25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

May 15, 2024

குளிர்ந்தது இராஜபாளையம்

நம் நகரில் கடந்த 3 நாட்களாக தொடர்மழை காரணமாக அக்னி நட்சத்திர வெயிலிலிருந்து நாம் தப்பித்துள்ளோம். இராஜபாளையம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழைபெய்து வந்தது. கடந்த இரண்டு நாட்களாக பகலிலும், இரவு நேரத்திலும், ஒரளவு இடியுடன் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதுடன், வெள்ள நீர் கரை புரண்டு ஓடியது. குடிநீர் தேக்கத்தில் நீர் திருப்பி விடப்படும் .ஆற்றின் அதிக நீர்வரத்தால் அருகாமையில் உள்ள புதுக்குளம் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து காணப்பட்டது.கோடை மழையை எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ,  இத்தொடர் மழை மகிழ்ச்சியை தந்துள்ளது.

May 09, 2024

புதுப்பாளையம் முத்தாலம்மன் பொங்கல் விழா

இராஜபாளையம் புதுப்பாளையம் முத்தாலம்மன் கோயில் சித்திரை திருவிழா இரண்டு நாள் நடைபெற்றது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் மதுரை ராஜா கடைதெரு, பிஎஸ்கே பார்க். அங்கையராஜா தெரு, வளையல் செட்டியார் தெரு, சிதம்பர மூப்பனார் தெரு, வழியே வீதி உலா வந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டு வழிபாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.

May 08, 2024

பிளஸ் 2 தேர்வில் விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 397 அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளன. தமிழகத்தில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று ,திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. மாணவர்களில் 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் 96.44 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Apr 26, 2024

யார் மண்ணை அப்புறப்படுத்துவார்கள்.

இராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டுமான பணிகள் 15 மாதங்களாக நடந்து வருகிறது. இதற்காக அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரே திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் தற்காலிக பஸ் ஸ்டாப் இயங்கி வருகிறது.பயணிகள் வெயில், மழையில் இருந்து ஒதுங்க தற்காலிக கூரை அமைக்கப்பட்டது. அவை மழை வெயிலில் ஒதுங்க போதிய அளவு இல்லை. தற்போது கான்கிரீட் தூண்களுடன் அமைத்து பஸ்ஸ்டாப் கட்டுமானத்திற்கு பணிகள் தொடங்கின. பணிகளை முடிக்க எதிர்பார்க்கும் சூழலில் கிடப்பில் போட்டுள்ளதோடு, இதற்காக அள்ளப்பட்ட மண் மெயின் ரோட்டில் பஸ் ஸ்டாப் முன்பு இடையூறாக குவித்து வைத்துள்ளனர்.ஏற்கனவே இடம் இன்றி ரோட்டை அடைத்து பஸ்கள் ஆக்கிரமிக்கும் நிலையில், குவிந்துள்ள மண்ணும் தடையாக மாறியதால் கர்ப்பிணிகள், மாணவிகள், பெண்கள், பஸ் நிற்கும் போது மண் குவியலை கடந்து செல்ல சறுக்கி விழுவதுடன் இடம் இன்றிதவிக்கின்றனர்.

Apr 24, 2024

மாரியம்மன் கோவில் பூமிதி விழா

23 ஏப்ரல்  இராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா வெகு சிறப்பாக நாட பெற்றது. 5000த்திற்கும் மேற்பட்ட  பக்தர்கள் பூ இறங்கினார்கள்  மக்களும் பொறுப்புடன் இடித்துக் கொள்ளாமல், பொறுமையாகச்  சென்றதால் பூமிதி விழா அமைதி யாக நடைபெற்றது.

Apr 22, 2024

இராஜபாளையம் வேட்டைபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

வேட்டைபெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நம் நகரில் நடந்தது. ஆகம விதிப்படி 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 7.45 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ராம்கோ சேர்மன் திரு.பி.ஆர். வெங்கடராமராஜா குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

Apr 18, 2024

இராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் ராம நவமி.

இராஜபாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூரில் ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜை அலங்காரம் பழையபாளையம் ராமசாமி கோயில், மாடசாமி கோவில் முத்தாலம்மன் கோயில், கோதண்ட ராமசாமி கோயில், ஷீரடி சாய்பாபா கோயில், ஹரிஹர பெருமாள் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பல்வேறு இடங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Apr 13, 2024

நம் நகரில் மழை வரத்தால் விவசாயிகள் குளிர்ந்தனர்.

.தொடர் வெப்பக்காற்று வீசிய நிலையில், கன மழையால் நம் நகரில் குளிர்ந்த சூழல் நிலவியது. இந்நிலையில் மதியம் 12.00 மணி முதலே  ,வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. நேற்று மதியம் 3.00 மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேல் கனமழை பெய்ய துவங்கியது. இராஜபாளையம் நகர்ப்புறங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி பின் வடிந்தது.

Apr 12, 2024

திரு.K.K.தேசிங்குராஜா அவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்)

யுகாதி திருநாளை முன்னிட்டு 07.04.2024 அன்று ராஜபாளையம் திருவனந்தபுரம் கோட்டையில் நடைபெற்ற முன்னாள் மகாசபை தலைவர்திரு.K.K.தேசிங்குராஜாஅவர்களின் துணைவியார் அமரர் K.D. ஸ்ரீரங்கம்மாள்அவர்களின் நினைவாக மகளிர் வாக்கத்தான் (நடைபயணம்) இராஜை நகரில்  முதல் முறையாக மிக விமர்சையாக நடைபெற்றது. இப்போட்டியில் 306 மகளிர் பங்கேற்று ஐந்து மற்றும் மூன்று கிலோ மீட்டர் நடைபயணம் செய்தார்கள் இவ்விழாவை Dr.லஷ்மிநிவேதிதா மற்றும் Dr.A.B. சித்ரா அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்கள்.இந்த அற்புதமான நிகழ்வை K.D. சக்திவேல் ராஜா, சான்ஸ்ரீ லெதர்ஸின் உரிமையாளர், தனது தாயாரின் நினைவாக, தனது தந்தை சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரின் ஆதரவுடன் இனிதே நடத்தினார்.P.R.விஜய்குமார் அறக்கட்டளையின் அறங்காவலர்  P.M.ராமராஜ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தொப்பிகளை வழங்கி ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்த திருவனந்தபுரம் கோட்டை சத்ரிய ராஜுக்கள் மகாசபை தலைவர் திரு.S.A.ஜெகநாதராஜா, K.K.தேசிங்குராஜா, குடும்பத்தார்கள், மகாசபை உறுப்பினர்கள், மகளிர் அணி, இளைஞர்கள் அனைவருக்கும்  K.D. சக்திவேல்ராஜா நன்றி கூறினார்..

Apr 09, 2024

Yugadhi Walkathon Event 

Under the azure skies of Yugadhi, amidst the blossoming spirit of renewal, the Walkathon Event on April 7, 2024, marked not only a celebration of health but also a heartfelt tribute to the cherished memory of K.D. SriRengammal, wife of Thiru.K.K.DesinguRaja, former president of Kshtriya Rajus community.  In a vibrant display of community solidarity, the Thiruvananthapuram Kottai Kshatriya Rajus' MahaSabai orchestrated a Health Awareness Programme that resonated with the rhythm of wellness.With the gracious sponsorship of K.D. Sakthivel Raja from Sansri Leathers, Ranipet, and the unwavering support of the event flourished into a testament of communal support. Thiru.P.M. Ramaraj, trustee of "Pride of Son" P.R.Vijaykumar Charitable Trust added a touch of unity by gifting caps to all participants, enhancing the sense of cohesion and camaraderie at the event.Amidst the gentle breeze of camaraderie, 305 spirited women took to the streets, embracing the challenge of the 3 Km and 5 Km Walkathon, each step echoing a pledge towards a healthier lifestyle.As the finish line approached, K.K.DesinguRaja family members, adorned each participant with medals, acknowledging their perseverance and determination.The air was filled with the aroma of accomplishment as winners were bestowed with awards, while everyone was treated to wholesome snacks, nurturing both body and soul.Dr. Lakshmi Nivedita and Dr.A.B.Chitra graced the event as esteemed guests, their inspiring words echoing the importance of regular walking practices for holistic well-being.Behind the scenes, the tireless efforts of Savadi leaders, dedicated members, volunteers, and spirited young boys, resonated with the ethos of community, making the event a resounding success.As the sun dipped below the horizon, casting a warm glow of satisfaction, the Walkathon Event emerged not just as a milestone in our district's history but as a beacon of inspiration for others to emulate in fostering health-centric initiatives.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News