25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமீபத்திய நிகழ்வுகள்

Feb 15, 2024

பாதியில் விட்டுச் சென்ற சாலைப்பணி

இராஜபாளையம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நகராட்சி தலைவர் பவித்ரா தலைமையில் நடந்தது. கமிஷனர் நாகராஜன், பொறியாளார் முகமது ஷெரீப், வருவாய் ஆய்வாளர் முத்து செல்வம்,சுகாதார ஆய்வாளர் தர்மராஜ் கலந்து கொண்டனர்.ஒப்பந்ததாரர் பணிக்காக தோண்டிவிட்டதாக பாதியில் விட்டுச் சென்ற சாலையில் குடியிருப்பு வாசிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். 16 தெருக்களில் நான்கு ரோடு மட்டும் போட்டுள்ளனர். இது குறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டால் 90 சதவீதம் பணி முடிந்ததாக கூறுகின்றனர். என்று கவுன்சிலர்கள் வாக்குவாதம் நடந்தது.நகராட்சி தலைர் பவித்ரா அவர்கள் அனைத்து வார்டுகளிலும் சமமாக பிரித்து பணிகள் நடந்து வருகிறது. எந்த பாரபட்சமும் இல்லை விரைவு படுத்த கூறி இருக்கிறோம். என்றார். இப்பணிகள் எப்போது சரியாகும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Feb 12, 2024

இராஜபாளையம் இலை துளிர் அமைப்பு

இராஜபாளையம் இலை துளிர் அமைப்பில் சிறிய அளவில் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குடியிருப்பு அருகே கைவிடப்பட்ட பழமையான கிணறுகளை தூர் வாரி, கழிவுகளை வெளியேற்றி ,பாதுகாப்பு வேலி அமைத்தனர் . அதனைத் தொடர்ந்து அரசின் பங்களிப்புடன் ,கண்காணிப்பு கேமராக்களை பொருத்தினர் .. தெருவின் ஒரு பக்கத்தில் பெரியோர்களால் வைக்கப்பட்ட மரங்களை பராமரித்து ,புதிய மரக்கன்றுகளை நட்டு அவற்றின் தண்ணீர் தேவைக்கு சொட்டுநீர் குழாய் பதித்து பசுமையை தொடர்ந்து பேணி காப்பது போன்ற பணிகள் மூலம்   இலை துளிர் அமைப்பின்  இளைஞர்கள் மேல் சமூகத்தில் நம்பிக்கை பிறந்துள்ளது. 

Feb 10, 2024

பி.ஏ.சி. ராமசாமி ராஜா கல்வி தர்ம ஸ்தாபன  74-வது ஆண்டு விழா அழைப்பிதழ்

 இராஜபாளையம்.P.A. சின்னைய ராஜா ஞாபகார்த்த மேல்நிலைப்பள்ளி P.A.C.R.அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள் Τ.Α.Κ.Μ. ஸ்ரீமதி P.A.C.R.சேதுராமம்மாள் துவக்கப்பள்ளி.ஸ்தாபகர்-ஸ்ரீதர்மரக்ஷகர்-ஸ்ரீ பி .ஏ .சி .ராமசாமி ராஜா  ஸ்ரீ பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜாஅன்புடையீர்,நமது பள்ளிகளின் எழுபத்து நான்காவது ஆண்டு விழா வருகிற 12-02-2024 திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்கு P.A.C.R. அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உயர்திரு. Dr. V.P. ஜெயசீலன் I.A.S. அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கவும்.திருமதி. Dr.பவித்ரா ஜெயசீலன், அவர்கள் பரிசுகள் வழங்கவும் அன்புடன் இசைந்துள்ளார்கள். தாங்கள் விழாவிற்கு வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.ஸ்ரீமதி. R.சுதர்சனம் N.K.ஸ்ரீகண்டன் ராஜா பள்ளிகளின் நிர்வாகிகள் இராஜபாளையம்.தங்கள் அன்புள்ள, P.R.வெங்கட்ராம ராஜா மேனேஜிங் டிரஸ்டி.

Feb 09, 2024

ரயில் சோதனை ஓட்டம்

ரயில் சோதனை ஓட்டம் விருதுநகர் தென்காசி ரயில் வழித்தடத்தில் தற்போது பயணிகள் ரயிலின் வேகம் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டரில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வேகத்தை மணிக்கு 110 கிலோ மீட்ர் உயர்த்தும் பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இதற்காக பழைய தண்டவாளங்கள் மாற்றப்பட்டு அதிக வேகத்தை தாங்கும் திறன் கொண்ட பலமான தண்டவாளங்களை பொருத்துவது. அடித்தள மண்ணை பலப்படுத்துவது அதிர்வுகளை தாங்க ஐல்லிக்கற்கள், வளைவுகளை சற்று நேராகி குறுக்கீடு பகுதிகளில் தடுப்புச் சவர் அமைப்பது பணிகள் நடந்து முடிந்துள்ளது.தற்போதுள்ள ரயில்களில் வேகத்தை 110 கிலோ மீட்ர் அதற்கான சோதனை ரயில் நேற்று காலை தென்காசியில் இருந்து கிளம்பி மதியம் 12.10 மணிக்கு இராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனை 120 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து சென்றது. சோதனை ரயிலில் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன.பி.ஏ.சிராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்.முகாம் இராஜபாளையம் பி.ஏ.சி.ராமசாமிராஜா பாலிடெக்னிக் கல்ராயில் என்.எஸ்.எஸ். முகாம் புதுசெந்நெல் குளம் கிராமத்தில் நடைபெற்றது. முகாமை முதல்வர் சீனிவாசன் தொடங்கி வைத்து தலைமை ஆசிரியர் ராஜீ அவர்கள் வாழ்த்து தெரிவித்தார். முகாமில் பள்ளி மைதானம் சீரமைப்பு, உழவாரப்பணி, மரக்கண்றுகள் நடுதல், விழிப்புணர்வு ஊர்வலம்,பேச்சுப் பயிற்சி, மருத்துவ முகாம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Feb 06, 2024

கோவை ஈஷா யோக மையம் சார்பில் ஆதியோக ரத யாத்திரை

இராஜபாளையத்தில் ஆதியோகி ரத யாத்திரையை பக்தர்கள் வரவேற்றனர். இரண்டு நாட்களாக மக்கள் தரிசனத்திற்காக ரத பவனி ராமமந்திரம், ஜவஹர் மைதானம், பி.எஸ்.கே. நகர் ,சொக்கர் கோயில், பெரிய சாவடி, சங்கரன்கோவில் வழியாக சுரண்டை சென்றது. ஏற்பாடுகளை ஈஷா அமைப்பினர் செய்திருந்தனர்.

Feb 06, 2024

இராஜபாளையம் சேவையாளர் R. சங்கர் கணேஷ்க்கு பாராட்டு சான்றிதழ்

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 26.01.2024 அன்று வியாழக்கிழமை குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அவர்கள் தேசம் முழுவதும் விவசாயம், கால் நடைகளுக்கு தொடர்ந்து சேவை செய்யும் இராஜபாளையம் R. சங்கர் கணேஷ்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். வாழ்த்த - 94424 79611

Feb 02, 2024

"FOCUS GIVES SUCCESS "

“FOCUS GIVES SUCCESS ”என்பதைப் பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி ரோட்டரி கிளப் ஆப் இராஜபாளையத்தில் Dr.A.வேலுமணி (Creater Thyrocare) சிறப்புரை ஆற்றினார்.  அப்பநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் ஏழை குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர். தன் பள்ளிப் படிப்பை தன் கிராமத்தில் உள்ள ஒற்றை ஆசிரியரிடம் படித்தவர். காலேஜ்க்கு பீஸ் கட்ட பணமின்றி B.com படித்தார். பி.காம் ஏன் படிக்கிறாய் இன்ஜினியரிங் படிக்கலாமே என்று கூறிய ஆசிரியரிடம் பண வசதி இல்லை என்று கூறியுள்ளார். அந்த புரொபசரும் அவருக்காக 100 ரூபாய் கட்டியதால்  B.Sc யில் சேர்ந்து படித்தார். அனைத்து பாடங்களிலும் full mark எடுத்து சாதித்து உள்ளார். கோயம்புத்தூரில் 150 ரூபாய் சம்பளத்திற்கு சேர்ந்திருந்தார். முதலில் வேலைக்கு சென்று பின் விஞ்ஞானி ஆக மாறி, எழுத்தாளராகி, பின் வியாபாரம் செய்து வெற்றி பெற்றார் .   வெறும் 500 ரூபாய் எடுத்துக் கொண்டு மும்பை சென்று பல வருடங்கள் அயராது உழைத்து இன்று 5000 கோடி மதிப்புள்ள தைரோ கேர் நிறுவனத்தின் அதிபராகி இருப்பதை உலகமே வியந்து பார்க்கிறது. தமிழ் மீடியத்தில் கல்வியைக் கற்று இன்று உலக அளவில் போற்றும் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். தைரோ கேர் நிறவனத்தின் நிறுவனர் வேலுமணி.ஆங்கிலம் ஒரு மொழியே தவிர, அது Knowledge இல்லை என்று கூறினார். வாழ்வில் ஒன்றை இழந்தால் தான் ஒன்றை அடைய முடியும், குழந்தைகள் கஷ்டத்தை அனுபவிக்கும் வாய்ப்பு கொடுங்கள். நான் சிறு வயதில் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லை என்றார். கஷ்டப்படாத பிள்ளைகள் பிற்காலத்தில் பிரகாசிக்க மாட்டார்கள். குழந்தைகளுக்கு எதுவுமே கொடுக்காதீர்கள். ஆனால் அவர்களை சுதந்திரமாக விடுங்கள். அதுவே பெற்றோரின் கடமை. கடன் வாங்காதீங்க. EMI கட்டியே காலத்தை வீணடித்து விடுவீர்கள். யாரோ ஏமாத்திட்டாங்க என்று ஒரு நாளும் வருத்தப்படக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும் என்றால் யாரையும் கலந்தாலோசிக்காமல் முடிவெடுங்கள். ஏழைகளுக்கு அடைய வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கும். ஆனால் பணக்காரர்களுக்கு இருப்பதை இழந்துவிடுவோமோ என்ற பயம் இருக்கும். தற்கால இளைஞர்களுக்கு, தன்னுடைய வாழ்வில் நடந்த விஷயங்களை கூறி, சிறப்பாக உரையாற்றினாார். இராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் உறுப்பினராகவும், பதவி ஏற்றார். இதயம் நல்லெண்ணெய் நிறுவனர் முத்து பதவிப் பிரமானம் செய்து வைத்தார்  .Rtn. M. பார்த்தசாரதி President அவர்கள் தலைமையில், Rtn. K. R. ஆனந்தி  Secreatary அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

Jan 29, 2024

போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு

இராஜபாளையம் வடக்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமையில் இராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு   போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு தெருக்கூத்து, நாடகம், நடைபெற்றது. ராஜூக்கள் கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மது போதையில் லைசென்ஸ் இன்றி, அதிவேகமாக வாகனம் ஒட்டுவது. வாகனங்களை நடுவீதிகளில் நிறத்துவதுபற்றியும், சீட்டு பெல்ட்அணிவதன் அவசியம் குறித்தும் ஊமை நாடகம் மூலம்பொது மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போக்குவரத்து விதிகள் ஒருவழி சாலையில் ஓட்டுநர் தனது வலது புறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். ...இருவழி சாலையில் இடப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தைச் செலுத்த வேண்டும்.அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும்தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது. மருத்துவ ஊர்தி (ambulance), தீயணைப்பு வாகனங்கள்,இராணுவ பாதுகாப்பு வாகனங்கள் போன்றவைகளுக்கு வழிவிடுவது நமது பொறுப்பாகும்.உயர் கற்றை ஒளியினைத் தேவையான போது மட்டுமே ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும்.எதிரே வாகனங்கள் வரும் போதும்,அல்லது ஒரு வாகனத்தின் அருகில் பின் செல்லும் போதும் மங்கலான முகப்பு விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.

Jan 29, 2024

இராஜபாளையத்தில் மன அழுத்தத்தை போக்கும் புத்தாக்க பயிற்சி

புத்தாக்க பயிற்சிஇராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வீரர்களுக்கு,மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமையில் மன அழுத்தத்தை போக்கும் புத்தாக்க பயிற்சி நடந்தது. போக்குவரத்து சம்பந்தமான வழிமுறை பயிற்சிகள் வழங்கினர். ரத்த தானம்ஜவுளி வர்த்தக சங்க தலைவர் கணேசன் தலைமையில் இராஜபாளையம் ஜவுளி வர்த்தகர்கள் சங்கம், ஜமீன் கொல்லங்கொண்டான் அரசு ஆரம்பர சுகாதார நிலையம், இராஜபாளையம் அரசு மருத்துவமனை சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

Jan 27, 2024

குடியரசு தின விழா

குடியரசு தின விழாவை ஒட்டி இராஜபாளையம் நகராட்சியில் தேசிய கொடியை நகராட்சி தலைவர் பவித்ரா ஏற்றி வைத்தார். நகராட்சி அலுவலகர்கள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இனிப்பு வழங்கப்பட்டது. இராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லூரி, ராஜீக்கள் கல்லூரி, ந.அ. அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம் ஸ்ரீராமலிங்க விலாஸ் ஜெயராம் துவக்கப்பள்ளி, சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சிபிஎஸ்இ. பள்ளி, மற்றும் பெண்கள் கலை அறிவியல் கல்லூரி, மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம், தர்மாபுரம் காந்திஜி வாசகர் சாலை நூலகம், சார்பில் விழாவை சிறப்பாக கொண்டாடி போட்டிகளில் வெற்றி பெற்ற ஆசிரியர், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பின் இனிப்புகள் வழங்கி குடியரசு தினத்தை சிறப்புறச் செய்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 14 15

AD's



More News