25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Feb 26, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள்.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஆறாம் திருநாள்26.02.2026 வியாழக்கிழமை (மாசி மாதம் 14ம் தேதி) காலை 9.00 மணிக்குமேல் மூலவருக்கு விஷேச 108 கலசாபிஷேகம்,இரவில் அம்பாள், ஸ்வாமி ரிஷப வாஹனம்மண்டகப்படிதாரர்கள்தி ராமராஜு சர்ஜிக்கல் காட்டன் மில் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: செல்வன் P.M. பாலு M.A.M.Phil., மதுரை. மற்றும் குழுவினர். 

Feb 25, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள்.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஐந்தாம் திருநாள்25.02.2026 புதன்கிழமை (மாசி மாதம் 13ம் தேதி)இரவில் அம்பாள் கிளி வாஹனம், ஸ்வாமி யானை வாஹனம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ விஷ்ணு சங்கர் மில்ஸ் லிமிடெட்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர்: Dr.S.B. பத்மசங்கர் (வீணைத்துறை பேராசிரியர், ஸ்ரீ ஸத்குரு ஸங்கீத வித்யாலயம், மதுரை.) மற்றும் குழுவினர்.

Feb 25, 2026

ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில் குறைந்து வரும் நீர்மட்டம் .

ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் 6-வது மைல் குடிநீர் தேக்கம் அமைந்துள்ளது. இங்கு ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42 வார்டில் உள்ள பொது மக்களுக்கு தேவையான குடி நீரை தேக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.இந்த நீர்த்தேக்கத்தில் அளவு 22 அடியாகும். ஆனால் மழை நீரை இந்த நீர் தேக்கத்தில் 18 அடி உயரம் தான் சேமிக்க முடியும். தற்போது வரை குடிநீர் தட்டுப் பாடு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி மற்றும் சுற் றுவட்டார பகுதிகளில் ,அய்யனார் கோவில் ஆற்றில் போதிய மழை இல்லாததால்,வெயிலின் தாக்கம் அதிகரித்து, 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில் தண்ணீர் நாளுக்கு நாள் வெகுவாககுறைந்து ,குடிநீருக்குதேவையானதண்ணீர்குறைந்து, தற்போது 14 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயநிலை உள்ளதால் பொதுமக்கள் கவலையில் உள்ளனர். 

Feb 24, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள்

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் நான்காம் திருநாள்24.02.2026 செவ்வாய்க்கிழமை (மாசி மாதம் 12ம் தேதி)இரவில் அம்பாள் அன்னம் வாஹனம், ஸ்வாமி கற்பகவிருக்ஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ S.S. ராமச்சந்திர ராஜா - ஸ்ரீமதி R.சிட்டம்மாள் ,குடும்பத்தின.ர்இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு சின்மயா வித்யாலயாஸ்ரீ பி.ஏ.சி.ராமசாமிராஜா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர், மாணவ, மாணவிகள், இராஜபாளையம்.

Feb 23, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள்.

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் மூன்றாம் திருநாள்23.02.2026 திங்கள்கிழமை (மாசி 11ம் தேதி), இரவில் அம்பாள் காமதேனு வாஹனம், ஸ்வாமி கைலாச வாஹனம்.மண்டகப்படிதாரர்கள்,ஸ்ரீ N.R.கிருஷ்ணமராஜா குடும்பத்தினர்(ஸ்ரீ N.K.ராமசுவாமிராஜா, ஸ்ரீமதி N.S.வசந்தா சுப்புராம ராஜா, ஸ்ரீ N.K.ஸ்ரீகண்டன் ராஜா, ஸ்ரீ N.R.K.வெங்கடேஷ் ராஜா, ஸ்ரீ N.K.ராம்குமார் ராஜா, ஸ்ரீமதி P.S.ரமணியம்மாள்)இசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்கு,P.A.சின்னையராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்கள். 

Feb 22, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் இரண்டாம் திருநாள்

22.02.2026 ஞாயிற்றுக்கிழமை (மாசி மாதம் 10ம் தேதி)இரவில் அம்பாள் ஹஸ்தியாழி வாஹனம், ஸ்வாமி அதிகாரநந்தி வாஹனம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ B. ராமராஜு - ஸ்ரீமதி B. சந்த்யாராஜுஇசை நிகழ்ச்சி மாலை 6.00 மணிக்குP.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மற்றும் மாணவிகள்

Feb 21, 2026

அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் முதலாம் திருநாள்.

21.02.2026 சனிக்கிழமை (மாசி மாதம் 09ம் தேதி) கொடியேற்றம்சுக்லபக்ஷ சதுர்த்தி திதியும் ரேவதி நக்ஷத்திரமும் ஸித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 07.40 - 09.00க்குள் மீன லக்னத்தில் த்வஜாரோஹணம் நடைபெற உள்ளது.இரவில் அம்பாள் ஸிம்ம வாஹனம், ஸ்வாமி கற்பக விருஷம்மண்டகப்படிதாரர்கள்ஸ்ரீ P.R. வெங்கட்ராம ராஜா - ஸ்ரீமதி V.நிர்மலாதிருமுறைபாராயணம் மாலை 6.00 மணிக்குநிகழ்த்துபவர் தேவார இசைமணி சங்கரன்கோவில்திரு S.சுப்பிரமணியன் ஓதுவார் குழுவினர் .

Feb 10, 2026

ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

 சந்தனமாரியம்மன்  கோயில் விழா கமிட்டியினர் ஏற்பாட்டில் ,ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில்கணபதி நவக்கிரஹ ஹோமம், மாலையில் கும்ப பூஜை முதல் கால யாகசாலை, மூன்றாம் பூஜைகள், இரண்டாம், நாள் யாககால பூஜைகள், பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 6:00 மணி சித்திவிநாயகர், சந்தன மாரியம்மன், முனீஸ்வரர், வைரவர் சுவாமி விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

Feb 06, 2026

ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா .

ராஜபாளையம் - தென்காசிசாலையில் அரசு ஆஸ்பத்திரிகடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ் பத்திரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர்,புத்தூர்,இனாம்கோவில்பட்டி, சேத்தூர், தேவதானம்,கோவிலூர்,சொக்கநாதன்புத்தூர், தேவிபட்டினம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம்,சங்கரபாண்டியாபுரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த ஆஸ்பத்திரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி பொது மக்களின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ.40 கோடியில் 448 படுக்கை, 5 தளங்களுடன் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்,எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை அரங்கம், காது மூக்குதொண்டை பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, லேப் வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு, லிப்ட் வசதி, அதிநவீன விபத்து சிகிச்சை வசதி, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தொட்டி ,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து நவீன வசதிகளுடன் இந்தஆஸ்பத்திரி செயல்பட உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் (வெள்ளிக்கிழமை ) முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதியகட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.

Feb 02, 2026

தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு சுவாமி,வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.தொடர்ந்து மூலவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற் றது. நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக் கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ராஜகணபதி பாலமுருகன் கோவில், மொட்டமலை பாலதண்டா யுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், விரு துநகர் அருகே எல்லிங்கநாயக்கன் பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆமத்தூர் திருச்செந்திலாண்டவர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக - நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News