25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Mar 16, 2024

தீங்கு விளைவிக்க கூடிய கேன்சரை உண்டு செய்யும் நிறமி பஞ்சு மிட்டாய்  தடை செய்யப்பட்டுள்ளது

பார்க்.. பீச்.. மால்.. தியேட்டர்.. பொருட்காட்சி.. கல்யாண வீடு என எங்கு பார்த்தாலும் தனித்து தெரியகூடிய ரோஸ் நிறத்தில் இருக்கும் பஞ்சு மிட்டாய் சுவையை ருசிக்காதவர்கள் யாரும் இல்லை.குறைந்த விலையில் குழந்தைகளை திருப்திபடுத்தவும் மகிழ்ச்சிபடுத்தவும் முடியும் என்றால் அது பஞ்சு மிட்டாய் தான். குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருந்து வந்த பஞ்சு மிட்டாய் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிக சர்க்கரை சேர்க்கப்படும் இவை உடலுக்கு தீங்கு என்பதை அறிந்தாலும் குழந்தைகளுக்கு பிடிக்கும் என்று வாங்கி தரும் நிலையில் இவற்றில் வேதிப்பொருள்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சு மிட்டாய் சிறு ராட்டினம் போன்ற போன்ற கருவியில் சர்க்கரையில் நிறம் கலந்து மாவாக திரித்து பஞ்சு போல் நூலாய் பிரித்தெடுத்து பலூன் போல் பெரிதாக கொடுக்கும் லாவகமே அதை பார்ப்பவர்களுக்கு ருசிக்கும் ஆர்வத்தை தூண்டும்.பஞ்சுமிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்கள் இருப்பதால் பஞ்சு மிட்டாய் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. பஞ்சுமிட்டாய் மற்றும் நிறமூட்டப்பட்ட பஞ்சுமிட்டாய் குறித்து அரசு உணவு பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் ரோடமைன் பிபி என்னும் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இது உணவுத்துறையில் பாதுகாப்பற்ற உணவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செயற்கை நிறம் கொடுக்கும் பொருள்கள் உணவில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றாலும் எந்த பொருள்களை பயன்படுத்தாலும் எவ்வளவு வரை பயன்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் நிர்ணயித்துள்ளது. அப்படியான வழிகாட்டுதலில் இந்த ரோடமைன் பி உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியவை என்பதால் இதை தடை செய்யப்பட்டுள்ளது.இது சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களை தரக்கூடியது என்பதால் அதில் உள்ள உணவு பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ரோஸ் மில்க் பானங்கள், சிவப்பு முள்ளங்கி, இனிப்பு வள்ளிக்கிழங்கு, ஸ்வீட் வகைகளில் கூட தெரியாமல் கலக்கப்படுகிறது. அதனால் உணவு பொருள்களில் கலப்படம் இருப்பதை அறிந்து கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இவை தவிர தெரு உணவுகள், சிவப்பு சாஸ்கள், ரெயின்போ கேக்குகளில் கூட சேர்க்கப்படுகிறது என்பதால் ஒவ்வொன்றையும் வாங்கும் போது கவனம் செலுத்த வேண்டும்.ரோடமைன் பி நீண்ட கால நுகர்வு கல்லீரல் பாதிப்பு, கட்டிகள் மற்றும் புற்றுநோய் உண்டு செய்யும் அபாயத்தை அதிகரிக்கலாம். உணவு பொருள்களில் இருந்தால் ஈரமான பஞ்சை நனைத்து உணவின் மீது வைக்கும் போது அதில் நிறம் படியகூடும். அதே போன்று சிறிது நீரில் போட்டு சில நிமிடங்கள் கழித்து பார்த்தால் நிறம் தனியாக தெரியும். எண்ணெய் கொண்டு பஞ்சை தடவி எடுத்தாலும் அந்த நிறம் அதில் ஒட்டும். இவற்றில் நிறம் கலக்காமல் இருந்தால் அதில் நிறம் ஒட்டாது.பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி சேர்க்காமல் வெள்ளை நிறத்தில் தயாரித்து கொடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Mar 15, 2024

இராஜபாளையம் நகைச்சுவை மன்றம் நடத்தும் சிறப்பு நகைச்சுவை விழா

நாள் : 17.03.2024, ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10.00 - 12.30 மணிஇடம் : ஆனந்தா கார்டன், தென்காசி ரோடு, இராஜபாளையம்.சிறப்பு விருந்தினர்“நகைச்சுவை நம்பி” முனைவர் சா. நீலகண்டன்  M.A, PhD,அவர்கள் தமிழ்ப் பேராசிரியர், தேசியக் கல்லூரி -திருச்சி. திருச்சி நகைச்சுவை மன்றம்சிரிப்புரை தலைப்பு : 'வாழ்வே ஆனந்தம்"அனைவரும் வருக ! வருக !! என அன்புடன் வரவேற்கின்றோம்...இராஜபாளையம் நகைச்சுவை மன்றம்நிகழ்ச்சி அன்பாதரவாளர்:M. MURUGAN, SBI LIFE MD CLUB ,   MDRT - COT (USA) AWARD TOP 10 IN INDIA .  Cell: 91 5000 9000SBI லைப் இன்சூரன்ஸ் ( ஆயுள் பாதுகாப்பு ) உடன் அனைத்து கம்பெனிகளின் வாயிலாக மருத்துவ காப்பீடு மற்றும் வாகன காப்பீடு பாலிசி சேவை செய்து தரப்படும்.

Mar 15, 2024

SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM.SPORTS DAY CELEBRATION

SMT. SAKKANIAMMA DHARMARAJA NURSERY & PRIMARY SCHOOL RAJAPALAIYAM.SPORTS DAY CELEBRATIONOn Saturday, 16 ^ (1h) March 2024 at 4.00 p.mVenue: A.K.D. DHARMARAJA WOMEN'S COLLEGE, Shenbaga Thoopu Road, Rajapalaiyam.

Mar 15, 2024

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE GRADUATION DAY

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE(Affiliated to Madurai Kamaraj University, Madurai)RAJAPALAIYAM-626117GRADUATION DAY(2019-2022 & 2020-2023)On Saturday 16th March 2024 at 10.30 amVenue: College Premises

Mar 14, 2024

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE & SMT. A.K.D. SAKKANIAMMA COLLEGE OF EDUCATION FOR WOMEN RAJAPALAIYAM. 33rd SPORTS DAY CELEBRATION

A.K.D. DHARMA RAJA WOMEN'S COLLEGE & SMT. A.K.D. SAKKANIAMMA COLLEGE OF EDUCATION FOR WOMEN RAJAPALAIYAM.33rd SPORTS DAY CELEBRATIONON Friday, 15 March 2024, at 8.30 am ,  Venue: College Premises

Mar 12, 2024

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் விரிவாக்க சேவைக்காக ஓராண்டு பட்டய படிப்பிற்கு TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

வேளாண் இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட அளவில் இணையதள போர்டல் TNஅக்ரிஸ்நெட் வலைதளத்தில் முகப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் மேலாண்மை விரிவாக்கப் பயிற்சி நிலையம் (MANAGE)  உடன் சமிதி பயிற்சி நிலையமும் இணைந்து வேளாண் விரிவாக்க சேவைக்கான ஓராண்டு பட்டயப் படிப்பினை (DAESI)  நடத்தி வருகிறது.வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் இடுபொருள் வழங்குவதோடு மட்டுமல்லாது வேளாண் களம் சார்ந்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குவதில் முதன்மையாக விளங்குகின்றனர். பெரும்பாலான வேளாண் இடுபொருள் விற்பனையாளர்கள் வேளாண் சார்ந்த முறையான கல்வியினை பெற்றிருப்பதில்லை.எனவே, வேளாண்மையில் இடுபொருள் விற்பனையாளர்கள் தொழில் நுட்பதிறனை/அறிவினை மேம்படுத்துவதற்கும், வேளாண் இடுபொருள்களை விற்பதற்கும் இப்பட்டையப் படிப்பில் இணைந்து பயன் பெறமுடியும்.இப்படிப்பிற்கு மாவட்ட வாரியாக விண்ணப்பதாரர்கள் மேற்காணும் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க ஏதுவாக TN அக்ரிஸ்நெட் இணையதளத்தில் தனியொரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. https://www.tnagrisnet.tn.gov.in/daesi/இணையதள இணைப்பினை பயன்படுத்தி விபரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S,அவர்கள்கேட்டுக்கொண்டுள்ளார்.

Mar 11, 2024

நாளை இராஜபாளையம் மின் குறைதீர் முகாம்.

இராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான, நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள், இதர  குறைகளை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா,தலைமையில் இராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில், மார்ச் 12 காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால் மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

Mar 11, 2024

இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற துவக்கக் கூட்டம்

 நம் நகரத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் நலனுக்காக வரும் 13-03-2024 புதன் கிழமை அன்று புதிய சங்கம் தொடங்க ஆலோசனை சிறப்புக்கூட்டம் நடக்கவுள்ளது.அறுபது வயது நிறைவடைந்த ஆண், பெண் இரு பாலரும் சங்கத்தில் இணைந்து கொள்வதற்கான பதிவுகள் ஏற்கப் படும்.கூட்டதேதி 13-03-2024, நேரம் . 5.00 - 7.000.இடம்-ஆனந்தா கார்டன், தென்காசி சாலை, இராஜபாளையம்.தலைமை கேப்டன் சிங்கராஜா அவர்கள்.(முன்னாள் தலைவர் சீனியர் சிட்டிசன்ஸ் பியுரோ, சென்னை)விளக்கவுரை, வாழ்த்துரை, திரு எம்.ஆர். அழகராஜா தலைவர் தென்காசி மூத்தோர் மன்றம். டாக்டர் S. குமரேசன், ஸ்ரீரெங்கா குழந்தைகள் நல மருத்துவ மனை,இராஜபாளையம்.சிறப்புரை திரு R. முத்துக்கிருஷ்ணன், முதுநிலை மேலாளர், ஹெல்ப்பேஜ் இந்தியா, சென்னை.மூத்தோர் நலச்சங்கம், பல முக்கிய நகரங்களில் நிறுவப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.நாமும் நமது இராஜை நகரில் இச்சங்கத்தினை துவக்கி பல நன்மைகள் பெறலாம்..எனவே, இராஜபாளையம் மூத்தோர் பெருமக்கள், இந்த நல்லநிகழ்ச்சியில் குடும்பத்துடன் அவசியம் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.இப்படிக்கு இராஜபாளையம் மூத்தோர் நல மன்ற அமைப்பு,

Mar 06, 2024

விருதுநகர் மாவட்டம் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக இந்த மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. அதன்படி படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக  08.03.2024 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN,  INFONET COMMUNICATION ENTERPRISES, PENTAGON GARMENTS, WILLIAMS WONDERS போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள்  கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும்  பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 08.03.2024 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in  என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது  மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும், தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Mar 04, 2024

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் மார்ச் 14 கடைசி நாள்

ஆதார் கார்டு என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணம் ஆகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்த நிலையில், ஆதார் கார்டுகளை வழங்கும் அரசு நிறுவனமான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.ஆதார் கார்டில் உள்ள தனிநபர் விவரங்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அதில் ஏதேனும் திருத்தம் இருந்தாலும் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சிம் கார்டு வாங்குவது, வங்கிக் கணக்கைத் திறப்பது போன்ற பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் நீங்கள் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். 10 ஆண்டுகள் பழையான ஆதார் கார்டை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதன்படி, ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் மார்ச் 14ஆம் தேதிக்கு முன் இதைச் செய்யவில்லை என்றால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.10 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான இலவச அப்டேட் தேதி மார்ச் 14 அன்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதைத் தாண்டி அப்டேட் செய்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 19 20

AD's



More News