25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 28, 2025

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்  (26.05. 2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு என். ஓ.சுகபுத்ரா , I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள் நோயாளிகள் பிரிவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டு, தமிழ்நாடு அரசின்  மருத்துவத்துறை சார்ந்த திட்டங்கள், அதன்  செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவமனை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

Jun 27, 2025

குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு

 விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குந்தலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்  (26.6.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.மேலும், காலை உணவு மற்றும் மதிய உணவிற்கு பயன்படுத்தப்படும், காய்கறிகள், மளிகைப் பொருட்கள், முட்டைகளின் தரம் குறித்தும்,  மாணவர்களுக்கு தரமான உணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் நல்ல முறையில் கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 90 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு கல்வி பயின்று வரும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்தும், கற்பிக்கப்படும் முறை குறித்தும்,  கல்வி செய்பாடுகள் குறித்தும், மாணவர்களின் வருகைப் பதிவு குறித்தும் ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் திரு.ஜே.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல் அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.ஜெகதீசன்  அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இருந்தனர்.

Jun 27, 2025

சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  (26.06.2025) சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை மற்றும்  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,,IAS,அவர்கள்தலைமையில்நடைபெற்றது.போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் 1989 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஜூன் 26 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.போதைப்பொருள் பயன்பாடு இல்லாத உலகத்தை அடைவதற்கான நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது, மேலும் இது உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது. சட்டவிரோத போதைப்பொருள் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரச்சனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.அதன்படி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், “நான் போதைப்பொருட்கள் பழக்கத்தினால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். குழந்தைகளையும், நண்பர்களையும் போதைக்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்துவேன். மாவட்டத்தில் போதை பொருட்களை வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்”  என்ற கருப்பொருளை அடிப்படையாக  கொண்ட கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.பின்னர், “நான் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன், போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்கு அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன்“ என்ற  விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் அனைத்து அரசு  அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து, போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொ) மரு.பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு.மதன்குமார், பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2025

கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் வி.பி.எம்.எம். கல்லூரியில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளியில் (26.06 2025) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா , I A S, அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார்.

Jun 27, 2025

025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர் , அவர்கள் வெளியிட்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,  (26.06.2025) 2025-26-ம் நிதியாண்டிற்கான ரூ.32,019.52 கோடி மதிப்பிலான கடன் திட்ட அறிக்கையினை  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள், தனியார் துறை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு கடன் சங்கங்கள் என மொத்தம் 318 வங்கிக் கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கான 2025-26 நிதியாண்டிற்கான கடன் திட்ட இலக்கு நிர்ணயித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வெளியிடப்பட்டது.இந்த கடன் திட்டங்களில் இலக்கானது அனைத்து வங்கிகளின் கடந்த நிதி ஆண்டின் நிதி நிலைமையின் அடிப்படையிலும், நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட இலக்கினையும் அடிப்படையாகக் கொண்டு  உருவாக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை செயலரின் அறிவுறுத்தல்படி இந்த ஆண்டு கடன் திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிதியாண்டின் கடன் இலக்காக ரூபாய் 32019.52 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னுரிமை கடன்களுக்கான இலக்காக ரூபாய் 20,475.91 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் இலக்கானது கடந்த நிதியாண்டின் இலக்கை விட ரூபாய் 2846.76 கோடி அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதில் விவசாய கடனுக்காக ரூபாய்  13290.90 கோடியும், தொழில் வளர்ச்சிக்காக ரூபாய் 6582.97 கோடியும், கல்விக் கடனாக ரூபாய் 38.11 கோடியும், வீட்டுக் கடனாக ரூபாய் 204.11 கோடியும், சமூக கட்டமைப்பு கடனாக ரூபாய் 1.40 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூபாய் 3.47 கோடியும், நலிவடைந்தோர் வளர்ச்சி கடனாக ரூபாய் 8556.01 கோடியும், பிற முன்னுரிமை கடனாக ரூபாய் 319.79 கோடியும்  மற்றும் மற்ற கடன்களாக ரூபாய் 11543.62 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மொத்த முன்னுரிமை கடன் திட்டத்தில் விவசாயத்திற்கு 64.91 சதவீதமும், தொழில் வளர்ச்சிக்கு 32.14 சதவீதம் மற்றும் இதர கடன்களுக்கு 2.95 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டமானது வட்டார அளவிலான வங்கி கிளைகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும்.மேலும் இந்த கடன் இலக்கினை முறையாக செயல்படுத்திட மாவட்ட முன்னோடி வங்கியின் மூலம் மாதம் ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கியாளர் கூட்டமும் மற்றும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை முன்னோடி வங்கி மேலாளரின் தலைமையில் வட்டார அளவிலான வங்கியாளர்கள் கூட்டமும் நடத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படும். மேலும் மாதம் ஒருமுறை கடன் வழங்கும் விழா மாவட்ட அளவில் நடத்தப்படும். சரியாக செயல்படாத வங்கிகளின் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.ஜார்ஜ் ஆண்டனி மைக்கேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா, இந்திய ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் திரு.தர்மராஜ்,  விருதுநகர் மாவட்ட நபார்டு வங்கியின் துணை பொது மேலாளர் திருமதி அனுசுயா எலிசபெத், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் திரு. புலுசு வெங்கடரமண ரவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன் மற்றும் அனைத்து வங்கியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 27, 2025

முன்னாள் படைவீரர்கள் , படைவீரர்களை சார்ந்தோர்கள் ஓய்வூதியம் தொடர்பான குறைதீர்க்கும் முகாம்.

விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் அறிவது. முன்னாள் படைவீரர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பான (Sparsh Outreach programme - Mobile van) குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பான முகாம் 01.07.2025 மற்றும் 02.07.2025 ஆகிய நாட்களில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் / படைவீரர்களை சார்ந்தோர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு ஓய்வூதியம் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jun 26, 2025

வெம்பக்கோட்டை சாலையில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் நகராட்சி, வெம்பக்கோட்டை சாலையில்  (25.06.2025) கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன்  கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில்  சாத்தூர் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.பின்னர், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2023-2024 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறைக் கட்டிடத்தை  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழகத்தில் அரசின் திட்டங்கள் பொதுமக்களுக்கு எளிதிலும், விரைவாகவும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துதற்கு பல்வேறு திட்டங்கைள வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள்.அதனடிப்படையில், விருதுநகர் மாவட்;டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் பல்வேறு மேம்பாட்டு நிதித்திட்டங்களின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் தமிழக அரசு அதிகமான நிதிகளை ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டப் பணிகளை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல், பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை எளிதாக பெற்று பயன்பெற ஏதுவாகவும், அரசு அலுவலர்கள் சிரமமின்றி பணிபுரிய வசதியாகவும் பல்வேறு நிதித்திட்டங்களின் கீழ் நிதிகளை ஒதுக்கீடு செய்து, பல்வேறு துறைகளுக்கு நவீன வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் இன்று வெம்பக்கோட்டை சாலையில், கலைஞர் மேம்பாட்டுத்திட்டம் 2025-2026-ன்  கீழ், ரூ.6.79 கோடி மதிப்பீட்டில் சாத்தூர் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.இந்த புதிய பேருந்து நிலையமானது, 20 பேருந்து வழித்தடம், 24 கடைகள்,ஒரு உணவகம், ஒரு ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள், ஒரு இருசக்கர வாகன காப்பகம், 3 பயணிகள் காத்திருப்பு அறைகள், 2 அலுவலக அறைகள், ஒரு தாய்மார்கள் பாலுட்டும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 1.82 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ளன.மேலும், சாத்தூர் நகராட்சியில், மேலக்காந்தி நகர் தொடக்கப்பள்ளியில் மாநில நிதிக்குழு பள்ளி மேம்பாட்டு மானியம் 2025-2026 திட்டத்தின் கீழ், ரூ.86 இலட்சம் மதிப்பீட்டில் 4 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளது.இந்த வகுப்பறை கட்டடமானது தரைத்தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் அளவிலும், முதல் தளத்தில் இரண்டு வகுப்பறைகள் 132.35 சதுர மீட்டர் பரப்பளவிலும் கட்டப்பட்டுள்ளது.இதுபோன்ற உட்கட்டமைப்புக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழ்நாடு  முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவகுமார், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, சாத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி ரா.ஜெகதீஸ்வரி, சாத்தூர் நகராட்சி பொறியாளர் திருமதி வி.சத்திய நாகராணி, சாத்தூர் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.பா.அசோக், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Jun 26, 2025

Coffee With Collector” என்ற 206-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  (25.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனுக்கள் அளித்து விருதுநகர் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி கட்டணத்திற்கான உதவிகள் பெற்று பயனடைந்த மாணவர்களுடனான 206-வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர்  முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் உயர்கல்வி பயில்வதற்காக கல்வி கட்டணத்திற்கான உதவித்தொகை வேண்டி மனு அளித்த 14 மாணவர்களுக்கு ரூ.1,65,778/- மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து  கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 206-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம், அவர்களுடைய இலட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்கள் உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.பள்ளி கல்லூரி படிப்பு என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும். எனவே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பின் மூலம் வாழ்க்கைக்கான பல அனுபவங்களை கற்றுக் கொள்ளலாம். அனுபவங்களில் இருந்து கிடைக்கும் கல்விதான் சிறந்த கல்வியாகும்.மத்திய மாநில அரசுகளின் மூலம் நடத்தப்பெறும் பல்வேறு போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொண்டு, அதில் முழு ஈடுபாட்டுடன் அந்த இலக்கை நோக்கி சென்றால் வெற்றி பெற முடியும். மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கல்லூரி மாணவ மாணவர்கள் போட்டித் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது  தொடர்பாக மாணவ, மாணவிகளிடையே மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.இந்த சந்திப்பில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்ததற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்

Jun 26, 2025

விருதுநகர் மாவட்டம் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவராக  (25.06.2025) பொறுப்பேற்றுக்கொண்டார்.இவர், 2017-ஆம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் ஆவார். இவர் முதன் முதலில் கடந்த 2018-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டத்தில் இராமநாதபுரம் சார் ஆட்சியராகவும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வருவாய்), திருவள்ளூர்  மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியராகவும்(வளர்ச்சி), அதனைத் தொடர்ந்து திருநெல்வேலியில் மாநகராட்சி ஆணையராகவும் முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.தற்போது விருதுநகர் மாவட்டத்தின் 25 ஆவது மாவட்ட ஆட்சித்தலைவராக மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள்  (25.06.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.

Jun 26, 2025

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்,மாவட்ட அளவில் பள்ளி , கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

தமிழ் வளர்ச்சித் துறையின்  2021-2022 ஆம் ஆண்டிற்கான  மானியக்கோரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.இவ்வறிவிப்பிற்கிணங்க, 30.06.2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும், 01.07.2025 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டியும் விருதுநகர் ஹாஜி பி.செய்யது முகமது ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும் கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பகலிலும்  நடத்தப்பெறவுள்ளன.  அரசு/ தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு/ தனியார் / அரசு உதவி பெறும்  கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/  பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப்போட்டிகளில்  பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக்  கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு 1.அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி 2. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 3.அரசியலமைப்பின் தந்தை கல்லூரி மாணவர்களுக்கு  1.சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்  2.அம்பேத்கர் எழுதிய நூல்கள், 3.அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி, 4.அம்பேத்கரும் பௌத்தமும் ஆகிய தலைப்புகளில் அம்பேத்கர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டி தலைப்புகள்: பள்ளி மாணவர்களுக்கு  1. பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், 2.திராவிடம், 3.நெஞ்சுக்கு நீதி. கல்லூரி மாணவர்களுக்கு   1.அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், 2.குறளோவியம், 3.கலைஞரின் எழுதுகோல் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகள்  நடத்தப்பெறவுள்ளன.பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000-, இரண்டாம்பரிசு ரூ.3000-,  மூன்றாம் பரிசு ரூ.2000-  என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் மட்டும்,  தங்கள் பேச்சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு  பேர் தனியாகத் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசாக ரூ.2000-  என்ற வீதத்தில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள்  தெரிவித்துள்ளார்.

1 2 ... 74 75 76 77 78 79 80 ... 121 122

AD's



More News