25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


அழகுக் குறிப்பு

Oct 24, 2023

முகம் பளிச்சென்று இருக்க....

உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதன் தோலை முகத்தில் வைக்க வேண்டும்.  முகத்தில் வைத்து ஒரு 5 முதல் 10 நிமிடம் வரை ஊற வைத்த பின், குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இவ்வாறு உருளைக்கிழங்கை சமைக்கும் போதெல்லாம் செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.  உருளைக்கிழங்கில் இருந்து தோலை சீவிய பின், அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தக்காளியையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வந்தால், கருப்பாக காட்சியளிக்கும் முகம் விரைவில் வெள்ளையாகும். 

Oct 20, 2023

ரோஸ் வாட்டர்

ஆரோக்கியமான முறையில் சருமத்தின் அழகை அதிகரிக்கும் பொருட்களில் ஒன்றான ரோஸ் வாட்டரை குளிக்கும் போது நீரில் சிறிது கலந்து குளித்தால் சருமம் மென்மையாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும் மேலும் இது சருமத்தின். நிறத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், அதில் ஏற்படும் சுருக்கங்களை போக்கி சருமத்தை இளமையாக காட்டும்.

Oct 18, 2023

முடி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நீண்ட காலமாக அழகு சிகிச்சையில் பல்துறை மூலப்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முடி பராமரிப்புக்கு என்று வரும்போது, தேங்காய் எண்ணெயில் லாரிக் அமிலம் அதிகம் இருப்பதால், இது தலைமுடிக்கு அதிசயங்களைச் செய்கிறது. லாரிக் அமிலம் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் தொற்றுநோய்களிலிருந்து உச்சந்தலையைப் பாதுகாக்க உதவுகிறது. தேங்காய் எண்ணெய் முடி தண்டுகளில் ஆழமாக ஊடுருவி, அவற்றை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் புரத இழப்பைக் குறைக்கிறது. மேலும், இது உங்கள் தலைமுடி நீளமாகவும், பளபளப்பாகவும் இருக்க உதவுகிறது.தலைக்கு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம்.தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.

Oct 17, 2023

பற்களில் இருக்கும் மஞ்சள் கறை நீங்க....

பற்களின் மஞ்சள் நிறமானது சிரிப்பதற்கும், பாடுவதற்கும், பேசுவதற்கும் தயக்கத்தை ஏற்படுத்தும். பற்களை சரியாக கவனிக்காமல் இருப்பது, பற்களை சரியாக சுத்தம் செய்யாதது மற்றும் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும் பொருட்களை சாப்பிடுவது போன்றவை தான் இந்த மஞ்சள் நிறத்திற்கு மிக முக்கிய காரணமாகும். பற்கள் படிதல் வாய் துர்நாற்றம், சர்க்கரை இருக்கும் பானங்களை குடிப்பது, பான் மசாலா சாப்பிடுவது மற்றும் புகையிலை, மருந்துகள் அல்லது சோடா குடிப்பது போன்றவற்றாலும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்..பற்கள் மஞ்சள் நிறமாக மாறியிருந்தால், வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயங்களில் ஒன்று பேக்கிங் சோடாமற்றும் மற்றொன்று எலுமிச்சை சாறு ஆகும். பேக்கிங் சோடா பெரும்பாலும் மஞ்சள் பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சை சாறு மஞ்சள் கரை மற்றும் பிளேக் நீக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை பிரஷ்ஷில் எடுத்து பற்களில் தேய்க்கவும். இந்த வழியில், இரண்டு முதல் மூன்று பயன்பாடுகளால், நீங்கள் மஞ்சள் நிற பற்களில் இருந்து விடுபடலாம், மேலும் உங்கள் பற்கள் சுத்தமாக தோன்ற ஆரம்பிக்கும். ஸ்ட்ராபெர்ரிகளை நசுக்கி, பிரஷ் மூலம் பற்களில் தேய்ப்பது, பற்களில் படிந்து இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க உதவும்.உப்பு மற்றும் கடுகு எண்ணெயை (Mustard Oil) கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் சுத்தமாகும். இந்த இயற்கை தீர்வை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் வாய் துர்நாற்றத்திலிருந்தும் (Bad Breath) விடுபடுவீர்கள்.மஞ்சள் பற்களை சுத்தம் செய்வதில் பயனுள்ள பல பழங்களின் தோல்களும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பற்களில் தேய்க்கலாம், ஆரஞ்சு தோலை உலர்த்தி அரைத்து பயன்படுத்தலாம், பற்களுக்கு டீத் ஒயிட்னிங் பவுடர் தயாரிக்கப்படும் போது அதன் விளைவு தெரியும். இந்தப் பொடியில் தண்ணீர் கலந்து பற்களை சுத்தம் செய்யலாம்..

Oct 13, 2023

கருந்திட்டுக்கள் உள்ள முகத்திற்கு 3 கிரீம்

முதலில் குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100ml எடுத்து கொள்ளுங்கள். குங்கிலியத்தை இடித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் 100ml நல்லெண்ணெய் ஊற்றவும். பின் இடித்த குங்கிலியத்தை எண்ணெயில் சேருங்கள். குங்கிலியம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.. எண்ணெய் ஆறியதும் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் ஊற்றவும். பிறகு இந்த தண்ணீரில் வடிகட்டி வைத்து இருக்கும் எண்ணையை சேருங்கள். பின் இரண்டு பொருட்களும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இப்போ ஒரு கிரீம் போல கிடைத்துவிடும். இந்த கிரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.-இந்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பு பிக்மென்டேஷன் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை பழச்சாறு, பசும் பால் சேர்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்யுங்கள்  உங்களது முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள்.  முகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பின் கலந்து வைத்த கலவையை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவி விடுங்கள். அடுத்து பொடுதலை கீரையை கழுவி அரைத்து கொள்ளுங்கள். எலும்பிச்சை 1 தேக்கரண்டி பழச்சாறு எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.பின் கலந்து வைத்த பேஸ்ட்டை முகத்தில் பிக்மென்டேஷன் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்..மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை பயன்படுத்தினால் போதுமானது. இந்த குறிப்பை ஒரு வாரம் தொடர்ந்து அப்ளை செய்யுங்கள்..

Oct 11, 2023

இயற்கையான முறையில் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்க.....

இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நிரந்தரமாக போக்க உதவும்.ஆவாரம்பூ பொடி - 2 டேபிள் ஸ்பூன்.மைசூர் பருப்பு பொடி - 2 டேபிள் ஸ்பூன்பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்உருளைக்கிழங்கு - 1/2 கிழங்குமிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:.முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 உருளைக்கிழங்கினை அதனின் தோலினை நீக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.அடுத்துஅதில் 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை கலந்துகொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்திருந்த பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.இதனை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் கண்களை சுற்றி தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள்..இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய ஆரம்பிப்பதை காணலாம்.

Oct 10, 2023

சோற்றுக்கற்றாழை

சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய்விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு,நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும் மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை  ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.முகச்சுருக்கத்தை போக்கி முகத்துக்கு அழகுதரும், சோற்றுக்கற்றாழை.

Oct 05, 2023

வெயிட் குறைய வெந்தயத் தேநீர்  !

வெந்தயத்தில் தேநீர் தயாரித்து குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய டீயை தொடர்ந்து அருந்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.வெந்தயத்தை தேநீராக தயாரிக்க தேவையான பொருட்கள்1 தேக்கரண்டி வெந்தயம்1 கப் தண்ணீர்1 தேக்கரண்டி தேன்ஒரு கைப்பிடி துளசி இலைகள்தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)வெந்தய தேநீர் தயாரிக்கும் முறைஒரு சிறிய ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது தண்ணீர், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து, பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டவும். இப்போது, இதில் தேனைக் கலந்து குடிக்கவும். இந்த தேநீரை சூடாக குடித்தால் அருமையாக இருக்கும்.இந்த தேநீரை தினசரி அருந்தினால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் உடல் எடை குறையும் என்பது சிறப்பு. உடல் எடையை குறைக்க உதவும் இந்த வெந்தய டீ குடித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு பல நன்மைகளும் உண்டு.

Oct 03, 2023

முகம் வசீகரமாக இருக்க..

அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளையும் அகற்றும்.முகம் பளபளக்க புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.தினமும் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் பருக்கள் வராது.குளிர்ந்த நீர் சிறிதளவு அதனோடு பால் சேர்த்து துணியில் தொட்டு முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.  

Sep 29, 2023

தலை முடி சாப்டாக.....

தலை முடி பளபள என்று இருக்க வெந்தயம் ஊற வைத்து அரைத்துஅரைக்கும் போது செம்பருத்திப் போட்டு அரைத்தால் இன்னும்முடி சாப்டாக இருக்கும்வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று வளரஆரம்பிக்கும். வெந்தயம் உடம்பில் சூட்டை தணிக்கும் முடியில் உள்ள பிளவு இருந்தால்சரியாகி விடும் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 21 22

AD's



More News