25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள். >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஏழாம் திருநாள். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Sep 29, 2025

நான்கு வழிச் சாலை ரயில்வே ஸ்டீல் ஆர்க் பிரிட்ஜ் பணிகள் வேகம் .

நான்கு வழிச்சாலையின் ராஜபாளையம் வழியே செல்லும் ரயில்வே மேம்பால பணிகளின் ஸ்டீல் ஆர்க் பணிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது.முதல் கட்டமாக ராஜபாளையம் வரைதிருமங்கலம் கொல்லம் நான்கு வழிச்சாலை பணிகள் முடிந்துள்ளது. இதில் ஸ்ரீவில்லிபுத்துார் சித்தாலம்புத்துார், ராஜபாளையம் முதுகுடி ரயில்வே லைனை கடக்கும் மேம்பால பணிகள் தாமதமாக தொடங்கியதால் போக்குவரத்தில் இடையூறு ஏற்பட்டது.ரயில்வே மேம்பாலத்திற்கான கான்கிரீட் பணிகள் ராஜபாளையம் புது ஸ்டாண்ட் அடுத்துள்ள முதுகுடியில் முடிந்துள்ளது. தற்போது ரயில்வே லைன் இணைப்பிற்கு ஸ்டீல் ஆர்க் வெல்டு பணிகள் வேகமாக  ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடையும். கிருஷ்ணன் கோவிலில் இருந்து ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் ,அடுத்து முதுகுடி வரையிலான நான்கு வழிச்சாலையில் தடையின்றி பயணிக்க முடியும். இதன் மூலம் இரண்டு  நகர்ப்பகுதிகளிலும் ஏற்படும் நெரிசல் பெருமளவு குறையும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. 

Sep 24, 2025

இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் வற்றும் சாஸ்தா கோயில் நீர்த்தேக்கம்:

இரு மாதங்களாக கடும் வெயில் பாதிப்பினால் சுற்றியுள்ள நகரக்குளம், பெரியகுளம், வாண்டையார்குளம் உள்ளிட்ட கண்மாய்கள்நீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. 33 அடி உயரம் உள்ள சாஸ்தா கோயில் நீர் தேக்கம் தற்போது பாதி அளவை எட்டி உள்ளது. இந்நிலையில் இதை நம்பியுள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய பகுதிகளில் நெல் நடவு பணிக்காக வயல்களில் நாற்று தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.ராஜபாளையம் அடுத்த தேவதானம், சேத்துார் பகுதி விவசாயிகளுக்கு சாஸ்தா கோயில் நீர் தேக்கம் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாத நிலையில் கிணற்று பாசன விவசாயிகளும் அருகிலுள்ள விவசாயிகள் நீரை வாடகைக்கு வாங்கியும் நெல் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கோடை வெயில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் பருவ மழையைஎதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

Sep 15, 2025

ஆக்கிரமிப்புகளை அகற்ற ,புது பஸ் ஸ்டாண்ட் ரோடு விரிவாக்கத்திற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ்.

ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. மதுரை - கொல்லம் நான்கு வழிச்சாலை திட்டம் ரயில்வே பணிகள் தவிர மீதம் முடிவடையும் நிலையை எட்டி உள்ளது. ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மாநில நெடுஞ்சாலையில் சங்கரன்கோவில் முக்கில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் வரை வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, தேவையற்ற விபத்தும் உயிர் பலிகளும் ஏற்பட்டு வந்தது. அவ்வழியே வரும் வாகனங்கள் ஊருக்குள் நுழைய இந்த ரோட்டையே பயன் படுத்த வேண்டும். இதை  கருத்தில் கொண்டு சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கிலோ மீட்டர் துார ரோட்டை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராகவிரிவாக்கம் செய்ய நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனைத் தொடர்ந்து ஓடை மீது அனுமதி இன்றி அமைக்கப்பட்டுள்ள பாலங்களை அகற்ற வருவாய் துறை சார்பில் ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப் பட்டது.இந் நிலையில் சங்கரன் கோவில் ரோட்டில் நீர்வழி ஓடையில் உள்ள பொதுத்துறை வங்கி, திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் உள்ளிட்ட 45 அனுமதியற்ற பாலங்களை 15 நாட்களுக்குள் அகற்ற ,தவறும்பட்சத்தில் அரசு சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குரிய தொகை ஆக்கிரமிப்பாளர்களிடம், வசூல் செய்யப்படும் எனநெடுஞ்சாலைதுறைசார்பில் நோட்டீஸ்வழங்கப்பட்டுள்ளது.

Sep 12, 2025

ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை.

ராஜபாளையத்தில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.நேற்று முன்தினம் மாலை முதல் ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே, சங்கரன்கோவில் முக்கு, மாரியம்மன் கோயில்பஸ்ஸ்டாப்உள்ளிட்டபகுதிகளில்முதியோர், சிறுவர்கள், பெண்கள் என 40க்கும் மேற்பட்டோர் நாய் கடிக்கு உள்ளாகினர். 22 JAN மட்டும் 39 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வந்துள்ளனர்.கடிபட்ட 32 நபர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், பாதிப்பு அதிகம் உள்ள ஏழு பேருக்கு இமினோ குளோபிலின் மருந்தும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.ஒரே நாளில் பாதிப்பு அதிகமானவுடன் மாவட்ட மருத்துவ துறைக்கு தகவல் அளித்து சுகாதார துறையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 

Sep 03, 2025

ராஜபாளையத்தில் மக்காச்சோளம் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி ..

 ஆயிரக்கணக்கான ஏக்கரில், ராஜபாளையம் அருகே கோபாலபுரம், வடகரை, நரிக்குளம், கலங்காபேரிபுதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரியாக மக்காச் சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.பயிரிடப்பட்ட நாளில் இருந்து போதுமான மழை இல்லாமல் இருந்தது. தற்போது கிணறுகளில் போதுமான அளவில் உள்ள தண்ணீரை மக்காச்சோளத்திற்கு பாய்ச்சி வருகின்றனர். இதன் காரணமாக பயிர்கள் நன்கு விளைந்து ,பல இடங்களில் மக்காச்சோளம் கதிர் வீட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. சில இடங்களில் காட்டுப்பன்றிகள் தாக்குதல் இருந்தாலும் பயிர்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Aug 30, 2025

பள்ளி ஆண்டு விழா , முத்தமிழ் மன்ற விழா.

ராஜபாளையம் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வித்யா பவன் நர்சரி பள்ளிகளின் ஆண்டு விழா நடந்தது. ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்ற விழா நடந்தது.

Aug 27, 2025

விநாயகர் சதுர்த்தி பூஜை

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில், அருள்மிகு சொக்கர் என்ற மீனாட்சி சுந்தரேச்வரர் திருக்கோவில் மற்றும் அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரஸ்வாமி திருக்கோவில், இராஜபாளையம்.விநாயகர் சதுர்த்தி பூஜை.நிகழும் மங்களகரமான விஸ்வாவஸு வருடம் ஆவணி மாதம் 11ம் தேதி 27.08.2025 புதன்கிழமைஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள் ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள் அவர்களின் பரமானுக்ரஹத்துடன் விநாயகர் சதுர்த்தி பூஜை கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெற உள்ளது.நிகழ்ச்சி நிரல்காலை 6.00 மணி-அனுக்ஞை, சங்கல்பம், விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம் கணபதி ஹோமம்.காலை 7.15 மணி-பூர்ணாஹுதி, தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம்காலை 08.35 மணி-தீபாராதனை ப்ரசாதம்.இப்படிக்குபி.ஆர். வெங்கட்ராம ராஜாசேர்மன் - ராம்கோ குரூப். 

Aug 22, 2025

நெடுஞ்சாலை துறை சார்பில் சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையி லான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு.

ராஜபாளையம் சங்கரன்கோவில்  முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான சாலை விரிவாக்க பணிக்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் சாலையோர மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து சப்கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சங்கரன்கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரை ரோட்டில் அடிக்கடி விபத்து உயிர் பலி ராஜபாளையம் திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் ஏற்பட்டு வருகிறது. இதில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட குழாய்  உடைப்பு, பாதாள சாக்கடை குழாய் களில் ஏற்படும் கசிவு போன்றவைகளால் சாலை சேதம் ஆகி காணப்படுகிறது.சங்கரன் கோவில் முக்கு முதல் புது பஸ் ஸ்டாண்ட் வரையிலான 1.4 கி.மீ., துாரத்தை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டராக புதிதாக சாலைப் பணிகளை மேற்கொள்வதுடன் சாலையை விரிவாக்கம் செய்ய பரிந்துரையின் பேரில் நெடுஞ்சாலை துறை சார்பில் விரிவாக்கம் செய்ய ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Aug 19, 2025

இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம்.

ராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், மதுரை அப்பல்லோ மருத்துவ மனை சார்பில் இருதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை மருத்துவ முகாம் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஜவுளி வர்த்தக சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். செயலாளர் பாலகுமார் வரவேற்றார்.டிரஸ்டிகள் சுப்பிரமணிய ராஜா, செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். ராஜபாளையம் மூத்தோர் நல சங்க நிர்வாகிகள், ஜவுளி வர்த்தக சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.முகாமில், ஹீமோகுளோபின், இ.சி.ஜி, ரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு, உள்ளிட்ட மருத்துவபரிசோதனை செய்யப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டன.200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். 

Aug 19, 2025

சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் ,விநாயகர் சிலைகள் பந்தலுக்கு கொண்டுவரப்பட்டன.

 விநாயகர் சதுர்த்தி விழா விற்காக மாயூரநாதசுவாமி கோயில் முன்பு ராஜபாளையம் தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் சிலைகள் தயாரிப்பு பணி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. ராஜபாளையம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் முன்பு உள்ள அலங்கார பந்தலில் நேற்று மாலை 5.30 மணிக்கு மங்கள கணபதி, விஜய கணபதி, மேல் பொருள் அருளும் கணபதி,  நர்த்தன கணபதி , ஆனந்த கணபதி, சயன கணபதி ஆகிய விநாயகர் சிலைகள் மக்கள் பார்வைக்காக டிராக்டர்கள் மூலம் கொண்டு வரப்பட்டது.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News