சிவகாசி, அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! " மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர்.கல்லூரியின் முதல்வர் முனைவர். அசோக் அவர்கள் துவங்கி வைத்து வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி. திலகம், அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் இந்த கருத்துரங்கில் அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியைச் சார்ந்த 1400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களை கல்லூரியின் விரிவுரையாளர் திரு. சேவர்கொடியோன் அவர்கள் வரவேற்று பேசினார். குழந்தை திருமணத்தை தடுத்திட சமூகத்தின் பங்கு என்ற தலைப்பில் மதுரை மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களும், குழந்தை திருமணங்கள், புகார்கள் அளிக்கும் வழிமுறைகள் உதவி எண்கள் என்ற தலைப்பில் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர்திரு. ராஜா சக்திவேல், அவர்களும், குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் சட்ட விளைவுகள் என்ற தலைப்பில் வழக்கறிஞர். திருமதி. பாண்டீஸ்வரி அவர்களும்,குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடு என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர்வழக்கறிஞர். ராஜகோபால் அவர்களும் குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும் குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்திட சட்டப்பூர்வ விளக்கங்களையும், தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள். இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை இணைந்து ஏற்றனர். இறுதியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களையும், மாணவ மாணவிகளுக்கும் கல்லூரியில் விரிவுரையாளர் திருமதி நளினா அவர்கள் நன்றி கூறினார்.
மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டியுள்ள நீர் நிலைகள், ஏரி, குளங்களில் பல கட்டங்களாக பல்வேறு நாடுகளில் இருந்து அரிய வகை பறவைகள், காட்டு பறவைகள் உணவிற்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் முகாமிடும்.ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி, ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் நேச்சர்கிளப் உறுப்பினர்கள், பறவை ஆர்வலர்கள் இச்செயல்களில் ஈடுபட்டு கண்டறிந்து ,அவற்றைப் பதிவு செய்து வருகின்றனர்.சைபீரியா மற்றும் சீனாவில் அதிகம் உள்ளன. கூட்டம் கூட் டமாக இந்தியா மற்றும் அரேபியா கடலை தாண்டி தெற்கு ஆப்பிரிக்காவில் குளிர்காலத்தை கழிக்கின் றன வல்லுாறு குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணி பறவை ராஜபாளையத்தில் 10 ஆண் டுகளுக்கு பின் நேச்சர் கிளப்பை சேர்ந்தபறவை ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர்.ஆண் அடர் சாம்பல் நிறத்திலும் தொடைகள் மற்றும் அடிவால் பகுதியில் சிவந்த பழுப்பு நிறத்திலும் கண் வளையம் அழகு பூ மற்றும் பாதங்கள் சிவந்த ஆரஞ்சு நிலத்திலும் காணப்படும். பெண் இனத்தில் மேல்புறம் அங்கே நிறத்திலும் அடிப் பகுதியில்வெண்மையாக வும் காணப்படும்.அரிய வகையான வல்லுாறு வர்தா புயலுக்குபின்தென்பட்டுள்ளது.நீண்டஆண்டுகளுக்குப்பின் ராஜபாளையத்தில் தென்பட்டுள்ளதற்கு காரணம் ,கடந்த சில ஆண்டுகளாக தொடர் குளிர்ச்சி உள்ளிட்ட கால நிலை மாற்றம் காரணமாக இருக்கலாம் என்றார்.
சிவகாசி, ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் விருதுநகர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை இணைந்து மத்திய, மாநில அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டமான "பெண் குழந்தைகளை காப்போம்! பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்!! " மூலம்"குழந்தை திருமணத்தை தடுத்து, குழந்தைகள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்" ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். முத்துலட்சுமி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.சிறப்புரையில்,திருமதி கி. திலகம், மாவட்ட சமூக நல அலுவலர்,கல்லூரிமுதல்வர், முனைவர். பாலமுருகன் அவர்கள் துவங்கி வைத்து உரையாற்றினாரகள். மேலும் இந்த கருத்துரங்கில் மனநல ஆலோசகர், திருமதி. கெங்கா விஜயராகவன், குழந்தைகள் நலக்குழு, உறுப்பினர் .திருமதி ஜெபா கிறிஸ்டினா,குழந்தை ஆலோசனை உளவியலாளர், திருமதி. ராதிகா ராமன், சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் ஸ்பார்க்ளர் அமைப்பின் தலைவர் திரு. ஞானப்பிரகாசம், ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் இயக்குனர் வழக்கறிஞர் ராஜகோபால், ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு கருத்துக்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். சிறப்பு அழைப்பாளர்கள் ,குழந்தை திருமணத்தின் சமூக, கல்வி மற்றும் சட்டப் பாதிப்புகளை விளக்கி, தடுப்பு நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்தினர். மேலும்குழந்தை திருமணங்களை தடுக்கும் அரசு நடவடிக்கைகள், புகார் முறை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுத்திட உளவியல் தலையீடுகள் மற்றும் குடும்ப ஆலோசனையின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்திட சட்டப்பூர்வ விளக்கங்களையும், தடுப்பதில் மாணவ, மாணவிகளின் பங்கு குறித்தும் எடுத்துரைத்தார்கள். இறுதியாக குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து விளக்கி, மாணவர்களை சமூக மாற்றத்திற்கான தூதர்களாக உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நிகழ்ச்சியில் வந்து கொண்ட அனைவரும் “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழியை இணைந்து ஏற்றனர்.
முப்பதும் தப்பாமே என்ற திருப்பாவை முற்றோதல் விழாவில் ,ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கோதை நாச்சியார் தொண்டர் குழாம் சார்பில் திரளான பெண்கள் பங்கேற்று ஆண்டாளுக்கு பல்வேறுமங்கல பொருட்கள் கொண்ட சீர்வரிசை தட்டினை பெண்கள் ஏந்தி நான்கு ரதவீதிகளில், திருப்பாவை பாடல்கள் பாடி வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் சமர்ப்பித்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆண்டாள் வேடம் அணிந்த பரதநாட்டிய குழுவினரின் நாட்டியம், திருப்பாவை பாடல்கள் முற்றோதலும்ஆண்டாள் ஆடிப்பூர பந்தலில், நடந்தது. இதில்குலசேகரமடம் வீரவநல்லூர் ராமபிர மேய ராமானுஜ ஜீயர் உட்பட பல்வேறு மடங்களின் ஜியர்கள், சாதுக்கள் பங்கேற்றனர்..
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார நகரில்திருவண்ணாமலை, செண்பகத்தோப்பு, மம்சாபுரம் தோப்புகளில் ஆண்டு தோறும் பனங்கிழங்குகள் விளைச்சல் .பனை விவசாயிகள் மண்ணில் இருந்து தோண்டி எடுத்து சுத்தம் செய்து சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். மார்கழி மாதம் துவங்கும் பனங்கிழங்கு விற்பனை மாசி, பங்குனி மாதம் வரை நடக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பல்வேறு பஜார் வீதிகளில் வியாபாரிகள் 25 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100 முதல் 200 வரை விற்கின்றனர்.மனிதர்களின் உடல் நலனுக்கு மிகவும் உகந்தது என்பதால் , வேலைக்குசென்று திரும்பும் பெண்கள் ஆர்வத்துடன் பனங்கிழங்குகளை வாங்கி செல்கின்றனர்
திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார். இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் பயிற்நுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், வத்திராயிருப்பு லயன்ஸ் சங்கம் சார்பில் நிகழ்வில் மண்டலத் தலைவர் சுப்பையா , மாவட்ட தலைவர் ஆரியன் மதுரம், லயன்ஸ் செயலாளர் அறிவொளி முருகன் மற்றும் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தர்கள்.
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு ராஜபாளையத்தில், சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் ,பெண்கள் பஜனை பாராயண குழுவினர் 365 படிகளுக்கும் ஒவ்வொன்றாக சூடம் ஏற்றி பூக்கள் துாவி படிகளில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து வழிபாடு செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது பக்தர்களுக்கு பிரசாதமாகதேங்காய், பழம் வழங்கினர்.
ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அய்யனார் கோவில் விருதுநகர் மாவட்டம் ஆற்று பகுதியில்,உள்ள நீராவி முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில், பிராவடியார், மற்றும் கோட்டை மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவ தால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. அதேபோல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களும் நிரம்பின. ஆதலால் மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், பிரண்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் குளம்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை பழைய பாளையம், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, திருவனந்தபு ரம் ஆகிய நான்கு கோட்டை சாவடிகளில் இருந்து சாமை கதிர் கட்டுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வீட்டில் பூஜை செய்து உற வினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் சாமை கதிர்களை வழங்கி மகிழ்ந்தனர் ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமூகம் சார்பில் விவசாயம் செழிக்கவும், உறவுகளுக்குள் எழுந் துள்ள பூசல்களை சரி செய்யவும், சொந்த பந்தங்களை நேரில் கண்டு மகிழ்ச்சியை பரிமாறவும் ''கொத்தலு' என்ற புதியல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஊர் நிர்வாகம் சார்பில் சாமை கதிர்கள் அறுவடை செய்து பொது இடத்தில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்த பின் மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகரம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர். அதேபோல் ஒவ்வொருவரும் பூஜித்த கதிர்களை எடுத்துக் கொண்டு உற வினர் வீடுகளுக்கு சென்று வழங்கி உறவுகளை புதுப்பிப்பர்.
கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ,ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகா தேவ அஷ்டமி, சிறப்பு வழிபாடு அங்க பிரதட்சணம் நடந்தது.காலையிலிருந்து, தொடர் பஜனை, யாக பூஜைகள் ,தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.புத்திர பாக்கியம், திருமணதடை விலக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் பலர் அங்க பிரதட்சணம் செய்தனர். அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.