போக்குவரத்து நெரிசல் காரணமாக புதுபஸ் ஸ்டாண்டிலிருத்து காந்தி கலைமன்றம் அருகே நகர் பகுதி வழியில்செல்வதற்கு பதில் சங்கரன்கோவில் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் எதிர் பகுதி தென்காசி ரோட்டில் இணைப்புச் சாலை அமைக்க 2024 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டப்பட்டது.2.10 கி.மீட்டர் துாரத்திற்கு 10 மீட்டர் அகலத்தில் ரெண்டு பெரிய பாலம் மற்றும் 16 சிறிய நீர்வழி பாலங்களுடன் 2.10 கிலோ மீட்டர் நீளத்தில் புதிய சாலை அமைக்கப்பட்டது.அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன்இந்த இணைப்பு சாலையை திறந்து வைத்தார். ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன் கோவில்ரோட்டில் அமைந்துள்ளதால் மதுரை, தென்காசியில் இருந்து வரும் வாகனங்கள் வழித்தடங்களில் ஊருக்குள் சென்று நெரிசல் ஏற்படுத்தாத வண்ணம் மக்களுக்கு இடையூறு இன்றி புது பஸ் ஸ்டாண்டுக்கு சென்று அதே வழியில் திரும்பி செல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது.
முடங்கியாறு ரோடு ராஜபாளையம் நகரின் மையத்திலிருந்து மேற்கு செல்லும் பிரதான சாலை ஆக்கிரமிப்பாளர்களால். போட்டி போட்டு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. கண்டுகொள்ளாமல் உள்ள ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளால், சாமானிய மக்கள் தினமும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.ரோட்டின் எல்லை தெரியாத அளவு ,ராஜபாளையம் நகரின் மையப்பகுதியான காந்தி சிலை ரவுண்டானாவில் தொடங்கி எம். ஜி.ஆர்சிலை வரை அகலமான முடங்கியார் ரோடு பல்வேறு ஆக்கிரமிப்பாளர்களால் மறைக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் நகராட்சி புதிய குடியிருப்புகளால் ஒவ்வொரு நாளும் அதிக வாகன போக்குவரத்தை எதிர் கொண்டு வருகின்றன. முதியோர், பாதசாரிகள் நின்று ஒதுங்கி செல்ல வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகளால் சாமானியர்கள் சங்கடத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை நிறுத்தி வைத்திருப்பது போன்ற அவலங்கள் தினமும் நிகழ்ந்து வருகிறது.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் 02.03.2026 திங்கள்கிழமை (மாசி மாதம் 18ம் தேதி) பஞ்சமூர்த்தி புறப்பாடு காலை 6.15- 6.45 மணிக்குள் மீன லக்னத்தில் தீர்த்தவாரி, மாலை 7.00 மணிக்கு பஞ்ச மூர்த்தி புறப்பாடுமண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா - ஸ்ரீமதி R.நளினா ராமலெக்ஷ்மிஸ்ரீ S.R.ஸ்ரீராம் ராஜா - ஸ்ரீமதி S.சாரதா தீபாபஜன் மாலை 6.00 மணிநிகழ்த்துபவர்: திரு. S.S. மாடசாமிராஜா அவர்கள் தலைமையில் வாழும் கலை அமைப்பினர்
01.03.2026 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 17ம் தேதி) தேர்த்திருவிழாபல்வேறு வாத்யமேள தாளங்களுடன், காலை 6.00 மணிக்கு மேல் கும்ப லக்னத்தில் தேர்த்திருவிழாமண்டகப்படிதாரர்கள்ராம்கோ சிஸ்டம்ஸ் லிமிடெட்இரவு 7.35 மணிக்கு தேர் உலா பாதையில் வலம் வருதல்.மண்டகப்படிதாரர்கள்ராம்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணி11 மிருதங்க கலைஞர்கள் பங்குபெறும் "மிருதங்க நாதமயம்"நிகழ்த்துபவர்: "மதுர கலாமணி", "லய ஜோதி" Dr. K. தியாகராஜன்முதல்வர் (ஓய்வு), ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள்.28.02.2026 சனிக்கிழமை (மாசி மாதம் 16ம் தேதி) தெப்போற்சவம்இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்மண்டகப்படிதாரர்கள்ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்சொற்பொழிவு மாலை 6.00 மணிக்குதலைப்பு : "சக்தியும் சிவனும்"நிகழ்த்துபவர்: முனைவர் சொ. சிதம்பரநாதன் (பொருளியல் துறைத் தலைவர். இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள்,27.02.2026 வெள்ளிக்கிழமை (மாசி மாதம் 15ம் தேதி) திருக்கல்யாணம்ஏகாதசி திதியும், திருவாதிரை நக்ஷத்திரமும், ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09.00 - 10.30 மணிக்குள் மேஷ லக்னத்தில் ஸ்வாமி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.இரவில் ஸ்வாமி, அம்பாள் பூப்பல்லாக்குமண்டகப்படிதாரர்கள்தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: செல்வி M.S. ஷண்முகப்ரியா,ஸ்ரீமதி பாலாமணி ஈஸ்வர் AIR அவர்களின் சிஷ்யை, ஸ்ரீமதி ரெங்கநாயகி அவர்களின் மகள்) மற்றும் குழுவினர்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள்26.02.2026 வியாழக்கிழமை (மாசி மாதம் 14ம் தேதி) காலை 9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச 108 கலசாபிஷேகம்,இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்மண்டகப்படிதாரர்கள்தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: செல்வன் P.M. பாலு M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள்25.02.2026 புதன்கிழமை (மாசி மாதம் 13ம் தேதி)இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: Dr.S.B. பத்மசங்கர் (வீணைத்துறை பேராசிரியர், ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.) மற்றும் குழுவினர்.
ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 6-வது மைல் குடிநீர் தேக்கம் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டில் உள்ள பொது மக்களுக்கு தேவையான குடி நீரை தேக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.இந்த நீர்த்தேக்கத்தில் அளவு 22 அடியாகும். ஆனால் மழை நீரை இந்த நீர் தேக்கத்தில் 18 அடி உயரம் தான் சேமிக்க முடியும். தற்போது வரை குடிநீர் தட்டுப் பாடு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி மற்றும் சுற் றுவட்டார பகுதிகளில் ,அய்யனார் கோவில் ஆற்றில் போதிய மழை இல்லாததால்,வெயிலின் தாக்கம் அதிகரித்து, 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் தண்ணீர் நாளுக்கு நாள் வெகுவாககுறைந்து ,குடிநீருக்குதேவையானதண்ணீர்குறைந்து, தற்போது 14 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை உள்ளதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள்24.02.2026 செவ்வாய்க்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி)இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் ,குடும்பத்தின.ர்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயாஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம்.