25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jun 05, 2025

ராஜபாளையம் ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் இடப்பிரச்னையால் கிடப்பில் உள்ளது.

ராஜபாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் ஸ்டே ஷன்திட்டத்தில் ரூ.11.70கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத்ஸ்ரீ வத்ஸவா நேற்று மாலை ஆய்வு செய்தார்."  ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துவிட்டது. இவ்விஷயத்தில் மாநில அரசின் இடப்பிரச்சனை காரணமாக கிடப்பில் உள்ளது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடை போதிய அகலம் இல்லாததால் மலையடிப்பட்டி ரோடுவரை நீட்டிக்க முடியவில்லை. இரண்டா வது பிளாட்பார்ம் மேற் கூரை பணிகள் விரைவில் தொடங்கப்படும். பார்க்கிங் பணிகள் முடிந்துள்ளதால் ஒவ்வொன்றாக " மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார். 

Jun 02, 2025

ராஜபாளையம் சுற்று பகுதியில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

ராஜபாளையத்தை அடுத்து தேவதானம் சாஸ்தா கோயில் நீர்த்தேக் கத்தை அடிப்படையாகக் கொண்டு நகர குளம், பெரியகுளம், வாண்டையார் குளம், சேர்வராயன்குளம் உள்ளிட்ட பாசன பகுதியில் மூலம்3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நெல் பாசன விவசாயம் நடை பெறுகிறது. தற்போது2ம் போக சாகுபடிக்கான அறு வடை தீவிரமடைந்து வந்த நிலையில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இப்பகுதியில் நான்கு இடங்களில் திறக்கப்பட்டன.ராஜபாளையம் சுற்று பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த சாரல் மழையால் அறுவடை பணிகள் முடங்கி இருந்த நிலையில் மீண்டும் துவங்கியது. அறுவடை இயந்திரம் வாடகை குறைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அறுவடை பணிகள் மீண்டும் துவங்கியது. மதுரை, சோழ வந்தான், டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் இயந்திரங்கள் குவிந்து வருவதால் ஒரு மணி நேரம் அறுவடைக்கான வாடகை பெல்ட் வண்டிக்கு கடந்த அறுவடையை விட ரூ.500 குறைந்து2,500ம், டயர் வண்டிக்கு2 ஆயிரத்தில் இருந்து,1,700க்கு- குறைந்துள்ளது.மணிக்கு ரூ.500 வரை மீதமாவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

May 30, 2025

ராஜபாளையம் பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால்சாரல் மழை

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இத னால் அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் மலை பகு திகளுக்குள் சுற்றுலா பயணிகள், பக்தர்கள், விவசாயிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது.மேலும் அருவிகளிலும் நீர்வரத்து உள்ளதால் வனப் பகு திக்குள் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல நேற்றும் நகர் பகுதிகளிலும் மற்றும் சத்திரப்பட்டி, அய்ய னாபுரம், சேத்தூர், தளவாய்புரம், முகவூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன் புத்தூர் பகுதிகளிலும் சாரல் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

May 29, 2025

ராஜபாளையத்தில் புதுப்பிக்கப்பட்டபழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு.

ராஜபாளையம் நகராட்சியில் 2.90 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா நடந்தது.1969ல் கட்டப்பட்டு பழுதடைந்த நிலையில் காணப்பட்ட பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணி 2023ல் தொடங்கப்பட்டது. 23 கடைகள், 2 உணவகங்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறை என கட்டி புதுப்பிக்கப்பட்ட பழைய பஸ் ஸ்டாண்டை வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார். தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம்  திறந்து வைத்தார்.தென்காசி எம் .பி., ராணி, எம்.எல்.ஏ., தங்க பாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, சீர் மரபினர் வாரிய துணை தலைவர் ராசா அருண் மொழி முன்னிலை வகித்தனர்.

May 28, 2025

இராஜபாளையத்தில் மாம்பழ விற்பனை அதிகமாக உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் நகரம் பல்வேறு சிறப்புகளை கொண்டது. நூற்பு ஆலைகள் ஏராளமாக உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் மாந்தோப்புகளுக்கு பஞ்சமில்லை. இங்கு சப்பட்டை மற்றும் பஞ்சவர்ணம் ரக மாம்பழங்கள் அதிக மாக விளைகின்றன. இவை மற்ற பகுதி களில் விளைந்தாலும், ராஜபாளையம் பகுதியில் இருந்து விற்பனைக்கு வரும் சப்பட்டை, பஞ்சவர்ணம் ரக மாம்பழங்களுக்கு தனி சுவை உண்டு. ராஜபாளையம் மாம்பழங்கள், குறிப்பாக சப்பட்டை மாம்பழம் தனது தனித் துவமான சுவை மற்றும் வடிவமைப்புக்காக பெயர் பெற்றவை. சப்பட்டை ரக மாம்பழம் ஆப்பிளை போல இருக்கும். இது,புளிப்பு இல்லாமல் தித்திப்பாக இருக்கும் ஒரு வகை மாம்பழம். விருந்து உபசரிப் பின்போது இந்த வகை மாம்பழங்கள் முக்கியமாக இடம்பெறும். பஞ்சவர்ணம் ரக மாம்பழமும், சப்பட்டை ரகத்தை போலவே, ராஜபாளையத்தின் ஒரு பிரபலமான மாம்பழ வகையாகும். இந்த2 ரக மாம்பழமும் மாம்பழ பிரியர்கள் அனைவரையும் கவர்ந்து இழுப்பவை. எனவே ராஜபாளையம் பகுதியில் விளையும் மாம்பழங்களுக்கு எப்போதுமே கடும் கிராக்கி இருப்பதும் அனைவரும் அறிந்தது.கடந்த ஆண்டு மாம்பழங்கள் விலை ரூ.120 முதல் ரூ.140 வரை இருந்தது. தற் போது மா மரங்களில் நோய் தாக்குதல் காரணமாக விளைச்சல் குறைந்து உள்ளது. இதனால் தற்போது மாம்பழம் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் இப்போது விற்பனை சூடுபிடித்து உள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு மாம்பழங்கள் அனுப்பிவைக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மாம்பழங்களை வாங்கி செல்கிறார்கள். 

May 20, 2025

ராஜபாளையம் தென்றல் நகர் அருகே குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு திறப்பு

ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி சம்பந்தபுரம் பகுதிக்கு உட்பட்ட தென்றல் நகர் அருகே நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் 3 மாடிகளுடன் 15 பிளாக்குகளாக 864 தொகுப்பு வீடுகள் கட்ட 2020 மே மாதம் பூமி பூஜை போடப்பட்டது.இதற்காக ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து 2023ல் பணிகள் முடிந்தன.ஒவ்வொரு வீடும் 400 சதுர அடி பரப்பளவில் சமையலறை, படுக்கையறை,குளியலறை, கழிப்பறை, வரவேற்பு அறை வசதிகளுடன் கட்டப்பட்டது.பணிகள் முடிந்த நிலையில் கழிவு நீர் வெளியேற்றம் சுத்திகரிப்பு பணிகளுக்காக தாமதமாகி பணிகள் முடிவு பெற்றன.முதல் கட்டமாக 100 பயனாளிகளுக்கு வீடு ஒப்படைப்பிற்கான ஆணை  வழங்கப்பட்டது.நேற்று அடுக்குமாடி குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் எம். எல். ஏ., தங்கபாண்டியன், உதவி நிர்வாக பொறியாளர் ராஜ கொம்பையா பாண்டியன், உதவி பொறியாளர் ஸ்டெசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

May 12, 2025

செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர்

செல்வின் சிறப்பு பல் மருத்துவமனை & இம்பிளான்ட் சென்டர் Grand Opening of Our Digital Dentistry & CAD-CAM Lab!Transforming Smiles with TechnologyDate : 20th April 2025, SUNDAY ,Time: 9:00 AMVenue : SELVIN MULTISPECIALITY DENTAL CLINIC, RajapalayamInauguration ByThiru. K. GOPALSAMYFormer MLA, Rajapalayam.Chief GuestThiru. A. GOPALSAMY , Chairman, TP Mills, RajapalayamMentorsDr. P. KAMALASHANKAR MDS.,SathankulamProf. Dr. SABARINATHAN MDS.CSI Dental college, MaduraiWith thanksDr. S. SELVINRAJ MDS..DN. Ortho (ITALY), FICOI (USA)Mastership in Digital Dentistry (Egypt)Dr. CATHERINE SELVINRAJ BDSCosmetic Dental SurgeonWe are Launching Digital Dentistry & CAD-CAM Lab-bringing faster, more accurate, and comfortable dental care.Better technology. Better smiles

May 12, 2025

Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS)

Manickam's Badminton Indoor Stadium, Rajapalayam.(3 WOODEN COURTS) Morning & Evening Batches are Available,  Boys & girls SUMMER COACHING CAMP'25 , APRIL 15 TH  OnwardsSpecial FeaturesIndividual Focus for all Players.Physical Fitness and Tournament based Training ProgramCamp for Beginners / Intermediate / Advanced Level Players T.P. Manicka Kumar B.A., C.P.Ed., NIS., Mentor & Head CoachG. Kanmani B.A., M.P.Ed., NIS.,Manickam's Badminton Indoor Stadium, 47F/30 Nadar Complex (1st floor) Kamarajar Nagar, (Co-Milk Society Opp.) Rajapalayam.  Contact: 9791606566,  9791606567. 

May 07, 2025

ராஜபாளையம் தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகள் முடிந்தும்,  பழைய முறையில் விநியோகத்தால் ராஜபாளையம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு.

விருதுநகர் மாவட்டத்திலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள ராஜபாளையம் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம்  செய்ய ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் 2018ல் தொடங்கப்பட்டது.ராஜபாளை யம் மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோயில் பகுதியிலிருந்து 6வது மைல் பகுதியில் இரண்டு நீர்த்தேக்கங்கள் மூலம் 28 ஆயிரம் இணைப்புகளுக்கு நபருக்கு 60 லிட்டர் வரை ஏற்கனவே குடிநீர் வினியோகம் செய் யப்பட்டது.தற்போது புதிதாக 10. ஆயிரம் இணைப்புகள் என 38,800 இணைப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் 6வது மைல் தேக்க குடி நீரும், தாமிரபரணி குடிநீர் கலந்து பழைய இணைப்புகள் வழியே விநியோகிக்கப்படுகிறது.குடிநீர் வடிகால் அதிகாரிகள்: குடிநீர் விநியோகத்திற்கு நகராட்சி 18 மண்டலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது. ஓராண்டுக்கு மேல் சோதனை முழுமை  அடைந்த நிலையில் 7 மண்டலங்கள் டிச. ல் நகராட்சியிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது.வரி உயர்வுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரி வித்ததால் கவுன்சில் கூட்டத்தில் நிறுத்தி வைக் கப்பட்டுள்ளது.முழுவதும் ஒப்படைக்கப்படும் சூழலில் புதியவரி நிர்ணயம் செயல்பாட் டிற்கு கொண்டு வர வேண் டும் என்பதால் பழைய குழாய்கள் வழியே வினி யோகம் செய்யப்படுகிறது. இதனால் நகராட்சிக்கு உயர்த்தப்பட்ட வரியை ' வசூலிக்க முடியாமல் வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், புதிய வரிவசூல், தண்ணீர் திருட்டு போன்றவை கண் காணிக்க முடியாததால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

May 05, 2025

உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு கடைகளில் குவியும் பொதுமக்கள்.

 கொளுத்தும் வெயிலில் வெளியே வரும் மக்கள் குளிர்பான கடைகளை நாடினாலும், உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமான பதநீர், நுங்கு அதிகம் பருகுகின்றனர். அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் முக்கிய தேவைகளுக்காக மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்கின்றனர்.அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கத்தால் பதநீர், நுங்கு விற்பனை சூடுபிடித்துள்ளது.  இது குறித்து நுங்கு நுங்கு வியாபாரி கூறுகையில்: பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் கடும் வெயில் அதிகரித்து வரும் காலங்களில் பதநீர், நுங்கு விற்பனை அதிகமாக உள்ளது. தென்காசி, சுரண்டை உள்ளிட்ட பகுதியில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்..அதேபோல 10 நுங்கு ரூ.100-க்கு விற்பனை செய்கிறோம்.தற்போது கடும் வெயில் சுட்டெரித்து வரு வதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதநீர், நுங்குவாங்கி செல்கின்றனர் என்று கூறினார். 

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 19 20

AD's



More News