25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jan 05, 2024

சென்னை சலானி ஜீவல்லரி சார்பில் தங்க, வைர, வெள்ளி நகை கண்காட்சி

சலானி ஜீவல்லரி சார்பில் தங்கம், வைரம், நகைகளுக்கு மூன்று நாள் கண்காட்சிநம்நகரில் உள்ள தென்காசி ரோடு ,அமிழ் ஹோட்டலில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சியல் மணமகள் திருமண நகைகள், தினமும் அணிய லைட் வெயிட் கலெக்சன், பாரம்பரியத்தை உணர்த்தும் ஆன்டிக் நகைகள், டைமண்ட் நகைகள், தெய்வீகமான டெம்பிள் நகைகள்,வெள்ளி பாத்திரங்கள், விளக்குகள், அலங்காரப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.ஜனவரி 7ம் தேதி வரை இக் கண்காட்சி நடைபெறும். இக் கண்காட்சியை திருமதி ஆனந்தி அவர்கள் துவக்கி வைத்தார். காலை 10.00 மணி முதல் இரவு 8 .30 மணி வரை ஜனவரி 5,6,7,ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கண்காட்சியில் பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகளாக மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.

Jan 03, 2024

திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

2024 ஆம் ஆண்டின் முதல் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தந்து,திருச்சியில்20,000   கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து, மேலும் பல  புதிய  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடிஅவர்களின் இந்த வருட முதல் பயணம் திருச்சி விமான நிலையத்தில் 1112 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.வணக்கம் தமிழ் குடும்ப உறவுகள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறி உரையை தொடங்கினார். தற்போது துவக்கப்படும் 20000 கோடி ரூபாய் திட்டங்களால், தமிழகம் வளர்ச்சி அடையும். இத்திட்டங்கள் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் புதிய திட்டங்களால், தமிழகம் இன்னும் விரைவான வளர்ச்சி பெறும். உ அதன் வாயிலாக நாடும் வளர்ச்சி அடையும். பத்து ஆண்டுகளில், மத்திய அரசானது, கடலோர பகுதிகள் முன்னேற்றம், மீனவர்களின் நலன் போன்ற வற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது. தமிழ் இளைஞர்களின் மீது, எனக்கு அபார நம்பிக்கை உள்ளது என்று கூறினார் .

Jan 02, 2024

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இராஜபாளையம் அணி வெற்றி

இராஜபாளையம் சிட்டி பேஸ்கட்பால் கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மூன்று நாட்கள் நடந்தன. இதில் திருநெல்வேலி, கோவை, தேனி மதுரை பல்வேறு பகுதிகளில் இருந்து 18 அணிகள் பங்கேற்றன. இராஜபாளையத்தில் நடந்த மாநில கூடைப்பந்து இறுதிப் போட்டியில் திருவேங்கடம் அணியை வென்று இராஜபாளையம் அணி முதலிடம் பெற்றது. திண்டுக்கல் உதவி ஊார்க்காவல் படை தளபதி அஜய் கார்த்திக் ராஜா, தென்காசி ஏரியா கமாண்டர் பிரதாப் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை பரிசு தொகை வழங்கினார் ஏற்பாடுகளை இராஜபாளையம் சிட்டி பேஸ்கட் பால் கிளப் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த், பொருளாளர் ராம்சிங் ராஜா செய்திருந்தனர்

Dec 28, 2023

இராஜபாளையம் மணிமேகலை மன்றம் 66 ஆம் ஆண்டு விழா

டிசம்பர் 30 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காந்திகலைமன்றம் பி.எஸ்.கே ருக்மணி அம்மாள் அரங்கத்தில் திரு.பி.ஆர்.வெங்கட்ராம ராஜா அவர்கள் தலைமையில் கவிஞர். கிருஷ்ண பிரசாத் அவர்கள் மருத்துவர். த.அறம் அவர்கள் திரு.அ.லட்சுமிகாந்தன் அவர்கள், திரு.P.லோகநாதராஜா அவர்கள் வாழ்த்துரை வழங்குவார்கள். திரு. முனைவர் வி.ப.ஜெயசீலன் (விருதுநகர் ஆட்சத் தலைவர்) அவர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்.இலண்டனில் உலகளாவிய விருது பெற்ற டாக்டர் கு.கணேசன் அவர்களுக்கு பட்டமளித்தல் சிறந்த நூலாசிரியர்களுக்கு விருதுகள் அளித்தல் கவிதைப் போட்டை பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தல் நூல்கள் தேர்வு செய்த நடுவர்களுக்கு பாராட்டு, நூல்கள் வெளயீடு வழங்க உள்ளனர். வரவேற்புரை கொ.மா.கோ. இளங்கோ, மன்றத் தலைவர் குறிஞ்சிச் செல்வர் டாக்டர் கொ.மா.கோதண்டம், நன்றிஉரை V.K. பாரதி பீமா.

Dec 28, 2023

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி

நம் நகரில் மாநில கூடைப்பந்து போட்டி இராஜபாளையம் சிட்டி பேஸ்கெட் பால் கிளப் சார்பில் மூன்று நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான கூடைபந்து போட்டியில் கோவை, மதுரை, தேனி, போடி, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 18 அணிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இராஜபாளையம் அய்யனார் கோயில் ரோடு ஆனந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜீக்கள் கல்லூாயில் உள்ள இரண்டுஆடுகளங்களில் போட்டிகள் நடைபெறகின்றன.முன்னாள் இந்திய கூடை பந்தாட்ட வீரர் ராமசுப்பிரமணிய ராஜா நேற்று போட்டியை துவக்கி வைத்தார். சந்திர ராஜா.தலைமை வகித்தார்.  டிசம்பர் 29ம் தேதி நடைபெறும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.31,000தொகையுடன் டிராபி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இராஜபளையம் சிட்டிபேஸ்கட் பால் தலைவர் ராம்குமார் ராஜா, செயலாளர் பீமானந்த் பொருளாளர் ராம்சிங் ராஜா செய்துள்ளனர்.

Dec 26, 2023

பேரிகார்டுகளால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

இராஜபாளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மாயூரநாதர் சாமி கோவில் அடுத்து பள்ளி முன்பு போலிஸ் சார்பில் ரோட்டின் குறுக்கே பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் நடந்த இரண்டு டுவீலர் விபத்துகளை காரணம்காட்டி இதற்கு 100 மீட்டர் அருகே வளைவில் தடை ஏற்படுத்தும் விதமாக மற்றொரு பேரிகார்டை போலீசார் அமைத்துள்ளனர். இதனால் தொலைதூரங்களில் இருந்து வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.நெடுஞ்சாலை போக்குவரத்து அதிகாரிகளும், போலீசாரும் இதில் கவனம் செலுத்தி தடை ஏற்படும் போரிகார்டுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பால தடுப்பு சுவர் உடைந்துள்ளதால் குறுகலாக மாறியது. எச்சரிக்கைக்காக தற்காலிக கம்பிகளை ரோட்டில் ஒரு அடி உள்பகுதி வைத்துள்ளனர். பல்வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென எதிர்ப்படும் பள்ளம், தெரியாமல் தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதன் அருகே ரோட்டோரங்களில் வரிசையாக நிறுத்தப்படும் லாரிகளும் இடைஞ்சலை அதிகப்படுத்துகின்றன. இரவில் இதன் நிலை இன்னும் சிக்கல், மாதக்கணக்கில் தீர்வின்றி தொடரும் பாதிப்பை தடுக்க விரைந்து சரிசெய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 25, 2023

பாலித்தீன் பைகளில் உள்ள உணவுப் பொருள்களை சாப்பிட்டு பாதிப்பிற்கு உள்ளாகும் வன விலங்குகள்

அய்யனார் கோவில் ஆறு அதன் அருகே அமைந்துள்ள நீர்காத்த அய்யனார் கோவில் என பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்லும் சுற்றுலா தளமாக உள்ளது. பொது மக்கள் தடை செய்யப்பட்ட பாலிதீன் பொருட்களில் உணவுகளை கொண்டு வந்து வனவிலங்குகளுக்கு உணவு அளிப்பதுடன் கழிவுகளை ஆற்றின் அருகே போட்டு செல்கின்றனர்.இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் வனப்பகுதியில் யானை, மான், கரடி, காட்டெருமை, சாம்பல் நிற அணில் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் அதிகம் உள்ளது.இளைஞர்கள் ஆற்றின் அருகே சமைத்து போதையில் பாட்டில்களை உடைத்து விலங்குகள் நடமாடும் பகுதியில் வீசிசெல்வதும் தொடர்கிறது. குருங்குகள், இரையைத் தேடி காட்டிற்குள் செல்லாமல் அங்கு கீழே விழுந்து கிடக்கம் பாலிதீன் பைகளில் உள்ள உணவுகளை பையுடன் சேர்த்து சாப்பிடுகிறது. இதனால் வனவிலங்குகள் பாதிப்பிற்குள்ளாகின்றன்.இதைத் தவிர்க்க ஆற்றிற்கு வருபவர்களை நன்றாகக் கண்காணித்தும் சோதனைக் கூடத்தை தீவிரக் கண்காணிப்பிற்கு வனத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும் என வனவிலங்கு சமூக அலுவலர்கள் எதிர்பார்க்கின்றனர். எத்தனை கண்காணிப்பாளர்கள் இருப்பினும் மக்களாகிய நாமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.

Dec 22, 2023

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

ராஜபாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்ஆட்டோ டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.மாநிலத் தலைவர் அழகு சுந்தரம் தலைமையில் ,பொதுச்செயலாளர் வீரணன் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தனர்.இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி போக்குவரத்து போலீசார், ஆட்டோ டிரைவர்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கி,டிரைவர்கள் ஆட்டோ போக்குவரத்து விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது, உள்ளிட்ட விழிப்புணர்வை வலியுறுத்தினார். 

Dec 18, 2023

மருத்துவ சாதனையாளர் விருது பெற்ற  டாக்டர் கு.கணேசன்

.உலகதமிழ்சங்கம்சார்பில்சர்வதேசவாழ்நாள்மருத்துவசாதனையாளர்விருதுராஜபாளையத்தையத்சேர்ந்தடாக்டர்கு.கணேசன்அவர்களுக்குவழங்கப்பட்டது.விருதுபெற்றதற்காகராஜபாளையம்ரமணமெட்ரிக்,சி.பி.எஸ்.இ.,பள்ளிநிர்வாகம்சார்பில்பாராட்டுவிழாநடந்தது.பள்ளி தாளாளர் கிருஷ்ணவேணி தலைமை வகித்து விருது பெற்ற  டாக்டர் கு. கணேசனுக்கு நினைவு பரிசு வழங்கினார்

Dec 18, 2023

ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரி யில் பட்டமளிப்பு விழா

  ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.பல்வேறு துறைகளை சேர்ந்த 266 மாணவர்கள் பட்டம், பாராட்டு சான்று பெற்றனர். முதல்வர் கணேசன் வரவேற்றார். கல்வி குழும தலைமை அதிகாரி வெங்கட்ராஜ், நிர்வாக பொது மேலாளர் செல்வராஜ் பங்கேற்றனர்.ராம்கோ குரூப் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா தலைமை வகித்து பேசுகையில், "ஏற்கனவே பட்டம் பெற்ற மாணவர்கள் ராம்கோ சிமென்ட்ஸ், ராம்கோ டி.சி.எஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். சர்வதேச மட்டத்தில் நிலையான வளர்ச்சி இலக்குகளை மையமாகக் கொண்ட ஒப்பந்தத்தின் உறுப்பினராக கல்லுாரி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவு, திறன்களை சமூகம், நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என்றார்.அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் பேசுகையில்,"அறிவியல் துறைகளில் இந்திய மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. சுற்றுச்சூழலை சீர்குலைக்காமல் நிலையான வளர்ச்சியை உண்டாக்க வேண்டும்"என்றார்.துணை முதல்வர் ராஜ கருணாகரன் நன்றி கூறினார்.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News