25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், ஆகிய திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம், ஆகிய திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

விருதுநகர் மாவட்டத்தில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின் ((PMMSY) கீழ் புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டம், கொல்லைபுற மற்றும் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அ) புதிய மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல் திட்டத்தில் (Construction of New Grow Out Pond)ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் 1.00-ஹெக்டேர் அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவு பயனாளிகளுக்கு 1-ஹெக்டேர் அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.7,00,000-ல் 60 சதவீதம்   மானியமாக ரூ.4,20,000- வழங்கப்படும்.

ஆ) 300 சதுர அடி இடத்தில் கொல்லைப்புற மற்றும் புறக்கடை அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Backyard Ornamental Fish Rearing Unit)  மகளிர் பிரிவில்  02 அலகு இலக்கிற்கு பயனாளிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர். பயனாளிகளுக்கு 1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.3,00,000-ல் மகளிர் பிரிவு பயனாளிகளுக்கு 60 சதவீதம் மானியமாக ரூ.1,80,000- வழங்கப்படும்.

இ) 150 சதுர மீட்டர் இடத்தில் நடுத்தர அளவிலான அலங்கார மீன்கள் வளர்த்தெடுத்தல் திட்டத்தில் (Medium Scale Ornamental Fish Rearing Unit) பொதுப்பிரிவில் 1அலகிற்கு  பயனாளி தேர்வு செய்யப்படவுள்ளனர். பொதுப்பிரிவு பயனாளிகளுக்கு1-அலகிற்கு ஆகும் செலவினத்தொகை ரூ.8,00,000-ல் 40 சதவீதம் மானியமாக ரூ.3,20,000- வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் மற்றும் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் (ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, பட்டா, சிட்டா அடங்கல், நிலத்தின் வரைபடம்) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்டால், மூப்பு நிலை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும், திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் 114, B 27-1, வேல்சாமி நகர், என்ற முகவரியில் இயங்கிவரும் விருதுநகர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 04562 - 244707 தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News