திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து,திருச்சியில்20,000 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, மேலும் பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடிஅவர்களின் இந்த வருட முதல் பயணம் திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.வணக்கம் தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி உரையை தொடங்கினார். தற்போது துவக்கப்படும் 20000 கோடி ரூபாய் திட்டங்களால், தமிழகம் வளர்ச்சி அடையும். இத்திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் புதிய திட்டங்களால், தமிழகம் இன்னும் விரைவான வளர்ச்சி பெறும். உ அதன் வாயிலாக நாடும் வளர்ச்சி அடையும். பத்து ஆண்டுகளில், மத்திய அரசானது, கடலோர பகுதிகள் முன்னேற்றம், மீனவர்களின் நலன் போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. தமிழ் இளைஞர்களின் மீது, எனக்கு அபார நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .
0
Leave a Reply