25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jan 21, 2026

சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

சேத்துார் அடுத்த தேவதானம், கோவிலுார் சுற்றுப் பகுதியில் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 10க்கும் மேற் பட்ட கண்மாய் ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது.அறுவடை பணிகள் தொடங்கியதால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கோவிலுார், தேவதானம் பகுதியில் மண்டல அதிகாரி சென்னை உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முன்னிலையில், நேற்று நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.

Jan 19, 2026

தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் .

தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்தி வருவதால் விலை அதிகரித்தும் ,பலனின்றி வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 27 ஆயிரம்ஏக்கர்தென்னைசாகுபடி ,விருதுநகர் மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள், சமீப காலமாக அதிகரித்து பரவ தொடங்கியது. இவற்றிற்கு சுலபமாக பரவுவதற்கு வறட்சிக் காலம் வழி வகுத்ததுடன் ,வெள்ளை நிற ஈக்களின் குஞ்சுகள் இலைகளுக்கு பின்னால் ஒட்டியிருந்து சாறு உறிஞ்சுகிறது. மரங்களின் வளர்ச்சியை பாதித்ததோடு, விளைச்சலும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது ..உழவு, உரம், பராமரிப்பு செலவு என சாகுபடி செலவு அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் விலை அதிகரித்தும் விளைச்சல் குறைந்ததால் அதன் பலன் முழுமையாக விவசாயிகளை சென்று சேரவில்லை. ஒரு சில விவசாயிகள் தடுப்பு. முறைகளை முறையாக கையாண்டும் மற்ற பகுதிகளில் இருந்து மீண்டும் பரவுவதால் இதை கட்டுப் படுத்தும் வழிமுறை தெரியாமல் பாதித்து வருகின்றனர்

Jan 15, 2026

ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026

தமது பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மற்றும் அவர்களின் நலனைக்கருதி 56 ஆண்டுகளாக பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தி வருகிறோம். நாளது 15.01.2026 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நமது மில்ஸின் எதிர்புறம் அமைந்துள்ள ஊழியர்கள் மனமகிழ் மன்ற விளையாட்டு அரங்கில் வைத்து இவ்வாண்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது. நமதுசேர்மன் : உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் துவக்கி வைத்து நமது ராம்கோ குழுமத்தைச் சேர்ந்த ராஜபாளையம் ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ், ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் - பேப்ரிக் டிவிசன், ஸ்ரீ விஷ்ணுசங்கர் மில் லிமிடெட், ஸ்ரீ ராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில் லிமிடெட், ராஜபாளையம் டெக்ஸ்டைல் லிமிடெட் ஆலைகள் மூலமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மேலும் ஆலையில் நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சர்வீஸ் அவார்டும். கடந்த ஆண்டில் ஊதிய இழப்பு இல்லாமல் பணிசெய்த தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகளும் வழங்குவார்கள்.1. 5,10,15, 20, 25, 30, 35, 40 ஆண்டுகள் சர்வீஸ் பூர்த்தி செய்துள்ள 786 தொழிலாளர்களுக்கு ரொக்கப்பரிசுடன் சர்வீஸ் அவார்டு.2. கடந்த ஆண்டு தவறாமல் பணிக்கு ஆஜராகி பணி செய்த 4559 தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகள்.3. சிறந்த நூற்பாலைக்கான Excel Award.4. ஜப்பானிய வழிமுறைகளான 5S, TPM, TQM நடைமுறைப்படுத்தியதற்கான விருதுகள்.

Jan 14, 2026

தமிழகத்தில் இது முதல் முறையாக ராஜபாளையத்தில் அடையாளம் காணப்பட்ட ஆண் 'ப்ளைன்டிவ்' குயில்

முதல் முறையாக தமிழகத்தில்  வடகிழக்கு ஆசிய பகு திகளில் அதிகம் வசிக்கும் ப்ளைன்டிவ் குயிலின் ஆண் பாலினம், ராஜபாளையத்தில் பறவை ஆர்வலர்களாய் அடையாளம் காணப்பட்டுள்ளது. ப்ளைன்டில் குயில்கள் வடகிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள, இந்தப் பறவைகள் சோகமான, ஏக்கமான குரல் காரணமாகவே ப்ளைன் டிவ் குயில் என அழைக் கப்படுகிறது. ஆண்பறவை சாம்பல் நிற தலை, உடல், வயிற்று பகுதி ப்ரவுன் நிறம், சிவப்புக் கண் என ”இது  தனித்துவத்துடன் உள்ளது.  தென் கிழக்கு பகுதியான சீனாவில் இனப்பெருக்கம்செய்யும் இவை பிரினியாக்கள், சிஸ்டிகோலாக்கள், தையல்சிட்டுகள், தேன் சிட்டுகளின் கூடுகளில் முட்டையிடும். இந்தியாவில் ஓடிசா, சத்தீஸ்கர் பகுதிக்கு குளிர்காலங்களில் வலசைவரும். 2026 ஜன. 4ல் ராஜபா ளையத்தை சேர்ந்த பறவை ஆர்வலரான ராஜூஸ் கல் லூரி நேச்சர் கிளப்பை சேர்ந்த விஷ்ணு சங்கர், அவரது குழுவினர், இதில் ஆண் பறவையை அடை யாளம் கண்டுள்ளனர்.

Jan 13, 2026

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம்2022 டிச. மாதம் மதுரை ரயில்வே கோட்டத்தில் ரூ.11.70 கோடிக்கு பணிகள்துவங்கியது.2வது நுழைவு பாதை, முதல் வகுப்பு காத்திருப்பு அறை, கண்காணிப்பு கேமராக்கள், புதிய வாகன காப்பகம், லிப்ட் வசதியுடன் கூடிய2வது நடை மேம்பாலம், எல்.இ.டி., அறிவிப்பு பலகைகள் உள்ளிட்ட நவீன வசதிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.எல்.இ.டி., அறிவிப்புத்திரை, லிப்ட், சுற்றுச்சுவர், கூடுதல் கட்டடங்கள் பணிகள் முழுமை பெற்று வரும் நிலையில் தென்னக ரயில்வே துணை தலைமை பொறியாளர் கார்த்திக் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டனர். என்.எஸ்.ஜி.,4 என்ற தரவரிசைக்கு வருவாய் அடிப்படையில் முன்னேறி உள்ளதாக தெரிவித்ததுடன் அதிகாரிகள் பணிகளை விரைந்து  முடிக்க அறிவுறுத்தியுள்ளனர்.

Jan 13, 2026

இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்ய கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு கருத்தரங்கம்.

குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம்  இராஜபாளையம் ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை,  ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சி தமிழ் தாய் வாழ்த்து மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது.வரவேற்புரையை முனைவர் திருமதி உமா சங்கரேஸ்வரி, உதவிப் பேராசிரியர், வேதியியல் துறை, ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வழங்கினார்.நிகழ்ச்சிக்கு முனைவர் திரு.  ராமகிருஷ்ணன், முதல்வர், ராஜூக்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில், குழந்தை திருமணம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக உள்ளதாகவும், இளைஞர்கள் இதை எதிர்க்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.டாக்டர் திருமதி இ. ராதா, ராதா மருத்துவமனை, ராஜபாளையம் மற்றும் துணை ஆளுநர், ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையம் அவர்கள், “குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றி, குழந்தை திருமணத்தின் உடல், மனநல பாதிப்புகள் குறித்து விளக்கினார்.திரு. செல்வ அழகு, உறுப்பினர், குழந்தைகள் நலக்குழு (CWC), விருதுநகர் அவர்கள், குழந்தை திருமண சம்பவங்களில் புகார் அளிக்கும் வழிமுறைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் உதவி எண்கள் குறித்து விளக்கினார்.இதனைத் தொடர்ந்து திருமதி கயல்விழி, தலைமைக் காவலர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அவர்கள் காவல்துறையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் பக்கத்சிங், இராஜபாளையம் நீதிமன்றம் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் அதன் சட்ட விளைவுகள் குறித்து தெளிவாக எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் பா. ராஜகோபால், இயக்குனர், சைமா அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார்.நிகழ்ச்சியின் நன்றியுரையை செல்வி மு. வேல்மயில், இளங்கலைத் தமிழ் இலக்கியம் மாணவி வழங்கினார்.இந்நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.இக்கருத்தரங்கத்தில் 600 க்கும் அதிகமான கல்லூரி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணத்தை தடுப்பதில் தங்களது பங்கை உறுதியாக ஏற்கும் வகையில் விழிப்புணர்வு பெற்றனர்.

Jan 12, 2026

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் கூடாரவல்லி உற்ஸவம், போலீசாருக்கு பொது மருத்துவ முகாம்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்ற பாசுரப்படி ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் அன்று ராமானுஜர் சார்பில் பெருமாளுக்கு அக்கார அடிசில் சமர்ப்பித்து ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றும் வகையில் கூடாரவல்லி உற்ஸவம் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜையின்போது 100 வெள்ளி கிண்ணங்களில் அக்கார அடிசில் சமர்ப்பிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள் செய்திருந்தனர். கூடாரவல்லி உற்ஸவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 100 கிண்ணங்களில் அக்கார அடிசில் பெருமாளுக்கு படைக்கப்பட்டது.ராஜபாளையம் ரோட்டரி சங்கம், சக்தி கண் மருத்துவமனை சார்பில் போலீசார், அவர்களது குடும்பத்தினருக்கு பொது மருத்துவ முகாம் நடந்தது.டி.எஸ்.பி., பஸினா பீவி ரயில்வே ஸ்டேஷன் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் நடந்த முகாமினை பரிசோதனை செய்து துவக்கினார். டாக்டர்கள் ராஜேஷ், ராதா தலைமையிலான மருத்துவ குழுவினர் போலீசார், குடும்பத்தினருக்கு பொது, கண், நுரையீரல், குடல் சம்பந்தமான அடிப்படை பரிசோதனைகள் செய்து மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை மருந்துகள் வழங்கினர்.இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், போலீசார் என 500க்கும் அதிகமானோர் முகாமில் பங் கேற்றனர். ரோட்டரி சங்கதலைவர் ஸ்ரீமன் ராமச்சந்திர ராஜா, செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Jan 05, 2026

இயற்கை சம நிலையை பாதுகாக்கராஜபாளையம் எஸ்.ராமலிங்காபுரம் கிராம மக்கள் பசுமை புரட்சி ,தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள்ஏற்படுத்தி பாதுகாக்கின்றனர்.

 மனிதனின்  உயிர்வாழ்வதற்கு ஆக்சிஜன் தேவை . நமக்கு துாய்மையான ஆக்சிஜனை தருவதுடன் நம்மால் கழிவாக வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடை கிரகித்து பாதுகாக்கும்  என்பது தெரிந்தும், இயற்கையை மீறி ,மரங்களை பல்வேறு தேவைகளுக்காக அழித்து வருகிறோம்.மனிதனுக்கு மட்டுமின்றி, அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவு, இருப்பிடமாக மரங்கள் பாதுகாக்கிறது .இயற்கை சம நிலை , நோயற்ற வாழ்விற்கு, சுற்றுச்சூழலை பாதுகாக்க ,பெருகிவரும் நவீன தொழிற்சாலைகள், புதுப் புது வாகனங்கள், வெளியேற்றப்படும் குப்பைகளால் உருவாகும் நச்சு கழிவுகள் காற்று மாசுகள் அனைத்தையும் பசுமையான மரங்கள் கட்டுப்படுத்தி வருகிறது. வரும் சந்ததியினருக்கு காற்று மாசுகளை குறைத்து நுரையீரல்சம்பந்தமான நோயிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனில் நம்மால் ஆன சுலபமான காரியம் மரக்கன்று நட்டு பராமரிப்பது மட்டுமே. கண்மாய் கரைகளில் பனை விதைகளை தொடர் நடவு செய்வதும், மெயின் ரோட்டின் ஓரம் உள்ள ஊராட்சி தரிசு நிலங்கள் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து சோலையாக மாற்றியும், கீழக்கு ளம் கண்மாய், ராம்கோ நகர் உள்ள ஐந்து தெருக்களிலும்மரங்களைவளர்த்துபாதுகாத்துபசுமையானபகுதியாகவைத்திருக்கின்றனர். ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்ட பூங்காக்கள் ஏற்படுத்தி முன்மாதிரி -யாக இருந்து வருவதால் இப்பகுதியே பசுமையான - மரங்கள் சூழ்ந்த பகுதியாக மாறி உள்ளது.

Jan 02, 2026

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்30-வது போட்டி இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது.

 17 ஆண்டுக்கு பிறகு, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி, ஆகஸ்டு, செப்டம்பரில் இந்தியாவின் டெல்லியில் நடக்க உள்ளது. மேலும் டாப்-8 வீரர், வீராங்கனைகள், ஜோடிகள் மட்டுமே பங்கேற்கும் உலக டூர் இறுதி சுற்று பேட்மிண்டன் டிசம்பர் 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சீனாவில் நடக்கிறது.பெண்களுக்கான 20-வது உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் செப்.4-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடக்கிறது

Dec 29, 2025

அழகான ஓவிய வகுப்பு

அழகான ஓவிய வகுப்பு (Beautiful Drawing Class)*  இலவச  அறிமுக வகுப்பு : இந்த வகுப்பில்  கலந்து கொள்ள விரும்புவோர் இந்த  *Whatsapp*   குரூப்பில் Join செய்து   https://chat.whatsapp.com/Jyv9gTxb7EeJKy8so79QYH *88259 73094 (Santhiya)*  நம்பருக்கு *Whatsapp* மூலம் உங்கள் பெயர், ஊர் பெயரை அனுப்பி  முன் பதிவு செய்து கொள்ளுங்கள்..ஆர்வம் இருந்தால் போதும். அனைத்து வயதினரும் வகுப்பில் சேரலாம்  .

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News