25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >> "அல்ட்ராடெக் சுப ஆரம்பம்". >>


அழகுக் குறிப்பு

Nov 27, 2023

கைகளில் அதிகளவில் சுருக்கங்கள் இருந்தால்

வயதாகிக்கொண்டு இருந்தாலே அதிகளவில் கைகள் மற்றும் முகங்களில் சுருக்கங்கள் வர ஆரம்பித்து விடும்.. ஆனால் ஒரு சில பெண்களுக்கு சிறுவயதிலேயே கைகளில் இருக்கும் தோல் சுருங்கியதைப் போன்று தோற்றமளிக்கும்.இது பல காரணங்களால் ஏற்படும். நீரிழப்பு, கைகளை அடிக்கடி கழுவுதல், பாத்திரங்கள் கழுவுதல் போன்றவையால்கூடஏற்படும்.சில பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பை கைகளுக்கு கொடுப்பது இல்லை. ஆகவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து சருமத்தில் உள்ள சுருக்கத்தை போக்கலாம். ஒரு கப்பில்3,4 ஸ்பூன் சர்க்கரையும்,2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றையும் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.பின் நன்றாக கழுவிவிட்டு இந்த கலவையை தடவி5நிமிடம் மசாஜ் செய்யவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர தோலில் நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.பாத்திரத்தில்1 கப் பால், அதனுடன் பாதாம் எண்ணெய் இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.  இந்த கலவையில் 15- 20 நிமிடங்களுக்கு கைகளில் தடவி,1520 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் குளிர்ந்த தண்ணீரில் கழுவவும். இதை வாரத்தில் 4-5 முறை செய்துவர நல்ல மாற்றத்தை பார்க்கலாம்.அன்னாசி பழத்தை நன்றாக கூழ் போன்று பிசைந்து எடுத்துக்கொள்ளவும். பின் கைகள் முழுக்கத் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும்.பின் குளிர்ந்த நீரில் கழுவவும். இதை செய்து வர நல்ல மாற்றத்தை தோலில் பார்க்கலாம்.  தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் ஆலிவ் எண்ணெயை வைத்து கைகளில் மசாஜ் செய்யவும். மீண்டும் காலையில் வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்ய நல்ல மாற்றத்தை பார்க்கலாம். வாழைப்பழத்தை நசுக்கி கூழ் போன்று செய்து கொள்ளவும். அதை கைகளில் தடவி காய்ந்தவுடன் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்துவர கைகளில் உள்ள சுருக்கமானது குறைய ஆரம்பிக்கும்.  

Nov 26, 2023

பித்தவெடிப்பு  சரியாக...

பாதங்களில் ஏற்படும் சிறிய பிளவுகளுக்கு, பித்த வெடிப்பு என்று பெயர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், அசுத்தம் காரணமாகவும், இந்த வெடிப்புகள் ஏற்படுகின்றன. பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.தோல் வறட்சியும், உடல் எடையும் தான் பித்தவெடிப்புக்கு முக்கிய காரணம் நம் உடலில் நீர்ச்சத்து குறையும்போது தோல் வறண்டு பாதத்தில் வெடிப்பு ஏற்படும்- இதனால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்..வெதுவெதுப்பான தண்ணீரில் தினமும் பாதத்தை கழுவி வந்தாலே, வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் சுத்தம் செய்த பிறகு தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பெட்ரோலியம் ஜெல்லி தடவினால் முழுமையாக குணமாகும்.வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்புச் சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால் வெடிப்பு நீங்கும். தரம் குறைவான காலணிகளை பயன்படுத்தினாலும் சிலருக்கு வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகள் வாங்கும் போது தரமானதாக பார்த்து வாங்க வேண்டும்.விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய் சமஅளவில் எடுத்து கொண்டு அதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல குழைத்து பாதத்தில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் வெடிப்பு சரியாகி விடும். வேப்ப எண்ணெயில் சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல குழைத்து வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம்.

Nov 24, 2023

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய....

தர்பூசணி பழச்சாறு, பயித்தமாவு இரண்டையும் கலந்த கலவையை முகத்தில் பூசி வந்தால் முகம் புதுப்பொலிவு பெறும்.துளசி இலையுடன் கற்பூரம் சேர்த்து அரைத்து முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு குறையும்.பாதாம் எண்ணெய்யுடன் தேன் கலந்து நன்றாகக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்மறையும். முகம் பிரகாசமாகும்.பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.எலுமிச்சை பழச்சாறு மற்றும் கடலெண்ணெய் சம அளவு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.பாலுடன் கோதுமை தவிடை கலந்து அதை கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி வந்தால் சில நாட்களில் கரும் புள்ளி காணாமல் போய்விடும்.வெள்ளரிச் சாறை முல்தானி மட்டியுடன் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். வாரம் ஒரு முறை இதே போல் செய்து வந்தால் நாளடைவில் கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து முகத்தில் தேய்த்து காய்ந்ததும் அவற்றின் மீது தண்ணீர் தடவி தேய்த்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.சந்தனம் மற்றும் மஞ்சள் தூள்களை சம அளவு எடுத்து அதனுடன் பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி பின்னர் தண்ணீரால் கழுவ வேண்டும்.உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும்.

Nov 23, 2023

ஆயில் புல்லிங்

சுத்தமான நல்லெண்ணெய்10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் சரியாகும்.மற்றும்பற்கள்என்றும்உறுதியாகஇருக்கும்.செரிமான பிரச்சனைகள் சரியாகும், அமைதியான நீண்ட உறக்கம் கிடைக்கும். நல்ல மனநிலை உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் முறையை தொடர்ந்து பின்பற்றி வர பிரச்சனைகள் சரியாகும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். பலரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனையாக இருப்பது பார்வை கோளாறு. இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.வயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படும், எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை குணப்படுத்தும்.

Nov 20, 2023

 தொப்பையை குறைக்க easy way

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் நீங்கி தொப்பை குறையும். வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை சூடாக்கி குடித்தால் தொப்பை குறைய உதவும். எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு மற்றும் தேன் கலந்து குடிக்க தொப்பை குறையும். உணவுகளில் இஞ்சி சேர்ப்பது வயிற்று தொப்பை குறைய உதவியாக இருக்கும். தினம் காலை ஒரு டம்ப்ளர் க்ரீன் டி குடிப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம். உணவில் அதிகமான உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பதன் மூலம் தொப்பையை குறைக்கலாம்.

Nov 19, 2023

உடல் எடையைக் குறைக்க வாழைத்தண்டு ஜூஸ்

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க விரும்பினால் வாழைத்தண்டு ஜூஸை உங்கள் உணவு முறையில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம் வாழைத்தண்டு உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். வாழைத்தண்டில் காணப்படும் சிறப்பு வகை நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

Nov 17, 2023

முகம் பளபளப்பாக கொத்தமல்லி சாறு

தினமும்இரவில் படுக்கும்முன் கொத்தமல்லிசாறும், எலுமிச்சைசாறும் கலந்துஉதடுகளில் தடவிக்கொள்ளவும். கருப்பானஉதடுகள் பளபளப்பாகும். மூக்கைச் சுற்றிகரும்புள்ளிகள் இருந்தால்அங்கும் இந்தகலவையை தடவிஅரை மணிநேரம் ஊறவைத்து குளிர்ந்தநீரில் முகம்கழுவலாம். தொடர்ந்துசெய்து வரநன்மைகள் இருக்கும். 

Nov 16, 2023

முகப்பரு வராமல் இருக்க....

பருக்கள் ஏற்பட மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவு பழக்கத்தைச் சரி செய்வதன்  மூலமாக  மலச்சிக்கல்  வராமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்..பொடுகுத் தொல்லை, நீளமாக நகம் வளர்த்தல், முறையற்ற உணவுப்பழக்கம், உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்..கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லி ட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.கொழுப்பு நிறைந்த அசைவ  உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை  போன்றவற்றையும் தவிரப்பது நல்லது.

Nov 13, 2023

எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாத. 'பீட்ரூட் - சோளமாவு' ஃபேஷியல்

சரும ஆரோக்கியத்தில் பீட்ரூட் அத்தியாவசிய வேர் காய்கறியாகும். அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட், வைட்டமின், மினரல் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் சருமத்தில் அதிசயங்களை ஏற்படுத்தக்கூடும்தேவையான பொருட்கள்-பீட்ரூட் - 1, சோள மாவு - 2 டீஸ்பூன்; தண்ணீர் - தேவையான அளவு; பாதாம் எண்ணெய் - 2 டீஸ்பூன்செய்முறைமுதலில் பீட்ரூட்டை தோலுரித்து, சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும். அதை மிக்ஸி ஜாரில் போட்டு ப்யூரி பதத்திற்கு வரும் வரை நன்கு அரைக்க வேண்டும்.பின் அதை கடாய்க்கு மாற்றி, மிதமான நெருப்பில் சூடுபடுத்த வேண்டும்.அத்துடன் சோள மாவை மிக்ஸ் செய்து நன்கு கிளற வேண்டும்.கலவை நன்கு கட்டியாக வருவதற்கு, கூடுதல் சோள மாவும் சேர்த்துக்கொள்ளலாம்கலவையை சில நிமிடங்கள் குறைவான நெருப்பில் வைத்துவிட்டு அடுப்பைஅனைத்து விடலாம். கலவை ஆறியதும் பாதாம் எண்ணெயை செர்த்து நன்கு கலக்க வேண்டும்.பின், கிளாஸ் ஜாருக்கு மாற்றி, பிரிட்ஜில் வைத்து விடலாம்.இந்த ஜில் கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை சுத்தமாக வாஷ் செய்ய வேண்டும். பின், முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.சுமார்20 நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். செயற்கை சிகிச்சையில் ஏற்படக்கூடிய வீக்கம், வலி, அலர்ஜி போன்ற எவ்வித பக்கவிளைவுகளும் பீட்ரூட் ஃபேஷியலில் ஏற்படாது.

Nov 10, 2023

சரும பொலிவுக்கு உதவும் ஆரஞ்சு குளியல் பொடி

சரும பொலிவுக்கு உதவும் குளியல் பொடி ஒன்றினை வீட்டிலேயே தயார் செய்யலாம்.தேவையான பொருட்கள்!ஆரஞ்சு பழம் - 2 | கடலை மாவு - 1 ஸ்பூன் | அதிமதுரம் - 2 துண்டு | மஞ்சள் - K ஸ்பூன் | ரோஜா இதழ்கள் கைப்பிடி | ரோஸ் வாட்டர் - போதுமான அளவுஆரஞ்சு பழத்தில் இருந்து தோலை மட்டும் பிரித்து எடுத்து சூரிய ஒளியில்2 நாட்களுக்கு நன்கு உலர வைக்கவும் இதனுடன் ரோஜா இதழ்களைய உலர வைக்கலாம். நன்கு உலர வைத்த அதிமதுர துண்டினை இடித்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும் . மிக்ஸி ஜார் ஒன்றில் உலர வைத்த ஆரஞ்சு தோல் ரோஜா இதழ், அதிமதுரப் பொடி மஞ்சள் கடலை மாவு சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள குளியல் பொடி தயார்இந்த பொடியினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துசோப்புக்குமாற்றாகசருமத்திற்குதேய்த்துகுளித்துவரவும்.சருமத்தின் கூடுதல் எண்ணையை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த குளியல் பொடி ஆனது, எண்ணெய் வடிதல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை திறம்பட அகற்றும் பண்பு கொண்ட இந்த பொடி ஆனது, சரும துளைகளை சுத்தம் செய்வதோடு,இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமம் பெறவும் உதவுகிறது.

1 2 ... 14 15 16 17 18 19 20 21 22 23

AD's



More News