25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அழகுக் குறிப்பு

Dec 26, 2023

கருவளையத்தை மறைக்கும் 'தேங்காய் எண்ணெய்- மஞ்சள் பேக்!

 தேங்காய் எண்ணெய், மஞ்சள் மற்றும் கற்றாழை கலவையில் ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைக்கிறதுதேவையான பொருட்கள்! தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 4 ஸ்பூன் | பெட்ரோலியம் ஜெல்லி -1 ஸ்பூன்செய்முறை ,முதலில் எடுத்துக்கொண்ட கற்றாழை ஜெல்லை ஒரு கோப்பையில் பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.தொடர்ந்து இதனுடன் மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள கருவளையம் போக்கும் பேக் ரெடிதயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்தில் அப்ளை செய்து- மசாஜ் செய்து15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையில் உண்டாகும் இந்த பேக் ஆனது, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும பொலிவை உறுதி செய்கிறது.அந்த வகையில் இது கருவளையத்தை மறைக்கிறதுஅழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஞ்சள், கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம், தடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.சரும தளர்வுகளை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, கண்களுக்கு அருகில் உள்ள சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.சருமத்தின் இயற்கை எண்ணெய் தக்க வைத்து, பொலிவான சருமம் பெற உதவும் இந்த பேக் ஆனது, சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவியாக உள்ளது.

Dec 25, 2023

நரை முடிக்கு 'பாதாம் - வெந்தயம் 'மாஸ்க்'

நரை முடி பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் இயற்கை டைதேவையான பொருட்கள்!-பாதாம் - 4 | இஞ்சி - 2" அளவு | வெந்தயம் - 3 ஸ்பூன் | வெங்காய தோல் - 4 | தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்செய்முறை,முதலில் எடுத்துகொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.தொடர்ந்து வெந்தயம், பாதாம் சேர்த்து பொடியாக அரைத்து எடுக்கவும்.பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த அரைத்தபொடிசேர்த்து நன்கு கருக(மிதமான சூட்டில்) வறுத்துக்கொள்ளவும். பின் இந்த பொடியை நன்கு ஆற விட்டு தனி ஒரு கோப்பைக்கு மாற்றவும்.இத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கரைக்கநரை முடி போக்கும் மாஸ்க் ரெடி.7 நாட்கள் வரை வைத்து இந்த மாஸ்கினை பயன்படுத்தலாம். இந்த மாஸ்கினை(2 நாட்களுக்கு ஒரு முறை) கூந்தலுக்கு அப்ளை செய்து3 மணி நேரங்கள் வரை உலர விடவும். பின் மிதமான ஷேம்பு பயன்படுத்தி தலைக்கு குளித்துவிடவும்.நரை முடி மறையும்! வெள்ளை முடியின் நிறைத்தை மாற்றுவதோடு, பித்தத்தை கட்டுப்படுத்தி வெள்ளை முடி மீண்டும் வருவதன் வாய்ப்பையும் குறைக்கிறது.கிருமி நாசினிப் பண்பு கொண்ட இஞ்சி, வெங்காயதோல்கலவையில்தயார்செய்யப்படும்இந்தமாஸ்க்ஆனது,பொடுகு மற்றும் கிருமி தொற்று பிரச்சனைகளை எதிர்த்து போராட உதவுகிறது.தேங்காய் எண்ணெய், வெந்தயம் கலவையில் உண்டாகும் இந்த மாஸ்க், இயற்கை எண்ணெயை தக்க வைப்பதோடு, கூந்தல் வறட்சி பிரச்சனையையும் எதிர்த்து போராட உதவியாக உள்ளது.

Dec 22, 2023

முடி வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய்

கூந்தலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் சிறந்த தீர்வாக உள்ளது.கருஞ்சீரகத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய், முடி உதிர்வை போக்கி வளர்ச்சியை அதிகரிக்கிறது. மேலும் முடி வறட்சி, வெட்டு, அரிப்பு போன்ற பிரச்சினைகளைத் தீர்க்கிறது.  கருஞ்சீரக விதையில் இருக்கும் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.கருஞ்சீரகத்தை எண்ணெய் காய்ச்சி பயன்படுத்தும் போது ,தலைமுடி உதிர்தலை நிறுத்தி முடி வளர்ச்சிக்கு ஊக்குவிக்கின்றன.மேலும் உச்சந்தலை பகுதியில் இருக்கும் குறைபாட்டை நீக்கும். முடி வறட்சியையும் முடி உதிர்தலையும் கட்டுப்படுத்தும்.கருஞ்சீரக எண்ணெய்யை தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் - தேங்காய் எண்ணெய்- 100ml,கருஞ்சீரகம்- 1 ஸ்பூன்,வெந்தயம்- 1 ஸ்பூன்செய்முறை:முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயத்தை பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு இரும்பு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து சூடுபடுத்திக்கொள்ளவும்.பின் அரைத்து வைத்துள்ள பொடியை தேங்காய் எண்ணெயில் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். சூடு ஆறியதும் எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து பயன்படுத்தி வரலாம்.

Dec 15, 2023

மணப்பெண் மாதிரி முகம் பிரகாசமாக ஜொலித்திட, சருமத்தில் பால் - மஞ்சள் ஸ்க்ரப்

தேவையான பொருட்கள்-பால் -2 டீஸ்பூன், மஞ்சள் - ஒரு சிட்டிகை - சர்க்கரை - 1 டீஸ்பூன்பாலை சருமத்தில் பயன்படுத்துவது மூலம் ஈரப்பதம் அதிகரித்தல், வயதான தோற்றம் தடுத்தல், சருமத்தை சுத்தமாக்குதல், சரும மேற்பரப்பை சீராக்குதல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றனமஞ்சள் சருமத்தில் இயற்கை பொலிவை மீட்டெடுக்க பெரிதும் உதவுகிறது. குறிப்பாக, முகப்பரு, கரும்புள்ளி போன்றவற்றை மறைய செய்து சுத்தமான சருமத்தை பெற உதவுகிறதுசெய்முறை-முதலில் பவுல் ஒன்றில், பால் மற்றும் சர்க்கரை ஒன்றாக சேர்க்க வேண்டும்அத்துடன் மஞ்சளை சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி பொறுமையாக மசாஜ் செய்ய வேண்டும்கலவை நன்றாக காய்ந்தபிறகு முகத்தை குளிர்ந்த நீரில் வாஷ் செய்ய வேண்டும். முகம் ஜொலிக்கும்இந்த பேஸ் பேக்கை வாரத்திற்கு3முறை முகத்தில் அப்ளை செய்தால், மணப்பெண் மாதிரி சருமம் இயற்கையாகவே ஜொலிக்கக்கூடும்.

Dec 12, 2023

ஆரோக்கியமான தலைமுடிக்கு......

செம்பருத்தி மலர்கள் பார்வைக்கு ஈர்க்கக்கூடியவை மட்டுமல்ல, ஆரோக்கியமான தலைமுடிகளை பராமரிப்பதற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் சி மற்றும் ஏ நிறைந்த, செம்பருத்தி உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது உச்சந்தலையின் pH அளவை சமப்படுத்தவும், அதிகப்படியான எண்ணெய் அல்லது வறட்சியைத் தடுக்கவும்,அடர்த்தியான, பளபளப்பான கூந்தலை உங்களுக்கு வழங்கவும் உதவுகிறது. ஹேர் மாஸ்க் நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி ஆகிய மூன்று இயற்கையான பொருட்களையும் இணைத்து, உங்கள் தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கும் சக்திவாய்ந்த ஹேர் மாஸ்க்கை உருவாக்கலாம். இந்த ஹேர் மாஸ்க்கை தயாரிக்க, நெல்லிக்காய் தூள், தேங்காய் எண்ணெய் மற்றும் நறுக்கப்பட்ட செம்பருத்தி இதழ்கள் ஆகியவற்றின் சம பாகங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட்டாக தயார் செய்துகொள்ள வேண்டும். அந்த பேஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும் முடியிலும் தாராளமாக தடவி, சில நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும். இந்த வழக்கமான பயன்பாடு முடி அமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மற்றும் முடி உதிர்தலை குறைக்க வழிவகுக்கும். நெல்லிக்காய், தேங்காய் எண்ணெய் மற்றும் செம்பருத்தி ஆகியவற்றை உங்கள் வழக்கமான முடி பராமரிப்பு வழக்கத்தில் சேர்ப்பது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுவதற்கு ஒரு சிறந்த இயற்கை சிகிச்சையாக இருக்கும். இந்த பொருட்கள் உச்சந்தலையை பராமரிக்கவும், முடியின் வேர்களை வலுப்படுத்தவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் மற்றும் ஒட்டுமொத்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுகின்றன. எந்த பக்கவிளைவுகளும் இல்லாத இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நிலையானது மட்டுமின்றி, ரம்மியமான கூந்தலை பராமரிப்பதற்கு நீண்டகால நன்மைகளையும் வழங்குகிறது.

Dec 08, 2023

.சருமத்தை பளபளப்பாக்கும் கீரை ஃபேஷியல்

சருமத்தில் படிந்துள்ள அழுக்கு, தூசி போன்றவற்றை அகற்றி.முகத்தை பளபளப்பாக மாற்றக்கூடிய கீரை ஃபேஷியல் பற்றி இங்கு விரிவாக காணலாம்தேவையான பொருட்கள்- கீரை - ஒரு கைப்பிடி அளவு; தேன் - 1டீஸ்பூன்; தக்காளி - 1; சர்க்கரை - 1 டீஸ்பூன்கீரை சருமத்தில் நீரேற்றத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.இதன் காரணமாக, கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.முகத்தில் தக்காளியை பயன்படுத்துவது மூலம் அதிகப்படியான எண்ணெய் நீக்குதல், இறந்த சரும செல்களை அகற்றுதல், முகத்தை பிரகாசமாக்குதல், சரும துளை அளவை குறைத்தல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.செய்முறைமுதலில் கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் கீரை பேஸ்டில் தேனை மிக்ஸ் செய்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இந்த கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை வாஷ் செய்ய வேண்டும். பின் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்பின் கீரை கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்சுமார்15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக அப்ளை செய்கையில், முகத்தில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

Dec 05, 2023

முகம் சுத்தமாக இருக்க...

.வெந்தயத்துடன் சிறிதளவு பால் சேர்த்து பேஸ்ட்டாக செய்து கொள்ளுங்கள். அதனை முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்திடுங்கள்15 நிமிடங்களில் கழுவிடலாம். இப்படி செய்வதால், சருமத்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும்.தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் பொலிவு பெரும்.பேஷ்வாஷை பயன்படுத்தி கழுவும்போது முகத்தில் இருக்கும் எண்ணெய் பிசுபிசுக்கள், கரும்புள்ளிகள் மறையும். முறையாக செய்தால் மட்டுமே அதற்குரிய பலனும் கிடைக்கும். இறந்த செல்கள் வெளிப்புற தோலில் தேங்கி, முகத்தை இறுக்கமாக வைத்திருக்கின்றன. முதலில் நீங்கள் முழுமையாக பேஷ்வாஷ் செய்ய வேண்டும். பின்னர், முகம்சுத்தமாக இருப்பதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே இறந்த செல்களை அகற்ற முடியும்.முகத்தை சுத்தம் செய்யும்போது ஒரு சிலருக்கு எரிச்சல் ஏற்படும். ஒரு சிலருக்கு சருமத்தில் பாதிப்புகள் உண்டாகும். அவற்றுக்கு முக்கிய காரணம் என்னவென்றால், முகத்தை கழுவும்போது அதிகமாக அவர்கள் தேய்த்து கழுவியிருப்பார்கள் அல்லது அதிகப்படியான மேக்கப் கிரீம்களை பயன்படுத்தியிருப்பார்கள். அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும்போது உங்கள் முகத்தின் வெளிப்புற தோலில் பாதிப்பு ஏற்பட்டு எரிச்சல் மற்றும் சரும பாதிப்புகள் உண்டாகும்.உங்கள் முகத்தின் தோல் அடிப்படையில் மட்டுமே மேக்கப் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். முகத்தில் அதிகப்படியான எண்ணெய் இருந்தால், தோலில் இருக்கும் எண்ணெய்யை அகற்றும் கிரீம்களை பயன்படுத்த வேண்டும். வறட்சியான தோல் என்றால், அதற்கேற்ப மேக்கப் கிரீம்களை பயன்படுத்தலாம். இதனை மாற்றி செய்யும்பட்சத்தில் வறட்சியான முகம் மேலும் வறட்சியாகவும், எண்ணெய் படிந்த முகம் மேலும் எண்ணெய் படிந்தவாறு இருக்கும்.

Nov 30, 2023

உடம்பில் உள்ள தேமல் மறைய

உணவில் அதிக அளவில் கசப்பு மற்றும் இனிப்பு வகைகளை தவிர்க்கவேண்டும்.வெந்தயம்,கருவேப்பிலை இரண்டும் சேர்த்து பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தேமல் மறையும்.கருஞ்சீரகத்தை பொடி செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர விரைவில் குணமாகும்.பாசிபருப்பு மாவுடன் வெட்டிவேர் கோரைக்கிழங்கு,வேப்பிலை சேர்த்து அரைத்து குளித்து வந்தால் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்..அருகம்புல் உடல் நலத்திற்கும், இரத்தத்தை சுத்தம் செய்யவும் மிக முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. அருகம்புல், கஸ்தூரிமஞ்சள்,மருதோன்றி  போன்றவற்றை அம்மியில் வைத்து அரைத்து பூச தேமல் விரைவாக குணமாகும்.நாயுருவி இலை சாறை தடவி வந்தால் தேமல், படை குணமாகும்.. கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் உடம்பிற்கு தேய்த்து குளித்து வரவும். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில்  கலந்து சர்க்கரை சேர்த்து குடித்தால் தேமல் குறையும். எலுமிச்சை தோலை உலர்த்தி தூளாக்கி சம அளவு பொரித்த படிகாரத்தை சிறிது தண்ணீர் சேர்த்து குழைத்து தேமலில் பூசி குளித்து வந்தால் தேமல் குறையும். எலுமிச்சை சாராய் தேமல்உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் பிறகு கழுவவேண்டும் மஞ்சள் இடித்து நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தேமல் மேல் தேய்த்து வந்தால் தேமல் குறையும். துளசி இலை, வெற்றிலை எடுத்து அரைத்து தேமல் மேல் பூசினால் தேமல் நீங்கும்.

Nov 29, 2023

ஆலிவ் ஆயில்  மசாஜ்

ஆலிவ் எண்ணெயில் காணப்படும் இய்ற்கையான கொழுப்புகள் முகம் மற்றும் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சரைசராக அமைகிறது. இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.ஆலிவ் எண்ணெய் கொண்டு சருமத்தில் இருக்கும் வடுக்கள் மற்றும் பருக்களின் தழும்புகள் மீது தவறாமல் மசாஜ் செய்வதன் மூலம் அழகான சருமத்தை பெறலாம்முகம் புத்துணர்ச்சிப் பெற முதலில் ஆலிவ் ஆயில் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்,பின், உப்பு அல்லது சர்க்கரையை நீரில் கலந்து ஸ்கரப் செய்யுங்கள். அதன்பின், வீட்டில் இருக்கும் கடலை மாவு, பால் மற்றும் மஞ்சள் தூள் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்கள். இதனை வாரம்2 அல்லது3 முறை செய்வதன் மூலம் உங்கள் சருமம் பொலிவடையும்தோல் பகுதிகள் வெள்ளையாக மாற பவுலில் கஸ்தூரி மஞ்சள் தூள்2 அல்லது3 ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆலிவ் ஆயில்3 அல்லது4 ட்ராப்ஸ்கள் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். நன்றாக கலந்ததை தோல் பகுதியில் இரவு நேரத்தில் தடவி வரவேண்டும். இரவு முழுவதும் வைத்திருந்தால் தோலிற்கு நல்ல மாற்றம் தெரியும். தடவியதை காலையில் வாஷ் செய்து கொள்ளலாம்.சிலருக்கு எப்போதும் உதடு வறண்ட நிலையிலே இருக்கும். இதற்கு பவுலில்1/2 ஸ்பூன் சுகர் ஸ்க்ரப் அதனுடன்2 அல்லது3 ட்ராப்ஸ் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து வறண்ட இடத்தில் தடவி வர வேண்டும். இந்த டிப்ஸை தொடர்ச்சியாக செய்யாமல் ஒரு நாள் விட்டு கூட செய்து வரலாம். வறண்ட பகுதி நல்ல மாற்றம் கிடைக்கும்.சிலருக்கு உடலில் வரி தழும்புகள்(stretchmarks) இருக்கும். இது போன்ற வரி தழும்பு மறைய பயோ ஆயில்(BioOil) மற்றும் ஆலிவ் ஆயிலை மிக்ஸ் செய்து தடவி வந்தால் கண்டிப்பாக அந்த தழும்பு கோடுகள் மறைந்துவிடும்.

Nov 28, 2023

முடி அடர்த்தியாக வளர ....

. மரவள்ளிக் கிழங்கு தோல் மற்றும் பல்வேறு சரும பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தருகிறது. இவற்றின் தோலை சீவி, கூழாக்கி, அதை, உங்கள் முகத்தில் அல்லது பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து கழுவினால் நல்ல பலனை அடையலாம்.இவை, முகத்தில் உள்ள அதிக எண்ணெய் பசையை வெளியேற்றுவதுடன், துளைகளை மூடுகிறது. இதனால், சருமம் புத்துணர்ச்சி அடைந்து, பொலிவைப் பெறுகிறது .வளி மண்டல நிலையாலும், குறைந்த அளவு ஊட்டச்சத்துகளாலும் நமக்கு தலை முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு நல்ல தீர்வை தருகிறது. இதற்கு மரவள்ளிக் கிழங்கை கூழாக்கி, தலையில் பூசி ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஊற விட்டு அலசி வரவும். இதேபோல் வாரத்திற்கு, இரண்டு முறை செய்து வந்தால், முடி முன்பை விட அடர்த்தியாக வளரும்.மரவள்ளிக் கிழங்கு எண்ணெய்  இதனை ஆங்கிலத்தில் burdock root oil என்று அழைப்பர். இது அழகு சாதன கடைகளில் கிடைக்கும். இது முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் மிக முக்கியமான எண்ணையாகும்வாழைப்பழத்தில் தேவைப்படும் அதிக கனிமச் சத்துக்களும், விட்டமின்களும் இருப்பதால் முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.பழுத்த வாழைப்பழம் - 1 மரவள்ளி கிழங்கு எண்ணெய் - 7 ஸ்பூன்,வாழைப்பழத்தை மசித்து அதனுடன் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் தடவி ஷவர் கேப்பினால் மூடிக் கொள்ளுங்கள்.அரை மணி நேரம் கழித்து தலைமுடியை ரசாயனம் அல்லாத ஷாம்புவினால் அலசுங்கள்.

1 2 ... 14 15 16 17 18 19 20 21 22 23

AD's



More News