25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 14, 2023

இராஜபாளையம் நகராட்சியில் மேம்பாட்டு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோடு சேதம் அடைந்ததால் பாதிப்பு

இராஜபாளையம் நகராட்சியில் தாமிரபரணி குடிநீர், பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனால் நகராட்சிக்குட்பட்ட அனைத்து ரோடுகளும் முழு அளவில் தோண்டப்பட்டு 80 சதவீதம் புதிய ரோடு அமைக்கப்பட்டு விட்டது. ரோடு பணிகளின் போது வாறுகால், பக்கவாட்ட கவரை உயர்த்தாமல் ரோடு அமைத்துள்ளனர். இதனால் வாறுகாலை விட ரோடு உயர்ந்து முழுமை அடையாமல் சாலைகள் பக்கவாட்டில் சரிந்தும் பல இடங்களில் சேதம் அடைந்தும் உள்ளது. இதனால் குறுகலான தெருக்கலில் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.இராஜபாளையம் நகராட்சி 16 வது வார்டில் கூரைபிள்ளையார் கோவில் தெரு, பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட சந்துகள் அடங்கியுள்ளது. தூய்மைபணியாளர்கள் வீடு தேடி வந்து குப்பை பெறுவதில் கடுமை காட்டுவதாகவும், கழிவுநீர் தேக்கத்தை அகற்றுவதில் மெத்தனம் உள்ளதாக கூறுகின்றனர். திருவள்ளுவர் தெரு தொடக்கத்தில் பேவர் பிளாக் ரோடு சிதைந்தும், தெருவின் நடுவே வாறுகால் தலைப்பாலம் உடைந்தும் விபத்து ஏற்படுத்துகிறது.பெத்தையா தெரு, திருவள்ளுவர் தெரு, பிள்ளையார் கோயில் தெரு பகுதி சந்துகளில் மேம்பாட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு புதிய ரோடு போடப்படவில்லை. குடியிருப்பு இடையே குவிக்கப்படும் குப்பை முறையான விழிப்புணர்வு ஏற்படுத்தி சரி செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Dec 11, 2023

அய்யனார் கோவில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்கனவே இராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில்  மழையால்  ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஆற்றில்நீர்வரத்துஅதிகரித்துவெள்ளப்பெருக்காகமாறியது.மழையைதொடர்ந்துஆற்றில்நீராடிமகிழவந்தசுற்றுலாபயணிகள்பாதுகாப்புகருதிவனத்துறையினரால் அய்யனார் கோவில் அருகே உள்ள ஆற்றைக் கடக்க அனுமதி மறுக்கப்பட்டது.

Dec 05, 2023

இலவச கண் சிகிச்சை முகாம்

ராஜபாளையத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கல்லமநா யக்கர்பட்டி அரசு மருத்து வமனை, சிவகாமிபுரம் சாலியர் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. தலைமை மருத்துவர் சுபாஷினி தலைமை வகிக்க,. சாலியர் ஊர் தலைவர் குரு பாக்கியம் வரவேற்றார். அரசு கண்  மருத்துவமனை மருத் துவ உதவியாளர்கள் பால் ராஜ், அழகர் ராஜ், ஆறுமுகம், காதர் குழுவினர் முன்னிலை வகித்தனர். பங்கேற்ற150 பயனாளிகளுக்கு ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, சொட்டு மருந்து, மாத்திரை வழங்கினார். ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக10 பேர் பரிந்துரை செய்யப்பட்டனர். சாலியர் உறவின்  முறை துணைத்தலைவர்  மன்னன் நன்றி கூறினார்.

Dec 04, 2023

இராஜபாளையத்தில் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப் போட்டிகள்

இராஜபாளையத்தில் நம் நகரில் அகத்தியர் தமிழ் சங்கம் கோதை நாச்சியார் தொண்டர்குழு சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருப்பாவை ஒப்புவித்தல் பேச்சு, ஓவிய போட்டிகள் நடைபெற்றன. அகத்தியர் தமிழ் சங்க தலைவர் அனிதா முன்னிலையில்   பாஜ மாநில விவசாய திட்டக்குழு ராமச்சந்திரராஜா துவக்கினார்  கோதை நாச்சியார் தொண்டர் குழு. அகத்தியர் சங்க உறுப்பினர்கள் தமிழ் ஆசிரியர்கள் பெற்றோர் கலந்து கொண்டனர்.இராஜபாளையம் சுற்று வட்டார பள்ளி கல்லூரி மாணவர்கள் 200 பேர் திருப்பாவை ஒப்புவித்தல் ஓவிய, பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டனர்.தேர்வு பெற்ற மாணவர்கள் இம்மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடக்கும் முற்றோதல் நிகழ்ச்சியில் வைத்து பரிசுகள் வழங்கப்பட உள்ளனர்.மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்இராஜபாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் நடந்தன.

Nov 27, 2023

ராஜபாளையம் சஞ்சீவி மலை குமாரசாமி கோயிலில் கார்த்திகை தீபம்

ராஜபாளையத்தில் திருக்கார்த்திகையை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஆற்றில் நீர் வரத்தை அடுத்து பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி மறுத்ததால் ஏமாற்றம் அடைந்தனர்..ஆற்றின் முன்பே முடி காணிக்கை, பொங்கலிட்டு பாதுகாப்பு வேலியில் மாலையிட்டு விளக்கேற்றி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர்.சிவானந்த பரமஹம்சர் ஆசிரமத்தில் நடந்த அன்னதானத்தில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று திரும்பினர்.மாலையில் சஞ்சீவி மலை முருகன் கோயிலில் நடந்த படி பூஜையில் பங்கேற்று கோயில் உச்சியில் ஏற்றிய கார்த்திகை தீபத்தில் பங்கேற்றனர்.

Nov 27, 2023

விழிப்புணர்வு பயிற்சி முகாம்

ராஜபாளையத்தில் மேற்பார்வை பொறியாளர் லதா தலைமையில் மின் சிக்கனம், மின் திறன், பாது காப்பு குறித்து விவசாயி களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது. உதவி செயற் பொறியாளர் செண்பக மூர்த்தி, வைத்தியநாதன் மின் மேலாண்மை, சூரிய மின்சாரம், மின் சிக்கனம், பாதுகாப்பு, விழிப் புணர்வு, மின் மோட்டார் பராமரிப்பு, சோலார் மின் திட்ட மானியங்கள், மானியம் பெறும் வழிமுறைகள் குறித்து விளக்கினர்.பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டங்கள், காப்பீடு செய்யும் முறை, கால அவகாசம், அரசு மானியம், தகுதி, கால்நடை பராமரிப்பு குறித்துகாணொளி காட்சிகள் மூலம் ராஜபாளையம் வேளாண் உதவி இயக்குனர் திருமலைச்சாமி விளக்கம் அளித்தனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்

Nov 24, 2023

கால நிலை மாற்றமும் யானைகளும் கருத்தரங்கம்

இராஜபாளையத்தில் தமிழ்நாடு வனத்துறை, வார் டபிள்யூ.டி.ஐ சார்பில் நடந்த காலநிலை மாற்றமும் யானைகளும் என்ற தலைப்பில் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்த கருத்தரங்கத்தில் கோவையை சேர்ந்த ஓசை அமைப்பு தலைவர் காளிதாசன் பேசுகையில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் இல்லையெனில் தென்னிந்தியா பாலைவனம் ஆகியிருக்கும்.தமிழ்நாட்டில் சராசரியாக 35 முதல் 50 நாட்கள் மட்டுமே மழை, ஆனால் இம்மலைக்காடுகளில் உள்ள புல்வெளிகள் 365 நாட்களும் தண்ணீரை நிறுத்தி வைத்து ஆறுகளுக்கு வழங்கி வருகிறது. யானைகள் தின்ற பழங்கள் மூலம் வயிற்றில் இருந்து வெளிவரும் விதை சிறந்த முளைக்கும் திறனை அடைகிறது.தினமும் இவை 30 கிலோ மீட்டர் நடந்து விதை பரவல் மூலம் 300 அரிய வகை மரங்கள் வளர உதவிபுரிவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  யானைகளை சார்ந்து சிறிய நுண்ணுயிர்கள் முதல் பெரிய மரங்கள் மான், மாடு, உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்கின்றன. எனவே இயற்கை சமன்பாட்டுக்கு  யானைகள் மிகவும் அவசியம் என்றார்.இயற்கைக்கு எதிரான செயல்களால் பல ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கி சென்று வருகிறோம். மாணவர்கள் கல்வியோடு இயற்கை சுற்றுச்சூழலையும் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்கான தீர்வுகளையும் மாணவர்களே கண்டுபிடிக்க வேண்டும். என்றார், முன்னதாக யானை வழித்தட பாதுகாப்பு உறுப்பினர் சுப்ரமணியன் வரவேற்றார்.தமிழ்நாடு பசுமை கால நிலை நிறுவன ஆட்சி குழு உறுப்பினர் நிர்மலா ராஜா கருத்தரங்கத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா வாழ்த்தினர். விழிப்புணர்வு செங்கோல் சென்னை கொண்டு செல்வதற்காக கூட்டத்தில் ஒப்படைக்கப்பட்டது. ஓவிய போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. யானைகள் புகைப்பட கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார்.

Nov 20, 2023

இராஜபாளையத்தில் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் நடைபெற்ற சைக்கிள் போட்டி

இராஜபாளையத்தில் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், விருதுநகர் சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் மாநில போட்டிகள் நடந்தன. 12, 14, 16, 18 வயதிற்கு மேற்பட்டோர் என 12 பிரிவுகளில் போட்டிகள் 5 முதல் 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு வயதிற்கு தகுந்தபடி அய்யனார் கோயில் வரை போட்டிகள் நடைபெற்றன.ஒலிம்பிக் சங்க துணைத் தலைவர் ராஜ்சத்யன் கொடி அசைத்து துவக்கி வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். ராஜிக்கள் கல்லூரி முதல்வர் வெங்கடேஷ்வரன் வரவேற்றார்.ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று நபர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை மாநில அமைப்பு செயலாளர் சுப்பிரமணிய ராஜா செய்திருந்தார்.

Nov 14, 2023

மின் குறைதீர் முகாம்

ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட கால மாக தீர்க்கப்படாத பிரச் சனைகள், இதர குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொ றியாளர் அலுவலகத்தில் நவ. 14 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்ட றிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற்பொறியாளர் முத்துராஜ்  தெரிவித்துள்ளார்.

Nov 04, 2023

‘தொல்லியல் சிறப்புமிக்க சஞ்சீவி மலையில் அமையும் பல்லுயிர் பூங்கா

ராஜபாளையம்: காலநிலைமாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பைதடுப்பதற்காக தமிழகத்தில் முதல்நகராக‘கார்பன் சமநிலைராஜபாளையம் திட்டம்’ தொடங்கப்பட்டுஉள்ளது. இதற்கான பிளானில்தொல்லியல் சிறப்பு வாய்ந்தசஞ்சீவி மலையில் பல்லுயிர்பூங்கா அமைக்கப்பட உள்ளது.ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக உள்ள சஞ்சீவி மலை கொத்தங்குளம் காப்புக்காடு என அழைக்கப்படுகிறது. சஞ்சீவி மலையில்252 வகையான தாவரங்கள் மற்றும் மூலிகைகள் நிறைந்துள்ளது. இந்த மலையில் சஞ்சீவிநாதர் கோயில் மற்றும் முருகன் கோயில் உள்ளது. இந்த மலை உச்சியில் உள்ள ராமர் பாறை என அழைக்கப்படும் தேன்தட்டுப்பாறையின் அடியில்3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் உள்ளதுவெண்சாந்து கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியங்களில் பெருங்கற்கால குறியீடுகள் அதிகமாக உள்ளது. மேலும் இப்பாறையில் கோட்டுருவமாக வரையப்பட்ட விஷ்ணு உருவம் உள்ளது. இந்த ஓவியங்கள் பராமரிப்பு இல்லாததால் இயற்கைசீற்றங்கள் மற்றும் மனிதர்களால் சேதமடைந்து வருகிறது. இதனால் இந்த ஓவியங்களில் இருந்து முழுமையான தகவல்களை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது. சஞ்சீவி மலையில் உள்ள பாறை ஓவியங்களை பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும் என தொல்லியல் துறை வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடியபாதிப்பை தடுப்பதற்கானதிட்டத்தில் தமிழகத்தில்முதல் நகராக ராஜபாளையம் தேர்வு செய்யப்பட்டது.‘கார்பன் சமநிலை ராஜபாளையம்’திட்டத்தை அமைச்சர்கள்மெய்யநாதன், சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தனர். நீண்ட கால திட்டமிடலாக2041ம் ஆண்டிற்குள்கார்பன் வெளியீட்டைசமப்படுத்துவதற்கான சிறப்பு திட்டங்கள் இத்திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட உள்ளது.இதில் சஞ்சீவி மலை காப்பு காடுகளை பாதுகாத்தல்மற்றும் பசுமை பரப்பை அதிகரித்தல், சுற்றுசூழல் பூங்காக்கள் வடிவமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, பசுமை எரிசக்தி முறைகள், நிலத்தடி நீர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டி உள்ள சுற்றுசூழல் மண்டலத்திற்கானமேலாண்மை திட்டத்தைவனத்துறையுடன் இணைந்து உருவாக்கி செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

1 2 ... 6 7 8 9 10 11 12 13 14 15

AD's



More News