைச்சலை உண்டாக்கும் தோல் வியாதி

பலரையும் தாக்கும் நோய்களில் சரும நோயும் ஒன்று. பலரின் ஏளனப் பார்வைக்கு நம்மை உள்ளாக்கி மன உளைச்சலை உண்டாக்கும் நோய்களில் இதுவும் ஒன்றாகும். சரும நோய்க்கு ஆளானவர் பெரும்பாலும் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்.சரும நோய்களுக்கு நவீன மருத்துவத்தை விட பாரம்பரிய முறை இன்னும் சிறந்த முறையில் கை கொடுத்து உதவுகிறது. மேலும் பக்க விளைவுகள் இல்லாதது. இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.தினமும் காலை மாலை சுடுநீரில் அரை தேக்கரண்டி அருகம்புல் பொடி சேர்த்து குடித்து வந்தால் தோல்பிரச்னை தீரும்.வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும். அறுகம்புல் ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு எடுத்து மைய அரைக்க வேண்டும். அதை தோல் வியாதி இருக்கும் இடத்தில் பூசி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் குளித்து வந்தால் நல்ல குணம் தெரியும்.குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.குப்பைமேனி சொறி சிரங்குக்குக் கை கண்ட மருந்து. குப்பை மேனி இலை ஒரு கைப்பிடி, மஞ்சள் கிழங்கு ஒரு இணுக்கு, கல் உப்பு கொஞ்சம் சேர்த்து அரைத்து, அரிப்பு கண்ட இடத்தில் பூசி அரை மணி நேரம் கழித்துக் குளிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால் ஊறல், படை எல்லாம் ஓடிப்போய்விடும். குணம் தெரிந்தவுடன் மருந்தைக் கைவிட்டுவிடலாம். இதனைக் காலை நேரத்தில் பூசிக் குளித்தால் நல்லது.வேப்பிலை ஒரு கைப்பிடி, 3 சிறிய வெங்காயம் இரண்டையும் அரைத்து உடம்பு முழுவதும் பூசி, அரை மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தாலும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிக்குக் குணம் கிடைக்கும்.. 20 கிராம் நன்னாரி வேரை அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து நன்றாகக் காய்ச்ச வேண்டும். இது 200 மிலி ஆகியதும் இறக்கிவிட வேண்டும். காலையில் 100 மிலி, சாயங்காலம் 100 மிலி குடித்து வந்தால் தோல் நோய் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.கல்லுருவி இலையை எடுத்து சுத்தம் செய்து இடித்துச் சாறு பிழிந்துக் கொள்ள வேண்டும். அந்த சாற்றை உடலில் பூசி வந்தால் தோல் நோய்கள் குறையும்.

1 2 ... 13 14 15 16 17 18 19 20 21 22

AD's



More News