25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Jan 26, 2024

ராகவேந்திரா பிருந்தாவன பிரதிஷ்டை

 ஜனவரி 24 ,காலை மூன்றாம் கால யாக பூஜை அபிஷேகம் தொடங்கி காலை 10.00 மணிக்கு ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவன பிரதிஷ்டை நடந்தது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மகா அபிஷேகம் அலங்காரம், அன்னதானம் நடைபெற்றது. இரவு பிரகலாதர் வீதி உலா தீப ஆராதனை நடந்தது. இராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தில் ராகவேந்திரா பிருந்தாவன பிரதிஷ்டை விழா நடந்தது.

Jan 23, 2024

பர்னிச்சர் ஷோரூம் திறப்பு விழா

ராஜபாளையம் டி.பி.,மில் ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் பழைய பஸ் ஸ்டாண்டு பஸ்ஸ்டாப் அருகே டைகர் வுட் பர்னிச்சர் ஷோரூம் பாம்பே குரூப் அதிபர் இஸ்மாயில் தலைமையில், நகராட்சி தலைவர் பவித்ரா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கடை உரிமையாளர் டைகர் சம்சுதீன் வரவேற்க,விழாவில் சென்னை தொழிலதிபர் ராம்சிங் ராஜா, பாபி மேட்ரஸ் நிர்வாக இயக்குனர் பாலமுருகன், எம்.எல்.ஏ., தங்க பாண்டியன், எம்.பி., தனுஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ., வி.பி.ராஜன், வைமா கல்வி குழும தலைவர் திருப்பதி செல்வன், நகர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

Jan 18, 2024

விவசாயிகள் வேதனை, கண்மாய் ஷட்டர் கசிவுகளால், வீணாகும் தண்ணீர்.

தொடர் மழையால் கண்மாய் பெருகி மறுகால் பாய்கிறது. இதனால் பாசனப்பகுதி, நெல்விவசாயிகள் தற்போதைய தண்ணீர் தேவைக்கு பிரச்சனைஇன்றி உள்ளனர். இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி வாகைக்குளம்கண்மாயில் ஷட்டர்களில் கசிவால் தண்ணீர் வீணாக வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோடை விவசாயத்திற்கு தேக்கி வைக்க வேண்டிய கண்மாய் நீர் கலுங்கல் அருகேஉள்ள இரண்டு ஷட்டர்களில் உள்ள கசிவுகளால் கண்காணிப்பின்றி பெருமளவு வெளியேறி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Jan 18, 2024

ராம்கோ குரூப் பொங்கல் விழா

இராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ்மன்ற விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர்கள் நிர்மலா ராஜீ, ஸ்ரீகண்டன்ராஜா, ராமராஜீ சர்ஜிகல் நிர்வாக இயக்குனர் ராம்குமார் ராஜா, ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிஷன் இயக்குனர் மோகன் ரெங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் தொழிலாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

Jan 17, 2024

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை அடுத்து இராஜபாளையம் பகுதி வாகன ஓட்டுனர்களுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் செண்பகவல்லி தலைமையில் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Jan 17, 2024

கண்ணாடி கூரை ரயில் சோதனை ஒட்டம்

22 நவீன பெட்டிகளை கொண்ட சோதனை ரயில் ஒட்டம் மதுரையில் இருந்து கொல்லம் வரை 2 நாட்கள் நடந்தது. இதில் கண்ணாடி கூரை கொண்ட விஸ்டா டோம் என சுற்றுலா பயணிகளுக்கான பெட்டி ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இந்த சோதனை வெற்றி அடைந்த பின் 18 முதல் 22 பெட்டிகளை கொண்ட ரயில்களை மதுரை கொல்லம் இடையே இயக்க முடியும், கூடுதல் பயணிகள் செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் கூறினர். மதுரையில் இருந்து கொல்லத்திற்கு இராஜபாளையம் வழியாக சுற்றுலா பயணிகளுக்கான விஸ்டா டோம் எனும் கண்ணாடி கூரை பெட்டிகளுடன் கூடிய ரயில் மலைப்பாதையில் சோதனை ஓட்டம் நடந்தது. 

Jan 12, 2024

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL,TWENTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET

CHINMAYA VIDYALAYA SRIMATHI LINGAMMAL RAMARAJU MATRICULATION HIGHER SECONDARY SCHOOL RAJAPALAYAMCordially request your gracious presence on the occasion of TWENTY-FIFTH SCHOOL YEAR SPORTS MEET.

Jan 09, 2024

இடைவிடாத மழையினால் சாய்ந்த நெற்பயிர்கள்.விவசாயிகள் வேதனை

இராஜபாளையத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.  இத்துடன் வானிலை அறிக்கையும் ஒரு வாரத்திற்கு பரவலான மழை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.பருவம் தவறிய இந்தொடர் மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் நெற் பயிர்கள் மண்ணில் சாய்ந்து வருகிறது. விவசாயிகளை பெரிதும் பாதித்து வருகிறது. அறுவடையை எதிர்பார்க்கும் நேரத்தில் ஏற்படும் நஷ்டத்தை எவ்வாறு சமாளிப்பது என்ற வருத்தத்தில் உள்ளனர்.

Jan 08, 2024

இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் அறக்கட்டளை 39-ஆம் ஆண்டு விழா I

இராஜபாளையம் மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில் 07.01.2024 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00மணிக்கு நடைபெற்றது. பொதுமக்களுக்கான சிவபுராணம் எழுதும் போட்டி 06.01.2024 சணிக்கிழைைம பிற்பகல் 3 மணிக்கு மறக்கண்ணு செட்டியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. மேலும் இன்னிசை, பேருரை, நூல் வெளியீடு, பரிசளிப்பு, பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது திரு கொ.பூமிநாதன் அவர்கள் தலைமையில் திரு.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள் முன்னிலையில், திரு. இரா.மாரியப்பன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார் சங்க இலக்கியங்களில் சமய வளர்ச்சிக்கான வழிபாட்டு முறைகளும்,சமுதாய வளர்ச்சிக்கான வழிமுறைகளும் நூல் வெளியிடப்பட்டது. திரு.ஆ.சங்கரலிங்கம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.மன்றத் தொடர் பணிகள்இல்லந்தோறும் திருமுறை ஓதுதல் நூல்கள் வெளியீடு, மகாசிவராத்திரி வழிபாடு நடத்தி, அன்றே மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு வழிபாட்டுப் பிரசாதம், வேஷ்டி, சேலை, பழம் வழங்கி வருதல் தேவார இன்னிசை பெரியபுராணம் கட்டுரைப் போட்டி நடத்தி பரிசளித்தல், மாதந்தோறும் ஆங்கில மாத இரண்டாவது சனிக்கிழமை கூட்டம் நடத்துதல் மேலும் விபரங்களுக்கு இராஜபாளையம் சேக்கிழார் மன்றம் என்னும் Youtube விழியத்தைக் காண  E.mail: sekkizhar1986@gmail.com

Jan 08, 2024

இராஜபாளையம் பச்சமடம் ஊருணியில் செத்து மிதந்த ஆமைகள்

இராஜபாளையம் நகராட்சி பச்சமடம் குடியிருப்பு பகுதியில் ஊருணி உள்ளது. இதில் மூன்று நாட்களுக்குள் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் செத்து மிதந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருணி குப்பை, கழிவுகள் கலக்காததாக உள்ளது. இதனால் மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், ஆமைகள், நீர் பறவைகள் என இயற்கையான சூழல் நிலவியது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணியை ஆழப்படுத்தி, பாதுகாப்பு வேலி அமைத்து நடைப்பயிற்சி இடமாக மாற்ற ரூ.75 லட்சம் ஒதுக்கி பணிகள் தொடங்கின. பெரும்பாலான பணிகள்முடிந்து, தற்போது வரை பாதுகாப்பு வேலி அமைக்காததால் திறந்தவெளி பார், சூதாடும் இடமாக மாறி உள்ளது. ஆமைகள் உயிரிழப்புக்கான காரணம் தெரியவில்லை இரு நாட்களில் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணி துவங்கப்படும் என்றனர்!

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 14 15

AD's



More News