25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சமீபத்திய நிகழ்வுகள்

Dec 22, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா.

திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து ஒன்றியம் கோபாலபுரம் கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து  மாற்றுத் திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார்.   இந்தியன் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார்.  மேலும் இந்த நிகழ்வில் பயிற்நுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், வத்திராயிருப்பு லயன்ஸ் சங்கம் சார்பில் நிகழ்வில் மண்டலத் தலைவர் சுப்பையா , மாவட்ட தலைவர் ஆரியன் மதுரம், லயன்ஸ் செயலாளர் அறிவொளி முருகன் மற்றும் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தர்கள்.

Dec 18, 2025

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு  ராஜபாளையத்தில், சஞ்சீவி மலையில் படி பூஜை விழா நடந்தது. ஐயப்ப பக்தர்கள் ,பெண்கள் பஜனை பாராயண குழுவினர் 365  படிகளுக்கும் ஒவ்வொன்றாக சூடம் ஏற்றி பூக்கள் துாவி படிகளில் தேங்காய், பழம், வெற்றிலை வைத்து வழிபாடு செய்து வழிபட்டனர். அன்னதானம் நடந்தது பக்தர்களுக்கு பிரசாதமாகதேங்காய், பழம் வழங்கினர். 

Dec 16, 2025

ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி.

ராஜபாளையம் மேற்குதொடர்ச்சி மலை அய்யனார் கோவில்  விருதுநகர் மாவட்டம் ஆற்று பகுதியில்,உள்ள நீராவி முள்ளிக்கடவு, மாவரசி அம்மன் கோவில், பிராவடியார், மற்றும் கோட்டை மலை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து சாரல் மழை பெய்து மலையடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் தற்போது தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவ தால் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பியது. அதேபோல 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் மூலம் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் தேக்கங்களும் நிரம்பின. ஆதலால் மருங்கூர் கண்மாய், ஆதியூர் கண்மாய், பிரண்டை கண்மாய், புளியங்குளம் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் குளம்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 

Dec 15, 2025

பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நேற்று காலை பழைய பாளையம், சக்கராஜா கோட்டை, சிங்கராஜா கோட்டை, திருவனந்தபு ரம் ஆகிய நான்கு கோட்டை சாவடிகளில் இருந்து சாமை கதிர் கட்டுகளை ஊர்வலமாக வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். வீட்டில் பூஜை செய்து உற வினர்கள் வீடுகளுக்கு சென்று ஒருவருக்கொருவர் சாமை கதிர்களை வழங்கி மகிழ்ந்தனர் ராஜபாளையத்தில் ராஜூக்கள் சமூகம் சார்பில் விவசாயம் செழிக்கவும், உறவுகளுக்குள் எழுந் துள்ள பூசல்களை சரி செய்யவும், சொந்த பந்தங்களை நேரில் கண்டு மகிழ்ச்சியை பரிமாறவும் ''கொத்தலு' என்ற புதியல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுவது வழக்கம். விழாவில் ஊர் நிர்வாகம் சார்பில் சாமை கதிர்கள் அறுவடை செய்து பொது இடத்தில் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.கதிர்களை வீட்டில் வைத்து பூஜித்த பின் மாவிளக்கு, கொழுக்கட்டை, பானகரம் வைத்து வழிபட்டு வீட்டிற்கு வரும் உறவினர்களுக்கு வழங்குவர். அதேபோல் ஒவ்வொருவரும் பூஜித்த கதிர்களை எடுத்துக் கொண்டு உற வினர் வீடுகளுக்கு சென்று வழங்கி உறவுகளை புதுப்பிப்பர்.

Dec 15, 2025

ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி.

கால பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு ,ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகா தேவ அஷ்டமி, சிறப்பு வழிபாடு அங்க பிரதட்சணம் நடந்தது.காலையிலிருந்து, தொடர் பஜனை, யாக பூஜைகள் ,தொடர்ந்து சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடந்தது.புத்திர பாக்கியம், திருமணதடை விலக வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் பலர் அங்க பிரதட்சணம் செய்தனர். அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட உணவு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 

Dec 13, 2025

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்வை எனேபிள் இந்தியா அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுப்புராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.துவக்க நிகழ்வில் வத்திராயிருப்பு புதுப்பட்டி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் திரு. பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் வசதி, மானியம், தொழில் தொடங்கும் வாய்ப்பு போன்றவற்றை குறித்து விரிவாக விளக்கினார்.இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் - ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் - ஆர்சிட்" அமைப்பின் மேலாளர் திருமதி. பாத்திமா மற்றும் திரு. கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு பத்து நாட்கள் நடைபெறும் பயிற்சியின் நோக்கம், தொடரும் பயிற்சி அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைத்தனர். பயிற்சியாளர் திருமதி சுவேதா அவர்கள் பயிற்சியில் வழங்கப்படும் திறன் மேம்பாட்டு அம்சங்களை குறித்து விளக்கினார்.இந்தப் பயிற்சியில் வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.சிறப்பு அழைப்பாளர்களையும், கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளையும் திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த சைமா அறக்கட்டளை இயக்குநர் திரு. இராஜகோபால் அவர்கள் வரவேற்று உரையாற்றினார்.பின்னர் அவர் பேசும்போது, “இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயிற்சியாளர்களுக்கு அரசு தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அவர்கள் தொழில் தொடங்க சிறு உதவி தொகை அல்லது பெரிய தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும்,” என்றார். மேலும், “மாவட்டம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியங்களில் இதுபோன்ற பயிற்சிகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தொடர்ந்து நடத்தப்படும்,” என்றும் தெரிவித்தார்.

Dec 11, 2025

ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா.

ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் நடந்த திருக்கல்யாண விழா டிச.7ல் தொடங்கி காலை, மாலை லட்சார்ச்சனையை தொடர்ந்து, அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று காலை திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை கொண்டு வந்து பூஜைகளில் கலந்து கொண்டனர். வேத மந்திரங்கள் முழங்க சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. வேட்டை வெங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார், திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. 

Dec 05, 2025

நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.

கார்த்திகை இரண்டாவது தினத்தை முன்னிட்டு வழிபாட்டிற்காக பக்தர்கள் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடி வாரத்தில் உள்ள அய்யனார் கோயில் ஆற்றில் குவிந்தனர்.  இங்குள்ள ஆசிரமத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றபின் ஆற்றில் நீர்வரத்து குறைந்த நேரத்தில் மறுபுறம் உள்ள அய்யனார் கோயிலுக்கு சென்றனர். நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு, மதியத்துக்கு மேல் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர்.

Dec 05, 2025

இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது.

இராஜபாளையத்தில் பீமா ஜூவல்லரி உங்களுடன் இணைந்து ஓராண்டை நிறைவு செய்கிறது. இந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் அன்பு எங்களை இராஜபாளையத்தின் விருப்பமான ஜூவல்லரியாக மாற்றியுள்ளது. இந்த மைல்கல்லை நன்றியுடன் கொண்டாடும் விதமாக பிரத்யேக சலுகைகள் மற்றும் கலெக்ஷன்கள் அனுபவிக்க எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.பீமா ஜூவல்லர்ஸ், 875-876,  தென்காசி ரோடு. இராஜபாளையம் Ph: 90923 40401 / 40402. கார் பார்க்கிங் வசதி உள்ளது.

Dec 03, 2025

நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை .

தொடர் மழை காரணமாக ராஜபாளையம் சுற்று பகுதியில் ,நிரம்பிய குளங்கள், கண்மாய்களில் குளிப்பதற்கு ,பள்ளி கல்லுாரி மாணவர்கள் விழிப்புணர்வு இன்றி மூழ்கி பலியாகும் நிலை உள்ளது.குடி மராமத்து  என்ற பெயரில் ஆங்காங்கு தோண்டப்பட்டும், சட்ட விரோதமாக மணல் திருடப்பட்டும் பள்ளங்கள் பாசனத்திற்கு உள்ள கண்மாய்களில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதுஆர்வம் உள்ள சிறுவர்கள். மாணவர்கள்விடுமுறை நாட்களில் பெற்றோர் துணையின்றி குளிப்பதற்கு சென்று நீர் நிலைகளில் ஆழம் தெரியாமல் மூழ்குவதால், உயிர் பலி விபத்துக்கள் ஏற்படுகிறது.நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை, நீர் நிலைகளை சுற்றி தடுப்பு வேலி அமைத்தும், கண் காணிப்புகேமரா பொருத்தியும் தடுப்பதன் மூலம் தேவையற்ற இது போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க,மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  வேண்டும்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 20 21

AD's



More News