25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Jun 06, 2024

செயற்கையாக பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.

பேராசை கொள்ளும் சில வியாபாரிகள் விளைச்சலுக்கு முன்பே மாங்காய்களை கொண்டு வந்து குடோன்களில் வைத்து ரசாயனங்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைத்து விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.செயற்கை முறையில் பழுக்க வைத்தமாம்பழங்களைஉண்பதால்வயிற்றுபோக்கு,வயிற்றுவலி,வாந்தி,தோல்ஒவ்வாமைபோன்றபாதிப்புஏற்படுகின்றன.இந்நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர் கண்காணிப்பு செய்து விதிமுறை மீறும் வியாபாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

May 31, 2024

இராஜபாளையத்தில் 2 நாள் கடை அடைப்பு வாபஸ்

இராஜபாளையத்தில்   குண்டும் குழியுமாக இருந்த ரோடு சரி செய்யாததை கண்டித்து  2 நாள் கடையடைப்பு நடத்த வர்த்தக சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  RTO  விஸ்வநாதன் தலைமையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், வர்த்தக சங்கநிர்வாகிகள்கலந்துகொண்டகூட்டத்தில்உடனடியாகபராமரிப்புபணிகளும்,ஜீன்மாதகடைசிவாரத்தில்புதியசாலைக்கானவரைவுதிட்டமதிப்பீடுதயாரித்துஒப்புதல்பெறப்பட்டுவிரைவில்சாலைஅமைக்கநடவடிக்கைஎடுக்கப்படுவதாகஒப்பு கொண்டுள்ளதால் 2 நாள் கடையடைப்பு வாபஸ் பெறுவதாக முடிவு செய்யப்பட்டது.

May 28, 2024

இராஜபாளையம், ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் சந்நதி ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் கும்பாபிஷேக விழா

இராஜபாளையம், ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் மற்றும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தாழ்வார் மற்றும் பரிவார தேவதைகளும் நிகழும் மங்களகரமான 1199ம் ஆண்டு ஸ்ரீகுரோதி வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (02.06.2024) ஞாயிற்றுக்கிழமை ஏகாதசியும் ரேவதி நட்சத்திரமும் அமிர்த யோகமும் கூடிய சுபயோக சுபத்தினத்தில்அன்று காலை 10.45 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாளின் பரிபூரண கிருபையாலும் ஆச்சார்யார்கள் அனுக்கிரஹத்தாலும் வெகுச்சிறப்பாக ஸ்ரீ பத்மாவதி தாயார்.ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார்க்கு மஹா ஸம்ப்ரோக்ஷணம் நடைபெற இருப்பதால் ஆன்மீக பக்த ஜனங்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீ பத்மாவதி தாயார் ஸ்ரீ சுதர்ஸன சக்கரத்தாழ்வார் அருள்பெற வேண்டுகிறோம். ஸர்வசாதகம்:  G.சீத்தாராமன் அய்யங்கார் (எ) கண்ணன் அர்ச்சகர் மற்றும் குழுவினர்                              ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில், இராஜபாளையம்.யாகசாலை பூஜைக்குரிய திரவியங்கள் காணிக்கையாக ஸமர்பிக்க விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:அன்புடன் -  வெ. சுந்தர்ராஜன்                         வெ. சௌந்தர்ராஜன்பரம்பரை அர்ச்சகர் - ஸ்தானிகமிராஸ் ஸ்ரீ வேட்டை வெங்கடேசப் பெருமாள் கோவில்பொறுப்பாளர்: ஸ்ரீ பத்மாவதி தாயார் திருக்கோவில் இராஜபாளையம், செல்: 97894 38351, 9976108285குறிப்பு: 03.06.2024 முதல் 21.07.2024 வரை மண்டல பூஜைகளும், மண்டலாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இந் நாட்களில் திருமஞ்சனம், பூஜை. நைவேத்யம் ஆகிய சேவைகள் அவர்கள் வேண்டும் நாட்களில் அவரவர் கைங்கர்யமாக நடத்தி வைக்கப்படும்.

May 17, 2024

இந்திய ரயில்களில் குறிப்பிட்ட பயணிகளுக்கு இலவசமாக பயணிக்க சலுகைகள்

இந்திய ரயில்வேயில் குறிப்பிட்ட பிரிவுகளின் கீழ் பயணிகள்25% முதல்75% வரைசலுகையைப் பெறலாம். ஒரு பிரிவில், மக்கள் கட்டணம் ஏதும் செலுத்தாமல் இலவசமாக பயணம் செய்யலாம்!எலும்பியல் குறைபாடுகள் உள்ளவர்கள், பார்வைக் குறைபாடுள்ளவர்கள், மனநலம் குன்றியவர்கள் தனியாகவோ அல்லது துணையுடன் பயணம்செய்யலாம். டிக்கெட் விலையில்25 முதல்75% தள்ளுபடி பெறலாம். செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ளவர்களுக்கும் 50% சலுகை பொருந்தும்.புற்றுநோய் நோயாளிகள்50% முதல் சலுகை கிடைக்கும். ஸ்லீப்பர் மற்றும்3 டயர் ஏசியில்100% தள்ளுபடியில் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். மூத்த குடிமக்களுக்கும் சலுகை உள்ளது.60 வயதை எட்டிய ஆண்கள் அனைத்து வகுப்புகளிலும்40% சலுகை பெறலாம். 58 வயதைஎட்டிய பெண்கள் அனைத்து வகுப்புகளிலும் 50% சலுகை பெறலாம்.பல்வேறு விருது பெற்றவர்கள் ரயில்வேயில் சிறப்புச் சலுகை பெற முடியும். சிறப்பான சேவைக்கான குடியரசுத் தலைவரின் காவல்துறை பதக்கம் மற்றும் இந்திய காவல் துறை விருது பெற்றவர்கள்60 வயதிற்குப் பிறகு எந்தநோக்கத்திற்காகவும் பயணம் செய்தாலும் சிறப்புச் சலுகை உண்டு. ஆண்களுக்கு 50%, பெண்களுக்கு 60% கட்டணச் சலுகை உண்டு.உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவிகள் எந்த நோக்கத்திற்காக பயணம் செய்தாலும்2வது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பில் 75% சலுகை பெற முடியும். கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்களுக்கு 50% முதல் 75% வரை தள்ளுபடி கிடைக்கும்.கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுக்கு ஒரு முறைஆய்வுச் சுற்றுலா செல்ல இரண்டாம் வகுப்பில்75% சலுகையில் டிக்கெட் கிடைக்கும். தேசிய இளைஞர் திட்டத்தில் கலந்துகொள்வதற்காக சென்றால்50%, மனவ்உத்தன் சேவா சமிதியில் கலந்துகொள்வதற்காகச் சென்றால்40% கிடைக்கும். இது 2வதுவகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பிற்குப் பொருந்தும்.அரசு வேலைக்கான நேர்காணல்களில் கலந்துகொள்ள பயணம் செய்யும் வேலையில்லாத இளைஞர்கள் இரண்டாம் வகுப்பில் 100% சலுகை பெறலாம். ஸ்லீப்பர் வகுப்பிலும் 50% தள்ளபடி உண்டு.விவசாயிகள், பால்உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வருடாந்திர மாநாடுகளில் கலந்துகொள்வதற்காகச் செல்லும்போது, 25% முதல் 50% வரை சலுகை கிடைக்கும். கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள்50% முதல்75% சலுகை பெறலாம். அலோபதி மருத்துவர்கள் ராஜ்தானி / சதாப்தி/ ஜன் சதாப்தி ரயில்களின் அனைத்து வகுப்புகளிலும் 10% சலுகை பெறலாம். செவிலியர்கள் 25% சலுகைக் கட்டணத்தில் பயணிக்கலாம்.

May 15, 2024

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்ககை நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு மாணவர் சேர்ககை நடைபெறுகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் (COPA), நில அளவையாளர் (SURVEYOR),  மின்சார பணியாளர் (ELECTRICIAN), இயந்திர வேலையாள் (MACHINIST),  ஆகிய நான்கு தொழில் பிரிவுகளிலும் இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பயிற்சி முடிந்தவுடன் தனியார் மற்றும் அரசு துறைகளில் அப்ரண்டீஸ் மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்களது கல்வி மற்றும் சாதி அசல் சான்றிதழ்களுடன் அலுவலகத்திற்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணம்; ரூ.50/-, நேரில் வர இயலாதவர்கள் செலுத்தி ஆன்லைன் மூலம் www.skill training.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த பயிற்சியின் போது மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750/-, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா  சீருடை (தையற்கூலியுடன்), விலையில்லா மிதிவண்டி, விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா மூடுகாலணிகள், அரசு பள்ளியில் பயின்ற மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ 1000/- வழங்கப்படும்.  இந்த பயிற்சிக்கான விண்ணப்பத்தினை விண்ணப்பிக்க  ஜீன் 7- ம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே திருச்சுழி சுற்றுவட்டாரங்களில் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், மேலும் விபரங்களுக்கு 95788-55154. 70100-40810. 95669-29663 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெற வேண்டும் என தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 10, 2024

கல்லூரி கனவு திட்டம்

பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் கல்லூரிப் படிப்பினை தொடர வழிகாட்டும் கல்லூரிக் கனவு திட்டம் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் 11.05.2024 அன்று காலை 09:00 மணி முதல் நடைபெற உள்ளது.இந்த கல்லூரிக் கனவு திட்டத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பல் தொழில் நுட்ப கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.எனவே, பன்னிரென்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் படிப்பினை தேர்வு செய்யும் பொருட்டு இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.நிகழ்ச்சி நடைபெறும் இடம்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கம், விருதுநகர்.

May 07, 2024

போலி பனீரை அடையாளம் காண்பது  எப்படி?

உணவுக் கலப்படங்கள் அதிகரித்து வருவதால், போலி பனீர் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.பனீர், ஒரு பாரம்பரிய இந்திய வகை சீஸ் ஆகும். இதைப் பயன்படுத்தி பல்வேறு விதமான சுவையான உணவுகளைத் தயாரிக்கலாம். அது பனீர் டிக்காவாக இருந்தாலும் சரி அல்லது க்ரீமி பனீர் பட்டர் மசாலாவாக இருந்தாலும் சரி, இதைப் பயன்படுத்தி செய்யப்படும் உணவின் சுவை மற்றும் அமைப்பை சிறப்பாக மாற்றுவதில் தரமான பனீர் முக்கிய அங்கம் வகிக்கிறது.. போலி பனீரை எப்படி அடையாளம் காண்பது  எப்படி? உண்மையான பனீர் சற்று உறுதியாக இருக்கும். அதை லேசாக அழுத்தினால் அதன் வடிவத்தில் எந்த மாற்றமும் இருக்காது மற்றும் விரைவில் உடைந்து போகாது. போலி பன்னீர் பெரும்பாலும் ரப்பர் அல்லது பஞ்சு போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும். இது செயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிப்பதைக் குறிக்கிறது. மேலும் பனீர் ஒட்டும் அமைப்பில் இருந்தாலும் அது கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம். பயன்படுத்தப்படும் பாலைப் பொறுத்து பனீர் வெள்ளை அல்லது வெளிர்மஞ்சள் நிறத்தில் இருக்கும். போலி பன்னீர் இயற்கைக்கு மாறான அதிக வெண்மைத் தன்மையுடன் காணப்படும். இது வெண்மையாக்கும் கலவைகள் சேர்க்கப்பட்டதன் அறிகுறி. எனவே அதிக வெண்மை நிறத்தில் இருக்கும் பனீரை வாங்க வேண்டாம்.உண்மையான பனீர் லேசான பால் வாசனையை வெளிப்படுத்தும். போலி பனீர் சில கடுமையான வாசனைகளை வெளிப்படுத்தலாம். ஒரு சிறிய துண்டு பனீரை எடுத்து தண்ணீரில் போடுங்கள். அது உண்மையான பன்னீராக இருந்தால் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். இதுவே போலி பனீர், மாவு பொருட்களைப் பயன்படுத்தி செய்யப்படுவதால், அது தண்ணீரில் கரைந்து போகலாம் அல்லது வடிவத்தில் மாற்றம் ஏற்படலாம்.சுவையான பனீர் சாப்பிடும்போது அது ஒரு இனிப்பு சுவையைக் கொடுக்கும். இதுவே போலி பனீர் செயற்கை சுவை கொண்டிருக்கும். சாப்பிடுவதற்கு ஒரு ரப்பர் போன்ற உணர்வைக் கொடுக்கும். போலி பன்னீர் வாங்கும் அபாயத்தைக் குறைக்க நம்பகமான மற்றும் புகழ்பெற்ற பிராண்டுகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது. பிரபலமாக இருக்கும் பிராண்டுகள் பொதுவாக தரத்திற்கு முன்னுரிமை அளிப்பதால், எப்போதும் நல்ல பிராண்ட் பனீர் வாங்குவது நல்லது. இப்படி பல வழிகளைப் பின்பற்றி போலி பனீரை நீங்கள் கண்டுபிடிக்க முடியும்.

May 06, 2024

. "Blood_On_Call"

அரசாங்கத்தின் புதிய திட்டம்..... ", "104 " என்பது இந்தியாவில் .., இரத்தத் தேவைக்கான சிறப்பு எண்" ஆக இருக்கப் போகிறது. "Blood_On_Call" என்பது, சேவையின் பெயர். இந்த எண்ணை அழைத்த பிறகு, 40 kms சுற்றளவில், நான்கு மணி நேரத்திற்குள், #இரத்தம் டெலிவரி செய்யப்படும்..  ஒரு பாட்டிலுக்கு ரூ.450/- மற்றும் போக்குவரத்துக்கு ரூ.100/-.      தயவுசெய்து இந்த செய்தியை மற்ற நண்பர்கள், உறவினர் ஆகியோருக்கும் மற்றும் நீங்கள் தொடர்பில் இருக்கும் குழுவிற்கும் அனுப்பவும்.   இந்த வசதி மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

May 06, 2024

வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது.அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம்.

என் வீட்டில் பெரிதாய் இரு மாமரங்கள், இரு தென்னை மரங்கள்  உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருக்கின்றன. ஆனால், வீட்டிற்குள் இருக்க முடியவில்லை. வெந்து தணிகிறது. நான் மட்டும் மரங்களை வளர்த்து என்ன பயன் ? சுற்றிலும் உள்ள வீடுகளில் மருந்துக்கூட மண்தரை இல்லை. ஆயிரம் வீடுகட்கு ஐம்பது மரங்கள் என்ற அளவில்கூட இல்லை. வெப்பம் பாலைவனத்தை விஞ்சி வாட்டுகிறது. இணையத்தில் ஊர்வெப்பத்தைத் தேடியபோது செல்சியசில் 46 பாகை காட்டுகிறது. அதனைப் பாரன்ஹீட்டில் மாற்றிப் பார்த்தால் 114.8 பாகை என்று வருகிறது. இன்னும் நம் ஊடகங்கள் “வெப்பநிலையில் செஞ்சுரி அடித்த நகரங்கள்” என்று கொண்டாட்டமாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டுள்ளன. எண்ணிப் பாருங்கள், நூற்றிரண்டு பாகை வெப்பநிலையில் காய்ச்சல் என்றாலே நம் உடல் எப்படிக் கொதிக்கிறது ! நம்மைச் சுற்றி நூற்றுப் பதினைந்து பாகை வெப்பம் நிலவுகிறது. வீட்டின் வெளிச்சுவரை உட்புறம்  தொட்டுப் பார்த்தால் அதுவே தகதகவென்று கொதிக்கிறது. இது முற்றிலும் கொடியது. ஆடு மாடு எருமை கன்றுகளின் நிலை என்ன ? பிற அஃறிணைகள் குடிநீர்க்கு என்ன செய்கின்றன ? அவற்றுக்கு ஏதேனும் நாமாவது செய்கிறோமா ? பகல் நேர வெளிப்பணியாளர்கள் வேலை செய்வதற்கு மாற்றாக என்ன பரிந்துரைக்கப்பட்டுள்ளது ? அவர்கட்கு மாற்றீடு என்ன ? வெட்டி வீழ்த்தப்பட்ட, பிடுங்கியெறியப்பட்ட பெருமரங்களால் விளைந்த வெப்பக்கேடுகள் பற்றிய அளவீடு உண்டா ? அவற்றுக்கு மாற்றாக ஒரு புல்லையேனும் வளர்க்க முயன்றார்களா ? வளர்ச்சி என்பது சாலை நீளமா, சாலை அகலமா ? இக்காலகட்டத்தில் தொழிற்சாலைகள் வெப்பத்தை, வெம்புகையை உமிழாமல் இருக்கும்படி ஏதேனும் கட்டுப்பாடுகள், பரிந்துரைகள் உண்டா ? எதுவுமே இராது. எல்லாம் அப்படியப்படியே கிடக்கும். அரசுகள் எதனைத்தான் செய்கின்றன ! நம்மை ஆள்பவர்கட்குச் சுற்றுச்சூழல் நுண்ணுணர்ச்சி உண்டா ? இந்நேரம் விரைந்து நின்று பலப்பல காப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்கவேண்டாவா ? ஐயோ, இதற்கு என்ன செய்யலாம் என்று ஆளும் தரப்பு மண்டையை உலுக்கிச் சிந்தித்துக்கொண்டிருக்கும் என்றா நினைக்கிறீர்கள் ! மக்களாகிய நாம்தான் இனியும் யாரையும் நம்பிக்கொண்டிருக்கக் கூடாது. உடனடியாக அவரவர் வீட்டைச் சுற்றிலும் பத்து மரங்களை நடுங்கள். அதனால் என்னாயினும் பார்த்துக்கொள்ளலாம். வீட்டிற்குள் வேர் பரவாத, பருக்காத பலமரங்கள் இருக்கின்றன, அவற்றை வளருங்கள். ஏதாவது ஒன்றை இறங்கிச் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த ஆண்டில் இன்னும் ஐந்தாறு பாகைகள் கூடக்கூடும். இனிமேல்கூடும் ஒவ்வொரு பாகையும் நம் நிலத்தைக் கரித்துவிடும். வாழத் தகுதியற்றதாக்கிவிடும். இருக்கப்பட்டவர்கள் காலப்போக்கில் வேற்றிடம் தேடிப் போய்விடுவார்கள். நமக்கு நம் மண்தான் ஒரே போக்கிடம். அதன் வாழ்தகுநிலையைக் காப்பதன்றி வேறு வழி நமக்கில்லை.      fb  பதிவு

May 06, 2024

இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் பொங்கல் திருவிழா

சித்திரை மாதம் 24-ம் தேதி (07-05-2024) செவ்வாய்கிழமை இரவு 8.00 மணி அளவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, அருள்ஜோதி வடிவாய் அமர்ந்து, நாதஸ்வரம், மேளவாத்தியங்கள். கிளாரினெட் கச்சேரி, வான வேடிக்கைகளுடன் புறப்பட்டு, ஜவஹர் மைதானம் தெரு, மதுரை ராஜாக் கடைத்தெரு. தென்காசி - மதுரை மெயின் ரோடு, P.S.K. பார்க் அங்கைய ராஜா தெரு. வளையல் செட்டியார் தெரு. அம்பலப்புளி பஜார் ஸ்ரீ முத்தாலம்மன் பீடம் வந்து ஸ்ரீ குருசாமி கோவில் சிதம்பர மூப்பனார் தெரு வழியாக சுற்றி வந்து ஆலயம் வந்தடையும், அவ்வமயம் பக்த கோடிகள் அனைவரும் தவறாது  பொங்கல் விழா வைபங்களில் கலந்து கொண்டு சிறப்புவித்து அம்மன் அருள் பெற வேண்டுகிறோம்.இரவு 10.00 மணிக்கு மேல் வில்லிசை வேந்தர், ஜோதிடர் M.V. மனோகரன் வில்லிசை கலைக் குழுவினர் வழங்கும் வில்லிசை கச்சேரி நடைபெறும். (ஸ்ரீ முத்தாலம்மன் பிறப்பு - வளர்ப்பு கதை)2-ம் நாள் நிகழ்ச்சிகள்08.05.2024 சித்திரை 25-ம் தேதி புதன்கிழமை பகல் முழுவதும் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் முன்பு அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் ஸ்ரீ முத்தாலம்மன் அருள்ஜோதி ரூப சக்தியாய் அமர்ந்து மக்களுக்கு காட்சி கொடுக்கும். அவ்வமயம் பொதுமக்கள் அனைவரும் அம்மன் தரிசனம் செய்து, அம்மனின் அருளைப் பெற்று திகழுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.காலை 10.00 மணிக்கு மேல் மதியம் வரை திருமதி. பாண்டியம்மாள் பாடகி பாரதி இசைக்குழு அவர்களின் பக்தி இசைப்பாடல்கள், பாரம்பரிய பஜனை மற்றும் நாமாவளிகள், கும்மி கிராமிய தெம்மாங்குப்பாடல்கள் நடைபெறும்.இராஜபாளையம் புதுப்பாளையம், சக்கராஜா கோட்டை,அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் டிரஸ்ட்

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News