“அல்ட்ராடெக் சுப ஆரம்பம்” ஒவ்வொரு அடியிலும் நாங்கள் இருக்கிறோம்உங்கள் நல்ல தொடக்கத்தை நாங்கள் கொண்டாடுகிறோம். சுப ஆரம்ப விழாவிற்கு உங்களைஅன்புடன் அழைக்கிறோம்சிறப்பு விருந்தினர் - திரு. B. முத்துக்குமாரசுவாமி B.E., (Civil), M.E. (Struct), AMIE, FIV, MISTE, Absara Consultancy, Chairman, Builders Association of India, Rajapalayam Centre.தேதி : 13-11-2025 வியாழக்கிழமைநேரம் : காலை 11.00 மணிஇடம் : காமராஜர் கல்யாண மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் அருகில், ராஜபாளையம்.
ராஜபாளையம் நகராட்சி மக்களுக்கு அய்யனார் கோயில் ரோட்டில் உள்ள 6வது மைல் எனும் நகராட்சி கோடைகால குடிநீர் தேக்கம் லேசான மழை ஆற்றில் பெய்தாலும் வரும் நீரை குடிநீர் தேக்கத் திற்கு திருப்பி மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.மொத்தம் 24 அடி உயரம் உள்ள நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி தற்போது 18 அடி உயரம் வரையே தண்ணீர் நிரப்பபடுகிறது. இந்நிலையில் சில நாட்களாக ராஜபாளையம்மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில்பெய்யும் மழையால் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து , நீராதாரம் நேற்று 18 அடி உயரத்தை எட்டியது. தொடர் மழையால் விவசாய பணிகள் வேகம். கடந்த இரண்டு வாரம் முன்பு பெய்த மழைக்குப்பின் ராஜபாளையம் சுற்று பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது . பலத்த காற்றும் சேர்ந்து வீசியதால் வயல்வெளிகளில் தண்ணீர் வேகமாக வற்றியதுடன் புதிதாக நடவு செய்யப்பட்ட நெற் பயிர்கள் வெயிலின்தாக்கம், வறண்ட காற்று இரண்டையும் தாங்க முடியாமல் கருக தொடங்கின. நெல் சாகு படியில் ஈடுபட்ட விவசாயிகள் கவலை அடைந்தனர்கடந்தசில நாட்களாக மேக மூட்டத்துடன் தொடர் சாரல் மழை மேற்கு தொடர்ச்சி மலை பகு தியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதுடன் மழைக்கான அறிவிப்பும் வெளியானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்., கிணற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள்உழவு பணிகள், நிலத்தை பண்படுத்துவது, நடவுக்கு தயாராவது போன்ற விவசாய பணிகளை வேகம் எடுத்துள்ளனர்.
சிறு வயதில் இருந்தே எங்கள் குடும்பத்தினருடன் பழகிய இவர், குழந்தைக்குரிய அத்தனை விஷமங்களையும் கூடவே செய்து கொண்டிருப்பார். கோபாலகிருஷ்ணன் டாக்டரின் வீட்டிற்கு கடைக்குட்டியான இவருக்கு செல்லம் அதிகமாகவே இருக்கும். அப்படிப்பட்ட கண்ணன், டாக்டர் ஆனவுடன் இவ்வளவு சேவை மனப்பான்மையுடன் செயலாற்றுவார். என்று நான் கனவிலும் நினைத்த தில்லை. நான் 'டாக்டர்' என்றால் 'என்ன டாக்டர்', கண்ணா'ன்னே கூப்பிடுங்க என்பார். அவர் மனதில் எள்ளளவு கூட நான் என்ற கர்வம் இருந்ததே இல்லை.கண்ணா டாக்டர் எளிமையாக 2 வீலர்லேயே வருவார். நான் கூட ஒருமுறை ‘என் கண்ணா ’,கார்ல வா கண்ணா' என்பேன். இதுதான் சௌகர்யம், ரோடுலே நுழைந்து, நுழைந்து சீக்கிரம் வரலாம் , கார் ரொம்ப லேட்டாகும் என்பார் அவ்வளவு எளிமை. டாக்டர் பீஸ் ரொம்ப ,ரொம்ப கொஞ்சம் தான், என் தந்தையாரிடம் மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர். என் தகப்பனார் P.C. பலராம ராஜா அவர்கள், கண்ணா பீஸ் கொஞ்சம் கூட்டி சொல்லுங்கள் என்பார், கேட்கவே மாட்டார். பாவம் மக்கள் என்பார்.எனக்குத் தெரிந்து பல நாள் நேரத்தோடு சாப்பிடாமல், தூங்காமல் பலருக்கு வைத்தியம் செய்துள்ளார். பல பெரிய நோய்களை மருத்துவர்கள், பல டெஸ்ட்கள் செய்து அதற்குப் பின் தான் மருத்துவம் செய்வார், ஆனால் டாக்டர் கோபால கிருஷ்ணன், டாக்டர் சங்கரராமன், டாக்டர் கண்ணா அவர்கள் நாடி, ஸ்டெதெஸ்கோப் வைத்தே துல்லியமாக நம் நோயைக் கணித்து, சென்னை, மதுரை டாக்டர்களுக்கு பரிந்துரை செய்து, அங்கு சென்று வைத்தியம் செய்யச் சொல்வார். எல்லா சோதனைகளையும் செய்த மருத்துவர்கள், உங்கள் ஊரில் நோயைச் சரியாகக் கணித்து சொல்லும் மருத்துவரை வியந்து பாராட்டியுள்ளனர்.டாக்டர் ராஜகேசர் (எ) கண்ணன். அவர்கள் மறைவை எப்படி ஏற்றுக் கொள்ளப் போகின்றனர். இராஜபாளையம் நகர மக்கள். நம் நகர மக்களால் "கண்ணா டாக்டர் " என்று அவரவர் வீட்டு பிள்ளை போன்று அழைத்துக் கொண்டு வாழ்ந்த முதியவர்கள் பலர், நான் பெற்ற பிள்ளைகள் கூட வேண்டாம் 'கண்ணா' வந்தாலே போதும் என்று தைரியமாக வாழ்ந்தனர். பல முதியவர்கள், உடம்பு சௌகர்யமில்லை. என்றால் கண்ணா டாக்டருக்கு போன் செய்து வீட்டிற்கு வர வழைக்கும் பல பெரியவர்கள். ‘சரி வரேன் ’என்று நேரத்தை சொல்வார் கண்ணன். அந்த நேரத்தில் 99 % சரியாக வந்து ஏ...வி.. வேகியா (காய்ச்சலா) என்று இன்முகத்துடன் கூறி வைத்தியம் செய்து 'அன்னி சரிகாபோணு' (இதெல்லாம் சரியாகி விடும்) என்று தெலுங்கில் கூறி ஊசி மருந்து, மாத்திரை கொடுத்து செல்வார். முதியவர்களிடம் 5 நிமிடம் குசலம் விசாரித்து, அவர்களின் பாரங்களை தான் ஏற்றுக் கொண்டு, தன் உயிரை தியாகம் செய்து விட்டார், என்று கேட்ட பொழுது பேரதிர்ச்சிதான்.நம் நகர மக்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்து விட்டு ,அவர் சிறிதும் கஷ்டப்படாமல், தன் பணியினை முடித்துக் கொண்டார். அன்னாரின் ஆன்மா நிம்மதியாக இறைவனிடம் இளைப்பாற பிரார்த்தனை செய்து வணங்குகிறோம்.அன்னாரது குடும்பத்தினருக்கு இராஜபாளையம் டைம்ஸ் சார்பாக, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.திருமதி. B. குணாபாஸ்கர் ராஜா.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு பெரிய பெரு மாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜைகள் செய்யப்பட்டு புறப்பாடு நடந்தது. பல்லக்கில் எழுந்தருளிய பெரிய பெருமாளை பக்தர்கள் ஊஞ்சல் போல் ஆட்டி அசைத்து கோயில் மேல் தளத்தில் உள்ள பிரகாரத்தில் மும் முறை சுற்றி வந்து கோபால விலாசத்தில் எழுந்தருள செய்தனர். ஸ்ரீதேவி, பூமாதேவி தாயார்களும் பங்கேற்க, ஊஞ்சல் உற்ஸவம் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.செயல் அலுவலர் சக்கரை அம்மாள், கோயில் பட்டர்கள்,ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
ராஜபாளையம் மேலப்பாட்ட கரிசல்குளம் ஊராட்சி இந்திரா நகர் குடியிருப்பு மக்களுக்காக ஆதுரி கண்மாயில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் சப்ளையாகிறது. கடந்த மாதத்திற்கு முன் பெய்த கன மழைக்கு பின் சப்ளை ஆகும் குடிநீர் கலங்கலாக வருவதால் நோய் வந்து விடுமோ என்ற ஒரு அச்சத்தில் அந்த தண்ணீரை பயன்படுத்துவதில்லை.இங்குள்ள மேல் நிலை நீர் தேக்க தொட்டி குறிப்பிட்ட இடைவெளிகளில் சுத்தப்படுத்துவதில்லை. சுத்தம் செய்தநாள் குறித்து தகவல் பலகையில்எழுதுவதில்லை. குடி நீர் தொடர்ந்து கலங்கலாக வருவதால் குடங்களை தூக்கி மற்றபகுதிகளுக்கு அலைந்து வருகின்றனர்.
ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் இந்திய பருத்தி கழகம் விவசாயிகளிடம் நேரடியாக பருத்தியை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக பருத்தி விவசாயிகள் கிஷான் செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) கோயம்புத்துார் கிளை சார்பில் 2025-26 நிதியாண்டில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தில் ஒன்பது இடங்களில் பருத்தி கொள்முதல் மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் பருத்தி கொள்முதல் செய்யப்பட உள்ளதை அடுத்து விவசாயிகள் ஆதார் எண், அடங்கல் மூலம் கிஷான் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என வேளாண் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முருகன் கோயில் களில் கந்த சஷ்டி சூரசம் ஹாரத்தை அடுத்துநேற்று திருக்கல்யாணம் நடந்தது. ராஜபாளையம் மாயூரநாதர் சுவாமி கோயி லில் நேற்று மாலை 6:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகன் சுவா மிக்கு அபிஷேகம் வழிபாடு நடந்தது. வள்ளி, தெய்வானை சமேத முருகனுக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது. திரளானோர்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. சில கண்மாய்கள் நிரம்பி மதகு வழியாக மறுகால் பாய்ந்து மற்ற கண்மாய்களுக்கு செல்கின்றன. ராஜபாளையம் தாலுகாவில் உள்ள அலப்பச்சேரி கண்மாய், புதுக்குளம் கண்மாய், புளியங்குளம் கண்மாய், கிருஷ்ணபேரி கண்மாய், செட்டிகுளம், கடம்பன்குளம், கொத்தங்குளம், செங் குளம் கண்மாய், மேல இழுப்பன் குளம் கண்மாய், வாண்டையார் குளம் கண்மாய், - பிரண்டைகுளம், ஆதியூர் கண்மாய், சீவலப்பேரி கண்மாய், சத்திரப்பட்டி வாகைகுளம் கண்மாய், தேவதானம் நகரிகுளம் கண்மாய், பெரியகுளம், சேத்தூர் பிராவடி கண்மாய், முகவூர் கண்மாய், வடகரை கண்மாய்கள் நிரம்பின. இதனால்சுற்றுப்பகுதியில் உள்ள 15 ஆயிரம் ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும்.தற்போதுபெய்துள்ள மழையால் நெற்பயிர்கள், வாழை, கரும்பு, தென்னை, மா,பலா மரங்கள் அதிகமாக சாகுபடி செய்ய விவசாயிகள் உழவு பணிகளை செய்து வருகின்றனர். மேலும் ராஜபாளையம் தாலுகாவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊருணிகளும் நிரம்பின.இந்த பகுதியில் உள்ள கிணறுகளில் அதிக அளவில் நீர் உள்ளது. விவசாயிகள் இதனால் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ராஜபாளையம் மலை அடிவார நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் மாவரசி அம்மன், முள்ளிக்கடவு, அய்யனார் கோயில் போன்ற பகுதிகளில் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.குடிநீர் தேவை கருதி , அய்யனார் கோயில் ஆற்றில் பெருகிய நீரை ,ராஜபாளையம் நகராட்சி குடிநீர் ஆதாரமாக உள்ள 6வது மைல் நீர் தேக்கத்திற்கு தடுப்பணை மூலம் திருப்பி விடப்பட்டுள்ளது. கனமழையின் காரணமாக சில நேரம் தடுப்பணையைத் தாண்டி ஆற்றில் நீர் வழிந்து செல்கிறது. மழை தொடர்ந்தால் நகராட்சியின் 42 வார்டுகளுக்கும் குடிநீர் சப்ளைக்கு பிரச்னை இருக்காது, என நகராட்சி குடிநீர் சப்ளை அதிகாரிகள் மகிழ்ச்சி.
நம் மொழி மற்றும் கலாச்சார பெருமையை இளம்தலைமுறையினருக்கு தன் இலக்கிய படைப்புகளால் கொண்டு சென்று “சாகித்ய அகாடமி", "கலைமாமணி" என உயரிய விருதுகளை பெற்று இராஜபாளையத்திற்கு பெருமை சேர்த்த அன்னாரின் மறைவிற்கு ராஜபாளையம் டைம்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.