25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Oct 26, 2023

மலைப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கின்போது தப்பி பிழைப்பது கடினம்

விவசாய பணிக்கு ஆள் பற்றாக்குறைகடந்த இரண்டு நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழை காரணமாக ஆறு, ஓடை கண்மாய்களில் நீர்வரத்து தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் வரப்பு வெட்டுதல், நடவு, உழவு, பணிகளுக்கான தேவை ஏற்பட்டுள்ளதால் கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.கைலாந்தோப்பு ஆற்றில் பாலம்கட்டும் பணி துவக்கம்கைலாந்தோப்பு ஆற்றில் பாலம் அமைந்து தர வேண்டி விவசாயிகளின் 40 ஆண்டு கோரிக்கையாக இருந்தது. அய்யனார் கோவில் ஆறுபகுதி முடங்கியாறு பிரிவில் இருந்து புதுக்குளம் பிரண்டை குளம், புளியங்குளம், கொண்டனேரி, கடம்பன்குளம் கண்மாய்களுக்கு பிரதானமாக கைலாந்தோப்பு ஆறு பாதை உள்ளது.மெயின் ரோட்டில் இருந்து ஆற்றின் மறுபுறமான வடக்கு பகுதியில் 8 கிலோ மீட்டர் 'பரப்பிற்கு இரண்டு பக்கமும் மருங்கூர் கண்மாய் பாசன விவசாபிகள் 300 க்கும் மேற்பட்டோர் உள்ளனர் தென்னை, மா, வாழை, நெல், காய்கறிகள், உள்ளிட்ட விளை பொருட்களை ஆற்றை கடந்து மெயின் ரோட்டிற்கு கொண்டுவர வழியின்றி தலித்து வந்தனர். ரூ.40 லட்சம் செலவில் 75 மீட்டர் அகலம் 12 மீட்டர் நீளத்தில் பாலப்பணிகள் தொடங்கியுள்ளது.குளிப்பதற்கு அனுமதியில்லை என அறிவிப்பு போர்டு மட்டும் வைத்து வனத்துறை கடமையை முடித்துவிடுகின்றனர்.மலைப்பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கின்போது தப்பி பிழைப்பது கடினம், இந்நேரம் மட்டும் வனத்துறையினர் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கின்றனர். கண்காணிப்பு இன்றி பொதுமக்கள் ஆபத்தான முறையில் குளிப்பதும் சிலஇளைஞர்கள் ஆற்றின் மறு பகுதி உள்ளே சென்று மாமிச சமையல், மது விருந்து என தன்னிலை மறப்பதும் பாட்டில்களை உடைத்து போட்டு வருவதும் தொடர்கதை யாகிறது. சாஸ்தா கோவில் நீர்த்தேக்கம் முன்பே செக்போஸ்ட் அமைத்துகடந்து செல்வோரை முறையாக கண்காணித்து தடுத்தால் வன விலங்குகள், பொதுமக்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் குளிப்பதற்கு அனுமதியில்லை என அறிவிப்பு போர்டு மட்டும் வைத்து வனத்துறை கடமையை முடித்துவிடுகின்றனர்.

Oct 25, 2023

ஷீரடி சாய் பாபா மகா சமாதி தினம்

 ராஜபாளையத்தில் ஷீரடி பாபா மகா சமாதி தினத்தையொட்டி சாய் பாபா கோயிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.காலை 5:30 மணிக்கு காலை ஆரத்தி தொடர்ந்து சாய் நாதர் மகாயாகம், மங்கல ஸ்நானம், சத்ச ரித பாராயணம் நடந்தது. பகல் 10:00 மணிக்கு 108 சங்கினால் மகா ருத்ராபி ஷேகம், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் சாயி  பஜனை நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து சயன அலங்காரம், யான ஆரத்தி சிறப்பு அன்னதானம் நடந்தது மாலையில் பக்தர்கள்  புஷ்பாபிஷேகம் அதனை தொடர்ந்து துாப ஆரத்தி பிரசாதம் வழங்கும் நிகழ் சிகள் நடைபெற்றன.

Oct 25, 2023

நிறைந்தது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்.

வித்யாரம்பம் எனும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சிவிஜயதசமியை முன்னிட்டு இராஜபாளையம் சுற்றுவட்டார கோயில்களில் வித்யாரம்பம் எனும் எழுத்தறிவு தரும் நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானபெற்றோருடன் குழந்தைகள் கலந்து கொண்டனர். கோதண்டராம சுவாமி கோயில், சொக்கர்சோயில், சாரதாம்பாள் கோயில்களில் பங்கேற்றனர்.நிறைந்தது சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்.தேவதானம் சாஸ்தாகோயில் நீர் தேக்கத்தில் 33 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கம் கடந்த 2நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையின்நீர் பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக நேற்று அதிகாலை நிறைந்தது உபரி நீர் வெளியேறுகிறது. தொடர்மழை காரணமாக கண்மாய்களுக்கு நீழ் வரத்து ஏற்படுவதுடன், கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும் என்பதால் பாசன தண்ணீர் தேவைக்கு சிக்கல் "ஏற்படாது என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Oct 19, 2023

ராஜபாளையம் நகரில், வாசிப்பை நேசிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி,சில்வர் பேலஸ் திறப்பு விழா

வாசிப்பை நேசிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சிராஜபாளையம் ஸ்ரீ ரமண அகடாமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பள்ளிஆலோசகர் டாக்டர் கு.கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியை சண்முகப்பிரியா வரவேற்றார்."வாசிப்பை நேசிப்போம்" என்ற தலைப்பில் பட்டி மன்ற பேச்சாளர் உமாசங்கர் மாணவர்களுக்கு அன்றாட வாசிப்பின் அவசியம், நாளிதழ்கள் வார இதழ்கள், புத்தகங்கள், நாவல்கள், வாசிப்பதால் ஏற்படும் மாற்றங்கள், அதனால் வாழ்வில் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்.வாசிப்பு குறித்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்து பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை சுதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கல்யாணி, துணை முதல்வர் இந்திரா, உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் செய்தனர்.சில்வர் பேலஸ் திறப்பு விழாராஜபாளையம் தென்காசி மெயின் ரோட்டில்  சில்வர் பேலஸ் வெள்ளி பொருட்களுக்கான 6வது ஷோரூம் திறப்பு விழா நடந்தது. புதிய ஷோரூமை டாக்டர் ஜவஹர்லால் குத்து விளக்கேற்றி துவக்கினார்.உரிமையாளர் ஜானகி ராமன் வரவேற்றார்.பங்குதாரர்கள் வெங்கடேஷ், ரமேஷ், சியாம் பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.புதிய ஷோரூமில்அனைத்து வகையான வெள்ளி கொலுசுகள், பாத்திரங்கள், ஆண்டிக் ஜுவல்லரிகள், வெள்ளி கோல்டு பாலிஷ் நகைகள், பூஜை பொருட்கள், சுவாமி விக்கிரஹங்கள், கார்ப்பரேட் கிப்ட், வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப மாடல்களில் தயாரிப்பு, சேமிப்பிற்கான வெள்ளி நாணயம் விற்பனைக்கு உள்ளன.

Oct 17, 2023

வேணுகோபால சுவாமி பக்த சபா, சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம்

 வேணுகோபால சுவாமி  பக்த சபா, சங்கரா கண் மருத்துவமனை சார்பில்  சேத்துார் சேனைத் தலை வர் சமுதாய மண்டபத் தில் இலவச கண் சிகிச்சை முகாம்  ராஜபாளையம் அருகே நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் தலைமை வகித் தார். வி. எச். பி. தென் பாரத அமைப்பாளர் சரவண கார்த்தி முன்னிலை வகித்தார். முகாமில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கண் ணில் குறைபாடு, நீர் வடி தல், மாறுகண், 24 கரு விழி பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இலவச பரிசோதனை, அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப் பட்டது. 100க்கும் மேற் பட்ட பயனாளிகள்  பயனடைந்தனர்.

Oct 16, 2023

மாணவி அனிஷ்கா கண் இமைக்காமல் உலக சாதனை

உலக  பார்வை தின விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் விதமாக ராஜபாளையத்தில் 10 வயது மாணவிஅனுஷ்கா  இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கண்களை இமைக்காமல் உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். ராஜபாளையம் தனியார் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி அனிஷ்கா. உலக சாதனை புரிய வேண்டும் என யோகா பயிற்சியாளர் அய் யப்பனிடம் கண்களை இமைக்காமல் இருந்து பயிற்சி பெற்று வந்தார். கண் தானம், பார்வை இழப்பை தடுப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இரண்டு மணி நேரம் அனிஷ்கா இமைக்காமல் செய்த சாதனை, ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு வீடியோ மூலம் அனுப்பி வைக் கப்பட்டுள்ளது.

Oct 14, 2023

விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அனுதிக்காக காத்திருக்கின்றனர்.

விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் விருதுநகரில் இருந்து செங்கோட்டை வரை 130 கிலோ மீட்டர் தூர அகல ரயில்பாதை மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்களை இயக்குவதற்கு வசதியாக மின்மயமாக்கப்பட்டுள்ளது.இதற்காக இராஜபாளையம் அருகே சோழாபுரத்தில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. வழித்தடத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷன்களில் துணை செக்சன் பூஸ்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது ரயில்கள் இயக்கத்திற்க தேவையான மின் தேவையை பூர்த்தி செய்யும்.மின்மயமாக்கல் பணிகள் முடிந்த நிலையில் மார்ச் 29ல் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அதிவேக ரயில் சோதனை நடத்தினர், ஆய்வுகள் முடிந்து பல மாதங்கள் ஆன நிலையில் அக்டோபர் 1 முதல் இவ்வழித்தடத்தில் மின்சார இன்ஜின்கள் பொருத்தப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரை இயக்கப்படவில்லை.விருதுநகர் செங்கோட்டைமின்சார ரயில்கள் இயக்கம் ரயில்வே பாதுகாப்பு ஆணைய அனுதிக்காக காத்திருக்கின்றனர்.. விவசாயிகளக்கு விழிப்புணர்வு கூட்டம்தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில்  இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளை புலிகள் சரணாலயத்துடன் அரசு இணைந்துள்ளது. இந்நிலையில் மலையை ஒட்டியுள்ள வடக்கு வெங்காநல்லூர் அயன் கொல்லங்கொண்டான் 2, திருச்சாலூர், சோமையாபுரம், மாலையாபுரம், சம்மந்தபுரம், மேலப்பாட்டக்கரிசல்குளம் பகுதிகள் உள்ளிட்ட வனத்துறை கிராமங்களில் உள்ள விவசாய பட்டா நிலங்களில் வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு எந்த வித மரம் மற்றம் விறகுகளையும் வெட்டுவதற்கு அனுமதி கிடையாது,இராஜபாளையம் தாலுகா அலுவலத்தில் மலையை ஒட்டிய கிராமங்களின் பட்டா நிலங்களில் மரம் வெட்டுவதற்க முறையான அனுமதி பெறுவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது..

Oct 12, 2023

சேவை நாயகன் R. சங்கர்கணேஷ்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தமிழினத் தலைவர் Dr.கலைஞர் அவர்கள் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் நடைபெற்ற தேசிய பெண்கள் கபடி போட்டியில் இந்திய மகளிர் சேவை நாயகன் R. சங்கர்கணேஷ் இராஜபாளையம் அவர்கள் கலந்து கொண்டு அனைத்து மாநில பெண்களுக்கு குடிநீர், தேநீர்,உணவு உட்பட அனைத்து வேலைகளையும் முகம் சுளிக்காமல், சுறுசுறுப்பாக பணி செய்து உள்ளார். இவரது சேவையை பார்த்த விழாக்குழுவினர்கள், போட்டிக்கு தலைமை ஏற்று வருகை தந்த  உயர்திரு.K.R. பெரிய கருப்பன் அவர்கள் (தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர்) சால்வை அணிவித்து பாராட்டினார்கள். இவர் செய்யும் சேவைகளுக்கு வாழ்த்து தெரிவிக்க தொடர்பு கொள்ளவும் : 94424 79611

Oct 10, 2023

வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

இராஜபாளையம் மேற்கு பகுதியில் முடங்கியார் ரோடு அய்யனார் கோவில் ஒட்டிய வனப்பகுதியில் ஆற்றில் நீராடவும் அய்யனார் கோயிலில் தரிசனத்திற்காகவும் மாவட்டத்தின் பல்ாேவறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தருகின்றனர்.இவ்வாறு வருபவர்கள் பாலிதீன் பொருட்களுடனும், மது பாட்டில்களுடன் ஆங்காங்கு மாமிச சமையலை ஆற்றோரங்களில் முடித்து செல்கின்றனர். இவர்கள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் கழிவுகள் பாட்டில்கள், உணவு பொருட்கள் வன விலங்குகளை பெருமளவு பாதிப்பிற்கு உள்ளாக்குகிறார்கள் நீர்த்தேக்ம் அருகிலேயே செக் போஸ்ட் அமைத்து கண்காணிப்பதன் மூலம் வனசூழலையும், விலங்குகளையும் காக்க முடியும் என வன உயிரின ஆர்வலர்கள் எதிர் பார்த்துள்ளனர்.  இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் தண்ணீர் தேங்கியதால் அவதி.நீண்ட நாட்களுக்கு பின் பெய்த அரை மணி நேர மழையில் மெயின் ரோடுகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தண்ணீர் தேங்கிய பகுதிகளில் பாதசாரி, பொதுமக்கள் மேல் வாகனங்கள் தெரித்ததால் ஒதுங்கி செல்ல வேண்டிய நிலைக்கு மக்கள் உள்ளாகினர். நிர்வாகத்தை எதிர்பார்த்துள்ளனர். முறையான வடிகால் வசதி செய்து தர நகராட்சி.

Oct 09, 2023

இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை

இராஜபாளையம் நகரச்  செய்திகள் வடக்கு  மலையடிப்பட்டி சஞ்சீவிநாதர் சிவன் கோயிலில் சித்தர்கள் குருபூஜைஇராஜபாளையம் வடக்கு மலையடிப்பட்டி சஞ்சீவி நாதர் சிவன் கோயிலில் 18 சித்தர்கள் குருபூஜை விழா நடந்தது அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.இராஜபாளையம் நகராட்சி தலைவர் பவித்ரா, தொழிலதிபர் ராம் சிங் ராஜா பங்கேற்று வேட்டி சேலை வழங்கினர் அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை சஞ்சீவிநாதர் திருக்கோயிலில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள்இராஜபாளையம் விவசாய கமிட்டி சார்பில் மழை வேண்டி சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. மேற்கு  தொடர்ச்சி மலை அடிவாரம் அய்யனார் கோயில் வளாகத்தில் வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். அடுத்து ஆற்றிலும் பூஜை நடந்தன ராஜிக்கள் நான்குகோட்டை, தலைவர் சின்ன வெங்கட்ட ராஜா உள்ளிட்ட சாவடி தலைவர்கள், நகராட்சி தலைவர் பவித்ரா கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விவசாய கமிட்டி தலைவர் முருகன் நிர்வாகிகள் விவேகானந்த ராஜா, வெங்கடேச ராஜா செய்திருந்தனர். இராஜபாளையத்தில் விவசாய கூலி ஆட்கள் பற்றாக்குறை இராஜபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் விவசாய கூலி ஆள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேளாண் துறை முறையான ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கின்றனர். ஆள் கிடைத்தாலும் பணிகளில் முழுத்திறனையும் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு மாற்று ஏற்பாடாக இயந்திர நடவினை நாடி வருவதுடன், ஏக்கருக்கு ரூ.2500 வரை மீதம்  ஆவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இயந்திரநடவை செய்தால் விதை நெல் முதல் நடவு கூலியாட்கள் வரை ஏக்கருக்கு ரூ2500 வரை மீதமாகிறது. இதுகுறித்து அரசு சார்பில் வேளாண்துறை அதிகாரிகள் விளக்கி கூறி தெளிவு படுத்தினால் விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News