ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம்.பங்குனி பிரமோற்சவ விழாவினை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. அப்போது கோதண்டராமர், அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண திருவிழா பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திரத்தன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக் கல்யாண திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டாள், ரெங்க மன்னாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. 15-ந் தேதியன்று புஷ்பயாக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்
ராஜபாளையம் ஸ்ரீ ரமண வித்யாலயா பள்ளியில் இலக்கிய மன்ற நிறைவு விழா நடந்தது.டாக்டர் கு. கணேசன்பள்ளி ஆலோசகர் தலைமையில். மாணவி சிவஸ்ரீ வரவேற்றார். புத்தக வாசிப்பின் அவசியம் குறித்து, மாணவி ஹரி விசாலினி பேசினார் "சிறகை விரிப்போம்" என்ற தலைப்பில் சாகித்திய அகாடமி விருதாளர் ஆயிஷா ஆர். நடராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவிகள் கவிசேனா, ஹன்சிகா தொகுத்து வழங்க, ஏற்பாடுகளை முதல்வர் சுதா தலைமையில் விளையாட்டுத்துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் நிர்வாகி ராமராஜ், ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்தனர். மாணவர் விஸ்வ ரோஹித் நன்றி கூறினார்.
நேற்று காலை வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள் கோயிலில் யுகாதி விழா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண் டாள் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பை முன்னிட்டுயுகாதிதிருவிழாநடந்தது.பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் 12 ஆழ்வார்கள், எழுந்தருளினர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராஜபாளையம் புதுப்பாளையம் சிங்கராஜா கோட்டை பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி தினமும் சிம்மம், கருட, சேஷ, குதிரை உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 3-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சிங்கராஜா கோட்டை தலைவர் ராம் சிங், கோவில் தர்மகர்த்தா சீனிவாசராஜா மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.
விருதுநகர் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் சார்பில் ராஜபாளையம் கலை மன்றத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற டேக்வாண்டோ போட்டி நடந்தது.சர்வதேச நடுவர் ராமலிங்க பாரதி பங்கேற்றார் . விருதுநகர் அருப்புக்கோட்டை சிவகாசி உள்ளிட்ட மாவட்டத்தில் 19 பள்ளி கல்லுாரிகளில் இருந்து 230 மாணவர்கள் கலந்து கொண்டு, 6, 9, 12, 17 அதற்கும் மேற்பட்டோர் என ஐந்து பிரிவுகளில் நடந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும்,முதல் 4 இடங்களை பெறுபவர்கள், விருதுநகர் மாவட்டம் சார்பில் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ராஜபாளையம் யுனைடெட் மெயின் கிளப், இரண்டாம் இடத்தை ரமணா சி.பி. எஸ்.இ., பள்ளி, ஏ.கே.டி தர்மராஜா சக்கனி அம்மாள் பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. ஏற்பாடுகளை மாவட்ட டேக்வாண்டோ செயலாளர் பாஸ்கர் செய்திருந்தார்.
பகத்சிங் நினைவு நாளை முன்னிட்டு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் இரத்ததான நிகழ்ச்சி நடந்தது. மகப்பேறு மருத்துவமனையில் அமைப்பின்மாவட்டசெய லாளர் பகத்சிங் தலைமை வகித்தார்.கலை இலக்கிய பெருமன்ற செயலாளர் டாக்டர் அறம் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.பி.,லிங்கம், எம்.எல்.ஏ., ராமசாமி, மாப்பிள்ளை விநாயகர் மன்ற தலைவர் ராமராஜ், கண்மணி காதர், இ.கம்யூ., நகர் தலைவர் விஜயன் கலந்து கொண்டனர் . 50 க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.
ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் ,55 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என இந்த ஆண்டு இலக்கான ரூ.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும்.நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில், உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர், சுகாதார பிரிவு அலுவலர்கள் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 70 சதவீதம் வசூல் ஆகி உள்ளது.மத்திய அரசின் 15வது நிதிகுழு மானியம்பெறதீவிரம்.இன்னும் பத்து நாட்களே உள்ளதால் நகராட்சியின் அனைத்து துறையினரும் வரி வசூலில் கவனம் செலுத்தி, இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி வருகின்றனர்.
ராஜபாளைய நகராட்சியில் மாஸ்டர் பிளான், கார்பன் நியூட்ரல் திட்டங்களின்படி நீர் நிலைகளை தூய்மையாக பராமரிப்பது குறித்து ஆர்.சி.எஸ் அமைப்பு, நகராட்சி சார்பில் டிஜிட்டல் கணக்கெடுப்பு துவங்கி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.நகராட்சியில் நடந்து வரும் பாதாள சாக்கடை, தாமிர பரணி குடிநீர் குழாய் இணைப்புகளுக்கான டிஜிட்டல் தரவுகள் எடுக்கும் பணி, ராம்கோ கம்யூனிட்டி சர்வீஸ் மூலம் பள்ளி கல்லுாரி மாணவர்களை கொண்டு அலைபேசி ஆப் மூலம் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.மாநில பசுமை கால நிலை ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா துவக்கினார். பி.ஏ. சி.எம் பள்ளி தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா, டாக்டர் சித்ரா மாண வர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.கட்டடத்தின், வகைப்பாடு, பாதாள சாக்கடை, குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதா?, இல்லையெனில் அதற்கான காரணம், ஆழ் துளைகுழாய் இணைப்பு உள்ளதா?, பொதுகழிப்பறை பயன்படுத்துகிறீர்களா? உள்ளிட்ட 14 வகையான கேள்விகளுடன், வீடுகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்கின்றனர். அதிகாரிகள் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மூலம் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைப் பதன் மூலம் பராமரிப்பு பணிகளில் துல்லியமாக மேற்கொள்ள முடியும் என தெரிவித்தனர்.
ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா நடந் தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்தவுடன் விழா நாட்களில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சி, பாரம்பரிய இன்னிசை கச்சேரிகள் நடந்தது.இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம், தெப் போற்ஸவத்தை அடுத்து நேற்று காலை தேர்திரு விழா நடந்தது. கோயி லில் அலங்கரிக்கப்பட்டதேரினை ராம்கோ குரூப் சேர்மனும் கோயில் பரம் பரை அறங்காவலருமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வடம் பிடித்து துவக்கி, ராம மந்திரம் வரை தரிசனத்திற்காக தேர் வீதி உலா வந்து கோயிலை சுற்றி நிலையை அடைந்தது. தேர்த் திருவிழா ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சார்பில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
மாசி பிரம்மோற்ஸவத்தைமுன்னிட்டு ராஜபாளையம் சொக்கர் கோயிலில் தெப்பத் திருவிழா நடந் தது. பத்து நாள் நடை பெறும் விழாவில் சுவாமி ,அம்பாள் பல்வேறு அலங் காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று தெப்ப திருவிழாவை முன்னிட்டு காலை முதல் கோயில் பின்புறம் உள்ள மானசரோவர் குளத்தில் இரவு 7:00 மணிக்கு மேல் வாத்தியங்கள் முழங்க மீனாட்சி, சொக்கர் ரதத்தில் கோயிலில் இருந்து எழுந்தருளி தெப்பத்தில் வலம் வந்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ராம்கோ குழுமத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.