25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


முக்கிய அறிவிப்பு

Sep 07, 2024

ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது ஆண்டு குருபூஜை விழா

ஆதன மீதில் அரசு சிவலிங்கம் போதும் இரண்டினில் ஒன்றைத்தா பித்து மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வங் காதலிற்சோடசங்காணுப சாரமே-திருமூலர்நிகழும் மங்களகரமான குரோதி நாம ஸம்வத்ஸர ஆவணி மாதம் 24ம் தேதி (09.09.2024) திங்கள்கிழமை சஷ்டி திதி நன்னாளில் காலை 9.00 மணிக்கு மேல் ஸ்ரீலஸ்ரீ சாந்தானந்த சுவாமிகளின் 35 வது குருபூஜை விழா இராஜபாளையம் சிரஞ்சீவி மலைச்சாரலில் அமைந்துள்ள அவரது நினைவாலயத்தில் நடைபெற உள்ளது.சொல்லோவியர், திருப்புகழ் உரைமணி, செந்தமிழ்ப் பேரொளி பேராசிரியர் திரு.சொ.சொ.மீ. சுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். ஆன்மீக அன்பர்களும் சீடர்களும் கலந்து கொண்டு ஸ்ரீ சுவாமிகளின் குருவருள் பெற்றுய்ய வேண்டுகிறோம்.இப்படிக்குஸ்ரீ P.R.வெங்கட்ராம ராஜா தலைவர், ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் அறக்கட்டளை, இராஜபாளையம்.

Aug 26, 2024

ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதையின் பணிக்காக ரயில் நேரம் மாற்றம்

ராஜபாளையத்தில் நடைபெறும் சுரங்கப் பாதை பணிகளுக்காகடி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இடையே சிமென்ட் பிளாக்குகள் தண்டவாளம் அடியில் புதைக்கப்பட உள்ளன. இதற்காக ரயில்- தண்டவாளங்களும் மின் கம்பிகளும் தற்காலிகமாகதுண்டிக்கப்பட உள்ளதால்  ரயில் நேர மாற்றம் தேதி  வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கோட்டை- மதுரை பாசஞ்சர் (06664) ஆக. 26, 27 செப்.8, 9ல் 50 நிமிட கால தாமதமாக செங்கோட்டையில் இருந்து மதியம் 12:10க்கு பதில்  1:00 மணிக்கு புறப்படும் . ராஜபாளையத்திலிருந்து  மதியம் 2:10 மணி புறப்பட்டு மாலை 4:30 க்கு மதுரை சென்று   சேரும். இதன் படி பயண  திட்டத்தை அமைத்து  கொள்ள வேண்டும் மதுரை கோட்ட ரயில்வே  துறை அறிவித்துள்ளது.

Aug 14, 2024

சுதந்திர தினமான 15.08.2024 அன்று ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L-1), FL-2/FL-3    மற்றும் FL-11  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules 1981-ன்படி,   சுதந்திர தினமான 15.08.2024 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும்   FL-1/FL-2/FL-3 மற்றும் FL-11 மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 14, 2024

திரைப்பட தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரும் மற்றும் நடிகையுமான திருமதி பைரராசு சந்தியா ராஜுவை ஐனாதிபதி திரோபதி முர்மு அவர்கள், ராஷ்டரபதி பவனுக்கு, சுதந்திர தினத்தன்று இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டு கௌரவப் படுத்தி உள்ளார்.

 திரைப்பட  தேசிய விருது பெற்ற நடனக் கலைஞரும் மற்றும் நடிகையுமான திருமதி  பைரராசு  சந்தியா ராஜுவை ஐனாதிபதி திரோபதி முர்மு அவர்கள் ராஷ்டரபதி பவனுக்கு, சுதந்திர தினத்தன்று இரவு விருந்திற்கு அழைக்கப்பட்டு கௌரவப் படுத்தி உள்ளார். இந்த கௌரவத்தை பெறும்சந்தியா ராஜு தனது ஆரம்பக் கல்வியை கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையின் சென்னை தி ஸ்கூல் கே.எப்.ஐ பள்ளயிலும், சென்னை பால வித்யா மந்திரில் உயர்நிலைக் கல்வியையும் முடித்தார். உளவியல் இளங்கலைப் பட்டம் உசுமானியா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். தனது பத்து வயதில் வேம்பதி சின்ன சத்யம் அவர்களிடம் குச்சுப்புடி நடனப் பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் கிசோர் மொசலிகண்டி அவர்களிடமும் பயிற்சி பெற்றார்.சந்தியா ராஜு தனது இளமை பருவத்திலிருந்தே குச்சிப்புடி நடனம் படித்து வருகிறார். அவரது முதல் நடிப்பு அவரது குருவின் பிரபலமான நடன நாடகமான கூஷிர சாகர மதனல்லில் ஒரு சிறிய பாத்திரம், இது தமிழ்நாட்டின் இராஜபாளையத்தில் அரங்கேறியது. சென்னையின் சென்னை மியூசிக் அகாடமியில் உள்ள அவரது ரங்கபிரவேஷத்தில் ஒரு தொழில்முறை தனி கலைஞராக அறிமுகமானார். அவரது முதல் தனிப்பாடல் திருமதி லீலா சாம்சன் மற்றும் ஸ்ரீ சிதம்பரம் ஆகியோரால் மிகவும் பாராட்டப்பட்டது. சந்தியா இந்தியா மற்றும் உலகம் முழுவதும் பல தனி குச்சிப்புடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். அவரது சில முக்கிய நிகழ்ச்சிகள் பாரிஸின் குய்மெட் மியூசியம், வியன்னாவின் சர்வேதேச அருங்காட்சியகம் மற்றும் பார்டர்ஸ் NYC மற்றும் தென்னாப்பிரிக்காவின் இரண்டு சுற்றுப்பயணங்களையும்,  இந்தியாவில் மும்பையில் உள்ள தேசிய கலைநிகழ்ச்சி மையத்தில் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபா, நாரத கான சபா, மற்றும் மியூசிக் அகாடமி பல நடன நாடகங்களில் சிறு வேடங்களில் தொடர்ந்து நடித்தார். 15 வயதில் சந்தியா கிருஷ்ணரின் இறுதி நடன நாடகமான கோபிகா கிருஷ்ணாவின் முக்கிய பாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். சந்தியா இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ,பல தனி குச்சிப்புடி நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.அவர் தனது சொந்த ஊரான இராஜபாளையத்தில் P.A.C. RAMASAMY RAJA பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தனது குச்சிப்புடி வீடியோக்கள் முழுவதும் 8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளார். இதனால் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட குச்சிப்புடி கலைஞர் என்ற பெருமையைப் பெற்றார். அவரது மிகவும் பிரபலமான வீடியோக்களில் “கிருஷ்ண சப்தம்” , 'முதுகரேயசோதா"வின் நடிப்பு ஆகியவை அடங்கும். அவர் தனது குருவின் குச்சிப்புடியை அடுத்த தலைமுறைக்கு வழங்க நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமியை நிறுவினார்.அவர் ராம்கோ குருப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் ஒரு அங்கமான சந்தியா ஸ்பின்னிங் மில்ஸின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.ராம்கோ சோமன் திரு.P.R.வெங்கட்டராமராஜா, திருமதி நிர்மலா அவர்களின் புதல்வியும், மறைந்த சேர்மன் திரு. P.R.ராமசுப்பிரமணியராஜா அவர்களின் பேத்தியுமான சந்தியா ராஜு, தொழிலதிபர் ராமலிங்க ராஜு மகன் ராமராஜுவை மணந்தார்.  நம்  இந்த கௌரவத்தை பெறும்  நம் நகரின் சந்தியா ராஜு அவர்களை வாழ்த்தி ,பெருமை கொள்கிறோம்.

Aug 13, 2024

சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம்  3  ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 14.08.2024 அன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்த இத்திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால்  20.08.2024 அன்று  நண்பகல்  12.00  மணியளவில் நடைபெற உள்ளது.இக்கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2024

ராஜபாளையத்தில் நாளை மின் குறைதீர் முகாம்

ராஜபாளையம் தாலுகா மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்னைகள், இதர குறை களை தீர்க்கும் வகையில், விருதுநகர் மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் லதா, ராஜபாளையம் பொன்னகரம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஆக.13 காலை 11:00 மணி முதல் 1:00 மணி வரை குறைகளை கேட்டறிய இருப்பதால், மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ராஜபாளையம் மின் கோட்ட செயற் பொறியாளர் முத்துராஜ்  தெரிவித்துள்ளார்.

Aug 10, 2024

இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் ,86-வது ஆண்டு பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

அன்புடையீர்,நமது சங்கத்தின் 86-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், 11.08.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்குநமது நகர் தென்காசி சாலையில் உள்ள மாண்புமிகு P.S. குமாரசாமிராஜா நூற்றாண்டு ஞாபகார்த்த திருமண மண்டபத்தில்நமது சங்கத் தலைவர் திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள் (சேர்மன். ராம்கோ குழுமம்) தலைமையில் நடைபெறும்.திரு.Dr.V.P. ஜெயசீலன் I.A.S., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்.விருதுநகர் மாவட்டம்.முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள்.தாங்கள் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.தங்கள் அன்புள்ள,M.C.வெங்கடேஸ்வர ராஜாR.நாராயணசாமிசெயலாளர்கள். 

Aug 03, 2024

சிவகாசி வட்டம் சாட்சியாபுரம் இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்படவுள்ளதால் 05.08.2024 முதல் வாகனங்களை மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விருதநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் சாட்சியாபுரம் அருகில் இரயில்வே கடவு எண் 427க்கு மாற்றாக இரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டு, 26.07.2024 அன்று  தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்களால் மேம்பாலப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணியானது விரைந்து தொடங்கப்படவுள்ளதால் 05.08.2024 முதல் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மாற்றுப்பாதைக்கான விபரங்கள் பின் வருமாறு:1. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி செல்லும் மற்றும் சிவகாசியிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் கனரக வாகனங்கள், கன்டைனர்கள் மற்றும் லாரிகள் திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலை வழியாக சென்று பின், சுக்கிரவார்ப்பட்டி சாலை வழியாக வடமலையான் செக் போஸ்ட் அருகில் விருதுநகர் சாலையில் இணைய வேண்டும்.2. ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சிவகாசி வரும் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் சாலை வழியாகவும் மற்றும் சிவகாசி எரிச்சநத்தம் சாலை YRTV பள்ளி சாலை வழியாகவும் சிவகாசி நகருக்குள் செல்ல வேண்டும்.3. சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், சிவகாசி ஆலங்குளம் சாலை வழியாக ஆனையூர் பஞ்சயத்து சாலையில் இணைந்து ரிசர்வ் லைன் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்ல வேண்டும் என நெடுஞ்சாலை திட்ட கோட்டப்பொறியாளர்(திருநெல்வேலி) அவர்கள் தெரிவித்துள்ளார்.

Jul 29, 2024

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நாளை கொடியேற்றம் ஆடிப்பூரத் திருவிழா

கொடியேற்றத்துடன் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா நாளை(ஜூலை 30) துவங்குகிறது.கோயில் நிர்வாகத்தின் சார்பில் தேர் அழகுப் படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 30) முதல் ஆக. 10 வரை ஆண்டாள் திரு ட்டி ஆடிப்பூரத் திருவிழா நடக்க உள்ளது .புதிய வடங்கள் பொருத்தப்பட உள்ளது. கோயில் முன்பகுதி ஆடிப்பூர பந்தல் அழகுடன் அமைக்கப்பட்டுள்ளது.தினமும் காலை 10:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வாகன புறப்பாடும் நடக்கிறது.தினமும் காலை 11:30 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆடிப்பூர பந்தலில் ஆன்மீக சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா தலைமையில் செய்துள்ளனர்மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் தேர் சக்கரம் செல்ல வேண்டிய பாதையை அடையாளம் காண்பிக்கும் வகையில் வெள்ளை வண்ணம் அடிக்கப்பட்டுள்ளது.

Jul 25, 2024

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2024- ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தகுதியானவர்கள் 09.08.2024-க்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழ் வளர்ச்சிக்காகப் பணியாற்றி வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும்  வகையில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ் ஆர்வலரைத்  தேர்வு செய்து தமிழ் செம்மல்  விருது வழங்கப்பெற்று வருகின்றது. 2024 ஆம்  ஆண்டிற்கான  தமிழ்ச் செம்மல்  விருது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் செம்மல் விருதுக்கான விண்ணப்பப்படிவத்தினை நேரிலோ தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.tn.gov.in) ) கட்டணமின்றி பெற்றுக் கொள்ளலாம்.  தன்விவரக்குறிப்புகளுடன் வட்டாட்சியர் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை (நகல்),  நூல்கள், கட்டுரைகள், பெற்ற விருதுகள், தமிழ்ச்சங்கங்களின் பொறுப்பு, தமிழறிஞர் / தமிழ் அமைப்புகளின் பரிந்துரைக் கடிதம்  மற்றும்  2 கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அளவு புகைப்படம், ஆற்றிய தமிழ்ப் பணிகளுக்கான சான்றுகள் ஆகியவற்றை இணைத்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 09.08.2024-க்குள் அளிக்க வேண்டுமெனவும் நேரடியாக சென்னை தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் அளிக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும்  மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 19 20

AD's



More News