25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jan 17, 2024

விவசாயிகள் வேதனை, கண்மாய் ஷட்டர் கசிவுகளால், வீணாகும் தண்ணீர்.

தொடர் மழையால் கண்மாய் பெருகி மறுகால் பாய்கிறது. இதனால் பாசனப்பகுதி, நெல்விவசாயிகள் தற்போதைய தண்ணீர் தேவைக்கு பிரச்சனைஇன்றி உள்ளனர். இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைக்குளம்கண்மாயில் ஷட்டர்களில் கசிவால் தண்ணீர் வீணாக வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோடை விவசாயத்திற்கு தேக்கி வைக்க வேண்டிய கண்மாய் நீர் கலுங்கல் அருகேஉள்ள இரண்டு ஷட்டர்களில் உள்ள கசிவுகளால் கண்காணிப்பின்றி பெருமளவு வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Jan 16, 2024

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை அடுத்து இராஜபாளையம் பகுதி வாகன ஓட்டுனர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவல்லி தலைமையில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Jan 16, 2024

கண்ணாடி கூரை ரயில் சோதனை ஒட்டம்

22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஒட்டம் மதுரையில் இருந்து கொல்லம் வரை 2 நாட்கள் நடந்தது. இதில் கண்ணாடி கூரை கொண்ட விஸ்டா டோம் என சுற்றுலா பயணிகளுக்கான பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றி அடைந்த பின் 18 முதல் 22 பெட்டிகளை கொண்ட ரயில்களை மதுரை கொல்லம் இடையே இயக்க முடியும், கூடுதல் பயணிகள் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். மதுரையில் இருந்து கொல்லத்திற்கு இராஜபாளையம் வழியாக சுற்றுலா பயணிகளுக்கான விஸ்டா டோம் எனும் கண்ணாடி கூரை பெட்டிகளுடன் கூடிய ரயில் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. 

Jan 11, 2024

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,TWENTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAMCordially request your gracious presence on the occasion of TWENTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET.

Jan 08, 2024

இடைவிடாத மழையினால் சாய்ந்த நெற்பயிர்கள்.விவசாயிகள் வேதனை

இராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.  இத்துடன் வானிலை அறிக்கையும் ஒரு வாரத்திற்கு பரவலான மழை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பருவம் தவறிய இந்தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நெற் பயிர்கள் மண்ணில் சாய்ந்து வருகிறது. விவசாயிகளை பெரிதும் பாதித்து வருகிறது. அறுவடையை எதிர்பார்க்கும் நேரத்தில் ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற வருத்தத்தில் உள்ளனர்.

Jan 07, 2024

இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் அறக்கட்டளை 39-ஆம் ஆண்டு விழா I

இராஜபாளையம் மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில் 07.01.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00மணிக்கு நடைபெற்றது. பொதுமக்களுக்கான சிவபுராணம் எழுதும் போட்டி 06.01.2024 சணிக்கிழைைம பிற்பகல் 3 மணிக்கு மறக்கண்ணு செட்டியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இன்னிசை, பேருரை, நூல் வெளியீடு, பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது திரு கொ.பூமிநாதன் அவர்கள் தலைமையில் திரு.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள் முன்னிலையில், திரு. இரா.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் சங்க இலக்கியங்களில் சமய வளர்ச்சிக்கான வழிபாட்டு முறைகளும்,சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளும் நூல் வெளியிடப்பட்டது. திரு.ஆ.சங்கரலிங்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.மன்றத் தொடர் பணிகள்இல்லந்தோறும் திருமுறை ஓதுதல் நூல்கள் வெளியீடு, மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி, அன்றே மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு வழிபாட்டுப் பிரசாதம், வேஷ்டி, சேலை, பழம் வழங்கி வருதல் தேவார இன்னிசை பெரியபுராணம் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசளித்தல், மாதந்தோறும் ஆங்கில மாத இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துதல் மேலும் விபரங்களுக்கு இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் என்னும் Youtube விழியத்தைக் காண  E.mail: sekkizhar1986@gmail.com

Jan 07, 2024

இராஜபாளையம் பச்சமடம் ஊருணியில் செத்து மிதந்த ஆமைகள்

இராஜபாளையம் நகராட்சி பச்சமடம் குடியிருப்பு பகுதியில் ஊருணி உள்ளது. இதில் மூன்று நாட்களுக்குள் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி குப்பை, கழிவுகள் கலக்காததாக உள்ளது. இதனால் மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமைகள், நீர் பறவைகள் என இயற்கையான சூழல் நிலவியது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து நடைப்பயிற்சி இடமாக மாற்ற ரூ.75 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கின. பெரும்பாலான பணிகள்முடிந்து, தற்போது வரை பாதுகாப்பு வேலி அமைக்காததால் திறந்தவெளி பார், சூதாடும் இடமாக மாறி உள்ளது. ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை இரு நாட்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கப்படும் என்றனர்!

Jan 04, 2024

சென்னை சலானி ஜீவல்லரி சார்பில் தங்க, வைர, வெள்ளி நகை கண்காட்சி

சலானி ஜீவல்லரி சார்பில் தங்கம், வைரம், நகைகளுக்கு மூன்று நாள் கண்காட்சிநம்நகரில் உள்ள தென்காசி ரோடு ,அமிழ் ஹோட்டலில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியல் மணமகள் திருமண நகைகள், தினமும் அணிய லைட் வெயிட் கலெக்சன், பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், டைமண்ட் நகைகள், தெய்வீகமான டெம்பிள் நகைகள்,வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.ஜனவரி 7ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறும். இக் கண்காட்சியை திருமதி ஆனந்தி அவர்கள் துவக்கி வைத்தார். காலை 10.00 மணி முதல் இரவு 8 .30 மணி வரை ஜனவரி 5,6,7,ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கண்காட்சியில் பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

Jan 02, 2024

திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து,திருச்சியில்20,000   கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, மேலும் பல  புதிய  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடிஅவர்களின் இந்த வருட முதல் பயணம் திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.வணக்கம் தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி உரையை தொடங்கினார். தற்போது துவக்கப்படும் 20000 கோடி ரூபாய் திட்டங்களால், தமிழகம் வளர்ச்சி அடையும். இத்திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் புதிய திட்டங்களால், தமிழகம் இன்னும் விரைவான வளர்ச்சி பெறும். உ அதன் வாயிலாக நாடும் வளர்ச்சி அடையும். பத்து ஆண்டுகளில், மத்திய அரசானது, கடலோர பகுதிகள் முன்னேற்றம், மீனவர்களின் நலன் போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. தமிழ் இளைஞர்களின் மீது, எனக்கு அபார நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .

Jan 01, 2024

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இராஜபாளையம் அணி வெற்றி

இராஜபாளையம் சிட்டி பேஸ்கட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில் திருநெல்வேலி, கோவை, தேனி மதுரை பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இராஜபாளையத்தில் நடந்த மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டியில் திருவேங்கடம் அணியை வென்று இராஜபாளையம் அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் உதவி ஊார்க்காவல் படை தளபதி அஜய் கார்த்திக் ராஜா, தென்காசி ஏரியா கமாண்டர் பிரதாப் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசு தொகை வழங்கினார் ஏற்பாடுகளை இராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம்சிங் ராஜா செய்திருந்தனர்

1 2 ... 11 12 13 14 15 16 17 18 19 20

AD's



More News